திங்கள், 7 அக்டோபர், 2024

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்...

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்...

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

படலம் 12: பங்குனிமாத சந்தன பூஜை...

படலம் 12: பங்குனிமாத சந்தன பூஜை

பன்னிரெண்டாவது படலத்தில்: பங்குனி மாதத்தில் செய்ய வேண்டிய கந்த பூஜா விதி கூறப்படுகிறது. முதலில் பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரதினத்தில் கந்த பூஜை செய்ய வேண்டுமென கால நிரூபணமாகும். விசேஷ ஸ்நபன விசேஷ பூஜையுடன் கந்த பூஜா விதி அனுஷ்டிக்கவும் எனகூறப்படுகிறது. பிறகு சந்தனத்தில் சேர்க்க வேண்டிய அகில குங்குமம் முதலியவைகளின் கந்தத்ரவ்யங்களின் பிரமாண வசனம். கிருதகம்பள விதிக்கு கூறிய மார்க்கப்படி ஹோமம் செய்க. லிங்கத்திலும் பீடத்திலும் மற்ற எல்லா இடத்திலும் பூசுவதை செய்க. கம்பள வேஷ்டனமின்றி மற்ற எல்லா கர்மாவும் கிருதகம்பள விதி மார்க்கமாக செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. எல்லா ரோக சம்பவம், உத்பாத சூசகாத்புதம் காணப்பட்ட சமயம் அபிசாரகிருத தோஷ ஸமயங்களிலும் முன்பு கூறிய தோஷ நிவிருத்திக்காகவும் விருப்பப் பயனையடைவதற்கும் கந்தபூஜா செய்யவும் என்று கந்தபூஜா பலம் நிரூபிக்கப்படுகிறது. இவ்வாறாக 12ம் படல கருத்து தொகுப்பாகும்.

1. பங்குனி மாதத்திலே உத்திர நட்சத்திரத்திலே உத்தமமான சந்தனத்தினால் பூஜிக்கவேண்டும். விசேஷ ஸ்நபனத்தோடு கூட விசேஷ ஹோமத்துடன் கூடியதாக இருக்கவேண்டும்.

2. எட்டு பலம் முதல் ஒவ்வொரு பலமாக கூட்டி ஆயிரம் பலம் எடை முடிய சந்தனத்தின் அளவு கூறப்பட்டது அதில் பாதி அகில் சேர்க்க வேண்டும்.

3. அதில் கால்பாகமோ, அதில் பாதியோ குங்கும பூவும் அதில் பாதி கால் பாகத்தில் எட்டில் ஓர் பங்கும் அதில் பாதியோ, கால்பாகமோ மேற்கூறிய திரவ்யம் சேகரித்து

4. பச்சைகற்பூரம் இரண்டு பங்கு பொடி செய்து எல்லா இடத்திலும் தூபம் காண்பிக்கவேண்டும். எல்லா மந்திரங்களாலும் அபிமந்திரணம் செய்யப்பட்டதை அர்பணம் செய்யவேண்டும்.

5. நெய்கம்பள பூஜையில் கூறியபடி ஹோமம் செய்து சந்தனத்தை ஸம்ஸ்கரித்து பீடத்தோடுகூடிய லிங்கத்தை சந்தனத்தினால் சிவமந்தரத்தினால் பூசவேண்டும்.

6. நல்ல வாசனையுள்ள புஷ்ப மாலைகளினால் பீடம் லிங்கம் முதலியவைகளை அலங்கரிக்கவேண்டும். கம்பளி இல்லாமல் (சந்தனத்தினால்) நெய் கம்பளத்தைபோல எல்லாம் நடத்தவேண்டும்.

7. எல்லாவிதமான வியாதி உண்டான காலத்திலும், அத்புதமான காலத்திலும் இஷ்டத்தை அடையும் பொருட்டு ஆபிசாரம் செய்ததினால் ஏற்பட்ட குறை நீங்கவும் இந்த முறையில் செய்யவேண்டும்.

இவ்வாறு பங்குனி மாதம் சந்தனம் சாற்றும் முறையைக் கூறும் பன்னிரண்டாவது படலம்.

படலம் 11: மாசி மாத சிவபூஜா விதி!

படலம் 11: மாசி மாத சிவபூஜா விதி!

பதினொன்றாவது படலத்தில் மாசிமாதத்தில் விதிக்கப்பட்டுள்ள சிவராத்ரி பூஜாவிதி கூறப்பட்டுள்ளது. முதலாவதாக சிவராத்ரி வ்ரதாசரண பலநிரூபணம் மாசிமாத கிருஷ்ணபக்ஷ சதுர்தசீ ராத்ரி சிவராத்ரி அந்த தினத்திலே சிவாலயத்தில் சிவலிங்க விஷயமான சிவராத்ரி பூஜா செய்ய வேண்டும் என காலம் நிர்தேசிக்கப்படுகிறது. பிறகு முற்பகலில் ஸ்நான உபவாஸத்துடன் கூடிய சாதகனால் சிரத்தையாக பூஜை செய்ய வேண்டுமென அதிகார நிரூபணம். ராத்ரியில் நான்கு யாமத்திலும் பூஜாவிதி கூறப்படுகிறது. முதல் யாமம், பாயஸாந்நம், இரண்டாம் யாமம் கிருஸரான்னம் மூன்றாம் யாமம் குலான்னம், நான்காம் யாமம், சுத்தான்னம் நிவேதிக்க வேண்டுமென நிவேதனபிரகாரம் சூசிக்கப் படுகிறது. பின்பு பூஜை முடிவில் செய்ய வேண்டிய ஹோமவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. தான் விரதம் அனுஷ்டிக்க அசக்தனாக இருப்பின் அந்நியனால் தனக்காக வ்ரதாசரணம் செய்ய வேண்டுமென சூசிக்கப்படுகிறது. பிறகு ராத்ரியில் விழித்து ஆசார்ய பூஜை செய்க. வித்த சாட்யமின்றி தட்சிணா தானம் செய்ய வேண்டும். அவ்வாறே லிங்கம் சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளிவர்களுக்கு யதாசக்தி பூஜை செய்க. பிறகு சாதக பூஜை நன்கு முறைப்படி முடித்து ஸ்வகிருஹம் சென்று பந்து ஜனங்களுடன் கூட முறைப்படி பாரணம் செய்க என்று சிவராத்திரி பூஜாவிதியில் கிரியாகல்பம் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக பதினாறாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. பிறகு, பிராமணர்களே, சிவராத்ரி விரதத்தை பற்றி கூறுகின்றேன். விசேஷமாக விரதங்களில் உத்த மோத்தமமானதை நீங்கள் சிரத்தையுடன் கேளுங்கள்.

2. முன்னால் தேவியாலும், பிறராலும், எது அனுஷ்டிக்கப்பட்டதோ (அந்த சிவராத்ரி விரதானுஷ்டத்தால்) என்னோடு கூட தேவி ஸந்தோஷமாயிருந்தால் மற்றவர்கள் விரும்பிய நன்மைகளை அடைந்தார்கள்.

3. விரதம் அனுஷ்டித்தவர்கள் யமன் கட்டளையினால் பாதிக்கப்படுவதில்லை. கிங்கரர்களாலும் பயப்படும்படியான பார்வை உடையவர்களாலும் பார்க்கப்படுவதில்லை. நரகங்களையும் அடைவதில்லை.

4. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதன் முறையை கேளுங்கள் மாசி மாதத்தில் தேய்பிறையில் எந்த தினத்தில் சதுர்த்தசி இருக்கின்றதோ

5. அந்தராத்ரி சிவராத்ரியாகும். எல்லா நல்வினைகளும் சேர்ந்து சுபத்தை கொடுக்கக் கூடியதாகும். அந்த ராத்ரியில் சிவாலயத்தில் சிவலிங்கத்தில் சிவபூஜை செய்யவேண்டும்.

6. ஸ்நானம் செய்து முற்பகலில் நியமமாக உண்ணாமல் விரதமாக இருந்து மிக வேண்டும் சிரத்தையோடு கூட ஸாதகன் உபசாரத்தினால்

7. பிறகு முன்கூறிய முறைப்படி பஞ்ச சுத்தியை முறைப்படி செய்து சிவாஸனம், சிவமூர்த்தி வித்யா தேகம் கல்பித்து பிறகு

8. சிவனை ஆவாஹனம் செய்து ஸன்னிதானம் செய்து பாத்யம் முதலியவைகள் கொடுத்து அர்ச்சிக்க வேண்டும். சந்தனாதி தைலம்பூசி அரிசி மாவினால் தேய்த்து சுத்தி செய்யவேண்டும்.

9. பஞ்சாமிருதத்தினால் பஞ்சகவ்யங்களினால் அந்தந்த முறையோடு அபிஷேகம் செய்யவேண்டும், நெய் முதலியவைகளோடு சந்தன ஜலத்தினால் முறைப்படி அபிஷேகம் செய்யவேண்டும்.

10. ஐந்து அங்கங்களோடு கூடிய பவித்ரங்களாலும் அரிசிமாவினால் மறுபடி இந்த பிரகாரம் நெல்லி முள்ளியினால் தேய்த்து

11. அரிசிமாவினால், தூபம் செய்யப்பட்ட மஞ்மள் பொடியினாலும் அஸ்த்ரமந்திரத்தினால் தேய்த்து ஜலத்தினால் சுத்தம் செய்யவேண்டும்

12. பிறகு ஈச்வரனை இளநீரால் அபிஷேகம் செய்யவேண்டும், பஞ்ச பிரம்ம மந்திரம் ஷடங்க மந்திரம், மூல மந்திரத்தினால் சந்தன ஜலத்தினால் அபிஷேகம் செய்யவேண்டும்.

13. சுத்தமான பஞ்சு ஆடையினால் துடைத்து லிங்கத்தை சுத்தமான ஆடையினால் லிங்கத்தை சுற்றி வஸ்த்ரம் சாத்தவேண்டும்

14. ஒவ்வொரு யாமத்திலும் தனித்தனியாக திரவியங்களாலும் சந்தனம் முதலியவைகளாலும், சந்தனம், அகில், பச்சை கற்பூரம், குங்குமப்பூ முதலியவைகளால் முறைப்படி அர்ச்சிக்கவேண்டும்.

15. மல்லிகைபூ நீலோத்பலம் ஜாதி புஷ்பங்கள் வில்வங்களை அருகம்புல் அரிசி எள்ளும் கூடினதாக நன்கு பூஜிக்க வேண்டும்.

16. குங்குலியம் அகில் சாம்பிராணி மட்டிப்பால் முதலியவைகளினால் தூபம் போட வேண்டும். நல்ல வெண்மையான நூலை நெய்யில் நனைத்து நெய் தீபம் போட வேண்டும்.

17. முதல் யாமத்தில் பாயஸமும் இரண்டாம் ஜாமத்தில் எள்ளு வெல்லம் நெய் கலந்த அன்னமும் மூன்றாம் ஜாம பூஜைக்கு சக்கரை பொங்கலும் நான்காவது ஜாம பூஜைக்கு சுத்தான்னமும் செய்ய வேண்டும்.

18. அதற்கு பிறகு எல்லாவிதமான காய்கறிகளோடும்கூட, நெய், வெல்லத்தோடுகூட, வெற்றிலை பாக்கையும் நிவேதனம் செய்யவேண்டும்.

19. தூபம் தீபாராதனையோடுகூட சிவனின் பொருட்டு அர்ப்பணம் செய்து குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ விசேஷமாக ஹோமம் செய்ய வேண்டும்.

20. குண்ட ஸம்ஸ்காரத்துடன் குண்டத்திலோ, பாத்திரத்திலோ அக்னியில் சிவாக்னியை கல்பித்து அக்னி ஹ்ருதயத்தில் சிவாஸனத்தை கல்பித்து

21. அவ்விடத்தில் ஈசனை நன்கு பூஜித்து அந்த ஜ்வாலையாக இருக்கும் அக்னியில், ஸமித், நெய், அன்னம் நெற் பொறி, எள்ளு இவைகளை மூலமந்திரம் ஷடங்க மந்திரங்கள், பஞ்ச பிரம்ம மந்திரங்களால் ஹோமம் செய்யவேண்டும்.

22. சிவமந்திர ஹோமத்தில் பத்தில் ஓர் பாகம் மற்ற மந்திரங்களும் பத்துமுதல் பத்து பத்தாக அதிகபடுத்தி ஐம்பது ஆகுதிவரை செய்யலாம்.

23. இடைவெளி இல்லாத பூர்ணமான பூர்ணாஹூதியை சிவனுக்காக செய்து வணங்கி அந்த விபூதியை ஈசனுக்கு அர்பணம் செய்து நமஸ்கரித்து

24. ஒவ்வொரு ஜாமத்திலும் மறுபடி மறுபடி இந்த பிரகாரம் பூஜிக்க வேண்டும். நாமே செய்ய இயலாவிடில் நமக்காக பிறரால் செய்விக்கப்பட வேண்டும்.

25. இரவை தூக்கம் இல்லாமல் கழித்து, தெளிவான அதிகாலையில் நித்யானுஷ்டானங்களை செய்து பிறகு முறைப்படி ஸ்நபனம் செய்து

26. ஈச்வரனை முன்போல் பூசித்து பிறகு குரு பூஜையை செய்யவேண்டும். பிறகு பணம் இல்லாத்தன்மை இல்லாமல் பிறகு தட்சிணையை (குருவுக்கு) கொடுக்கவேண்டும்.

27. லிங்கம் கட்டிகள், சிவபக்தர்கள், பிராமணர்கள், அதிதிகளையும் இயன்றளவு பக்தியினால் நன்கு பூசை செய்து

28. பந்துக்களோடு கூட ஸாதகன் தனது வீட்டிற்கு சென்று கை, கால்களை சுத்தம் செய்துகொண்டு சாப்பாட்டை (பாரணை) செய்ய வேண்டும்.

இவ்வாறு மாசிமாத சிவராத்ரி பூஜை முறையைக் கூறும் பதினொன்றாவது படலமாகும்.

படலம் 10: மாசி மாத கிருதகம்பள பூஜா முறை...

படலம் 10: மாசி மாத கிருதகம்பள பூஜா முறை...

பத்தாவது படலத்தில் மாசிமாதத்தில் செய்ய வேண்டிய கிருதகம்பள பூஜா விதி கூறப்படுகிறது. முதலில் மாகமாசத்தில் மகாநட்சத்திரத்தில் கிருத கம்பளம் செய்ய வேண்டுமென கால நிர்தேசமாகும். பிறகு கிருத (நெய்) ஸம்பாதநம் அதன் ஸம்ஸ்காரமும் வர்ணிக்கப்படுகிறது. பிறகு பஞ்சகவ்ய பஞ்சாம்ருதத்தால் விசேஷ ஸ்நபனம் விசேஷ பூஜை செய்து ஹோமம் செய்க என கூறி அங்கு செய்ய வேண்டிய ஹோம விதி பிரதிபாதிக்கப்படுகிறது காலை மதியத்தில் முன்பு போல் ஸ்நபனத்துடன் விசேஷ பூஜை செய்து ஸர்வாலங்கார யுதமாக ஆலய பிரதட்சிண பூர்வம் ஸம்ஸ்கரிக்கப்பட்ட நெய்யை லிங்கத்தில் பீடம் வரை எல்லா இடத்திலும் பூச வேண்டும். பிறகு கந்தாதிகளால் பூஜித்து கம்பள வேஷ்டநம் செய்ய வேண்டும். பிறகு தாம்பூல சஹிதம் ஹவிஸ் நிவேதிக்க வேண்டும். பிறகு அடுத்த ஸந்த்யா காலத்திலோ மறுதினத்திலோ கம்பளாதிகளை எடுத்து முன்பு போல் பூஜிக்க வேண்டும். முயற்சிக்கு தக்கவாறு ஆசார்யனுக்கு தட்சிணாதானம் கொடுக்க வேண்டும். இந்த பூஜை அங்குரார்ப்பண ஸஹிதமாகவோ, ரஹிதமாகவோ செய்யலாமென சூசிக்கப்படுகிறது. இவ்வாறாக பத்தாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. மாசி மாதத்தில் மகாநட்சத்திரத்தில் நெய்யில் (நனைத்த) கம்பளியை சாத்தும் பூஜையை செய்ய வேண்டும். புழு, பூச்சி, இல்லாததும் காராம்பசு வினையுடையதும்.

2. ரோமம் இல்லாமலும், சுத்தமாயும், நல்ல மணத்தோடு நூதனமான நெய்யை ஆசார்யன் அஸ்த்ர மந்திரத்தினால் ஸ்தாபிக்க வேண்டும். ஜலத்தில் வருண மூல மந்திரத்தை கூறிக்கொண்டு

3. அந்த நெய்யை குங்குமப்பூ, அகில், மஞ்சள் பொடி, பச்சை கற்பூரம் இவைகளோடு சேர்த்து உருண்டையாக செய்து (இவைகளால் ஸம்ஸ்கரிக்கப்பட்டு)

4. தங்கபாத்ரம் முதலியவைகளில் வைத்து, பஞ்ச பிரும்மந்திரம் ஷடங்க மந்திரம் சிவமந்திரத்தோடு கூட பூஜித்து தூபம் கொடுத்து அபிமந்த்ரணம் செய்ய வேண்டும்.

5. பஞ்சகவ்ய, பஞ்சாமிருதங்களினாலோ விசேஷமாக ஸ்நபனம் செய்ய வேண்டும். விசேஷ பூஜையை செய்து முடிவில் ஸ்தண்டிலத்திலே நெய்யை வைக்க வேண்டும்.

6. புத்திமானானவன் ஹ்ருதய மந்திரத்தை கூறிக்கொண்டு சந்தனம் முதலியவைகளினால் பூஜிக்க வேண்டும். அதற்கு முன் ஸ்தண்டிலத்தில் சிவாக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

7. புரச சமித், நெய், அன்னம், எள்ளு, பொரி இவைகளோடு கூடியதாக நூற்றெட்டு தடவை ஹோமம் செய்து முடிவில் பூர்ணாஹுதியை செய்ய வேண்டும்.

8. பவித்ராரோகணமுறைப்படி நெய்யில் ஸம்பாத ஹோமம் செய்து முன்புறத்தில் ஸ்தண்டிலத்தில் வஸ்திரத்தால் மூடப்பட்ட நெய்யை வைக்க வேண்டும்.

9. காலையிலோ மத்தியானத்திலோ கவச மந்திரத்தினால் அவகுண்டனம் செய்தபிறகு ஈசனை ஸ்னபனம் முதலியவைகளோடு பூஜித்து

10. ஸகலவிதமான அலங்காரத்தோடு விசேஷமாக பூஜைகள் செய்து சிவமந்தரத்தை சொல்லிக் கொண்டு நெய்யுடன் கோயில்வலம்வந்து

11. நெய்யால் லிங்கத்தை எல்லா இடத்திலும் பூசி எல்லா பீடங்கள் முடிவுவரை சந்தனம் முதலியவைகளால் பூஜித்து கம்பளியை சுற்றவேண்டும்.

12. ஈஸ்வரனுக்கு வெற்றிலைபாக்குடன் கூடின நிவேதனத்தை கொடுக்க வேண்டும் (அர்பணிக்கவேண்டும்)

13. அடுத்த ஸந்தியா காலத்திலோ மறுநாளிலோ கம்பளி முதலியவைகளை நீக்கிவிட்டு முன்போல ஈசனை பூஜிக்கவேண்டும். அப்படியே ஆசார்யனை பூஜிக்கவேண்டும்.

14. ஆசார்யனுக்கு சக்திக்கு ஏற்றவாறு தட்சிணையை கொடுக்கவேண்டும். பாலிகை தெளிப்பதுடன் கூடவோ, இல்லாமலோ இதை செய்யவேண்டும்.

இவ்வாறு நெய் சேர்த்த கம்பள பூஜை முறை பத்தாவது படலமாகும்.

படலம் 9: மார்கழி, தை மாத சிவபூஜா விதி...

படலம் 9: மார்கழி, தை மாத சிவபூஜா விதி...

ஒன்பதாவது படலத்தில் மார்கழி மாதம், தை மாதம் செய்ய வேண்டிய விசேஷ பூஜாவிதி கூறப்படுகிறது. அதில் முதலில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் கூடிய தினத்தில் தேவருக்கு கிருதஸ்நான ஸமந்வித ஸ்நபனம் அல்லது கேவல ஸ்நபனம் செய்து, விசேஷமாக கந்தாதிகளால் தேவரை பூஜித்து பலவித கானங்களுடன் கிராம பிரதட்சிணம் செய்து, தேவரை ஆலய பிரவேசம் செய்க. அல்லது ராத்திரியிலும் பகலிலும் பலிஹோமங்களுடன் கூட ஸர்வாலங்காராயுதமாக பேரபிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவத்துடன் தீர்த்தோத்ஸவம் செய்து தேவாலய பிரவேசம் செய்க என்று கூறப்பட்டுள்ளது. பிறகு அங்கு ஸாயங்காலத்தில் விதிக்கப்பட்டுள்ள டோலரோஹணவிதி பிரதிபாதிக்கப்படுகிறது. அதில் டோலாகல்பனபிரகாரம் ஊஞ்சலில் தேவதாயஜனம் கூறப்படுகிறது. பிறகு ஊஞ்சலில் பலகை மேல் சிவன், இடப்பாகம் தேவி, மத்தியில் ஸ்கந்தரையும் ஆரோஹிக்க வேண்டும். அங்கு பலவித ந்ருத்யகான வாத்ய ஸஹிதம் ஈசனை சந்தோஷிக்க வேண்டும் என டோலோத்ஸவ விதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு இந்த ஊஞ்சலுத்ஸவம் வேறு காலத்திலும் செய்ய வேண்டும். பிரதி தினமும் செய்யலாமென பக்ஷõந்தரமாக சூசிக்கப்படுகிறது. பேரா ரோஹநத்தோடு டோலாசலனம் இஷ்டமென்று கூறப்பட்டுள்ளது. இந்த பக்ஷத்தில் ஊஞ்சலில் தேவரை ஆரோஹித்து அந்த ஸாந்நியத்தை தியானிக்கவும் என டோலாரோஹன விதி கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் மகா நட்சத்திரத்தில் ஈச, ஈச்வரிக்கு விசேஷமாக நெய்யுடன் கூடிய பாயசத்தை அர்ப்பணிக்கவும் (தை) புஷ்யமாசத்தில் புஷ்ய நட்சத்திரத்தில் தேனபிஷேகம் மஹாஹவிர் நிவேதனம் நிவேதன முடிவில் பேரயாத்ரை செய்ய வேண்டுமென புஷ்யமாஸவிதி கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒன்பதாவது படல கருத்து தொகுப்பாகும்.

1. மார்கழி மாதத்தில் ஆருத்ரா நட்சத்ரத்தில் முன் கூறிய விதிப்படி நெய் அபிஷேகத்தோடு கூட பரமேஸ்வரனை பூஜிக்க வேண்டும்.

2. விசேஷமாக ஸ்நபனம் மட்டும் செய்து சந்தனங்களால் பூஜித்து, பலவித கானங்களால் ஸந்தோஷிக்கச் செய்ய வேண்டும்.

3. கிராம பிரதட்சிணம் செய்து ஸ்வாமியை ஆலயத்தில் பிரவேசிக்க செய்து அல்லது ராத்திரியிலோ, பகலிலோ பலி, ஹோமம் செய்து

4. எல்லா அலங்காரங்களுடன் கூட, பிம்ப பிரதட்சிணம் செய்து சூர்ணோத்ஸவம், தீர்த்த உத்ஸவம் செய்து ஆலய பிரவேசனம் செய்ய வேண்டும்.
ஸாயங்காலத்தில் ஊஞ்சல் உத்ஸவம் செய்ய வேண்டும்.

5. ஸர்வாலங்காரயுதமாக வேண்டும், ஸ்தம்பல க்ஷணத்துடன் கூடிய இரண்டு ஸ்தம்பம் அமைத்து அதன் நடுவில் குறுக்கு ஸ்தம்பம் அமைக்க வேண்டும்.

6. நான்கு முழ அளவுள்ள ஊஞ்சலை அதன் நடுவில் அமைக்க வேண்டும். நான்கு சங்கிலியுடனும், ஊஞ்சல் மேல் விட்டத்தில் மூடக்கூடிய விதான வஸ்திரத்துடன் கூடியதாயும்

7. பல அலங்காரத்துடனும், இரு முழம் அளவுள்ள ஹம்ஸானத்துடன் அமைத்து புண்யாக பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

8. அஸ்திரமந்திர ஜலத்தால் பிரோக்ஷணம் செய்த பலகையில் ஆஸனத்தை கல்பித்து ஹ்ருதய மந்திரத்தால் அன்னப்பறவை தோகைகளாலான ஹம்ஸா ஸனத்தில் ஹம்ஸத்தை பூஜிக்க வேண்டும்.

9. வலது பக்கத்தில் பிரம்மாவையும், இடது பக்கத்தில் விஷ்ணுவையும் விஷ்டரமாகிய ஆஸன பாகத்தில் ருத்திரனையும், பலகையின் மேல் பாகத்தில் சிவனை பூஜிக்க வேண்டும்.

10. இடது பாகத்தில் தேவியையும், நடுவில் ஸுப்ரஹ்மண்யரையும் பூஜிக்க, அல்லது பலகையின் மேல் தேவியை சந்தனம் முதலியவைகளால் அர்ச்சிக்கவு

11. பலவித கானங்களுடனும், பல நிருத்தங்களுடனும், பலவித வாத்யங்களுடனும், கூட ஈஸ்வரனை மகிழ்விக்க வேண்டும்.

12. மற்ற சமயத்திலும் இஷ்டத்தை தரக்கூடிய ஊஞ்சல் உற்சவம் செய்யலாம். எல்லா விருப்பத்தையும் அடைவதற்காக பிரதிதினமும் செய்யலாம்.

13. பிம்பத்தை எழுந்தருளப்பண்ணியுமோ ஊஞ்சலாட்டுவதை செய்ய வேண்டும். இந்த மார்கழி மாதத்தில் மக நட்சத்திரத்தில் விசேஷமான நெய்யுடன்

14. கூடிய பால் பாயாசத்தை தேவியுடன் கூடிய சம்புவிற்கு அர்பணம் செய்யவேண்டும்.

15. தை மாசத்தில் (பூச) புஷ்ய நட்சத்ரத்தில் தேன் அபிஷேகம் செய்க. மஹாஹவிஸ் நிவேதனம் செய்து ஸ்வாமி திருவீதியுலா செய்ய வேண்டும்.

16. முன் கூறியபடி செய்தால் கர்தா விரும்பிய பயனை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் மார்கழிமாத, தை மாத பூஜைமுறையாகிய ஒன்பதாவது படலமாகும்.

படலம் 8: கிருத்திகா தீபாவளி விதி...

படலம் 8: கிருத்திகா தீபாவளி விதி...

எட்டாம் படலத்தில் கிருத்திகாமாஸ தீபாரோபண விதி படலம் கூறப்படுகிறது. முதலில் தீபாரோபண கால நிர்ணய பிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதற்காக நட்சத்ரதிதி நிர்ணய பிரகாரம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு அங்குரார்ப்பணம் செய்க என கூறப்படுகிறது. தீபா ரோபணத்தின் முன்தினம் அதிவாஸம் செய்தல் வேண்டும். தீப தண்டஸ்தாபன யோக்ய ஸ்தான நிரூபணம், தீபதண்டபிரமாண வாக்யம், தீபதண்டயோக்ய விருக்ஷ நிரூபணம். தீப தண்டத்தில் கீலயோஜநபிரகாரம், அதில் கீலபிரமாணம், கீலபிரமாண வாக்யம் பத்ர தாரணத்திற்கு பிரதிகீலம் சக்ரயோஜந பிரகாரவர்ணணம், பிரதி சக்ரம், தீபிகா யோஜநபிரகார நிரூபணம், தீபிகா ஸங்க்யா வாக்யம், தீபதண்டத்தின் வெளியில் காய்ந்ததான தென்னங்கீற்றுகளால் ஆச்சாதனம் செய்யவேண்டும் என்ற தான விஷயங்கள் கூறப்படுகிறது. பிறகு தீபதண்டத்தில் தக்ஷிண பாகத்தில் தண்டாரோஹ ஸித்திக்காக த்வார கல்பந விஷயத்தில் கல்ப, அனுகல்ப, உபகல்ப மென்றதான மூன்றுவிதம் நிரூபிக்கப்படுகிறது. தீப தண்டஸ்தாபன விஷயத்தில் மாலாகாரமான உருவபேதம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு ஆலயத்தில் தீபாரோபணம் எங்கெங்கு செய்யவேண்டும் அந்தந்த ஸ்தானங்களின் பெயர் நிரூபிக்கப்படுகிறது. அதில் கிராமாதிகளில் கிராம வெளியில் தீபாரோபணம் செய்ய வேண்டும் என சூசிக்கப்படுகிறது. பிறகு முன்தினமே அதிவாஸம் செய்யவேண்டும் என்ற சூசகத்திற்காக அதிவாஸகர்ம நிரூபணம், அதிவாஸ தீபதண்டஸ்தாபனம் அதனடியில் வேதிகல்பன பிரகாரம் சில்பி விஸர்ஜனத்திற்கு பிறகு அங்கு செய்ய வேண்டிய ஸம்ஸ்கார நிரூபணம், ஹோமவிதி ஆகிய விஷயம் நிரூபிக்கப்படுகிறது.

அதிவாஸத்திற்கு பிறகு இரண்டாம்நாள் நான்கு திக்கிலும் விதிக்கிலும் பந்தல்கள் அமைக்கவும் என கூறி பந்தலமைப்பு பிரகாரவர்ணம் சூர்யன் மறைந்த சமயமான சாயங்காலத்தில் தீபதண்டத்தை பூஜித்து அதில் வஸ்த்ர யுக்ம வேஷ்டநம், பிறகு பந்தலில் ஸ்தண்டிலங்களில் குண்டங்களிலோ அதிவாஸ ஹோமத்துடன் ஹோமம் செய்க என கூறி அங்கு விதிக்கப்பட்ட ஹோம விதி பிரதிபாதிக்கப்படுகிறது. பூர்ணாஹூதி பிரதான முடிவில் எல்லா தீபத்தையும் ஒன்று கூட்டி பாத்திரத்தில் ஸ்தாபனம் பிறகு ஸர்வாலங்கார யுதமாயும் பலவிதவாத்ய ந்ருத்த ஸம்யுதமாயும், பேரயாத்ரா புரஸ்ஸரமாயும், தீபதண்டத்தில் தலையிலிருந்து பாதம் வரை தீபா ரோபணபிரகாரம் நிரூபிக்கப்படுகிறது. அதில் பேர யாத்ரையின்றி தீபாரோபணம் விதேயமென பக்ஷிந்தரம் சூசிக்கப்படுகிறது. அங்கு தீபாரோபண கர்த்தாவான பரிசாரகருக்கு தேசிகனால் வஸ்த்ராதிகளால் பூஜைசெயற்பாலது என கூறப்படுகிறது. ஜ்யோதிர்லிங்கத்தை அனுசரித்து முன்புகல்பிக்கப்பட்ட கூடங்களின் தஹநம் விதேயம் என கூறப்படுகிறது. கூட தஹநமின்றி மற்ற கர்மாவை ஆசரிக்கவும் என பக்ஷõந்தரம் சூசிக்கப்படுகிறது. தோரண கீழ்பாகத்தில் தேவனை தீபதண் பிரதட்சிணம் செய்து ஆலய பிரதட்சிண பூர்வமாக ஆஸ்தான மண்டபம் அடைய வேண்டும். ஆலயங்களில் எல்லா இடத்திலும் தீபா ரோபணம் செய்ய வேண்டும். பிறகு பரிவேஷ கிரமமாக தேவனை பேரஸ்தானத்தை அடைவிக்க வேண்டும். பிறகு பேரம், லிங்கத்திற்குமாக நவகலசஸ்நபனம் செய்யவும் என கல்பிக்கப்பட்டுள்ளது. பின்பு தேங்காய் திருவலுடன் கூடிய அவலை ஈஸ்வரனுக்கு நிவேதனம் செய்யவேண்டுமென தீபாரோபணகிரியையில் பூஜா செயல்கள் விளக்கப்பட்டுள்ளது. இந்த தீபாரோபணகிரியை அங்குரார்பணம் இன்றியும் செய்யலாமென கூறப்பட்டுள்ளது. ஆசார்யர்களுக்கு தட்சிணாதானபிரகாரம் கூறப்படுகிறது. இந்த தீபாரோபண கர்மா ராஜகிருஹம், கிராமாதிகளிலும் செய்யவேண்டும், ரோக நிவ்ருத்திக்காக கோசாலையில் தீபாரோபண கர்மா செய்யவேண்டும். முடிவில் தீபாரோபண கால விஷயத்தில் நட்சத்ர, திதிநிர்ணய பிரகாரம் கூறப்படுகிறது. இவ்வாறாக எட்டாவது படல கருத்து சுருக்கமாகும்.

1. தீபாவரிசையை பற்றி கூறுகிறேன் கேளுங்கள். கார்த்திகை மாத கிருத்திகா நக்ஷத்திரத்தில்

2. பூர்ணிமையிலோ பூர்ணிமையோடு சேர்ந்த தினத்திலோ எல்லா விருப்பத்திற்காக சூர்யாஸ்தமன வேளையில் தீபாரோஹணம் செய்ய வேண்டும்.

3. கர்த்தாவின் அஷ்டம ராசிமுதல் லக்ன தோஷம் பார்த்து விருஷ்டி வைநாசிக நக்ஷத்திரங்களையும் பார்க்க வேண்டும்

4. சூர்யாஸ்தமனத்திற்கு முன்னதாகவுள்ள யாமத்தின் கால்பாக நேரமும் அஸ்தமனத்திற்கு பிறகு உள்ள அரையாமமும் தீபவரிசையின் பூஜைக்குரிய காலமாகும்.

5. இவ்வாறு காலத்தை நிச்சயித்து அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும். தீபாராதன தினத்திற்கு முதல் தினம் அதிவாஸம் செய்ய வேண்டும்.

6. இறைவனுக்கு முன்போ ஒவ்வொரு கோபுரத்திலோ, அஷ்டதிக்கிலோ நான்கு திக்கிலோ மூன்று அல்லது இரண்டு இடத்திலோ ஓரிடத்திலோ தண்டத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

7. கொடிமர அளவுபோல் தீபதண்டத்தின் அளவாகும். அந்த தண்டமும் தென்னை பனை, பாக்கு மூங்கில் மரங்களாலோ செய்யவேண்டும்.

8. கொடிமரத்திற்கு சொல்லப்பட்ட மரங்களினாலேயும் தீபவரிசைக்கான மரத்தையும் தயார் செய்து அதில் ஆப்புகுச்சிகளை சேர்க்க வேண்டும். பன்னிரண்டு அங்குலம் முதல் ஐந்தங்குல அதிகரிப்பாக

9. ஐம்பது முழம்வரை தீபவரிசைக்கான மரத்திற்கு வெளியில் ஆப்புகுச்சி இருக்கவேண்டும். இரண்டு மாத்ராங்குல அளவிலிருந்து கால் அங்குல அதிகரிப்பால் ஆறங்குல அளவுவரை

10. தீபமரத்தின் அகலமாகும். அதன் கனம் மூன்றரை பாகமாகும். முக்கால் பாகம் தீபமரத்தின் குறுக்களவாகும். தீபமரம், ஆப்பு குச்சிகளால் இணைக்கப்பட்டதாக வேண்டும் இருக்கலாம்.

11. ஒன்பது ஆப்புகுச்சி முதல் ஒவ்வொர் ஆப்புகுச்சி அதிகரிப்பாக இருபத்தியேழு ஆப்புகுச்சி வரை ஓர்திசையில் பொருத்த வேண்டும்.

12. மற்றமூன்று திசைகளிலும் இவ்வாறு ஆப்புக் குச்சிகளை பொருத்த வேண்டும். மூன்று ஆப்புகுச்சி, நான்கு ஆப்புகுச்சி, விருப்பப்படியான குச்சியுடனோ

13. தீபமரத்தின் நுனியில் பொருத்தி, தீப பாத்ரத்தை சுமப்பதற்காக ஒவ்வோர் ஆப்புக்குச்சியிலும் மரச்சக்ரங்களை பொருத்த வேண்டும்.

14. ஒவ்வொரு சக்ரத்திலும், எட்டு, பண்ணிரெண்டு, பதினாறு எண்ணிக்கையுள்ள தீபங்களை பொருத்த வேண்டும். தீபமரத்தை சுற்றி வெளியில் தென்னங்கீற்று முதலிய காய்ந்த கீற்றுகளால்

15. நன்கு மூடிய பிறகு இடைவெளியின்றி சுழலும் போலுள்ள சக்ரத்தை அமைக்க வேண்டும். ஓர் முழு அகலமும், இரண்டு முழ நீளமும் உள்ளதாக

16. தீப மரத்தின்மேல் ஏறுவதற்காக தென்திசையில் வாயிற்படி அமைக்க வேண்டும். இவ்வாறு கல்பம் என்ற முறை கூறப்பட்டு அனுகல்பம் கூறப்படுகிறது.

17. எல்லா சக்ரங்களையும் விட்டு ஒவ்வோர் ஆப்புக்குச்சியிலும் தீபத்தை சேர்க்க வேண்டும். ஹோமம், கூடாரமின்றி செய்வது உபகல்பமாகும்.

18. தீபமரமின்றி செய்வது அகல்பமாகும். தீபம் வைக்கப்படும் கூடாரங்களை கிழக்கு முதலான திசைகளிலும், தென்கிழக்கு முதலான மூலைகளிலும் நடுவிலும் அமைக்க வேண்டும்.

19. ஒவ்வோர் தெய்வங்களுக்கும் அதிக எண்ணிக்கையுள்ள தீபங்களை செய்ய வேண்டும். தீபங்களை வைப்பதற்கான மரங்களை மாலை போன்ற அமைப்புள்ளதாகவும் செய்யலாம்.

20. தோரணம் போன்றோ, வட்ட வடிவமாகவோ திருவாசி போன்றோ தீபமரங்களை செய்து அதில் தீபங்களை பொருத்த வேண்டும்.

21. விமானம், கோபுரம், பிராகாரம், பரிவாராலயம், மண்டபம் பலி பீடாதிகள், கிணறு, கிருகம் (வீடு) ஆகிய இடங்களிலோ

22. விருஷப முன்பே மடப்பள்ளியிலோ புஷ்ப மண்டபாதிகளிலோ கிராமங்களிலோ மண்டபத்திற்கு வெளியிலோ தீபங்களை கல்பிக்க வேண்டும்.

23. இவ்வாறு தீபவரிசையின் பூஜை செய்ய வேண்டும். தீப பூஜையின் முதல் நாளின் மாலையிலேயே பூஜித்து அஸ்திர மந்திரத்தால் தீபமரத்தை சுத்தி ஓமென்ற மந்திரத்தால் பூஜிக்க வேண்டும்.

24. ஆறு, நான்கு, ஐந்து தாள அளவில் பூமியில் குழி அமைக்க வேண்டும். தீபஸ்தம்பபூஜையின் முதல் நாள் குழியில் தீபமரத்தை நட்டு வேதிகையை அமைக்க வேண்டும்.

25. கொடிமரத்தின் வேதிகைபோல் அல்லது தாமரை போன்ற அமைப்பாகவோ வேதிகை அமைத்து சில்பிக்கு தட்சிணை கொடுத்து அனுப்பிவிட்டு புண்யாஹ வாசனம் செய்ய வேண்டும்.

26. உள்ளே சென்று சந்தனம், புஷ்பங்களால் தீபஸ்தம்பத்தை பூஜிக்க வேண்டும். ரக்ஷõ பந்தனம் செய்து பூஜை செய்ய வேண்டும்.

27. ஆலயம், மண்டபம், யாக மண்டபம், அழகான இடம், இவைகளை பசுஞ்சாணத்தால் மெழுகி

28. ஸ்தண்டிலம் அமைத்து அஸ்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்க வேண்டும். ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் அங்கு பாத்திரம் வைக்க வேண்டும்.

29. நீராஜன விதியில் கூறப்பட்டுள்ள பிரம்ம மந்திரம், அங்க மந்திரங்களை, பூஜித்து பிரம்மாவின் மந்திரத்தோடு திக்பாலகர்களின் மந்திரங்களினாலோ, மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களையோ, அக்னியுடன் எட்டு வஸீக்களையுமோ வாமை முதலிய எட்டு சக்திகளையுமோ, ஐந்து கலைகள், ஐந்து பூதங்கள், பிரம்மாதி காரணேச்வரர்களையுமோ பூஜிக்க வேண்டும். பாத்ரத்தில் ஓம் என்று கூறி பூஜிக்க வேண்டும்.

30. குண்டத்தில் குண்டஸம்ஸ்காரம், ஸ்ருக் ஸ்ருவஸம்ஸ்காரம் அக்னி ஸம்ஸ்காரம் இவைகளை செய்து சிவாக்னியை பூஜித்து, ஆஸன, ஆவரண பூஜையும், ஹ்ருதயம் முதலிய ஷடங்கமந்திரத்துடன் அக்னியில் சிவனை பூஜிக்க வேண்டும்.

31. சமித், நெய், ஹவிஸ், பருத்திவிதைபால் இவைகளால் நூறு, ஐம்பது, இருபத்திஐந்து ஆஹூதிகளை செய்ய வேண்டும்.

32. மேற்கூறிய எண்ணிக்கையால் மூலமந்திரா ஹூதியும், அதில் பத்தில் ஓர் பங்கு அங்க மந்திரா ஹூதியும், வஹ்நி பீஜமான ரம் என்ற மந்திரத்தால் நூற்றெட்டு ஆஹுதியும் செய்து பூர்ணாஹுதி செய்ய வேண்டும்.

33. பரிவாரதேவர்கள், ஹ்ருதயம் முதலிய ஷடங்க தேவர்களுடன் கூடிய இறைவனை விஸர்ஜனம் செய்து, நல்லெண்ணை அல்லது நெய்யாலோ பாத்ரத்தை நிரப்பி ஸர்வாத்மகரான ஈசனை நினைத்து தீபத்தை ஏற்றவேண்டும்.

34. ரம் என்ற வஹ்நி பீஜத்தை ஸ்மரித்து மத்ய தீபம் முதல் எல்லா தீபங்களையும் சந்தன புஷ்பங்களால் பூஜித்து சிவாக்னியை விசர்ஜனம் செய்ய வேண்டும்.

35. பலவித அலங்காரத்துடன் கூடிய தருண தீபமான மத்ய தீபபாத்ரத்தை ஜ்வாலையுடன் கூடியதாக எடுத்து

36. தண்டத்தின் மேல் ஸ்தண்டிலத்தில் ஹ்ருதயத்தினால் வைக்க வேண்டும். ஹோம முடிவில் தீபதண்டத்திற்கு ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

37. பிறகு இரண்டாம்நாள் நான்கு திக்கிலும், விதிக்கிலும், நான்கு தோரண ஸஹிதமாக நான்கு கூடங்கள் அமைக்க வேண்டும்.

38. கூடாரங்கள் ஐந்து, நான்கு, மூன்று முழ அளவும், விரும்பிய அளவுள்ள இடைவெளி உடையதாகவும் அமைத்து, கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் ஒரு கூடாரம் அமைக்க வேண்டும்.

39. தோரணத்தை கூடத்திற்கு தக்கவாறு விருப்பப்படி அமைக்க வேண்டும். கூடாரத்தை சுற்றி தோரணம், தர்ப்ப மாலைகளால் அலங்கரித்து

40. எல்லா அலங்காரத்துடனும் வாழைமரம், பாக்கு மரத்துடன் கூடியதாக மண்டபம் அமைத்து சூர்யன் மறையும் நேரத்தில்

41. புண்யாஹவாசனம் செய்து கந்தாதிகளால் தண்டத்தை பூஜித்து இரண்டு வஸ்திரத்தால் தண்டத்தின் அடிபாகத்தில் சுற்றி

42. ஸ்வர்ணம் முதலியவைகளால் ஆக்கப்பட்ட பாத்திரத்தை தண்டத்தின் மேல் வைக்க வேண்டும். பருத்தி கொட்டையால் ஆன திரியோடு எண்ணை அல்லது நெய்யை சேர்த்து

43. தீபத்தை கூடத்தில் சேர்த்து குண்டம் ஸ்தண்டிலங்களில் அதிவாச ஹோமத்துடன் ஹோமம் செய்ய வேண்டும்.

44. தென்கிழக்கிலோ, வடகிழக்கிலோ பந்தலில் ஹோமம் செய்ய வேண்டும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஈச்வரன் ஸதாசிவன் இவர்கள்

45. இங்கு ஹோமாதிபர்கள் என கூறப்படுகிறார்கள். தீப தண்டத்தில் ஸதாசிவரை பூஜிக்க வேண்டும். புரசு, ஆல், வன்னி, எருக்கு சமித்துக்களையோ அல்லது எல்லா குண்டத்திலும் வன்னி சமித்தையோ

46. ஹோமம் செய்து வஸ்திரம் தங்கமாபரணங்களால் அசார்யரை பூஜித்து பூர்ணாஹூதி செய்து எல்லா தீபத்தையும்

47. ஒன்று சேர்த்து வஹ்னி பீஜத்தால் (ரம் என்று) ஹ்ருதயத்தால் பாத்திரத்தில் ஸ்தாபிக்க வேண்டும். எல்லா அலங்காரத்துடனும் மங்களாங்குரத்துடனும்

48. விதான த்வஜத்துடனும் சத்ர சாமரத்துடனும் பலவித வாத்யம் பலவித நிருத்தத்துடன் கூடியதாகவும்

49. உத்ஸவ பேரத்துடன், பேரயாத்ரையுடனும் திரு வீதியுலா இன்றியுமோ கிருஹஸ்தரோ பிரம்ம சாரியோ தீபத்தை கையால் எடுத்து

50. தீபமரத்தில் சீக்ரம் ஏறி அதற்கு மேல் வடக்கு நோக்கியவாறு நின்று மரத்தில் மேலுள்ள பாத்ரத்தில் தீபமேற்றி பிறகு அங்கிருந்து இறங்கி

51. மஹேசனிடம் விக்ஞாபித்து அந்த காலத்தில் சக்ரத்திலுள்ள தீபங்களை மூர்த்தாதி பாதம் வரை ஏற்றவும்.

52. ஆசார்யன் தீபமேற்றிய கர்தாவையும் பரிசாரகனையும் வஸ்திராதிகளால் வடக்கு முகமாக இருந்துகொண்டு கவுரவிக்க வேண்டும்.

53. ஜ்யோதிர் லிங்கத்தை ஸ்மரித்து நான்கு கூடத்தையும் சொக்கபானை தஹிக்க வேண்டும் (அல்லது) சொக்கபானை கூட தாஹமின்றி மற்ற எல்லாவற்றையும் அனுஷ்டிக்க வேண்டும்.

54. தோரணத்திற்கு கீழே தேவரை எழுந்தருளச் செய்து தீபமரத்தினின்று பிரதட்சிணமாக தீபத்துடன் கூடி கிராமத்திற்கு செல்ல வேண்டும்.

55. கோயில் பிரதட்சிணம் செய்து ஆஸ்தான மண்டபம் செல்ல வேண்டும். எல்லா கோயில் விமானங்களில் தீபங்களை ஏற்ற வேண்டும்.

56. வலமாக கோயிலையடைந்து, உற்சவ பிம்பத்திற்கு கூறியபடி ஸ்நபனம் செய்துமோ செய்யாமலுமோ இருக்கலாம்.

57. பூர்ணமாக அதிகமான ஹவிஸ் கொடுத்து தாம்பூலம் நிவேதித்து தேங்காயுடன் கூட அவலை தேவனுக்கு நிவேதிக்க வேண்டும்.

58. மிளகு ஜீரகத்துடன் வெல்ல சர்க்கரையுடனும் அவலை நிவேதித்து அங்குரார்ப்பணம் செய்யாமலும் இந்த உத்ஸவத்தை செய்யலாம்.

59. குருவிற்கு தட்சிணை கொடுத்து ஹோமம் செய்பவர்களுக்கும் தட்சிணை கொடுக்க வேண்டும். இந்த உத்ஸவத்தில் ஹோம உயயோகித்த திரவ்யம் கொட்டகை, மூங்கில்குச்சி முதலியவைகளையும்

60. அந்த தீப பூஜையின் அங்கமான மற்ற திரவ்யங்களையும் சேர்த்து ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். இந்த தீப பூஜையானது அரசரின் அரண்மனையிலும் செய்யலாம்.

61. கிராமம் முதலியவிடங்களில் பிரம்மஸ்தானமான மத்தியில் தீபவரிசை பூஜை செய்யலாம். மற்றும் மனிதர்களுக்கும் வாஹனங்களுக்கும் தீமை ஏற்படும் போதும் செய்யலாம்.

62. மாட்டுத் தொழுவத்தில் பசுக்களின் வியாதியை போக்குவதற்காக செய்ய வேண்டும். எந்த திதியில் சூர்யன் உதிக்கிறானோ!

63. அந்த வளர்பிறை திதி, ஸகலா என்று பெயர்.

64. சூர்யன் மறையும் நேரத்தில் எந்த நட்சத்ரத்துடன் கூடி சூரியன் இருக்கிறானோ அந்த நட்சத்ரத்தை ஸகலம் என்பதாகவும் நட்சத்திரத்தை அறியும் விஷயத்திலும் அவ்வாறேயாகும்.

65. இவ்வாறாக அறிந்து பூஜை முதலிய எல்லா கார்யங்களையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கிருத்திகா தீபாவளி முறையாகிற எட்டாவது படலமாகும்.

படலம் 7: நீராஜன விதி...

படலம் 7: நீராஜன விதி...

ஏழாம் படலத்தில் நீராஜனவிதி கூறப்படுகிறது, அதில் முதலில் நீராஜனத்தின்கால நிரூபணம் பிறகு நீராஜந பாத்ரஸ்தாபநார்த்தம், கர்பக்ரஹம், அர்த்த மண்டபம், ஸ்நபந மண்டபம் பாகசாலை இந்த இடங்களில் ஸ்தண்டிலம் அல்லது மண்டலம் அமைத்து அஸ்த்திர மந்திரத்தால் பிரோக்ஷிக்கவும் எனவும், நீராஜநத்திற்க்காக பலி பாத்ரம் போல் அளவான தீபாதார ஸஹித பாத்திரங்கள் தயார் செய்யவும் என கூறி, அந்தபாத்ர லக்ஷணபிரமாணாதிகள் நிரூபிக்கப்படுகிறது. பிறகு நிஷ்கள பிம்பங்களில் விசேஷமாக நடராஜ மூர்த்தி விஷயத்தில், தீபாதாரத்தில் சேர்க்கவேண்டிய திரவ்யம் பிரதிபாதிக்கப்படுகிறது. தீப பாத்ரதேவதாநிரூபணம் தீப பாத்ர சேர்க்கும் திரவ்யபரிமாண நிரூபணம், நீராஜநம் செய்யும் விதம், பிறகு பஸ்மாவால் திலகதாரண விதி கூறப்படுகிறது. பஸ்மாதாந விதி பிரதி பாதிக்கப்படுகிறது. பின்பு ஜ்வாலாஸஹித, ஜ்வாலைரஹித பாத்ரங்களை எடுத்து பீடாக்ரம், விருஷபாக்ரம் கோபுராந்திகம், விருக்ஷமூலங்களிலோ ஸ்தாபிக்கவும் என்று கூறப்படுகிறது நீராஜன உபயுக்த மானதிரவியங்களை குருவிடம் கொடுக்கவும் அல்லது அவரே வஹ்நியில் தஹிக்கவும் என கூறப்படுகிறது. முடிவில் ராஜாபிஷேககாலம், ஆசார்யாபிஷேக காலத்திலும் நீராஜநம் செய்க என கூறிஅந்த நீராஜந விதியில் விசேஷ பிரகாரம் சூசிக்கப்படுகிறது. இவ்வாறு ஏழாம் கருத்து தொகுப்பாகும்.

1. நீராஜனவிதியை கூறுகிறேன். அந்த நீராஜனம் ராத்திரி வேளையில் செய்ய விதிக்கப்படுகிறது. பிரதோஷம் முதலிய காலங்களிலோ, தூப, தீப முடிவு சமயத்திலோ,

2. உத்ஸவாதி காலங்கள் மற்ற மங்கள கார்யங்களிலோ நீராஜனம் செய்தல் வேண்டும். அதற்காக ஸ்தண்டிலம் அல்லது மண்டலம் அமைக்கவேண்டும்.

3. கர்பகிரஹம் அர்த்த மண்டபம், ஸ்நபன மண்டபம் அதன் முன் மண்டபத்திலோ, மடப்பள்ளி மற்ற இடங்களிலும், அஸ்த்ர மந்திரத்தினால் புரோக்ஷணம் செய்து

4. சுத்தமாக தீபத்திற்கு ஆதாரமாக உள்ள பாத்ரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பலிபாத்ர லக்ஷணப்படி பாத்திரங்களை எடுத்து கொள்ள வேண்டும்.

5.  ஒரு மாத்திரை அளவில் பாத்திர மத்தியில் தீப ஆதாரம் கல்பிக்க வேண்டும். கால் அங்குலம் அதிகரிப்பால் ஒன்பது அங்குலம் முடிய வேண்டும்

6. விஸ்தாரமாகும், விஸ்தார ஸமமாகவோ, அதன் பாதி அளவாகவோ உயரமாகும். எட்டாக பிரிக்கப்பட்ட மத்யம பாகத்தில் ஒன்பது விதமான அளவாகும்.

7. இரண்டு யவை அளவிலிருந்து அரையவை யளவு அதிகரிப்பால் மாத்ராங்குலம் வரை பாத்ர விளிம்பின் அளவாகும். பாத்ர அளவிற்கு தகுந்த கனமும், அரை பாக மாத்ரையளவு ஓட்டையுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

8. தாமரைப்போல் உருவமாகவும், பாலிகை பாதம் போலும் கருவூமத்தை பூபோலவோ, சராவம் போல் (மடக்கு) உருவமாகவோ அமைக்கலாம்.

9. நான்கு, எட்டு, இதழுடன், கூடியதாகவும், ஸர்வாலங்காரத்துடன் கூடியதாக ஒரே பாத்திரத்தில் ஒரு தீபாதாரம், ஐந்து தீபாதாரமாகவோ

10. ஒன்பது தீபாதாரமாகவோ செய்ய வேண்டும். அவைகள் இடைவெளியுடன் சேர்ந்ததாக வேண்டும் மாவினாலோ அன்னத்தினா<லுமோ தேவனுக்காக தீபாதாரங்களை அமைக்க வேண்டும்.

11. விசேஷமாக நடராஜருக்கும், மற்ற பிம்பங்களுக்கும் தேவிக்கும் நீராஞ்ஜனம் செய்யலாம். ஓரிடத்தில் எள் மற்றும் கடுகு, உப்பு இவைகளையும்

12. பருத்தி விதையும், கோமயம், மா வேண்டும், பல வர்ணமுள்ள அன்னங்களுடன் ஆல், அரசு இவைகளையும்

13. கிழக்கு முதலிய திக்குகளிலும், அக்னி முதலிய திக்குகளி<லும் வரிசையாக ஸ்தாபிக்க வேண்டும், நடுவில் ஒரு தீபபாத்திரமோ ஐந்து தீபபாத்திரமோ ஸ்தாபிக்க வேண்டும்.

14. சந்தனம், அர்க்யம், புஷ்பம், விபூதி முதலியவைகளை ஆக்னேயாதி விதிக்குகளில் ஸ்தாபிக்க, எல்லா இடத்திலும் ஒன்பது எண்ணிக்கையுடைய ஜ்வாலை உடைய தீபங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

15. அந்த தீபங்களை நெய்யுடனோ, எண்ணையுடனோ கூடி பிரம்ம மந்திர, அங்க மந்திரத்துடன் பிரம்மாவின் மந்திரங்களை நியாஸம் செய்து திக்பாலகர்களையோ மூர்த்தி, மூர்த்தீஸ்வரர்களையோ அர்ச்சிக்க வேண்டும்.

16. அக்னி தேவருடன் எட்டு வஸுக்கள், வாமை முதலிய சக்திகள், ஐந்துகலை, ஐந்து பூதங்கள், அதன் காரணேஸ்வரர்களான பிரும்மாதி தேவர்கள் ஆகியோர்

17. பாத்ராதிதேவர்கள் என கூறப்பட்டுள்ளார்கள். தீபதேவதை அக்னியாகும். கால் ஆழாக்கு முதல் ஆழாக்கு விருத்தியாக (அதிகமாக) மரக்கால் ( குறுணி) அளவுவரை

18. எள்ளின் அளவாகும். கர்த்தாவின் விருப்பத்திற்கிணங்க பாத்ரங்களின் அளவாகும். பொதுவான நிரீக்ஷணம் முதலிய ஸம்ஸ்காரங்களை செய்து முறைப்படி துதித்து

19. ரம் என்ற வன்னி பீஜத்தை ஸ்மரித்து, தீபத்தை தீபத்தினால் யோஜிக்க வேண்டும் (தீபமேற்றவும்) ஸர்வ வாத்யத்துடனும், சங்ககோஷத்துடனும்

20. பாட்டு, நிருத்தத்துடன் கூடி ஸ்த்ரீகளையோ பரிசாரகர்களையோ எடுத்துக்கொண்டு வரச் சொல்லி,

21. இறைவனுக்கு தீபத்தை முக்காலியின் மேல் ஸ்தாபித்து பூஜிக்கவும். ஸத்யோஜாத மந்திரத்தால் பாத்யம் ஹ்ருதயமந்திரத்தால் ஆசமனம்

22. ஸ்வபீஜத்தால் எல்லா தீபங்களை கந்தாதிகளால் அர்ச்சித்து ஹ்ருதய மந்திரத்தால், ஏக வாரமோ, மூன்று தடவையோ இறைவன் தலைக்கு நேராகச் சுற்ற வேண்டும்.

23. ஹஸ்தங்களால் திரவ்யங்களை எடுத்து அந்த தீபபாத்ரங்களை பூஜிக்க வேண்டும். ஆத்மதத்வாதி மந்திரங்களால் சிஷ்யகரத்தில் தீபத்தை கொடுக்க வேண்டும்.

24. சிஷ்யனும் தீபத்தை கிரஹித்து வணக்கத்துடன் கூடியதாக நுழையவும். பிறகு சுத்தமானதும், வெண்மையானதும், நல்லவாஸனையானதும் மணலில்லாததுமான

25. விபூதியை கையினால் எடுத்து சிவனுக்கு எதிரில், மூன்று முறை சுற்றி பிறகு தீபமத்தியில் சேர்க்க வேண்டும்.

26. அங்குஷ்ட (கட்டைவிரல்) அநாமிகை (மோதிரவிரல்) விரலால் விபூதியை பஞ்ச வக்த்ர, நெற்றி, ஹ்ருதயம், கைகள் இவைகளில் வரிசையாக திலக மிட வேண்டும்

27. தேவிக்காக பீடத்திலும், இடது பாகத்திலும் திலகமிடவும் தேவீ உருவ அமைப்போடிருந்தால் தேவீ முன் பாகம் நெற்றியில் திலகம் இட வேண்டும்.

28. கழுத்து பாகத்தில் மூலமந்திரத்தினாலோ ஹ்ருதய மந்திரத்தினாலோ திலகமிட வேண்டும். உற்சவ பிம்பத்தில் நெற்றி ஹ்ருதயம், கை பிரதேசத்தில் திலகமிட வேண்டும்.

29. அந்த விபூதியை எடுத்து கொஞ்சமாக சண்டேச்வராதிகளிடத்திலு<ம் பக்தர்களிடத்திலும் உலோக பிம்பத்திலும் திலகமிட வேண்டும்.

30. பிறகு பக்த ஜனங்களுக்கும் விபூதி கொடுக்க வேண்டும். ஸர்வாலங்காரயுதமாக தேசிகர்கள் முன்போல் பாத்திரங்களை எடுத்து

31. ஜ்வாலையோடோ, ஜ்வாலையில்லாமலோ, சிவாலயத்திலிருந்து எடுத்து பீடமுன்பாகவோ, விருஷபத்தின் முன்பாகவோ கோபுர சமீபத்திலோ

32. மற்ற விருஷ மூலத்திலோ அந்தி தீபங்களை முறையாக வைக்க வேண்டும். காற்றாலும், நெருப்பாலும், தீபங்களை தஹிக்க வேண்டும். திரவ்யங்களை குருவிற்கு அர்ப்பணிக்க வேண்டும்.

33. எள்ளு முதலிய திரவ்யங்களின் அளவு விருப்பப்படி இருக்கலாம். யதேஷ்டமாக ராஜாக்களுக்கும், நீராஜனம் செய்யலாம். அதற்கு தேவதை அக்னி.

34. ராஜாபிஷேக காலம், ராஜவெற்றிக்கும், தேசிகாபிஷேக (ஆசார்ய அபிஷேகம்) காலத்திலும் பகலில் தீப பூஜையின்றியும்

35. தண்டுலங்களால் செய்க, ராத்ரியில் தீபத்துடன் கூடியதாக நீராஜந விதி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் நீராஜனம் செய்யும் முறையாகிற ஏழாவது படலமாகும்.

படலம் 6/5...

படலம் 6/5 : மஹோத்ஸவ விதி

401. மாஸோத்ஸவம் இரண்டு வந்தால் இவ்விதமே செய்ய வேண்டும். ஒருநாள் உத்ஸவத்தை போல் மாஸோத்ஸவம் செய்ய வேண்டும்.

402. ஒரே மாதத்தில் ஒன்றோ பலவோ உத்ஸவம் வந்தால் அங்குரார்பண பூர்வாங்கமாகவோ அல்லது இல்லாமலோ செய்யலாம்.

403. ஒருநாள் உத்ஸவம் பேரீ அடித்தல் முன்னதாக செய்ய வேண்டும். இரண்டு ஸ்தண்டிலங்கள் செய்து சூலத்தை ஒன்றில் வைக்க வேண்டும்.

404. அதன் முன்பு பேரியை வைத்து பிறகு புண்யாஹம் செய்ய வேண்டும். அஸ்த்ர தேவரையும் பேரியையும் பூஜித்து பேரியை அடிக்க வேண்டும்.

405. பிறகு பிரதிஸரம் (காப்பு) தெய்வத்திற்கும் சூலத்திற்கும் முறைப்படி கட்டி பிரகார பிரதட்சிணம் செய்து யாகசாலையில் நுழைந்து

406. ஸ்தண்டிலத்தில் சூலத்தை ஸ்தாபனம் செய்து வேதிகைக்கு மேலே மங்கள கரமான ஸ்தண்டிலத்தில் வர்த்தனீ ஸஹிதமாக சிவகும்பத்தை ஆசார்யன் வைக்க வேண்டும்.

407. சுற்றிலும் எட்டு கலசங்களையோ கடங்களையோ வைக்க வேண்டும். புண்யாகவாசனம் செய்து அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

408. தங்க பத்மம் முதலியவைகளை இட்டு வஸ்த்ரம் யக்ஞஸூத்ரம் கூர்ச்சம் இவைகளோடு கூடியதாக இரண்டிற்கும் அளித்து

409. கும்பங்களில் மாவிலை பழம், இவைகளை சேர்த்து நடுவில் கும்பத்தில் சிவனையும், வர்த்தனியில் மனோன்மணியையும், அஷ்டவித்யேஸ்வரர்களை கலசங்களிலும் பூஜை செய்ய வேண்டும்.

410. திவாரங்களை பூஜை செய்து நந்தி முதலிய திவார பாலகர்களை ஸ்தலத்திலுள்ள கலசங்களிலும் பூஜை செய்ய வேண்டும். தோரணங்கள் அஷ்டமங்களங்கள் இவைகளை பூஜை செய்ய வேண்டும்.

411. தசாயுதங்களையும் மற்றும் அஷ்டமங்களம் போன்றவையும் வைத்து பூஜை செய்யலாம். இல்லாமலும் செய்யலாம். குண்டத்திலோ ஸ்தண்டிலத்திலோ ஹோமம் செய்ய வேண்டும்.

412. ஐந்து அல்லது ஓர் குண்டத்தில் முன் சொன்ன பொருள்களைக் கொண்டே ஹோமம் செய்ய வேண்டும். பிறகு கிராமபலி செய்ய வேண்டும். பலி பிம்பத்தோடு கூடவோ அல்லது இல்லாமலும் செய்யலாம்.

413. இவ்விதம் இரவில் செய்ய வேண்டும். காலையில் யாகேஸ்வரரை பூஜிக்க வேண்டும். விக்ரஹத்தோடு கூட ஹோமம் பலி இரண்டும் முடிந்தவுடன்

414. ஆசார்யன் ஆலயம் சென்று அங்கு சூர்ணோத்ஸவம் செய்ய வேண்டும். பிறகு தீர்த்தோத்ஸவம் இங்கு சொல்லப்படவில்லையெனில் முன்பு போலவே செய்ய வேண்டும்.

415. பேரீதாடனம் இல்லாமல் அனைத்தையும் காலையிலும் செய்யலாம். உடனே அதிவாஸம் செய்து முன்புபோல் அனைத்தையும் செய்யவேண்டும்.

416. சூர்ணோத்ஸவம் இல்லாமலும் இந்த உத்ஸவம் செய்யலாம். அதன் முறை இங்கு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் பலிதானம் திருவீதியு லாவையும் செய்யவும். தீர்த்தம் இல்லாமல் உற்சவம் செய்யலாம்.

417. வீதிவலம் பிற்பகலிலோ மாலையிலோ செய்யலாம். தீர்த்தவாரி இருந்தால் ஸ்வாமி வீதி வலம் வருதலும் பலிகாலத்தில் வேறு பிம்பம் வைத்து

418. வலம் வருதலோ செய்யலாம். வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. பலி ஹோமம் முதலியவைகளை செய்யாமல் வலம் வருதலையோ மட்டும் கூட செய்யலாம். தெய்வத்திற்கு ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டுமென தினங்களின் உத்ஸவத்திலும் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

419. கர்த்தாவின் விருப்ப நாட்களிலும் அதற்கு உரிய நாளிலோ மேற்கூறியபடி செய்யலாம். கர்த்தாவின் ஜன்ம நக்ஷத்திரத்திலோ அல்லது மரண நாளில் அல்லது மாதாந்திர திருவாதிரை நக்ஷத்திரத்திலோ

420. சதுர்தசி, அஷ்டமி, பவுர்ணமி அல்லது அமாவாசை உத்தராயண தட்சிணாயனம் விஷுவ புண்யகாலம், கிரஹணங்கள் தமனோத்ஸவம் என்ற மரிக்கொழுந்து சாற்றுதலிலும்.

421. பவித்ரோத்ஸவம், கார்த்திகை தீபம் மற்றும் வருடசிறப்பு தினங்கள் புதிய தண்ணீர் வருதல்

422. பூரம் நக்ஷத்திரம், நவ நைவேத்ய கர்மாவிலும் மற்ற மங்கள கார்யங்களிலும் ஒருநாள் உத்ஸவம் செய்யலாம்.

423. இவ்விதம் ஒவ்வொரு வருடமும் போகத்திற்கும் அல்லது மோக்ஷத்திற்காகவும் செய்ய வேண்டும். ஞாயிறு முதல் வார பூஜையும் முறைப்படி செய்ய வேண்டும்.

424. பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் மற்றும் ஸ்நபனங்களால் இறைவனை அபிஷேகம் செய்ய வேண்டும். நிறைய சந்தனம் புஷ்பம் முதலியவைகளால் இறைவனை பூஜை செய்ய வேண்டும்.

425. (ரோஜா) தலாரவிந்தம், நாயுருவி, தாமரை துளசி, பில்வ பத்ரம், விஷ்ணுகிராந்தி இவைகள் முறையாக

426. ஞாயிற்றுகிழமை முதலான கிழமைகளில் மேல் கூறிய பத்ரங்களால் பூஜிக்கலாம். ஞாயிற்றுக் கிழமை மாணிக்கமும் திங்கள் முத்துவும்

427. பவழம் செவ்வாய் கிழமையிலும், புதன் கிழமையில் மரகதமும் வியாழக்கிழமை புஷ்பராகமும் வெள்ளிக்கிழமை வஜ்ரமுமாகும்.

428. சனிக்கிழமை இந்த்ர நீலமும், சாத்தலாம். மற்ற எல்லா ரத்னங்களும் எப்பொழுதும் சாத்தலாம் இந்த முறைப்படி சாத்துவது சிறந்தது

429. அந்தந்த நிறமுடைய புஷ்பம் வஸ்திரம் இவைகளை சாத்த வேண்டும்.

430. அந்தந்த நிறமுடைய நைவேத்யம் அந்தந்த வாரத்திற்கு உட்பட்டு நிவேதனம் செய்ய வேண்டும். வாரபூஜையின் முடிவில் வாரோத்ஸவம் செய்ய வேண்டும்.

431. வேண்டியதை அடைய ஞாயிற்றுகிழமை உத்ஸவத்தை மட்டுமோ நடத்தலாம். ஞாயிறு உத்ஸவம் கிருஹணங்களின் பீடை நீங்கவும் சிறப்பாக ஆரோக்யம் பெறவும் ஆகும்.

432. உலக நன்மைக்காகவும் எந்த கிரஹத்தால் துன்பமேற்பட்டுள்ளதோ அந்த கிருஹ வாரத்தில் பூஜை செய்ய வேண்டும். அந்த வார உத்ஸவத்துடன் சேர்த்து செய்ய வேண்டும்.

433. அந்தந்த கிழமைக்கு தக்கவாறு சந்தனம் முதலிய திரவ்யங்களை சேகரிப்பது, செய்தும் செய்யாமலும் இருக்கலாம். ஸம்வத்ஸர உத்ஸவம் கூறி மாஸோத்ஸவத்திலும் அவ்வாறே அனுஷ்டிக்கவும் என்றும்

434. வாரோத்ஸவத்திலும் சிறப்பு சொல்லப்படுகிறது. முற்பகல் பிராமணர்களுக்கும் நடுப்பகல் க்ஷத்ரியர்களுக்கும்

435. மாலை வைச்யர்களுக்கும் மற்றவர்களுக்கும் நடு இரவிலும் கொடி ஏற்றப்பட வேண்டும். கொடியேற்றம் முதலாகவோ

436. பேரீ அடித்தல் முதலாகவோ பாலிகை தெளித்தல் முதலாகவோ பிராம்மணர் முதலான வர்ணத்தவர்களுக்கு செய்யலாம். மற்றவர்களுக்கு பாலிகை தெளித்தல்தான் முதலாவதாக செய்ய வேண்டும்.

437. நகரத்தில் த்வஜம் முன்னதாகவும் மங்கள கார்யங்களில் பேரீதாடனம் முன்னதாகவும் பெரிய நகரங்களில் அங்குரம் முன்னதாகவும் செய்யலாம். அது போல் நான்காவது நிலையில் உள்ளவர்களுக்கும் உண்டு.

438. நான்காயிரம் அந்தணர்களுக்கு மேல் இருக்கும் கிராமத்தில் மற்றும் நகரங்களிலும் உத்ஸவங்களுக்கு கலப்பு தோஷம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

439. ஏழு ஆறு, ஐந்து அல்லது நான்கு முழத்தில் த்வஜதண்ட வேதிகை கட்டவேண்டும். முதல் மூன்று வர்ணத்தவர் தவிர மற்றவர்களுக்கு இது மாறுதலாக அமையும்.

440. ஒரு த்வஜத்தில் மற்றொரு த்வஜத்தை செய்யக் கூடாது. விருஷபத்வஜருக்கு செய்யலாம். ஒரு உத்ஸவத்தில் மற்றொரு உத்ஸவம் செய்யக்கூடாது. சைவோத்ஸவம் சிறந்தது.

441. எல்லோரும் பொருத்தமான நக்ஷத்திரத்தில் த்வஜாரம்பம் செய்வது சிறந்தது. கொடிக்கு வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மூன்றும் அந்தணர் முதலான வர்ணத்தவர்களுக்கும் பொருந்தும்.

442. நான்காவது வர்ணத்தவர்க்கு மஞ்சள் நிறம் எல்லோர்க்கும் வெண்மை நிறத்தை பொதுவாக வைத்துக் கொள்ளலாம். கொடி ஆரம்பத்தில் விருஷபத்தலையும் வால் அடிப்பகுதியிலும் இருக்க வேண்டும்.

443. த்வஜ பிரதட்சிண காலத்தில் ஆசார்யன் முன்னால் சென்றாலும் செல்லலாம். கிழக்கில் காந்தாரம் தெற்கில் கவுசிகம்.

444. மேற்கில் காமரம், வடக்கில் தர்கராகம், இவ்விதம் ஸ்வரங்கள் சொல்லப்பட்டன.

445. த்வஜாரோஹண காலத்தில் நான்கு ராகமோ ஓர் ராகமோ வாஸித்து த்வஜாரோஹம் முதல் தீர்த்தம் வரையில் இரவில் கிராமபலி போட வேண்டும்.

446. அல்லது வேறு இடத்தில் உத்ஸவம் நடக்கும் போதும் நித்யோத்ஸவமுள்ள இடத்திலும் தேவர்களின் பலி த்வஜத்தின் அடியிலேயே கொடுக்கப்படவேண்டும்.

447. பிராம்மணர் முதலிய பேதங்களில் வடக்கிலிருந்து குண்டமேற்படுத்தி பிரதட்சிண முறையாகவும் ஒரே அக்னி குண்டபூஜையும் செய்யலாம்.

448. நன்கு புசித்த சண்டரூபம் தரித்த பிரம்மசாரி தன்னை சண்டன் போல் தியானித்து த்வஜ தண்டத்தை சேதனம் செய்தாலும் செய்யலாம்.

449. உத்ஸவம் அல்லது பவித்ரம் உத்ஸவம் அல்லது இரண்டையும் செய்யலாம். ஒன்பதாவது நாளில் கொடிக்காக அங்குரார்ப்பணம் செய்து ஏழாவது நாளில் உத்ஸவத்திற்காக அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும்.

450. தீர்த்தாங்குரம், அதே எண்ணிக்கையில் உடைய நாட்களில் செய்யவும் என்ற இந்த முறை எங்கும் எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கலாம் நடுப்பகலில் த்வஜ பூஜையையும் ஸோம கும்பத்தில் ஜலத்தை

451. வைத்து பூஜையையும் அந்த கும்ப பூஜை ராத்திரியில் செய்ய வேண்டும். ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட சுவாமியை கிராமத்திலிருந்து வெளியே எடுத்து செல்லுதலும்

452. வேட்டையாடும் உத்ஸவம் விருப்பப்பட்ட காலத்திலும் செய்ய வேண்டும். காமிகாகமத்தில் வருடமானது சவுரம், சாந்தரம் என்பதாக இருகூறாக வகுக்கப்பட்டுள்ளது.

453. சவுரமானம் உயர்ந்ததாகும். சாந்தரமானப்படி செய்வது நடுநிலையாகும். சாவனம் என்ற வருஷக் கணக்கு முறையானது அதமமாகும். ஸாவனமானத்தால் பூஜைகள் செய்யக்கூடாது.

454. உத்ஸவம் முதலிய காலங்களில் பிரதிஷ்டை முதலியவைகளை செய்யக்கூடாது. சாந்தி, ஹோமம் முதலியன செய்து பிரதிஷ்டை முதலியவைகள் வேண்டுமானால் செய்யலாம்.

455. அல்லது மற்றொரு முறையால் உத்ஸவம் சொல்லப்படுகிறது. த்வஜா ரோஹண பூர்வமாக ஒரு கொடியை ஏற்றி

456. கொடியேற்றிய அதே தினத்தில் சூரியன் மறைந்தபொழுது யானை முதலியவைகளில் ஏறப்பட்டவனால் தீர்த்த தினத்தை அறிவிக்கப்படவேண்டும்.

457. மனைவியோடு கூடி யானையின் மேல் ஏறிய சண்டாளன் பேரி முரசை அடித்துக்கொண்டு மிகவும் சப்தமாக கொடியேறிய தினத்திலேயே இரவிலேயே அறிவிப்பை செய்ய வேண்டும்.

458. அஸ்திர தேவரிடத்தின் முன்பாக முன்பு கூறப்பட்டபடி தேவதைகளை ஆவாஹித்து கிராம பலியின்றி தீர்த்த நாளை தெரிவித்து

459. ஆலயத்திலே இதைத் தெரிவித்து அவ்விடமிருந்து நீர் நிலையை அடைந்து அங்கு இரண்டு ஸ்தண்டிலத்தை அமைக்க வேண்டும்.

460. ஒரு இடத்தில் சூலம் மற்றொரு இடத்தில் கலசங்களை வைக்க வேண்டும். ஒன்பது கலசங்களால் சூலத்தை அபிஷேகம் செய்து அந்த சூலத்தை மூழ்க வைக்க வேண்டும்.

461. திருக்கோயிலை அடைந்து அந்த நாளிலிருந்து பத்தாவது நாளிலோ, அங்குரார்பண பூர்வமாக யாகாரம்பம் மறுபடியும் செய்யவேண்டும்.

462. ஒரு ஹோமத்தோடு கூடியதாக கிராமபலி முதலியவைகளை போடவேண்டும். தினமும் காலையில், மாலையிலும் ஸ்வாமி திருவீதியுலா இருக்க வேண்டும்.

463. ஐந்தாவது நாளில் அஸ்தர மந்திரத்தால் அபிமந்த்ரணம் செய்யப்பட்ட மணலை உள்ளும், வெளியேயும் எங்கும் இரைத்தல் வேண்டும்.

464. பதினெட்டாவது தினத்தில் அங்குரார்பணம் செய்யவேண்டும். தீர்த்தத்திற்காக பதினெட்டாவது தினத்தின் இரவில் ஆலயத்தின் எட்டு திசைகளிலும்

465. திக்பாலகர்களுடைய வாகனங்களால் அடையாளம் செய்யப்பட்ட அல்லது அவர்களின் ஆயுதத்தால் அடையாளமிடப்பட்ட அல்லது விருஷபத்தை அடையாளமாக உடைய எட்டுக் கொடிகளை ஆசார்யன் ரித்விக்குகளோடு கூடியவனாய் ஏற்றவேண்டும்.

466. அது முதற்கொண்டு ஹோமம் சிறப்பாக செய்யவேண்டும். அதன் முடிவில் பலிதானமும் திருவீதி உலாவும் செய்யவேண்டும்.

467. இவ்விதம் ஒன்பது நாட்கள் செய்து பத்தாவது நாளில் தீர்த்தம் ஆகும். எட்டு கொடிகளையும் அன்று இரவே அவரோஹனம் செய்து

468. அன்றையிலிருந்து பல வாத்யங்களோடும் பல இசைகளோடும் பல ஆடல்களோடும்,

469. முறைப்படி கிராம பிரதட்சிணம் செய்ய வேண்டும். ஏழாவது நாள் இப்படி செய்து பிறகு தீர்த்தக்கரையை அடைந்து

470. ஜல தீரத்தில் இரண்டு ஸ்தண்டிலங்களை வைக்கவேண்டும். ஒன்றில் சூலத்தையும் மற்றொன்றில் கலசங்களையும் ஸ்தாபனம் செய்யவேண்டும்.

471. ஒன்பது கலசங்களால் சூலத்தை அபிஷேகம் செய்து அந்த சூலத்தை ஜலத்தில் முழுக வைக்கவேண்டும். எல்லா வாத்யங்களுமின்றி ஆலயத்தில் நுழைந்து

472. ஏழுநாட்களுக்கு பிறகு மவுனமாகச் சென்று சண்டிகேஸ்வரரை முன்னிட்டுக் கொண்டு தெய்வ பிம்பங்களோடு சென்று

473. பலி ஹோமம் இல்லாமல் ஏழுநாள் பூஜை செய்ய வேண்டும். ஸ்நபனம் ஹோமம், இவைகளோடு ஏழுநாள் இருக்கவேண்டும்.

474. அதன் முடிவில் திரிசூலத்தோடு தீர்த்தம் கொடுக்கவேண்டும். அன்று இரவில் முன் சொன்ன முறையில் கொடி இறக்குதல் செய்யவேண்டும்.

475. வீதி உலா இல்லாவிட்டாலும் இவ்விதம் விதியை செய்யவேண்டும். புதிய அன்னலிங்கம் செய்தாவது திக்பாலகர்கள், அவர்கள் அஸ்திர தேவதைகளை

476. அந்த திரிசூலத்தினாலோ பலியை கிராமங்களில் செய்யலாம். நித்யோத்ஸவத்தில் அன்னலிங்கம் முதலியவைகளை பத்து எண்ணிக்கைகளாகவோ செய்ய வேண்டும்.

477. பன்னிரண்டு ஆண்டுகளின் முடிவில் த்வஜ ஸ்தாபனம் செய்யலாம். தேய்மானம் மலினமடைந்தால் அதை எடுத்து வேறு புதிய கொடிக் கம்பத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தர காமிக மஹாதந்த்ரத்தில் மஹோத்ஸவ விதியாகிற ஆறாவது படலமாகும்.

 படலம் 6/5 : தொடரும்...

படலம் 6/4...

படலம் 6: மஹோத்ஸவ விதி

301. எல்லா வாத்யங்களோடும் ஆலய பிரதட்சிணம் செய்து வர வேண்டும்.

302. ஸ்தண்டிலத்தின் மேல் வைத்து புண்யாக வாசனம் செய்ய வேண்டும். அர்க்ய ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து சிவமந்திரத்தால் அபிமந்திரிக்க வேண்டும்.

303. சந்தனம் முதலியவைகளால் அர்ச்சித்து கவசமந்திரத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும். சமித், நெய், ஹவிஸ் எள், பொறி, வெல்லம் இவைகளினாலோ

304. மூலமந்திரத்தால் நூறு ஆஹுதிகள் செய்தோ அஸ்த்ர ஹோமமோ செய்ய வேண்டும். ஐந்து அக்னியோடு கூடிய ஹோமம் எல்லாவற்றிற்கும் நன்மை பயக்கூடிய ஹோமம் ஆகும்.

305. பிராயச்சித்தம் அகோரமந்திரத்தால் செய்து பூர்ணாஹுதியோடு கூட ஸத்யஜாத மந்திரத்தால் ஸ்பர்சித்து சந்தனம் இவைகளை மூலமந்திரத்தால் கொடுக்க வேண்டும்.

306. கன்றுடன் கூடிய பசு, தங்கம், வெங்கல பாத்திரம், நல்ல வஸ்திரம் எள், நெய், அல்லது மற்றவையோ ஆசார்யன் திருப்திக்காக கொடுக்க வேண்டும்.

307. ஜலத்தானத்துடன் கூடியதாக யாத்ரா தானம் செய்ய வேண்டும். மஞ்சள் உப்பு, எள், கடுகு, இவைகளும்

308. தானம் செய்பவனுக்கு நன்மை தரக்கூடிய தாம்பூலம், அரிசி, சந்தனம், நெய், எள், எண்ணை, இவைகள் சிவதானம் என்று சொல்லப்படும்.

309. யோகிகள், தியானம், செய்பவர்கள், சிவஞானம், அறிந்தவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு அந்த பூஜை தானம் எல்லா உயிரினங்களுக்கும் நன்மை பயப்பது ஆகும்.

310. சிறப்பு நாட்களில் தலைப்பாகை வஸ்திரம் முதலியவைகளை ஆசார்யனுக்கு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தானத்தையும் ஜலத்தோடு சேர்ந்ததாக கொடுக்கப்படவேண்டும்.

311. சிறந்த அறிஞனான ஆசார்யனுக்கு உஷ்ணீஷம் முதலியவைகளை கொடுக்க வேண்டும். ஆசார்யனே சிவனாக ஆவான். ஆகையால் ஆசார்யனுக்கு சிவனுக்கும் வேறுபாடு இல்லை.

312. எவன் இவர்கள் இருவருக்கும் பேதத்தை பார்க்கிறானோ அவன் தாழ்வை அடைவான். எல்லா ஆகமங்களை அறிந்தவனும் அமைதியானவனும் சிவலிங்க வழிபாட்டில் ஈடுபட்டவனும்

313. நித்ய ஹோமத்தோடு கூடியவரும் சிவ பூஜைக்கு நிவேதனம் தயார் செய்பவனும் கிருஹபலி முதலியவைகளை செய்பவரும் பிøக்ஷ அளிப்பவரும் நிந்தனையில்லாதவருமான ஆசார்யனை சிவனாகவே அறிய வேண்டும்.

314. அதிகம் கூறுவானேன்? எங்கு எப்பொழுது இப்பேர்ப்பட்ட ஆசார்யன் திருப்தி அடைந்தவனாக ஆகிறானோ அப்பொழுது பொருள் அளித்தவனுக்கு அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித பெரும் பயனடையும் தன்மை ஏற்படுகிறது.

315. இது உண்மை, உண்மை திருப்பியும் உண்மை என மூன்று முறையாக உண்மை என்று நிச்சயிக்கிறேன். அவரின் பொருளை அபஹரிப்பவன் மூவுல கிலும் திருடன் எனப்படுவான்.

316. தேவனின் சொத்தை அபஹரிப்பதைக் காட்டிலும் ஆசார்யனுக்கு தரவேண்டியதை கொடுக்காமலிருந்தால் நூறு கல்பகோடி காலமானாலும் அந்த பாபத்திலிருந்து மீள முடியாது. ஆகையால் பாபத்தை அறிந்து

317. அவரால் சிரத்தையுடன் கொடுக்கப்பட்ட பொருள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவன் பாபத்திலிருந்து மீண்டு விடுகிறான் என்ற சொல் கேட்டிருப்பதால் தானம் கிரஹிக்கத் தக்கது. இவ்வாறு யாத்ராதானம் செய்து நைவேத்யங்கள் நிவேதனம் செய்ய வேண்டும்.

318. யாத்ராதானம் சிவலிங்க பிரதிஷ்டை முதலியவைகளில் முதலிலும் முடிவிலும் முக்யம் ஆகும். மற்ற இடங்களில் அரசனின் வெற்றிக்காக செய்யத் தகுந்தது.

319. கிரஹணம் முதலிய காலங்களில் இது மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா அலங்காரத்தோடு கூடியதாகவும் முரவ வாத்யத்தோடு கூடியதாகவும்

320. சிவாச்சாரியார்களோடு கூடியவராகவும் பல்லக்கில் ஆரோஹணம் செய்வித்து ஐந்து பிரகாரங்களிலோ அல்லது அதற்கு வெளியிலோ பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

321. எல்லா மங்களங்களோடு கூடியும் அரச வேஷம் தரித்த காவலர்களோடும் பலவகையான ஆடல் பாடல்களோடு கூடியதாகவும்

322. பல்லக்கில் ஏறியவர்களாலும் ஸாமர்த்யமுள்ளவர்களாலும், முன்னும் பின்னும் தொடர்ந்து செல்பவர்களாலும், புஷ்பங்களால், சந்தன நீர்களால் சேவித்து வருபவர்களாலும் ஸ்வாமி வீதிவலம் வருதல் வேண்டும்.

323. அரச வேஷம் தரித்த தன்மையுள்ளவனோடும் முரவ வாத்யம் இல்லாமல் பிறகு ஆலயத்தின் உள்ளே சென்று முன் சொன்னபடி தேவனை ஸ்தாபனம் செய்யவேண்டும்.

324. ரக்ஷõ சூத்திரத்தை அவிழ்த்து விட்டு சந்தனம், புஷ்பங்களால் பூஜிக்க வேண்டும். அதன் முடிவில் சுவாமி ஊர்வலமோ அல்லது அதற்கு முன்பு ஊர்வலமோ செய்யலாம்.

325. இரவின் முடிவில் தேவதேவனை நடேச்வரனை தேரில் ஏற்றி முன்பு சொன்ன முறையில் கிராமாதி பிரதட்சிணமும் செய்விக்க வேண்டும்.

326. முடிவில் மறுபடியும் ஸ்னபனம் செய்ய வேண்டும். மற்ற பிம்பங்களுக்கும் சமான முறை இதேதான்.

327. தீர்த்த நடுவில் முதல் நாள் அல்லது அதற்கு முதல்நாளோ யுத்தாரம்பம் முதல் வேட்டையாடுதல் முடிய

328. மற்ற திருநாட்களுக்கான உற்சவ விக்ரகத்தினால் மறுபடியும் செய்ய வேண்டும். சிறப்பாக ஸ்நபனம் முன் சொன்னபடி மறுபடியும் செய்ய வேண்டும்.

329. அந்த இரவில் தீர்த்தத்திற்காக முன் சொன்ன முறையில் அங்குரார்ப்பணம் செய்ய வேண்டும். தீர்த்த உத்ஸவத்திற்காக இரவில் ஒன்பது கலசங்களை

330. சூத்ரத்தோடும் கூர்ச்சம், மாவிலை, தேங்காய் வஸ்திரம், மற்றும் வஸ்திரமில்லாமலோ கலசங்களையும் பிரதானத்திற்கு மட்டும் வஸ்திரத்துடனோ வைக்க வேண்டும்.

331. இரவில் தீர்த்தம் அல்லது ஸ்நான சமயத்திலோ காலையில் உதயத்திற்கு முன்போ தீர்த்த கார்யம் செய்யவேண்டும்.

332. தீர்த்த ஸ்தானத்தை அடைந்து பூமியை சுத்தம் செய்து இரண்டு ஸ்தண்டிலம் செய்து சூலத்திற்கு ஒன்று கலசத்திற்கு ஒன்றாக செய்ய வேண்டும்.

333. மேற்கில் சூலத்தையும் கிழக்கில் கலசங்களையும் வைக்க வேண்டும். புண்யாகம் செய்து முன்போல் தேவர்களை அழைக்க வேண்டும்.

334. திருசூலத்தில் எல்லா தீர்த்தங்களும் எல்லா துர்க்கைகளும் கூடியதாகவும், நடுவில் மனோன்மணியையும் சந்தனம் புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

335. அந்த ஜலத்தால் சூலத்தை அபிஷேகம் செய்து நதியோ அல்லது நீர்நிலைகளில் சென்று கங்கை முதலியவைகளை ஆவாஹணம் செய்து தீர்த்த ஸங்கிரஹணம் செய்யவேண்டும்.

336. ஹே தேவி! கங்கையே! யமுனையே! நர்மதையே! ஸரஸ்வதியே! ஸிந்துவே! கோதாவரியே! காவேரி இந்த நீர் நிலைகளில் (ஆற்றில்)

337. இறைவனுடைய தீர்த்த உற்சவத்திற்கு இங்கு இருந்து அருள்பாலிக்க வேண்டும். சூரியன் மறையும் வரை பாபங்களை போக்க இங்கு இருந்து அருள வேண்டும். என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

338. தீர்த்தம் எடுத்து அதன் நடுவில் கிழக்கு நோக்கிய தலை உடையதாக சிவமந்திரத்தை சொல்லிக் கொண்டு திரிசூலத்தை ஸ்நானம் செய்விக்க வேண்டும்.

339. திரிசூலத்தை ஜலத்திலிருந்து எடுத்து ஜலத்தின் கரையில் வைக்க வேண்டும். தீர்த்த ஸங்க்ரஹணம் செய்து தீர்த்தவாரியை செய்ய வேண்டும்.

340. வெகுதூரத்தில் ஜலமிருப்பினும் தீர்த்தவாரி செய்ய இயலாவிடினும் ஆலயத்திலேயே செய்யவும் எல்லா அலங்காரங்களோடு கூடியதாக ஆலயத்தினுள் நுழைந்து

341. முன் சொன்ன முறையில் ஹோமம் பலிதானம் இவைகள் செய்து தேவ ஆஸ்தான மண்டபத்தில் சூர்ணோத்ஸவம் செய்ய வேண்டும்.

342. இறைவனுக்கு எதிரில் இரண்டு ஸ்தண்டிலம் செய்ய வேண்டும். மேற்க்கில் திரிசூலம், மற்றொரு இடத்தில் உரலை வைக்க வேண்டும்.

343. அதன் நடுவில் மஞ்சளை பொடி செய்வதற்காக வைக்கவேண்டும். வஸ்திரங்களை அணிவித்து வைத்து உரல் நடுவில் மஞ்சள் பொடியையாவது வைக்க வேண்டும்.

344. முதலில் திரிசூலத்தை பூஜை செய்து விட்டு இரவு அதிவாஸம் செய்து உரலில் ஆதார சக்தியை பூஜை செய்ய வேண்டும்.

345. உலக்கையில் ஈசனையும் பூஜை செய்து கிருதசிரோர்பணம் செய்து அருகம்பில், புஷ்பம், நெல், அரிசி, இவைகளோடு

346. இறைவனுக்கு எதிரிலோ அல்லது நேராகவோ சூலமும் (அஸ்திரதேவர்) உரலும் உலக்கையும் இருக்கலாம்.

347. வஸ்திரத்துடனோ அல்லது இல்லாமலோ உலக்கை இருக்கலாம். முதலில் உலக்கையை பூஜை செய்து பிறகு உரலை பூஜை செய்ய வேண்டும்.

348. சிவதத்வம் முதலாகவோ, அல்லது ஆத்ம தத்வம் முதலாகவோ பூஜித்து அருகம்பில்லை ஆசார்யனால் அல்லது அவரால் ஏவப்பட்டவரால் வைக்கப்படவேண்டும்.

349. அரசன் அரிசி, இவர்களாலும் அவர்களால் ஏவப்பட்ட பெரியோர்கள் புரோஹிதர்கள் பக்தர்களாலும் உலக்கையால் இடிக்கப்படவேண்டும்.

350. அரச சன்னதியில் தொண்டு செய்கின்ற பெண்களாலும் எனக்கு பணிவிடை செய்யும் கன்னிகைகளாலும் அல்லது அரசர்களால் ஏவப்பட்ட ருத்திர கன்னிகைகளாலும்

351. தாசிகளாலும் (தொண்டு செய்பவர்களாலும்) பக்தர்களாலும் நேர்மையானவர்களாலும் மற்றும் சுத்தமானவர்களாலும் ஆசார்யன் உத்தரவால் அருஹம்பில் கொடுக்கப்படவேண்டும்.

352. மற்றவிடத்திலும் தெய்வங்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும், ரக்ஷõபந்தனமத்தியிலும் அதன் ஆரம்பத்தில் ஸ்நான காலத்திலும் மங்களத்திற்காக இது செய்யத் தகுந்தது.

353. அதன் முடிவில் மஞ்சளை அஸ்த்ர மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி இடித்து அருகம்பில்லிற்கு சொன்ன முறையிலேயே மஞ்சளை சூர்ணம் செய்ய வேண்டும்.

354. அந்த சூர்ணத்தை சிவமந்திரத்தை நினைத்து அதிலிருந்து எடுத்து பலவிதமான பாத்திரங்களில் லிங்கத்திற்காகவும் பிரதிமைக்காகவும் வைக்க வேண்டும்.

355. உத்ஸவ பிரதிமைக்காகவும், திரிசூலத்திற்காகவும், பரிவாரத்திற்காகவும் ஒருபாகமும், முறையாக பிரிக்க வேண்டும்.

356. மீதமுள்ளதை ஜனங்களுக்காக கலசங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். வாஸனையுடைய தைலத்தை மட்டுமோ தனி பாத்திரங்களில் எடுத்துக் கொள்ளவேண்டும். அந்திரமந்திரத்தால் பிரோக்ஷித்து ஹ்ருதய மந்திரத்தினால் பூஜிக்க வேண்டும்.

357. தேனு முத்திரையில் - அம்ருதீகரணம் செய்து தாம்பூலம் முதலியவைகளை கொடுத்து முன் சொன்ன முறையிலே ராத்திரி சூர்ணத்தையும் கொடுக்க வேண்டும்.

358. சூர்ணோத்ஸவத்தை திரிசூலத்தால் கிராமத்திலோ ஆலயத்திலோ ஆரம்பத்திலும் விரைவாக செய்யக் கூடிய பரிசாரகர்களால் செய்ய வேண்டும்.

359. ஸமுத்ரம் முதலிய அதிகமான ஜலமுள்ள இடங்களில் செய்யும் தீர்த்த உத்ஸவம் மஹாதீர்த்தம் எனப்படும். சிறிய நீர்நிலைகளில் செய்வதை கவுதுக தீர்த்தம் போல் செய்யக் கூடாது.

360. கொட்டகை முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிம்பத்தோடும் கலச ஸ்தாபனத்தோடும் தேவதைகளை அழைப்பதோடும் கூடியதாகவும்

361. தீர்த்த கார்யத்திற்காக விக்ரஹமின்றியும் தீர்த்தவாரி செய்யலாம் ஜலத்தின் நடுவில் இருந்து தீர்த்த ஸங்கிரஹணம் செய்யவில்லை எனில்

362. தீர்த்த ஸங்க்ரஹணம் செய்து மஹா தீர்த்தமாக செய்ய வேண்டும். ரக்ஷõ ஸூத்ர விஸர்ஜனம் செய்து பக்தர்களுடன் கூடி

363. சூலம் பேரம், இவைகளோடு மஹா தீர்த்தம் செய்ய வேண்டும். பல தேவாலயங்களிலிருந்து வந்த திரிசூலங்களோடு கூடவோ

364. திரிசூலங்கள் தேவதைகளோடு கூடியதாகவுமோ செய்யலாம். அல்லது பத்மம், என்ற அஸ்திரங்களோடும் சக்ரம் கூடியதாகவும் செய்யலாம்.

365. மஹாமோடி தேவதையுடன் இருப்பின் ராத்திரியில் தீர்த்தம் அனுஷ்டிக்க வேண்டும். பகலிலும் தீர்த்தோத்ஸவம் செய்யலாம். மாத்யாஹ்னிக கால தீர்த்தோத்ஸவம் உத்தமமாகும்.

366. முற்பகலில் தீர்த்தம், மத்யமமாகும். பிற்பகலில் அதமமாகும். சந்திரகிரஹணத்தின் பொழுது தீர்த்தத்தை ராத்திரியில் செய்யும் தீர்த்தம் உத்தமமாகும்.

367. அது வேண்டும் மோடி தேவதையுடன் இருந்தால் உத்தமோத்தமமாகும். ஸமுத்ரத்தில் திதிபிரதானமாகவும் மற்ற இடங்களில் நக்ஷ்த்ரபிரதானமாகவும் ஆகும்.

368. திதி நக்ஷத்ரம் இரண்டும் சேர்ந்து வருவது அரிதாகும். முற்பகலிலோ பிற்பகலிலோ திதி, நக்ஷத்ரம் சேர்ந்திருப்பதை எடுத்துக்கொள்ளவும்.

369. சமுத்திரம் அல்லது நதிகளில் நடுப்பகலில் தீர்த்தம் கொடுப்பது சிறந்தது. நக்ஷத்ரமோ திதியோ பகலில் எது அதிகம் உள்ளதோ அதுவே ஏற்றுக்கொள்ள தகுந்தது.

370. இரண்டு நாட்களில் நக்ஷத்ரம் திதி இவைகளில் நல்ல சேர்க்கை ஏற்படுமானால் சுபயோகங்களுடன் கூடிய சமயத்தில் செய்யலாம் தீர்த்த நக்ஷத்ரம் ஒரு மாதத்தில் இருமுறை வந்தால் பின்னால் செய்வதும் சிறந்ததாகும்.

371. அங்கும் முன்பு உள்ளதில் யோகம் சேர்ந்திருக்குமேயானால் முன்பு உள்ளதையே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த மாதத்தில் எந்த நக்ஷத்திரத்தில் முன்பு அனுஷ்டிக்கப்பட்டுள்ளதோ

372. அந்த மாசத்தில் அந்த நக்ஷத்திரத்தில் பின்பும் செய்ய வேண்டும். ஸ்வாயம்புவ, தைவிக, ஆர்ஷிக லிங்கம்.

373. மானுஷ லிங்க விஷயத்தில் முன்பு அனுஷ்டித்த தீர்த்த நக்ஷத்திரம், மாத நக்ஷத்ரம் 2 மாதத்தில் ஏற்பட்டால் முன்பு கொடுத்த திதியோ நக்ஷத்திரத்தையோ எடுத்துக் கொள்வது சிறந்தது.

374. ஜலத்திற்கு நடுவில் தீர்த்தத்தை ஆசார்யன் செய்ய வேண்டும். அவகாஹனம் இரண்டாகச் சொல்லப்படுகிறது. பேரத்துடன் கூடியோ (பேரம்) பிம்ப மின்றியோ தீர்த்தவாரி செய்யலாம்.

375. கரையில் தனிமையாக விக்ரஹத்திற்கு ஸ்னபனம் வைத்தும் செய்யலாம். சந்தனம் முதலிய உபசாரங்களால் பூஜை செய்யலாம்.

376. நைவேத்யம் அங்கேயோ அல்லது ஆலயத்திலுமோ கொடுக்கலாம். தீபாராதனைக்கு பிறகு எல்லா மங்களங்களோடும் நந்தவனங்களில் இறைவனை சந்தோஷபடுத்த வேண்டும்.

377. கிராமபிரதட்சிணம் செய்தாலும் செய்யலாம் அல்லது எல்லா பக்த ஜனங்களோடும் சேர்ந்துமோ இல்லாமலும் பிரதட்சிணம் செய்தாலும் செய்யலாம்.

378. எல்லா மங்கள வாத்யங்களோடும் பூர்ணாஹூதியை செய்து சுத்தமான பரிசாரகர்களோடு உள் சுற்று சுற்றி

379. இறைவனையும், இறைவியையும் வித்யேஸ்வரர்களோடு கூட கர்பகிரஹத்தில் வைத்து லிங்கத்தில் பீடத்தில் முறையாக

380. இறைவனையும் இறைவியும், பூஜித்து சுற்றிலும் வித்யேஸ்வரர்களை முறையாக பூஜிக்க வேண்டும். யாகசாலையிலுள்ள அந்தந்த ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து சுத்தமான தீர்த்தத்தால் இறைவனை அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

381. பிறகு இறைவனை சக்திக்கேற்றவாறு பூஜிக்க வேண்டும். அன்று இரவு த்வஜ அவரோஹணம் (கொடி இறங்குதல்) செய்வது சிறந்தது ஆகும்.

382. மூன்றாவது ஐந்தாவது அல்லது ஏழாவது ஒன்பதாவது நாளில் பதினொன்று பதினான்கு அல்லது பதினைந்தாவது நாளில்

383. அல்லது பதினேழு அல்லது பத்தொன்பதாவது நாளில் செய்யலாம்.

384. மூர்த்தி ஹோமம், பிறகு திசாஹோமம் செய்ய வேண்டும். த்வஜம் முதல் தீர்த்தம் வரையில் தின எண்ணிக்கை இருக்குமேயானால்

385. மறுபடியும் உத்ஸவம் ஆரம்பித்து தீர்த்தம் வரையில் எல்லாம் செய்ய வேண்டும். கொடியிறக்கும் தினத்தில் சுத்த ஸ்நபனம் செய்ய வேண்டும்.

386. லிங்கம், மூர்த்தி, விருஷபம், சூலம், கொடி இவைகளுக்கு அர்ச்சனைபடி ஸ்நபனம் செய்யவேண்டும். புஷ்பமாலைகளால் கோயிலை அலங்கரிக்கவேண்டும்.

387. கர்ப்பகிரஹத்திலிருந்து கோபுரம் வரையில் தன் சக்திக்கு தக்கவாறு கருமையான நற்புகையுடன் கூடிய தூபத்தால் உபசரிக்க வேண்டும்.

388. பலவகை நைவேத்யங்களை முறைப்படி கொடுத்து இறைவனை மகிழ்விக்க வேண்டும். பிறகு சண்டிகேஸ்வர பூஜையை ஹோமத்துடனோ அல்லது ஹோமமில்லாமலோ செய்யலாம்.

389. பிறகு கிராமபலியை அன்ன லிங்கத்தோடு கூடியதாகவும் திரிசூலத்தோடு சண்டநாதரோடு கூடியவராகவும் செய்யவும்.

390. பேரிகை, மத்தளம், படஹம், காளஹம், ஸ்ரீகண்டம், சங்கம், போன்ற வாத்யங்களை பலிகாலத்தில் வாசிக்க வேண்டும்.

391. கிராமத்தை சுற்றியுள்ள பிரம்மா முதலிய தேவர்களை விஸர்ஜனம் செய்து திவஜத்தின் ஆரம்பத்தில் அல்லது முடிவில் பலி கொடுக்க வேண்டும்.

392. கொடியை இறக்கி அந்த விருஷபத்தை விருஷப மூர்த்தத்தில் சேர்க்கவேண்டும். த்வஜாவரோஹணம் செய்யும் முன்போ செய்தபின்போ பலி கொடுக்க வேண்டும்.

393. யஜமானர் ஆசார்யனை வஸ்திரம், பவித்ரம், தர்ஜனி இவைகள் கொடுத்து கவுரவிக்க வேண்டும். அங்குரார்ப்பண காலத்தில் த்வஜாரோஹண காலத்திலும்

394. யாக அதிவாஸ காலத்திலும் ஹோம ஆரம்பகாலத்திலும் இரண்டு ஸந்திகளிலும் அல்லது ஒரு சந்தி கால பூஜைகளிலும் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ

395. நிருத்த மூர்த்தி (நடராஜர்) உத்ஸவத்திலும் தீர்த்தத்திலும் சுத்த ஸ்நபன காலத்திலும் தட்சிணை கொடுக்க வேண்டும். அந்த தட்சிணை மூன்று விதமாகும்.

396. ஆசார்யனுக்கு உயர்ந்த தட்சிணை கொடுக்க வேண்டும். ஐந்து நிஷ்கம் அதமம் இரண்டு மடங்கு மத்யமம், மூன்று மடங்கு உத்தமம்.

397. அதில் பாதி எண்ணிக்கையுடன் கூடியது அதிகமாக சொல்லப்படுகிறது. மேற்கூறியதில் இரண்டு மடங்காக கொடுப்பதும் உத்தமமென்று கூறப்பட்டுள்ளது. வேறு விதமாகவும் தட்சிணை கூறப்படுகிறது.

398. பிரதி தினமும் பாதி நிஷ்கமோ, அதில் பாதியோ கொடுக்க வேண்டும். பக்தோத்ஸவம் பிறகு செய்யலாம் அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பாகவோ செய்ய வேண்டும்.

399. உத்ஸவத்தின் ஆரம்பம் அல்லது நடுவிலோ பக்த உத்ஸவம் செய்யலாம் வருடாந்திர உத்ஸவத்தில் மாஸோத்ஸவமானது

400. பலிஹோமம் இவைகளோடு கூடியதாகவுள்ள திருவீதியிலாவுடனுமோ பலியின்றியுமோ பிம்ப திருவீதி உலா செய்யலாம்.

படலம் 6/4 :தொடரும்

படலம் 6/3...

படலம் 6/3 : மஹோத்ஸவ விதி

201. பிரம்மாவிற்கு பிரியமான பாயாசம், மஞ்சள்பொடி, தாமரை புஷ்பம், பொறி, இவைகளை இரண்டாவது நாள் பிரம்மாவிற்கு பலி கொடுக்கப்பட வேண்டும்.

202. நெய்கலந்த வாழைப்பழத்தோடு கூடிய எள் அன்னத்தை பூதங்களின் திருப்திக்காக மூன்றாம் நாளில் பலிகொடுக்க வேண்டும்.

203. மஞ்சள் பொடியோடு கூடியதும், தேங்காயோடு கூடியதுமான எள் அன்னத்தை கந்தர்வர்களின் பிரியத்திற்காக நான்காவதுநாள் பலி கொடுக்க வேண்டும்.

204. தினை கலந்ததும் இந்தர வல்லியோடு கூடியதுமான நெய்யை இந்திரன் பிரியத்திற்காக ஐந்தாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

205. நெய்யோடு கூடியதும் பலாச்சுளைகளோடு கூடியதுமான மூங்கிலரிசி அன்னத்தை ரிஷிகளின் பிரீதிக்காக ஆறாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

206. நெய்யோடும் கூடியதாகவும் கையாந்தரை பழத்தோடு கூடியதுமான சர்க்கரைப் பொங்கலை லட்சுமி பிரீதிக்காக ஏழாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

207. உளுந்து சாதம் நெய்யோடும் கூடியதாகவும், ராக்ஷஸர்களின் பிரீதிக்காக எட்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும்.

208. சுத்தான்னத்தை தயிர், ஸத்துமா, பொறி, புஷ்பம், இவைகளோடு சிவனுடைய பிரீதிக்காக ஒன்பதாவது நாளில் பலி கொடுக்கவேண்டும்.

209. மற்றொரு முறையில் தேவதைகளுக்கு திரவ்யங்கள் சொல்லப்பட்டுள்ளன. சுத்தான்னம், தயிர், இட்லி, அப்பம் இவைகளோடும் கூடியதாகவும்

210-211. பழங்களோடும், வெல்லம், இவைகள் சேர்த்து கணபதிக்கு பிரியமானதாக ஆகும். பழங்களோடு மஞ்சள்பொடி, நெய்சாதம், தயிர், கலந்த சத்துமா, எள்சாதம் இவைகள் பூதங்களுக்கு பலியுமாகும்.

212. தாமரை கிழங்கு, தர்பை நுனி, நெய்கலந்த அன்னமிவைகளை வாழைப்பழத்தோடு கூடியதாக ரிஷிகளுக்கு பலி கொடுக்க வேண்டும்.

213. மின்னிக்கொடி, மஞ்சள், தினையுடன் நெய் சேர்த்து நான்காவது நாள் இந்திரன் திருப்திக்காக பலி கொடுக்கவேண்டும்.

214. பாயாசம், மஞ்சள்பொடி, தாமரை புஷ்பம், பொறி இவைகளை ஐந்தாவது நாள் பிரம்மாவின் ப்ரீதிக்காக பலி கொடுக்கவேண்டும்.

215. நெய்யோடு கூடிய சர்க்கரை பொங்கல் கையாந்தரை பழம் இவைகளோடு கூட விஷ்ணு பிரீதிக்காக ஆறாவது நாள் பலிகொடுக்க வேண்டும்.

216. எள்ளு சாதம் நெய் கலந்து தேங்காய், பழம் இவைகளோடு கூட சிவபிரீதிக்காக ஏழாவது நாள் பலி கொடுக்கவேண்டும்.

217. மூங்கிலரிசி அன்னத்தை தயிர் கலந்து வாழை, பலா இவைகளோடு கூட ஈஸ்வர திருப்திக்காக எட்டாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

218. சுத்தான்னம், தயிரோடு கூடி பொறி புஷ்பம் இவைகளோடு கூடியதாக சண்டேசரின் திருப்திக்காக ஒன்பதாவது நாள் பலி கொடுக்க வேண்டும்.

219. ஒன்பது நாட்களுக்கு திரவ்ய பொருட்கள் சொல்லப்பட்டன. அதற்கு பிறகு பன்னிரெண்டு நாட்களுக்கு சொல்லப்படுகிறது.

220. வெண்பொங்கல் இட்லி, மோதகம், வாழை, வெல்லம், இவைகள் சேர்த்து, கணபதி மந்திரத்தை நினைத்து முதல்நாள் பலி கொடுக்க வேண்டும்.

221. மாம்ஸம் எள், அப்பம், நெய், மீன், செம்பருத்தி புஷ்பம் இவைகளோடு கூடிய சிவப்பு அன்னத்தை

222. பைசாச மந்திரத்தை நினைத்து இரண்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும். பாயாஸம், ஸத்துமா, புஷ்பம் தாமரை பூ, இவைகளோடு கூட

223. பிரம்ம மந்திரம் சொல்லி மூன்றாவது நாள் பலி கொடுக்கவேண்டும். எள்சாதம், நெய், ஸத்துமா, இட்லி, இவைகளோடு கூட

224. கந்தர்வ மந்திரத்தை சொல்லிக்கொண்டு நான்காவது நாள் கொடுக்கவேண்டும். மின்னல் கொடி, மஞ்சள் சாதம் நெய்யோடும், பொறியோடும் கூட

225. பூத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு ஐந்தாவது நாள் கொடுக்கவேண்டும். வெல்லம், நெய், தேங்காய் பழம் இவைகளோடு கூட

226. ஸ்கந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஆறாவது நாள் கொடுக்கவேண்டும் தர்பை நுனி, நெய் சுத்தான்னம் தயிரோடு, கூட

227. ரிஷிகளின் மந்திரங்களை சொல்லிக் கொண்டு ஏழாவது நாள் பலி கொடுக்கவேண்டும். பால்சாதம், அரிசிமாவு கரும்பு துண்டுகளோடு கூட

228. நாக மந்திரங்களை சொல்லிக்கொண்டு எட்டாவது நாள் பலி கொடுக்கவேண்டும். தயிர் சாதம், வெல்லம் மாதுளம்பழம், இவைகளை

229. இந்திர மந்திரத்தை சொல்லிக்கொண்டு ஒன்பதாவது நாள் பலி கொடுக்கவேண்டும். சர்க்கரை பொங்கல் நெய், வாழை, பலா இவைகளோடு கூட

230. விஷ்ணு மந்திரத்தை சொல்லிக்கொண்டு பத்தாவது நாள் பலி கொடுக்கத் தகுந்தது. சிவப்பு அன்னம் மாம்ஸம், அபூபம், (அப்பம்) எள் பொடி இவைகளை

231. ராக்ஷஸ மந்திரத்தை சொல்லிக்கொண்டு பதினோறாவது நாள் பலிகொடுக்க வேண்டும். அரிசி சாதம், தயிர் சேர்த்து வெல்லகட்டிகளுடன்

232. சிவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு பன்னிரண்டாம்நாள் பலி கொடுக்க வேண்டும். ஏழு, ஐந்து, மூன்று ஓர் இரவு உத்ஸவ காலங்களில்

233. முன்புள்ள தினத்தை விட்டுவிட்டு அடுத்துள்ள தினத்தை தினதேவதை திரவ்யங்களாக கிரஹிக்கவேண்டும். முனிவர்களே, தினதிரவ்யம், பலிதிரவ்யம், இரண்டும் இங்கே சொல்லப்பட்டது.

234. முதலில் பிரும்மாதி தேவர்களுக்கு பலி இவ்விதம் உண்டாகும். தின அதிபதி சூர்யன் முதலானவர்களின் திருப்திக்காக சுத்தான்னத்தை தயிரோடு கூட கொடுக்கப்படவேண்டும்.

235. லோகபாலர்களின் திருப்திக்காக லோக பாலர்களின் மந்திரங்களை சொல்லிக்கொண்டு கொடுக்க வேண்டும். விருஷபம் முதலிய பரிவாரங்களுக்கு திவஜஸ்தம்பத்திலும், பிரம்மா முதலியவர்களுக்கு

236. பலிகொடுத்துவிட்டு அதன் முடிவில் பலி பீடத்தில் முறையாக பலி கொடுக்கவேண்டும். கொடி முதல் பலி பீடம் வரையில் பலி சொல்லப்படுகிறது.

237. பிரம்மா முதல் பலிபீடம் வரையில் அல்லது இந்திரஸ்தானத்திலிருந்து பீடம் வரையிலோ அந்தந்த தினத்தேவதைகளுக்கு பலிபீடத்திலோ பலி கொடுக்கலாம்.

238. தினதேவர்களின் திருப்திக்காக சுத்தான்னத்தால் பலி கொடுக்கலாம். தின தேவர்களுக்குமோ லோகேசர்களுக்குமோ பலி கொடுக்க வேண்டும்.

239. தின தேவரின் பலி பொருளால் லோக பாலர்களுக்கும் பலி கொடுக்கலாம். எல்லா தினங்களுக்கும் தினமும் இரண்டு பலி கொடுக்கவேண்டும்.

240. அவைகளுடன் ஓர் வாத்யத்தோடு திக்பலி தினபலிகளை அளித்தல் காலை, மாலை இருவேளையிலும் பலி கொடுக்க வேண்டும்.

241. பலி கொடுக்கும் போதோ, கொடுத்த பிறகோ சுவாமி புறப்பாடு செய்யவேண்டும். அதன் வாஹன முறை சொல்லப்படுகிறது. முதலில் விருஷப வாஹனம், இரண்டாவது சுற்றக்கூடிய யந்திரமாகும்.

242. ஊஞ்சல் அல்லது சிபிகை (பல்லக்கு) மூன்றாவது நாளிலும், குதிரை நான்காவது நாளிலும், ஸிம்மம் ஐந்தாம் நாளிலும், தீபம் ஆறாம் நாளிலும் ஆகும்.

243. ஆடு வாஹநம் ஏழாம் நாளிலும், ரதம் எட்டாம் நாளிலும் இவ்விதம் ஒன்றுக்கொன்று அழகானதாக செய்யவேண்டும்.

244. மூர்த்திகள் அனேக ரூபங்கள் அதன் முடிவில் சொல்லப்பட்டன. அதன் முடிவில் பலி பீடத்தோடு கூட பலிதானம் செய்யவேண்டும்.

245. அன்ன லிங்கத்தோடு கூடியதாகவும் திரிசூலத்தோடு கூடியதாகவும் பத்து ஆயுதங்களோடு கூடியதாகவும் கோளக (பத்ரலிங்கம்) லிங்கத்தோடு கூடியதாகவும்

246. ரதத்தில் உள்ள கணேசர்களுடனும் முடிவில் நந்திகேஸ்வரர் ரதத்திலோ சிபிகையிலோ எல்லா அலங்காரங்களோடு

247. இவைகளோடு கூட இல்லாமலும் பலி அங்கங்களோடு கூடியதாய் அதன் முடிவில் விருஷபமும் பின்பு நாட்டியத்திற்கு முகரங்கம் என்ற வாத்யத்துடனும்

248. அதன் பின்பு ஸர்வாங்க சுந்தரமான இறைவனின் தேரும் அதன் இரண்டு பக்கங்களிலும் அலங்கரிக்கப்பட்டவர்களும்

249. கையில் சாமரத்தை உடையவர்களுமான எனக்கு பணிவிடை செய்யும் பெண்களால் பிரகாசிக்கின்றதும் நவரத்னங்களினால் பிரகாசிக்கின்ற குடைகளோடு கூடியதும் தொடர்ந்து செல்கின்ற

250. என் அருகிலே உள்ள சிவாச்சார்களோடு சிறப்புற்றும் எனக்கு பின்னால் என் தொண்டில் ஈடுபடுபவர்களான

251. கவனத்தோடு கூடிய பரிசாரகர்களான பக்தர்கள் கூட தாமரை மொட்டுடன் பாசத்தோடு கூடிய கையையுடையவளாலும்

252. புருஷன் போன்ற தோற்றம் கொண்ட கன்னிகையால் என்னுடைய பணிவிடை கன்னிகையுடன்கூடி அழகாக உள்ளதும் என்னுடைய மனைவியான ஈஸ்வரியின் தேருக்கும்

253. அதனருகில் தேவதேவேசி ரதத்திலும் அவ்வாறே அலங்கரிக்கப்பட்டும் அதன் முடிவில் சண்டிகேஸ்வரர் ரதமும் தனியாக அமைக்க.

254. சிவனுக்கு ஏற்பட்ட வேறு பதினாறு பிம்பங்கள் எவையுண்டோ அவையும் பல்வேறு தன்மை கொண்ட சிவபக்தர்கள் உண்டோ அவர்களின் பலவிதமான மஞ்சங்களும்

255. முன்பக்கம் செல்பவையாகவோ பின்பக்கம் வருபவைகளாகவோ செய்து கொண்டு இவைகளில் எது விருப்பமோ அப்படி செல்லலாம். பலிக்கு அங்கமான ரக்ஷõபந்தனமின்றி போகலாம்.

256. பலவாத்யங்களோடு கூடியதாகவும் யானை, குதிரை, ஒட்டகம், இவைகளோடு கூடியதாகவும் வீதி சுத்தம் செய்யப்பட்டதாகவும் தண்ணீர் தெளிக்கப்பட்டதாகவும்

257. ஒவ்வொரு வீடும் பலவித (பொடி) கோலம் சித்ரங்களோடு கூடியதாகவும் மங்கள அங்குரத்தோடும் வர்தனி கும்ப தீர்த்தத்தோடும் கூடியதாகவும்

258. வாழைமரம் பாக்கு, இலை இவைகளோடு கூடியதும் பட்டு வஸ்திரம் இவைகளோடு பிரகாசிப்பதும் தர்பமாலையோடு கூடியதும் முத்துமாலைகளால் பிரகாசிப்பதும்

259. மேலேயும், கீழேயும், ஒவ்வொரு தளத்திலும் தீபதண்டத்தையும், இரவாக இருந்தால் தீபமாலையாலும் அலங்கரிக்கப்பட வேண்டும்.

260. வீட்டினலங்காரம் கூறப்பட்டது. கிருஹம் இல்லாத இடத்திலும் அதன் அலங்காரமானது பலவித கொடிகளோடு கூடியதும் பலவாத்யங்களோடு கூடியதும்

261. பல ராகங்களோடு கூடியதும் பல கூட்டங்களோடு கூடியதும் பல குடைகளோடு கூடியதும் தோகை சாமரத்தோடு கூடியதாக இருப்பதாயும்

262. கொடி ஆலவட்டம், இவைகளோடு கூடியதாகவும் தூபம், தீபம் இவைகளோடு கூடியதாகவும் மற்றும் இரவிலும் பகலிலும் மஹோத்ஸவத்தில் செய்ய வேண்டும்.

263. ரதத்திலோ, பல்லக்கிலோ அல்லது பரிசாரகர் தலையிலோ, ஈசனை எழுந்தருளச் செய்து வலம் வரவேண்டும். இந்த சமயங்களில் தாம்பூலம் பலவித பழங்களையும் கொடுக்கவேண்டும்.

264. திரையிடப்பட்டு பக்ஷணம், அப்பம் முதலியவைகளை கொடுத்து தகுதியுள்ளவை, தகுதியற்றவை என்ற பிரிவில் தக்தம் ஆர்த்ரம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டு

265. சமைக்கப்பட்டு அனைத்தும் அந்தணர்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நீர்சம்மந்தமான திரவ்யம் சூத்திரர்களாலும் தயாரானதாகவும் தோலுள்ள தோலில்லாத பதார்த்தங்களை நீரீக்ஷணாதி சுத்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

266. சங்கின் ஒலியோடு கூட பாத்யம், ஆசமனம் இவைகளோடு கூடியதும் திரையை எடுத்து நிர்மால்யத்தை நீக்கி

267. எல்லோர்க்கும் பக்தர்களுக்கும், வருபவர்களுக்கும், வந்துள்ள அனைவர்க்கும், எல்லோர்க்கும் அவர்களின் பக்திக்கு ஏற்ற வகையில் பொருளைக் கொடுத்து

268. இறைவனை இளைப்பாற ஆஸ்தான மண்டபம் முதலியவைகளில் எழுந்தருளச் செய்வது, இறைவனுக்கு பாத்யம் முதலியவைகள் கொடுத்து, சாந்திஹோமம் ஸ்நபனம் வைத்து

269. எல்லா தோஷங்களின் நிவிருத்திக்காக தச்சர்களால் ஸ்பர்சிக்கப்பட்ட தேர்முதலிய வாஹனத்தின் தோஷ சாந்திகளாகவும் சண்டாளர் பாணர்களின் திருஷ்டி நிவிருத்திக்காகவும் விசேஷமாக

270. சாந்தி பரிஹாரம், அவசியம் என்று அறிந்து கொள்ள வேண்டும். சாந்தி ஹோமம் இல்லாவிட்டாலும் அல்லது முடியாவிட்டாலும் ஸ்நபனம் செய்ய வேண்டும்.

271. ஐந்து பிரகாரங்களுக்கு வெளியில் ரத ஓட்டம் நடந்தால் ஸ்நபனம் ஐந்து குருணி (15 மரக்கால் அளவு)

272. நாற்பது மரக்கால் ஜலம் அல்லது அதில் பாதி அல்லது அதில் கால் பகுதி அல்லது கொஞ்சம் குறைவு என்ற முறையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

273. வேட்டையாடுதலும் சிறப்பான ஸ்நபனம் செய்யவேண்டும். அந்தந்த காலத்திற்கு ஏற்றவகையில் இது செய்வது இஷ்டத்தைக் கொடுப்பதாகும் என்று சொல்லப்படுகிறது.

274. காலசந்தி யாகமண்டபம், ரதம் முதலியவைகளில் ஏற்றம் மற்றும் உச்சிகால பூஜை இவை நித்யம் எனப்படும்.

275. ரதத்தில் ஸ்வாமி இருந்தால் தூபம் வரையிலும் ஆலயத்தில் நைவேத்யம் வரையிலும் செய்ய வேண்டும். சிவாலயத்தில் யாத்திரைக்காக ஸ்நபனம் செய்வது பிறகு நைமித்திக பூஜை செய்ய வேண்டும்.

276. நடராஜன் தேர்கால் தர்சனத்திற்கு பிறகு மாலையில் பூஜையும் மறுபடியும் ஹோமம் பிறகு கிராம பிரதட்சிணமும்

277. புறப்பாட்டிற்கான ஸ்நபனம் பூஜை, ஆடல் பாடல் உபசாரம் பிறகு தேவியோடு அருள்பாவித்தல் செய்தல் வேண்டும்.

278. காலத்தில் பதினாறு பங்காக்கப்பட்டதும் அரையாமமாக கூறப்பட்டதுமான காலத்தில் ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட தேவனுக்கு அந்த காலங்களின் செயல்கள் கூறப்பட்டன.

279. இவைகள் உரிய காலத்தில் அனுஷ்டித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். மிகவும் முன்னால் செய்தால் சிறப்பு இல்லை. மிகவும் தாமதமாக செய்தாலும் சுபம் இல்லை.

280. ஆகையால் முயற்சியுடன் முன்சொன்ன அதன் காலத்திலேயே செய்வது சிறந்தது. தன்னுடைய காலத்தில் குற்றம் இருக்கும் ஆனால் இவைகள் பிற்காலத்தில் செய்யப்படவேண்டும்.

281. வாஹனங்களில் செல்லும் காலங்களில் பலியிடும் காலத்தில் முன் சமயங்களில் பரிவாரங்களுக்கு சொன்ன முறையில் பலிபீடத்தில் பலி போடவேண்டும்.

282. மண், மரம், அல்லது உலோகம் இவைகளாலான பீடத்திலோ அல்லது பூமியிலேயே சமப்படுத்தி பலியிடலாம். யாக மண்டபத்தில் நுழைதல் அல்லது உள்ளே செல்ல கோயிலில் நுழைதல்

283. அங்கு தாம்பூலம் முதலியவைகள் கொடுத்தாலும் கொடுக்கலாம். உரிய காலத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். செய்யப்படாவிடில்

284. இரவில் நீராஜநம் தூபதீபமுடிவில் செய்ய வேண்டும். வீதிவலம் வரும் சமயத்தின் முடிவில் பெரியதான பலி (ஹவிஸ்) கொடுக்க வேண்டும்.

285. இவ்விதம் தினமும் செய்துவர வேண்டும். அதன் சிறப்பு இப்பொழுது சொல்லப்படுகிறது. கிராமம் முதலியவைகளிலோ அல்லது அதற்கு வெளியில் ஒரு மண்டபம் தயார் செய்ய வேண்டும்.

286. மண்டபம் முதலான இடங்களில் ஸ்வாமியை அழைத்து சென்று பூஜித்து வினோதமான தர்சனம் செய்வித்து வாஹனத்திலோ அல்லது சிரசில் வைத்தவாறோ கிராமபிரதட்சிணம் செய்யவேண்டும்.

287. மழை பெய்தாலும், மழை பெய்யும் என்ற நிலையிலும் ஒரேஇருட்டாக இருந்தாலும் இவ்விதமே வெளிமண்டபத்தில் வந்து செய்யலாம்.

288. மீதமுள்ள பிரக்ஷிணத்திற்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். யாகாரம்ப தினத்திலும் தீர்த்தம் கொடுக்கும் தினத்திலும்

289. கிராமத்தை முறையாக சுற்றி வரவும். பிராயச்சித்தம் தேவையில்லை. கிராம பிரதட்சிணம் இல்லாவிடில் திசா ஹோமம் செய்ய வேண்டும்.

290. ஆகாயம் நிர்மலமாகவும் சந்திரனுடன் கூடியதாகவும் இருக்கும்போது அவச்யம் சுவாமி புறப்பாடும் பலிதானமும் செய்யப்படவேண்டும்.

291. தீர்த்தம் கொடுக்கும் நாளிலிருந்து முன்னால் ஐந்தாவது அல்லது நான்காவது நாளில் அந்த வாரத்திலோ எண்ணெய் ஸ்நானம் மஞ்சள் பொடியோடும் செய்யலாம்.

292. தாம்பூலம் முதலியவைகளை இறைவனுக்கும் பக்தர்களுக்கும் முறையாக கொடுக்க வேண்டும். த்வஜாரோஹணம் (கொடியேற்றுதல்) முதலியவைகளிலும் கொடுக்க வேண்டும்.

293. தெய்வத்திற்கு எதிரில் தைலத்தை வைத்து ஸ்தண்டிலத்தில் அஸ்த்ர மந்திரத்தால் பிரோக்ஷித்து ஸம்ஹிதா மந்திரத்தை சொல்லி வைக்க வேண்டும்.

294. கவச மந்திரத்தால் அவகுண்டனம் செய்து ஹ்ருதயமந்திரத்தினால் சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும். மூலமந்திரத்தால் நமோந்தமாகச் சொல்லி சிவதத்வம் முதலியவைகளால் புஷ்பத்தோடு கூட எண்ணையை சிரஸில் வைக்க வேண்டும். தொடர்ந்து மஞ்சள் பொடியையும் இடவேண்டும்.

295. நெற்றியிலிருந்து கால், கை வரையிலும் மற்றும் தேவியின் கழுத்து வரையிலும் அல்லது மற்ற முறையிலோ ஸ்நானம் செய்விக்க வேண்டும். பிறகு பாசிபயிறு நிவேதனம் செய்ய வேண்டும்.

296. தீர்த்த தினத்திற்கு முன் நாள் அல்லது அதற்கு முன்போ அல்லது முதல் நாள் இரவோ நடராஜப் பெருமாள் வீதிவலம் வருதல் செய்ய வேண்டும்.

297. பூஜையின் பொருட்டு எல்லா அணிகலன்களோடும் கூடிய நடராஜபெருமானுக்கு சிறப்பாக ரக்ஷõபந்தனம் செய்விக்க வேண்டும்.

298. ஆகையால் மற்றொரு கூடத்திலோ அல்லது ஆஸ்தான மண்டபத்திலோ எல்லா அலங்காரத்தோடும் கூடியதாக பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

299. அந்த காலத்திலோ அல்லது காலையிலோ தேவதேவனை அழைத்துச் சென்று வினோத தரிசனமும் செய்விக்க வேண்டும்.

300. காலையில் ஸ்நானம் முதலியவைகளை முடித்து விட்டு பலவித அகில் முதலிய வாசனை பொருட்களோடு கூடிய சந்தனத்தாலும் அணிகலன்களாலும் அலங்கரிக்க வேண்டும்.

படலம் 6/3 : தொடரும்

படலம் - 6/2

படலம் 6/2 : மஹோத்ஸவ விதி

101. குடம் போன்ற பகுதியில் ஸ்கந்தனையும் அதன் முகப்பகுதியில் வினாயகரையும் தண்டத்தின் நுனியில் மன்மதனையும் தண்டத்தின் நடுவில் பாஸ்கரனையும் பூஜை செய்ய வேண்டும்.

102. தண்டத்தின் மூலபாகத்தில் சண்டேசர், கிழக்கு தளத்தின் நுனி பாகத்தில் லக்ஷ்மி, தெற்கு தளத்தில் ஸப்த மாதா மேற்கு தளத்தில் ஜ்யேஷ்டா தேவியையும்

103. வடக்கு திக்கில் காத்யாயினியும், சூலத்தின் அடிப்பகுதியில் பதினோறுருத்திரன், சூர்யன் பன்னிரண்டும் அஷ்ட வசுக்கள் அச்வினி தேவர்கள் இவர்களும் மற்றும் பதினெட்டு கணங்களையும்

104. முறைப்படி உபசாரம் செய்து வரவேற்பதாக செய்து பேரியில் அந்தந்த தேவதா ஆவாஹணம் செய்ய வேண்டும். பேரியை வஸ்திரத்தால் சுற்றி நடுவில் ருத்திரனை பூஜிக்க வேண்டும். (தோல் கயிற்றில்)

105. வலது பாகத்தில் பிரம்மாவையும், இடது பாகத்தில் விஷ்ணுவையும், வலயத்தின் தெற்கில் சூர்யனையும் வடக்கில் சந்திரனையும் பூஜிக்க வேண்டும்.

106. ஏழு கீலங்களில் ஸப்த மாதாக்களையும் ஒன்பது வலயங்களில் நவகிரஹங்களையும், ருத்திரர்களையும் அதன் எண்ணிக்கையில் பூஜை செய்து சர்ம ஸூத்திரங்களில் வாசுகியையும் பூஜை செய்ய வேண்டும்.

107. அடிக்கும் தண்டத்தில் ஷண்முகனையும் மஸ்தகத்தில் கிழக்கு பக்கமாக பூஜை செய்ய வேண்டும். சந்தனம் புஷ்பம், முதலியவைகளையும் நைவேத்யம் ஹிருதயமந்திரத்தால் தனித்தனியாக கொடுக்க வேண்டும்.

108. அஸ்த்ர மந்திரத்தை நினைத்து பேரிதாடனம் செய்ய வேண்டும். முதலில் ஒரு அடியும் இரண்டாவது இரண்டு அடியும் அடிக்க வேண்டும்.

109. மூன்றாவது முறை மூன்று முறை அடிக்க வேண்டும். மூன்று முறையும் ஒவ்வோர் அடியுமோ அடிக்க வேண்டும். வாசிப்பவனை பஞ்சாக்ஷரத்தை நினைத்து பிரோக்ஷித்து

110. வஸ்திரம், சந்தனம், மாலை, பூணூல் இவைகளை கொடுத்து, அவருடைய கையில் புஷ்பமும் கொடுத்து அஸ்திர மந்திரத்தை நினைத்து

111. பேரியில் புஷ்பத்தை வைத்து ஆசாரியனின் உத்தரவால் பேரியை கழுத்தில் வைத்துக் கொண்டு முறைப்படி எல்லா தாளத்தையும் அறிந்தவனாக வாசிக்க செய்ய வேண்டும்.

112. காந்தாரம் முதலிய ஸ்வரங்களோடும் ஸமதாளம் முதலிய தாளங்களோடும் கீதம், நிருத்தம் இவைகளோடும் அன்னலிங்கங்களோடு கூடியதும்

113. முறையாக மூர்த்திகளுடனோ அல்லது சண்டேசருடனோ அஸ்த்ரராஜரை குடை முதலிய உபசாரங்களோடு எழுந்தருளச் செய்து

114. தூபம் தீபம், மற்றும் மணி, சப்தம் முதலியவைகளோடு பிரம்ம ஸ்தானத்திலிருந்து நகர் வலம் வரவேண்டும்.

115. இந்திரனின் ஸ்தானத்திலிருந்து இந்திரனுக்கு பலிகொடுக்க வேண்டும் பலி தானத்தின் கடைசியில் தாளம், கீதம் இவைகளோடு கூடியதாகவும்

116. நர்த்தனத்தோடு கூடியதாகவும் அந்தந்த திக்குகளில் செய்ய வேண்டும். பிரம்மாவிற்கு பிரம்ம தாளம் மற்றும் மேகராக ஸ்வரத்துடனும்

117. ஸமதாளம், காந்தாரம், கொல்லிபக்தா பணம், ப்ருங்கிணீ, கவுசிகம், நட்டபாஷை, மல்லதாளம்,

118. ஸ்ரீ காமரம், நவதாளம், தக்கேசி, கோடிகம் தர்கராகம், சாலபாளனீஸ்வரம் டக்கரி முதலிய பலவகை ராகங்களோடும், தாளங்களோடும் பலிதானம் செய்யப்படவேண்டும்.

119. கிழக்கு முதலிய திக்குகளில் முன்னதாக முறைப்படி செய்யப்படவேண்டும். த்வஜாரோ ஹணத்தின் முன்னதாக உத்ஸவத்தில் முக்குணமான தினத்தில் செய்யப்படவேண்டும்.

120. பேரீதாடன பூர்வமான உத்ஸவமானால் அதுவே த்விகுணமாக எண்ணப்படும். தெய்வத்திற்கு எதிரில் நான்கு ஸ்தண்டிலும் செய்யப்படவேண்டும்.

121. முதலில் அஸ்த்ரமூர்த்தியும் அதன் எதிரில் த்வஜ படத்தையும் அதன் எதிரில் விருஷப கும்பத்தை வித்யேஸ்வர்களோடும்.

122. அதற்கு முன்னால் எல்லா லக்ஷணங்களோடு கூடிய பேரியை வைக்க வேண்டும். முறையாக இவர்களை சந்தனம், புஷ்பம், இவைகளை எல்லாம் வைத்து பூஜிக்க வேண்டும்.

123. பேரிக்கும் கும்பத்திற்கு நடுவில் ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்யலாம். முன் சொன்ன முறையில் பூஜை செய்து தத்வங்களை நியஸிக்க வேண்டும்.

124. திரிசூலத்தில் தேவதாஹ்வானம் செய்ய வேண்டும். (தேவதாஹ்வானம்) பேரிதாடனம் செய்து விருஷபம் முதலியவர்களோடு திரிசூலத்தை எடுத்துக் கொண்டு

125. அன்னலிங்கம் மற்றும் வாத்யங்களோடு கூடவும் அந்தந்த தேவதாவாஹணங்களோடு கூடவும் கிராம பிரதக்ஷிணமாகச் செய்து

126. பலிதானம் முதலியவைகளையும் செய்து கொடியேற்றும் இடம் சென்று முன் சொன்ன முறைப்படி கொடி ஏற்ற வேண்டும்.

127. பேரீதாடன பூர்வாங்கமான இந்த முறை ராத்திரியில் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டது. கொடி சுற்றி வருதல் பகலில் செய்ய வேண்டும்

128. தேவதை ஆஹ்வான காலத்தில் விருஷப பிரமணத்தை விட்டு விட வேண்டும். பிறகு அங்குரார்பணம் இரவில் யாகாரம்ப தினத்தில் செய்ய வேண்டும்.

129. அதற்காக அங்குரார்பணம் செய்ய வேண்டும். கிராம பிரதட்சிணம் தீர்த்தாங்குரத்திற்கு அவசியமாகும்.

130. மற்ற எல்லாவற்றிற்கும் செய்தாலும் செய்யலாம். இல்லாமலும் இருக்கலாம். அங்குரார்ப்பணத்திற்கு முன்னதாக மாலையில்

131. மித்ஸங்க்ரஹணம் செய்து அங்குரங்கன் நன்கு முளைக்க பேரீதாடனுத்துடன் விதைகளை தெளிக்க வேண்டும்.

132. மற்றவை எல்லாம் அங்குரார்பண பூர்வமாக இரவிலேயே செய்ய வேண்டும். சிவனுடைய யாகாரம்பமும் அந்த இரவிலேதான்

133. இவ்விதம் நிச்சயம் செய்து முதல்நாள் அஸ்த்ரராஜரையும் பூஜிக்க வேண்டும். பிறகு யாக சாலையை எதிரிலோ அல்லது பக்கத்திலோ அமைக்க வேண்டும்.

134. இடது பக்கத்தில் அல்லது வலது பக்கத்தில் ஐந்து சாலைகள் உள்ள விருப்பமான இடத்தில் அமைத்துக் கொள்ளலாம். நடுவில் ஐந்து முழ அளவுள்ளதாக இருக்க வேண்டும்.

135. ஒரு முழம் முதல் பதினைந்து முழம் வரை அளவுள்ளதாக யாகசாலை அமைத்து மூன்று ஆவரணங்களோடு கூடியதாகவும் அல்லது ஐந்து ஆவரணங்களோடு கூடியதாயும்

136. சமமாகவோ அல்லது ஒவ்வொரு அங்குல அதிக அளவுள்ளதாக அதிகரித்து ஒன்பது அங்குலம் உடையதாக ஐந்து வரிசைகள் ஏற்படுத்தவும்.

137. ஒரு வரிசையாக இருந்தாலும் பெரிதாக நான்கு வாயில்களை உடையதாகவும் அல்லது ஒரு வாயில் உடையதாகவும் மண்டப அமைப்பை உடையதாகவும் மற்றும்

138. பந்தல், கூடாரம், போன்ற அமைப்பை உடையதாகவும் ஐந்து ஒன்பது அல்லது ஒரு அக்னியோடு கூடியதாகவும் மேற்கட்டிதுணிகள் கொடி இவைகளோடு கூடியதாகவும்

139. தர்ப்பை மாலையோடு கூடியதாகவும் முத்து தோரணங்களோடு கூடியதும் தேங்காயோடு கூடியதும் எல்லா அலங்காரங்களோடு கூடியதாகவும்

140. நடுவில் எட்டு மாத்ராங்குல அளவுடையதாகவும் ஒவ்வொரு அங்குலம் அதிகம் உடைய இருபத்தெட்டு அங்குலம்வரை உள்ள மேடையோடு கூடியதாகவும்

141. யாகசாலையின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வேதிகையின் உயரமும் பரப்பும் கூறப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கோ ஐந்தில் ஒரு பங்காகவாவது உபவேதிகை இருக்க வேண்டும்.

142. முஷ்டி அளவுள்ளதும் அல்லது ஓட்டை அளவுள்ளதும் அல்லது கையளவு (முழம்) உள்ளதுமான குண்டம் இருக்கலாம். அந்த குண்டம் நாற்கோணமாகவோ அல்லது வட்டவடிவமாகவோ மூன்று மேகலைகளோடு கூடியதாக இருக்க வேண்டும்.

143. மண்டபத்திலோ அல்லது பெரிய இடத்திலோ யாகம் அதிவாஸம் செய்ய வேண்டும். இவ்விதம் எல்லாவற்றையும் சேகரித்து மண்டப ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும். சில்பியை திருப்தி செய்து அனுப்ப வேண்டும்.

144. புண்யாஹவாசனம் செய்து வாஸ்த்து ஹோமம் செய்ய வேண்டும். எல்லா யாகங்களுக்கும் முக்யமான மண் எடுத்தலை செய்ய வேண்டும்.

145. வேதிகையினுடைய மத்தியில் எல்லா லக்ஷணங்களோடு கூடிய ஸ்தண்டிலம் செய்ய வேண்டும். ஒரு மரக்கால் முதல் ஒன்பது மரக்கால் வரை நெல் போடவேண்டும்.

146. அதில் பாதி அரிசியும் அதில் பாதி அளவு எள்ளும் அதே அளவு பொறியும் போட்டு நடுவில் தாமரையை எழுத வேண்டும்.

147. பலநிறமுடைய கர்ணிகைகளோடும் பிரகாசிக்கின்ற தளங்களோடு கூடியதும் எள், பொறி இவைகளால் ஆன கோடுகளை உடையதும் தர்பைகளோடு கூடியதும்

148. ஐந்து முதல் முப்பத்தாறு தர்பைகளோடு கூடிய அதன் நடுவில் சிவ கும்பத்தை வர்த்தனியோடு கூடியதாகவும்

149. அஷ்ட வித்யேச்வரர்களோடு கூடியதாகவும் கும்பங்களின் ஆவரணங்களோடு கூடியதாகவும் சிவகும்பத்தை ஸ்தாபனம் செய்ய வேண்டும். மேலும் எல்லா கும்பங்களும் வஸ்திரம் மற்றும் தங்க தாமரை முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

150. மாவிலைகளோடும் கூர்ச்சங்களோடும் கூடியதாகவும், முழுமையான கோவைப்பழத்தின் பொலிவை உடையதாகவும் ஸ்நபனத்திற்கு கூறிய இலக்கணங்களோடு கூடியதாகவும் கும்பங்கள் இருக்கவேண்டும்.

151. சிவகும்பத்தில் ஒன்பது ரத்னங்களும் வர்தனியில் ஐந்து ரத்னங்களும், வெளியில் உள்ள குடங்களில் தங்கத்தையும் போட வேண்டும்.

152. செல்வம் நிறைந்தவர்களால் இவ்வாறு செய்யப்படவேண்டும். சிவகும்பத்திற்கு இரண்டு வஸ்திரங்கள் அணிவிக்கவேண்டும். தோரணம், துவாரகும்பங்கள் லோக பாலர்கள் இவர்களையும்

153. வித்யேஸ்வரர்களோடும், சக்தியோடும் அஷ்டமங்களங்களோடு கூடியதாகவும் தசாயுதங்களோடும், சிவ கும்பத்தை வைத்து பூஜிக்கவும்.

154. இவ்விதம் செய்து ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். தங்கம், வெள்ளி, அல்லது பருத்தி நூல் இவைகளுள் ஏதேனும் ஒன்றினால் காப்பு செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.

155. தங்கம், வெள்ளி இவைகள் பிம்ப கையின் அளவிற்கு சிறிது அளவு அதிகமாக உடைய தாக, பாம்பின் படம் உடையதாகவும் இருக்கவேண்டும்.

156. வாலோடு கூடிய அந்த சூத்ரம் ஸர்ப படத்தோடு கூடியதாகவும் இருக்கவேண்டும். சூத்ரத்திற்கு அனந்தன் அதிதேவதையாகும். தங்கத்திலோ வெள்ளியிலோ செய்யப்பட்ட சூத்ரம்.

157. எல்லா விருப்பங்களையும் நிறப்பக்கூடியதாகும். சூத்ரம் ஒன்றாக இருக்கும். சிறப்பானதாகவும் பிடிப்பை ஏற்படுத்தக்கூடிய வலயத்துடன் கூடியதாகவும் இருக்கவேண்டும்.

158. பட்டு முதலிய சூத்ரங்கள் மூன்று தத்துவங்களையும் ஐந்து கலைகளையும் உள்ளடக்கியதாகவும், அமைதியைத்தரவல்லதாகவும் வெற்றியைத் தரவல்லதாகவும் ஆகும்.

159. ஒன்பது நூலிழை உள்ளதாக அமைக்க வேண்டும். இது ஆரோக்யத்தை கொடுக்க கூடியதாகும். ஆறு நூல்களோலோ, ஐந்து அல்லது எட்டு நூல்களாலோ செய்யப்பட்ட ரக்ஷõஸூத்ரம் புத்ரன், நீண்ட ஆயுள் முதலியவற்றை கொடுக்க கூடியதாகும்.

160. கைப்பருமனுக்குத் தகுந்தவாறு ஒன்று, மூன்று, என்று அங்குலங்களில் அளவு வித்யாசங்களால் சூத்ரம் அமைக்கவேண்டும். நன்கு தண்ணீரால் சுத்தி செய்து சந்தனத்தைப் பூசி

161. விபூதி பாத்திரத்தில் நேத்ர மந்திரத்தை உச்சரித்து விபூதியை வைத்து தனியாக ஸ்தண்டிலம் செய்து அதை ஆஸனத்தின் மேல் வைக்க வேண்டும்.

162. மரக்கால் முதலிய அளவுகளாலும் இரண்டு படிக்கு குறையாமலும் நக்ஷத்திரம் போல் பிரகாசமான அரிசியை ஹ்ருதய மந்திரத்தை கூறியவாது நிரப்பி அஸ்த்ர மந்திரத்தால் பாத்திரத்தை வைக்க வேண்டும்.

163. அதன் நடுவில் விபூதி பாத்திரத்தில் சூத்ரத்தை வைக்கவேண்டும். வெட்டப்படாமல் இரண்டு பாக்கு முதலியவைகளோடு கூடியதாகவும்

164. வெட்டப்படாத அடி, நுனி பாகத்தை உடைய வெற்றிலையை வடக்கு, கிழக்கு முகமாக வைத்ததாக ரக்ஷõ சூத்திரத்தையும் வைத்து இவைகளை ஸ்தண்டிலத்தின் மேல் வைக்க வேண்டும்.

165. புண்யாகவாசனம் செய்து ஹ்ருதய மந்திரத்தால் பிரோக்ஷித்து, ஸ்தண்டிலத்தில் சக்தியை பூஜை செய்து யந்திரிகையில் மூன்று தத்வத்தை பூஜிக்க வேண்டும்.

166. பாத்ரத்தில் பிரதானமான மாயா தத்வத்தையும் அரிசியில்சிவனையும் விபூதி பாத்திரத்தில் உமா சக்தியையும் விபூதியில் லகுளீச்வரனையும்

167. சூத்ரத்தில் அனந்தன் முதலிய நாகர்களையும் பூஜை செய்து சந்தனம் முதலிய உபசாரங்களை செய்து பட்டு முதலான வஸ்திரங்களால் பாத்திரத்தை மூடி மாலையை அதன்மேல் வைக்கவேண்டும்.

168. எல்லா அலங்காரங்களோடும், எல்லா வாத்யங்களோடும் கிராம பிரதட்சிணமோ அல்லது ஆலய பிரதட்சிணமோ செய்ய வேண்டும்.

169. அல்லது செய்யாமலும் இருக்கலாம். பிறகு இறைவனை பூஜிக்க வேண்டும். கட்டைவிரல் மோதிர விரலால் இவைகளால் இடதுகையில் எடுத்து

170. விபூதியோடும் வலது இரண்டு விரல்களினால் அந்த ரக்ஷõ சூத்ரத்தை பூச வேண்டும். அனுஷ்டுப்புடன் கூடிய நேத்ர மந்திரத்தால் (த்ரயம்பகம் என்ற மந்திரத்தால்)

171. தெய்வங்களுடைய வலது மணிக்கட்டில் கட்டி அந்த இடத்தில் விபூதியை வைக்கவேண்டும். இது ஆண் தெய்வங்களுக்கு பொருந்தும். பெண் தெய்வங்களுக்கு வலது கையிலோ, இடது கையிலோ கட்டலாம்.

172. ஆசார்யன் முதலியோர் மக்களுக்கு விபூதி கொடுக்க வேண்டும், தாம்பூலம், அப்பம், பழம், தேங்காய், இவைகளையும் கொடுக்க வேண்டும்.

173. தேவனுக்கும் பக்தர்களுக்கும் கொடுக்க வேண்டும். கொடுக்காமலும் இருக்கலாம். ஸோமாஸ் கந்தரிடமோ, ஸ்கந்தரில்லாமலுள்ள உமாமஹேச்வரரிடமோ, சந்திரசேகரிடமோ ரக்ஷõபந்தினம் செய்ய வேண்டும்.

174. தேவியோடு கூடியதாக இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக உடைய நர்த்தன ரூபத்திலும் உமாமகேச்வரர் உட்கார்ந்திருக்கும் மூர்த்தி சுகாசீனர், மஹேச்வரன்

175. அல்லது உத்ஸவத்திற்காக ஏற்பட்ட சாந்த உருவமுடைய இறைவனுக்கும் இன்னும் பல மூர்த்திகளுக்கும் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரக்ஷõ பந்தனம் சொல்லப்படுகிறது.

176. கிராமபிரதட்சிணத்தை ரக்ஷõபந்தனம் முடிந்த பிறகு செய்யவேண்டும். இவை இரண்டும் யாகாரம்ப காலத்தில் (தினத்தில்) செய்யவேண்டும் என சொல்லப்படுகிறது.

177. மற்றொரு நாளில் அல்லது உத்ஸவத்தின் நடுவில் விரும்பிய தெய்வத்திற்கு ரøக்ஷ கட்டிவிடலாம். அல்லது அதற்கு முதல் நாளும் கட்டிவிடலாம்.

178. ரவுத்ர மூர்த்தியினிடத்திலும் சாந்த மூர்த்தியினிடத்திலும், சிவபக்தரிடத்திலும் இந்த விதி பொருந்தும். திரிசூலத்தின் நடுபாகத்திலோ, அதில் உள்ள தெய்வத்தின் கையிலோ ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

179. தசாயுதங்கள் எல்லாவற்றிற்கும், யாக ஆரம்ப முதல் நாளோ அல்லது அந்த நாளிலோ ஸூத்ர பந்தனம் செய்யவேண்டும்.

180. இது இரண்டிற்கும் முன்பு தீர்த்தாங்குரம் செய்யவேண்டும். ஆசார்யன் மூர்த்திபர்களுடன்கூடி (சித்விக்குகளுடன்) ஸகளீகரணம் முதலியன செய்துகொண்டு

181. திவார பூஜையை, செய்து யாகசாலையில் நுழைந்து பிரம்மேஷ்டி (ஸந்த்யாவந்தனம்), பூதசுத்தி, ஸகளீகரணம் முதலியவைகளைச் செய்து

182. பாத்யம், அர்க்யம், ஆசமனம், இவைகளை கொடுத்து, அர்க்ய ஜலத்தால் பிரோக்ஷணம் செய்து யாகசாலையில் ஸ்தண்டிலத்தில் சிவாஸனம் செய்து

183. சிவ கும்பத்தில் மூர்த்தியை மூர்த்தி மந்திரத்தால் ஆவாஹனம் செய்து, பஞ்ச பிரம்ம மந்திரங்களையும் நியாசித்து கலாநியாஸமும் செய்ய வேண்டும்.

184. வித்யாதேஹத்தை கல்பித்து பிரணவ ரூபமான சிவபெருமானை ஆவாஹணம் செய்து ஹ்ருதயம், முதலிய மந்திரங்களை நியாஸம் செய்து பாத்யம் முதலிய உபசாரங்களை செய்ய வேண்டும்.

185. இவ்விதம் மனோன்மணியையும், சக்தி மந்திரத்தால், பூஜிக்கவேண்டும். சுற்றிலும் வித்யேச்வரர்களையும் லோகபாலர்களையும் பூஜிக்கவேண்டும்.

186. அவர்களுடைய பத்து ஆயுதங்களையும் கண்ணாடி முதலிய அஷ்டமங்களப் பொருளையும் பூஜிக்கவேண்டும். அவைகளை வேதிகையின் பக்கத்திலும் ஸ்தண்டிலத்திற்கு மேலேயோ அல்லது ஸ்தலத்திலோ

187. எட்டு திக்குகளிலுமோ, அல்லது திக்கிற்கு இரண்டு இரண்டாக வேண்டும் அதன் முடிவில் எட்டு திக்குகளில் ஸ்தண்டிலத்தில் உள்ள தசாயுதங்களை

188. முறையாக பூஜித்து ஆசார்யன்யாக குண்டத்தின் அருகில் சென்று அதன் ஸம்ஸ்காரங்களை செய்து சிவாக்னியை முறைப்படி ஏற்படுத்த வேண்டும்.

189. ஒன்பது, ஐந்து, இவ்விதம் அவரவர்கள் குண்டங்களில் ஆவாஹணம் செய்து சிவனை நன்கு பூஜித்து பிரும்மாங்கங்களோடு சேர்த்து ஹோமம் செய்யவேண்டும்.

190. கிழக்கு முதலிய நான்கு திக்குகளிலும் வக்த்ரம் (தத்புருஷ) முதலிய மந்திரங்களையும் தென்கிழக்கு முதலிய விதிக்குகளில் ஹ்ருதயம் முதலிய மந்திரங்களையும் தன்தன்பிரதானமந்திரங்களோடு பூஜித்து மற்ற எல்லா மந்திரங்களை பிரதான குண்டத்தில் ஹோமம் செய்ய வேண்டும்.

191. மூங்கிலரிசி, பில்வம், யவை, ஸத்துமா, பால், வெல்லம், எள், கடுகு, பயறு இவைகள் எதுவும் ஹோமத்தில் இடம்பெறுபவையாகும்.

192. (பிரும்மசாலி) பெருநெல், யவை அல்லது உளுந்து, நெல், யவை அல்லது எள், கடுகு, பயிறு அல்லது ஸத்துமா மூங்கிலரிசி, வெல்லம், தேன்

193. என்று நான்குவிதமாக ஹோமத்ரவ்யம் சொல்லப்பட்டது. ஸமித்து, நெய், அன்னம், பொறி இவைகளை நான்கு பகுதிகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

194. சிவாங்க மந்திரத்தில் பத்தில் ஒரு பங்கும் மற்றும் 108 முறை மூல மந்திர ஹோமமும் பிரதான குண்டத்தில் செய்து, கலைகளுக்காக மற்ற குண்டங்களிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

195. திரவ்ய பேதங்களால், மந்திரங்கள் சிவாமத்தில் சில சொல்லப்பட்டன. ஆனால் தந்திரங்களின் பேதத்தால் மந்திரபேதம் இங்கு சொல்லப்படவில்லை.

196. ஹவிஸ்ஹோமம் ஹோமத்தின் முடிவிலோ ஹோமத்தின் ஆரம்பத்திலோ செய்யலாம். அதன் முடிவில் பலிதானம் செய்யவும் அதன் முறை இங்கு சொல்லப்படுகிறது.

197. நித்யோத்ஸவ முறையில் உள்ள ஹவிர்மயமான அன்ன லிங்கத்தை செய்து அங்கு அஸ்திர ராஜரை பூஜித்து திரிசூலத்தோடு கூடிய

198. தசாயுதங்களோடும், தூபதீபங்களோடும், மணிநாதத்தோடும், திரவ்யத்தோடும்

199. குடை முதலிய உபசாரங்களோடும் பலவித வாத்யங்களோடும் நகரம் முதலியவைகளில் ஆசார்யனோ, அல்லது சிஷ்யனோ பிரவேசிக்க வேண்டும்.

200. தேவதா ஆஹ்வானம் செய்யும் இடத்தில் பலியை முறையாக கொடுத்து மோதகம், இட்லி, பயிறு, வெல்லம், சத்துமா கணேச்வரர்க்கும்
                                                                          படலம் 6/2 : தொடரும்...