செவ்வாய், 30 ஜூலை, 2019

சுருதி ஸூக்தி மாலா : இன்று சுலோகம் 31 முதல்35முடிய
|| ஓம் நம: சிவாய ||
சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்
சுருதி ஸூக்தி மாலா
சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்.
எழுதியவர்:
பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ
கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள்
தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி
மயிலாப்பூர், சென்னை – 600 004

சுலோகம் 31
அர்த்த : ச்ரியா சிவ ந கோபி விரஜ்யதஸ்தே
ச்ரேஷ்டஸ்தயா த்வமஸி தாசதயீபிருக்த : |
லப்தும் ச்ரியம் ஜனிம சாரு விசித்ரரூபம்
அப்யர்ச்சிதம் தவ மருத்பி ருதாஹரந்தி ||
ஆறுகுணங்களில் ச்ரீ என்ற குணமுள்ளவராக சிவபெருமான் கூறப்படவில்லையே. வாஸுதேவனல்லவா ஸ்ரீபதி எனப்படுகிறார் என்ற சங்கை ஏற்பட, ஆத்மானந்த த்ருப்தனாகிய சிவபெருமானுக்கு விஷயங்களில் வெறுப்பு இருந்த போதிலும், ஸ்ரீமான் என்ற பதம் சுருதிகளில் காணப்படாவிடினும், ச்ரியா ச்ரேஷ்ட : என்ற அடைமொழி சிவபெருமானுக்குக் காணப்படுவதாலும், மற்றெல்லாரும் ச்ரீயை அடைய விரும்பி சிவபெருமானைப் பூஜித்து, அஷ்டைச்வர்யங்களை அடைந்தார்களென்று காணப்படுவதாலும், சிவபெருமான் ஸ்ரீமான் என்பதில் ஸந்தேகமில்லை, என்று இந்த ச்லோகத்தில் விளக்குகிறார்.
பதவுரை
சிவ – சிவபெருமானே ! விரஜ்யத : – உலக விஷயங்களில் முற்றிலும் பற்றுதல் இல்லாத, தே – உமக்கு ச்ரியா – லக்ஷ்மியால், ந கோப்யர்த்த : – ஒரு பயனுமில்லை. தாசதயீபி : – ருக் வேதத்திலிள்ள ருக் மந்த்ரங்களால் தயா ச்ரேஷ்ட : – அந்த லக்ஷ்மியால் நிரம்பியவராக, சிறந்த லக்ஷ்மீவானாக, த்வம் நீர், உக்தோஸி – சொல்லப்பட்டிருக்கிறீர்.
ச்ரேஷ்டோ ஜாதஸ்ய ருத்ர : ச்ரியாஸி
தபஸ்தமஸ் தபஸாம் வஜ்ரபாஹோ
என்பதல்லவா ருக்வேத மந்த்ரம். இந்திர உருவமெடுத்து ஆவிர் பவித்த தாங்கள், தபஸாம் – ஸ்தோத்ரம் செய்யப்படுகிறவர்களுள், தபஸ்தம : – அதிகமாக ஸ்துதிக்கப்படுபவர், ச்ரியா ச்ரேஷ்டோஸி – ஸம்பத்துள்ளவர்களுக்குள்ளும் சிறந்தவராக இருக்கிறீர். அநித்யமான உலக ஸுகத்தைத் துறந்து, ஸஞ்சல லக்ஷ்மியை வேண்டாதிருப்பதல்லவா நித்யமான ஸ்ரீ ஆகும். இது பற்றியே.
ஸா ஹி ச்ரீ ரம்ருதா ஸதாம் என்று, வேதங்கள் தான் அழியா ஸம்பத்தென்பது பொருந்தும். வேதத்ரய ப்ரதிபாத்யனான ஈசானன் தான் அழியாத ஸம்பத்துள்ளவன் என்பது தாத்பர்யம். ச்ரியம் லப்தும் : ஸம்பத்தை யடைவதற்கு, விசித்ர ரூபம் – விசித்ர உருவமுள்ள, சாரு – அழகான, மங்களகரமான, தவ – உம்முடைய, ஜனிம – மகாலிங்கரூபமாக ஆவிர்ப்பவித்த அருணாசலேச்வர, மத்யார்ச்சுனேச்வர உருவத்தை, மருத்பி : – தேவகணங்களால், அப்யர்ச்சிதம் – நன்கு பூஜிக்கப்பட்டதாக, உதரஹரந்தி – சொல்லுகிறார்கள்.
மகாலிங்க மூர்த்தியை ஆராதித்ததால் ஸகல தேவர்களும் தங்கள் பதவிகளையும், ஸம்பத்தையும் அடைந்தார்கள் என்பது பிரஸித்தம். அதிகம் சொல்வானேன். வாஸுதேவன் ருக்மிணி முதலிய மகிஷிகளை மணந்ததும், ஸாம்பன், சம்பு, ப்ரத்யும்னன் முதலிய புத்ரர்களை யடைந்ததும், உபமன்யு மக்ர்ஷியின் பிரஸாதத்தால் கிடைத்த உபதேசத்தின் படி, சிவபெருமானைப் பூஜித்து உபாஸித்ததால் தான் என்ற விஷயம் அனுசாஸன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.
ருக்வேதம் : – தவ ச்ரியே மருதோ மர்ஜயந்த : ருத்ர யத்தே ஜனிம சாரு சித்ரம் பதம் யத் விஷ்ணோருப மந்நிதாயிதேன பாஸி குஹ்யந் நாமகோனாம்.
ருத்ர – ஹே பரமேச்வரா ! மருத : – தேவர்கள், யத் – யாதொரு பிரஸித்தமான, தே – உம்முடைய, சாரு சித்ரம் – மங்களகரமான, ஆச்சர்யமுண்டு பண்ணும், ஜனிம – மகாலிங்க ப்ராதுர்பாவத்தை, மர்ஜயந்த : – 12 சுபத்ரவ்யங்களால், சதருத்ரீய மந்த்ர ஜபத்துடன் அபிஷேகம் செய்தார்கள். (எதற்காக) ச்ரியே – லக்ஷ்மியை அடைவதற்காக எந்த ப்ராதுர் பாவத்தைப் பூஜித்தார்கள்?
விஷ்ணோ :- பரமம் பதம் லிங்கம் – என்பது ஸனத்குமரரஸம்ஹிதையில் விஷ்ணுவரல் சொல்லப்பட்ட வசனம். விஷ்ணோ : பரமம பதம் என்ற சொற்றொடர் மகாலிங்க மூர்த்தியைக் குறிப்பதாக, விஷ்ணுமூர்த்தியால் கூறப்பட்டது எனில். தன்னையே குறிக்க வில்லை யென்பது விளங்குமல்லவா? மேலும் ருத்ர என்ற விளி வேற்றுமை, விஷ்ணுவை பூஜித்தார்கள் என்ற அர்த்தத்துடன் பொருந்தாது.
தத் பதம் லிங்கமாக்யாதம் சிவோ யேனைவ த்ருச்யதே
தல்லிங்கஸ்யாபி மாகாத்ம்யம் யுவாம் த்ரஷ்டும் ந ஹி க்ஷமெள,
ஸூரயோ யத் ப்ரபச்யந்தி தத் விஷ்ணோ : பரமம் பதம்.
தத்விஷ்ணோ : பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய :
திவீவ சக்ஷுராததம்.
தத்விப்தஸோ விபந்யவோ ஜாக்ருவாம்ஸ : ஸமிந்ததே
விஷ்ணோர் யத் பரமம் பதம் ||
முதலிய சுருதிகளும், உப ப்ரும் ஹண, புராண வசனங்களும், விஷ்ணோ : பரமம் பதம் என்ற சொற்றொடர், வ்யாபகமான, சிறந்த, பிரமம் விஷ்ணுக்களும் காண்பதற்கரிய, மகாலிங்க, ஜ்யோதிர்மய மூர்த்தியைக் குறிப்பிடுவதாக நன்கு விளக்குகின்றன.
சுலோகம் 32
ஸத்யம் க்ஷமா த்ருதி ரதிஷ்டிதிராத்மபோத:
ஸ்ருஷ்டிர் விராக தபஸீ மதிரீச்வரத்வம் |
நத்வத் வியந்தி ந கதாசிதபைதி தர்ம:
கிந்தந் நயத் பவதி தே குண ஸம்மதேஷு ||
வாசஸ்பதி மிச்ரர் என்ற வேதாந்த நிபுணர் வேதத்தையும் வேதப் பொருளான சிவபெருமானையும், சிலேடையாக அடைமொழி கொடுத்து வணங்குகிறார்.
ஷட்பி ரங்கை ருபேதாய விவிதை ரவ்யயைரபி |
சாச்வதாய நமஸ்குர்மோ வேதாய ச பவாய ச ||
வேதத்தின் உண்மை விளங்க சிக்ஷா, வ்யாகரணம் சந்த :, நிருக்தம, ஜ்யோதிஷம், கல்ப்ப: என்ற ஆறு அங்கங்கள் தேவை. ஈச்வரனுடைய ஆறு குணங்கள் (அங்கங்கள்) ஆவன.
ஸர்வக்ஞதா த்ருப்தி ரனாதி போத:
ஸ்வதந்த்ரதா நித்ய மலுப்தசக்தி:
அனந்தசக்தி: ச விபோர் விதிஞா:
ஷடாஹுரங்கானி மஹேச்வரஸ்ய ||
அவ்விதமே அழியாத, அவ்யயமான மற்றும் பத்து குணங்கள் கூறப்படுகின்றன.
ஞானம் வைராக்ய் மைச்வர்யம் தபஸ் ஸத்யம் க்ஷமா த்ருதி:
ஸ்ரஷ்ட்ருத்வ மாதம் ஸம்போதோ ஹ்யதிஷ்டா த்ருத்வமேவ ச ||
அவ்யயானி தசைதானி நித்யம் திஷ்டந்தி சங்கரே |
ஆதலால் ஸகல குணங்களுக்கும், (சமுத்ரம்போல சிறந்த பதார்த்தங்களுக்கு) அழியா இருப்பிடமான, ரத்னாகரன் சிவபெருமான் தான்.
பதவுரை
ஸத்யம் – தர்மத்தையும், ஸத் வித்யையையும் தெரிவிக்கும், பிரம்ம ப்ரதிபாதகமான வேதவாக்யம். (சிவ பெருமான் மூச்சு போல் வெளிவந்தமையால், அவருக்குச் சொந்தமாக, அவருடைய அழியா குணமாக சொல்லப்படுகிறது). க்ஷமா – பக்தர்களின் அபராதத்தைப் பொறுத்தல். ஆசுதோஷி என்ற பெயர். சிவபெருமானுக்கே உரித்து; வணங்குவதால் உடன் ஸந்தோஷமடைகிறவ்ர்; உடன்வரம் அளிப்பவர். இவ்விதம் தான் பாணினி வ்யாகரணத்தில் உணாதிஸூத்ரம் ஈச்வரசப்த்த்துக்கு அர்த்தம் கூறுகிறது.
அச்னோதே ராசுகர்மணி வரட் ச
சீக்ரம் ஸந்தோஷத்தால் பயன் கொடுக்கும், எங்கும் நிரம்பிய ஆசுதோசஷர் என்பது ஈச்வர பதத்தின் உண்மைப் பொருளென்று, உணாதி ஸூத்ரத்தின் முதலிய வீரச்செயல்கள்; அதிஷ்டிதி: – எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக ஸர்வ ஆதாரமாக இருத்தல்; ஆதமபோத: – அகண்ட சைதன்ய ரூபமாக ப்ரகாசித்தல்; ஸ்ருஷ்டி:- உலகங்கனனைத்தையும் படைத்தல்; (பிரம்மாதிபதி; பிரம்மணோதிபதி ; என்பது ச்ருதி; உலகங்களைப் படைத்த பிரம்மதேவனையும் படைத்த சிவபெருமானைச் சேர்ந்தது ஸ்ருஷ்டி என்பது உண்மையே) விராக தபஸீ – வைராக்யம்; உலகத்தைப் படைப்பதில் தடையற்ற ஸத்யஸங்கல்ப்பம்; மதி :- கார்யங்களை ஆலோசித்தல் : ஈச்வரத்வம் – தலைவனாக இருந்து காத்தல், இவைகள் பத்தும், தவத் – உம்மிடமிருந்து, ந வியந்தி – எப்பொழுதும் பிரிந்து போகிறதில்லை. ஆகையால் இவை பத்தும் அவ்ய்யங்கள் எனப்படுகின்றன. வேற்றுமை மாற்றத்தால் மாறாத சப்தத்திற்கு அவ்யயம் என்ற பெயர் பாணினியால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, இந்த பத்து குணங்களும் ஒருபொழுதும் பிரியாமல் மாறாமல் இருப்பதால் அவ்யயங்கள் எனப்படுவது யுக்தமே, தர்ம : – அணிமாதி அஷ்டைச்வர்யங்களும். கதாசிதபி – ஒருபொழுதும், தவத் – உம்மிடத்திருந்து, நாபைதி – விலகுகிறதில்ளை. குணஸம்மதேஷு – குணமென்று கூறப்படுவதுள் தேயத் ந பவதி – உம்மிடம் இல்லாத அந்தக் குணம். கிம் – என்ன இருக்கிறது? ஈச்வரன் அனந்த, ஸகல கல்யாணகுண பரிபூர்ணன் என்பது தாத்பர்யம்.
நாஸ்தி யத்யதகல்யாணம் தத்ததஸ்ய கதாசன |
கல்யாணம் ஸகலஞ்சாஸ்தி பரமாத்மா சிவோ யத ||
என்ற புராணவசனங்கள் சிவ பத அர்த்தத்தை நன்கு விளக்குவது இங்கு காணப்பட வேண்டும்.
ஒளதார்ய, வீர்ய, காம்பீர்ய மாதுர்ய மகராலய:
என்ற சிவபெருமான் அடைமொழியும் இவ்விஷயத்தை விளக்கிக் கூறுகிறது.
சுலோகம் 33
நைவேச்வராந் ந யசஸா மஹதோ ந வீராந்
ந ஸ்ரீமத : க்ஷிதிபதீனபி ஸார்வபெளமாந் |
அந்யாத்ருசானாபி மஹேச்வர ! வீதராகாந்
ப்ரஞாவதோ பகவத : ப்ரவதந்தி வ்ருத்தா : ||
ஆறு குணங்கள் அடைந்தவர் பகவான் எனப்படுவர்; பத்து அழியாக் குணங்கள் நிரம்பியவர் பகவான் எனப்படுவர், என்ற மத த்வயப்படி, சிவபெருமாந்தான் பகவத் சப்த வாச்யர் என்று நிரூபிக்கப்பட்டது. சில பெரியார்கள் ஞானம் வைராக்யம் இந்த இரண்டு குணங்கள் நிரம்பியிருந்தாலும், அவரே பகவான் என்று சொல்வார்கள்.
பதவுரை
வ்ருத்தா :- பெரியோர்கள், ஈச்வராந் நைவ – பணம் இருப்பதற்காக அல்ல, யசஸா மஹத : நைவ – புகழ் மிகுந்தவர் என்பதற்கல்ல, வீராந் ந – வீரர்களையும் அல்ல; ஸ்ரீமத் : க்ஷிதி பதீத் ஸார்வ பெளமானபி ந – பூமியின் தலைவர்களான ஸம்பத்தைப் படைத்தவர்களையுமல்ல, அந்யா த்ருசானபி – இந்த குணங்கள் இல்லாவிடினும் வீதராகாந் ப்ரஞாவத : – ஆசையற்ற, சிறந்த அறிவு வாய்ந்தவர்களையே பகவத : ப்ரவதந்தி – பகவத் சப்த வாச்யர்களாகக் கூறுகிறார்கள். ஆதலால், ஞானமூர்த்தியான, சிறந்த வைராக்யம் படைத்த உம்மை, பகவான் என்பது பெரியோர்களின் உணமையான் கருத்து.
சுலோகம் 34
ஆதர்வணா மதனசாஸன ! நிப்ருவாணா:
நாமா நி நாம பகவானிதி தே நிராஹு 
அத்யாச்ரமோ பநிஷதாஹ பகேசவ்ரம் த்வாம்
நைகண்டுகா : ச பகவந்த முசந்தி பூஜ்யம் ||
பகவான் என்ற பதம் ஈச்வரனைக் குறிப்பது என்று சுருதியும் சொல்லுகிறது.
பதவுரை
மதனசாஸன – (பிறப்புக்காரணமான) மன்மதனை அடக்கியவரே ! ஆதர்வணா :- அதர்வவேதம் பயின்றவர்கள், தே – உம்முடைய, நாமாநி – பெயர்களை நிப்ருவாணா :- வ்யுத்பத்தியால் விளக்குகிறவர்களாய், பகவான் இதி நாம – பகவான் என்ற பெயரை. நிராஹு : – வ்யுத்பத்தியால் உம்மைச் சேர்ந்ததாக வெளிப்படுத்துகிறார்கள். அத கஸ்மாத் உச்யதே மஹாதேவ :- ஸர்வான் பாவான் பரிதயஜ்ய, ஆத்மஞானயோக, ஐச்வர்யே மஹதி மஹீயதே தஸ்மாத் உச்யதே மகாதேவ : என்பது அதர்வ வேதம் மகாதேவ சப்தத்தின் அர்த்தத்தைக் கூறுகிறது. அப்படியே அத கஸ்மாத் உச்யதே பகவான்– ய: ஸர்வான் பாவான் நிரீக்ஷதி, ஆத்மஞானம் நிரீக்ஷயதி, யோகம் கமயதி தஸ்மாத் உச்யதே பகவான் என்று பகவத் சப்தத்தின் அர்த்தத்தையும் தெளிவாகக் கூறுகிறது. ஆதலால், பங்கஜ சப்தம்போல, பகவான் சப்தம் யோக ரூடியாகக் கருதப்பட்டு, சிவபெருமானைத்தான் குறிக்கும். இங்கு சப்தாதேவ ப்ரமித : என்ற வ்யாஸ ஸூத்ரத்தின் கருத்து ஸாதகமாகக் கொள்ளப்பட வேண்டும். சுக்ரா சார்யாரும் சுக்ரபகவான் என்று கெளணமாகச் சொல்லப்படுகிறார். அவ்விதம் வந்த பெயர் தான் பாகவதம் என்பது, கிருஷ்ண சரித்திரம் விளக்கும் வாஸுதேவ புராணத்துக்கு ஏற்பட்ட பேயர். மஹேச்வர! சிவபெருமானே! த்வாம்-உம்மை அத்யாச்ரமோபநிஷத்-பஸ்மோத் தூளனம் செய்து கொள்பவர்களுக்கு, உபதேசிக்கப்படுகிற அத்யாச்ரமோப நிஷத்தும்,
தர்மாவஹம் பாபநுதம் பகேசம் என்று, பகேசம்-பகவான் என்று கூறுகிறது, நைகண்டுகா: ச – நிகண்டு என்ற வ்யுத் பத்தி க்ரந்தத்தை யறிந்தவர்களும்,
பூஜ்யம் பகவந்தம் உசந்தி, பூஜிக்கத் தகுந்தவர்களையே பகவான் என்று சொல்லுகிறார்கள். பூஜிக்கத்தகுந்தவர் தாங்கள் ஆதலால், பகவத் சப்தம் உங்களைத்தான் குறிக்கும்.
தத்ர பவான் பகவானிதி சப்தோ வ்ருத்தை: ப்ரயுஜ்யதே பூஜ்ய : என்பது நிகண்டு வசனம் நமஸ்தே அஸ்து பகவத: அதீஹி பகவோ ப்ரும்ஹேதி என்ற சுருதிகளிலும், பூஜ்யனை பகவத் சப்தம் கூறுகிறது. சுருதி நிகண்டுகளில், பூஜிக்கப்படுகிறவர்கள் அனைவர்களையும் பகவத் சப்தம் குறிப்பிடுவதாக இருந்தாலும், வாக்கு, மனது, உடல், முககரணங்களால் துதித்துப் பூஜிக்கத்தகுந்தவராக சுருதி. தமுஷ்டுஹி என்பது உம்மையே கூறுவதால், நீர்தான் பகவான் முக்கியமானவர். மற்றாவ்ர்களை உம்மைப்போல் பூஜிக்கப் படவேண்டியது பற்றி ஸிம்ஹோ மாணவக: என்பது போல பகவத் சப்தம் குறிக்கிறது என்பது தாத்பர்யம். ஆதலால், ஆறு குணங்களோ, ஞான வைராக்கியமோ, பூஜ்யதையோ, இம்மூன்றில் எது, ப்ரவ்ருத்தி நிமித்தமாகக் கொண்டாலும், பகவான் தாங்கள் தாம். மற்றவர்கள் உம் ஸம்பந்தத்தால் பொருளாவார்கள். ஆதலால் பகவத் சப்த வாச்யத்வம் அதிவ்யாப்தி இல்லாத இரண்டாவது லக்ஷணமாவது திண்ணம்.
அதாபி யத் பாத நகாவஸ்ருஷ்டம்
ஜகத் விரிஞ்ச்சோ பஹ்ருதார்ஹணாம்ப : |
ஸேசம் புனாத்யன்யதமோ முகுந்தாத்
கோநாம லோகே பகவத்பதார்த்த : ||
என்ற வசனம் முகுந்தனைத்தவிர, பகவத்சப்த வாச்யத்வம் வேறு ஒருவனுக்குக் கிடையாது என்று கூறுகிறது. ஆதலால் முகுந்தனிடத்தில் அதிவ்யாப்தம், சிவபெருமானிடம் அவ்யாப்தம் இரண்டாவது லக்ஷணம் என்ற கேள்வி எழும்புகிறது கீழே சொல்லப்பட்ட அதர்வண வேதம் அத்யாசரமோபநிஷத் என்ற மந்த்ரோப நிஷத் ஆகிய சுருதிகள் சிவபெருமானை பகவானாகக் கூறும்போது, அதற்கு விருத்தமான இந்த வசனம் விரோதாதிகரண ந்யாயப்படி தள்ளப்பட வேண்டியதுதான். ஒளதும் பரீ என்னும் கட்டையப் பூராவும் வஸ்த்ரத்தால் மறைக்க வேண்டும் என்ற ஸ்ம்ருதிகூட ஒளதும்பரிக் கட்டையைத் தொட்டுக் கொண்டு ஸாமகானம் செய்யவேண்டும் என்று சொல்லும் சுருதிக்கு விரோதமானதால் தள்ளப்பட வேண்டியதாக ஜைமினி முனிவர் சொல்லிய மீமாம்ஸ ந்யாயம் இருக்கிறது.
மேலும் இந்தவாக்யமே த்வேசஷத்தால் எழுதப்பட்டதென்பது தெளிவு. ஸேசம் ஜகத் புனாதி என்றதால், வாஸுதேவன் பாததீர்த்தம் சிவபெருமானையும் புனிதமாக்கினதாகச் சொல்வது ஸரியான முறையல்ல அபத்தம். மகாலிங்கம், ஜ்யோதிர்லிங்கம், ப்ராதுற்பவித்ததும், ப்ரம்மா, விஷ்ணு இருவர்களும் அன்னம் வராகம் ரூபம் கொண்டு மேலும் கீழும் பலகாலம் தேடிச் சென்றும் காணமுடியாத வரலாறும், ஈச்வரனுக்கு ஆயிரம் நாம அர்ச்சனை செய்த வாஸுதேவன், ஒர் தாமரை குறைந்ததால், தன் கண்ணை பக்தியுடன் அர்ச்சித்து, ஈச்வரனிடம் சக்ராயுதம் பெற்றதும், ப்ரம்மா ஸாரதியாகவும், விஷ்ணு பாணமாகவும் வர, ஸாதனங்களை எதிர்பாராமல் ஸங்கல்ப்ப மாத்திரத்தில் நடந்த த்ரிபுர ஸம்ஹார வரலாறும், தேவர்கள் அமிர்தம் வேண்டி ஸமுத்ரத்தைக் கடைந்தபோது உண்டான கால கூட விஷ தாபத்தால் ஓடிவாடிய பிரம்ம விஷ்ணுக்களையும் மற்றும் ஸகலதேவர்களையும், சிவபெருமான் விஷத்தை தாம் ஏற்றுக் காப்பாற்றிய சரித்திரத்தாலும், பிரம்ம விஷ்ணுக்களையும் தன்வசப்படுத்தின காமனை, எரித்த வரலாற்றாலும், தேவியின் ஸ்வயம் வரத்தில், குழந்தை யுருவமெடுத்து வந்த சிவபெருமான், விஷ்ணு முதலிய தேவர்களை ஸ்தம்பிக்கச் செய்த வரலாற்றாலும் மத்ஸ்ய, கூர்ம வராஹ, த்ரிவிக்ரம, ந்ருஸிம்ஹம் விஷ்வக்ஸேனர் முதலியவர்களை அடக்கிய வரலாறுகளாலும், ப்ரம்மாவின் ஐந்தாவது தலையைப் பொய் சொன்னதற்காகக் கிள்ளி சதுர் முகனாகிய சரிதத்தாலும், சுருதி ஸ்ம்ருதி புராண இதிகாஸங்கள் அனைத்தும் சிவபெருமானை மகாதேவனாக அங்கீகரிக்கும்போது, அவரை சுத்தப்படுத்தியது முகுந்தன் பாத தீர்த்தம் என்று ஒரு வசனம் எழுதி வைத்தது எங்ஙனம் ப்ரமாணமாகும்?
த்யஜேத்ஏகம் குலஸ்யார்த்தே, க்ராமஸ் யார்த்தே குலம் த்யஜேத் | க்ராமம் ஜனபதஸ்யார்த்தே ஹியாத்மார்த்தே ப்ருதி வீம் த்யஜேத் என்றல்லவா உலக ந்யாயமும், பகாஸுரானால் உபத்ரவும் நீங்க, தினந்தோறும் ஒரு சிறு பிள்ளையை ஏகசக்ரபுரத்தில் தியாகம் செய்து வந்த பாரத வரலாற்றுப்படி, பல சுருதி விரோத மானத்தால், கீழே சொன்ன முகுந்தன் பாததீர்த்த சுலோகமும், த்வேஷத்தால் எழுதப்பட்டது தள்ளத் தகுந்தது.
கங்கா தேவி மலையரசன் பெண்ணாக ஹிமய மலையிலிருந்து விழும் ஸமயம், கர்வாப ஹரணத்துக்காக ஈச்வரனால் ஜடையில் தாங்கப்பட்டாள். விஷ்ணுபாத தீர்த்தமாக வாமனாவதார காலத்தில் இருந்தது வேறு ஜன்மாவில் என்றல்லவா ஜன்ம பேதம் சொல்லப்படுகிறது.
த்வம் தேவேஷு ப்ராம்மணோஸி. அஹம் மனுயேஷு.
விஷ்ணோராதி பத்யம் க்ஷத்ரம் ஸ்ம்ருதம்.
என்ற ப்ரமாணப்படி, சிவபெருமான் ப்ராம்மணத்வம், ப்ராம்மணாதிபத்யம் படைத்தவர். முகுந்தன் க்ஷத்திரியன், க்ஷத்ரியாதி பத்யம் படைத்தவன் என்ற சித்தாந்தமும் ஸர்வஸம்மதமாக இருக்க, பிராம்மணர் சிவன், க்ஷத்ரியன் விஷ்ணு பாத தீர்த்தத்தால் புனிதனானான் என்று, விவேகமுள்ள எந்த மனிதனும் சொல்லமாட்டான், ஒப்புக் கொள்ளமாட்டான்.
ப்ரம்ஹாசாஸெள அதிபதி : ச ப்ரம்ஹாதிபதி :
என்ற கர்மதாரய ஸமஸத்தை, நிபாதஸ்தபத் யதிகரண ந்யாயப்படி ஆச்ரயித்து, சிவபெருமான் ப்ராம்மணர், ப்ராம்மணர்களுக்கு அதிபதி என்பதை ஈசான மந்த்ரம் நன்கு வெளியிடுகிறது.
ஈசான ஸர்வவித்யானாம் …… ப்ரம்மணோதிபதி:
சுலோகம் 35
பூஜா தமுஷ்டுஹிவதா விஹிதா மஹேச
மந்த்ரேண வாங்மனஸ காய நிபந்தனாதே |
ஸர்வாபி ரப்யுபநிஷத்பி ருபாஸனோக்தா
நாராயணோப நிஷதம் பரிபாவயாம : ||
பகவத்பத வாச்யம்போல, பூஜாசேஷித்வம் என்பதும் சிவபெருமானுக்கு லக்ஷணம் அதிவ்யாப்தி இல்லாததாகச் சொல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
பதவுரை
மஹேச – சிவபெருமானே ! தமுஷ்டுஹிவதா மந்த்ரேண – தமுஷ்டுஹி என்ற பதத்துடன் ஆரம்பிக்கும் சதருத்ரீயமந்த்ரத்தினால், தே – உம்முடைய, வாங்மனஸ் காய நிபந்தனா பூஜா – வாயால் துதிப்பதும் மனதால் த்யானிப்பதும் உடம்பால் நமஸ்கரிப்பதுமாகிய பூஜையானது விஹிதா –விதிக்கப்பட்டிருக்கிறது, ஸர்வாபி ருபநிஷத்பி:- எல்லா உஅபநிஷத்துக்களால், உபாஸனேக்தா – உபாஸனை சொல்லப்பட்டிருக்கிறது. அபி – ஆனாலும், நாராயணோப நிஷதம் – நாராயணோப நிஷத் என்ற மஹோப நிஷத்தை, பரிபாவயாம :- யுக்திகளைக் கொண்டு தத்வார்த்தம் என்ன வெளியாகிறது என்பதாக விமர்சனம் செய்வோம். மஹோப் நிஷத்தில் சிவன் உபாஸிக்கப்படுவதாகவும் முகுந்தன் உபாஸகனாகவும் தாத்பர்யம் வெளிப்படுத்தப்பட்டால், மற்ற உபநிஷத்துக்களிலும் சிவபெருமான்தான் உபாஸ்யர் என்ற கருத்து தெளிவாகி விடும். என்ற நோக்கத்துடன், 36 முதல் 55 முடிய, 20 செய்யுள்களால், மஹோப்நிஷத் உபாஸ்யத்வம் என்ற மூன்றாவது லக்ஷணத்தை அதிவ்யாப்தி, அவ்யாப்தி தோஷம் இல்லாமல் ஸமன்வயப் படுத்துகிறார்.
ய: எவர் த்ரிஷு அக்னிமனீகம், ஸோமம், சல்யம் விஷ்ணும் தேஜனம் – என்ற சுருதிப்படி கட்டை, தார், கூறு என்ற மூன்று பாகங்களாக அமைந்த, விஷ்ணு, ஸோமன், அக்னி, தேவர்களாகிய பாணத்தை உடையவரும், அல்லது கர்ணபர்வசரிதப்படி விஷ்ணுவை பாணமாக கொண்டவரும், ஸுதன்வாலிங்க புராணப்படி மேருவை வில்லாகக் கொண்டவரும், கர்ணபர்வப்படி ஸம்வத்ஸர தேவதையை வில்லாகக்கொண்டவரும், அல்லது சாந்திபர்வப்படி பிரணவம் என்ற ஓங்காரத்தை வில்லாகக் கொண்டவரும், (ஓங்காரம் வில்லாகவும், காயத்ரீ நாணாகவும், பஞ்சாக்ஷரங்களை பாணமாகவும் வைத்து த்ரிபுரஸம்ஹாரம் செய்ததாக சாந்தி பர்வா சொல்லிகிறது,) ப்ரணவ வ்யாக்ருதி ஸஹிதி காயத்ரீ ஜபத்தாலும், பஞ்சாக்ஷர ஜபத்தாலும், ஸ்தூல, ஸூக்ஷ்ம, காரண மென்ற முப்புரம் நீங்கி முக்தியடையலாம் என்ற தாத்பர்யத்தை விளக்குகிறது.
ய: விச்வச்யபேஷஜஸ்ய க்ஷயதி ஸம்ஸார நிவ்ருத்தி மருந்தாகிய ஞானத்துக்கு எவர் இருப்பிடமோ, எவர் ஞானப்ரதாதாவோ, தமு – அந்த சிவபெருமானையே, ஏ மனதே ஸதுஹி – துதிப்பாயாக, மஹே – உத்ஸவ காலத்தில், ஸோமனஸாய – நல்ல மனம் பெறவேண்டி, தமுயக்ஷ்வ அவரையே குறித்து மனதால் த்யானம் செய். அஸுரம் – உயிரைக் கொடுக்கும் ஆபத்பாந்தவனாகிய, ருத்ரம் தேவம் – ருத்ரக் கடவுளை, நமோபி :- நமஸ்காரங்களால் துவஸ்வ – பணிவிடை செய்வாயாக. என்று ருக் வேதமந்த்ரம் முக்கரணங்களால் பூஜிக்க வேண்டியது சிவன் ஒருவனையே என்ற விதியை, உபரிதாரண ந்யாயப்படி கற்பிக்க வேண்டுமென்பதத் தெளிவாகக் கூறுகிறது. மேற்படி ந்யாயம் மீமாம் ஸகர்களுக்குப் பிரஸித்தம். வாயவீய ஸம்ஹிதையில் ஸாம்பூஜா த்ரிதா ப்ரோக்தா மனோவாக்காய ஸாதனை : || என்று சொல்லப்படுவதும் காண்க.

கருத்துகள் இல்லை: