புதன், 11 பிப்ரவரி, 2015



குரங்கை அடிக்காதே!

ஸ்ரீமடத்தில் மேனாவில் அமர்ந்து தரிசனம் தந்து கொண்டிருந்தார் பெரியவா.ஏராளமான கூட்டம்.தட்டு தட்டாக பழங்கள்,தேன் பாட்டில்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.திடீரென்று ஒரு குரங்குப்படை உள்ளே வந்தது. அட்டகாசம்தான்!பழங்கள் குதறப்பட்டன!தேன் பாட்டில்கள் உருண்டன!பெரியவாளிடம் போய் விஷமம் பண்ணிடுமோ?என்று சிஷ்யர்களுக்கு ஒரே கவலை.
பெரியவா முகத்தில் சஞ்சலத்தின் ரேகையே இல்லை." ஒண்ணும் பண்ணாதீங்கோ அதுகளை"விரலை சொடுக்கி ஈஸ்வராக்ஞை பிறந்தது!கொண்டுவந்த தடிகள் செயலிழந்து நின்றன.ஒருவழியாக தாங்கள் வந்த கைங்கர்யத்தை முடித்து கொண்டு ராம காரியத்துக்காக போய் விட்டன வானரங்கள்.
பெரியவா அப்போது ஒரு கதை சொன்னார்.........
தஞ்சாவூர் பக்கத்தல ஒரு க்ராமத்துல குரங்குகளோட தொல்லை தாங்கலை.அசட்டுத்தனமா மாட்டிண்ட ஒரு குரங்கை ஒர்த்தர் தடியால அடிச்சதில் உள்காயம் உண்டாகி கொஞ்ச நாள்ல அது செத்து போய்டுத்து. அடுத்தாப்ல அவருக்கு பொறந்த குழந்தைகளுக்கு பேச்சு வரலை.பொண் குழந்தை கல்யாணம் பண்ண வேண்டியிருந்தது.என்கிட்டவந்து அவர் பண்ணின பாவத்தை சொல்லி அழுதார்.மண்ணால குரங்கு பொம்மை பண்ணி உங்க ஊர் கிராம தேவதை கோவில்ல காணிக்கை மாதிரி குடுத்துடு.மனசொப்பி கல்யாணம் பண்ணிக்கறவனா பாத்து விவாஹம் பண்ணி குடு" என்றாராம்.அதன்படியே நடந்து அந்தஊமைபெண்ணுக்குசுட்டித்தனமா பேசற குழந்தையும் பிறந்ததாம்."குரங்கை அடிக்க கூடாது.அதுகள்கிட்ட கருணை காட்டணும்.ராம சேவகா பரம்பரை.நமக்கு தொந்தரவு குடுத்தா கூட ஆஞ்சநேயரை நெனனச்சுண்டு அதுகளை விட்டுடணும்"பெரியவா இருந்த சிறிய அறைக்குள் சிஷ்யர்களோ பக்தர்களோ போகமுடியாதே தவிர,எலி, அணில்,பக்ஷிகள் எல்லாம் சர்வ சுதந்திரமாக உள்ளே சுற்றித்திரியும்.போய் மரச்சொம்பில் ஏறும்; உள்ளே எட்டி பார்க்கும்"ஜில்" என்று ஜலம் கண்ணில் பட்டதும் தாகம் தீரும்வரை குடித்துவிட்டு வெளியே ஓடி விடும்.பெரியவா அவைகளின் வரவையும்,போக்கையும் ஆனந்தமாக பார்த்து அனுபவித்துக்கொண்டிருப்பார்.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்
எம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்
குத்து விளக்கு - நிலை விளக்கு; கோட்டுக்கால் - தந்தக்கால்;
பஞ்ச சயனம் - ஐந்து தன்மைகளைக் கொண்ட படுக்கை
(வெண்மை, மிருது, வாசனை, அழகு, குளிர்ச்சி);
கொங்கை - மார்பகம்; மலர் - மலரையொத்த விசாலமான; மைத்தடம் - மை தீட்டிய;
தத்துவம் - ஸ்வரூபம், உண்மை, நடைமுறை, குணம், உடல் அமைப்பு, பலம்,
வலிமை, தேகபலம், இந்திரியபலம்;

கருத்துகள் இல்லை: