செவ்வாய், 14 ஜூலை, 2015



 இன்றே தர்மம் செய்யுங்கள்
 ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்ளுங்கள்.இன்னொரு கையால் உலகவாழ்வில் செயலாற்றுங்கள்.
 பணத்தைத் தேடி அலைந்து திரியாதீர்கள்.கடவுளின் திருநாமத்தைச் சொல்லி வழிபடுவதே மேலான இன்பம்.
 ஒரு சிறு புல்லைக் கூட படைக்கத் திறனற்றவராக இருக்கும் நமக்கும் உணவு உடையும் கொடுத்த கடவுளுக்கு நன்றி காட்டுவது நம் கடமை.
 தர்மம் செய்வதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி போடுவது கூடாது.வாழ்வு நிலையற்றது என்பதை மறத்தல் கூடாது.
 மற்றவருக்கு உபதேசித்து திருத்துவதற்கு முன்னால் நம்மை நாமே தப்பு செய்யாமல் சரியான பாதையில் வாழக் கற்றுக் கொண்டால் போதும்.
 சேவை செய்பவர்களுக்கு தைரியம் மன ஊக்கம் இவற்றோடு மனதில் அமைதி முக மலர்ச்சியும் தேவையான அடிப்படையான பண்புகள்.
 காஞ்சி மஹா பெரியவா

கருத்துகள் இல்லை: