வெள்ளி, 1 ஜனவரி, 2021

அருள் மிகு ஞீலிவனேஸ்வரர்

அருள் மிகு ஞீலிவனேஸ்வரர்

திருப்பைஞ்ஞீலி;மண்ணச்சநல்லூர்

திருச்சி

பூதங்களாள் கட்டப்பட்ட கோவில்.

எமதற்மராஜாவுக்கு தனி சன்னதி இருக்கும் ஒரே கோவில். தற்போது கோவிலின் பின் பகுதியில் ஐந்து சிவலிங்க பானம்மட்டும் கடைக்ப்பெற்று ஐந்திற்க்கும் ஆவுடை செய்து தனி தனி சன்னதியில் பிரதிஸ்டை செய்துள்ளனர். அவ்வாறு கிடைக்கப் பெற்ற சிவ லிங்க பானத்திற்கு நடுவே ஏறாலமான ஓலை சுவடிகள் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட பத்தாயிரம் ஓலைசுவடிகள் கிரந்தம் மற்றும் தமிழ் கலந்த ஆகமத்தை பற்றி எழுதியிருக்கார்கள். இவை அனைத்தும் கிரதயுகத்தில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள். கலியுகத்தில் மற்ற ஐந்து லிங்கங்களும் தனி தனி சன்னதியில் பிரதிஸ்டை ஆகும் என்று அந்த ஓலை சுவடியில் கூறியள்ளார்கள். அதே போல் கலியுகத்தில் இப்போது கிடைத்துள்ளது மிகவும் அறிதான ஒன்று.மேலும் இக்கோவிலில் சப்தகண்ணிகள் மற்றும் ஐந்து விநாயகர் சன்னிதி கட்டபட வேண்டும் என்று அந்த ஓலை சுவடியில் கூறியுள்ளது.அதற்க்கு போதிய நிதி இல்லாமல் கும்பாபிஷேகம் ஆகாமல் இருப்பது மிக மிக வேதனையான விஷயம். கோவில் குருக்களிடம் பேசிய போது இன்னும் சுமார் இருபத்தி ஐந்து லட்ஷம் செலவு ஆகும் என்று கூறினார். இன்னும் ஆறு சன்னிநி கட்டவேண்டும். நல்ல உள்ளமும் இறைபக்தி கொண்டவர்கள் தங்களாள் ஆன பொருள் உதவியோ, பண உதவியோ செய்து இந்த கும்பாபிஷேகம் நல்லமுறையில் நடக்க உதவுங்கள் நண்பர்களே.


கருத்துகள் இல்லை: