திங்கள், 23 செப்டம்பர், 2019

15:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

15:ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1
(கி.பி. 317  -கி.பி.329 வரை)

ஸ்ரீ கீஷ்பதி கங்காதரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்-1
ஸ்வாமிகள் ஆந்திராவைச் சேர்ந்தவர்.இவரது தந்தையின் பெயர்"ஸ்ரீகாஞ்சிபத்ரகிரி".இவருக்கு பெற்றோர் இட்ட நாமதேயம் சுபத்ரர்.இவர் ஸ்ரீ அகஸ்திய முனிவரை தரிசித்து அவரிடமே"பஞ்சதசாக்ஷரி"என்ற மந்திர உபதேசத்தை வாங்கிக்கொண்டார்.இவர் காமகோடி பீடாதிபதியாகும் போது இவரது வயது பன்னிரண்டு.அப்போதே பெரும் புலமையும்,ஞானமும் பெற்றிருந்தார்.இவர் கி.பி.329-ஆம் ஆண்டு சர்வதாரி வருடம்,சித்திரை மாதம்,சுக்லப்பிரதமையன்று அகஸ்தியமலை அருகில் சித்தியடைந்தார்.

கருத்துகள் இல்லை: