ஞாயிறு, 6 ஜூலை, 2014

உபநிஷதம் ஒரு கண்ணோட்டம்!

வேதங்கள்:உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப்புதல்வர்களாகிய ரிஷிகள், இருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. (வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யு மேதி நான்ய: பந்தா வித்யதே யனாய -சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8.)
அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள். (ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா: -சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5.)
என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாராம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந் தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாராம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந் தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழயை நூல் இந்தச் சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது. என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்றுநிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்..... அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும். என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அவற்றை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம் (யாக விவரங்கள்), ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி).

உபநிஷதங்கள்:உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை <உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதகி, மஹதநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவை கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன. இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார்.

உபநிஷதம் வேதம்

ஐதரேய, கௌசீதகி ரிக்

ஈச, கட, தைத்திரீய,
பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர,
மைத்ராயணீ, மஹாநாராயண யஜுர்

கேன, சாந்தோக்கிய சாம

ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய அதர்வண

வித்யைகள்:மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிற்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம், உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் உயர்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிஷதமும் தனக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகிறது. இந்தப் பாதை வித்யை எனப்படுகிறது. வித்யைகள் எண்ணற்றவை. 14 முக்கிய உபநிஷதங்களிலுமாக சுமார் 35 வித்யைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வித்யைகளின் செயல்முறைகளோ சரியான பொருளோ நமக்குத் தெரியவில்லை.

ஈசாவாஸ்ய உபநிஷத்தில் நாம் காண்பது ஈசவித்யை. 15-16 மந்திரங்கள் (1. இன்றைய வழக்கில், மீண்டும்மீண்டும் சொல்லி, அதாவது ஜபித்து உய்வு பெறுவதற்கான ஒன்றே மந்திரம் (மனனாத் த்ராயதே இதி மந்த்ர:) என்று கொள்ளப்படுகிறது. ஆனால் வேதப் பாடல்கள் அனைத்துமே மந்திரங்கள் என்றுதான் வழங்கப்படுகின்றன.இதனைக் கூறுகின்றன. சூரிய தேவனிடம் ஒளியை விலக்கிக் கொள்ளுமாறு பிரார்த்திக்கின்றன இந்த மந்திரங்கள். இதனை ஒரு தியானமாக, ஒரு வித்யையாக எவ்வாறு செய்வது,ஒரு பாதையாக எப்படி பின்பற்றுவது என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கவில்லை.

ஈசாவாஸ்ய உபநிஷதம்: ஈசாவாஸ்ய இதம் ஸர்வம் என்ற மந்திரத்துடன் ஆரம்பிப்பதால் இது ஈசாவாஸ்ய உபநிஷதம் என்ற பெயர் பெற்றது. ஈச உபநிஷதம் என்றும் அழைக்கப்படுகின்ற இது 18 மந்திரங்களே உடைய சிறிய உபநிஷதம் ஆகும்.

யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. சுக்ல யஜுர் வேதத்தில் வாஜஸனேய சம்ஹிதையில் அமைந்துள்ளது இந்த உபநிஷதம். இந்த சம்ஹிதையின் 40 அத்தியாயங்களில் கடைசி அத்தியாயம் இது. தத்யங் அதர்வணர் என்ற முனிவர் தமது மகனுக்கு இதனை உபதேசித்தார். அவன் ஆசைகள் அற்றவனாகவும் முக்தியில் தீவிர நாட்டம் கொண்டவனாகவும் இருந்ததால் அந்த முனிவர் அவனுக்கு இந்த உபநிஷத்தை உபதேசித்தார்.

உபநிஷதக் கரு:இருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்துகொண்டேன் என்று ஆனந்த மிகுதியில் முனிவர் ஒருவர் கூறுவதை சுவேதாஸ்வதர உபநிஷத்தில் காண்கிறோம். ஆனால் அந்த ஒளிக்கு அப்பால் உள்ள ஒன்றைத் தேடுகின்ற முயற்சியை இங்கே (15-16 மந்திரங்கள்) பார்க்கிறோம். ஈச வித்யை என்று இந்த உபநிஷதம் கூறுகின்ற இந்தக் கருத்தே ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் மையக் கருவாக உள்ளது.

ஒளிக்கு அப்பாலுள்ள ஒன்றைத் தேடும் முயற்சிøயும் ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதையும் படிப்படியாக இங்கே நாம் காண்கிறோம்.

மொழிபெயர்ப்பு:ஸ்ரீசங்கரரைத் தவிர இந்த <உபநிஷதத்திற்குப் பலர் விளக்கவுரைகள் எழுதியுள்ளனர். அவற்றுள் ஸ்ரீமத்வரும் ஸ்ரீவேதாந்த தேசிகரும் எழுதிய உரைகள் முக்கியமானவை.

ஸ்ரீசங்கரரின் உரையைத் தழுவி ஆங்கிலத்தில் சுவாமி சர்வானந்தர் எழுதிய விளக்கவுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு 1987-இல் எமது மடத்திலிருந்து வெளிவந்தது. இதனை மொழிபெயர்த்தவர் சுவாமி அஜராத்மானந்தர்.

தற்போதைய மொழிபெயர்ப்பு, ஈசாவாஸ்ய உபநிஷத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன:

1. தத்துவ நுட்பங்களைக் கருத்தில் கொள்ளாமல் இறைவன் என்ற மாபெரும் சக்தியிடம் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்த்துள்ளோம்.

2. இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.

எமது மடத்தின் மூத்தத் தவமிகு துறவியருள் ஒருவரான சுவாமி பஜனானந்தர் எமது ஆங்கிலப் பத்திரிகையான பிரபுத்தா பாரட்டா-வில் (1979-1986) எழுதிய தி இண்டர்கள் விசியன் ஆப் தி வெடிக் சீர்ச் என்ற பகுதியும் அவரது தலையங்கக் கட்டுரைகளும் இந்த மொழிபெயர்ப்பில் மிகவும் துணையாக அமைந்தன.

அமைப்பு:முதலில் சம்ஸ்கிருத மூலம், பிறகு தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், பொழிப்புரை, திரண்ட பொருள் விளக்கம் என்ற ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது.

பாராயணம் செய்வதற்கு வசதியாக மந்திரங்களில் குறியீடுகளையும் குறித்துள்ளோம்.

ஒரு வார்த்தை:உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மைபெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, ஆன்மீக சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் <<<<உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்.

காலங்கள் பல கடந்துவிட்டதால் பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.

பாராயண வழிகாட்டி:வேத மந்திரங்களின் நாதமே மனத்தை அகமுகமாக்க வல்லது. வேத மந்திரங்கள் ஒலிக்கின்ற இடங்களாகிய தீயசக்திகள் விலகுகின்றன; மங்கல தேவதையாகிய மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள்.

வேதங்களை ஓதுவதற்கென்று குறிப்பிட்ட மரபுமுறை உள்ளது. வேத விற்பன்னர்களிடமிருந்து அதனை அறிந்து ஓதுவது நல்லது. தாமாகக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

க, க, க என்று குறியீடுகள் பாராயணத்தில் கையாளப்படுகின்றன. இவை முறையே அனுதாத்தம், ஸ்வரிதம், தீர்க்க ஸ்வரிதம் எனப்படும். சாதாரண நிலை உதாத்தம் எனப்படுகிறது.

க (க)ண்ணன்)- உதாத்தம்: சாதாரண ஸ்வரத்தில் உச்சரிக்க வேண்டும்.

க- (மைய(க்க)ரு)- அனுதாத்தம்; ஒரு மாத்திரை இறக்கி உச்சரிக்க வேண்டும்.

க- (க)ணபதி)- ஸ்வரிதம்; ஒரு மாத்திரை ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

க- ( உத்யோ(க)ம்)- தீர்க்க ஸ்வரிதம்; இரண்டு மாத்திரைகள் ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

பாரம்பரிய இசை தெரிந்தவர்கள் இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். சாதாரண ஸ்வரத்தை அதாவது உதாத்த நிலையை "ப என்று வைத்துக்கொண்டால் அனுதாத்தம்- சுத்த ம. ஸ்வரிதம்:- சுத்த த அல்லது கோமள "த.

முறைப்படி ஓதப்படுகின்ற வேத த்வனிக்கென்று ஒரு மகிமை இருக்கிறது. ஆனால் அந்த ஏற்ற இறக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியாவிட்டால், அதற்காக வேதங்களையே படிக்காமல் இருக்கத் தேவையில்லை. நமக்குச் சுலபமான ஒரு முறையில் ஓதலாம். மனத்தின் ஈடுபாடும் உணர்ச்சியுமே முக்கியமானது.

சாந்தி மந்திரம்:எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைத்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது, நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் <புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.

ஈசாவாஸ்ய உபநிஷத்திற்கான சாந்தி மந்திரம் இது:

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

அத: இறைவன்; பூர்ணம்- முழுமையானவர்; இதம்- இந்த உலகம்; பூர்ணம்- முழுமையானது; பூர்ணாத்- முழுமையான இறைவனிலிருந்தே; பூர்ணம்- முழுமையான உலகம்; <உதச்யதே- தோன்றியுள்ளது; பூர்ணஸ்ய- முழுமையிலிருந்து; பூர்ணம்- முழுமையை; ஆதாய- எடுத்த பின்பும்; பூர்ணம் ஏவ- முழுமையே; அவசிஷ்யதே- எஞ்சியுள்ளது.

இறைவன் முழுமையானவர். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது!

ஒரு புதிரின்மூலம் உலகத்தை விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. இறைவன் முழுமையானவராக, பூரணமானவராக இருக்கிறார். அவரிலிருந்து முழுமையான உலகம் தோன்றியுள்ளது. இருப்பினும் தனது பூரணத்துவம் குன்றாமல் முழுமையாகவே இருக்கிறார் அவர். இதனை மூன்று வழிகளில் புரிந்துகொள்ளலாம்.

1. ஒரு தீபத்திலிருந்து எண்ணற்ற தீபங்களை ஏற்ற முடியும். இதனால் முதல் தீபத்தின் முழுமை கெடுவதில்லை. அதிலிருந்து ஏற்றப்பட்ட தீபங்களும் முழுமையாக, நிறைந்த ஒளி தருவனவாகவே இருக்கும்.

2. நாம் எத்தனையோ பேரை நேசிக்கிறோம்; முழுமையாக அவர்களிடம் அன்பு வைக்கிறோம். இதனால் நம்மிடமுள்ள அன்பு குறைந்ததாகக் கூற முடியாது. நமது அன்பு முழுமையாக இருக்க, நாம் எத்தனையோ பேருக்கு அன்பை முழுமையாகக் கொடுக்க முடியும்.

3. ஒரு செடியில் எத்தனையோ பூக்கள் மலர்கின்றன. ஒவ்வொரு மலரும் முழுமையாக உள்ளது. முழுமையான மலர்கள் பலவற்றைத் தருவதால் செடியின் முழுமை எந்த விதத்திலும் குறைவதில்லை. ஏனெனில் செடியின் முழுமை வேறு, மலரின் முழுமை வேறு. அதுபோலவே, இறைவனிலிருந்து எத்தனையோ முழுமையான <உலகங்களும் அண்ட சராசரங்களும் தோன்றலாம். ஆயினும் அவரது முழுமை ஒரு போதும் குறைவதில்லை.

இறைவனின் முழுமை <<உலகங்களின் தோற்றத்தாலோ மறைவாலோ பாதிக்கப்படாத ஒன்று; இறைவனிலிருந்து தோன்றியதால் உலகமும் இறையம்சம் பொருந்தியது என்பது இந்த சாந்தி மந்திரத்தின் கருத்து. இந்த உண்மையை உணர்ந்து வாழ்ந்தால் சாதாரண வாழ்க்கையே நம்மை இறைநெறியில் அழைத்துச் செல்ல வல்லதாகிவிடும். இந்தக் கருத்தையே உபநிஷதத்தின் முதல் மந்திரம் தெரிவிக்கிறது.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால் அமைதி. மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்றுவகைத் தடைகள் வருமாறு-

1. ஆத்யாத்மிகம்: நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.

2. ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் வரும் தடை.

3. ஆதி தைவிகம்: இயற்கைச் சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்று முறை சொல்வதன்மூலம் இந்த மூவகைத் தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காகப் பிரார்த்திக்கிறோம்.
 
 
Photo: உபநிஷதம் ஒரு கண்ணோட்டம்!

வேதங்கள்:உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, பாரதத் திருநாடு ஆன்ம ஒளியில் விழித்தெழுந்தது. அதன் தவப்புதல்வர்களாகிய ரிஷிகள், இருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்துகொண்டேன். அவரை அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு எந்த வழியும் இல்லை. (வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் தமேவ விதித்வா திம்ருத்யு மேதி நான்ய: பந்தா வித்யதே யனாய    -சுவேதாஸ்வதர உபநிஷதம், 3.8.)
அழியாத அமரத்துவத்தின் குழந்தைகளே, கேளுங்கள். (ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா: -சுவேதாஸ்வதர உபநிஷதம், 2.5.)
என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாராம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந் தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

என்று பூமியில் வாழ்பவர்களை மட்டுமல்ல, பிற உலகங்களில் வாழ்வோரையும் அறைகூவினர். குறித்து வைக்கப்பட்ட சரித்திரமோ, பாராம்பரியத்தின் மங்கிய வெளிச்சமோ கூட ஊடுருவ முடியாத, காலத்தின் அந்த நீண்ட நெடுந் தொலைவில் இந்த உலகைப் புனிதமாக்கியபடி வாழ்ந்த அந்த ரிஷிகள் அனுபூதியில் கண்ட உண்மைகளின் தொகுப்பே வேதங்கள்.

உலகிலேயே மிகப்பழயை நூல் இந்தச் சிந்தனைக் கருவூலம்தான். இது எப்போது தோன்றியது. என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக இருக்கலாம்... ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன், முன்னைவிட புதுப் பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்.

வேதங்கள் யாராலும் எழுதப்பட்டவை அல்ல. என்றென்றும் நின்றுநிலவுகின்ற உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும்..... அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும். என்று எழுதுகிறார் சுவாமி விவேகானந்தர். ரிஷிகள் அவற்றை வெளிப்படுத்தினார்கள், அவ்வளவுதான்.

அவ்வாறு ரிஷிகள் வெளிப்படுத்திய அந்த உண்மைகள் பின்னாளில் வியாச முனிவரால் நான்காகத் தொகுக்கப்பட்டன. அவை ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள். ஒவ்வொரு வேதமும் மூன்று முக்கியப் பிரிவாக பிரிக்கப்படுகின்றன. அவை சம்ஹிதை (தேவர்களிடம் பிரார்த்தனைகள்), பிராம்மணம் (யாக விவரங்கள்), ஆரண்யகம் (உபநிஷதங்கள்; அறுதி உண்மையைப்பற்றிய ஆராய்ச்சி).

உபநிஷதங்கள்:உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ப்ரஸ்தான த்ரயம் என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள்.

வேதகாலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை <உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

உபநிஷதங்கள் பல. அவற்றுள் 108 பொதுவாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. அவற்றில் பதினான்கு உபநிஷதங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை ஈச, கேன, கட, ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய, தைத்திரீய, சாந்தோக்ய, பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர, கௌசீதகி, மஹதநாராயண, மைத்ராயணி உபநிஷதங்கள் ஆகும். இவை கீழ்க்கண்ட பட்டியலின்படி நான்கு வேதங்களில் அமைந்துள்ளன. இவற்றுள் முதல் பத்து உபநிஷதங்களுக்கு ஸ்ரீசங்கரர் விளக்கவுரை எழுதியுள்ளார்.

உபநிஷதம்        வேதம்

ஐதரேய, கௌசீதகி    ரிக்

ஈச, கட, தைத்திரீய,
பிருஹதாரண்யக, சுவேதாஸ்வதர,
மைத்ராயணீ, மஹாநாராயண    யஜுர்

கேன, சாந்தோக்கிய    சாம

ப்ரச்ன, முண்டக, மாண்டூக்ய     அதர்வண

வித்யைகள்:மனிதன், உலகம், இறைவன் என்பவை மூன்று அடிப்படை உண்மைகள். உபநிஷதங்கள் இந்த மூன்றையும், இவற்றிற்கு இடையே நிலவுகின்ற தொடர்பையும் ஆராய்கின்றன. அறுதி உண்மையாகிய இறைவனை ஒவ்வொரு மனிதனும், ஒவ்வோர் உயிரும் சென்று அடைவதே வாழ்க்கையின் லட்சியம், அதற்கான களமே உலகம்,  உலகம் தருகின்ற அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, உலகில் உயர்ந்தபடியே அந்த லட்சியத்தை அடையுமாறு உபநிஷதங்கள் வலியுறுத்துகின்றன. இதற்கு ஒவ்வோர் உபநிஷதமும் தனக்கென்று சில குறிப்பிட்ட பாதைகளைக் காட்டுகிறது. இந்தப் பாதை வித்யை எனப்படுகிறது. வித்யைகள் எண்ணற்றவை. 14 முக்கிய உபநிஷதங்களிலுமாக சுமார் 35 வித்யைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வித்யைகளின் செயல்முறைகளோ சரியான பொருளோ நமக்குத் தெரியவில்லை.

ஈசாவாஸ்ய உபநிஷத்தில் நாம் காண்பது ஈசவித்யை. 15-16 மந்திரங்கள் (1. இன்றைய வழக்கில், மீண்டும்மீண்டும் சொல்லி, அதாவது ஜபித்து உய்வு பெறுவதற்கான ஒன்றே மந்திரம் (மனனாத் த்ராயதே இதி மந்த்ர:) என்று கொள்ளப்படுகிறது. ஆனால் வேதப் பாடல்கள் அனைத்துமே மந்திரங்கள் என்றுதான் வழங்கப்படுகின்றன.இதனைக் கூறுகின்றன. சூரிய தேவனிடம் ஒளியை விலக்கிக் கொள்ளுமாறு பிரார்த்திக்கின்றன இந்த மந்திரங்கள். இதனை ஒரு தியானமாக, ஒரு வித்யையாக எவ்வாறு செய்வது,ஒரு பாதையாக எப்படி பின்பற்றுவது என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கவில்லை.

ஈசாவாஸ்ய உபநிஷதம்: ஈசாவாஸ்ய இதம் ஸர்வம் என்ற மந்திரத்துடன் ஆரம்பிப்பதால் இது ஈசாவாஸ்ய உபநிஷதம் என்ற பெயர் பெற்றது. ஈச உபநிஷதம் என்றும் அழைக்கப்படுகின்ற இது 18 மந்திரங்களே உடைய சிறிய உபநிஷதம் ஆகும்.

யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. சுக்ல யஜுர் வேதத்தில் வாஜஸனேய சம்ஹிதையில் அமைந்துள்ளது இந்த உபநிஷதம். இந்த சம்ஹிதையின் 40 அத்தியாயங்களில் கடைசி அத்தியாயம் இது. தத்யங் அதர்வணர் என்ற முனிவர் தமது மகனுக்கு இதனை உபதேசித்தார். அவன் ஆசைகள் அற்றவனாகவும் முக்தியில் தீவிர நாட்டம் கொண்டவனாகவும் இருந்ததால் அந்த முனிவர் அவனுக்கு இந்த உபநிஷத்தை உபதேசித்தார்.

உபநிஷதக் கரு:இருளுக்கு அப்பால் பொன்னிறத்தில் ஒளிர்கின்ற மகிமை வாய்ந்த பரம்பொருளை அறிந்துகொண்டேன் என்று ஆனந்த மிகுதியில் முனிவர் ஒருவர் கூறுவதை சுவேதாஸ்வதர உபநிஷத்தில் காண்கிறோம். ஆனால் அந்த ஒளிக்கு அப்பால் உள்ள ஒன்றைத் தேடுகின்ற முயற்சியை இங்கே (15-16 மந்திரங்கள்) பார்க்கிறோம். ஈச வித்யை என்று இந்த உபநிஷதம் கூறுகின்ற இந்தக் கருத்தே ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் மையக் கருவாக உள்ளது.

ஒளிக்கு அப்பாலுள்ள ஒன்றைத் தேடும் முயற்சிøயும் ஒளிக்கு அப்பால் என்ன உள்ளது என்பதையும் படிப்படியாக இங்கே நாம் காண்கிறோம்.

மொழிபெயர்ப்பு:ஸ்ரீசங்கரரைத் தவிர இந்த <உபநிஷதத்திற்குப் பலர் விளக்கவுரைகள் எழுதியுள்ளனர். அவற்றுள் ஸ்ரீமத்வரும் ஸ்ரீவேதாந்த தேசிகரும் எழுதிய உரைகள் முக்கியமானவை.

ஸ்ரீசங்கரரின் உரையைத் தழுவி ஆங்கிலத்தில் சுவாமி சர்வானந்தர் எழுதிய விளக்கவுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு 1987-இல் எமது மடத்திலிருந்து வெளிவந்தது. இதனை மொழிபெயர்த்தவர் சுவாமி அஜராத்மானந்தர்.

தற்போதைய மொழிபெயர்ப்பு, ஈசாவாஸ்ய உபநிஷத்தை முதன்முதலாகப் படிப்பவர்களை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு முக்கியமான விஷயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளன:

1. தத்துவ நுட்பங்களைக் கருத்தில் கொள்ளாமல் இறைவன் என்ற மாபெரும் சக்தியிடம் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து மொழிபெயர்த்துள்ளோம்.

2. இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை.

எமது மடத்தின் மூத்தத் தவமிகு துறவியருள் ஒருவரான சுவாமி பஜனானந்தர் எமது ஆங்கிலப் பத்திரிகையான  பிரபுத்தா பாரட்டா-வில் (1979-1986) எழுதிய தி இண்டர்கள் விசியன் ஆப் தி வெடிக் சீர்ச் என்ற பகுதியும் அவரது தலையங்கக் கட்டுரைகளும் இந்த மொழிபெயர்ப்பில் மிகவும் துணையாக அமைந்தன.

அமைப்பு:முதலில் சம்ஸ்கிருத மூலம், பிறகு தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், பொழிப்புரை, திரண்ட பொருள் விளக்கம் என்ற ரீதியில் நூல் அமைக்கப்பட்டுள்ளது.

பாராயணம் செய்வதற்கு வசதியாக மந்திரங்களில் குறியீடுகளையும் குறித்துள்ளோம்.

ஒரு வார்த்தை:உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மைபெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும்மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, ஆன்மீக சாதனைகளிலும் ஈடுபட்டால்தான் <<<<உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்துகொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்.

காலங்கள் பல கடந்துவிட்டதால் பல மந்திரங்களின் பொருள் சுலபத்தில் அறிந்து கொள்ளத் தக்கதாக இல்லை. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்துவிடாமல், புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்.

பாராயண வழிகாட்டி:வேத மந்திரங்களின் நாதமே மனத்தை அகமுகமாக்க வல்லது. வேத மந்திரங்கள் ஒலிக்கின்ற இடங்களாகிய தீயசக்திகள் விலகுகின்றன; மங்கல தேவதையாகிய மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள்.

வேதங்களை ஓதுவதற்கென்று குறிப்பிட்ட மரபுமுறை உள்ளது. வேத விற்பன்னர்களிடமிருந்து அதனை அறிந்து ஓதுவது நல்லது. தாமாகக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

க, க, க என்று குறியீடுகள் பாராயணத்தில் கையாளப்படுகின்றன. இவை முறையே அனுதாத்தம், ஸ்வரிதம், தீர்க்க ஸ்வரிதம் எனப்படும். சாதாரண நிலை உதாத்தம் எனப்படுகிறது.

க (க)ண்ணன்)- உதாத்தம்: சாதாரண ஸ்வரத்தில் உச்சரிக்க வேண்டும்.

க- (மைய(க்க)ரு)- அனுதாத்தம்; ஒரு மாத்திரை இறக்கி உச்சரிக்க வேண்டும்.

க- (க)ணபதி)- ஸ்வரிதம்; ஒரு மாத்திரை ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

க- ( உத்யோ(க)ம்)- தீர்க்க ஸ்வரிதம்; இரண்டு மாத்திரைகள் ஏற்றி உச்சரிக்க வேண்டும்.

பாரம்பரிய இசை தெரிந்தவர்கள் இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ளலாம். சாதாரண ஸ்வரத்தை அதாவது உதாத்த நிலையை "ப என்று வைத்துக்கொண்டால் அனுதாத்தம்- சுத்த ம. ஸ்வரிதம்:- சுத்த த அல்லது கோமள "த.

முறைப்படி ஓதப்படுகின்ற வேத த்வனிக்கென்று ஒரு மகிமை இருக்கிறது. ஆனால் அந்த ஏற்ற இறக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியாவிட்டால், அதற்காக வேதங்களையே படிக்காமல் இருக்கத் தேவையில்லை. நமக்குச் சுலபமான ஒரு முறையில் ஓதலாம். மனத்தின் ஈடுபாடும் உணர்ச்சியுமே முக்கியமானது.

சாந்தி மந்திரம்:எந்த ஒன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலை இருக்கப் பெறுவது இன்றியமையாதது. எந்தக் காரியத்தைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக்கொண்டு, அதன்பிறகு அந்தச் செயலில் ஈடுபடுவது சிறப்பான பலனை அளிக்கும். நமது கோயில்களில் பல பிராகாரங்கள் அமைத்திருப்பதன் காரணம் இதுவே. ஒவ்வொரு பிராகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம் விட்டு, கடைசியாக கருவறையில் சென்று தெய்வத்தைத் தரிசிக்கும்போது,  நம்மால் முழுமனத்துடன் தெய்வ சிந்தனையில் ஈடுபட முடிகிறது. அதுபோல் அனுபூதிக் கருவூலமான உபநிஷதங்களைப் படிக்கப் புகுமுன் நமது சிந்தனையை அவற்றுடன் இயைபுபடுத்த சாந்தி மந்திரங்கள் உதவுகின்றன.

உபநிஷதங்களின் உண்மைப் பொருளை வெறும் <புலமையால் உணர முடியாது. பணிவுடனும் வழிபாட்டு உணர்வுடனும் அணுகும்போது மட்டுமே அதனைப் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய மனப்பான்மையை மனத்தில் கொள்வதற்காக இந்த மந்திரங்கள் முதலில் ஓதப்படுகின்றன.

ஈசாவாஸ்ய உபநிஷத்திற்கான சாந்தி மந்திரம் இது:

ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

அத: இறைவன்; பூர்ணம்- முழுமையானவர்; இதம்- இந்த உலகம்; பூர்ணம்- முழுமையானது; பூர்ணாத்- முழுமையான இறைவனிலிருந்தே; பூர்ணம்- முழுமையான உலகம்; <உதச்யதே- தோன்றியுள்ளது; பூர்ணஸ்ய- முழுமையிலிருந்து; பூர்ணம்- முழுமையை; ஆதாய- எடுத்த பின்பும்; பூர்ணம் ஏவ- முழுமையே; அவசிஷ்யதே- எஞ்சியுள்ளது.

இறைவன் முழுமையானவர். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது!

ஒரு புதிரின்மூலம் உலகத்தை விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. இறைவன் முழுமையானவராக, பூரணமானவராக இருக்கிறார். அவரிலிருந்து முழுமையான உலகம் தோன்றியுள்ளது. இருப்பினும் தனது பூரணத்துவம் குன்றாமல் முழுமையாகவே இருக்கிறார் அவர். இதனை மூன்று வழிகளில் புரிந்துகொள்ளலாம்.

1. ஒரு தீபத்திலிருந்து எண்ணற்ற தீபங்களை ஏற்ற முடியும். இதனால் முதல் தீபத்தின் முழுமை கெடுவதில்லை. அதிலிருந்து ஏற்றப்பட்ட தீபங்களும் முழுமையாக, நிறைந்த ஒளி தருவனவாகவே இருக்கும்.

2. நாம் எத்தனையோ பேரை நேசிக்கிறோம்; முழுமையாக அவர்களிடம் அன்பு வைக்கிறோம். இதனால் நம்மிடமுள்ள அன்பு குறைந்ததாகக் கூற முடியாது. நமது அன்பு முழுமையாக இருக்க, நாம் எத்தனையோ பேருக்கு அன்பை முழுமையாகக் கொடுக்க முடியும்.

3. ஒரு செடியில் எத்தனையோ பூக்கள் மலர்கின்றன. ஒவ்வொரு மலரும் முழுமையாக உள்ளது. முழுமையான மலர்கள் பலவற்றைத் தருவதால் செடியின் முழுமை எந்த விதத்திலும் குறைவதில்லை. ஏனெனில் செடியின் முழுமை வேறு, மலரின் முழுமை வேறு. அதுபோலவே, இறைவனிலிருந்து எத்தனையோ முழுமையான <உலகங்களும் அண்ட சராசரங்களும் தோன்றலாம். ஆயினும் அவரது முழுமை ஒரு போதும் குறைவதில்லை.

இறைவனின் முழுமை <<உலகங்களின் தோற்றத்தாலோ மறைவாலோ பாதிக்கப்படாத ஒன்று; இறைவனிலிருந்து தோன்றியதால் உலகமும் இறையம்சம் பொருந்தியது என்பது இந்த சாந்தி மந்திரத்தின் கருத்து. இந்த உண்மையை உணர்ந்து வாழ்ந்தால் சாதாரண வாழ்க்கையே நம்மை இறைநெறியில் அழைத்துச் செல்ல வல்லதாகிவிடும். இந்தக் கருத்தையே உபநிஷதத்தின் முதல் மந்திரம் தெரிவிக்கிறது.

வேத மந்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: என்று நிறைவுறுவதைக் காணலாம். சாந்தி: என்றால் அமைதி. மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காக மூன்று முறை சொல்லப்படுகிறது. மூன்றுவகைத் தடைகள் வருமாறு-

1. ஆத்யாத்மிகம்: நம்மால் வரும் தடை; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.

2. ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் வரும் தடை.

3.  ஆதி தைவிகம்: இயற்கைச் சக்திகளால் வரும் தடை; மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்று முறை சொல்வதன்மூலம் இந்த மூவகைத் தடைகளிலிருந்து விடுபட்டு, இந்த உபநிஷதத்தைப் படிப்பதற்கான நமது முயற்சி வெற்றி பெறுவதற்காகப் பிரார்த்திக்கிறோம்.

கருத்துகள் இல்லை: