புதன், 16 அக்டோபர், 2013

உங்களுக்கு பிடித்த சொல் பயமா? அபயமா?

அ என்ற முதலெழுத்துக்கு அபார சக்தி உண்டு. ஒரு வேலையைச் செய்கிறோம். திருப்தி என்றால் கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. அந்த வார்த்தையின் முன்னால் அ சேர்த்து விட்டால் முகத்தை சுளிக்க வைத்து விடுகிறது. இதுபோல பயம் என்ற சொல் மற்றவர்களிடம் நம்மைத் தலை குனிய வைக்கிறது. பயப்படுபவனை கோழை, நம்பிக்கையில்லாதவன் என்றெல்லாம் திட்டுகின்றனர். இவர்கள் இறைவனைச் சரணடைந்து விட்டால் அவன் பயம் என்ற சொல்லுடன் அ  வை சேர்த்து அபயம் அளித்து விடுகிறான். அதாவது, படைத்தவன் இருக்கான் பார்த்துக் கொள்வான் என்று செயல்பாட்டில் இறங்குபவர்களுக்கு பயமே இருப்பதில்லை. ஆக, அ என்ற எழுத்து செய்யும் வேலையைக் கவனித்தீர்களா! அதனால் தான் வள்ளுவர் திருக்குறளை அகர முதல எழுத்தெல்லாம் என்று ஆரம்பித்திருக்கிறார் போலும்!

கருத்துகள் இல்லை: