புதன், 28 அக்டோபர், 2020

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்.....!

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்.....!

1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை நதிகளில் குளிக்கக்கூடாது.

2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது. கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.

3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.

4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது சொல்லுதல் கூடாது
சுத்தமான இடத்தில் தான் ஜபிக்க வேண்டும்.

5. கற்பூர ஹாரத்தி சூடம் காண்பித்தல் பற்றி ... சூடம் காண்பிக்கும் போது கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும். தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்க வேண்டும். முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை: