திங்கள், 14 அக்டோபர், 2019

குளிகன் கொடுப்பான்..!! குளிகன் கெடுப்பான்..!!!எப்போது..!  அறிவோமா..!!

குளிகை நேரம் கிடைக்க கொடுத்து வைத்திருத்திருக்க வேண்டும்.

தினமும் ராசி பலன் பார்த்து இன்றைய நாள் எப்படி இருக்கும் என தெரிய அனைவரும் ஆசை படுகிறோம்.

தினசரி பத்திரிக்கையில் ராசி பலன் பகுதியிலோ அல்லது காலண்டரிலோ குளிகை என்ற பகுதி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

ராகு காலம்., எமகண்டம் தெரிந்த அளவு குளிகை பற்றி பலருக்கு தெரிவதில்லை.

வார நாட்கள் 7

நவகிரகம் 9

7 கிரகங்களுக்கு 7 நாட்கள்.

ஆனால் ராகு, கேதுவிற்கு தினசரி 1½ மணி நேரம் ராகு காலம்., எமகண்டமாக பிரித்து கொடுக்கப்படுகிறது. அதனால் ராகு., கேதுவிற்கு கிழமை கிடையாது.

ஆனால் குளிகை யார்.?

குளிகன் சனி—ஜேஷ்டா தேவியின் புதல்வன்.

ராகு., கேதுவை போல் தினமும் பகலும்., இரவும் 1½., 1½ மணி நேரம் இவருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த காலத்தில் செய்யும் செயல்கள் பெரும் வளர்ச்சி பெறும் என்பதால் #அசுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.

ஆனால்., எந்த நல்ல செயல் செய்தாலும் நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.

குறிப்பாக கடன் கழுத்தை நெரிப்பவர்கள் குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும்.

*"சுப செயலான நகை வாங்குவது., தொழில் தொடங்குவது., நடவு செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகள் தாராளமாக செய்யலாம்."*

*"அது போல் கடன் வாங்குவது., பிரேதத்தை தூக்குவது போன்ற அசுப நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்."*

கிழமைகள் ~~
பகல் பொழுது
மற்றும்
இரவுப் பொழுது

ஞாயிறு ~~
பகல் ~ 03:00 — 04:30
மற்றும்
இரவு ~ 09:00 — 10:30

திங்கள் ~~
பகல் ~ 01:30 — 03:00
மற்றும்
இரவு ~ 07:30 — 09:00

செவ்வாய் ~~
பகல் ~ 12:00 — 01:30
மற்றும்
இரவு ~12:00 — 01:30

புதன் ~~
பகல் ~ 10.30 — 12.00
மற்றும்
இரவு ~ 03.00 — 04.30

வியாழன் ~~
பகல் ~ 09.00 — 10.30
மற்றும்
இரவு ~ 01.30 — 03.00

வெள்ளி  ~~
 பகல் ~ 07.30 — 09.00
மற்றும்
இரவு ~12.00 — 01.30

சனி ~~
பகல் ~ 06:00 — 07:30
மற்றும்
இரவு ~ 10:30 — 12:00

மேலே குறிப்பிட்டுள்ள தினசரி குளிகை கால காலத்தை பயன்படுத்தி முன்னேற்றம் பெறுங்கள்.

கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் செவ்வாய்கிழமை பகல் 12:00 — 01:30குள் கடனில் சிறுபகுதியை கொடுங்கள்.

நீங்களே ஆச்சிரியபடும் அளவிற்கு கடன் அடைபடுவதை கண் முன் காணலாம்.

பலரும் பயன் பெற்ற மிக எளிய பரிகாரம்.

முதலில் கொடுத்திருக்கும் நேரம் பகல் பொழுது இரண்டாவது இரவு பொழுது குளிகன் நேரம் .

மொத்தம் நவ கிரஹங்கள் அதாவது நவ என்றல் ஒன்பது. ஆனால் ஏழு கிரஹங்களுக்கும் அதன் பெயரிலேயே ஒரு நாள் இறைவனால் பரிசு கொடுக்கப்பட்டிருக்கிறது .

ராகுவுக்கு கேதுவுக்கும் நாள் கொடுக்கப்படவில்லை என்றாலும் வாரத்தின் ஏழு நாளிலும் ஒரு முகூர்த்த நேரம் ( 1½ ஒன்றரை மணி நேரம் ஒரு முகூர்த்த நேரம் ) கொடுக்க பட்டுள்ளது.

அதேபோன்று குளிகனுக்கும் வாரத்தில் ஏழு நாட்களிலும் காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளையும் ஒரு முகூர்த்த நேரம் கொடுக்கப் பட்டுள்ளது.

எல்லா நாட்களும் இரண்டு வேளையும் ஒரு முகூர்த்த நேரம் பரிசாக பெற்றுள்ள குளிகன் மிகவும் சக்தி வாய்ந்தவன் என்பது இதிலிருந்து புலனாகிறது..!

ஓம் ஸ்ரீ மஹா பைரவாய நமஹ..! என்று எவனொருவன் பைரவர் சன்னதி முன் ஜபிப்பதற்கு முன் விளக்கேற்றி செவ்வரளி மலர் சாற்றி அவர் முன் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் மாலை 3 முதல் 4.30 வரை குளிகன் காலத்தில் ஜபித்தால் கோடி மடங்கு பலன்.

ஏனென்றால் குளிகனுக்கு ஒன்றை., பல மடங்காக ஆக்கும் சக்தி உண்டு. அது அந்த நேரத்தில் நல்ல காரியங்கள் செய்தாலும் சரி., கெட்ட காரியங்கள் செய்தாலும் சரி., அது பல்கி பன் மடங்காக பெருகும் என்பது நிதர்சனமான உண்மை .

அனால் இந்த குளிகன் சூட்சும நேர மகிமை பலருக்கும் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: