திங்கள், 22 ஏப்ரல், 2019

அஷயம்_என்றால்
வளர்தல்_என்று_பொருள்

எதை வழங்குகிறோமோ அதுதான் வளருமே தவிர எதை வாங்குகிறோமோ அது வளராது.

ஓருவருக்கு வழங்குவதற்காக வாங்கலாம். எதை பிறருக்கு கொடுக்கிறோமோ அது வளரும்.
தண்ணீர் பஞ்சம் வராமலிருக்க இன்று பிறருக்கு குடிநீர் வழங்கலாம்.

வஸ்திரம் அன்னம் அதுவும் தயிர்சாதம் தங்கம் வெள்ளி இதுபோல் எதை பிறருக்கு கொடுத்தாலும் அது வளரும்.
தானம் செய்ய செய்ய தான் தனம் வரும்.

தானம் என்கிற சொல்லிலேயே தனம் இருக்கிறது பாருங்கள்.

இது ஓரு புண்யகாலம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களுடைய ஆசீர்வாதம் அனுக்ரஹம் நமக்கு அனைத்தையும் அஷயமாக அள்ளித்தரும்.

இதில் துளிகூட சந்தேகமில்லை.


கருத்துகள் இல்லை: