புதன், 11 பிப்ரவரி, 2015

தேடினால் கிடைப்பான்
* சமத்துவம் என்பது சொல் அளவில் மட்டுமே இருக்கிறது. கடவுளை முழுமையாக அறிந்த ஞானியின் கண்ணுக்கு உலகமே சமமாகத் தோன்றும்.
* தேடாத வரைக்கும் தான் கடவுள் எங்கோ இருப்பதாகத் தோன்றும். ஆனால்,அவனை தேடத் தொடங்கி விட்டால் நமக்கு அருகிலே இருப்பதை அறிய முடியும்.
* நோய்,துன்பம்,வறுமை குறுக்கிடும்போது பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.நமக்கு துன்பம் செய்தவரையும் மன்னிக்கும் பெருந்தன்மைவேண்டும்.
* உடல்,உடை இவை மட்டும் தூய்மையாக இருந்தால் போதாது.மனதில் அழுக்கு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதற்கு கடவுளின் திருவடியைச் சிந்திப்பது ஒன்று தான் வழி.
* இந்த உலகத்தைப் படைத்த கடவுளுக்கு நன்றி செலுத்துவதே நைவேத்யம் படைப்பதன் நோக்கம்.   {காஞ்சி மஹா பெரியவா}

கருத்துகள் இல்லை: