செவ்வாய், 3 நவம்பர், 2020

சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி

சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி

 



🍄 படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.

🍄 அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு #ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்டார்.

🍄 இந்த கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் அவருடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் #கொட்டினார். கீழே விழுமாறு தம் திருவடி கொண்டு உதைத்து பிரம்மனை சிறையில் அடைத்தார்.

🍄 பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார். பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து #வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார்.

🍄 சிவபெருமானும் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற தந்தை #சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்துவிட்டார்.

🍄 இதை பார்த்து உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத #பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார்.

🍄 அதிசயத்தின் அடிப்படையில் இக்கோயில் முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

🍄 கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன் மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருகிறார்.

கருத்துகள் இல்லை: