புதன், 11 பிப்ரவரி, 2015

நற்செயலில் ஈடுபடுங்கள்!
* மனம் போன போக்கில் வாழக்கூடாது.சந்தோஷத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வது,கேட்பது, பேசுவது,தின்பது என்றில்லாமல் மனக்கட்டுப்பாட்டுடன் வாழுங்கள்.
* பிறரிடம் குற்றம் கண்டுபிடித்து கோபப்படுவது எளிது.ஆனால் அன்பினால் அவரைத் திருத்த முயல்வதில் தான் பெருமை இருக்கிறது.
* ஒருவரின் மனநிறைவைப் பொறுத்தே அவரது வாழ்க்கைத்தரம் அமையும்.ஆனால்,ஆடம்பரத்துடன் இருப்பதையே வாழ்க்கைத்தரம் என தவறாக பலரும் நினைக்கிறார்கள்.
* ஏதாவது நல்ல செயலில் எப்போதும் ஈடுபடுங்கள்.இதனால் தீய எண்ணம் ஏற்படுவதை தடுக்க முடியும்.
* எண்ணம்,சொல்,செயல் இந்த மூன்றாலும் உயிர்களுக்கு நன்மை உண்டாக்குவதே சத்தியம்.தீமையை உண்டாக்குவதெல்லாம் அசத்தியம்.
* நம் உண்மையான வடிவம் ஆனந்தம் தான்.ஆனால் அந்த நிலையை மறந்து மனதால் துக்கப்படுவதை இயல்பாக்கிக் கொண்டு சிரமப்படுகிறோம். இதைத் தவிர்க்க வேண்டும்.
{காஞ்சி மஹா பெரியவா}

கருத்துகள் இல்லை: