வியாழன், 19 நவம்பர், 2020

ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்

ஸ்ரீ ஸ்கந்த ஷட்க ஸ்தோத்ரம்

இந்த துதியை பாராயணம் செய்து வந்தால் இல்லத்தில் பொன் பொருள் சேரும். அன்னப்பஞ்சம் இருக்காது. எல்லா மங்கள காரியங்களும் தடை நீங்கிச் சிறப்பாக நடக்கும். ஞானமும், ஆரோக்கியமும், புத்திர லாபமும் உண்டாகும்.

ஓம் ஸ்ரீகணேஶாய நமஹ:

(1)
ஷண்முகம் பார்வதீபுத்ரம்
க்ரெளஞ்சஶைல விமர்தநம் ।

தேவஸேநாபதிம் தேவம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

ஆறுமுகனும், பார்வதியின் புத்ரனும், மலை உருவமெடுத்த கிரௌஞ்சா அசுரனை வதைத்தவனும், தேவஸேனையின் கணவனும், தேவனும், சிவபுத்ரனுமான ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(2)
தாரகாஸுர ஹந்தாரம் மயூராஸநஸம்ஸ்திதம் ।

ஶக்திபாணிம் ச தேவேஶம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

தாரகாஸூரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞான வேலை கையில் தரித்தவனும், சிவபுத்ரனுமான
ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்,
திருப்பாதங்களில்
சரணமடைகிறேன்.

(3)
விஶ்வேஶ்வர ப்ரியம் தேவம்
விஶ்வேஶ்வர தநூத்பவம் ।

காமுகம் காமதம் காந்தம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

எல்லா உலகிற்கும் ஈசனான ஸ்ரீபரமேஸ்வரனின் அன்பிற்கு உரியவனும், தேவனும், ஸ்ரீவிஸ்வேஸ்வரனின் புத்ரனும், வள்ளி தேவசேனையிடத்தில் விருப்பம் கொண்டவனும், பக்தர்களின் மன விருப்பங்களை நிறைவேற்றுபவனும், மனதைக் கவருகின்றவனும் சிவ புத்ரனுமான ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன்,
திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(4)
குமாரம்
முநிஶார்தூலமாநஸாநந்தகோசரம் ।

வல்லீகாந்தம் ஜகத்யோநிம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

குமரக் கடவுளும், சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும்,
வள்ளியின் கணவனும், உலகங்களுக்கு காரணமானவனும்,
சிவ புத்ரனுமான
 ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(5)
ப்ரலயஸ்திதிகர்தாரம்
ஆதிகர்தாரமீஶ்வரம் ।

பக்தப்ரியம் மதோந்மத்தம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

அழித்தல் காத்தல் இவற்றைச் செய்கிறவரும், முதலில் உலகங்களைப் படைத்தவரும், யாவருக்கும் தலைவனும், பக்தர்களிடத்தில் அன்பு கொண்டவனும், ஆனந்த வடிவினை கொண்டவனும், சிவபுத்ரனுமான
ஸ்ரீஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(6)
விஶாகம் ஸர்வபூதாநாம்
ஸ்வாமிநம் க்ருத்திகாஸுதம் ।

ஸதாபலம் ஜடாதாரம்
ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ॥

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும், உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும், கிருத்திகையின் புத்ரனும், எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும் ஜடையை தரித்தவனுமான,
சிவபுத்ரனுமான
ஸ்ரீ ஸ்கந்தனின் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன், திருப்பாதங்களில் சரணமடைகிறேன்.

(7)
ஸ்கந்த ஷட்கம் ஸ்தோத்ரமிதம்
ய:படேத் ஶ்ருʼணுயாந்நர: ।

வாஞ்சிதாந் லபதேஸத்ய
ஸ்சாந்தே ஸ்கந்தபுரம்வ்ரஜேத் ॥

ஆறு சுலோகமுள்ள இந்த ஸ்ரீஸ்கந்தனின் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்கள், அவர்கள் கோரிய பொருளை உடன் அடைவார்கள். முடிவில் ஸ்ரீஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பார்கள்.

இதி ஶ்ரீஸ்கந்த ஷட்கம் ஸம்பூர்ணம்

இவ்வாறாக ஸ்ரீ ஸ்கந்த ஷட்கம் நிறைவுபெற்றது.


கருத்துகள் இல்லை: