புதன், 10 ஜூலை, 2019

ஹிரண்ய சிரார்த்தம் தவிர்ப்போம்
அன்ன சிரார்த்தம் அளிப்போம்.

அந்த நாட்களில் வசதி இல்லாதவர் கூட ஹிரண்ய சிரார்த்தம் செய்ய யோசிப்பார்கள். ஆனால் தற்போது வசதியானவர்கள் கூட ஹிரண்ய சிரார்த்தமாக செய்கிறார்கள்.
அதையும் கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் செய்கிறார்கள்.

அன்ன சிரார்த்தத்தில் தான் விசேஷமாக ஐந்து விதமாக பித்ருக்களுக்கு திருப்தி செய்யப்படுகிறது.

1.தேவரூபத்தில் இருப்பவர்களுக்கு ஹோமத்தில் அன்னம்.

2. மனுஷரூபத்திற்கு பிராமணாளுக்கு
போஜனம்.

3.கிருமி ஊர்வன ரூபத்திற்கு பிராமணாள் இலைக்குமுன் உதிரி அன்னம்.

4.பறவைகளுக்கு பெரிய வாயஸபிண்டம்.

5.மூன்று தலைமுறை பித்ருக்களுக்கு
ஆறு பிண்டம். எவ்வளவு விதம்!!!!!

தற்போது பல இடங்களில் அன்ன சிரார்தம் செய்து வைக்க வசதிகள் வந்து விட்டன. எனவே வருடத்திற்கு ஒருமுறை/இரு முறை வரும் தெவசங்களை அங்கு செய்யலாம். என்ன அதிகபட்சம் ரூ 10000 ஆகலாம். மனம் இருந்தால் முடியாதா என்று ஒன்று உண்டா.

கருத்துகள் இல்லை: