ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

சந்திர கிரகணம்

⭐ சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்க படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும் போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.

⭐ பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.

⭐ சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது
பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மிது படுவதிலிருந்து மறைத்து விடுவதால் ஏற்படுவது ஆகும்.

⭐ சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும் அரை குறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும் கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

⭐ கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.

சந்திர கிரகணம் பற்றி புராணக் கதை :

⭐ சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்து விடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார்.

⭐ ஆனால் சந்திரன், பகவானை பிரார்த்தித்து ஸ்லோகங்கள் சொல்லவும் இறைவன் சந்திரனுக்கு அருள சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது.

⭐ இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.

⭐ கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர் வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

⭐ கிரகணம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ள கூடாது.

⭐ கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது.

⭐ ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

⭐ செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

⭐ கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அது போலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

⭐ கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

⭐ ஆலய தரிசனம் செய்து விட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

⭐ கிரகணம் முடியும் பதினைந்து நிமிடங்கள் முன் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

⭐ சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளை கொடுக்கும்.
--------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: