வியாழன், 11 ஜூலை, 2019

திருச்சி உறையூர் தில்லை காளி குங்கும அலங்காரம் திரு உருவம் இன்று 10:07:19 புதன்கிழமை பதிவு செய்துள்ளோம். திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். வ்வொரு மாதப் பிறப்பை முன்னிட்டு இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு, சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது. ஓம் சக்தி ஓம்

ஒவ்வொரு வருடமும் தைமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாதமாக இருக்கும் பெண்ணிற்கு என்னென்ன திருச்சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளனவோ அனைத்தையும் தான்தோன்றீஸ்வரர் உடனுறை குங்குமவல்லிக்கு செய்வித்து, பொன், காப்பு, வெள்ளிக் காப்பு, வேப்பிலை காப்பு மற்றும் ஐந்து விதமான சித்ரான்னங்கள் நிவேதனம் செய்வார்கள்.    லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும், மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர்.



 லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும் மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர். முதல் நாள் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி பிரசாதம் வழங்கப்படும். இரண்டாம் நாள் சந்தான பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கு அம்பாள் குஹாம்பிகையாக காட்சியளிக்கின்றாள். சந்தான பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கும் வளையல் பிரசாதமாக வழங்கப்படும் மூன்றாம் நாள் அம்பாள் கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். அவளை தரிசனம் செய்தால் மணமாகாத (ஆண்-பெண்) இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் வேண்டிக்கொண்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர்.

இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது.

அதன்பிறகு அதற்கு பாதாளத்தில் கோயில் கட்டி பாதாள காளி என பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேற்பரப்பில் தில்லை காளி அமர்ந்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் கோபுரத்தில் ஆகாச காளி எழுந்தருளியிருக்கிறாள். இவளை அமாவாசையன்று மட்டுமே தரிசிக்கலாம். (அமாவாசை அன்று இரவு 8.30 - 10.00 மணி) இதுவரை எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத வகையில் பாதாள காளி, தில்லை காளி, ஆகாச காளி என மூன்று வகையான காளிகள் எழுந்தருளியுள்ளார்கள். பாதாளம் முதல் ஆலயம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்த ஆலயம் இதுவேயாகும். இக்காளியை வழிபாடு செய்வது பெரும் பாக்கியமாக மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் இப்பிரபஞ்சத்தில் காளி சக்தியை மொத்தமாக வழிபாடு செய்யும் ஒரே இடம் இக்காளி ஆலயம்தான். இக்காளியை வழிபட்டால் எல்லாவிதமான பெண் தெய்வங்களையும் வழிபாடு செய்த பெரும் புண்ணியம் கிடைக்கும். அமாவாசையன்று மட்டும்தான் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும்.

ஜெயகாளி: தில்லை காளிக்கு அருகில் ஜெயகாளி சந்நதியும் உள்ளது. ஜெயகாளியின் கோஷ்டத்தில் பிரத்யங்கரா, தக்ஷண காளியும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அமாவாசையன்றும் காளிக்கு வரமிளகாய் தீபம் ஏற்றப்படுகிறது. மிளகாய் தீபம் ஏற்றுவதால் பங்காளி சண்டை, பில்லி சூன்யம் நிவர்த்தி, குடும்பத்தில் அமைதி, தீராத வியாதிகள் நிவாரணம் அடைதல், வராத கடன் திரும்ப வருதல், செய்வினை கோளாறு, கண் திருஷ்டி ஆகியவற்றுக்கு சிறந்த பரிகாரம் என மிளகாய் தீபத்தை ஏற்றிக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இந்த தீபம் ஏற்றப்படும். மேலும் ஜெயகாளிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகு காலத்தில் வாய் பேச இயலாத குழந்தைகள் சரளமாகப் பேசவும், கல்வியில் சிறக்கவும் இஞ்சி, தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனைத்து சிவாலயங்களில் பைரவர் விக்ரகம் காணப்படும். பைரவர் ஆலயத்திற்கு காவலாக இருக்கக் கூடியவர்.

 இந்தக் கோயில் கி.பி. 871ல் ராசகேசரிவர்மன் என்ற சிறப்பு பெயர் பெற்ற ஆதித்த சோழனால் கட்டப்பட்டிருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் தான்தோன்றீஸ்வரர். இறைவி குங்குமவல்லி. அன்னைக்கு காந்திமதி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தக் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் இவற்றுடன் கூடியதாக உள்ளது. அர்த்த மண்டபத்திற்குள் நுழையும்முன்பு வாயிலின் இருபுறமும் மிகப்பெரிய இரண்டு துவாரபாலகர் சிலைகள் உள்ளன. கருவறையில் இறைவன் பெரிய உருவில் சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார்.

மகாமண்டபத்தில் அம்மன் சந்நதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். உட்பிராகாரத்தில் இறைவனின் எதிரே நந்தியும் தென்புறம் தட்சிணாமூர்த்தியும் செல்வ விநாயகரும், மேல்புறம் தண்டாயுதபாணியும், வடக்கே சண்டிகேஸ்வரும், வடகிழக்கு மூலையில் நவகிரக மண்டபமும், தேவகோட்டத்தின் மேல்புறம் பிரம்மா மற்றும் துர்க்கையின் திருமேனிகளும் அழகுற அமைந்துள்ளன. உறையூரை ஆட்சி செய்த சூரவாதித்த சோழன் என்ற மன்னன் சாரமா முனிவரின் செவ்வந்தி மலர் நந்தவனத்தில் ஆதிசேஷனின் மகள்களாகிய ஏழு நாக கன்னியரைப் பார்த்தான். பார்த்த மாத்திரத்தில் மோகம் கொண்டான். அவன் அவர்களை மணம் செய்துகொள்ள ஆசைப்பட்டான். ஆனால், அந்த கன்னிகையர் மறுத்துவிட்டனர். அரசன் நாகலோகம் சென்று ஆதிசேஷனின் அனுமதி பெற்று அந்த கன்னிகையரில் ஒருத்தியான காந்திமதியை மணந்தான்.

காந்திமதி சிவபக்தி மிகுந்தவள். அந்த பக்தியுணர்வு காரணமாக திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவரை நாள்தோறும் சென்று வணங்கி வந்தாள். அவள் கர்ப்பவதியானபோதும் தினந்தோறும் நடந்து சென்று இறைவனை வழிபட்டு வந்தாள். ஒருநாள் கொடிய வெப்பம் காரணமாக வழியில் மயங்கி விழ அன்று இறைவனை வழிபட இயலவில்லையே என வருந்தினாள். இந்தப் புராணச் சான்றாகவும் கர்ப்பவதியான காந்திமதி அம்மையின் நினைவாகவும் ஒவ்வொரு வருடமும் தைமாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று மாதமாக இருக்கும் பெண்ணிற்கு என்னென்ன திருச்சடங்குகள் சம்பிரதாயங்கள் உள்ளனவோ அனைத்தையும் தான்தோன்றீஸ்வரர் உடனுறை குங்குமவல்லிக்கு செய்வித்து, பொன், காப்பு, வெள்ளிக் காப்பு, வேப்பிலை காப்பு மற்றும் ஐந்து விதமான சித்ரான்னங்கள் நிவேதனம் செய்வார்கள்.

லட்சக்கணக்கான வளையல்கள் அணிவித்தும் குங்குமம், மஞ்சள், திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, என மங்கல பொருட்களை அம்பிகைக்குச் சாத்தி வழிபாடு செய்து சுகப்பிரசவமாக கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகளும், திருமணத்தடை அகல கன்னிப் பெண்களும், மாங்கல்ய பலம் பெற சுமங்கலிகளும் இந்த பிரசாதத்தை பெற்றுச் செல்கின்றனர். முதல் நாள் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி பிரசாதம் வழங்கப்படும். இரண்டாம் நாள் சந்தான பாக்கியம் வேண்டி வருபவர்களுக்கு அம்பாள் குஹாம்பிகையாக காட்சியளிக்கின்றாள். சந்தான பாக்கியம் வேண்டி வரும் அன்பர்களுக்கும் வளையல் பிரசாதமாக வழங்கப்படும் மூன்றாம் நாள் அம்பாள் கல்யாண திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றாள். அவளை தரிசனம் செய்தால் மணமாகாத (ஆண்-பெண்) இருபாலருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறவும், தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் வேண்டிக்கொண்டு பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆலயமானது ராஜகேசரிவர்மா என்ற சிறப்புப் பெயர் பெற்ற ஆதித்த சோழன் காலத்தில் கி.பி. 871-907ல் கட்டப்பட்டது. தேவகோட்டத்தின் மேற்புறம் லிங்கோத்பவர் காணப்படுகிறது. இக்கோயிலில் அம்மையப்பர் திருஉருவம் காணப்படுவதால் இக்கோயிலிலும் ஆதித்த சோழன் காலத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஒவ்வொரு மாதப் பிறப்பை முன்னிட்டு இங்குள்ள தில்லை காளிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகளும் பெளர்ணமி பூஜை அன்னதானத்துடன் அமாவாசை பூஜை வேறு எங்கும் இல்லாத வகையில் வரமிளகாய் மற்றும் குருதி அபிஷேகம் குங்கும அலங்காரத்தோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலின் நடுவில் பாதாளத்தில் எட்டு கைகளுடன் காளி காட்சி தருகின்றாள். 300 ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரத்தடியில் பதுவாக (உருவமற்ற நிலையில்) வேப்பமரத்திற்கு பூஜை செய்தார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் பொங்கலிட்டு, சில பலிகள் இட்டு வழிபட்டு வந்தனர். நாளடைவில் காலச் சுழற்சி காரணமாக பூஜைகள் குறைந்து விட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்களின் கனவில் சென்று இங்குள்ள பாதாளத்தில் உள்ளேன் என்று கூறியது.

அதன்பிறகு அதற்கு பாதாளத்தில் கோயில் கட்டி பாதாள காளி என பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேற்பரப்பில் தில்லை காளி அமர்ந்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க ஆலயத்தின் கோபுரத்தில் ஆகாச காளி எழுந்தருளியிருக்கிறாள். இவளை அமாவாசையன்று மட்டுமே தரிசிக்கலாம். (அமாவாசை அன்று இரவு 8.30 - 10.00 மணி) இதுவரை எந்தவொரு ஆலயத்திலும் இல்லாத வகையில் பாதாள காளி, தில்லை காளி, ஆகாச காளி என மூன்று வகையான காளிகள் எழுந்தருளியுள்ளார்கள். பாதாளம் முதல் ஆலயம் வரை ஒரே நேர்கோட்டில் அமைந்த ஆலயம் இதுவேயாகும். இக்காளியை வழிபாடு செய்வது பெரும் பாக்கியமாக மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் இப்பிரபஞ்சத்தில் காளி சக்தியை மொத்தமாக வழிபாடு செய்யும் ஒரே இடம் இக்காளி ஆலயம்தான். இக்காளியை வழிபட்டால் எல்லாவிதமான பெண் தெய்வங்களையும் வழிபாடு செய்த பெரும் புண்ணியம் கிடைக்கும். அமாவாசையன்று மட்டும்தான் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய முடியும்.

ஜெயகாளி: தில்லை காளிக்கு அருகில் ஜெயகாளி சந்நதியும் உள்ளது. ஜெயகாளியின் கோஷ்டத்தில் பிரத்யங்கரா, தக்ஷண காளியும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அமாவாசையன்றும் காளிக்கு வரமிளகாய் தீபம் ஏற்றப்படுகிறது. மிளகாய் தீபம் ஏற்றுவதால் பங்காளி சண்டை, பில்லி சூன்யம் நிவர்த்தி, குடும்பத்தில் அமைதி, தீராத வியாதிகள் நிவாரணம் அடைதல், வராத கடன் திரும்ப வருதல், செய்வினை கோளாறு, கண் திருஷ்டி ஆகியவற்றுக்கு சிறந்த பரிகாரம் என மிளகாய் தீபத்தை ஏற்றிக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இந்த தீபம் ஏற்றப்படும். மேலும் ஜெயகாளிக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ராகு காலத்தில் வாய் பேச இயலாத குழந்தைகள் சரளமாகப் பேசவும், கல்வியில் சிறக்கவும் இஞ்சி, தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனைத்து சிவாலயங்களில் பைரவர் விக்ரகம் காணப்படும். பைரவர் ஆலயத்திற்கு காவலாக இருக்கக் கூடியவர்.

இன்றும் கடைசியாக பைரவர்க்கு பூஜை நடத்தி ஆலயத்தின் சாவியை வைத்து பூஜித்து எடுத்துச் செல்வது சிவாலயங்களில் நடைபெறுவது வழக்கம். ஏனைய ஆலயங்களில் ஒரு பைரவர் மட்டும்தான் இருப்பார். இவ்வாலயத்தில் மட்டும்தான் சிறப்பாக அஷ்ட பைரவர் தமது மனைவி மற்றும் வாகனத்துடன் சிறப்பாக காட்சி தருகின்றார். பைரவர் திருவுருவத்தை பழங்காலம் தொட்டு அறிந்திருந்தாலும் இந்த சொர்ண பைரவர் திருவுருவத்தைக் கண்டறிவது அரிது. குறிப்பிட்ட சில ஆலயங்களில் இந்த சொர்ண பைரவரின் திருமேனி உள்ளது. இவ்வாலயத்தில் மட்டும்தான் நான்கரை அடி உயரத்தில் நான்கு திருக்கரங்களுடன் பொன்குடம் ஏந்திச் சொர்ண தேவியை அணைத்தவாறு, மக்கள் கேட்கக்கூடிய வரங்களையும், பொன் பொருள் தரக்கூடிய நிலையில் சொர்ண பைரவர் எழுந்து அருளியுள்ளார். இவ்வாலயத்தில் தேய்பிறை அஷ்டபூஜை சிறப்பு வாய்ந்தது. தில்லை காளிக்கு இடதுபுறம் கருடவராகியின் திருமேனி உள்ளது. நாமும் ஒருமுறை இறைவன் தான்தோன்றீஸ்வரரையும், அன்னை குங்குமவல்லியையும் தரிசித்து நற்பயனைப் பெறுவோம்.


கருத்துகள் இல்லை: