செவ்வாய், 8 செப்டம்பர், 2020

நான்காவது ஆச்சார்யர் ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்! கி.மு.364 - 268


4 : ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்!

கி.மு.364 - 268
காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் குரு ரத்தினமான ஸ்ரீ சத்ய போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கேரளத்தில் அமராவதி நதிக்கரையில் வாழ்தவர். இவர் தந்தையின் பெயர் தண்டவசர்மன். வேதமோதும் அந்தண மரபினர். பெற்றோர் இவருக்கிட்ட பெயர் 'பலிந்யாசர்'. ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கு வார்த்திகங்கள் இயற்றிய இவர் பதகசதகம் என்னும் நூலையும் அருளியிருக்கிறார். கால வெள்ளத்தில் இவற்றைப் பாதுகாக்க முடியாமல் போய் விட்டது.

இவர் கி.மு.268 ல் நந்தன ஆண்டு வைகாசி மாதம் க்ருஷ்ண பக்ஷம் அஷ்டமியன்று காஞ்சியில் சித்தியடைந்தார்.

கருத்துகள் இல்லை: