வியாழன், 27 ஜூன், 2019

கனவில் பாம்பு தென்படுவதால் என்ன பரிகாரம்!

பெருமாள் கோயிலில்இருக்கும் கருடாழ்வாருக்கு சனிக்கிழமையில் துளசிமாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றுங்கள். இந்த பரிகாரத்தை மூன்று அல்லது ஐந்து வாரத்திற்கு தொடர்ந்து செய்யுங்கள்.
----------------------------------------------
ஏழுபடை வீடு!

கோவை மாவட்டம், பல்லடம் தாலுகாவில் உள்ள வானவன்சேரி என்ற கிராமத்தில் அலகுமலை முருகன் கோயில் உள்ளது. ஆறுபடை வீடு முருகன்களும் எந்தெந்த திசையில் உள்ளனரோ, அதே அமைப்பில் இங்கு அவர்களுக்கு சன்னதிகள் அமைந்துள்ளது சிறப்பு. அத்துடன் முத்துக்குமாரசுவாமி, பால தண்டாயுதபாணி சுவாமியையும் சேர்த்து ஏழு சன்னதிகள் உள்ளதால் இந்தக் கோயிலை ஏழு படை வீடு என்கின்றனர்.
----------------------------------------------
கிரகதோஷ நிவர்த்திக்கு யாரை வணங்குவது சிறந்தது?

நவக்கிரக வழிபாடு தற்காலத்தில் அதிகமாகி விட்டது. திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில் சிவனை வழிபட்டால் நவக்கிரகம் அனைத்தும் நன்மை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். தேவராய சுவாமிகள், கந்தசஷ்டி கவசத்தில், முருகவழிபாட்டால், நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று பாடியுள்ளார். அதனால்,அதிதேவதையான தெய்வத்தை வழிபடுவதே சிறந்தது.
---------------------------------------------------
அமாவாசையன்று நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடத்துவது சரியா?

ஆண்டில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இரவு நேர பூஜையை ஆகம சாஸ்திரம் அனுமதிக்கிறது. மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் மட்டுமே வழிபாட்டுக்காக கோயில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் வழக்கமான நேரத்தில் வழிபடுவதே சரியானது.
---------------------------------------------------
அம்மாவின் ஆணை!

தசரதருக்கு கோசலை, கைகேயி, சுமித்ரா என்று மூன்று பட்டத்தரசிகள். இந்த மூவருமே மூன்று குணம் கொண்டவர்கள். கைகேயி தன் மகன் பரதனுக்கு பட்டம் சூட்ட விரும்பினாள். அதற்கு தடையாக இருந்தராமனைக் காட்டுக்குஅனுப்பவும் கணவரிடம் வரம் பெற்றாள். தான் வாழ பிறரைக் கெடுப்பது அரக்க குணம்.ராமனுக்கு பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்ததைக் கேள்விப்பட்டதும் மகிழ்ந்த கோசலை, அவன் காட்டுக்குச் செல்ல இருப்பதை அறிந்ததும் மனம் துடித்தாள். இன்பத்தைக் கண்டால் மகிழ்வதும், துன்பத்தைக் கண்டால் துவள்வதும் இயல்பு.சுமித்ரை தன் மகன்லட்சுமணனிடம், ராமனிடம் தம்பி என்ற உரிமை எடுத்துக் கொள்ளாதே! ஒருவேலைக்காரன் போல் நடந்து கொள், என்று மகனுக்கு ஆணையிட்டாள். பிறர் நலனுக்காக, மகனைப் பிரியும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்ட இவளே தெய்வத்தாயாக உயர்ந்து நிற்கிறாள்.
---------------------------------------------------


கருத்துகள் இல்லை: