சனி, 18 மே, 2024

கயா மற்றும் அக்ஷய வடம்

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
கயா மற்றும் அக்ஷய வடம்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

விஷ்ணு பாதம் தான் இங்கு பிரதானம் ...👣 கயாவில் திதி கொடுக்கும் போது மூன்று இடங்களில் திதி கொடுக்க வேண்டும்...

1. விஷ்ணு பாதம்

2. பால்குனி நதி

3. அக்ஷய வடம் {கோவிலில் இருந்து ஐந்து கிலோ மீட்டரில் உள்ளது இந்த மரம்}

முதல் இரண்டு இடங்களுக்கு பொதுவான ஒரிடத்தில் அமர வைத்து புரோகிதர்கள் திதி செய்து விடுகிறார்கள்... இதை முடித்து விட்டு இறுதியாக தான் அக்ஷய வடத்தில் திதி கொடுக்க வேண்டும். இங்கு இருக்கும் விஷ்ணு பாதம் என்பது யாரும் பிரதிஷ்டை செய்த பாதம் கிடையாது. யாரும் கொண்டு வந்து இங்கு வைத்த பாதமும் கிடையாது. பல யுகங்களுக்கு முன் கயாசுரன் என்ற ஒர் அசுரன் அங்கு வசித்து வந்தான். அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் தொந்தரவை அளித்து வந்தான். மக்கள் அனைவரும் மகா விஷ்ணுவிடம் முறையிட... சங்கு சக்கரம் மற்றும் கதையுடன் [அனுமார் கையில் வைத்திருப்பார்] இல்ல வந்து கயாசுரன் மார்பின் மீது கால் வைத்து அவன் மேலே எழும்பாதவாறு செய்தார். மகா விஷ்ணு பாதம் பட்டவுடன் அசுர குணம் அழிந்து மனிதனாக கயாசுரன் மாற்றம் அடைந்தான்.

அதன் பிறகு மகா விஷ்ணுவிடம் அவன் வரம் கேட்க துவங்கினான். அவரும் அவன் கேட்டவற்றை கொடுத்தருளினார்.

1. மகா விஷ்ணு பாதம் பட்ட இடம் தான் விஷ்ணு பாதமாக உருவெடுத்து இன்று பல கோடி மக்கள் தரிசித்து தங்களது பாவங்களைப் போக்கி புண்ணியம் அடைகிறார்கள் [இங்கு கொடுக்கப்படும் இரண்டு திதிகளில் ஒன்றை பிண்டங்கள் - உணவு விஷ்ணு பாதங்களில் சமர்ப்பித்து கயாசுரன் உணவாக உட்கொள்கிறார்] இன்னொன்றை பால்குனி நிதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த விஷ்ணு பாதத்தில் தலை வைத்து மனித ஜென்மம் கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்தி அடுத்த ஜென்மம் இதைவிட மிகவும் உயர்வானது ஒரு ஜென்மமாக கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு இனி ஒருமுறை எந்த ஒரு பாவமும் செய்ய மாட்டோம் என உறுதி கொள்வோம்.

2. இங்கு வந்து திதி கொடுக்கும் அப்பா, அம்மா இல்லாத பிள்ளைகளின் வம்சம் விருத்தி ஆகி அப்பா, அம்மா மோட்சத்திற்கு சென்று அடைவார்கள்.

3. அந்த அசுரன் "கயாசுரன்" நினைவாகத்தான் இந்த ஊருக்கு கயா என்று பெயர் வந்தது...

கயாசுரன் இறைவனிடம் கேட்டார் ஸ்வாமி இங்கு திதி நடை பெறாத நாட்களில் எனக்கு அப்பொழுது எவ்வாறு உணவு கிடைக்கும் என்று வினவினான். அதற்கு மகா விஷ்ணு சூரியன் 🌕🌕 சந்திரன்🌛🌜🌛🌜🌚 இருக்கும் வரை இந்த திதியானது தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீ கவலைப்படாதே.

புனரபி ஜனனம் ...😊
புனரபி மரணம்.....😔

பிறந்த ஒவ்வொரு மனிதனும் என்றாவது ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும். இந்த மனித ஜென்மம் கொடுத்த கடவுள் அதற்காக அவர் வாழும் காலங்களில் நன்மைகளை செய்து நற்கதி அடைவார்கள் என்று இறைவன் அருளினார். கயா கால் தடம் பட்டாலே நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி விடும். மீண்டும் எந்த ஒரு பாவங்களையும் நாம் செய்யாமல் இருத்தல் வேண்டும்.   

🍀🍀🍀🍀🍀🍀
அக்ஷய வடம்
🍀🍀🍀🍀🍀🍀

அக்ஷய வடம் என்பது அக்சய மரத்தைக் குறிக்கும். இந்த மரமானது பல யுகங்களை கடந்து இன்று வரை நீடித்திருக்கிறது. திரேதா யுகத்தில் ராமர் தசரதருக்கு இங்கு தான் திதி கொடுக்க வந்தார். அதன் பிறகு துவாபரயுகம் இப்பொழுது கலியுகம்.

பிரம்மா பூலோகத்தில் புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் அதன் காரணமாக அக்ஷய 🍁 மரத்தை நிழலுக்காக  இங்கு பூமியில் கொண்டு வந்தார். யாகங்கள் அனைத்தையும் நிறை வேற்றி விட்டு தேவர்களுடன் பிரம்மா மேலோகத்திற்கு புறப்பட்டார். அக்ஷய மரமும் புறப்பட எத்தனித்த போது நீ வேண்டாம் இங்கேயே இரு. இங்கு வந்து பிதுர் காரியங்கள் செய்த அனைவருக்கும் மோட்சம் நீ அளிக்க வேண்டும். கடைசியாக பிரளய காலம் வரும் போது கிருஷ்ணர் வாயில் விரல் வைத்து உனது இலையின் மீது தவழ்ந்தபடி உன்னை பிரம்ம லோகத்திற்கு அழைத்து வருவார் என்று பிரம்மா கூறி விடைபெற்றார். எனவே தான் இந்த அக்ஷய மரம் எப்பொழுதும் பசுமை நிறத்தில் காணப்படுகிறது.

அக்ஷயம் என்றால் வளர்ந்து கொண்டே இருக்கும். ஒரு நல்ல உதாரணம் அக்சயதிரிதியை. {அன்று நாம் எந்த ஒரு புண்ணியம் செய்தாலும் அது பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்} அப்படி என்றால் பிரம்மதேவர் வரம் கொடுத்த அக்ஷய மரம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று எண்ணிப் பாருங்கள்.

ராமாயண காலத்தில் தசரதன் இறந்து பல ஆண்டுகள் கழித்து ராமரின் சொப்பனத்தில் தசரதர் வந்து எனது ஆன்மா இன்னும் முற்றுப் பெறவில்லை நீ  வந்து அக்ஷய மரத்தடியில் எனக்கு ஸிராத்தம் செய் என்று கூறினார். கனவில் தசரதர் கூறிய படி ராமர் தனது குருமார்களையும் & சீதையும் இங்கு அழைத்துக் கொண்டு வந்து தசரதருக்கு திதி கொடுக்க தயாரானார். அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ராமர் வெளியே சென்றிருந்த நேரம் வானில் ஒரு பிரகாச ஒளி தோன்றியது தசரத தோன்றி சீதை இடம் எனக்கு பசி தாங்க வில்லை நீனே எனக்கு திதி கொடுத்து சாதம் போடு என்று கூறினார். சீதையோ சற்று பொருங்கள் ராமர் வெளியே சென்றிருக்கிறார் அவர்கள் வந்தவுடன் திதி ஆரம்பமாகிவிடும் என்று கூறினார். ராமர் வருவதற்கு மாலை ஆகிவிடும் அதற்கு முன்பாக நீ எனக்கு திதி கொடு என்று தசரதன் கேட்டுக் கொண்டார் அதற்கு சீதை ராமர் வந்து என்னை திட்டினால் நான் என்ன செய்வேன் என்று வினவினாள்.

பல்குனி ஆறு, அக்ஷய மரம், துளசி, பசுமாடு, பிராமணர் இவர்களை சாட்சியாக வைத்து எனக்கு திதி கொடு என்று தசரதன் கேட்டுக் கொண்டார். திதி கொடுக்க போதுமான பொருட்கள் என்னிடம் இல்லை நான் என்ன செய்வேன் மீண்டும் சீதை வினவினாள். இந்த நதி ஆனது புண்ணிய பூமி இங்கு பால்குனி நதியில் இருந்து மணல் எடுத்து எனக்கு திதி கொடு எனக்கு மோட்சம் கிடைக்கும் என்று தசரதன் கூறினார். அவ்வாறு சீதை செய்தவுடன் தசரதன் மோட்சத்திற்கு சென்றடைந்தார். சற்று நேரம் கழித்து ராமர் வந்த உடன் நடந்த அனைத்தையும் சீதை கூறினாள். ராமன் கோபம் கொண்டு நீ எப்படி திதி கொடுக்கலாம் என்று கோபம் கொண்டார்.

நான் திதி கொடுத்ததற்கு இங்கு ஐந்து பொருட்கள் சாட்சி இருக்கிறது அவர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள் என சீதை கூறியவுடன். கேட்கும் போது அக்ஷய மரம் தவிர அனைத்தும் மிகவும் அமைதியாக தான் இருந்தது. ராமர் அருகில் இருக்கும் முனிவரிடம் இதே போல சீதை திதி கொடுத்தால் எங்க அப்பா மோக்ஷம் அடைந்தாரா இல்லையா என்று பார்த்து சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார். அவரும் தனது ஞான திருஷ்டியால் பார்த்து தசரதர் மோட்சம் அடைந்து விட்டார் மற்ற அனைவருக்கும் நீங்கள் திதி கொடுக்கலாம் சீதை கொடுத்த திதி போதுமானது என்று கூறினார். இதைக் கேட்டவுடன் ராமருக்கு சீதை மீது இருந்த கோபம் தணிந்து மற்றவர்களுக்கு திதி கொடுத்து தனது பிதுர் காரியங்களை நிறைவேற்றிக் கொண்டார்.

சீதை அக்ஷயா மரம் தவிர மற்ற நான்கு பொருட்களுக்கும் கலியுகத்தில் மதிப்பு இருக்காது என்று கூறினார்....

1. பால்குனி நதி - இந்த நிதியால் கலியுகத்தில் யாருக்கும் எந்த பலனும் இருக்காது வருடத்தில் பத்து இருபது நாட்களுக்கு தான் மேலே சொல்லும் {நாங்கள் சென்றிருந்த நேரம் நீர் இருந்தது ஆனால் குளிப்பதற்கு ஏதுவாக இல்லை}

2. துளசி - கலியுகத்தில் துளசி மூன்று மாதம் தான் இருக்கும் அதன் பிறகு மீண்டும் அழிந்து... அழிந்து துளிர் விடும்.

3. பசுமாடு - முகத்திற்கு யாரும் பூஜை செய்ய மாட்டார்கள். மாட்டிற்கு பின்னால் தான் பூஜை செய்து புண்ணியம் தேடுவார்கள். கலியுகத்தில் பசு மாடுகளுக்கு கோ பூஜை என்பது பின்னால் தான் செய்ய வேண்டும்.

4. கயா பிராமணர் - எவ்வளவு தட்சனை கொடுத்தாலும் கலியுகத்தில் இவர்களை திருப்தி படுத்த முடியாது.

சீதையின் சாபம் இன்றளவும் பலித்து கொண்டிருக்கிறது.
உண்மையைக் கூறியதால் அக்ஷய மரம் இன்றளவும் புண்ணிய மரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இங்கு கேட்கலாம் பெண்கள் எவ்வாறு திதி கொடுக்கலாம் ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்று அதற்கும் ராமாயணத்தில் ஒரு கதை இருக்கிறது. தசரதன் காட்டிற்கு வேட்டையாடச் சென்று இருக்கும் பொழுது சிரவண குமாரன் தன் தாய் தந்தையை தீர்த்த யாத்திரைக்காக அழைத்துக் கொண்டு காசி வரும் பொழுது ஒரு நதியின் ஓரம் இருவரையும் அமரவைத்து குடிப்பதற்காக தண்ணீர் எடுத்துவர சென்றிருந்தான். கண் தெரியாத தாய் தந்தையை தொட்டில் வடிவில் அமரவைத்து தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருந்தான். சிரவண குமாரன் தண்ணீர் எடுக்கும் காட்சியை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது மான் நதியில் நீர் அருந்துவது போல இருந்தது. இதனைக்கண்ட தசரதச் சக்கரவர்த்தி சரவணகுமாரனை மான் என்று நினைத்து அம்பு எழுதினார் அப்பொழுது அம்மா என்ற குரலுடன் சிவகுமாரன் கீழே மடிந்தான். பதறிய தசரத சக்கரவர்த்தி அவனருகே சென்ற பொழுது தான் செய்த தவறை எண்ணி அவனிடம் நீ யார் என்று கேட்டார் அவன் அனைத்தையும் கூறியவுடன். ஐய்யகோ பெரும் பாவம் செய்து விட்டேன் என்று எண்ணி அவர் அங்கு சரவணகுமார் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு இருவர் அருகிலும் சென்றார்.

அப்பொழுது அவர்கள் எனது மகன் சிரவண குமாரன் நீ இல்லை. நீ யார் என்று கேட்டார். நடந்த அனைத்தையும் தசரதன் கூறியதை கேட்டு அவர் சாபம் கொடுத்தார். நீ இறக்கும் தருவாயில் உனது மகன்கள் உன்னருகே இருக்க மாட்டார்கள். மகன்கள் கையால் உனக்கு மோட்சம் கிடைக்காது என்று சாபம் கொடுத்தார்.

இந்த சாபம் தான் தசரதன் இறக்கும் பொழுது நான்கு மகன்களும் அருகில் இல்லை. அதே போல திதியும் மகன்கள் கையால் கொடுக்கப்படாமல் சீதை கையால் தான் கொடுக்கப்பட்டது. இதனால் தான் தசரதர் ராமர் திதி கொடுப்பதற்காக பதில் சீதையிடம் வந்து பிண்டம் {உணவு} வாங்கிக் கொண்டு மோட்சத்திற்கு சென்றார்.

மூன்றாவதாக செய்யப்படும் திதி இங்கு இந்த அக்ஷய மரம் அருகில் தான் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை: