ஞாயிறு, 12 ஜூலை, 2020

"காட்டுக்குத் தீ வைத்தாகி விட்டது"

சமயத்தில் ஈடுபாடு கொண்ட பணக்காரப் பெற்றோருக்குப் பிறந்தாலும் , வாழ்க்கையின் சுகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கடவுள் திருவடியை இப்பிறவியிலேயே அடைய வேண்டும் என்ற விருப்பமும் பிரார்த்தனையும் இளமையிலேயே என்னிடத்தில் சூடிக்கொண்டது......

சில காலம் இடையீடு இல்லாமல் எல்லாம் சரியாகவே சென்றது.....
ஆனால் எனக்குப் பதினாறு வயது இருக்கும்போது குடும்பத்தில் வறுமை வந்தது.... தந்தையும் திடீரென்று காலமானார்.....

இதுவே என் வாழ்வில் திருப்புமுனையாக ஆயிற்று...... நான் பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று..... வாழ்க்கைச் சுமை தாங்க முடியாது போகவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று நான் சந்தேகப்பட ஆரம்பித்தேன்.....

“நான் பாவம் ஏதும் செய்யவில்லையே , யாருக்கும் தீங்கு எதுவும் இழைக்கவில்லையே..... பின் ஏன் இந்தத் துன்பம் எல்லாம் ? ” என்று வியக்க ஆரம்பித்தேன்......

7 ஆண்டுகள் மிகவும் துயரம்..... பின் என் நண்பர் ஒருவர் ‘ ரமண விஜயம் ’ என்று ஒரு நூலை என்னிடம் கொடுத்தார்..... அந்த நூலைப் படித்ததும் உடனே ரமண மஹரிஷியைக் காணத் தீர்மானித்தேன்.....

1943 – ல் ரமணாசிரமம் சென்றேன்..... தியான ஹாலில் இருக்கையில் அமர்ந்த ரமண முனிவரைக் கண்டேன்.....
அவரது அருள் என்னை விழுங்கிற்று.....
மூன்று நாட்கள் இது தொடர்ந்து நடைபெற்றது..... மகரிஷி வாயால் ஆசிர்வதிக்க வேண்டும் என்ற விருப்பம் என்னுள் எழுந்தது.....

நான்காவது நாள் மலையிலிருந்து இறங்கி வரும்போது அவரைத் தரிசித்தேன்.....
அவர் அருகில் ஒரு பணியாளர் மட்டுமே இருந்தார். என்னைப் பார்த்ததும் நின்று என்னை அருளோடு நோக்கினார்......

அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தேன் , எழுந்தேன்.....
என்னைப் பார்த்துத் தமிழில் ,
"காட்டுக்குத் தீ வைத்தாகிவிட்டது".... அது தானே எரிந்து முடியும்..... இனி கவலைப்பட வேண்டியதில்லை" என்றார்.....

இளமையில் பொருள் மீது பற்றுள்ள எண்ணங்கள் என்னிடம் எழும்.....
ஆனால் இப்போது அவை படிப்படியாக நீங்குகின்றன....
உணர்வை எண்ணங்கள் பாதிப்பதில்லை...
அவை உள்ளே படிவதும் இல்லை.....
மனம் மேலும் மேலும் லேசாகிறது.....
மிகவும் சக்தி வாய்ந்த வெற்றிடம் இன்னும் வெகுதூரத்தில் இல்லை....
ஆம் இது நிகழ்கிறது!!!!

"ருணம்" என்பதற்கு விருப்பம் ,
ஆசை என்பது பொருள்.....
"அருணம்" என்றால்
ஆசையின்மை என்பது பொருள்.....
"சலம்"என்றால் அசைவு .... 
"அசலம்" என்றால்
அசையாதது என்று பொருள்.....
ஆகவே ஆசையின்மை மனத்தை அசைவின்மைக் கொண்டு செல்லும்.... அதுவே சிவமயம் , அருணாசலம்.....  அருணாசல ரமணர் நமக்கு அருள் மழை பொழியட்டும்.....

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!!

கருத்துகள் இல்லை: