திங்கள், 16 செப்டம்பர், 2019

மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன தெரியுமா?

மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்ற ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.‘மனம் செம்மைப்படும் போது’என்பதையும் கவனிக்க வேண்டும்.செம்மைப்படுவது என்பது ஆசாபாசங்கள் என்னும் அழுக்குகள் நீங்கி தூய்மை அடைவது என்று பொருள்.இந்த மன அழுக்குகளைப் போக்க இன்னும் சோப்புத்தூள் விற்பனைக்கு வரவில்லை.மந்திரம்  ஜபிப்பது ஒன்று தான் வழி.இப்படி அதிகமான ஜபங்கள் செய்து மனதிலுள்ள இருள் நீங்கும் போது ஏற்படுவது தான்‘மனமது செம்மையாதல்’எனப்படும்.அதாவது வேறு எந்த விருப்பங்களும் இல்லாமல் இறைவனுடைய திருவடிகளை அடைவது ஒன்றே போதும் என்ற நிலையை மனம் முழுமையாக அடையும் போது,விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாகிய மந்திரங்களை(காமிய மந்திரங்களை) ஜபிக்கும் அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே செம்மையடையும் வரை மந்திரம் ஜபிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: