வியாழன், 24 செப்டம்பர், 2020

மூதேவி என்பதின் முழு பெயர் மூத்த தேவி என்று பெயர்

மூதேவி என வழங்கும் மூத்த தேவி
மூத்ததேவி அதாவது ஜேஷ்டா தேவியின் கொடி காக்கை, வாகனம் கழுதை. மூதேவியை வெயிலுடனும், சீதேவியை மழையுடனும் தொடர்பு படுத்துகிறார்கள். மூதேவிக்கு மற்றொரு பெயர் ஜேஷ்டாதேவி.
இவளின் கைக்கருவி விளக்கமாறு.
மூதேவி தெய்வத்தின் மகன் பெயர் குளிகன் மகள் பெயர் மாந்தி. நாகை மாவட்டம் மயிலாடுதுறை வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. தேவியை குழந்தைப் பேறு வேண்டி மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.        
சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம்.
பிற்காலத்தில் மூதேவி  (மூத்ததேவி) சிவாலயங்களில் இருந்து எடுக்க பட்டதாக தெரிகிறது. இந்த அம்பாளை ஜேஷ்டாதேவி தூம்ரவாராஹி தூமாவதி மகாநித்ரா மகாமாயா மகாராத்திரி மோஹராத்திரி காளராத்திரி என்றும் அழைப்பர். தேவிமகாத்மியத்திலும் இவள் வருகிறாள். இவள் இயற்க்கையான உறக்கமும் மன அமதியையும் தருபவள் நரம்பு தளர்ச்சி நோய்கள் சித்த பிரமையை தீர்ப்பவள். செங்கற்பட்டு ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமத் தர்ம சம்வர்தினி சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் ஜேஷ்டாதேவி தனி சன்னதி கொண்டு அமர்ந்திருக்கிறார். பிரதி சனிக்கிழமை தோறும் ராகு காலத்தில் விசேஷ பூஜை வழிபாடுகள் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.



கருத்துகள் இல்லை: