திங்கள், 26 ஜூன், 2017

சத்ருவை ஜயிக்க ஸுலபஸ்: ஸுவ்ரதஸ்: ஸித்தஸ்: ஸத்ருஜிச்-சத்ருதாபந: ந்யக்ரோதோ தும்பரோ ஸ்வத்தஸ் -சாணூராந்த்ர நிஷூதந: லட்சுமி கடாட்சம் ஏற்பட துரிதௌக நிவாரண ப்ரவீணே விமலே பாஸுர பாக தேயலப்யே ப்ரணவ ப்ரதி பாத்ய வஸ்துரூப ஸ்புரணாக்யே ஹரிவல்லபே நமஸ்தே. துர்மரணம் ஏற்படாமல் இருக்க அனாயாஸேச மரணம் வினாதைந்யேன ஜீவனம் தேஹிமே க்ருபயா சம்போ த்வயி பக்தி மசஞ்சலாம் புத்ரான் தேஹி யசோதேஹி ஸப்பதம் தேஹி சாச்வதீம் த்வயி பக்திஞ்ச மேதேஹி - பரத்ரச பராங்சதிம். கற்பூர ஆரத்தியின் போது ஸோமோ வா ஏதஸ்ய ராஜ்ய-மாதத்தே! யோ ராஜஸன் ராஜயோ வா ஸோமேன யஜதே! தேத ஸுவா மேதானி ஹவீம்ஷி பவந்தி! ஏதா வந்தோ வை தேவானாம் ஸவா:! த ஏவாஸ்மை ஸவான் ப்ரயச் சந்தி! தஏனம் புனஸ் ஸுவந்தே ராஜ்யாய! தே ஸூ ராஜாபவதி ராஜாதி ராஜஸ்ய ப்ரஸஹ்ய ஸாயினே நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே ஸமே காமான் காம காமாய மஹ்யம் காமேச்வரோ வைச்ரவணாய மஹாராஜாய நம: நதத்ர ஸூர்யோ பாதி ந சந்திர தாரகம்! நேமோ வித்யுதே பாந்தி குதோய மக்னி! தமேவ பாந்த மனுபாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி! மந்திர புஷ்பம் போடும் போது யோபாம் புஷ்பம் வேத! புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி! சந்த்ரமா வா அபாம் புஷ்பம்! புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி! பிரதட்ஷனம் செய்யும் போது யானி காளி ச பாபானி ஜன்மாந்தர-க்ருதானிச! தானி தானி விநச்யந்தி பிரதட்ஷனபதே பதே! ஏகச்லோக சுந்தர காண்டம் யஸ்யஸ்ரீ ஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர்லீலயா லங்காம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான் அக்ஷõதீன் விநிஹத்யவீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புன; தீரணாப்தி; கபிபிர்யுதோ யமநமத்தம் ராமசந்த்ரம்பஜே. (இந்த ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்தால் சுந்தர காண்ட பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.) நீராடும் போது துர்போஜன துராலாப துஷ்ப்ரதி க்ரஹ ஸம்பவம் பாவம் ஹர மம் க்ஷ?ப்ரம் ஸஹ்யகன்யே நமோஸ்துதே: கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் சதைரபி முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணுலோகம் ஸகசக்தி. விபூதி அணியும் போது பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத் பூதி: பூதிகரீபும்ஸாம் ரக்ஷா ரக்ஷாகரீ சுபா. ராகவேந்திரர் மந்திரம் பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷ?ய நமதாம் காமதேனவே கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஹே, சங்கர ஸ்மரஹர ப்ரமதா தீ நாத மன்னாத ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூலினி சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவ மே தயாஸோ ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே மாத்ரு பூதேச்வரோ தேவோ பக்தானா மிஸ்டதாயக; ஸுகந்தி குந்தலா நாவ; ஸுகப்ரஸவ ம்ருச்சது ஹிம வத்யுத்தரே பார்தவே ஸுரதா நாம யக்ஷ?ணி தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்பிணி பவேத். சுகப்பிரசவத்திற்கான ஸ்லோகம் ஹிமவத்ய தத்ரே வார்ஸ்வே ஸீரதா நாம யக்க்ஷ?ணி தஸ்யா: ஸ்மரண மாத்ரேணா விசல்யா கர்பிணீபவேது எப்போதும் கூறிக்கொண்டேயிருக்க வேண்டிய ஸ்லோகம் ஹர நம : பார்வதீபதயே ஹர ஹர மஹாதேவ ஜானகீ காந்த ஸ்மரணம் ஜய ஜய ராம ராம ஆயுர்தேவி ஸ்தோத்திரம் இது மிகவும் சிறந்த ஸ்தோத்திரம். வியாச மஹா முனிவரால் இயற்றப்பட்டது. இதை குழந்தைகளுக்கு ஆயூஷ்ய ஹோமம் செய்கின்ற நாட்களிலும் ஷஷ்டியப்த பூர்த்தி நாட்களிலும் ஜபம் செய்து ஆயுஷ்ய ஸூக்தத்தோடு ஹோமங்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் ஆயுர்தேவியின் அனுக்கிரகத்தால் நோயின்றி ஆயுர் அபிவிருத்தி ஏற்படும். எல்லா நலன்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தை அனுதினமும் பாராயணம் செய்வது மிகவும் நல்லது. த்யாயேத்: ஹேமாம்புஜா ரூடாம் வரதா பய பாணிகாம் ஆயுஷா தேவதாம் நித்யாம், ஆஸ்ரிதாபீஷ்ட ஸித்திதாம் ஆயுர்தேவீ மஹாப்ராக்ஞ்யே ஸுதிகா க்ருஹவாஸிநீ பூஜிதா பரயா பக்த்யா தீர்க்கமாயுஹ் ப்ரயச்சமே ஸிம்ஹஸ்கந்த கதாம்தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம் ஸக்திசூல கதாபத்ம தாரிணீம் சந்த்ர மௌளிகாம் விசித்ர வஸ்த்ர ஸம்யுக்தாம் ஸர்வாபரண பூஷிதாம் ஸிம்ஹஸ்கந்த கதாம் தேவீம் சதுர்ஹஸ்தாம் த்ரிலோசனாம் ஸிம்ஹஸ்கந்த கதே தேவீ ஸுராஸுர ஸுபூஜிதே ப்ரபவாத்யப்தகே ஸங்கே ஆயுர்தேவீ நமோஸ்துதே ஆயுர்தேவீ நமஸ்துப்யாம் வர்ஷதேவீம் நமோஸ்துதே ஆயுர்தேஹி பலம் தேஹி ஸர்வாரிஷ்டம் வ்யபோஹயா ஆயுஷ் மதாத்மிகாம் தேவீம் கராள வதனோ ஜ்வலாம் கோர ரூபாம் ஸதாத்யாயேத் ஆயுஷ்யம் யாசயாம்யஹம் ஸுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம் ஸர்வ சத்ரு விநாசாய ஆயுர்தேவி நமோஸ்துதே ஷஷ்டாம்ஸாம் ப்ரகிர்தைர் ஸித்தாம் ப்ரதிஷ்டாப்யச ஸுப்ரபாம் ஸுப்ர தாம்சாபி சுபதாம் தயாரூபாம் ஜகத்ப்ரஸும் தேவீம் ÷ஷாடச ஷ்ருஷாம்தாம் சாஸ்வதஸ்திர யௌவனாம் பிம்போஷ்டீம் ஸுததீம் சுத்தாம் சரத்சந்த்ர நிபன்னாம் நமோ தேவ்யை மஹாதேவ்யை ஸித்யை ஸாந்த்யை நமோ நம சுபாயை தேவஹேனாயை ஆயுர்தேவ்யை நமோ நம வரதாயை புத்ர தாயை தனதாயை நமோ நம ஸ்ருஷ்ட்யை ஷஷ்ட்டாம்ச ரூபாயை ஸித்தாயைச நமோ நம மாயாயை ஸித்த யோகின்யை ஆயுர்தேவ்யை நமோ நம ஸாராயை சாரதாயைச பராதேவ்யை நமோ நம பாலாரிஷ்டார்ரு தேவ்யைச ஆயுர்தேவ்யை நமோ நம கல்யாண தாயை கல்யாண்யை பலதாயைச கர்மணாம் ப்ரத்யக்ஷõயை ஸ்வபுக்தானாம் ஆயுர்தேவ்யை நமோ நம பூஜ்யாயை ஸ்கந்த காந்த்யை ஸர்வேஷாம் ஸர்வகர்மஸு தேவரக்ஷண காரிண்யை ஆயுர்தேவ்யை நமோ நம ஸூத்த தத்வ ஸ்வரூபாயை வ்நதிதாயை த்ருணாம்ஸதா வர்ஜித க்ரோத ஹிம்ஸாயை ஆயுர்தேவ்யை நமோ நம: சுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரட்சாம்பிகை ஸ்தோத்திரம் அம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷதர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது. ஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப ரக்ஷாம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம் (ஸ்ரீ) வாதபீதடே வாமபாகே - வாம தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம் மாந்யா வரேண்யாவதான்யா - பாஹி கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான் (ஸ்ரீ) ஸ்ரீ கர்ப்ப ரக்ஷா புரேயா - திவ்ய ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் (ஸ்ரீ) ஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா திவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா (ஸ்ரீ) கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷா கரீம் த்வாம் பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப ரக்ஷார்த்த மாராது உபேதைரு பேதாம் (ஸ்ரீ) ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம் ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம் (ஸ்ரீ) ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ? தானந் தராமேண தேவ்யாஸ் ஸுதுஷ்ட்யை நித்யம் படேத்யஸ்து பக்தியா - புத்ர பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம்: (ஸ்ரீ) நல்ல குழந்தைகளாக வளர தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும் அஞ்சம்பம் இக்கு அலர் ஆகநின் றாய் அறியார் எனினும் பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே மலர் அம்புகளும், நீண்ட கரும்பு வில்லும் கொண்டிருக்கும் அபிராமி வல்லியே! உன் தவநெறியே அன்றி அடைக்கலம் வேறு ஒன்றுமில்லை என நான் அறிந்தும் அவ்வழியில் முயன்று நடைபயில எண்ணவில்லை. பேதையரைப் போன்றவர்கள் இந்த செம்பஞ்சுக் குழம்பு ஒளிவீசும் பாதங்களை உடைய பெண்கள். இவர்கள் தாம் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள். எனவே விரைந்து எனக்கு அருள்புரிவாய் அன்னையே! ஆண் குழந்தை ப்ராப்த்தி உண்டாக ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம் தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம் முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின் மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு ! ஆதிசங்கரர் அருளிய த்வாதச லிங்க ஸ்தோத்திரம் ஸௌராஷ்ட்ர தேசே வஸுதாவகாரே ஜ்யோதிர்மயம் சந்த்ர கலாவதம்ஸம் பக்திப்ராதாய க்ருதாவதாரம் தம் ஸோமநாதம் சரணம் ப்ரபத்யே மிகவும் புண்ணியம் வாய்ந்ததான ஸௌராஷ்ட்ர தேசத்தில், ஒளிரும் பிறைமதியை சிரசில் தாங்கிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக அவதரித்த சோமநாதரை நான் சரணமடைகிறேன். ஸ்ரீசைலச்ருங்கே விவிதப்ரஸங்கே சேஷாத்ரி ச்ருங்கேபி ஸதாவஸந்தம் தமர்ஜுதம் மல்லிகா பூர்வதம் நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும் பல நல்ல அம்சங்கள் கைவரப்பெற்ற ஸ்ரீ சைலமலையின் உச்சியிலும் சேஷாத்ரி மலையுச்சியிலும் எப்போதும் வாசம் செய்பவரும் இறப்பு, பிறப்பு எனும் இரு நிகழ்வுகளுடன் கூடிய சம்சாரம் எனும் கடலில் தத்தளிக்கும் பக்தர்களுக்கு கரையாக உள்ளவருமான மல்லிகார்ஜுனரை நமஸ்கரிக்கிறேன். அவந்திகாயாம் விஹிதாமதாரம் முக்திப்ரதாய ச ஸஜ்ஜநாநாம் அகாலம்ருத்யோ பரிரக்ஷணார்த்தம் வந்தே மஹாகாலமஹம் ஸுரேஸம் அவந்தி என்னும் முக்தியை அளிக்கக் கூடியதும் அகால மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடியதும் ஆகிய உஜ்ஜயினியில் ஆட்சிபுரிபவரும் தேவர்களின் தலைவருமான மகாகாளேஸ்வரரை மனதாலும் வாக்காலும் வணங்குகிறேன். காவேரிகா நர்மதாயோ பவித்ரே ஸமாகமே ஸஜ்ஜநதாரணாய ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம் ஓங்காரமீசம் சிவமேக பீடே காவேரி (நர்மதையுடன் சேரும் ஒரு ஆறு. தென்னிந்திய காவேரி வேறு), நர்மதை ஆகிய நதிகள் சங்கமிக்கும் தூய்மையான மாந்தாத்ருபுரம் என்னுமிடத்தில் உறைபவரும் பக்தர்களைக் கரையேற்றுபவருமான ஓங்காரேஸ்வரரின் பாதங்களைத் தொழுகிறேன். பூர்வாத்தரே பாரவிகாபிதா நே ஸதாசிவம் தன் கிரிஜாஸமேதம் ஸுராஸுராராதித பாத பத்மம் ஸ்ரீவைத்ய நாதம் ஸததம் நமாமி வடகிழக்கில் பாரவி என்னும் தலத்தில் மலைமகளோடு கூடிய சதாசிவனாக, தேவர்களாலும் அசுரர்களாலும் பூஜிக்கப்பட்ட அழகிய பாதத் தாமரைகளைக் கொண்ட ஸ்ரீ வைத்யநாதரை நமஸ்காரம் செய்கிறேன். ஆமர்த ஸம்ஜ்ஞே நகரேச ரம்யே விபூஷிதாங்கம் விவிதை: க போகை ஸித் புக்திமுக்தி ப்ரதமீக மேகம் ஸ்ரீநாகநாதம் சரணம்ப்ரபத்யே தாருகாவனம் எனும் ஆமர்த தலத்தில் பல்வேறு வகையான நாகங்களை அணிகலன்களாகக் கொண்டு, தர்மத்திற்கு விரோதமல்லாத போகமும் மோட்சமும் தரக்கூடிய ஈசனாக மேனியெங்கும் திருநீறு பூசிக்கொண்டருளும் பரமேஸ்வரனான நாகநாதனை வணங்குகிறேன். ஸாநந்தமாநந்தவநே வஸந்தம் ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம் வாரணாஸி நாதமநாத நாதம் ஸ்ரீ விஸ்வநாதம் சரணம் ப்ரபத்யே ஆனந்தவனம், வாரணாசி எனும் அதியற்புதமான பெயர்களால் வழங்கப்படும் காசித்தலத்தில் பக்தர்களின் பாவங்களை அழிப்பவரும் ஆனந்தத்தை அளிப்பவரும் ஆதரவற்றவர்களுக்கு அபயமளிப்பதையே கடமையாகக் கொண்டவரும் ஆன காசி விஸ்வநாத மூர்த்தியை சரணடைகிறேன். ஸ்ரீதாம்ரபர்ணி ஜலராசியோகே நிப்த்யஸேதும் நிசிபில்வபத்ரை: ஸ்ரீராமசந்த்ரேண ஸமர்ச்சிதம் தம் ராமேஸ்வராக்யம் ஸததாம் நமாமி புனிதமான தாமிரபரணி ஆற்றின் நீர் கடலில் சங்கமமாகும் இடத்தில் அணைகட்டி ராமச்சந்திரமூர்த்தியினால் வில்வதளங்களால் அர்ச்சிக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதரை அனவரதமும் நமஸ்காரம் செய்கிறேன். ஸிம்ஹாத்ரி பார்ச்வேபி தடே ரமந்தம் கோதாவரீ பவித்ர தேசே யந்தர்சனாத் பாதகஜாதநா: ப்ரஜாய தே த்ரயம்பகமிமீடே ஸிம்ஹாத்ரி மலையின் தாழ்வறையில் இனிமையாக சஞ்சரிப்பவரும், மிகப் புனிதமான தக்ஷிண கங்கை என்னும் கோதாவரி நதிக்கரையில் இருப்பவரும், எவரைக் கண்ட மாத்திரத்திலேயே பாவங்கள் விலகி ஓடிடுமோ அந்த த்ரயம்பகேஸ்வரரை வணங்குகிறேன். ஹிமாத்ரிபார்ச்வேபி தடே ரமந்தம் ஸம்பூஜ்யமானம் ஸததம்முனீந்த்ரை: ஸுராஸுரையக்ஷ மஹோரகாத்யை கேதாரஸம்ஜ்ஞயம் சிவமீச மீடே ஹிமாச்சலத்தின் தாழ்வறையில் சஞ்சரிப்பதை விரும்பு பவரும் சிறந்த முனிவர்கள், தேவர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள், உரகர்கள் மற்றும் முனிவர்களால் எப்போதும் ஆராதிக்கப்படுபவரும் ஈசன் என்று போற்றப்படுபவருமான கேதாரேஸ்வரரை நமஸ்கரிக்கிறேன். ஏலாபுரி ரம்ய சிவாலயேஸ்மிந் ஸமுல்லஸந்தாம் த்ரிஜகத்வரேண்யம் வந்தே மஹோதாரத்ர ஸ்வபாவம் ஸதாசிவம் தம் திஷணேச்வராக்யம் ஏலாபுரம் எனும் எல்லோராவில் உள்ள அழகிய சிவாலயத்தில் அருளாட்சி புரிந்து வருபவரும் மூன்று உலகில் உள்ளோராலும் போற்றப்படுபவரும், மிக மிக உயர்ந்த உவமை சொல்ல இயலாத குணத்தைக் கொண்டவரும், திஷணேஸ்வரரான சிவபெருமானை வணங்குகிறேன். ஏதா நி லிங்கா நி ஸதைவ மர்த்யா ப்ராத: படந்த: அமல மா நசாஸ்ச தே புத்ர பௌத்ரைர்ச்ச தநைருதாரை: ஸத்கீர்த்திபாஜ: ஸுகிநோ பவந்தி இந்தப் பன்னிரு ஜோதிர் லிங்கங்களின் துதியை தூயமனதுடன் தினமும் காலையில் துதித்தால் தலைமுறை தலைமுறையாக செல்வம், புகழ் போன்றவை விருத்தியாகும். கார்த்திகையன்று இத்துதியை பாராயணம் செய்பவர் வாழ்வு தீபம் போல் பிரகாசிக்கும்


கருத்துகள் இல்லை: