ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சாளக்கிராம பூஜை

 சாளக்கிராம பூஜை

1. சாளக்கிராம பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம் கொலை செய்தவனின் பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவது போல. பாபங்கள் கழன்று ஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியேஇல்லாது அல்லது எதிர் பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் இப்பூஜையினை செய்பவர்கள் விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை பக்தியுடன் நமஸ்கரித்தவன் தேவனாகிறான்...! அவன் சாதாரண மனிதன் அல்லன்...!

9. சாளக்கிராமம் பகவான் இருக்குமிடம். சர்வ பாபங்களையும  நாசம் செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட சாளக்கிராம பூஜையினால் பரகதி அடைகிறார்கள். பக்தியோடு
 செய்பவர்கள் முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி உண்டாவது போல சாளக்கிராமத்தில் ஹரி இருக்கின்றார். லஷ்மி மற்றும் வைகுண்டத்தில் இருப்பதைவிட ஹரி சாளக்கிராமத்தில் மிகவும் பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும் பூதானமும் செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும், ஒரு நாள் சாளக்கிராமத்தை பூஜை செய்த பலனுக்கு ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் பூஜை செய்தபலன் ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன் கூட சாளக்கிராம பூஜையினால் முக்தி பெறுவான்.

16.தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே சாளக்கிராம பூஜையினால் முக்தியடைவான்.

17. சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்து விடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சாளக்கிராமத்தில் சூட்சுமாமயிருந்து அருள் பாலிக்கின்றனர்.

19. விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டே சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும், சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.

21. பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும். சாளக்கிராம தீர்த்தமே போதுமே நம் உள்ளும் புறமும் சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும் பிறவா நிலை கிடைத்து விடும்.


கருத்துகள் இல்லை: