வெள்ளி, 10 அக்டோபர், 2014

பூதத்தாழ்வார்

பிறந்த ஊர் :மகாபலிபுரம்
பிறந்த நாள் :7ம் நூற்றாண்டு
நட்சத்திரம் :தெரியவில்லை, (ஐப்பசி வளர்பிறை நவமி திதி)
கிழமை :புதன்
எழுதிய நூல் :இரண்டாம் திருவந்தாதி
பாடல்கள் :100
சிறப்பு :குருக்கத்தி மலரில் பிறந்தவர்,திருமாலின் கதாயுத அம்சம்.
மகாபலிபுரத்தில் மல்லிகைப்புதரின் நடுவில் நீலோத்பவ மலரின் பெருமாளின் கவுமாதிதி என்னும் கதையில் அம்சமாக பிறந்தார் பூதத்தாழ்வார்.இந்த உலக வாழ்வை சிறிதும் விரும்பாமல் பரமனிடம் ஆழ்ந்த பக்தியோடு திகழ்ந்தார்.இவர் 13 திவ்யதேசங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார்.முதல் ஆழ்வார் மூவருள் இரண்டாவது ஆழ்வார் இவர். பொய்கையாழ்வார்,பேயாழ்வார் இருவரையும் திருக்கோவிலூரில் சந்தித்து மகிழ்கிறார்.பொய்கையாழ்வார் வையம் தகளியாய் என ஆரம்பித்து நூறு பாடல்களை பாட பூதத்தாழ்வாரோ அன்பே தகளியாய் என நூறு பாடல்களை பாடினார்.மகிழ்வில் உருகிய மனமாகிய திரியை,பக்தி என்று எண்ணெயில் இட்டு ஞானச்சுடர் ஏற்றி என பாடி,திருமாலை பாடும் பெருமையை தனக்கு கிடைத்ததை நினைத்து அடிக்கடி மகிழ்கிறார்.பல திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளின் புகழைப் பரப்பினார்.பெருமாளின் 108 திருப்பதிகளில் பூதத்தாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல்,பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 14 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
பூதத்தாழ்வார்,திருமங்கை ஆழ்வார்.
1. திருநீர்மலை(அருள்மிகு நீர்வண்ணன் திருக்கோயில், திருநீர்மலை,சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம்)
2.திருவிடந்தை(அருள்மிகு லட்சுமி வராகர் திருக்கோயில், திருவிடந்தை,காஞ்சிபுரம் மாவட்டம்)
3.திருக்கடல் மல்லை(அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில்,மகாபலிபுரம்,காஞ்சிபுரம் மாவட்டம்)
4.அத்திகிரி(அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்)
5.திருத்தங்கல்(அருள்மிகு குண்றின்மேல் நின்ற நாராயணன் திருக்கோயில்,திருத்தங்கல்,விருதுநகர்)
பூதத்தாழ்வார்,பொய்கையாழ்வார்,திருமங்கை ஆழ்வார்
1. திருக்கோயிலூர்(அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர்,விழுப்புரம்)
பூதத்தாழ்வார்,நம்மாழ்வார்,திருமங்கை ஆழ்வார்
2.வெண்ணாற்றங்கரை(அருள்மிகு நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில்கள்,தஞ்சைமாமணி கோயில்,தஞ்சாவூர்)
பூதத்தாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார்
3.திருப்பாடகம்(அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில்,திருப்பாடகம்,காஞ்சிபுரம்)
பூதத்தாழ்வார்,பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார்,பேயாழ்வார்
4.திருக்கோஷ்டியூர்(அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர், சிவகங்கை)
பூதத்தாழ்வார்,ஆண்டாள்,பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார்
5.திருமாலிருஞ்சோலை(அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்,மதுரை
பூதத்தாழ்வார்,ஆண்டாள்,பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,பேயாழ்வார்,திருமழிசை ஆழ்வார்,நம்மாழ்வார்
6.கும்பகோணம்(அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்)
பூதத்தாழ்வார்,பொய்கையாழ்வார்,பேயாழ்வார்,நம்மாழ்வார், ஆண்டாள்,பெரியாழ்வார்,திருமங்கை ஆழ்வார்,குலசேகர ஆழ்வார்,திருமழிசை ஆழ்வார்,திருப்பாணாழ்வார்
7.திருவேங்கடம்(அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி,சித்தூர்,ஆந்திரா)
8.திருப்பாற்கடல்:பூதத்தாழ்வார்,பொய்கையாழ்வார், பேயாழ்வார்,நம்மாழ்வார்,ஆண்டாள்,பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார்,குலசேகர ஆழ்வார்,திருமழிசை ஆழ்வார்,திருப்பாணாழ்வார்,தொண்டரடி பொடியாழ்வார்
9.ஸ்ரீரங்கம்(அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில்,ஸ்ரீரங்கம், திருச்சி)

கருத்துகள் இல்லை: