சனி, 15 பிப்ரவரி, 2014

கஷ்டத்தையும் ரசிக்கப் பழகு

* உனக்கு ஒரு காயம் பட்டாலோ, நோய் வந்தாலோ அதை கடவுளே அனுப்பி வைத்திருப்பதாக நினைத்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப் பெற வேண்டும். அவற்றால் ஏற்படும் வலியை சமாளிப்பதை ஒரு தவம் போல கருத வேண்டும். பழகப்பழக இந்த மனோபாவம் உறுதியாகி விடும். நோய்நொடியை தாங்குகிற சக்தி உண்டாகும்.

* நமக்கு எந்த கஷ்டம் வந்தாலும் வறுமையினால் சிரமப்பட்டாலும் அவை எல்லாம் நமக்கு வைராக்கியத்தை கொடுப்பதற்காக சுவாமியினால் அனுப்பப்பட்டவை என நினைத்துக்கொள்.

* சாந்தமாக வாழ சாத்வீக உணவை உண்ண வேண்டும்.

* அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும். கால் வயிற்றுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். கால் வயிறை வாயுவுக்கு விட்டுவிட வேண்டும். பசி தீர்க்கத்தான் ஆகாரமே தவிர, ருசிக்காக அல்ல.
- காஞ்சிப்பெரியவர்

கருத்துகள் இல்லை: