புதன், 30 செப்டம்பர், 2020

சுந்தரேஸ்வரர் (மீனாட்சி)மதுரை

சுந்தரேஸ்வரர் (மீனாட்சி)மதுரை




உலகப்புகழ் பெற்ற சிவாலயம். பாண்டிய மன்னனாக அங்கயற்கண்ணியாம் அன்னை மீனாட்சி அம்பிகை பிறந்து நல்லாட்சி செய்யும் பதி சிவ பெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே. சிவனே எல்லாம் வல்ல சித்தராக  எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவ பக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம். இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே  சிவபெருமானுக்கு  நடை பெறுகின்றன

கருத்துகள் இல்லை: