வியாழன், 26 ஏப்ரல், 2018

மெய் சிலிர்க்க வைக்கும் காஞ்சி மகா பெரியவரின் வரலாறும் சமீபத்தில் நிகழ்த்திய அதிசயமும்.

"குருவே சரணம்"

என் நெஞ்சில் அமர்ந்த ஸ்ரீஜகத்குருவே
எனக்கு தரிசனம் தர வந்தாயோ குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

கண்ணீர் பெருகிட சிந்துதே மாதுளை மணிபோல்
பார்க்கப் பரவசம் கொண்டேன் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

பாதம் காண்கையில் ஸ்ரீநாராயணா
உன்னைப் பார்க்கையில் ஸ்ரீனிவாசா கோவிந்தா
கனவில் வந்து நீ எழுத வைத்தாயே குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

காலம் கடந்தது நினைவில் நின்றது
பாவம் களைய நீ நேரில் வந்தாயோ
பல அவதாரம் காண காட்சி கொடுத்தாய் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத் குருவே

அஷ்டதிக் பாலரை இருவரை கண்டேன்
அற்புதம் அற்புதம் என்னே உன் திருக்காட்சி குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

மாநகர் காஞ்சியில் வரவழைத்தாய்
கண்டதும் என்மேல் பரிவு கொண்டாய்
எத்தனை தரிசனம் காண்பித்தாய் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே
இராமரின் காட்சியை நேரில் கண்டேன்
இராமனுஜரின் பக்தியை நேரில் கண்டேன்
ஈன்றவர்களின் பாத தரிசனம் கண்டேன் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

முருகா என்றதும் சாமிநாதன் ஆனாய்
நமசிவாய என்றதும் சங்கரன் ஆனாய்
காமாட்சி என்றதும் கருணையோடு பார்த்தாய் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

சரணம் சரணம் கோடி சங்கரா சரணம்
உதயம் உதயம் மனதினுள் இன்னும் உதயம் குருவே
தெவிட்டாத இன்பம், இன்பத்தில் ஒரு வாசம் குருவே
என் நெஞ்சில் அமர்ந்த ஜகத்குருவே

குருவுண்டு பயமில்லை
க்ஷேமம் உண்டு உன்னை நினைக்கையிலே குருவே
என் நெஞ்சோடு நிலை கொண்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹா
ஜகத்குருவே.

கருத்துகள் இல்லை: