புதன், 28 ஆகஸ்ட், 2013

உலகெலாம் அடிபணியும் ஆதிசிவன் பார்வதியின்
ஆனைமுகத் தலைமகனாம் ஐங்கரனின் ஆசிகொண்டு

பூவுகில் மாந்தர்யாவும் நெறிவழுவா வாழ்வுபெற
தூயவனாய் உதித்தோனின் தரிசனத்தை தடமிடவே
ஏங்கிநிற்கும் சிறுகுழந்தை அடியேனின் குறைபொருத்து
மையல்கொண்டு மனமெழுதும் தமிழ்மொழியை ஏற்றிடுவீர்!

சிகையதனில் கங்கையோடு மதியதனை தாங்கொண்ட
பூதியவன் அவதாரப் பெரியோனின் அருளாலே
எல்லோரும் என்றென்றும் எல்லாமும் பெற்றிடவே
அடியேன் சீர்குருவின் அருள்வேண்டி நமஸ்காரம்!

ஜெய ஜெய சங்கர... ஹர ஹர சங்கர...

குருவிருக்கக் குறைவில்லை!

வாழ்வோம்! வாழ்விப்போம்!!

கருத்துகள் இல்லை: