ஞாயிறு, 10 ஜனவரி, 2021

முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும்!

முருகனுக்குரிய வேறு பெயர்களும் அதன் பொருளும்!

முருகன்    -அழகன்.
பிள்ளையார்    -சிவனுக்குப் பிள்ளை. தற்போது கணபதிக்குரிய இப்பெயர் முற்காலத்தில் முருகனுக்கும் இருந்தது என்கிறார் நச்சினார்க்கினியர்.
சித்தன்    -அன்பர்களுக்கு ஸித்தியை வழங்குபவன்.
சேயோன்    -செந்நிறம் உடையவன்.
வேள்    -எல்லாரலும் விரும்பப்படுபவன், நீண்ட புகழ் உடையவன்.
வேலன்    -வெற்றி தரும் வேலை உடையவன்.
அரன் மகன்    -சிவனின் புத்திரன்.
அறுமீன் காதலன்    -கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவன்.
அறுமுகன்    -ஆறு முகங்களை உடையவன்.
குரு    -சிவனுக்கு பிரணவமாகிய ஓம் என்பதன் பொருள் உரைத்தவன்.
கோழிக்கொடியோன்-சேவலைக் கொடியாக உடையவன்.
கங்கை மைந்தன்    -தீப்பொறிகளைச் சுமந்த கங்கையின் மகன்.
கடம்பன்    -கடம்ப மலர் மாலை உடையவன், நித்ய சுத்தமானவன்.
கந்தன்    -வலிமையான தோள்களை உடையவன், பார்வதியால் ஒன்று சேர்க்கப்பட்டவன்.
காங்கேயன்    -கங்கை மைந்தன்
கார்த்திகேயன்    -கார்த்திகைபெண்களால் வளர்க்கப்பட்டவன்.
குகன்    -மலைக்குகைகளில் குடி கொண்டிருப்பவன், பக்தர்களின் மனக்குகையில் இருப்பவன்.
குமரன்    -சிவனின் மைந்தன், அருவருப்பை அழிப்பவன், ஆணவத்தைப் போக்குபவன்.
குழகன்    -அழகன், இளமையானவன்.
குறிஞ்சி வேந்தன்    -மலைகளில் ஆட்சி புரிபவன், மலை போல் உயர்ந்த மனங்களில் இருப்பவன்.
குன்றெறிந்தோன்    -கிரவுஞ்ச மலையைத் தகர்த்தவன்.
கவுரி நந்தனன்    -உமாதேவியின் மைந்தன்.
சண்முகன்    -ஆறு முகம் கொண்டவன்.
சரவணபவன்    -நாணற்புல் நிறைந்த பொய்கையில் தோன்றியவன்.
சிலம்பன்    -காலில் சிலம்பணிந்தவன், மலைகளில் இருப்பவன்.
சுரேசன்    -துன்பம் நீக்குபவன்.
சூர்ப்பகைவன்    -எதிரிகளுக்கு அச்சமூட்டுபவன்.
செட்டி    -     உப்பூரிகுடி கிழார் மகனாய் செட்டி மரபில் தோன்றியவன்.
சேந்தன்    -சிவப்பு நிறமுடையவன்
சேவற்கொடியோன்-சேவலைக் கொடியில் தாங்கியவன்.
தெய்வானை காந்தன்-தெய்வானையின் கணவன்.
தேவசேனாபதி    -சேனைக்குத் தலைவன்.
பாவகி, பாவகாத்மஜன்    -பரிசுத்தம் உடையவன்.
மஞ்ஞையூர்தி    -மயிலை வாகனமாகக் கொண்டவன்.
மாயோன் மருகன்-திருமாலின் மருமகன்.
வள்ளி மணாளன்    -வள்ளியின் கணவன்.
பாகுலேயன்    -கார்த்திகேயன்.
விசாகன்    -வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன், மயலில் சஞ்சரிப்பவன்.
சங்கத்தலைவன்    -கலைகளை உணர்ந்த புலவன்.
சாமி  - செல்வன்.
முத்தையன்    -முத்துப்போல் சிறந்தவன், மாபெரும் குரு.
சுப்பிரமணியன்    -வேதங்களின் தலைவன், ஆனந்தமயமான சிவனிடமிருந்து பிறந்தவன்.

கருத்துகள் இல்லை: