செவ்வாய், 26 மே, 2020

சிவ..சிவ" என்ற அந்த இரண்டு எழுத்து கூட போதும் பலன் உண்டு.
"சிவ..சிவ" என்ற அந்த இரண்டு எழுத்தை எங்க வேண்டும்னாலும், எந்த சூழ்நிலையிலும் சொல்லலாம்.

"யத் த்வயஷ்ரம் நாம் கிரேரிதம் ந்ருணாம் ஸ்க்ருத் ப்ரஸங்காத் அகம் ஆசுஹந்தி".

"த்வயஷ்ரம்" இரண்டு அஷரம். பிறகு, பஞ்சாக்ஷரமாக முன்னாடி ப்ரணவம், பின்னாடி நம: - இத முழுவதும் சொல்லனும் கூட இல்லை, வெறும் இரண்டெழுத்தை சொன்னா கூட போதும் "சிவ..சிவ".

எப்படி சொல்ல வேண்டும் ஸ்நானம் பண்ணி, மடி பண்ணி, மூச்சை அடக்கி...? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். "ஸ்க்ருத் ப்ரஸங்காத்" - அதாவது, ஏதோ  பேசும்போது தற்செயலாக "சிவ சிவ" என்று சொன்னாலே பலன் உண்டு. "ஸ்க்ருத்" - ஒரு தடவை, "ப்ரஸங்காத்" - அரட்டை அடிக்கும் போது. அகஸ்மாத்தா பேச்சுக்கு நடுவில் அந்த இரண்டு எழுத்து வந்தால்கூட  போதும், "சிவப்பு", "அரிசி வடாம்" என்றாலும், அதில் வரும் "சிவ" என்ற இரண்டு எழுத்து போதும்,

"அகம் ஆசு அந்தி" " அகம்" - பாபத்தை, "ஆசு" - உடனே, "ஹந்தி" -  அழித்து விடுவது. பேச்சுக்கு நடுவில் "சிவ" என்ற இரண்டு எழுத்து வந்தா கூட போதும், பாபத்தை அழித்து விடும். 

வேதத்தில் ஜீவரத்தினமாக "சிவ நாமத்தை" ரொம்பவும் ஜாக்கிரதையாக வைத்திருக்கிறது. நாலில் மத்தியாக யஜுர்வேதத்தில் (தைத்திரீய, க்ருஷ்ண), அதன் மத்தியில் நாலாவது காண்டம், அதன் மத்தியில் ஐந்தாம் ப்ரச்னம். இதன் நடுவில் "ஶ்ரீ ருத்ரம்", அதில் நடு நாயகமாக "பஞ்சாக்ஷரம்" வருகிறது. இதிலும் மையமாக "சிவ" என்ற த்வயஷ்ரம் வருகிறது. அதனால் எப்பொழுதும் "சிவ" என்ற இரண்டு எழுத்தை, அக்ஷரங்களை சொல்லி லோகமெல்லாம் சிவம் தழைக்க செய்ய வேண்டும்.

மஹா பெரியவா, தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி..

கருத்துகள் இல்லை: