ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

40. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

40. ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு




நாற்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 873 - 915]

ஸ்ரீ மஹா தேவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - இரண்டு...

இவர் கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் ''கண்ணையா''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ''சிவராம பட்டர்''.

இவர் நீண்ட காலம் தவம் செய்து அதன் மூலமாக பெற்ற தேஜஸினால், தபோ பலம், ஞானத்தால் இவரை மக்கள் ''சோபன மகாதேவர்'', ''உஜ்வல மஹாதேவர்'' என்று பெருமையோடு அழைக்கப்பட்டார். இவர் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல் படுத்தினார்...

இவர் கி.பி. 915 ஆம் ஆண்டு, பவ வருடம் வைகாசி மாதம், வளர் பிறை, சஷ்டி திதி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 43 ஆண்டுகள் காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்துள்ளார்....

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

திருவானைக்காவல் உள்ள சங்கர மடத்தின் உண்மை வரலாறு

திருவானைக்காவல் உள்ள சங்கர மடத்தின் உண்மை வரலாறு:




The math at Thiruvanaikaval was called Narpathennayira matam (ARE 486 of 1908). “Ascetics, Devotees and Lords of Matams” by Michille L. Folk has this to say about the matha.

“Among the rare exceptions of Chola-period inscriptions at maṭams are two records from the Śaṁkarācāryasvāmin maṭam at Tiruvanaikkaval (Jambukesvaram) in Tiruchirappalli district. Both inscriptions are located on the west wall of the maṭam and record a donation for the building of the Naṟpatteṇṇāyiravaṉ maṭam on the northern side of the temple at Tiruvanaikkaval.

The first inscription is attributed to the rule of Tribhuvanachakravartin Konerinmaikondan. It records that the maṭam was built by Avūruṭaiyāṉ Coḻakoṉ and explains that ascetics were to be fed therein (ARE 486 of 1908).

The second inscription refers to the building of this same maṭam and is dated in the reignal year of the same ruler (ARE 487 of 1908). These inscriptions also indicate that the people of this maṭam were the disciples of Namaśśīvāyadevar of the Śaiva Tiruccattimuṟṟattu Mutaliyār lineage.

12 The editors of the Annual Report on Indian Epigraphy for the year 1909 write that there can be no doubt that the present-day Śaṁkarācāryasvāmin maṭam is the Naṟpatteṇṇāyiravaṉ maṭam of the inscriptions (ARE 1909, 103).

13 On the basis of their examination of other inscriptions, they suggest that the ruler of the inscriptions is later than the Chola king Kulottunga I (r.y. 1070-1120), though it is difficult to determine whether he was Chola or Pandya.

The fact that both inscriptions describe the people who presided over the maṭam as disciples of Namaśśīvāyadevar of the Tiruccattimuṟṟattu Mutaliyār lineage suggests that its earliest date may be the thirteenth century since it is only in the thirteenth century that the word mutaliyār (he who is first) appears in the inscriptions in relation to maṭams and lineage.

In a court case, the Kumbakonam math stated that Sri Sankara adorned the Ambal in Gajaranya Kshetra atThiruvanaikonil and established a matha there. Did Sankara found a matha there? Was the math from 1101 BC (Sivarahasya says so).

Thiruvachaka Mani, Sru K.M. Balasubramanian writes in detail (“Life of J.M. Nallasamy Pillai”) about the saiva mathas and declares as follows:

“Thus it becomes apparent that the present mutt of Sankarcharya swami at Thiuvanaikaval had belonged originally to the saiva mutt at Thiruchattimutram and was presided over by th teachers of the lineage of the mudaliyars of that place.”

Dr. T.V. Mahalingam, in his review of 135 of 36-7 in JOR related to the changes in the management and right of worship in Jambukeswaram temple.Lakshadyayi Sampradaya monks managed for a long time and then was placed in the hands of a grahasta Chandrasekara Guru. This guru died in1605. Inscriptions mention the gurus of this line till 1714(130 of 36-7). The Kumbakonam this saiva math as Lokaguru Sankaracharya Swami Mutt.

ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...

 ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமிகள், ஸ்ரீ மஹா பெரியவா, ஸ்ரீ பரமாச்சார்யாள், என்று உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால் போற்றி வணங்கப்படும் நடமாடும் தெய்வம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தன்னை இச்சா சக்தி என்றும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை கிரியா சக்தி என்றும் போற்றியுள்ளார். இத்தகைய பெருமை வாய்ந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தமது குரு ஸ்ரீமஹா ஸ்வாமிகள் அவர்களால் மார்ச் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்காம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தி ஒன்பதாவது ஆச்சார்யராக நியமிக்க பட்டதில் இருந்து பாரத தேசம் முழுவதும் யாத்திரைகள் பல செய்து நமது சனாதன மதத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு இங்கே சொல்லி மாளாது. இருப்பினும் அடியேனுக்கு தெரிந்ததை சொல்கிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்னற்ற பாடசாலைகள், சங்கரா பள்ளிகள், சங்கரா சிபிஎஸ் பள்ளி பாடங்களுடன் சேர்த்து வேத பாடசாலைகள், சங்கரா கல்லூரிகள், சங்கரா கண் மருத்துவமனைகள், சங்கரா முதியோர் இல்லங்கள், சங்கரா ஆயூர் வேதா கல்லூரிகள், ஜன கல்யான், சங்கரா சாரிட்டபுள் டிரஸ்ட், சங்கரா மருத்துவமனைகள், பாரத தேசம் முழுவதும் சங்கர மடங்கள் நிருவியது, சங்கரா கல்யாண மண்டபங்கள், காலடியில் ஆதிசங்கரருக்கு கீர்த்தி ஸ்தம்பம்  என்று நம் நம் புது பெரியவாளால் தொடங்கப்பட்டு இன்று வரை  ஏராளமான மக்களுக்கு பல நல திட்ட உதவிகளை செய்து வருவது நம் புது பெரியவாளால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. ஒரு சன்யாசியாக மட்டும் இல்லாமல் நம் சனாதன மதத்திற்கு இவர் ஆற்றிய சேவை இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து. இது போல் இன்னும் ஏராளமான பணிகளை செய்தது காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தி ஒன்பதாவது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரி ஸ்வாமிகளால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்றால் அது மிகையாகாது.


அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில்



108 திவ்ய தேசங்கள் : அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில்

மூலவர்: ஸ்ரீ வைகுண்டநாதர் (நின்ற திருக்கோலம்)
உற்சவர்: ஸ்ரீ கள்ளப்பிரான்
தாயார்:வைகுந்த நாயகி, சோரநாத நாயகி
தீர்த்தம்:தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு மேல்
ஊர்: ஸ்ரீ வைகுண்டம்
மாவட்டம்: தூத்துக்குடி
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்:நம்மாழ்வார், மணவாள மாமுனிகள்,மங்களாசாசனம்

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.-நம்மாழ்வார்
 
விழா:வைகுண்ட ஏகாதசி, தை தெப்பத்திருவிழா   
       
சிறப்பு:பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது.   
       
திறக்கும் நேரம்:காலை 07.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி: அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில்,ஸ்ரீ வைகுண்டம் - 628601,தூத்துக்குடி மாவட்டம்.போன்:+91 4630 256 476  
      
தகவல்:சூரியத்தலம்:நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது. இங்கு ஸ்வாமி, இந்திர விமானத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி தருகிறார். கையில் தண்டம் இருக்கிறது. தலைக்கு மேலே ஆதிசேஷன் குடையாக இருக்கிறார். ஸ்வாமியுடன் தாயார்கள் கிடையாது. பிரகாரத்தில் வைகுந்தவல்லித்தாயார் சன்னதி இருக்கிறது. சித்திரை மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று காலையில் சூரிய ஒளி வைகுண்டநாதர் பாதத்தில் விழும். இதற்கு ஏற்றாற்போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

கள்ளனாக வந்த பிரான்: வைகுண்டநாதர் பக்தனான காலதூஷகன் என்ற திருடன், தான் திருடியதில் பாதியை கோவில் சேவைக்கும், மீதியை தான, தர்மங்கள் செய்யவும் செலவிட்டான். ஒரு சமயம் மணப்படை என்ற ஊரில், அரண்மனை பொருட்களைத் திருடச் சென்ற போது, அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொண்டனர். கால தூஷகனைத் தேடி அரண்மனை சேவகர்கள் வந்தனர். இவ்வேளையில் இத்தலத்து பெருமாளே, திருடன் வடிவில் அரண்மனைக்குச் சென்றார். மன்னன் முன் நின்றவர், "மன்னா! நான் திருடியதாக குற்றம் சாட்டுகிறீர்களே! எதற்காக திருடினேன் என்று தெரியுமா? நாட்டில் ஒருவனுக்கு பணப்பற்றாக் குறை இருக்கிறதென்றால், அந்நாட்டு மன்னனின் ஆட்சி சரியில்லை என்று தான் அர்த்தம். என்னிடம் பொருள் இல்லாததால் தான் நான் திருடினேன். ஆகவே என்னை என குற்றப்படுத்த முடியாது,'' என்றார். இதைக்கேட்ட மன்னர் திடுக்கிட்டு, ஒரு திருடனால் இப்படி தைரியமாகப் பேச முடியாது எனப்புரிந்து கொண்டு, வந்திருப்பது யார் எனக்கேட்டார். ஸ்வாமி தன் சுயரூபம் காட்டியருளினார். மன்னன் உண்மை அறிந்து மன்னிப்பு வேண்டினான். திருடன் வடிவில் வந்ததாலும், பக்தர்களின் உள்ளங்களை கவரும் அழகுடன் இருப்பதாலும் ஸ்வாமிக்கு, "கள்ளபிரான்' என்ற பெயர் ஏற்பட்டது.

108 போர்வை அலங்காரம்: தை முதல் நாளில் கள்ளபிரானுக்கு, 108 போர்வைகள் அணிவித்து பூஜிப்பர். பின் அவர் கொடிமரத்தைச் சுற்றி வருவார். அதன் பின் ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலைப்பர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.

ஆச்சாரியாரின் அழகிய விளக்கம்: நம்மாழ்வார் தனது பாசுரத்தில், "புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று'' என்று மங்களாசாசனம் செய்துள்ளார். "பசியாக இருக்கும் ஒருவர் சமையல் முடியும் வரையில் படுத்திருந்து காத்திருப்பார். பசி கூடும் போது ஆர்வத்தில் எழுந்து அமர்ந்து கொள்வார். சமையல் முடிய இன்னும் தாமதமானால் பொறுமையிழந்து எழுந்து நிற்பார். இதைப்போலவே நம்மாழ்வாருக்கு அருள வந்த பெருமாள் அவர் பக்தியில் உயர் நிலை அடையும் வரையில் முதலில் புளியங்குடியில் கிடந்தும் (படுத்த கோலம்) பின் வரகுணமங்கையில் அமர்ந்தும், இத்தலத்தில் நின்றும் காட்சி தருகிறார்,'' என வைணவ ஆச்சாரியாரான அழகிய மணவாளப்பெருமான் நம்மாழ்வாரின் பாசுரத்திற்கு விளக்கம் சொல்லியுள்ளார்.

நம்மாழ்வார் மங்களாசாசனம்: சித்திரை விழாவின் போது நம்மாழ்வார் அவரது பிறந்த தலமான ஆழ்வார் திருநகரியிலிருந்து அத்தலத்து பெருமாள் பொலிந்து நின்ற பிரானுடன் இங்கு எழுந்தருளுவார். ஸ்வாமியை மங்களாசாசனம் செய்த பின், அன்ன வாகனத்தில் எழுந்தருளுவார். அவ்வேளையில் கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுணமங்கை வெற்றிருக்கை பெருமாள், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் ஆகிய நால்வரும் கருட சேவை சாதிப்பர். பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர், ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
      
ஸ்தல பெருமை:நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.  

அதன்படி
1. சூரியன் : ஸ்ரீ வைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்ரன் : தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலைவில்லிமங்கலம்)
9. கேது : 2 . இரட்டைத் திருப்பதி
இங்கு பெருமாள் சந்திர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.

சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சன்னதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும். பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனி சிறப்பாகும்.

வைகுண்டமும் உண்டு... கயிலாயமும் உண்டு: காவிஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானுக்குரியது கயிலாயம். பக்தர்கள் பிறவாநிலை (மோட்சம்) கிடைக்க இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு ஸ்வாமியை வணங்குகின்றனர். இத்தலத்தில் ஸ்வாமியே, வைகுண்டநாதராக அருளுவதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைப்பதாக நம்பிக்கை. தவிர, இந்த ஊரிலேயே கயிலாசநாதர் [நவகைலாய தலம்] கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலில் வேண்டிக் கொள்பவர்களுக்கு கயிலாயத்தில் இடம் கிடைக்கும். இவ்வாறு ஒரே ஊரில் வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மணித்துளி தரிசனம் வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வர். இவ்வேளையில் சன்னதியை அடைத்து விடுவர். பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, ஸ்வாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒரு சில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இவ்வேளையில் ஸ்வாமியை தரிசித்தால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக நம்பிக்கை.

ஸ்தல வரலாறு:சோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத சாஸ்திரங்களைத் திருடிச்சென்றான். இதனால் படைப்புத் தொழில் நின்று போனது. வருந்திய பிரம்மா, மகாவிஷ்ணுவை வேண்டி பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த ஸ்வாமி, அசுரனை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளி, "வைகுண்டநாதர்'' என்ற திருநாமம் பெற்றார்.

பால்பாண்டி தென்னகத்தில் குறிப்பாக மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளது. இது இத்தலத்து பெருமாளின் பெயராகும். பல ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் வழிபாடின்றி மறைந்து போனது. ஸ்வாமி சிலையும் ஆற்றங்கரையில் ஓரிடத்தில் புதைந்திருந்தது. இவ்வேளையில் இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு, தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்து வந்த பாண்டிய மன்னன், அவ்விடத்தில் ஸ்வாமி சிலை இருந்ததைக் கண்டு கோவில் எழுப்பினான். அன்றிலிருந்து தினமும் ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான். இதனடிப்படையில் தற்போதும் தினமும் காலையில் இவருக்கு பால் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. பாண்டியன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த ஸ்வாமிக்கும் "பால்பாண்டி' என்ற பெயர் ஏற்பட்டது.

அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோவில்


274 சிவாலயங்கள் : அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : திருமாகறலீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர், நடராஜர்
அம்பாள் : திரிபுவன நாயகி
தலவிருட்சம் : எலுமிச்சை
தீர்த்தம் : அக்னி
ஆகமம் பூஜை : 4 காலம்
பழமை : 1800வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருமாகறல்
ஊர் : திருமாகறல்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் 11 பதிகம் பாடியுள்ளார். தேவாரப்பதிகம்

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய் இன்னவகை யால்இனிது இறைஞ்சி இமை யோரிலெழு மாகறலுளான் மின்னை விரி புன்சடையின் மேல்மலர்கள் கங்கையொடு திங்களெனவே உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே.-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 7வது ஸ்தலம்.
 
விழா : மாசி மாதம் பத்துநாள் பிரம்மோற்ஸவம்.   
       
சிறப்பு : இத்தல இறைவனுக்கு அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின் பகுதி) அமைப்பில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப்பரிசாக வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத்தம்பதிகளை வெள்ளையானையில் அமரச்செய்து அக்காட்சியை கண்ணாற கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப, முருகன் இத்தலத்தில் வெள்ளையானை மீது அமர்ந்து காட்சி தந்தார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.   
       
திறக்கும் நேரம் : காலை 07:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை மணி 06:00 முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும். அருள் மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல் : 631 603, காஞ்சிபுரம் மாவட்டம். போன் : +91- 94435 96619.  
      
தகவல் : அழகிய சுதை சிற்பங்களோடு ஐந்து நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரமும் உள்ளது. பிரகாரத்தில் கணபதி, ஆறுமுகன், அறுபத்து மூவர், நடராஜர், பைரவர், நவக்கிரக சன்னதி உள்ளது. விமானத்தில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தியைக் காணலாம்.
 
பிரார்த்தனை : இத்தலத்தின் அபிஷேக தீர்த்தத்தை ஒரு மண்டலம் சாப்பிட்டால் ரத்தம் சம்பந்தப்பட்டவை, எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் ஆகிய நோய்களின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் விலகவும் பூஜை செய்யலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு அங்க பிரதட்சணம் செய்கிறார்கள்.
 
பெருமை : முருகப்பெருமான் சூரபத்மன் முதலிய அரக்கர்களை அழிக்க போர் செய்த போது தப்பிப் பிழைத்த மாக்கிரகன் என்ற அசுரன் சிவபூஜை செய்து வந்தான். அவன் இத்தலம் வந்த போது இங்குள்ள இறைவனுக்கு தன் பெயரால் மாக்கிரன் என பெயர் சூட்டினான். இப்பெயர் மருவி "மாகறலீசர்' என்று மாறியது.
 
ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் பிரம்மா இத்தலத்தில் சிவபூஜை செய்து விட்டு சத்தியலோகம் செல்லும் போது ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசய பலாமரம் ஒன்றை நட்டார். அப்பலாமரம் நாள் தோறும் கனி கொடுத்து வந்தது. ராஜேந்திர சோழ மன்னன் இந்த அதிசய பலாமரத்தைக் கண்டு வியந்து அந்த ஊரிலிருந்து தினமும் ஒருவர் தலைச்சுமையாக இந்த பழத்தை எடுத்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டான். நடராஜருக்கு இப்பழத்தை மதிய வேளையில் நைவேத்தியம் செய்து அதை மன்னருக்கு கொடுப்பது வழக்கம். ஒருமுறை அந்தண சிறுவனின் முறை வந்தது. இந்த மரத்தில் இருந்து தினமும் பழம் பறித்துப் போக மக்களை ஏவும் மன்னன் வேலைக்காரர்களை இதற்கென நியமித்திருக்கலாமே என எண்ணிய அவன் ஒரு தந்திரம் செய்தான். அந்த ஊர் மக்களிடம் நான் சிறுவன். பழத்தை சுமக்க சிரமப்படுவேன். நீங்கள் எல்லோரும் போய் இந்த பழத்தை கொடுத்து வாருங்கள். நான் இங்கிருந்து உங்கள் வீடுகளை பார்த்து கொள்கிறேன் என்று கூற அனைவரும் சிதம்பரம் சென்று விட்டனர். இந்த மரம் இருந்தால் தானே பிரச்னை வரும். இதை அழித்து விட்டால் நம் ஊர் மக்கள் தினமும் பழம் சுமக்கும் தொல்லை இருக்காதே எனக் கருதியவன் அந்த மரத்தை எரித்து விட்டான். ஊர் திரும்பிய மக்களிடம் பலாமரத்தில் தானாக தீப்பிடித்து சாம்பலாகி விட்டதாக தெரிவித்தான். ஊராரும் நம்பி விட்டனர். மறுநாள் பலாப்பழம் சிதம்பரம் செல்லவில்லை. அந்த சிறுவனை அழைத்து மன்னர் விசாரித்தார். அப்போது அவன் பலாப்பழத்தை சிதம்பரம் கொண்டு வருவதற்கு தாங்கள் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. எனவே தான் மரத்தை எரித்தேன் என்றான். அதற்கு மன்னன் தகுந்த வசதி வேண்டும் என நீ இதை என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதை நீ செய்யாததால் உனது கண்களை கட்டி நாடு கடத்த உத்தரவிடுகிறேன் என்றான். காவலர்கள் சிறுவனை அழைத்துச் சென்ற போது மன்னனும் உடன் சென்றான். ஊர் எல்லையில் அவனை விட்டு விட்டு திரும்பிய போது ஓரிடத்தில் பொன்னிற உடும்பு தென்பட்டது. அதை பிடிக்க காவலாளிகள் சென்ற போது அது ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. காவலாளிகள் அந்த புற்றை ஆயுதங்களால் அந்த புற்றை கலைத்த போது உடும்பின் வாலிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது அசரீரி தோன்றி சிறுவன் என்றும் பாராமல் நாடு கடத்தியதற்காக கண்டனக்குரல் எழுந்தது. மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்த மன்னனிடம் மீண்டும் அசரீரி தோன்றி சிவபெருமானே உடும்பாக வந்ததாகவும் அவ்விடத்தில் ஓர் சிவாலயம் கட்டி வழிபாடு செய்யும் படியும் ஆணையிட்டார். மன்னனும் அதன் படியே செய்தான். இன்றும் கூட உடும்பின் வால் அளவிலுள்ள லிங்கம் தான் மூலஸ்தானத்தில் உள்ளது. 




அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்


 274 சிவாலயங்கள்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்

மூலவர் : அமிர்தகடேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்பாள் : வித்யூஜோதிநாயகி
தல விருட்சம் : கடம்பமரம்
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
ஆகமம் பூஜை  : காமிகம்
பழமை : 2000 வருடங்களுக்கு மேல்
புராண பெயர் : திருக்கடம்பூர்
ஊர் : மேலக்கடம்பூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர்
       
தேவாரப்பதிகம்

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோவிலான் தன் கடன் அடியேனைத் தாங்குதல் என் கடன்பணி செய்து கிடப்பதே.திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 34வது ஸ்தலம்.
 

விழா:சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம்.   
       

சிறப்பு:இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகுதான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே, இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.   
       
திறக்கும் நேரம்:காலை 07.30 மணி முதல்10.00 மணி வரை, மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சிவனை தரிசிக்கலாம்.  
     
முகவரி: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், மேலக்கடம்பூர்- 608 304. கடலூர் மாவட்டம்.போன்:+91- 264 638, 93456 56982.  
      

தகவல்:தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார். கோஷ்ட சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசியன்று இவருக்கு பூஜைகள் நடக்கிறது.

பின்புற சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கோஷ்டசுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரும் இருக்கின்றனர். விமானத்தில் தெட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இத்தலவிநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.

பிரார்த்தனை:செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய ஸ்தலம். இங்கு சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் அதிகளவில் நடக்கிறது.

பெருமை:நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொருநாளும், அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். எனவே, இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.

அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை, "வித்யஜோதிநாயகி' (வித்யா - சரஸ்வதி, ஜோதி - லட்சுமி, நாயகி - துர்க்கை) என்று அழைக்கின்றனர். இவளுக்கு "ஜோதிமின்னம்மை' என்றும் பெயர் உண்டு.

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் அம்பாளுக்கு மஞ்சள் கிழங்கு, வளையல் படைத்து வழிபடுகிறார்கள். திருநாவுக்கரசர், ""என் கடன் பணிசெய்து கிடப்பதே,'' என்று இத்தலத்தில்தான் பதிகம் பாடினார்.

ரிஷபதாண்டவர் இத்தலத்தில் "ரிஷபதாண்டவமூர்த்தி' நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும்.

இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.

ஆரவார விநாயகர்: இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு, "ஆரவார விநாயகர்' என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சிதருகிறார்.

செவ்வாய்தோஷ தலம்: சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே, இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார். செவ்வாய் கிரகம், தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார்.

கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர்.  அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்துக் கொண்டாடினார் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குவதாக சொல்கிறார்கள்.

அருகிலுள்ள துர்க்கை கட்டை விரல் இல்லாமல், சிம்ம வாகனத்துடன் இருக்கிறாள். இவளுக்கு கீழே மேரு மலை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.   
       
ஸ்தல வரலாறு:பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை பருகச்சென்றனர். இதைக்கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதகலசத்தை எடுத்துச் சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.  தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி "அமிர்தகடேஸ்வரர்' என்ற பெயரும் பெற்றார்.

தேவர்களின் தாயான அதிதி தன் மக்களுக்கு அமிர்தம் கொடுத்து அருள்செய்த அமிர்தகடேஸ்வரரை தொடர்ந்து வணங்கி வந்தார். அவர் இதற்காக தினசரி தேவலோகத்திலிருந்து இங்கு வருவதை இந்திரன் விரும்பவில்லை. எனவே, இங்குள்ள சிவனை கோயிலோடு இந்திரலோகத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணி, கோயிலை தேர் வடிவில் மாற்றினான். கோயிலை இழுத்துச் செல்ல முயன்றான். அப்போது விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை.

விநாயகரின் செயலை அறிந்த அவன் அவரிடம், தான் தேரை எடுத்துச்செல்ல வழிவிடும்படி வேண்டினார். விநாயகர் அவனிடம், கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்றார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கம் செய்தான். ஆனால் எல்லா லிங்கங்களும் பின்னப்பட்டன. தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வணங்கினான். அவர், ஆயிரம் முறை தன் நாமம் சொல்லி, ஒரு லிங்கத்தை செய்யும்படி கூறினார். அதன்படி, இந்திரன் "ருத்ரகோடீஸ்வர' லிங்கத்தை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து, ""தான் இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி, அதிதிக்கு பதிலாக நீயே இங்கு வந்து என்னை தரிசிக்கலாம்,'' என்றார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரியாக இங்கு இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.




சிறப்பம்சம்:அதிசயத்தின் அடிப்படையில்: பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

ஆவணிஅவிட்டம்


ஆவணிஅவிட்டம்

புது பூணூல் மாற்றி கொள்வதற்காக மட்டும் அல்ல. ப்ராசீனமான நமது வைதிக சம்ப்ரதாயத்தில் பல பண்டிகைகள், விழாக்கள் உண்டு. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது என்பதையும் நாம் அறிந்ததே.

அதுமாதிரி வேதத்திற்காக ஒரு பண்டிகை, உண்டு என்றால் அது உபாகர்மா எனும் பண்டிகைதான்.

ஆவணியாவிட்டம் என்றும் சொல்லப்படும் இந்த பண்டிகை வேறு எதை உத்தேசித்தும் கொண்டாடப் படுவதில்லை.

ஆனால் இக்காலகட்டத்தில் நம்மில் எத்தனை பேர் ஆவணியாவிட்டத்தன்று இந்த பண்டிகை வேதத்தை உத்தேசித்துதான் கொண்டாடப்படுகின்றதுஎன அறிந்துள்ளோமா என்பது சந்தேகம்தான்.

ஆவணி அவிட்டம் என்ற உடனே புது பூணூல் மாற்றி கொள்வது மட்டும்தான் என்று நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கலாம். ஓரளவிற்கு இதில் உண்மை இருந்தாலும், உபாகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அருமையான பண்டிகை பல அபூர்வமான வேதோக்த அங்கங்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதுதான் சத்தியம்.

பொதுவாக ஆவணி மாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் இந்த பண்டிகை வருவதால் இதற்கு ஆவணி அவிட்டம் என்று ஒரு பெயர் வந்திருக்கலாம். ச்ரவண மாதத்தில் வருவதால் இதற்கு ‘ச்ரவணம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ஆனால் உபாகர்மா என்பதுதான் இதன் உண்மையான பெயர்.

உபாகர்மா என்ற வார்த்தைக்கு "ஆரம்பம்" என்று அர்த்தம். அதாவது வேதாரம்பம்.

ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயம் உபாக்ருத்ய மாஸ ப்ரதோஷே ந அதீயீத, தேஷ்யாம் பெளர்ணமாஸ்யாம் ரோஹின்யாம் வா விரமேத்” என்று ஆபஸ்தம்பர் கூறுகிறார்.

இந்த வாக்யத்தின் முதல் பகுதியின் அர்த்தம் என்னவென்றால் *ஆடி அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பெளர்ணமி அன்று முதல் ச்ராவணமானால் ப்ரஹ்மச்சாரிக்கும், மற்ற க்ரஹஸ்தர்களுக்கும் இந்த நாள் வேதாரம்பம் ஆகும்.

மேலும் வேதத்திற்கு யாதயாம தோஷம் வருகின்றதாம். அதாவது ‘பழையது’ என சொல்லுகிறோம் அல்லவா அது மாதிரி. இந்த தோஷம் நீங்கவும் உபாகர்மா செய்யப்படுகின்றது.

வேதத்திற்குபோய் ‘பழையதுனு தோஷம்' எப்படி வரும் எனும் சந்தேகம் நமக்கு வந்தால் அது நியாயம்தான்.

வேதத்திற்கு இயற்கையாக எந்த தோஷமும் வராது. ஆனால் நாம், சாதாரண மனிதர்கள், வேதத்தை பாராயணம் செய்வதனால் அதற்கு அந்த தோஷம் வருகிறதாம்.

உதாரணத்திற்கு நாம் ஆலயங்களை எடுத்துக்கொள்ளலாம்.. கும்பாபிஷேகம், பவித்ரோத்ஸவம் நாம் ஏன் செய்கின்றோம் என யோசித்தால் நமக்கு இதன் அடிப்படை புரியும்.

பிரஹ்மாவும், உபாகர்மாவும்:

மேலும், உபாகர்மாவில் ப்ரஹ்மாவும் சம்பந்தப்பட்டுள்ளார். அதையும் பார்ப்போமா..

வேதத்தை ரிஷிகள் இயற்றவில்லை என்பது நமக்கு தெரிந்ததே. ஸர்வஞ்னான ஸர்வேஸ்வரன் ஸங்கல்பம் செய்து கொண்டதாக வேதமே கூறுகின்றது.

இதோ அதற்கான வாக்யம்:
ஸோ காமாயத பஹுஸ்யாம் ப்ரஜா யேயேதி !”
ஈஸ்வரனின் அறிவான அந்த வேதத்தை அவர் முதல் முதலில் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்தார்.

உபதேசம் செய்தார் என்னும்போது வாயால் உபதேசித்ததாக நினைக்க வேண்டாம். சங்கல்பத்தினாலேயே உபதேசித்தார்.

ப்ரஹ்மாவிற்கு பிறகு ப்ரஜாபதிகள் ‘சந்தை’ சொல்லி, ‘திருவை’ சொல்லி வேதத்தை வரப்படுத்தினார்கள். ப்ரஹ்மா உபதேசம் பெற்ற நாள் எது தெரியுமா? ஆவணி அவிட்டம் நாள்

ஆதலால் இது வேதத்தின் ‘ஆண்டு விழாவாகவும்’ Anniversary எடுத்துகொள்ளலாம்.

வேதத்தை கற்றவர்கள், வேதாத்யயனம் செய்தவர்கள், உபாகர்மா செய்து வேதம் சொன்னால்தான் வேதத்திற்கு மஹிமை உண்டு என சாஸ்திரம் சொல்லுகின்றது.

’நாம்தான் வேத அத்யயனம் செய்யவில்லையே ... அப்போ எனக்கு உபாகர்மா அனுஷ்டிப்பதிலிருந்து விதிவிலக்கு உண்டா? “’ என்று சிலர் யோசிக்கலாம். நியாயம்தான்.

வேதாத்யயனம் செய்யாமலிருக்கலாம். ஆனால் உபாகர்மா அனுஷ்டித்துதான் ஆகவேண்டும். எப்படி என்று பார்ப்போம்.

நித்யப்படி நாம் செய்யும் சந்தியா வந்தனத்தில் வரும் மந்திரங்கள், மேலும் காயத்ரி மந்திரம், பூஜை, புனஸ்காரங்களில வரும் மந்திரங்கள், ச்ராத்தம் போன்ற கார்யங்களில் வரும் மந்திரங்களை நாம் வருஷம் முழுவதும் சொல்லுகிறோம் அல்லவா, இவைகள் நமக்கு பலனளிக்க வேண்டுமானால் உபாகர்மா செய்தே ஆக வேண்டும். நாம் சொல்லும் மந்திரங்களுக்கு சக்தி வர வேண்டுமானால் உபாகர்மா ச்ரத்தையாக அனுஷ்டித்தே ஆக வேண்டும்.

இப்போது புரிந்ததா உபாகர்மாவுக்கும் வேதத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் உள்ளது என்று.

இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தையும் தெரிந்துக்கொள்ளுவோம்.

ஒருவனுக்கு உபநயனம் ஆனவுடன் வேத பாடசாலையில் சேர்ந்து வேதம் கற்க முடியாது. பூணூல் போட்ட மாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்க யோக்யதை வருவதில்லை. முதல் உபகர்மா அதாவது தலை ஆவணியாவிட்டம் ஆன பிறகுதான் வேதம் கற்க யோக்யதை வருகின்றது.

உபாகர்மா அன்று நாம் செய்யும் வைதிக சடங்குகளில் வரும் சில அற்புதமான சில விஷயங்களை இங்கே இப்போ பார்ப்போம்:

நூதன யக்ஞோபவீத தாரணம்.

 காமோகார்ஷீத் ஜபம்:

ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் ‘உத்ஸர்ஜனம்’ ஒன்றும் இருக்க வேண்டும் அல்லவா. வேதத்தை யதோக்தமாக உத்ஸர்ஜனம் செய்யவேண்டும். இந்த உத்ஸர்ஜனத்தை அனுஷ்டிப்பவர்கள் மிக குறைவு. ஆதலால்தான் உத்ஸர்ஜனம் செய்யாததற்கு ப்ராயஸ்சித்தமாக ‘காமோகர்ஷீத்...’ என்கின்ற ஜபத்தை இன்று செய்கிறோம்.

மேலும் இது ஒரு சர்வ பாப ப்ராயஸ்சித்த மந்திரமாகவும் விளங்குகின்றது.

தர்ப்பணம், ஹோமம்

மந்திரங்களை நமக்கு ஆதியில் தந்த ரிஷிகளையும், தேவதைகளையும் பூஜித்து அவர்களது தபஸ்சக்தி மூலம் அவர்களுடைய அனுக்ரஹத்தை நாம் அடைய வேண்டித்தான் ச்ராவணத்தில் ப்ரஜாபதி முதலிய ஒன்பது பேர்களுக்கு காண்டரிஷி தர்ப்பணம் செய்கிறோம். தொடர்ந்து ஹோமமும் சொல்லப்பட்டுள்ளது.

மஹா சங்கல்பம்:

எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல் உபாகர்மா அன்று சொல்லப்பட்டுள்ள மஹா ஸங்கல்பம் மிகவும் விசேஷமானது என்பதை நாம் அறிவோம். பல பாவங்களும் தோஷங்களும் நீங்குவதற்கான பிரார்த்தனை வாக்யங்கள் அடங்கியுள்ள இந்த ஸங்கல்பத்தை நாம் பக்தி ச்ரத்தையோடு சொல்லுவது பலன் அளிக்கும். இந்த ஸங்கல்பத்தில் பல தேவதா மூர்த்திகளின் சன்னிதிகளையும், புண்ய க்ஷேத்ரங்களையும், புண்ய நதிகளையும் நாம் நினைவிற்கு கொண்டு வருகின்றோம் அல்லவா. நாம் பாக்யசாலிகள்தாம்.

எனவே வருஷத்தில் நாம் பல சந்தர்பங்களில் செய்யும் பலவிதமான கர்மாக்களில் வரும் மந்திரங்கள் பலம் உள்ளதாக நமக்கு ஸ்ரேயஸ் அளிக்க வேண்டும் என நாம் நினைத்தால் நாம் இந்த  உபாகர்மாவை ச்ரத்தையாக செய்ய வேண்டும்.

உபாகர்மாவை அனுஷ்டானம் செய்யாவிடில் தோஷம் ஏற்படும். சந்தேகமே வேண்டாம். இதை செய்தால்தான் நம்மிடமிருக்கும் சொல்ப வேத மந்திரமானது வீர்யத்தோடு கூடியதாகயிருக்கும்.




39. ஸ்ரீ சத்சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....


ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்மரா....

39. ஸ்ரீ சத்சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்....

முப்பத்தி ஒன்பதாவது ஆச்சார்யர் [கி.பி. 840 - 873]

ஸ்ரீ சத்சித் விலாசேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள். இவரின் தந்தையார் பெயர் ''கமலேஸ்வரர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ஸ்ரீபதி.

அப்போது காஷ்மீரத்தை ''அவந்தி வர்மன்'' [855 - 884] ஆண்டு வந்தான். அவனது அவையில் ''த்வனி'' என்ற நூலினை எழுதிய ''ஆனந்தவர்மன்'', ''ஹரவிஜயம்'' என்ற இரு புத்தகத்தை எழுதிய ''ராஜனகரத்னாகரன்'' ஆகிய புலவர்களும், ''முக்தா கணர்'', ''சிவஸ்வாமி'' ஆகிய கவிஞர்களும் இருந்தனர். அவர்கள் எல்லாம் இந்த ஆசார்யரைப் போற்றிப் புகழ்ந் திருக்கின்றனர். இவர் காஷ்மீர் வரை பாத யாத்திரையாக சென்று பல அற்புதங்களை நிகழ்த்திளுள்ளார்.

இவர் கி.பி. 873 ஆம் ஆண்டு, நந்தன வருடம் வைகாசி மாதம், பௌர்ணமி அன்று காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 33 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.

38. ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்


ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

38. ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்

முப்பத்தி எட்டாவது ஆச்சார்யர் [கி.பி. 788 - 840]

ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், சிதம்பரத்தில் வசித்த அந்தண குலத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் பெயர் ''விஸ்வஜித்'' "விசிஷ்டா'' தம்பதிகளின் மகனாக பிறந்தார். இளம் கருவாய் அன்னை வயிற்றில் இருக்கும் போதே தந்தை காலமானார். உடன் கட்டை ஏறப்போன விசிஷ்டாவை உறவினர்கள் "கர்ப்பவதி உடன் கட்டை ஏறக்கூடாது” எனத் தடுத்து விட்டனர்.

தாயைக் காப்பதற்காக நந்திகேஸ்வரரைப் போல மூன்று ஆண்டுகள் தாயின் கருவிலேயே இருந்தார் இவர்.

குழந்தை பிறந்து நடக்கும் தெம்பு வந்ததும் குழந்தையை எடுத்துச் சென்று தில்லை வனத்தில் வி்ட்டு விட்டு அவ்விடத்தை விட்டு சென்றாள் இந்த குழந்தையின் தாய்.

வண்டு நுகருமுன் தேன் சிந்தும் மலர்களைப் பறிக்க புலிக்கால்கள் வேண்டும் என்று பிரார்த்தித்துப் பெற்ற வியாக்கிரபாத ரிஷி, தன் துணைவியுடன் அவ்வழியே சென்ற போது, இந்த குழந்தையைக் கண்டார்கள். அருகில் யாரும் இல்லாமல் அநாதரவாய் இருக்கும் அந்த குழந்தையை எடுத்து வளர்த்தார். ஐந்து வயதில் உபநயனம் செய்வித்து சகல கலைகளையும் அருளினார்.

ஸ்ரீ மடத்தின் 37 ஆவது பீடாதிபதியான ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் யாத்திரையாக சிதம்பரம் வந்து நடராஜப் பெருமானைத் தரிசித்த நேரம் "ஸ்ரீ அபிநவ சங்கரரை காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதியாக அமர்த்துக" என அசரீரி ஒலித்தது. இதை கேட்ட வித்யாகநேந்திரர் மெய்சிலிர்த்தார்.

அசரீரி வாக்கின் படி ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கி.பி.788 ஆம் ஆண்டு ஸ்ரீ மடத்தின் சங்கராச்சரியாராக தீட்சை பெற்றுப் பீடமேறினார்.

அப்போது காஷ்மீரத்தின் மன்னனாக இருந்தவர் ''ஜயாபீட விநயாதித்யர்''. [கி.பி. 780 - 810] அவரது சபையில்
1. க்ஷரஸ்வாமி
2. வாமனகவி
3. சடகன்
4. சிந்துமன்
5. சங்கமன்
6. தாமோதரன்
7. மனோ தேசன்
8. தக்யன்
என்கிற எட்டு பெரும் புலவர்கள் இருந்தனர். இந்த அஷ்ட புலவர்களையும், வாதத்துக்கு அழைழைத்து தோற்கடித்தார் "வாக்பதி பட்டர்" என்ற பண்டிதர். தோற்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்கினார் அவர்.

மிகவும் வேதனையுற்ற புலவர்கள், அச்சமயம் விஜய யாத்திரையாக காஷ்மீர் வந்திருந்த ஸ்ரீ அபிநவ சங்கரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களிடம் "கர்வம்'' கொண்ட அவரைத் தாங்கள் வாதிட்டு வெற்றி கொள்ள வேண்டும் என வேண்டினார்கள்.

"வாக்பதிபட்டரோடு" தர்க்கம் புரிந்து வெற்றி பெற்று ''சர்வக்ஞர்'', ''அபி நவதீரர்'' என்று போற்றப்பட்டார்.

இதை ''ராஜதரங்கணீயமும்'', மற்றும் ''சத்குரு சந்தான பரிமளம்'' என்ற இரு நூலும் சான்று.

காஷ்மீரத்தில் ஸ்ரீ ஆசார்யாள் ஆற்றிய அரும்பணிகள் ஏராளம்.

மதம் மாற்றும் மாற்று மதத்தினரான முகமதியரும், சீனரும், பெர்சிய நாட்டவரும் கூட இவரைப் புகழ்ந்து பாராட்டி இருக்கின்றனர்.

52 ஆண்டு காலம் அருளாட்சி புரிந்த இவர் இமயமலைத் தொடரில் உள்ள ''ஆத்ரேயர் குகையில் புகுந்து மறைந்தார்” என்று ‘'புண்ய ஸ்லோக மஞ்சரியும்'', "வாக்பதிபட்டர்" இயற்றிய ''சங்கரேந்திர விலாசம்'' என்னும் இரு நூலும் இவரின் சித்தி பற்றி தெளிவாகக் கூறுகின்றன.

இந்த நிகழ்ச்சி நடந்த நாள் கி.பி. 840 ஆண்டு, சித்தார்த்தி வருடம், ஆடி மாதம், அமாவாசை திதி அன்று சங்கரர் எப்படி காஞ்சியில் அம்பாளோடு ஐக்கியமானாரோ அதே போல் இவர் இந்த குகையில் ஐக்கியமானார் மறைந்தார். [காணாம‌ல் மறைந்தார்]

இவர் 52 ஆண்டுகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்துள்ளார். 



37. ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று

 ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

37. ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - மூன்று

முப்பத்தி ஏழாவது ஆச்சார்யர் [கி.பி. 758 - 788]

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்... இவரின் தந்தை பெயர் '‘ஸ்ரீ பாலசந்திரர்''. பெற்றோர் இவருக்குச் வைத்த பெயர் ''சூரிய நாராயணர்''

இவர் வேற்று சமயத்தவர் தாக்கத்திலிருந்து நம் சமயத்தைக் [மதமாற்றம்] காத்த மஹான்.

இந்தியாவின் மேற்கு பகுதியில் முகலாய படை எடுப்பாளர்களால் நிகழ்ந்த அசம்பாவிதங்களை மாற்றி ஆறு சமயங்களும், அத்வைதமும் நிலை பெறும் படி செய்தார்.

இன்றும் ''குரு ரத்ன மாலை'' அதற்கு சான்றாக இருக்கின்றன. இவர பாரத தேசம் முழுவதும் விஜய யாத்திரை மேற் கொண்ட போது இரண்டாவது குருவான பத்மபாதர் பின் தொடர்ந்து இவரை வழி நடத்த்தி சென்றார்.

மேலும் முதல் குருவான ஸ்ரீ ஆதி சங்கரர் இவருக்கு காட்சி அளித்ததோடு மட்டும் இல்லாமல் ஆதிசங்கரரின் பாதுகையை இவரிடம் அளித்தார் பத்மபாதர்.

ஸ்ரீ வித்யா கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் “இது நம் குரு நாதரின் பாதரட்சை, இதை அனுதினமும் தொடர்ந்து பூஜித்து வர வேண்டும் என்று அருளினார்.

அந்த பாதுகைகள் தான் இன்றும் நம் ஸ்ரீ  காஞ்சி காமகோடி பீடத்தில் அனுதினமும் பூஜிக்கப்பட்டு வருகின்றது. சந்திர மௌலீஸ்வர பூஜை நடக்கும் சமயத்தில் இந்த பாதுகைக்கு இன்றும் பூஜை நடைப்பெற்ற வருகிறது.

யார் வேண்டுமானாலும் இந்த பாதுகை பூஜைக்கான பணத்தை ஸ்ரீமடத்தில் கட்டி இந்த பூஜையை செய்யலாம்.

இவர் கி.பி. 788 ஆம் ஆண்டு, பிரபவ வருடம், தை மாதம், சுக்லபக்ஷம் த்விதியை திதியில், சிதம்பரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் 20 ஆண்டுகள் இந்த பீடத்தை அலங்கரித்துள்ளார்....


 

திங்கள், 20 மே, 2024

தெரிந்து கொள்வோம்...

 தெரிந்து கொள்வோம்...

நான்கு வகை உயிரினங்கள்:

1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு, பூச்சி, கொசு போன்றவை.

2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம், செடி, கொடி போன்றவை.

3. அண்டஜம் - முட்டையிலிருந்து வெளிவருவன - பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.

4. ஜராயுதம் - கருப்பையிலிருந்து வெளிவருவன - மனிதன், சில விலங்குகள் போன்றவை.
-------------------‐--------------------------‐--------------------------‐---
ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:

1. கர்ணன்

2. காளந்தி

3. சுக்ரீவன்

4. தத்திய மகன்

5. சனி

6. நாதன்

7. மனு
-------------------‐--------------------------‐--------------------------‐---
பெண்களுக்குரிய ஏழு பருவங்கள்:

1. பேதை - 1 முதல் 8 வயது வரை

2. பெதும்பை - 9 முதல் 10 வயது வரை

3. மங்கை - 11 முதல் 14 வயது வரை

4. மடந்தை - 15 முதல் 18 வயது வரை

5. அரிவை - 19 முதல் 24 வயது வரை

6. தெரிவை - 25 முதல் 29 வயது வரை

7. பேரிளம் பெண் - 30 வயது முதல்.....
-------------------‐--------------------------‐--------------------------‐---
ஆண்களுக்குரிய ஏழு பருவங்கள்: [பெண்களின் வயது எல்லையும் ஆண்களின் வயது எல்லையும் ஒன்றுதான் என்பதை கவனத்திற்கொள்க]

1. பலன்

2. மீளி

3. மறவோன்

4. திறவோன்

5. காளை

6. விடலை

7. முதுமகன் 30 வயதிற்கு
-------------------‐--------------------------‐--------------------------‐---
நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:

1. சனகர்

2. சனாதனர்

3. சனந்தகர்

4. சனத்குமாரர்

5. வியாக்கிரபாதர்

6. பதஞ்சலி

7. சிவயோக முனிவர்

8. திருமூலர்
-------------------‐--------------------------‐--------------------------‐---
அஷ்ட பர்வதங்கள்:

1. கயிலை

2. இமயம்

3. ஏமகூடம்

4. கந்தமாதனம்

5. நீலகிரி

6. நிமிடதம்

7. மந்தரம்

8. விந்தியமலை
-------------------‐--------------------------‐--------------------------‐---
ஆத்ம குணங்கள்:

1. கருணை

2. பொறுமை

3. பேராசையின்மை

4. பொறாமையின்மை

5. நல்லனவற்றில் பற்று [உறுதி]

6. உலோபத்தன்மையின்மை

7. மனமகிழ்வு

8. தூய்மை
-------------------‐--------------------------‐--------------------------‐---
எண்வகை மங்கலங்கள்:

1. கண்ணாடி

2. கொடி

3. சாமரம்

4. நிறைகுடம்

5. விளக்கு

6. முரசு

7. ராஜசின்னம்

8. இணைக்கயல்
-------------------‐--------------------------‐--------------------------‐---
எட்டு வகை வாசனைப் பொருட்கள்:

1.சந்தனம்

2. கோட்டம்

3. கஸ்தூரி

4. கற்பூரம்

5. குங்குமம்

6. பச்சிலை

7. அகில்

8. விளாமிச்சை வேர்
-------------------‐--------------------------‐--------------------------‐---
ஏழுவகைப் பிறப்புக்கள்:

1.தேவர்

2. மனிதர்

3. விலங்குகள்

4. பறப்பவை

5. ஊர்பவை

6. நீர்வாழ்பவை

7. தாவரம்
-------------------‐--------------------------‐--------------------------‐---
ஈரேழு உலகங்கள்: மேல் உலகங்கள்

1.பூமி

2.புவர்லோகம்

3.தபோலோகம்

4.சத்யலோகம்

5.ஜனோலோகம்

6.மஹர்லோகம்

7.சுவர்க்கலோகம்
-------------------‐--------------------------‐--------------------------‐---
கீழ் உலகங்கள்:

8.அதலம்

9.கிதலம்

10.சுதலம்

11.இரசாதலம்

12.தவாதலம்

13.மகாதலம்

14.பாதாலம்
-------------------‐--------------------------‐--------------------------‐---
குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:

1.சங்க நிதி

2.பதும நிதி

3.கற்ப நிதி

4.கச்சப நிதி

5. நந்த நிதி

6. நீல நிதி

7. மஹா நிதி

8. மஹாபதும நிதி

9. முகுந்த நிதி
-------------------‐--------------------------‐--------------------------‐---
அஷ்ட ஐஸ்வர்யங்கள்:

1. தனம்

2. தான்யம்

3. பசு

4. அரசு

5. புத்திரர்

6. தைரியம்

7. வாகனம்

8. சுற்றம்
-------------------‐--------------------------‐--------------------------‐---
எட்டு வகை போகங்கள்:

1. அணிகலன்

2. தாம்பூலம்

3. ஆடை

4. பெண்

5. பரிமளம்

6. சங்கீதம்

7. பூப்படுக்கை

8. போஜனம் [உணவு]
-------------------‐--------------------------‐--------------------------‐---
நவ நாகங்கள்:

1. ஆதிசேஷன்

2. கார்க்கோடகன்

3. அனந்தன்

4. குளிகன்

5. தஷன்

6. சங்கபாலன்

7. பதுமன்

8. மகாபதுமன்

9. வாசுகி
-------------------‐--------------------------‐--------------------------‐---
நன்மை தரக்கூடிய தச தானங்கள்:

1. நெல்

2. எள்

3. உப்பு

4. தீபம்

5. மணி

6. வெள்ளி

7. வஸ்திரம்

8. சந்தனக்கட்டை

9. தங்கம்

10. நீர் பாத்திரம்
-------------------‐--------------------------‐--------------------------‐---