சனி, 3 மே, 2014

மனதில் உறுதி வேண்டும்

* நாம் அனைவரும் இறைவனைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயற்சிக்க வேண்டும். பரம்பொருளைத்தவிர, வேறெதுவுமே உலகில் நிலையானது அல்ல என்பதை உணர்வதே ஞானம்.

* வாழ்வில் இன்பங்களை எல்லாம் வெளியுலகில் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் நம்மை மயக்கக் கூடியவை. என்றென்றும் பூரண இன்பம் தருபவர் கடவுள் மட்டுமே.

* குழந்தைப் பருவத்தில் இருந்தே தியானம் செய்யப் பழகினால், பாவ எண்ணங்கள் நம் மனதில் உற்பத்தியாவதைத் தடுத்து உயர்ந்த நிலையை அடையலாம்.

* உலகில் யாரும் பாவியாக இருக்க விரும்புவதில்லை. ஆனால், பாவச்செயல்களையே நாம் செய்து வருகிறோம். பலன் மட்டும் புண்ணிய பலன்களை பெற விரும்புகிறோம். மன உறுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பாவங்களில் இருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.

* அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகின்றபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல்வந்து மூடிக்கொள்வது போல, உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் இன்பம் தலைகாட்டிவிட்டு ஓடிவிடுகிறது. காஞ்சிப்பெரியவர்
 

கருத்துகள் இல்லை: