சனி, 14 செப்டம்பர், 2019

பிருந்தாவனம் சென்று சங்கரன் வீற்றிருக்கும் தனி அழகை காண கண்கோடி வேண்டும்!

பல அற்புதங்களையும் மகிமைகளையும் தனக்குள்ளே நாளும் புரியும் சத்குருவின் பிருந்தாவனம்!

என்னவெல்லாம் நடக்காதோ நடக்கமுடியாதோ அத்தனையும் நடத்திக்காட்டும் சந்திரசேகரனின் பிருந்தாவனம்!

மலடு என்று சொல்லி பல மருத்துவர்களால் கைவிடப்பட்டவரையும் இரட்டை குழந்தை ஈன்றெடுக்க வைக்கும் கர்ப்பரக்ஷாம்பிகை கொலுவிருக்கும் பிருந்தாவனம்!

இதய கோளாறினால் மரண தருவாயில் உள்ளவரும் தலை எழுது மாறி துள்ளி குதித்து விளையாட்டு வீரனைபோல் ஓடவைக்கும் நான்முகன் குடியிருக்கும் பிருந்தாவனம்!

செவிடரும் கேட்டு ஊமையும் கவி பாடி குருடரும் சங்கரன் அருளை கண்டு களிக்கும்படி செய்யும் கோவிந்தன் ஆதிசேஷனில் துயில் கொள்ளும் பிருந்தாவனம்!

பல நாள் வைத்தியம் பார்த்தும் தீராத பைத்தியத்தையும் ஒரு நொடியில் குணப்படுத்தும் வைதீஸ்வரன் வீற்றிருக்கும் பிருந்தாவனம்!

தீயவரும் மனம் திருந்தி செய்த தவறுக்காக மிக வருந்தி பல நன்மைகளை புரிய வைக்கும் சாந்தரூபனின் பிருந்தாவனம்!!

இன்னும் இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம் எண்ணிக்கையில் அடங்கா பல அரிய நிகழ்சிகளை நித்தியமும் நடத்திகொண்டிருக்கும் சத்தியசந்தனின் பிருந்தாவனம்!

இன்ன வேண்டும் என்றே கேட்கமால் வேண்டியதோடு இன்னும் அதிகமான நலன்களையும் அன்பர்களிக்கும் அஷ்டலக்ஷ்மிகளும் ஒருங்கிணைந்து அருளும் பிருந்தாவனம்!

இன்னும் என்ன தாமதம் உடனே புறப்படுவோம் குறை களைந்து குணம் பெறவைக்கும் பக்தவத்சலன் வசிக்கும் பிருந்தாவனம் நாடி!

பெரியவா சரணம்!!!

கருத்துகள் இல்லை: