வியாழன், 11 ஜூலை, 2019

சுலோகம் 110

த்யானம் யதா பவதி தத்விஷயோ யதா த்வம்
யாத்ருக்குண : ச பகவந் அதிகாரிவர்க : |
ஸர்வாணி தாநி பவதாகம ஸம்ஹிதாபி :
கல்ல்பைரிவாத்வரவிதே : உபபாதிதாநி ||
பதவுரை

த்யானம் – மனதை ஒரே விஷயத்தில் ஏகாக்ரமாக செலுத்துவது, யதா பவதி – எப்படிச் செய்யவேண்டுமோ. அதுவும் தத் விஷய: த்வம் – அந்த த்யானத்துக்கும் விஷயமானது, த்யானம் செய்யப்பட்ட வேண்டிய நீர், யதா – எந்த எந்த குணங்களோடு கூடியிருக்கிறீர் என்பதும், அதிகாரி வர்க்க:- த்யானம் செய்ய யோக்யதையுள்ள ஜனங்கள் யாத்ருக்குண: ச – எவ்விதமான குணங்களோடு கூடியிருக்க வேண்டுமென்பதும், பகவந் – பகவானே, தாநி ஸர்வாணி – அவையெல்லாம், பவத் ஆகம ஸம்ஹிதாபி:- உமது ஆகமம் என்கிற, சிவாகமம் என்ற ஸம்ஹிதைகளால் (வேத துல்யமானதால் வேதவாசகமான ஸம்ஹிதாபதம், ஆகமத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது) அத்வரவிதே :- யாகம் செய்ய வேண்டிய விதியின், தந்த்ராணி – முறைகள் கல்ப்பைரிவ – கல்ப்பஸூத்ர க்ரந்தங்களில் போல, உபபாதி தாநி – ரிஷி, சந்தஸ் தேவதா, விந்யோகம், ப்ராம்மணம், இவ்வைந்துகள் உள்பட நிருபிக்கப்பட்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை: