வெள்ளி, 11 அக்டோபர், 2024

படலம் 64: குஹனின் ஸ்தாபனம்...

படலம் 64: குஹனின் ஸ்தாபனம்...

64 வது படலத்தில் குஹனின் ஸ்தாபனம் கூறப்படுகிறது. முதலில் இலக்கண அமைப்பு மூலம் குஹனின் ஸ்தாபனத்தை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்யப்படுகிறது. பிறகு நகரங்களில் சிவாலயம் மலை முதலிய உயரமான பிரதேசங்கள் இவைகளில் குமரனுக்கு ஆலயம் அமைப்பது தகுந்தது என கூறி அந்த ஆலயத்தை அமைக்கும் முறை கூறப்படுகிறது. அதில் திக்தேவதைகளை அமைக்கும் விஷயத்தில் பல வகைகள் கூறப்படுகின்றன. குமரன் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு முகமாகவோ பரிவரா தேவதைகளுடன் கூடியதாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. பிறகு பரிவார தேவர்கள் நிரூபிக்கப்படுகின்றன. அதில் முதலாவதாக யக்ஷன், இந்திரன் முதலிய எட்டு பெயர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களின் லக்ஷணமும் கூறப்படுகிறது. இவர்கள் கிழக்கு முதல் ஈசான திக்வரை பரிவாரமாக ஸ்தாபிக்க படுபவர்களாக ஆகிறார்கள். பிறகு சகுனி முதலான எட்டு பெண் தேவதைகளின் பெயரும் கூறப்படுகின்றன. பிறகு ஷண்முகர் முதலான எட்டு பெயர்களை கூறி அவர்களின் லக்ஷணம் நிரூபணம் செய்து, அவர்கள் குஹனின் மூர்த்தீஸ்வரர்கள் என கூறப்படுகிறது. இவர்களை கிழக்கு முதலான திசைகளில் சுற்றிலும் ஸ்தாபிக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது இந்திரன் முதலிய எட்டு திக்பாலகர்களை மூர்த்தீஸ்வரர்களுக்காக எட்டு பீடமாகவோ ஸ்தாபிக்கலாம் என கூறப்படுகிறது. பிறகு வினாயகர், பைரவர், சூர்யன், மஹாபீடம், பலிபீடம் இவைகளையும் குஹாலயத்தில் ஸ்தாபிக்கவும். ஈஸ்வரனுக்கு சொல்லப்பட்ட பரிவாரங்களையோ ஸ்தாபிக்கலாம் என்று வேறுவிதமாக கூறப்படுகிறது. பலி பீடங்களில் இந்திராதிகளையும், மத்தியில் நவக்கிரஹாதிகளையும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு, ஜயன், விஜயன், என்ற இரண்டு துவார பாலகர்களின் லக்ஷணம் கூறப்படுகிறது.

ஈசான பாகத்தில் சாகல்யன் என்ற பெயர் உடைய ஸ்கந்த சண்டரை ஸ்தாபித்து அந்த சண்டரின் லக்ஷணம் நன்கு கூறப்படுகிறது. பிறகு கருங்கல் முதலியதான திரவ்யங்களால் பிரதிமாலக்ஷணத்தில் கூறி உள்ளபடி கர்பக்கிரஹ அளவாலோ வாசல்படி அளவாலோ, தூண்களின் அளவாலோ, ஸ்கந்தரை அமைக்கவும் பிறகு அந்த ஸ்கந்தர், 5 விதமாக இருப்பதாகவும் அவர்களின் லக்ஷணமும் கூறப்படுகிறது. பின்பு இரண்டு கை, இரண்டு கண், வலது கையில் தாமரை புஷ்பம், தொங்குகின்ற இடது கை பால ரூபன். இப்பேற்பட்டஸ்கந்தரை கிராமம் அபிவிருத்தி அடைவதற்கு ஸ்தாபிக்கவும் என்று முதலாவதான ஸ்கந்தர் நிரூபிக்கிறார். பின்பு இரண்டுகை, சிகை பூணல், தண்டத்தை தரித்த வலக்கை இருப்பில் வைத்து கொண்ட இடதுகை கவுபீனம் தரித்தவர் ஞானத்தை கொடுக்கக் கூடிய வருமான ஸ்கந்தர் மலைகள், வனங்கள் இவைகளில் ஸ்தாபிக்கப்படுபவர் என்று இரண்டாவது ஸ்கந்தர் விளக்கப்படுகிறது. பிறகு நான்கு கைமுக்கண், ஜபமாலை, சக்தி ஆயுதம், வரதம், அபயம் இவைகளுடன் கூடிய நான்கு கைகளும் இரண்டு சக்தியோடு கூடியதாகவோ அல்லது ஒரு சக்தியோடு கூடியதாகவோ நகரங்களில் பிரதிஷ்டை செய்ய கூறப்படுகிறார். இங்குகஜா, கஜவல்லி, என்று சக்தியின் பெயர் கூறப்பட்டு அவைகளின் அமைப்புமுறை கூறப்படுகிறது. பிறகு ஆறுமுகம், ஆறுகை, 12கண், ஆறு கழுத்து அல்லது ஒரு கழுத்து ஆறுதலையுடன் கூடியதாகவும், சக்தி, அபயம், கத்தி, அக்ஷமாலை கோழி, கேடயம், ஆகிய ஆறு ஆயுதங்களுடன் கூடியவரும், அரசாங்கம் அபிவிருத்தி அடைவதற்கு பிரதிஷ்டை, செய்வதற்கு தகுந்தவர் என்று நான்காவது ஸ்கந்தர் நிரூபிக்கப்படுகிறது. பிறகு சிவப்பு வஸ்திரம் தரித்தவரும், இளஞ்சந்திரனை போல் பிரகாசம் உடையவரும் கரண்டமகுடம் உடையவரும், முக்கண் உடையவரும், வலது கைகளில் சக்தியாயுதம் உலக்கை, கத்தி, சக்ரம், பாசம், அபயம் இவைகளும் இடதுகையில் வஜ்ரம் வில், கேடயம், மயில், கொடி, அங்குசம், வரதம், இவைகளை தரித்தவரும் யக்ஞோபவீதம் அணிந்தவரும், மயில்மேல் அமர்ந்தவரும், இரண்டு சக்தியோடு கூடியவருமான 5வது ஸ்கந்தர் கிராமம் முதலிய இடங்களில் பிரதிஷ்டை செய்ய தகுந்தவர் என வர்ணிக்கப்படுகிறது.

இவ்வாறாக 5வித ஸ்கந்தமூர்த்தியின் அமைப்பு நிரூபிக்கப்படுகிறது. ஸ்கந்தனுடைய மூலமந்திரம் அதில் பிரம்ம, மந்திர, அங்கமந்திர, கல்பனமுறை, ஸ்கந்தகாயத்திரி மந்திரம், கஜவல்லி, கஜவல்லியின் மந்திரம், விளக்கப்படுகின்றன. பிறகு பிரதிஷ்டாவிதி கூறப்படுகிறது. பிறகு முதலில் முன்பு கூறப்பட்ட நல்ல காலத்தில் அங்குரார்பணம் செய்து குகபிம்பத்தில் பஞ்சரத்தின நியாசம் செய்யவும். தேவிக்கு தங்க தாமரையையோ சேர்க்கவும் என ரத்னநியாச விதி கூறப்படுகிறது. பிறகு நயனோன்மீலன விதி மந்திரத்துடன் கூடியதாக நிரூபிக்கப்படுகிறது. அங்கு ஸ்கந்தர் அம்பாளுடன் கூடியதாக இருந்தால் தேவிக்கும் தனியாக நயனோன்மீலனம் செய்யவும் என கூறப்படுகிறது. பின்பு முன்புபோல் பிம்பசுத்தி செய்து கிராமபிரதட்சிணம் செய்து ஜலத்தில் ஸ்கந்தரை லம்பகூர்ச்சத்துடன் அதிவாசம் செய்யவும் பிம்பத்தை சுற்றிலும் இந்திரன் முதலான எட்டுக்கலசங்களை ஸ்தாபிக்கவும் என்று ஜலாதிவாசம் வரையிலான கிரியைகள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு யாக மண்டபவிதி கூறப்படுகிறது. அந்த மண்டபத்தில் சில்பியை திருப்தி செய்வித்து பிராம்மண போஜனம் செய்வித்து பசுஞ்சாணம் மெழுகி புண்யாகவாசனம், வாஸ்து பூஜை, வாஸ்துஹோமம் செய்து அங்கு ஸ்தண்டிலம் அமைத்து, அதில் தோல் முதலியவைகளோ, அல்லது வஸ்திரத்தினாலோ சயனம் அமைக்கவும். பிறகு ஜலாதிவாசத்தில் இருந்து ஸ்கந்தரை ஸ்நபன மண்டபத்திற்கு அழைத்து ஸ்நானம் செய்வித்து சந்தனம், புஷ்பங்களால் பூஜைசெய்து ரக்ஷõபந்தனம் செய்வித்து ஸ்கந்தரை கிழக்கில் தலைவைத்ததாக சயனாதி வாசம் செய்விக்கவும். பிறகு வஸ்திரங்களால் மூடி சந்தனாதிகளால் முறைப்படி பூஜிக்கவும் என்று சயனாதிவாசமுறை விளக்கப்படுகிறது. பிறகு கும்பாதிவாச விதி விளக்கப்படுகிறது. பிறகு ஸ்கந்தரின் சிரோதேசத்தில் வஸ்திரம், முதலியவைகளுடன் கூடியதான கும்பத்தை வைத்து ஸ்கந்தரை பூஜிக்கவும். ஸ்கந்தர் தேவியுடன் கூடியதாக இருந்தால் தனியாக வர்தனி அமைத்து அதில் தேவியை பூஜிக்கவும். சுற்றிலும் எட்டு கடங்களைஸ்தாபித்து அதில் குகவித்யேஸ்வரர்களை பூஜிக்கவும். பிறகு தத்வதத்வேஸ்வரர், மூர்த்திமூர்த்தீஸ்வரர் பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. அதில், க்க்ஷமா முதலியவர்கள் மூர்த்திகள் லோகபாலர்கள் மூர்த்தீஸ்வரர்கள் ஆகும் அல்லது முன்பு கூறப்பட்ட ஷண்முகர்முதலானவர்களையோ மூர்த்தீஸ்வரர்களாக பாவிக்கவும் என்று மூர்த்திமூர்த்தீஸ்வரர்களின் லக்ஷணம் கூறப்படுகிறது. இவ்வாறு கும்ப அதிவாச முறை நிரூபிக்கப்படுகிறது.

பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோமம் செய்யவும் என கூறி ஹோமமுறையும் ஹோமத்தின் திரவ்யலக்ஷணம் மந்திர லக்ஷணம் கூறப்படுகின்றன. ஹோமகாலத்தில் கிழக்கு முதலான நான்கு திக்கில் வேதபாராயணம் ஆக்னேயம் முதலிய நான்கு விதிக்குகளில் அஸ்திரமந்திர மந்திரஜபம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு காலையில் சுத்தி செய்து கொண்டு மூர்த்திபர்களுடன் கூடி தேவ கும்ப அக்னி இவர்களை பூஜித்து பிராயச்சித்த ஹோமம் செய்து பூர்ணாஹுதி கொடுத்து ஆலயம் நுழைந்து நல்லமுகூர்த்த லக்னத்தில் ரத்தினங்கள் தான்யங்கள் இவைகளுடன் கூடின பிரம்மசிலை ஸ்தாபித்து அதற்குமேல் மூலமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு அந்தபீடத்தின் மேல் ஷண்முகரை ஸ்தாபிக்கவும் வாசல்படியை நோக்கி ஸ்வாமிக்கு முன்பாக கும்பத்தை ஸ்தாபித்து மந்திரன்நியாசம் செய்து பூஜிக்கவும் எனகூறி மந்திரன் நியாசவிதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு அம்பாள் இருந்தால் அம்பாளுக்கும் வர்தனிபீஜத்தை எடுத்து அம்பாளுடன் சேர்க்கவும் என கூறப்படுகிறது. பிறகு கும்பதீர்த்தங்களால் ஸ்கந்தரை அபிஷேகம் செய்யவும் என்று கும்பாபிஷேக விதி கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டைக்குபிறகு முடிவில் ஸ்நபனமும் நைவேத்யமும் செய்யவும். சலபிம்பவிஷயத்தில் உத்ஸவம் செய்யவும். ஆசார்யனையும், மூர்திபர்களையும் வஸ்திரம் முதலியவைகளால் பூஜித்து அவர்களுக்கு தட்சிணை கொடுத்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டாவிதி நிரூபிக்கப்படுகிறது. பிரதிஷ்டை செய்வித்தவனுக்கு பலன்கள் நிரூபணம் செய்யப்படுகின்றன. பிறகு நித்யார்ச்சனா விதி கூறப்படுகிறது. இங்கு நித்ய அனுஷ்டானத்தை முடித்த ஆசார்யன் ஆலயம் நுழைந்து துவாரதேவதை துவார பாலகர் இவர்களை பூஜித்து பூதசுத்தி, அந்தர்யாகம், ஸ்தானசுத்தி, திரவ்ய சுத்தி, மந்திர சுத்தி, பிம்பசுத்தி ஆகிய இந்த கிரியைகள் நிரூபிக்கப்படுகின்றன.

பிறகு ஆசன பூஜை மூர்த்திகல்பனம் செய்வது ஆவாஹனம் முதலிய சம்ஸ்காரம் செய்வது அபிஷேகம் செய்வது சந்தன, புஷ்ப, தூப, தீப, நைவேத்ய, உபசாரங்கள் இவைகள் வர்ணிக்கப்படுகின்றன. பிறகு ஆவரண பூஜையும் நிரூபிக்கப்படுகின்றன. இங்கு கர்பாவரண, மூர்த்திபாவரண (லோகபாலாவரணி) திக்பாலாவரண ஆயுதாவரணமாகிய நான்கு ஆவரணத்தை பூஜிக்கவேண்டும் என கூறப்படுகிறது. மூன்று இரண்டு அல்லது ஒரு ஆவரணத்துடன் கூடியதாக ஸ்கந்தனை பூஜிக்க வேண்டும் என விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு ஆவரண பூஜை செய்தவுடன் தூப, தீப, நைவேத்ய, ஜபங்கள் செய்யவேண்டியமுறை கூறப்படுகிறது. பிறகு நித்யாக்னிகார்யம் கூறப்படுகிறது. பிறகு நாட்யமுறையும் கூறப்படுகிறது. இவ்வாறு நித்யார்ச்சனை செய்யும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு உத்ஸவம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. அங்கு ஒரு தினம் முதற்கொண்டு 9தினம் வரையிலான உத்ஸவமும் ஸம்வத்சரோத்ஸவமும் செய்யவேண்டும் என்று விவரிக்கப்படுகிறது. கொடியில் மயிலை வரைந்து த்வஜாரோஹணம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. அங்குரார்பணம், பேரீதாடனம் த்வஜாரோகணம் முதற் கொண்டதான உத்ஸவமோ செய்யவேண்டும் என கூறப்படுகிறது. சகுனி, முதலான எட்டு ஸ்திரி தேவதைகளின் பெயர்களும் நிரூபிக்கப்படுகிறது. பிறகு அவ்வாறே சேனாபதி முதலிய 6 குமரனின் பெயரும் கூறப்படுகிறது. சகுனி முதலான குமாரன் வரை உள்ள தேவர்கள் உத்ஸவ தினங்களுக்கு அதிபர்களாக கூறப்படுகிறது. உத்ஸவத்தில் வஜ்ரரூபமான அஸ்திர தேவரை அமைக்கவும் என கூறி அஸ்திரதேவரின் அமைப்பு முறை விளக்கமாக கூறப்படுகிறது. இவ்வாறு 64வது படல கருத்து சுருக்கமாகும்.

1. குஹனுடைய லக்ஷணங்களுடன் கூட குஹஸ்தாபனத்தைச் சொல்கிறேன். நகரம் முதலானவற்றின் மத்தியிலோ தென்கிழக்கு தெற்கு அல்லது இவைகளின் மத்தியிலோ

2. தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு இவைகளிலோ இவற்றின் மத்தியிலோ சிவாலயத்திலோ

3. மற்ற தேவாலயங்களிலோ அல்லது மலை உச்சியிலோ மலையின் பக்கத்திலோ, நதி, நந்தவனங்களிலோ

4. அரச மாளிகையிலோ, புண்ய÷க்ஷத்ரங்களிலோ, வீடுகளிலோ, பிரகார மண்டபங்களிலோ புண்ய வ்ருக்ஷங்களிலோ

5. குமாரருடைய ஆலயத்தை விருப்பப்படி ஆலய லக்ஷணத்துடன் கூடியதாக அமைக்க வேண்டும். ஒருமுழம் முதல் 33 முழம் வரை பரப்பளவு உள்ளதாக அமைக்கலாம்.

6. த்விஜர்களே, முப்பத்தி மூன்று முழத்திற்கு மேற்பட்ட அளவு கூறப்படவில்லை. அந்த குஹாலய விமானம் ஸ்கந்த ரூபமுடையதாகவோ தனியாகவோ

7. சிவன், உமாதேவி, கணபதி இவர்களுடன் கூடியதாகவோ அன்ன பறவை அமைப்பு போன்றோ எண் கோண அமைப்பு போன்றோ, தனிப்பட்ட அமைப்பு போன்றோ முருகனின் ஆலயம் அமைக்க வேண்டும்.

8. ஒரே பூமியில் ஒன்று முதல் ஏழுதல அளவு வரை இஷ்டமான தள அளவுடன் கூடியதாகவும், சிவனுக்கு கூறப்பட்டபடி கர்ப்பக்ருஹம் ஆத்யேஷ்டிகா முதலியவற்றுடன் கூடியதாகவும்

9. அவ்வாறே மூர்த்ன்யேஷ்டகா ஸ்தூபி ஸ்தாபனம் இவைகளுடன் கூடியதாகவும் விமானத்தில் திக்குகளில் ஸ்தாபிக்கப்பட்ட தேவர்களுடனும் மத்ய கும்பமான ஸ்தூபியுடன் கூடியதாகவோ

10. முன் சொன்னபடி ஆலயஸ்தாபன முறைப்படி கூடியதாகவும், முன் சொன்னபடி பிரகாரம், மண்டபங்களோடு கூடியதாக அமைக்க வேண்டும்.

11. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு முகங்களாகவோ பரிவார தேவதைகளுடன் கூடியதாக இருக்க வேண்டுமென கூறப்படுகிறது. சந்தர்ப்பமாக அவைகள் கூறப்படுகிறது.

12. ய÷க்ஷந்திரர், ராக்ஷஸேந்திரர், பிசாசேந்தரர், பூதராஜன், கந்தர்வன், கின்னரர், அசுர நாயகர், அரக்கர் தலைவன் இவர்களை

13. கிழக்கு முதலான திசைகளிலிருந்து ஈசான திசைவரை ஸ்தாபிக்க வேண்டும். இவர்கள் நான்கு கைகளில் வரதம், அபயம், கத்தி, கேடயம் இவைகளுடன் கூடியவராகவோ

14. அல்லது கத்தி, கேடயத்துடன் கூடிய இருகைகளுடன் கூடினவர்களாக, மை போன்ற கருத்த நிறமுடையவர்களாகவும் அமைக்கவும். இவர்களை பயங்கர உருவமாகவோ, அமைதியான (சாந்த) உருவமாகவோ முடிந்த கேசத்தை உடையவராகவோ அமைக்க வேண்டும்.

15. சகுனி, ரேவதி, பூதநா, அர்த்தபூதநா இவர்களையும், வக்ரமண்டீ, சகாரீ, நிசாந்தா, மேஷதேவதா இவர்கள் சக்திகள்

16. ஷண்முகர், சக்திபாணி, கார்த்திகேயர், குஹன், ஸ்கந்தன், மயூரவாஹனர், ஸேநாநீ சக்தி ஹஸ்தர்

17. இவர்கள் குஹனின் மூர்த்தீசராவார்கள். அவர்கள் அஞ்சலிஹஸ்தம், வஜ்ராயுதம், பத்மம் தரித்தவர்களாகவும், ஸ்கந்தரின் பீஜத்தை உடையவராயும்

18. நான்கு கைகள் அல்லது இரண்டு கைகளை உடையவராகவோ ஆறுமுகம் அல்லது ஒருமுகம் உடையவராகவோ, இவர்களை கிழக்கு முதலான திக்குகளில் வரிசைப்படி ஸ்தாபிக்க வேண்டியவர்கள் ஆவர்.

19. இந்திராதிகளாகவோ அல்லது எட்டு பீடவடிவங்களாகவோ வைக்கவும். மூலவருக்கு முன், மயிலையோ, யானையையோ வைக்கவும். கணபதி, ÷க்ஷத்ரபாலர், சூர்யன் இவர்களையும் மஹா பீடத்தையும் அமைக்க வேண்டும்.

20. பலிபீடத்தையும் ஈச்வரரின் பரிவாரங்களையுமோ, பலிபீடதளங்களில் இந்திரன் முதலானவர்களையும் நடுவில் கிழக்கு முதலான (ஒன்பது) திசைகளில் ஒன்பது கிரஹங்களையும் பூஜிக்க வேண்டும்.

21. வாசற்படியின் இடது வலதுபுறத்தில் வாயிற் காவலர்களை ஸ்தாபிக்க வேண்டும். முறைப்படி அவர்கள் நீலம், சிவப்பு நிறமுடனும் இரண்டு அல்லது நான்கு கைகளுடையவர்களாகவோ

22. கத்தி, கேடயம் தரித்தவராயும், ஊசியை வைத்திருக்கும் முத்ரையையும், (எச்சரிக்கை செய்யும் முத்ரையையும்) ஆச்சர்ய முத்ரைகளையுடையவராயும், கருப்பு, சிவப்பு அல்லது வெண்மை, கரும்பச்சை, நிறமுடையவராகவோ கோரரூபத்துடனுமோ

23. ஜயன், விஜயன் என்ற பெயருடையவராய் விகாரமான முகங்களை உடையவராயும் அமைக்கவும். ஈசானத்தில் ஸ்கந்த சண்டரை நான்கு கைகளுடையவராக ஸ்தாபிக்க

24. அபயம், வஜ்ரம், பத்மம், வரதம் தரித்தவராகவோ அல்லது இருகையையுடையவராகவோ சாகல்யன் என்ற பெயரை உடைய உருவ அமைப்பாகவோ அல்லது அதற்கான பீட அமைப்பாகவோ அமைக்கலாம்.

25. உத்தம பிராம்ஹணர்களே, ஸ்கந்த அமைப்பு முறையை சுருக்கமாக கேளுங்கள். கற்சிலை முதலானவைகளால் பிம்பம் (உருவம்) அமைக்கும் முறைப்படி செய்ய வேண்டும்.

26. குஹப்பெருமானின் விக்ரஹ லக்ஷணத்தில் கூறப்பட்ட அளவு விச்வம் என்ற அமைப்பை உடையதாகவே, 14 முழம் என்ற அமைப்பை உடையதாகவோ, கர்ப்ப கிருஹம், வாயில் தூண்களுடன் கூடியதாக அமைக்கலாம்.

27. இரண்டு கைகள், இரண்டு கண்கள் உடையவராய் வலது கையில் தாமரையை தரித்தவராயும் இடது கை தொங்கிய நிலையிலும் அழகிய தோற்ற முள்ளவர் சுப்ரமண்யர் ஆவார்.

28. கிராம அபிவிருத்தியின் பொருட்டு குழந்தை வடிவமாக பிரதிஷ்டை செய்யலாம். இரண்டு கைகள், பூணூல், குடுமியையுடையவராயும், மூன்று ஒட்டியானம் போல் மூன்று மடிப்பையுடையவராயும்

29. கவுபீனம் தண்டம் தரித்தவராய் வலது கையில் தண்டமும், இடது கையை இடுப்பில் வைத்தவராயும், ஞானத்தை அளிப்பவரான ஸ்கந்தர் மலைகளிலும் வனங்களிலும் பிரதிஷ்டை செய்யத்தக்கவர்.

30. நான்கு கைகள், மூன்று கண்கள் உடையவராய் காதுகளில் ஓலைத்தோடு அல்லது மகர குண்டலம் தரித்தவராயோ, அக்ஷமாலை, சக்தியை (ஆயுதம்) தரித்த இருகைகளையுடையவராய்

31. வரதம், அபயத்துடன், இருசக்திகளுடனோ ஒரு சக்தியுடன் கூடியவராகவோ, சக்தியான தேவி இல்லாமலோ இருப்பார். அந்த தேவியின் லக்ஷணம் கூறப்படுகிறது.

32. இரண்டு கண்கள், இரண்டு கைகளுடன் சாந்த வடிவமாய், தாமரையையும் நீலோத்பவத்தையுமுடைய இருகரமுடையவராய், சியாமம், சிவப்பு நிறமுடையவராய் வலது, இடது பக்கங்களில் இருப்பவராய்

33. கவுரியின் லக்ஷணத்துடன் கூட தேவியை அமைக்கவும். அழகிய முகத்துடன் அழகு வடிவான இவர்களை கஜா என்று கஜவல்லீ எனப் பெயருடையவர்கள்

34. இம்மாதிரி லக்ஷணத்துடன் கூடியவர்கள் பட்டிணத்திலோ நகரங்களிலோ ஸ்தாபிக்க வேண்டியவர்கள். ஆறுமுகமூர்த்தி, ஆறு கைகள், பன்னிரெண்டு காது, பன்னிரெண்டு கண்களுடன் கூடியவராய்

35. ஆறு கழுத்துடனோ, ஒரே கழுத்துடனோ ஆறு தலைகளுடனோ உடையவர் ஆவார். அவர், சக்தியாயுதம், அபயம், கத்தி, அக்ஷமாலை, சேவல்

36. கேடயம் உடையவராய் தலைநகரத்தின் அபிவிருத்தியின் பொருட்டு ஸ்தாபிக்கவும். சிவப்பு பட்டுடுத்தியவராய் இளம்பிறைச் சந்திரனுக்கொப்பான காந்தியை உடையவராய்

37. கரண்ட மகுடமுடையவராய் மூன்று கண்களுடன் கூடியவராய் சக்தியாயுதம், உலக்கை, கத்தி, சக்ரம், பாசம், அபயம் இவைகளை வலப்பக்கத்தில் தரித்தவராய்

38. வஜ்ரம், வில், கேடயம், மயில்கொடி, அங்குசம், வரதம் இவைகளை இடப்பக்கத்தில் தரித்தவராய்

39. பூணூல் அணிந்தவராய், மயில் மேல் இருப்பவராய், இருதேவியருடன் கூடியவருமான இவர் கிராமங்களிலும், ஆலயப் பிரகாரம் முதலானவற்றிலும் ஸித்தியின் பொருட்டு ஸ்தாபிக்கத்தக்கவர்.

40. இம்மாதிரி ஐந்து விதமாக ஸ்கந்தரின் ஸ்தான பேதங்கள் கூறப்பட்டது. த்வாபரயுகத்திலும் மற்ற யுகங்களிலும் எல்லா இடங்களிலும் பிரதிஷ்டிப்பது ஏற்புடையது.

41. இவ்வாறு அமைத்து அவரது மந்திரங்களால் பிரதிஷ்டையை ஆரம்பித்து செய்யவும். ஸ வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான ஸ என்ற எழுத்துடன் ஆறாவது உயிரெழுத்துடன் கூட ஊ (ஸூ)

42. பதினான்காவது எழுத்தான அவு என்ற எழுத்துடன் புள்ளி ஒலியையும் சேர்த்து (ஸூ,சவு) ஸூப்ரமண்யரின் நான்காவது சப்தத்தையும் நம: என்பதையும் முடிவாகவும் முதலில் பிரணவத்தையும் உடையது ஸ்கந்த மூலம் ஓ, ஸூ, சவு ஸுப்ரஹ்மண்யாய நம: (ஓ, ஸூம், சவும், ஸுப்ரமண்யாய நம:)

43. இவ்வாறு மூலமந்திரம் கூறப்படுகிறது. அதில் பிரம்மாங்க மந்திரங்களுடன் ஸ கார முடிவான ஸ காரத்துடன் நீண்ட, குறைந்த ஒளியுடன் மந்திரங்களுக்கேற்றவாறு நம: என்பதை கடைசியாகவும்

44. ஈசாநம், முதலான பதங்களோடு கூட பிரம்ம, அங்க மந்திரங்களையும் கூற வேண்டும். மகாஸேனாய என்ற பதத்துடன் வித்மஹே என்ற பதத்தையும்.

45. ஷடானனாய என்பதையும் சேர்த்து தீமஹி என்ற பதத்தையும் பிறகு தந்ந: ஸ்கந்த: என்ற பதத்துடன் முடிவில் பிரசோத்யாத் என முடிவில் பிரசோதயாத் என்று (மஹாஸேனாய வித்மஹே ஷடானனாய தீமஹி தந்ந: ஸ்கந்த : ப்ரசோதயாத்)

46. இவ்வாறு காயத்ரீ பீஜமாகும். இதை தீப முன்னால் கூறவேண்டும். (பிரகாசமாக அறியவும்) இதயத்திலிருந்து உண்டான மூலமந்திரம், மூர்த்தி மந்திரம், வித்யாதேஹ மந்திரங்களையும் கூற வேண்டும்.

47. கஜா, கஜவல்லி இவர்களின் மந்திரத்தை இவ்வாறே கூற வேண்டும். பிறகு பிரதிஷ்டையை செய்ய வேண்டும். முன்போல் அங்குரார்பணம் செய்ய வேண்டும்.

48. முன்சொல்லப்பட்ட சுபமுஹூர்த்த காலத்தில் ஐந்து வகை ரத்னங்களை நியாஸம் செய்யவேண்டும். தேவிகளுக்கு ஹ்ருதய மந்திரங்களினால் ஐந்து தங்க தாமரைகளாலோ

49. பத்மத்தை நியாஸம் செய்து நயனோன்மீலனத்தை செய்யவும். தேன், நெய் இவற்றை தங்க (ஊசி)த்துடன் பாத்திரத்தில் ஸ்தாபிக்க.

50. ஹ்ருதய மந்திரத்தை கூறி தங்க நகத்தினால் நியாஸம் செய்து, தான்யம், பசு, பிராம்மணர், தர்சனத்தை செய்யவும். திரைசீலையுடன் எல்லா மக்கள் தர்சனத்தையும் ஆசார்யன் செய்யவேண்டும்.

51. ஸ்கந்தர் தேவியுடன் கூடியவராகில் தேவிக்கும் தனியாக நயோன்மீலனம், தர்சனமிவைகளை செய்விக்கவும். ஸ்கந்தகுருவுக்கு முன்போல் பிம்ப சுத்தி செய்து கிராம பிரதட்சிணம் செய்யவேண்டும்.

52. லம்ப கூர்ச்சத்துடன் கூடிய ஸ்கந்தகுரு ஹ்ருதய மந்திரத்தினால் ஜலாதி வாஸத்தைச் செய்யவேண்டும். சுற்றிலும் இந்திராதி கலசங்களை ஸ்தாபிக்க வேண்டும்.

53. (ஆலயம்) கோயிலின் நான்கு திக்குகளிலோ அல்லது அக்னி, ஈசானதிக்கிலோ மண்டபம் அமைத்து ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் பத்ம குண்டங்களை அமைக்க வேண்டும்.

54. கிழக்கு, வடக்கு, ஈசான திக்கிலோ ஸ்நாந வேதிகை அமைக்கவும், சிற்பியை திருப்தி செய்து அந்தணர்களுக்கு உணவளித்து பசுஞ்சாணத்தால் மெழுகிட்டு

55. புண்யாஹப்ரோக்ஷணம் செய்து வாஸ்து ஹோமம் செய்து ஸ்தண்டிலத்தில் தோல்களாலோ பட்டுகளாலோ சயனம் அமைத்து

56. ஜலத்திலிருந்து அந்த ஸ்கந்தரை எழுப்பி முன்போல் ஸ்நபனத்தைச் செய்து சந்தனம் புஷ்பங்களால் அர்ச்சித்து ஹ்ருதய மந்திரத்தால் ரக்ஷõபந்தனம் செய்யவேண்டும்.

57. கிழக்கு சிரஸாக ஸ்கந்த மூர்த்தியை சயனத்திலேற்றி படுக்க வைக்க வேண்டும். ஆஸநம், மூர்த்திகளுடன் வஸ்த்திரங்களால் அலங்கரித்து பூஜிக்க வேண்டும்.

58. அந்த மூர்த்தியின் மூலமந்திரங்களுடன் அங்க மந்திரங்களுடன் குஹனை சந்தனாதிகளால் பூஜிக்கவும். தலைபாகத்தில் நூல் சுற்றப்பட்டு வஸ்த்ரங்களுடன் கூடிய கும்பத்தை

59. வைத்து அதில் விக்ரஹம் எவ்வாறோ அவ்வாறு ஸ்கந்தரை பூஜிக்கவும். தேவியுடன் கூடியவராகில் தனியாக வர்த்தனீயை ஸ்தாபித்து தேவியை பூஜிக்க வேண்டும்.

60. சுற்றிலும் எட்டு கும்பங்களை வைத்து அவற்றில் குஹனின் வித்யேச்வரர்களைப் பூஜிக்கவும். எல்லா கும்பங்களும் நூல், வஸ்த்ரம், ஸ்வர்ணங்களுடனிருப்பது ஏற்புடையது.

61. ஆத்ம, வித்யா, சிவங்களான தத்வத் ரயத்தை முழங்கால், கழுத்து, தலை முதலிய இடங்களில் பூஜித்து மூர்த்தீச்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.

62. குஹனுக்கு க்ஷ்மா முதலானவர்கள் மூர்த்திகள், லோகபாலர்கள் மூர்த்தீச்வரர்களாகும். முன்பு கூறப்பட்டபடி ஈசனாதிகளையோ, பூஜித்து ஹோமத்தை செய்ய வேண்டும்.

63. ஆசார்யன் ஆதிசைவ குலத்தில் தோன்றியவராய் ஸ்நாநம் செய்து, தலைப்பாகை பட்டு உத்தரீயம் இவற்றுடன் முன்பு போல் பஞ்சாங்க பூஷணம் தரித்தவராய் இருத்தல் வேண்டும்.

64. ஆசார்யன் மூர்த்தீபர்களுடன் குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து பிரதான குண்டத்தில் ஸ்கந்தரை ஆவாஹித்து பிரம்ம மந்திரம், அங்க மந்திரம், நேத்ர மந்திரங்களுடன்

65. தத்வத்ரயம், அதன் அதிபர்களையும், மூர்த்தி, மூர்த்தீச்வரர்களுடன் பூஜித்து கஜை என்ற பெயர் கொண்ட வள்ளியையும் கஜவல்லி என்ற பெயர் கொண்ட தேவசேனாவும் இருக்குமாகில் பிரதான குண்டத்தில் அவர்களுக்கு ஹோமம், தர்ப்பணம் செய்ய வேண்டும்.

66. ஆசார்யர், ஆயிரமோ, ஐநூறோ, நூறோ மூலமந்திரங்களால் ஹோமம் செய்து அதன் பத்தில் ஒருபாகம் பிரம்ம, அங்க மந்திரங்களாலும், மூலமந்திரத்தில் பாதி அளவு மூர்த்தி மந்திரங்களையும் ஹோமம் செய்ய வேண்டும்.

67. ஆசார்யர், திக்கு, விதிக்களில் முறையே ஈசாநாதி, ஹ்ருதயாதி மந்திரங்களினாலும் திசைகளுக்குரிய மூர்த்தி மூர்த்தீச்வரர்களை சாந்தி குடத்துடன் ஹோமம் செய்து

68. சமித்து, நெய், அன்னம், தான்யம், எள், நெல், பொறி, அரிசி இவைகளையும் புரசு, அத்தி, அரசு, ஆல் முதலியவற்றை கிழக்கு முதலான திக்குகளிலும்

69. வன்னி, நாயுருவி, வில்வம், இச்சி முதலியவற்றை தென்கிழக்கு முதலான விதிக்குகளிலும் ஹோமம் செய்யவேண்டும். புரசு ப்ரதானத்திலும் (அல்லது) புரசை எல்லாவற்றிலுமோ ஹோமம் செய்யலாம்.

70. கிழக்கு முதலான நான்கு திக்குகளில் வேத பாராயணங்களையும் தென்கிழக்கு முதலான திசைகளில் அஸ்த்ர ஜபமும் செய்யவும். சாந்தி கும்ப ஜலத்தினால் பிரோக்ஷணம் செய்து அந்தந்த மந்திரங்களின் ஜபத்தை

71. தர்பையைத் தொடுவதினால் ஒவ்வொரு பாகமும் செய்யவும். பிறகு அதிகாலை மூர்த்திபர்களுடன் கூடி சுத்தனான ஆச்சார்யன்

72. சயனத்திலிருந்து ஷண்முகரை எழுப்பிய அதில் கும்ப, அக்னி மந்திரங்களை சேர்த்து பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தினால் நூற்று எட்டு ஆஹுதி செய்து

73. பூர்ணாஹுதி செய்து பிறகு ஆசார்யர் ஆலயத்தில் பிரவேசித்து முன் மண்டபத்தில் மானுஷ பதத்திலாவது தைவ பதத்திலாவது முன்போல் ஸம்ஸ்கரிக்பட்ட

74. பிரம்ம சிலையை ஹ்ருதய மந்திரத்தால் ரத்னம், தான்யம் உள்ளடங்கிய ஸ்தானமான பீடத்தில் வைத்து மூலமந்திரத்தை உச்சரித்து ஷண்முகரை ஸ்தாபிக்க வேண்டும்.

75. நல்ல லக்னம், சுபமுஹூர்த்தத்தில் வாயில் நோக்கியவராக பிரம்ம சிலையுடன் ஷண்முகரை ஸ்தாபிக்க வேண்டும்.

76. தெய்வத்திற்கு முன்னால் கும்பங்களை வைத்து மந்திரந்யாஸம் செய்ய வேண்டும். கும்பத்திலிருந்து பீஜத்தை எடுத்து ஷண்முகரின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

77. தேவியோடு சேர்ந்து இருப்பின் வர்த்த னீ கும்பத்திலிருந்து பீஜத்தை எடுத்து தேவியின் ஹ்ருதயத்தில் சேர்க்கவும். மற்ற கும்பங்களின் பீஜத்தை பீடத்தை சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

78. அந்தந்த கும்பங்களின் ஜலத்தை அந்தந்த திசைகளில் அபிஷேகம் செய்யவேண்டும். ஆறுமுகருக்கு முன்போல் தத்வதத்வேச்வர, மூர்த்திமூர்த்தீஸ்வர நியாஸங்களை செய்யவேண்டும்.

79. இறுதியில் உற்சவ பேரத்தின், உற்சவத்திலும் ஸ்நபனத்தைச் செய்து மஹாஹவிர் நைவேத்யம் செய்து, குருவுக்கும் ரிக்விஜர்களுக்கும் வஸ்த்திரம் தட்சிணை முதலியவைகளுடன்

80. பொன் மோதிரங்கள் வழங்கி பிரதிமாஸ்தாபனத்தில் சொல்லியபடி பூஜிக்கவும். இங்கு எது சொல்லப்படவில்லையோ அதை பொதுவான பிரதிஷ்டையில் கூறியபடி செய்ய வேண்டும்.

81. பிராம்ஹண உத்தமர்களே, இவ்வாறு யார் ஷண்முக ஸ்தாபனத்தைச் செய்கிறார்களோ, அவர்கள் ஆயுளையும், புத்ரர்களையும் செல்வங்களையும், கல்வியையும், குற்றமில்லா உயர்ந்த மனைவியையும்

82. சவுபாக்யம், பெருஞ்செல்வம், நோயில்லாத்தன்மை, புகழ், சவுக்யம், சுபம் இவற்றை அடைந்து மேலும் மோக்ஷத்தையும் குஹப்ரதிஷ்டை செய்த மனிதன் அடைவான்.

83. விப்ரஸத்தமர்களே, அந்த ஷண்முகருடைய பூஜாமுறையை சுருக்கமாகக் கேளுங்கள். பிறகு காலையில் செய்ய வேண்டிய அவசியமான மல, மூத்திர விஸர்ஜனம் செய்து விதிப்படி ஸ்நானம் (குளியல்) செய்து

84. ஸந்தியாவந்தனம், உபஸ்தானம், மந்த்ரதர்ப்பணம் இவைகள் முன்போல் செய்யவேண்டும். நனைக்கப்பட்ட கை, கால்களை உடையவராய் ஆலயத்தில் நுழைந்து

85. ஆசமனம் செய்து ஸ்கந்த மந்திரத்தோடு ஈசானம், ஹ்ருதயம் முதலிய மந்திரங்களினால் சகளீகரணம் செய்து, அஸ்த்ரமந்திரத்தால் அர்க்யம் தயாரித்து எப்போதும் அந்த தண்ணீரால் (வாசற் படியை பிரோக்ஷித்து)

86. திவாரத்தை பிரோக்ஷணம் செய்து ஐயனையும், விஜயனையும் பூஜித்து ஸ்கந்த பெயரோடு ஹ என்று கீழ்ப்படியில் பூஜித்து உள்ளே புகுந்து நன்றாக அர்ச்சிக்க வேண்டும். ஹா என்று பூஜித்து உள்ளே நுழைந்து பூஜிக்க வேண்டும்.

87. வாஸ்து பிரம்மாவை பூஜித்து, வடக்கு முகமாய், மந்திரமய சரீரமாய், நல்ல ஆஸனத்தில் அமர்ந்து, தன் ஜீவனை (ஆத்மாவை) த்வாத சாந்தத்திலுள்ள குடிலா சக்தியிடம் காத்துக்க கொள்வதற்காக சேர்த்து மண் முதலானவைகளால் சம்பந்தப்பட்ட சரீர அமைப்புகளை சுத்தமாக்கி

88. க்ஷúப்த சக்தி அம்ருதத்தில் நனைக்கப்பட்டதன் பூத சரீரத்தை அஸ்த்ர மந்திரத்தினால் நன்கு சுத்திகரித்து கைகளில் சந்தனம் பூசி

89. ஈசான தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாதிகளை கட்டை விரல் முதலாக நியஸித்து இரண்டு கைத்தலங்களில் வித்யாதேஹ நேத்ர மூலங்களுடனும் ஆவாஹித்து

90. சுண்டுவிரல் (முதல்) ஹ்ருதய, சிரஸ், சிகை, கவசம், அஸ்திர மூலமந் மந்திரங்களினால் நியாஸம் செய்து மறுபடியும் கரதலங்களில் மூலமந்திரத்துடன் நியஸித்து

91. அங்க நியாஸத்தையோ, மாலா மந்திரம், பிரம்ம மந்திரங்களுடனோ செய்து முப்பத்தியொரு கலாநியாஸம் மந்திர நியாஸத்துடனோ இல்லாமலோ முன்போல் செய்து

92. அர்க்ய ஜலத்தால் சரீரத்தை சுத்தி செய்து சரீரத்தை குஹ மூர்த்தியை போன்று பாவித்து நாபி குண்டத்தில் குஹனை ஆவாஹித்து ஹோமம் செய்து ஹ்ருதய மந்திரத்தினால்

93. மூலமந்திரத்தால் சரீரத்தை குஹமயமாக்கி குஹனைப் பூஜிக்கவும், அவகுண்டன திக்பந்தனங்களால் ஸ்தான சோதனமான (ஸ்தான சுத்தியை) செய்ய வேண்டும்.

94. விசேஷார்க்யத்தைச் செய்து சந்தனம், புஷ்பம் அக்ஷதைகளால் ஹ்ருதய மந்திரத்தாலோ அர்ச்சனாங்கத்தில் சொன்னபடி பூஜித்து பின், பாத்யம், ஆசமனம் இவைகளையோ

95. அர்க்யம் மாத்திரமோ செய்து அர்க்யத்தால் திரவியங்களின் பொருட்சேர்க்கையை பிரோக்ஷித்து ஹ்ருதய மந்திரத்தால் அபிமந்திரித்து நிறைவான சக்தியின் பொருட்டு மந்திரங்களை உச்சரித்து

96. நிர்மால்ய பூஜையை செய்து காயத்ரியினால் சிரஸில் அர்க்யத்தையும் கொடுத்து ஹ்ருதய மந்திரத்தினால் புஷ்பங்களை நிர்மால்யதாரியின் பொருட்டு கொடுக்க வேண்டும்.

97. நிர்மால்ய பூஜையை செய்து விட்டு பின் முன் சொன்ன வழியில் விக்ரஹ சுத்தியைச் செய்யவும் அல்லது வெளியில் நிர்மால்யத்தை விட்டு பேரசுத்தியை முன்சொன்னபடி செய்யவேண்டும். உலோக விக்ரஹமானால் ஒவ்வொரு பவுர்ணமி, அமாவாசை முதலான பர்வங்களில் அபிஷேகம் செய்யவேண்டும்.

98. சித்ரம் முதலியவைகளானால் கர்மார்ச்சைப்படி சுத்தி செய்வது ஏற்புடையது. இவ்வாறு பாவனையாக அர்ச்சனா விதிப்படி சுத்தி செய்வதால் சுத்தி ஆகிறது. தன் சரீரம், ஆத்மா, பூமி, திரவ்யம், மந்த்மரம், பிம்பம் இவைகளின் சுத்தி கூறப்பட்டது.

99. குஹனுக்கு பிரணவம் முதலானவர்களால் ஆஸநம் செய்து கல்பித்து பிரணவத்தின் நடுவில் தர்ம, அதர்மாதிகளை பூஜிக்கவும், மறுபடியும்

100. அதச்சதநம், ஊர்த்வச்சதம், பத்மகர்ணிகையின் முடிவில் குஹாஸநத்தைக் கற்பித்து ஆஸநம், மூர்த்தி இவைகளை ஆவாஹித்து ஹ்ருதயாதி மந்திரங்களால் அதில் அர்ச்சித்து

101. ஈசான முதலிய மந்திர நியாஸம் செய்து மாலாமந்திரங்கள் பஞ்சபிரும்ம, வர்ணநியாஸம் செய்து வித்யாதேஹத்தை கற்பித்து அந்த மூலமந்திரத்தால் ஷண்முகப் பெருமானை

102. இருதயத்துக்கு நேரே புஷ்பங்கள் நிரம்பிய கைகளால் ஆவாஹித்து அந்த பிந்துவிலிருந்து எடுத்து ஹ்ருதய மந்திரத்தால் அந்த பிம்பத்தில் ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

103. முதலில் நிஷ்டுர முத்ரையை ஹ்ருதய மந்திரத்தால் ஸன்னிதானம், அவகுண்டனமும் செய்து 1 ஆவாஹனம், 2 ஸ்தாபனம், 3 சன்னிதானம், 4 ஸந்நிரோதனம், 5 அவ குண்டனம், 6 திக்பந்தனம் இவ்வாறில் முன்பு 1 ஆவாஹனம் 2 ஸ்தாபனம் சொல்லப்பட்டன. இங்கு ஸந்நிதானம் ஸன்னி ரோகனம் அவகுண்டனம் சொல்லப்பட்டன. ஹ்ருதயம் முதல் நேத்ரம் முடிய மந்திரன்யாசத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும்.

104. மஹாமுத்ரையையும், தேனு முத்ரையையும் மூலத்தால் செய்யவேண்டும். ஹ்ருதய மந்திரத்தால் பாத்யத்தை பாதத்திலும், ஆசமனத்தை முகத்திலும், சிரஸில் அர்க்யத்தையும்

105. நம ஸ்வாஹா ஸ்வதா வவுஷட் என குஹபேதமான பெயர்களின் முடிவில் சேர்ந்ததாக கொடுக்கவும். சந்தனம், புஷ்பம், தூபத்தையும் கொடுத்து பஞ்சாமிர்தங்களாலும்

106. விபூதி, மாவு, நெல்லிக்கனி இவற்றுடன் அபிஷேகித்து வஸ்த்ரத்தால் துடைத்து குஹனுடைய முகத்தில் ஆசமனத்தைக் கொடுத்து.

107. சந்தனம், அகில், பச்சை கற்பூரம், கோரைகிழங்கு முதலியவைகளால் முன் கூறிய அளவில் பொடி செய்து ஹ்ருதய மந்திரத்தால் குஹனுக்கு சாத்தி அல்லது சந்தனத்தை மட்டுமோ சாத்தி

108. காரகிலால் செய்யப்பட்ட தூபத்தை ஹ்ருதய மந்திரத்தால் கொடுக்கவேண்டும். கீழாநெல்லி, சந்தனம், சாம்பிராணித்தூளுடன் கூடியதாகவோ தூபம் கொடுக்க வேண்டும்.

109. கோரோசனை, கஸ்தூரி, புனுகு, ஜவ்வாது இவற்றையும் அன்றே மலர்ந்த வாசனையுள்ள பூக்களை முன் சொல்லியபடி அர்ப்பணம் செய்ய வேண்டும்.

110. ஹ்ருதய மந்திரத்தினால் எண்ணை முதலியவைகளினால் தயார் செய்த தீபங்களை கொடுக்கவும், மூலமந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்ட ஹவிஸை (அன்னம்) கொடுத்தோ இல்லாமலோ செய்ய வேண்டும்.

111. மேற்கு வாயில் பூஜை முறையில் கூறப்பட்ட அளவே சந்தனம் முதலியவைகளின் அளவாகும். தூப தீபங்களை கொடுத்த பிறகு ஆவரண பூஜையை செய்ய வேண்டும்.

112. அக்னி, நிர்ருதி, வாயு, ஈசானம் முதலிய கிழக்கு திக்குகளில் ஹ்ருதயாதி மந்திர மூலங்களையும் வெளியில் வஸுக்களையும், மூர்த்திகளையும் அதற்கு வெளியில் இந்திராதி தேவதைகளையும்

113. பிறகு தசாயுதங்களையும் பூஜிக்கவும். மூன்று ஆவரணங்களாலோ அல்லது இரண்டு, ஒன்று ஆவரணங்களாலோ குஹனைப் பூஜித்து மறுபடியும் தூபதீபத்தைக் கொடுக்கவும்.

114. பாட்டு, மந்திரகீதங்களை இசைத்து ஜபத்தைச் செய்து ஸமர்பிக்கவும். நைவேத்யம், பலி, இவற்றை கொடுத்து குண்டத்தில் சிவாக்னியில் குஹனான முருகனை

115. ஆவாஹித்து, ஸாங்கம் பூஜித்து பூஜைக்கு அங்கமான உபசாரங்களால் பூஜித்து சருவிற்கு (ஸ்தாலீபாகம்) அக்னி எடுப்பது வரையிலாக பூஜித்து, புரசு, சமித்து, நெய்யுடன் மூலமந்திரத்தால் நூறு, ஐம்பது, இருபத்தைந்து
என்ற எண்ணிக்கையில்

116. ஹோமம் செய்யவேண்டும், அதன் பத்தில் ஓர் பங்கு என்ற எண்ணிக்கையில் ஷடங்க மந்திரங்களை ஹோமம் செய்யவேண்டும். பிறகு பூர்ணாஹுதியை நித்யோத் ஸவத்தைச் செய்ய வேண்டும்.

117. முன் சொன்னது போல் அதன் முடிவில் நாட்டியத்தை செய்யவும். ஒருநாள் முதல் ஒன்பது நாள் வரை வருடாந்திர உற்சவத்தையும் செய்ய வேண்டும்.

118. கொடியில் மயிலை எழுதி கொடி ஏற்றம் செய்யவும். அது முதல் மூன்று நாளிலோ இரண்டு நாளிலோ, அதே நாளிலோ

119. அங்குரார்ப்பண பூர்வமாகவோ, பேரீதாடன பூர்வமாகவோ, த்வஜாரோஹண பூர்வமாகவோ, ஆசார்யர் உத்ஸவத்தைச் செய்ய வேண்டும்.

120. சகுனீ, ரேவதீ, பூதநா, மண்ட பூதநா, வக்த்ரமண்டீ, நிசாந்தா, மேஷதேவதா இவர்கள் குஹனின் தேவதைகள்.

121. ஹே ப்ராம்மணர்களே சகாரீ முதலானவர்கள் சுப்ரமண்யரின் பணியாட்களாவர். ஆறு குமரர்களின் பெயர்களாவன

122. ஹேநாபதி, சுரேசர், ஹரஸூநு, ஸுராக்ரஜர், ஸூப்ரமண்யர், குமாரர் என ஆறு திருக்குமாரர்கள் ஆவர்.

123. குண்டம் ஆறு கோணமாகவோ, விருப்பமானதாகவோ, ஈசானத்திலோ, அக்னி திசையிலோ அமைக்கவும். புஷ்பத்திலோ, அரிசியிலோ வஜ்ரரூபமான அஸ்த்ரத்தை பூஜிக்க வேண்டும்.

124. இருகண்கள், இரு கைகளுடன் உக்ரரூபமாய் கோடி ஜ்வாலா கேசமுடையவராய் கூர்மையான வஜ்ரத்தை வலது கையில் தரித்தும் இடது கையில் மயிலையோ (படத்தையோ) வைத்திருப்பவர் குஹாஸ்த்ரர். சகுனீ முதல் குமாரர்கள் வரையானவர்கள் உத்ஸவ நாட்களுக்கு அதிபராக இருப்பது ஏற்புடையது.

இவ்வாறு உத்தரகாமிகத்தில் குஹ ஸ்தாபன விதியாகிற அறுபத்தி நான்காவது படலமாகும்.

படலம் 63: கங்காதர பிரதிஷ்டை...

படலம் 63: கங்காதர பிரதிஷ்டை...

63 வது படலத்தில் கங்காதர ஸ்வாமியின் பிரதிஷ்டை கூறப்படுகிறது. முதலில் அதை அமைக்கும் முறையும், பிரதிஷ்டை முறையும் கூறுகிறேன் என்பதாக உறுதி செய்யப்படுகிறது. பிறகு அந்த மூர்த்தி நான்கு கையும், மூன்று கண்ணும், ஜடாமகுடத்துடன், அலங்கரிக்கப் பட்டதாகவும் நின்ற கோலத்தை உடையதும் பிரசன்னமான முகத்தை உடையதாகவும் உள்ள தேவன் ஆவார் அவருடைய பார்ஸ்வஹஸ்த்தத்தில் மானும் மழுவும் முன்பக்க மாய் உள்ள வலதுகையில் அபயமும், இடதுகையில் கடக முத்திரையையும் கல்பிக்கவும். கடக முத்திரை உள்ள கையால், கங்கையுடன் கூடியதான ஒருஜடையை கையில் தரித்துக் கொண்டு நின்ற கோலத்தில் ஸ்வாமி இருக்கிறார் ஸ்வாமியின் (கூடிய) இடது பாகத்தில் லக்ஷணத்துடன் கூடிய தேவியை அமைக்கவும் வலதுபாகத்தில் இரண்டுகை, இரண்டு கண்கள், உடைவரும் ஹ்ருதய பூர்வமாக மஸ்தகத்தில் அஞ்சலியை உடையவராகவும் தொங்குகின்ற ஜடையை உடையவாரகவும் மரவுரியை தரித்தவராகவும் உள்ள பகீரதனை அமைக்கவும், இவ்வாறு அமைக்கப்பட்ட லக்ஷணங்களை உடையவர் கங்காதரர் ஆவர் என்று நூலால் கோடிட்டு காண்பிக்கும் முறைப்படி கங்காதர மூர்த்தியின் அமைப்பு கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டைமுறையும் கூறப்படுகிறது. பிறகு முன்பு கூறப்பட்டபடி நல்ல, காலத்தில் அங்குரார்பணம், நயனோன் மீலனம், ரத்னன் நியாஸம் முதலியவைகள் செய்யவும் என கூறி கங்கைக்கு ரத்னன்நியாஸம் செய்யவேண்டாம். பகீரதனுக்கு பஞ்சரத்னநியாசம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பிம்பசுத்தி கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம், செய்யவும் என்று கூறி அதன் செய்முறை விளக்கப்படுகிறது. பிறகு முன்பு கூறிய முறைப்படி யாகமண்டம் செய்து அங்கு குண்டம் அமைக்கவும் என வர்ணிக்கப்படுகிறது. பிறகு சில்பியை திருப்தி செய்து, பிராம்மண போஜனம், புண்யாக வாசனம், வாஸ்து ஹோமம் செய்து, மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து, சயனமும் அமைக்கவும். பிறகு ஜலாதி வாச மண்டபத்திலிருந்து ஸ்நபனம் ரக்ஷõபந்தனம் செய்து பூஜிக்கவும் என கூறி பகீரதன், கங்கை, தேவி, இவர்களுக்கு தனித்தனியாக ரக்ஷõபந்தனம் செய்யவும் என அறிவிக்கப்படுகிறது.

பிறகு பிம்பங்களுக்கு சயனாரோபணம் செய்யவும். பகீரதன், தனியான பீடத்தில் இருந்தால் அந்த பிம்பத்தை ஸ்வாமியின் பாத தேசத்தில் சயனம் செய்விக்கவும். இவ்வாறு சயானாதி வாசவிதி கூறப்படுகிறது. பிறகு கும்பங்களை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. சிவனுடைய தலைபாகத்தில் சிவ கும்பம் வர்தனியையும் ஸ்தாபிக்கவும். பிறகு பகீரதனுக்கும், கங்கைக்கும், சிரோபாகத்தில் கடத்தை ஸ்தாபிக்கவும், கும்பத்தை சுற்றி அஷ்டவித்யேஸ்வர கும்பங்களை ஸ்தாபிக்கவும் முன்பு கூறிய உருவத்யான முறைப்படி ஆசார்யன் சந்தனம், புஷ்பம் இவைகளால் முறைப்படி அர்ச்சிக்கவும். தத்வ தத்வேஸ்வரர், மூர்த்திமூர்த்தீஸ்வரர், நியாசம் செய்யவும். பகீரதனுக்கு பகாரம் முதலியதான பஞ்ச மூர்த்தி மூர்த்தீச்வரர் நியாசம் சத்யோ ஜாதாதி மந்திரங்களால் செய்யவும் என கூறி பகீரதனின் மூல மந்திரமும் ஹருதயாதி ஷடங்கமூல மந்திரமும் கூறப்படுகின்றன. கங்கைக்கும் அதற்கு கூறப்பட்டுள்ள முறைப்படி, தத்வதத்வேஸ்வரர், மூர்த்திமூர்த்திஸ்வர நியாசம் செய்யவும் என கூறி கும்பத்தை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. குண்ட அக்கினி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்யவும் என கூறி ஹோமத்தின் திரவ்ய நிரூபண முறையாக ஹோமம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யன் முதலானவர்களுக்கு தட்சிணை கொடுக்க வேண்டும். அந்தந்த ஸ்வாமிகளுக்கு முன்பாக கும்பத்தை வைத்து மந்திரம் நியாசம் செய்யவும் என கூறி மந்திரன் நியாசம் விளக்கப்படுகிறது. இங்கு கங்கைக்கும், பகீரதனுக்கும், மந்திரன் நியாச முறை நிரூபிக்கப்படுகிறது. தேவியானவள் ஒரே ஆசனத்துடன் கூடி இருந்தால் தனிமையாகவே பிரதிஷ்டை செய்யவும் என கூறப்படுகிறது. அந்தந்த கும்பஜலங்களால் அந்தந்த மூர்த்திக்கு அபிஷேகம் செய்யவேண்டும் என கும்பாபிஷேக விதி கூறப்படுகிறது. பிறகு கல்யாண உத்ஸவம் செய்யவும். கல்யாண உத்ஸவம் முடிவில் ஸ்நபனமும் உத்ஸவமும் செய்யவும். அதிகமாக நைவேத்யம் செய்வது யஜமானனின் விருப்பப்படி செய்யவும் என கூறப்படுகிறது. முடிவில் யார் இந்த கங்காதார் பிரதிஷ்டையை பக்தியோடு செய்கிறானோ அவன் தன்னுடைய பந்து ஜனங்களுடன் கூடி சவுக்யமாக இருந்து தன்னுடைய சரீரம் பிரியும் பொழுது சிவஸ்தானத்தை அடைகிறான் என்று பலஸ்ருதி கூறுகிறது. இவ்வாறு 63 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. கங்காதர பிரதிஷ்டையை அதன் அமைப்பு முறையுடன் கூடியதாக சொல்கிறேன். நான்கு கைகள், மூன்று கண்களுடன் ஜடையுடன் கூடிய மகுடத்தை தரித்தவராய்

2. வலது கை அபயமாகவும், இடது கை கடக முத்ரையுடன் கூடியதாகவும், அந்த கடக கையினால் ஜடையுடன் கூடிய கங்கையை தரித்தவராய்

3. அழகு நிறைந்து இருக்கின்றவராய் பெண் மான் மழுவுவோடு கூடியனவராய் இருப்பார் ஜடையோடு சேர்ந்த உயர்ந்த கையானது காதின் உயரத்திற்கு சமமாக இருக்க வேண்டும்.

4. பிறகு ஜடையின் நடுவில் வளைந்த வடிவுடன் இருமுகம் கொண்ட கங்கையுடன் நின்ற கோலத்தில் அமைக்கவும். அந்த பிம்பத் தலைப்பாகை மூக்கிற்கு நேராகவும் வலது பாத நடுவிலுமாக

5. ஹ்ருதயத்திற்கு, இடப்பாகத்திலும், தொப்பூழ், வயிறு பிரதேசத்தின் வலது பக்கத்திலும் சூத்திரமிடவும், இடுப்பு பாக சூத்ரத்திலிருந்து நான்கு மாத்திரை அளவும் வலது முழங்காலிலிருந்து மூன்றங்குலம் ஆகும்.

6. இரண்டு கால் கட்டை விரல்களின் இடைவெளி பதினைந்து அங்குலமாகும். இரண்டு குதிகால்களின் இடைவெளி ஐந்து அங்குலமும் ஆகும். இடது காலில் முக அமைப்பு சூத்திரத்திலிருந்து இடது பாகத்தில் மூன்றங்குலமாகும்.

7. ஹே முனிபுங்கவர்களே, மற்ற சூத்திர அமைப்புகளை சந்திர சேகரரைப் போன்றதாகவும் சுவாமிக்கு இடது பாகத்தில் தேவியையும் அமைப்புடன் கூடியதாக அமைக்க வேண்டும்.

8. பகீதரனை சுவாமியின் தொப்பூழ் வரை அளவுள்ள சரீரத்தை உடையவராகவோ அல்லது சுவாமியின் மார்பு அல்லது கழுத்து வரை தாலப்ரமாணம் உள்ளவராகவும் தொங்குகின்ற ஜடையை உடையவராகவும்

9. மரவுரியை தரித்தவராயும் இரண்டு கைகளை இதயம் அல்லது மஸ்தகத்தில் தொழுத வண்ணமாயும், இரண்டுகைகள் இரண்டு கண்களுடன் கூடியவராயுமான பகீதரனுடன் கங்காதரர் இருக்கட்டும்.

10. சுபமான காலத்தில் அங்குரார்ப்பணம், ரத்னநியாஸம், நயனோன்மீலனம் செய்யவேண்டும். கங்கைக்கு ரத்னந்யாஸமின்றி நயனோன்மீலனம் செய்ய வேண்டும்.

11. பகீதரனுக்கு ஐந்து ரத்னத்தால் செய்யப்பட்ட ரத்ன நியாஸத்துடன் பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம்

12. ஜலாதிவாசம், யாகம் செய்ய தகுதியான மண்டபங்கள் யாவும் முன் சொல்லியபடி அமைத்து (நாற்கோண) குண்டங்களை ஒன்பது, ஐந்து, ஒன்று என்றும் கணக்கில் அமைத்து

13. கண் திறந்த பிறகு சிற்பியை அனுப்பி விட்டு அந்தணர்களுக்கு உணவளித்து பிறகு புண்யாக வாசனம், பிரோக்ஷணத்தையும், வாஸ்த்து ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

14. ஸ்தண்டிலத்தில் பிம்பத்தை சயனம் செய்வித்து பின் ஆசார்யன் பகீரதனுக்கும் கங்கைக்கும், சுவாமிக்கும் ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

15. பகீதரன் தனியாக பீடத்துடன் இருப்பின் சுவாமியின் பாதபிரதேசத்தில் அதை சயனம் செய்வித்தல் வேண்டும்.

16. ஸ்வாமிக்கு தலை பாகத்தில் வஸ்த்ரம் முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்ட கும்பத்தையும், வர்த்தனீயையும், பகீதரனின் தலைபாகத்தில் பகீதரனின் கும்பத்தையும் வைத்து

17. ஸ்வர்ண பங்கஜங்களாலோ கங்கா கும்பத்தையும் அலங்கரிக்க வேண்டும். சுற்றி எட்டு குடங்களை வைத்து வித்யேச்வரர்களையும் ஸ்தாபிக்க வேண்டும்.

18. ஆசார்யன், முன் சொல்லியபடி ரூபதியானங்களுடன் எல்லா தேவதைகளையும் சந்தனம், புஷ்பம் முதலியவைகளால் முறைப்படி பூஜிக்க வேண்டும்.

19. பரமேஸ்வரனுக்கு முன் போல் தத்வ தத்வேஸ்வர பூஜையும், பகீதரனுக்கு ஐந்து மூர்த்தீசர்களையும் பூஜிக்க வேண்டும்.

20. முன் சொல்லியபடி ஐந்து மூர்த்திகளையோ பூஜிக்க, மூர்த்தீச்வரர்களையோ நான்காவது (ப) பகாரத்திடனோடு கூடிய சத்யோஜாதம் முதலியவைகளையோ பூஜிக்க வேண்டும்.

21. மூன்றாவது பகார எழுத்தின் முடிவான (ப) நான்காவது பகாரத்தினுடன் பதினான்காம் எழுத்தான அவு ஆறாவது எழுத்தான ஊ உடன் புள்ளியுடன் சேர்த்து பவும் பகீரத என்ற வார்த்தையை நான்காம் வேற்றுமை உடையதாக கூறுவது மூல மந்திரமாகும்.

22. பகீதரனுடைய பீனாக்ஷரத்தினாலேயே ஹ்ருதயம் முதலான அங்கங்களுக்கு மந்திரங்களைக் கூற வேண்டும். கங்கைக்கு அதன் பூஜை முறையின் கூறியுள்ளபடி பூஜிக்க வேண்டும்.

23. குண்டங்களில் அக்னி கார்யங்களை முறையாகவும் சமித்து, நெய், அன்னம், பொறி முதலான பொருட்களால் ஹோமம் செய்யவும். வஸ்த்ரம் தங்க மோதிரம் முதலியவைகளால்

24. தட்சிணையையும் ஆசார்யர்களுக்கு கொடுத்து பின் மந்த்ர நியாஸம் செய்து தேவருக்கு முன்னால் கலசங்களை வைத்து குருவானவர் பூஜிக்க வேண்டும்.

25. சிவ கும்பத்திலிருந்து பீஜங்களை சுவாமியின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும். வர்த்தினீ கும்ப மூலத்தை பீடத்தில் சேர்க்க வேண்டும்.

26. மற்றுமுள்ள கும்ப பீஜங்களை பீட பத்மங்களில் சுற்றிலும் சேர்க்கவும். கங்கையின் மூலத்தை கங்கையின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

27. பகீரதனுடைய கடத்தினுள் இருக்கும் பீஜத்தை பகீரதனுடைய ஹ்ருதயத்தில் சேர்த்து அந்த கும்ப ஜலத்தை அந்தந்த மூர்த்திகளுக்கும் அபிஷேகிக்க வேண்டும்.

28. சுவாமி பீடத்துடன் தேவீ இருக்குமெனில் வர்த்தினீ கும்பத்தை தேவியின் ஹ்ருதயத்தில் சேர்க்கவும். தனி பீடத்துடன் கூடிய தேவியாகில் பிரதிஷ்டையை தனியாக செய்ய வேண்டும்.

29. இறுதியில் கல்யாணத்தையும் செய்யவும், பின் ஸ்நபனம், உத்ஸவம், செய்ய வேண்டும். கர்தாவின் விருப்பம்போல் மிகுந்த நைவேத்யத்தையும் செய்ய வேண்டும்.

30. இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் கூறியபடி செய்யவும். ஈஸ்வரன் பகீரதனுடன் சேர்ந்தோ இல்லாமலோ இருப்பார்.

31. இவ்வாறு கங்காதரப் பிரதிஷ்டையை எந்த மனிதர் செய்கிறாரோ அவர் இப்பூவுலகில் ஸகல சுகமும், அடைந்து தன் பந்து ஜனங்களுடன்

32. அடைய முடியாத சிவபதத்தை தன் சரீர இறுதியில் அடைவார்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கங்கா பிரதிஷ்டை விதியாகிற அறுபத்தி மூன்றாவது படலமாகும்.

படலம் 62: விருஷபாரூட பிரதிஷ்டை...

படலம் 62: விருஷபாரூட பிரதிஷ்டை...

62 வது படலத்தில் விருஷபாரூட பிரதிஷ்டை செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் இலக்கண முறைப்படி விருஷபாரூட பிரதிஷ்டையை கூறுகிறேன் என்பது கட்டளை. பிறகு நூல் இடும் முறைப்படி விரூஷபா ரூடமூர்த்தியின் லக்ஷணம் கூறப்படுகிறது. அவர் நான்குபுஜம் முக்கண் ஜடாமகுடம் சமமாக வளைந்ததாக சரீரம் உடையவராகவும் ஆவர் அவரின் வேறான கைகளின் வலப்பாகம் இடப்பாகம் முறையாக மானும் மழுவும் ஆகும். முன்பாக உள்ள வலக்கையில் வளைந்த தண்டத்தையும், கடக முத்திரையுடன் கூடிதாகவும் இடதுகையின் முழங்கை பாகம் விருஷப மஸ்தகத்தில் வைத்துள்ளதாகவும் பாவிக்கவும். அந்த இடது ஹஸ்தமானது. அன்னபட்சி என்ற முத்திரை உள்ளதாகவோ அதோமுக பதாக முத்திரை உள்ளதாகவோ இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. ஸ்வாமியின் வலதுபாகத்தில் தேவியை லக்ஷணத்துடன் கூடியதாக அமைக்க வேண்டும். தேவியுடன், கூடிய தேவராகவோ அல்லது தனிமையான தேவனாகவும் அமைக்கலாம் என கூறப்படுகிறது. தேவனுடைய பின் பாகத்தில் விருஷபத்தை அமைக்கவும். இவ்வாறு கற்சிலை முதலிய திரவ்யங்களால் தேவனை வடிவமைத்து ஸ்தாபனம் செய்யவும் என கூறப்படுகிறது. அந்த ஸ்தாபனம் செய்யும் முறை கூறப்படுகிறது. இங்கு முன்பு செய்யப்பட்ட நல்ல காலத்தில் அங்குரரர் பணம் செய்து ரத்னன் நியாசம் நயனோன் மீலனம், செய்யவும் என கூறப்படுகிறது. இந்த சமயத்தில் விருஷபத்திற்கும் நயனோன் மீலனம் செய்யவும் என அறிவிக்கிறார். பிறகு பிம்பசுத்தி கிராமபிரதட்சிணம், ஜலாதி வாசம் செய்யவும் என்று ஜலாதிவாசம் முடிவு வரையிலான கிரியைகள் கூறப்படுகின்றன. பின்பு முன்பு கூறப்பட்டுள்ளபடி மண்டபம், குண்டம் பூசைகள், கூறப்படுகிறது. பிறகு சில்பியை திருப்தி செய்து வைத்து பிராம்மண போஜனம், புண்யாஹ பிரோக்ஷணம் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் கல்பித்து சயனம் அமைக்கவும் என கூறப்படுகிறது. ஜலாதி வாசத்தில் இருந்து எடுத்த பிம்பத்திற்கு ஸ்நபனம் செய்து ரக்ஷõபந்தனம் செய்யவும் கூறப்படுகிறது.

விருஷபத்திற்கும் முறைப்படி ரக்ஷõபந்தனம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு பிம்பத்தை சயனாதிவாசம் செய்யவும் என கூறுகிறார். இங்கு விருஷபமானது ஸ்வாமி பிம்பத்திலிருந்து வேறு பட்டதாக இருந்தால் ஸ்வாமியின் பாத தளத்தில் தெற்கு பாகம் தலையாக வைத்து விருஷபத்தை சயனாதிவாசம் செய்யவும் என கூறுகிறார். பிறகு சயனகும்ப அதிவாசம் பற்றி கூறுகிறார். அங்கு சிவனுடைய சிரோ தேசத்தில், சிவகும்பமும், வர்தனிகும்பமும், ஸ்தாபிக்கவும், விருஷப கும்பமானது விருஷப சிரோபாகத்தில் ஸ்தாபிக்கவும் கும்பத்தை சுற்றி வித்யேஸ்வரர்கும்பங்கள் 8 ஸ்தாபிக்கவும். சந்தன, புஷ்பம், இவைகளாலும், நைவேத்யங்களாலும் பூஜிக்கவும், தத்வ தத்வேஸ்வரர் நியாசம், மூர்த்தி மூர்த்தீஸ்வரர் நியாசம் ஸ்வாமிக்கும், விருஷபத்திற்கும் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு குண்டசம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் முடித்து ஹோமம் செய்யவும் என கூறி ஹோமத்தின் திரவ்யங்களை நிரூபிக்கும் முறையாக ஹோம விதி சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டாம் நாள். ஆசார்யன், மூர்த்திபர்களுடன், ஸ்வாமி, கும்பம், வஹ்னி, இவர்களை பூஜித்து யஜமானனால் வஸ்திரம், ஸ்வர்ணம் இவைகளால் பூஜிக்கப்பட்டவனும், தட்சிணையை பெற்றுக் கொண்டவருமாக, மந்திரன் நியாசம் செய்யவும் என கூறி மந்திரம் நியாசம் செய்யும் முறை விளக்கப்படுகிறது. இங்கு அம்பாள் தனிமையான பீடத்துடன் இருந்தால் தனிமையாக ஸ்தாபிக்க வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு கல்யாண உத்ஸவம் செய்யவும், உத்ஸவம் ஸ்நபனம் அதிகமான நைவேத்யம் செய்யவேண்டுமா, இல்லையா என விசேஷமாக கூறப்படுகிறது. இங்கு சொல்லப்படாததை சாமான்யமாக ஸ்தாபன விதியால் கூறப்பட்டுள்ளபடி செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு அவ்வாறே விருஷபமானது கனமானதாகவோ, கனம் இல்லாததாகவோ செய்யலாம் என கூறப்படுகிறது. முடிவில் யாரால் பக்தியுடன் பிரதிஷ்டை அனுஷ்டிக்கப்படுகிறதோ, அவன் இஷ்டபடி அனுபவித்து முடிவில் சிவபதத்தை அடைகிறான் என்று பலஸ்ருதியாகும். இவ்வாறாக 62வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. வ்ருஷா ரூடப்ரதிஷ்டையை அந்த லக்ஷணத்துடன் கூட கூறுகிறேன். நான்கு கை, மூன்று கண்கள், ஜடையை மகுடமாக தரித்தவராய்

2. வலது மேல் கையில் மழுவையும், இடது மேல் கையில் மானை உடையவராய் கீழ் வலக்கை கடக முத்திரையுடன் வளைந்த தண்டத்தை உடையதாயும்

3. ஸ்வாமியின் வலது முழங்கையின் அடிப்பாகம் வ்ருஷபத்தின் தலையில் இருக்க வேண்டும். இடது கீழ்கை ஹம்ஸ முத்திரையாகவோ அல்லது பதாக முத்ரையை அதோமுகமாக

4. இடது கையின் நுனி அளவுடன் தொப்பூழ் ஸூத்ர அளவு சமமாகும். இடது கையின் விரலிலிருந்து தொப்பூழ் ஸூத்ரம் வரை பதினைந்து அங்குலமாகும்.

5. அந்த மணிக்கட்டின் பக்கமானது, இரண்டங்குலம் ஆகும். முழங்கையின் அடியிலிருந்து இருதயத்தின் நடுப் பிரதேசம் வரை இருபத்தைந்து அங்குலம் ஆகும்.

6. கையின் மணிக்கட்டிலிருந்து குஹ்யத்தின் அடிப்பாகம் சமம் ஆகும். மணிக்கட்டிலிருந்து பக்கஅளவு பத்தொன்பது மாத்திரையாகும்.

7. பக்கவாட்டுக்கை மத்தியில் உள்ள கை இவைகளின் இடைவெளி ஏழங்குலம் ஆகும். நின்ற கோலத்தில் ஸமபங்க லக்ஷணம் உடையதாக அமைக்க வேண்டும்.

8. நெற்றி மூக்கு இவைகளிலிருந்து நிற்கிற வலது பாத குதிகால் நடுவரை உள்ள ஸூத்ரம் சிவ ஸூத்ரமாகும்.

9. ஹ்ருதயத்தில் உள்ள மத்ய ஸூத்ரமானது மூன்றங்குலம். நாபிக்கும் குஹ்ய தேசத்திற்கும் உள்ள ஸூத்ர இடைவெளி நான்கு மாத்திரையாகும்.

10. வலது, இடது முழங்கால்களின் இடைவெளி மூன்றங்குலம் ஆகும். வலது காலின் வளைந்த தன்மை, குதிகாலிலிருந்து ஐந்தங்குல இடைவெளியாகும்.

11. மற்ற அளவு இரண்டங்குலத்தால் சந்திரசேகரைப் போல் அமைக்கவும். இம் மூர்த்தியின் வலப் பக்கத்திலேயே தேவியை அழகாக அமைக்க வேண்டும்.

12. தன்னுடைய வலது பாகத்தில் மூர்த்தியை அனுசரித்தோ, தனியாகவோ தேவியுடன் கூடியதாகவோ ஆயுதங்கள் இல்லாமலோ மாறுதலான அங்கங்களை உடையதாகவோ

13. வ்ருஷபாரூடரை அமைக்கவும், இது மோக்ஷத்தை கொடுக்கக் கூடியது. பின் பக்கமுள்ள வ்ருஷபமானது, சுவாமியின் முழங்கால் தொடை உயர அளவாக இருக்க வேண்டும்.

14. குஹ்யத்திலிருந்து நாபியின் முடிவு வரையோ அமைத்து மற்ற உருவ அமைப்பு முன் கூறியபடி செய்யவும். இவ்வாறு பிம்பம் அமைப்பதை கற்சிலை முதலிய திரவியங்களால் செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

15. சுப முஹூர்த்தத்தில் அங்குரம், ரத்னந்யாஸம் முதலாக பிரோக்ஷணத்தை செய்ய வேண்டும். ரிஷபத்திற்கும் நயோன்மீலனம் பிம்ப சுத்தியை செய்து கிராம பிரதட்சிணமாக

16. ஜலாதி வாஸம் செய்து, யாக மண்டபத்தை அடைய வேண்டும். ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்க வேண்டும்.

17. சதுரமாகவும், வட்டவடிவங்களாகவும் எண்கோணமாகவும் குண்டங்கள் இருக்கலாம். பின் சில்பியை திருப்தி செய்து அனுப்பிவிட்டு அந்தணர்க்கு உணவளித்து

18. புண்யாக பிரோக்ஷணம் செய்து, ஸ்தண்டிலத்தில் சயனம் அமைத்து ஸ்நபநம் செய்து ரக்ஷõபந்தனம் செய்யவும், வ்ருஷபத்திற்கும் முன்கூறியபடி செய்ய வேண்டும்.

19. சயன ஸ்தாபனத்தைச் செய்த பிறகு கும்பங்களை ஸ்தாபிக்க வேண்டும். சுவாமியின் சிரோ பாகத்தில் சுவாமி கும்பத்தையும் வர்தனியையும் ஸ்தாபிக்க வேண்டும்.

20. ரிஷபம் தனிபிம்பமாயிருப்பின் சுவாமி பாதத்தின் கீழ் ரிஷபத்தின் தலை தென்பாகம் இருக்கும்படியாகச் செய்து சயனத்தில் இருக்க வேண்டும்.

21. விருஷ பிம்பத்தின் தலை பாகத்தில் வ்ருஷப கும்பம் வைக்கவும். சுற்றிலும் எட்டு குடங்களில் வித்யேசர்களை பூஜிக்க வேண்டும்.

22. சந்தன, புஷ்பாதிகளையும், தூப, தீபங்களையும் கொடுத்து தத்வமூர்த்தி நியாஸங்களையும் குருவானவர் சுவாமிக்கும் ரிஷபத்திற்கும் செய்ய வேண்டும்.

23. குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரங்களைச் செய்து சமித்து, நெய், அன்னம், பொறி, எள், கடுகு, உளுந்து முதலியவைகளை ஹோமம் செய்ய வேண்டும்.

24. புரசு, அத்தி, அரசு, ஆல் முதலிய சமித்துக்களை கிழக்கு முதலான குண்டங்களிலும் வன்னி, நாயுருவி, பில்வம், மயிற் கொன்னை முதலிய சமித்துக்களை அக்னி கோணாதி குண்டங்களிலும்

25. பிரதான குண்டத்தில் புரசு, சமித்தையும் அங்கு வ்ருஷபத்தையும் பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும். பின் இரண்டாவது நாளில் தேவர்கள் கும்பங்கள், அக்னியையும் பூஜிக்க.

26. ரித்விஜர்களுடன் ஆசார்யரும் வஸ்த்ரம், ஸ்வர்ணாபரணங்களுடன் தட்சிணையை அடைந்தவராகச் செய்து பிறகு மந்திர நியாஸத்தையும் செய்ய வேண்டும்.

27. குருவானவர் சுவாமியின் முன்னால் ஸ்தண்டிலத்தில் கும்பங்களை வைத்து பூஜித்து கும்பத்திலிருந்து மூலத்தை சுவாமியின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

28. வர்த்தினீ குடத்தையும் தேவியின் பீடத்தின் முன் ஸ்தண்டிலத்தில் வைத்து பீஜ மந்திரங்களை பீடத்தில் சேர்க்கவும். ஈசனின் பீடத்துடன் சமமாக தேவியும் இருந்தால் வர்த்தனீ மந்திரத்தை அம்பிகை ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

29. வ்ருஷபத்தின் கும்பத்திலுள்ள மூலத்தை விருஷபத்தின் ஹ்ருதயத்தில் சேர்க்கவும். மற்றுமுள்ள கும்பங்களின் பீடத்தைச் சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

30. தனி பீடமான தேவியாகில் பிரதிஷ்டையைத் தனியாகச் செய்ய வேண்டும். பிறகு கல்யாணத்தையும் முறைப்படி ஆசார்யர் செய்ய வேண்டும்.

31. உத்ஸவத்தையும் ஸ்நபனத்தையும், மஹா நைவேத்யங்களையும் வேண்டுமெனில் செய்யலாம். இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபன விதிபோல் செய்ய வேண்டும்.

32. இம்மாதிரியான வ்ருஷப வாஹன மூர்த்தியின் பிரதிஷ்டையானது சொல்லப்பட்டது. சிறியதாகவோ பெரியதாகவோ இருந்தாலும் விருஷபம் அவசியம் செய்ய வேண்டும்.

33. இம்மாதிரி பிரதிஷ்டையை அனுஷ்டிப்பவர் பக்தி, பாவனையோடு கூடியவராகில் அனைத்து இஷ்ட போகங்களையும் அனுபவித்து சிவ பதத்தை அடைவர்.

இவ்வாறு உத்தர காமிகாகம மஹாதந்திரத்தில் வ்ருஷபாரூட பிரதிஷ்டை முறையாகிற அறுபத்தி இரண்டாவது படலமாகும்.

படலம் 61: ஏகபாத திரிமூர்த்தி ஸ்தாபனம்...

படலம் 61: ஏகபாத திரிமூர்த்தி ஸ்தாபனம்...

61வது படலத்தில் மும்மூர்த்தி ஸ்தாபனம் கூறப்படுகிறது. முதலில் இலக்கண அமைப்பு பூர்வமாக திரிமூர்த்திஸ்தாபனம் கூறுகிறேன் என்பது கட்டளை. பிறகு ரக்தவர்ணம், முக்கண் வரத அபய ஹஸ்தம் மான் மழு இவைகளுடன் ஜடாமகுடத்தையும் அலங்காரமாக கொண்டவனும் ஒரு பாதத்தை உடையதும் இடுப்புபிரதேசத்திற்கு மேல் தெற்கு வடக்கு பக்கமாகிய இருஇடங்களிலும் முறையாக பாதிசரீரம் உடைய பிரம்மா விஷ்ணுவின் உருவத்தை உடையவரும் ஆகிய ஏகபாத திரிமூர்த்தி என்று ஏகபாத திரிமூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு இங்கு பிரம்மா விஷ்ணு ஒவ்வொரு பாதத்துடன் கூடியதாகவோ அஞ்சலி ஹஸ்தத்துடன் கூடியதாகவோ அமைக்கவும் என ஒருவிசேஷமாக நிரூபிக்கப்படுகிறது. பிறகு சிவலிங்கத்தின் இரண்டு பக்கங்களில் உள் அடங்கியதாகவோ அவைகள் இருக்கட்டும் என வேறு விசேஷம் கூறப்படுகிறது. அல்லது அவை இரண்டும் வெவ்வேறாக ஒரே ஆசனத்தை அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிறகு மத்தியில் வேறு விதமான லிங்கம், பிரம்மா, விஷ்ணு இவைகள் இருப்பதாகவும் வேறு ஒருவிசேஷம் கூறப்படுகிறது. பிறகு மூன்று மூர்த்திகளும் தனித்தனி ஆலயத்துடன் கூடியதாகவோ அல்லது ஒரே ஆலயத்தில் சேர்ந்து இருப்பதாகவோ இருக்கலாம். கிழக்கு முகமாகவோ மேற்கு முகமாகவோ பரிவாரத்துடன் கூடியதாகவோ தனித்தனிபிராகாரத்துடனோ ஒரே பிரகாரத்துடனோ அமைந்ததாக மும்மூர்த்திகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அங்கு சிவலிங்க பிரதிஷ்டை பிரம்மபிரதிஷ்டை விஷ்ணுப் பிரதிஷ்டை அந்தந்த படலத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும் ஏகபாத திரிமூர்த்தியின் பிரதிஷ்டை கூறப்படுகிறது என உத்தரவு முன்பு சொல்லப்பட்டபடி நல்லநேரத்தை பரிசிட்சித்து அங்கு ரத்தினந்தியாசம், நயனோன் மீலனம், பிம்பசுத்தி கிராம பிரதட்சிணம் ஜலாதிவாசம் செய்யவும் என்று வரிசைக்கிரமமாக கிரியை கூறப்படுகிறது. பிறகு யாகசாலை முன்பு கூறியபடி அமைத்து குண்டம் அமைக்கும் முறை விளக்கப்படுகிறது.

பின்பு சில்பி விசர்ஜனம் செய்து மண்டபத்தில் பிராமண போஜனம் புண்யாக பிரோக்ஷணம் செய்து அங்குஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி ஸயனாதிவாசம் செய்யவும். ஜலாதிவாசம் முடித்து ஸ்நபனம் செய்து ரக்ஷõபந்தனம் செய்து சயனாதிவாசம் செய்யவும் என சயனாதிவாசம் செய்யும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. இங்கு ரக்ஷõபந்தனம் சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூவர்களுக்கும் வலதுகையில் தனித்தனியாக செய்ய வேண்டும் கூறப்படுகிறது. கும்பத்தை அதிவாசம் செய்யும் முறை கூறப்படுகிறது. அங்கு ருத்திரன் பிரம்மா விஷ்ணு (ருத்திரன்) இவர்களின் சிரோதேசத்தில் மூன்று கும்பம் வைக்கவும். ருத்திரனின் இடது பக்கம் வர்த்தினியை ஸ்தாபிக்கவும் அவைகளின் ரூபத்தியானத்தை நினைத்து சந்தனம் முதலியவைகளால் பூஜை செய்யவும் தத்வன்நியாசம் தத்வேஸ்வரன் நியாசம் மூர்த்திநியாசம் மூர்த்தீஸ்வரர் நியாசம் இவைகளை முறைப்படி செய்து பூஜிக்கவும். கும்பஸ்தாபன விதி கூறப்படுகிறது. பின்பு குண்டஅக்னி சம்ஸ்காரம் முடித்து ஹோமம் செய்யவும் என்று ஹோமதிரவ்ய நிரூபணபடி ஹோமம் செய்யும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டாம்நாள் ஆசார்யன், கும்பம், ஸ்வாமி, அக்னி இவர்களை பூஜித்து யஜமானனால் வஸ்திரம் ஸ்வர்ணங்கள் இவைகளால் பூஜிக்கப்பட்டவராகவும் தட்சிணைபெற்றுக் கொண்டவருமாக பிம்பத்திற்கு முன்பாக கடங்களை ஸ்தாபித்து மந்திரந்நியாசம் செய்யவும் எனக்கூறி மந்திரன் நியாசமுறை நிரூபிக்கப்படுகிறது. கும்பஜலங்களால் அந்தந்த ஸ்வாமிக்கு கும்பாபிஷேகம் செய்யவும் என கும்பாபிஷேகவிதி கூறப்படுகிறது. பிறகு ஸ்நபனம், உத்ஸவம் அதிகமாக நிவேதனம், இவைகளை செய்யவும். இங்கு கூறப்படாதவற்றை அந்தந்த அத்யாயங்களில் கூறப்பட்டுள்ளபடி செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு எந்த மனிதனால் மும்மூர்த்திகளுக்கு பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ அந்த மனிதன் இந்த லோகத்தில் சவுக்கியத்தை அடைந்து முடிவில் உன்னதமான சிவசாயுஜ்ய பதவியை அடைகிறான் என்பது பலஸ்ருதியாக காணப்படுகிறது. இவ்வாறாக 61வது படலகருத்து சுருக்கமாகும்.

1. திரிமூர்த்தியின் (மூன்று மூர்த்தியின்) பிரதிஷ்டையை அதன் அமைப்பு முறைப்படியாக சொல்கிறேன். சிவப்பு வர்ணம் உடையவராயும் மூன்று கண்களையுடையவராயும் அபய வரத ஹஸ்தமுடையவராயும்

2. மான் கோடரியோடு கூடியவராயும் ஜடாமகுடம் தரித்தவராயும் நேராக அமைந்த ஓர் பாதத்தோடு கூடியவராயும்

3. வலது, இடது இரண்டு பக்கங்களிலும் இடுப்பு பாகத்திற்கு மேல் பிரம்ம விஷ்ணுக்களின் பாதி சரீரத்துடன் கூடியதாயும்

4. பிரம்ம விஷ்ணுக்களின் அளவானது பெண் சரீரம் போல் சற்று வளைவானதாக அமைக்க வேண்டும். இரண்டு கைகளும் தொழுத நிலையில் ஒரு காலோடு கூடியவராயும் இருக்கலாம். (கால் இல்லாமலும் அமைக்கலாம்)

5. அல்லது சிவலிங்கத்தின் பக்கங்களில் பாணத்திலேயோ வெளிப்படையாகவோ அல்லது தனித்தனியாக ஒரே ஆஸனத்தில் இருப்பவர் களாகவோ

6. அல்லது நடுவில் லிங்கம் கொண்ட தனித்தனி ஆலயங்களாகவோ வலப்புறம் இடப்புறம் முறையே பிரம்மாவையும், விஷ்ணுவையும் கொண்டவராகவோ அமைப்பது சம்மதமானது.

7. தனித்தனியாகவோ, அல்லது ஒரே ஆலயத்திலோ மும்மூர்த்திகள் இருக்கலாம். பிரம்ம விஷ்ணு, சிவ ஆலயங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

8. கிழக்கு முகமாகவோ அல்லது மேற்கு முகமாகவோ பரிவாரங்களுடன் சேர்ந்தோ தனித்தனி பிரகாரத்தை உடையவர்களாகவோ ஒரே பிரகாரத்தில் இருப்பவராயும் இருக்கலாம்.

9. நடராஜ மூர்த்தி முதலானவர்களை மத்தியில் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்ட லக்ஷணமுடையவரின் பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது.

10. ஹே, முனிபுங்கவர்களே, சிவலிங்க பிரதிஷ்டையையும், பிரம்மா விஷ்ணு பிரதிஷ்டைகளையும் அந்தந்த விதி முறைப்படி செய்ய வேண்டும்.

11. இப்பொழுது ஏகபாதருடைய பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது. முன்சொல்லியபடி சுபமான காலத்தில் முன் சொல்லியபடி அங்குரார்ப்பணத்தையும்

12. ரத்னன்யாஸம், நயனோன்மீலனம் (பேரசுத்தியும்) பிம்பசுத்தியும் தனித்தனியா செய்யவேண்டும். கிராமப்ரதட்சிணம் ஜலாதிவாசம் மண்டபம் அமைப்பு முறை முதலியவைகளை செய்ய வேண்டும்.

13. குண்டங்களை ஒன்பது ஐந்து ஒன்று என்ற எண்ணிக்கையில் அமைக்க வேண்டும். அவை எண்கோணம் வட்டம், சதுர குண்டங்களாகும்.

14. சில்பியை திருப்தி செய்துவிட்டு அந்தணர்களுக்கு உணவு அளித்து புண்யாஹ ஜலத்தைப் புரோக்ஷித்து ஸ்தண்டிலத்தில் சயனம் செய்து ஸ்நானம் செய்வித்து ரக்ஷõபந்தனத்தை செய்யவேண்டும்.

15. பிரம்ம விஷ்ணு சிவனுக்கு வலது கையில் ரக்ஷõபந்தனத்தை தனித்தனியாகச் செய்ய வேண்டும். சயனாரோஹணம், கும்பஸ்தாபனத்தையும் முறையாகச் செய்ய வேண்டும்.

16. பிரம்ம விஷ்ணு, சிவனின் தலைபாகத்தில் மூன்று கும்பங்களையும் சிவகும்பத்திற்கு இடப்புறம் வர்த்தனீ கலசத்தையும் ஸ்தாபிக்க வேண்டும்.

17. அந்தந்த மூர்த்திகளை அவ்வாறே தியானித்து சந்தனம் முதலியவற்றால் பூஜிக்கவும். தத்வந்யாஸம் மூர்த்தி ந்யாஸத்தையும் அவ்வாறே செய்ய வேண்டும்.

18. ஹோம குண்டங்களில் அக்னிகார்யம் செய்து எள், கடுகு, பயறு, உளுந்து, அவரை துவரை, மூங்கிலரிசி இவைகளாலும்

19. புரசு, அத்தி, அரசு, ஆல் முதலியவற்றை கிழக்கு முதலான குண்டங்களிலும் வன்னி, நாயுருவி, பில்வம் இச்சி முதலியவற்றை தென்கிழக்கு கோண குண்டங்களிலும்

20. பிரதான குண்டத்திலும், எல்லாவற்றிலும் புரசையோ ஹோமம் செய்யலாம். பின் இரண்டாவது நாள் தேவர், கும்பம், அக்னி, இவற்றிற்கு பூஜை முதலான செய்து

21. குருவானவர் ரித்விஜர்களோடு கூடியவராய் வஸ்த்ரம் ஸ்வர்ணாபரணம் இவைகளோடு பத்து நிஷ்கம் எடையுள்ள தட்சிணைகளால் சந்தோஷம் அடைந்தவராய் இருத்தல் வேண்டும்.

22. பிறகு மந்திரந்யாஸத்தைச் செய்து பிம்பத்திற்கு முன்னால் உள்ள கும்பங்களை பூஜித்து, கும்பத்தில் உள்ள சக்தியை தேவரின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

23. வர்தனியில் உள்ள மூலத்தை கிரஹித்து அதன் பீடத்தில் சேர்க்க, ப்ரும்ம, விஷ்ணு கும்பங்களின் மூலத்தை அந்தந்த ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

24. மற்ற கும்பங்களில் உள்ள மூலத்தை பீடத்தை சுற்றிலும் சேர்க்க வேண்டும். அந்தந்த கும்ப ஜலத்தை அதற்குரிய இடங்களில் அபிஷேகிக்க வேண்டும்.

25. ஸ்நபனம், உத்ஸவம், செய்து அதிகப்படியாக நைவேத்யங்களை செய்து இங்கு கூறப்படாததை அந்தந்த வழிகளில் கூறியபடி செய்ய வேண்டும்.

26. இம்மாதிரியான த்ரீமூர்த்தி பிரதிஷ்டையானது எவரால் செய்யப்படுகிறதோ அவர் இவ்வுலகில் சுகத்தை அடைந்து கடைசியில் சிவபதத்தை அடைவார்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் த்ரீமூர்த்தி ஸ்தாபன விதியாகிற அறுபத்தி ஒன்றாவது படலமாகும்.

படலம் 60: விஷ்ணூமார்த்த பிரதிஷ்டை...

படலம் 60: விஷ்ணூமார்த்த பிரதிஷ்டை...

60 வது படலத்தில் ஹரிஹரார்த்த மூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் இவர்களின் பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. முதலில் இலக்கண அமைப்பு பூர்வமாக ஹரிஹரார்த்த மூர்த்தி அர்த்தநாரீஸ்வர மூர்த்தியின் பிரதிஷ்டையை கூறுகிறேன் என்பது கட்டளை. கற்சிலை முதலிய திரவ்யங்களால் பிம்பத்தை அமைக்கவும் என கூறி முதலில் உமார்த்த மூர்த்தி என்கிற அர்த்த நாரீஸ்வர மூர்த்தியின் லக்ஷணம் கூறப்படுகிறது. அங்கு பிம்பத்தில் தென் பாகத்தில் பரமேஸ்வரனின் பாதி உருவமும் வடக்கு பாகத்தில் உமாதேவியின் பாதி உருவமும் அமைக்க வேண்டும் தென்பாகத்தில் பாதிபாகமான பகுதியில் பிறை சந்திரனுடன் கூடிய ஜடாமகுடமும் இடப்பாகத்தில் அலகம் என்ற கேசத்துடன் கூடிய கரண்டமகுடம் அமைக்க வேண்டும். நெற்றியின் தென்பாகத்தில் பாதி அளவுள்ள நெற்றிக்கண் அமைக்கவும். வலது காதில் மகர குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அமைக்கவும். வலது இருகைகளில் கோடரியும் அபயமும், இடது கையில் நீலோத்பலம் அல்லது தேவி தியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதமோ அமைக்கவேண்டும். இடது பாகத்தில் கண்ணை கண்ணாடி போல் பிரகாசமாக அமைக்கவும் என கூறி கண்ணாடியின் லக்ஷணம் கூறப்படுகிறது. வலப்பாகத்தில் புலித்தோலை அணிந்ததாகவும் இடப்பாகத்தில் இடது பாக ஸ்தானத்தையும் அழகிய வஸ்திரத்தையும் அமைக்கவேண்டும். வலது பாதம் கொஞ்சம் வளைந்ததாகவும் இடது பாதம் நேராக இருப்பதாக செய்ய வேண்டும் வலப்பாகம் மாணிக்க ரத்தினம் போல் பிரகாசிப்பதாகவும் இடப்பாகம் மரகத ரத்னம் போல் பிரகாசிப்பதாகவும் அமைக்கவும் என கூறி பிம்பத்தில் சூத்திரம் இடும் அர்த்தநாரீஸ்வரரின் லக்ஷணம் கூறப்படுகிறது. வலது பாகத்தில் பரமேஸ்வரன் உருவமும் இடது பாகத்தில் மஹாவிஷ்ணுவின் உருவமும் அமைக்க வேண்டும். இடப்பாகமான மஹாவிஷ்ணுவின் பாகத்தில் சங்கு, கடக முத்திரையுடன் கூடிய இரண்டு கையையும் பீதாம்பரத்துடன் கூடியதாகவும் மஹாவிஷ்ணு பாதி சரீரம் அமைக்க வேண்டும் என ஹரிஹரார்த்தமூர்த்தியை அமைக்க வேண்டும் என கூறப்படுகிறது.

பிறகு பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. கூறப்பட்ட காலத்தை பரிøக்ஷ செய்து முன்பு போலவே அங்குரார்ப்பணம் செய்து ரத்ன நியாசம், நயனோன் மீலனம் பிம்பசுத்தி, கிராமபிரதட்சிணம் ஜலாதிவாசம் முதலிய கிரியைகள் சாமான்யமாக ஸ்தாபனத்தில் சொல்லப்பட்ட முறைப்படி வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு மண்டபம் அமைக்கும் முறை விளக்கப்படுகிறது. குண்டம் அமைக்கும் முறையில் விசேஷம் கூறப்படுகிறது. பிறகு சில்பி விசர்ஜனம், பிராம்மண போஜநம்புண்யாகபிரோக்ஷணம் இவைகள் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் அமைத்து, அங்கு முறைப்படி சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதிவாசத்திலிருந்து எடுத்து வரப்பட்ட பிம்பங்கள் ஸ்னபநாபிஷேகம் செய்து பிறகு இருவர்களின் இரண்டு கைகளில் ரக்ஷõபந்தனம் செய்யவும் என கூறி ரக்ஷõபந்தனம் கூறப்படுகிறது. பிறகு பிம்பத்தை சயனத்தில் அமர்த்தி சயனாதி வாச விதி கூறப்படுகிறது. கும்பம் அதிவாசம் செய்யும் முறையும் விளக்கப்படுகிறது. அங்கு பரமேஸ்வர சிவகும்பம் அமைத்து உமாதேவியின் தலைப்பாகத்தில் வர்தனியை ஸ்தாபிக்கவும். ஹரிஹரார்த்த மூர்த்தி விஷயத்தில் மஹாவிஷ்ணு சிரோதேசத்தில் மஹாவிஷ்ணு கும்பம் அமைக்கவும். அந்தந்த சரீரத்தின் அர்த்த பாகத்தை தியானித்து பூஜை செய்யவும் சுற்றிலும் வித்யேஸ்வரர்கள் அதிஷ்டிதமாக ஸ்தாபித்து சந்தனம் புஷ்ப தூபதீப நைவேத்யங்களால் பூஜித்து மூர்த்தீஸ்வரர்களையும் முறையே தத்வ தத்வேஸ்வரர்களையும் அவர்கள் வியாபித்து உள் இடங்களையும் குறிப்பிட்டு ஹரிஹரார்தமூர்த்தி இவர்களுக்கு மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களின் விஷயத்தில் சிறப்பு கூறப்படுகிறது. பிறகு ஹோம முறையும் திரவ்யங்களும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டாவது நாள் மூர்த்திபர்களுடன் கூடி ஸ்வாமி, கும்பம், அக்னி இவைகளை பூஜிக்கவும் யஜமானன் மூர்த்திபர்களையும் ஆசார்யனையும் வஸ்திர, ஸ்வர்ணாங்குலீகம் இவைகளால் பூஜித்து அவர்களுக்கு தட்சிணை கொடுக்கவும். பிறகு நல்ல முகூர்த்த காலம் ஏற்பட்ட பொழுது ஆசார்யன் மந்திர நியாசம் செய்யவும் என கூறி அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரார்த்த மூர்த்தி இவர்களின் வேறுபாடு நிரூபிக்கப்படுகிறது. உத்ஸவம், ஸ்நபனம், அதிகமான நைவேத்யம் இவைகள் செய்ய வேண்டுமா வேண்டாமா என விளக்கமாக கூறப்படுகிறது. பிறகு இங்கு சொல்லப்படாதவற்றை அந்ததந்த ஸ்வாமியை ஸ்தாபிக்கும் முறையில் கிரஹித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறது. முடிவில் போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்க வல்லது என ஹரிஹரார்த்த மூர்த்தி, உமார்த்த மூர்த்தி பிரதிஷ்டை சொல்லப்பட்டது என பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறாக 60வது படல கருத்து சுருக்கம் ஆகும்.

1. விஷ்ணு உமார்த்த பிரதிஷ்டையை அதன் லக்ஷணத்துடன் சொல்கிறேன்.

2. இடது பாகத்தில் பார்வதியின் சரீரத்தையும் வலது பாகத்தில் சிவ சரீரத்தின் பாதியையும், வலது பாதியில் ஜடாமகுடமும், பிறை சந்திரனுடன் கூடிய சிகையையும்

3. இடது புறம் கரண்ட மகுடமும் நெற்றியில் சுருண்ட கேசத்துடன் கூடியதாகவும் வலப்புறம் அரை நெற்றிக் கண்ணை உடையதாகவும்

4. இடது காதில் சுருண்ட முடியும் கர்ணபத்ரத்துடன் கூடியும் வலது காதில் மகர குண்டலத்துடன் கூடியோ இல்லாமலும்

5. வலது மேல்கையில், மழுவும், அபயமும், அஸ்த்ரத்தை இடது கையில் கருங்குவளை மலர் தரித்ததாகவோ தேவியின் பிரதிஷ்டையில் கூறப்பட்டுள்ள ஆயுதத்தை ஏந்தியவராகவோ கண்ணாடி போலழகான உடையதாகவும்

6. கண்ணாடி அழகான வட்ட முக வடிவிலும் அதன் முஷ்டி பாகம் அதன் பாதி அளவாகவும் அதன் காம்பு மொட்டு போன்றும் கால்பக்கம் அழகாக உள்ளதாகவும் அமைக்க வேண்டும்.

7. உமையின் பாகம் ஸ்தனத்தோடு கூடியதாயும் அழகிய வஸ்த்ரம் உடுத்தியவராயும் வலது புறம் புலித்தோலுடையதாயும் இடது பாதம் சிறிது வளைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

8. இடது கால் நன்றாக நின்றதாயும் கொலுசு என்ற ஆபரணத்தினால் அலங்கரிக்கப்பட்டதாயும் மூன்றங்குல அளவு சிறிது வளைந்தும் பிறகு ஒன்பது அங்குல அளவு வளைந்ததாகவும் அமைக்க வேண்டும்.

9. இடது பாகம் பச்சை நிறமுள்ள தேகமாகவும் வலது பாகம் வெண்மையான காந்தி உடையதாயும் ஹ்ருதயம் குஹ்யம் இவைகளின் இடது வலது பாகத்தில்

10. சந்திரனின் இடப்பாகத்தை விட்டு நேராக நிற்கும் பாகத்தின் நுனியில் நடுபாகத்தில் சூத்திர மிடவும் உத்பல ஹஸ்தத்தின் உயரமும் ஸ்தன மொட்டும்

11. அதன் இடைவெளி பன்னிரெண்டங்குலமோ பதினான்கு அங்குலமாகவோ அமைக்கவும். ஈஸ்வர பாகத்தின் பக்கவாட்டுக்கை மத்தியில் உள்ளகை இவைகளின் இடைவெளி ஆறங்குலமாகும்.

12. கால் கட்டைவிரல், குதிகாலின் இடைவெளி பதினைந்து அல்லது ஐந்து அங்குலமாகும். மற்ற உருவ அமைப்புகள் சந்திரசேகர பிம்பத்தைப் போல் செய்ய வேண்டும்.

13. இவ்வாறு அர்தநாரீஸ்வரர் லக்ஷணம் கூறப்பட்டு ஹரிஹரார்த்த மூர்த்தியை பற்றி கேளுங்கள். முன்பு போலவே மஹேச்வரரின் பாதி உருவத்தையும் அமைக்க வேண்டும்.

14. விஷ்ணு பாகத்தில் சங்கு, கடகமுத்ரையோடு கூடிய இரண்டு கையை உடையவராகவும், பீதாம்பரத்துடன் எல்லா ஆபரணங்களையும் தரித்தவராயும்

15. மீதி உருவத்தை சந்திர சேகரரைப் போன்றே ஸூத்ரம் போடும், முறையில் செய்யவும். இவ்வாறே (ஹரிஹரார்த்த) சங்கர நாராயண மூர்த்திக்கு பிரம்ம பாகம் முதலியவைகளைச் செய்ய வேண்டும்.

16. இவ்வாறு பிம்பத்தை அமைத்து உத்தமமான ஆசார்யர்கள் பிரதிஷ்டையை செய்யவும். அவ்வாறான பிரதிஷ்டையை சுருக்கமாகக் கூறுகிறேன் கேளுங்கள்.

17. பிரதிஷ்டா காலம் முன்பே கூறப்பட்டுள்ளது. அவ்வாறே அங்குரார்ப்பணம் ரத்ன நியாஸம், நயனோன்மீலனம், மண் முதலியவைகளால் பிம்பசுத்தி

18. கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் இவைகளை ஸாமான்ய ஸ்தாபனத்திற்கு சொல்லப்பட்ட வழியில் செய்ய வேண்டும்.

19. மேலும் அர்தபாகத்தை அந்த தேவ மூலமந்திரமாக அர்ச்சிக்க வேண்டும். ஐந்து, ஒன்பது குண்டங்கள் ஒரு குண்டத்தையோ அமைக்க வேண்டும்.

20. ஈசானத்தில் சதுரகுண்டம் ஒன்றை அமைக்கவேண்டும். சில்பியை அனுப்பிவிட்டு பிராம்மண போஜனத்தை செய்யவும்.

21. புண்யாகப்ரோக்ஷணம் செய்து, ஸ்தண்டிலம் அமைக்கவும். அதில் சயனம், அமைத்து ஸ்நபனம் தனியாகச் செய்து ரக்ஷõ பந்தனத்தை

22. இருவரின் முன்பாகமான கையிலும் செய்ய வேண்டும். பிம்பத்தை சயனத்தின் மேல் ஏற்றி பணிவுடன் படுக்க வைக்க வேண்டும்.

23. சிவனுடைய சிரோபாகத்தில் சிவ கும்பத்தையும் அம்பிகைக்குரிய சிரோ தேசத்தில் வர்த்தனீ கலசத்தையும் ஸ்தாபிக்க வேண்டும்.

24. விஷ்ணுவினுடைய சிரஸ்தானத்தில் விஷ்ணு கும்பத்தையும் ஸ்தாபிக்கவும். அந்தந்த சரீரத்தின் பாதி பாகங்களை அங்கு குருவானவர் தியானித்து பூஜிக்க வேண்டும்.

25. ஆசார்யர் சுற்றிலும் எட்டு குடங்களில் வித்யேச்வரரை பூஜிக்கவும் சந்தனம் புஷ்பம், தூபம், தீபம் நைவேத்யம் முதலியவைகளை கொடுத்து

26. தத்வ தத்வேச்வரந்யாசத்தை செய்து அடைந்ததாகப் பாவித்து க்ஷமா முதலான எட்டு மூர்த்திகளையும் அதன் மூர்த்தீசர்களையும் தியானம் செய்யவேண்டும்.

27. மூர்த்தீசர்களைப் பூஜிப்பதில் சற்று மாறுதல் கூறப்படுகிறது. சர்வன் பசுபதி, உக்ரன், ருத்ரன் என்ற மூர்த்திஸ்வரர்களும் சேதனா, பலோத்கடியையும்

28. தாத்ரீயையும் விப்வீயையும், இந்த்ராதி அஷ்டதிக்குகளில் வரிசையாக பூஜிக்க வேண்டும். விஷ்ணுவின் அர்த்த பாகப்ரதிஷ்டையில் ஸர்வ, பசுபதி உக்ர, ருத்ரன்களையும்

29. புரு÷ஷாத்தமன் விஷ்ணு கோவிந்தன் லக்ஷ்மிநாயகன் எனவும் பூஜிக்க பஞ்சமூர்த்தி ரூபமான நியாஸத்தில் மூர்த்திகள் முன்போல்

30. மேற்கில் பிரம்மா, கேசவன், ருத்ரன், ஞானி, இச்சா, என்றும் கவுரியின் பாதி சரீரத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்

31. ஜனார்த்தனன் புரு÷ஷாத்தமனையும் நியாஸம் செய்யவேண்டும். விஷ்ணுவின் பாதி பாகத்தில் பஞ்ச மூர்த்தீசர்களை நியாஸம் செய்யவேண்டும்.

32. சிவாம்சத்தில் சிவ மந்திரங்களையும் மற்ற அம்சத்தில் சரீரத்திற்கேற்ற மந்திரங்களையும் பூஜிக்க ஸம்ஹிதா மந்திரங்களினால் சிவனுடைய பாதி பாகத்தில் பூஜிக்க வேண்டும்.

33. அவ்வாறே மற்ற தேவதைகளுக்கு ஏற்ற ஈசாதிமூல மந்திரங்களால் பூஜிக்க இவ்வாறே மற்ற மந்திரங்களையும் புத்தியினால் அறிந்து பூஜிக்க வேண்டும்.

34. குண்ட ஸம்ஸ்காரத்தை செய்து அக்னியை அதில் பிறப்பிக்க வேண்டும். அந்தந்த திக்குகளில் அந்தந்த மூர்த்தீசர்களை ஆவாஹித்து

35. சமித்து, நெய், அன்னம், பொறி, எள், மூங்கில் யவைகளுடன் எல்லா மந்திரங்களாலும் பிரதான குண்டத்தில் ஆசார்யர் முன்போல் ஹோமம் செய்ய வேண்டும்.

36. புரசு, அத்தி, அரசு, ஆல் முதலிய சமித்துகளை கிழக்கு முதலான திக்குகளிலும் வன்னி, நாயுருவி, வில்வம் மயில் கொன்றை முதலியவற்றை அக்னி முதலான விதிக்குகளிலும் ஹோமம் செய்ய வேண்டும்.

37. பிரதான குண்டத்தில் புரசு, விசேஷமாக கூறப்படுகிறது. விஷ்ணு பாதிபாக விஷயத்தில் துளஸி, புரசு, இரண்டும் பிரதானத்தில் விசேஷம்

38. பிறகு இரண்டாவது நாளில் தேவர்களையும் கும்பங்களையும் அக்னியையும் பூஜிக்க வேண்டும். சந்தனம், வஸ்திரம், பொன் மோதிரம், முதலான உபசாரங்களோடு

39. மூர்த்திபர்களுடன் கூடிய ஆசார்யனை பூஜித்து தட்சிணையைக் கொடுக்கவும். நல்ல சுப முஹூர்த்தத்தில் மந்திர நியாஸத்தை செய்ய வேண்டும்.

40. கும்பங்களின் மந்திரங்களையும் வர்தனியின் மந்திரத்தையும் முறையாக சுவாமியிடத்தும் அம்பிகையிடத்தும், சமர்ப்பிக்கவும் பாதி விஷ்ணுவாக விஷயத்தில் வர்தனியை பீடத்தில் சேர்க்க வேண்டும்.

41. கிருஷ்ணருடைய கும்பத்திலிருந்து கிருஷ்ண பீஜத்தை கிருஷ்ணருடைய ஹ்ருதயத்தில் சேர்க்கவும். மற்ற கும்பங்களின் பீஜத்தை பீடத்தை சுற்றிலும் சேர்த்து நியாஸம் செய்ய வேண்டும்.

42. உத்ஸவம், ஸ்நபனம் மிகுந்த நைவேத்யம் முதலியவைகளை செய்யவும். செய்யாமலும் இருக்கலாம் இங்கு கூறாப்படாததை அந்தந்த மூர்த்தி ஸ்தானத்தில் கூறப்பட்டுள்ளபடி செய்ய வேண்டும்.

43. பக்தியையும் மோக்ஷத்தையும் கொடுக்கக்கூடிய விஷ்ணுமார்த்தி பிரதிஷ்டை இவ்வாறு கூறப்பட்டது.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் விஷ்ணு உமார்த்த பிரதிஷ்டா விதியாகிற அறுபதாவது படலமாகும்.

படலம் 59: கல்யாணோத்ஸவ முறை...

படலம் 59: கல்யாணோத்ஸவ முறை...

59 வது படலத்தில் கல்யாணம் செய்யும் முறை கூறப்படுகிறது. முதலில் பொதுவாக எல்லா ஸ்வாமிக்கும் கல்யாண கர்மா கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. பிறகு கல்யாண கர்மாவின் காலம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு கல்யாண விதி விளக்கப்படுகிறது. அங்கு கொட்டகை மண்டபம் இஷ்டமான தேசம் இவைகளில் கோசாணத்தால் மெழுகப்பட்ட இடத்தில் ஸ்தண்டிலம் அமைத்து வெள்ளை வேஷ்டி தரித்தவரும், யோக்யமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும், பாட்டு பஞ்சவாத்யம் இவைகளால் ஆன சப்தங்களாலும், கண்ணாடி, குடை சாமரம் இவைகளாலும், பலவித தூபம், அனேக தீபங்களோடு, கூடியதுமான பல்லக்கில் ஏற்றி அழைத்து வரப்பட்ட பரமேஸ்வரனை கிழக்கு முகமாக ஸ்தாபிக்கவும். பரமேஸ்வரனுக்கு முன்பாக மணல் முதலிய திரவ்யங்களால் ஸ்தன்டிலம் அமைத்து ஸ்வாமிக்கும் ஸ்தண்டிலத்திற்கும், நடுவில், வஹ்னியை ஸ்தாபிக்கவும். அக்னியின் இடது பாகத்தில் வடக்கு முகமாக பிரம்மாவையும் மஹாவிஷ்ணுவை வலது பாகத்திலும் தெற்கு முகமாக வஸ்திரம் முதலியவைகளால் அலங்கரிக்கப்பட்டதாக ஸ்தாபிக்கவும். பிறகு ஆசார்யன் ஸ்வாமிக்கு பாத்யாசமனம் கொடுத்து அணிந்து கொள்வதற்காக இரண்டு வஸ்திரம் கொடுக்கவும். பிறகு ஸ்தண்டிலத்தில் அக்னியை வைத்து 5 ஸம்ஸ்காரங்களை செய்யவும். பிறகு ஹோமம் செய்யவும் பூர்ணாஹுதி முடிவில் எல்லா ஆபரணத்தாலும் அலங்காரம் செய்யப்பட்ட கவுரியை ஸ்வாமிக்கு வலப்பாகத்தில் வைத்து பாத்யயாசமனம் கொடுத்து அம்பாளுக்கு மங்களசூத்திரம் கொடுக்கவும்.

அணிந்து கொள்வதற்காக இரண்டு வஸ்திரம் அம்பாளுக்கு கொடுத்து பூஜிக்கவும் என்று கூறி மங்கள சூத்திரம் கொடுக்கும் முறை கூற இங்கு ஹோமமுறை மங்கள சூத்திரம் கொடுக்கும் முறை மந்திரத்துடன் கூடியதாக சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு அம்பாளின் அருகில் லக்ஷ்மியை ஸ்தாபித்து ஆசார்யன் ஸ்வாமி அம்பாளுக்கு ரக்ஷõபந்தனம் செய்யவும் என ரக்ஷõபந்தனம் செய்யும் முறை கூறப்பட்டு பஞ்சாங்க பூஷணம் உடையவரும் நன்கு சிவாகமம் அறிந்தவருமான ஆசார்யனால் உத்தரவு இடப்பட்ட அதே லக்ஷணம் உடைய விஷ்ணு போல் தியானித்து தன்னுடைய கொண்டியால் சிவனுடைய கையில், தீர்த்தம் விடவும் என ஜல தானம் தாரை வார்க்கும் முறை கூறப்படுகிறது. ஸ்வாமி அம்பாளுக்கு விபூதி கொடுக்கவும். ஸ்வாமிக்கு மதுபர்க்கம் தாம்பூலம் கொடுக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு கவுரியின் ஹ்ருதயத்தில் சிவ ஹஸ்த நியாசமும் அம்பாளின் வலது காதில் பீஜ முக்ய மந்திர ஜபமும், அம்மி மிதிப்பதும், லாஜ ஹோமமும் முறைப்படி கூறப்படுகின்றன. பிறகு சிவாக்னி பஸ்மாவிற்கும் விசர்ஜனம் செய்யவும். பிறகு நான்காவது தினத்தில் நான்காவது தின கார்யம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்படுகிறது. பிறகு தம்பதிகளின் சயன விதி நிரூபிக்கப்படுகிறது. பிம்பமாய் இருந்தால் உத்ஸவம் செய்யவும் அசலபிம்பமாய் இருந்தால் அதே ஆசனத்தில் ஸ்தாபிக்கவும் என கூறி பிம்பங்களின் ஸ்தாபன முறை கூறப்படுகிறது. இவ்வாறு மற்ற தேவர்களுக்கு கல்யாண உத்சவம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு தனியான பீடத்தை உடைய அம்பாளுக்கும் கல்யாணம் செய்யும் விதி கூறப்படுகிறது. பிறகு கல்யாண மூர்த்தி பிரதிஷ்டை செய்பவனுக்கு விசேஷமாக பலன்கள் கூறப்படுகிறது. இதை பிரதிஷ்டை செய்பவன் தன்னுடைய சரீரத்தின் முடிவில் எந்த ஸ்தானத்தை அடைந்து பக்தர்கள் அவனை திருப்பி அனுப்பாமால் இருக்குமோ அப்பேர்பட்ட சிவஸ்தானத்தை அடைகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறு 59வது படலத்தின் கருத்து சுருக்கம் ஆகும்.

1. எல்லா தேவதைகளுக்கும் பொதுவாக கல்யாணம் செய்ய வேண்டிய முறைகள் பற்றி சொல்கிறேன். முன் நிச்சயிக்கப்பட்ட சுபமுஹூர்த்தத்திலோ அல்லது வேறு தினத்திலோ

2. மூன்றாம் நாளிலோ, நான்காம் நாளிலோ பகலிலோ நடு இரவிலோ விருப்பமான இடத்திலோ கொட்டகையிலோ மண்டபத்தில் பசுஞ்சாணத்தால் மெழுகி

3. அங்கு ஸ்தண்டிலம், வெள்ளை வஸ்திரத்தால் மூடப்பட்ட மேடையில் மூர்த்தியை ஸ்தாபிக்க வேண்டும். அலங்கரிக்க உகந்தவைகளால் அலங்கரித்து

4. ஸங்கீதம், பஞ்சகோஷம், குடைகள் சாமரங்கள், கண்ணாடிகள், தூபங்கள், தீபங்கள், வரிசைகளுடன் பல்லக்கு முதலியவற்றில் கொண்டு வந்து

5. அதற்கு முன்னால், மணல், முதலியவற்றால், மேடை அமைத்து கிழக்கு முகமாக வைத்து, மூர்த்திக்கும், ஸ்தண்டிலத்திற்கும் நடுவில் அக்னியை ஸ்தாபிக்க வேண்டும்.

6. அக்னி குண்டத்திற்கு வலது புறத்தில் வடக்கு முகமாக பிரம்மாவையும் இடது புறத்தில் தெற்கு நோக்கியபடி மஹாவிஷ்ணுவையும் வஸ்திர ஆபரணங்களாம் அலங்கார பூஷிதராக இருக்கச் செய்து

7. ஆசார்யரானவர் விஷ்ணு மூர்த்திக்கு உடுத்துக் கொள்ளவும் மேல் வஸ்திரத்திற்காகவும் கரையுடன் கூடிய ஹ்ருதய மந்திரத்தால் பாத்யம் ஆசமனம் கொடுத்து உடுக்க இரண்டு வஸ்திரம் கொடுத்து போர்த்த என இரு பட்டு வஸ்த்ரங்களால் பிரபுவை அலங்கரித்து

8. ஸ்தண்டிலத்தில் அக்னியை உண்டுபண்ணி பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்ய வேண்டும். ஷடங்க மந்திரத்துடன் பூஜித்து உகந்த ஸமித்து நெய், அன்னம் இவைகளுடன் கூட

9. பூர்ணாஹுதியை கொடுத்து குருவானவர் அப்பொழுது கவுரியை ஸர்வாபரண பூஷிதையாக சுவாமிக்கு வலதுபுறத்தில் ஹ்ருதய மந்திரத்தால் ஸ்தாபித்து

10. தேவிக்கு பாத்யம், ஆசமனம், அர்க்யம், முதலானவற்றை அந்தந்த மந்திரங்களினால் கொடுத்து, ஹ்ருதய மந்திரத்தால் மங்கல சூத்திரத்தையும் தரிக்க வேண்டும்.

11. உடுத்த போர்த்த இரு வஸ்திரங்களையும் கொடுக்க வேண்டும். தேவியின் அருகில் ஸர்வாலங்கார பூஷிதையாக மஹாலக்ஷ்மியை ஸ்தாபிக்க வேண்டும்.

12. ஆசார்யர் சுவாமி அம்பாளுக்கு ரக்ஷõ பந்தனத்தை செய்து சிவத்விஜ குலத்தவர் சிவாகம சமர்த்தர்களுக்கும் ரக்ஷõ பந்தனத்தை செய்ய வேண்டும்.

13. தலைப்பாகை அங்க வஸ்திரத்துடன் பஞ்சாங்க பூஷிதர்களாக இருக்கும் குருவினால் ஏவப்பட்ட வேறொரு ஆசார்யன்

14. இரு வஸ்திரங்கள் மோதிரம் இவை உடையவராய். தன் சரீரத்தை விஷ்ணு மயமாகப் பாவித்து இரண்டு கைகளால் தரித்த கெண்டியால் ஹ்ருதய மந்திரத்தினால் ஜலத்தை கொடுக்க வேண்டும்.

15. மற்றொரு கரத்தில் இருவர்க்கும் விபூதி கொடுத்து பிறகு புண்யாஹத்தை செய்ய வேண்டும். பின் வேத சூத்திரங்களையும் ஜபிக்க வேண்டும்.

16. அக்னியில் பதினாறு சமித்துகளை சிவ அங்க மந்திரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். வெல்லம் பால், நெய், சேர்ந்த மதுவர்க்கத்தை ஹ்ருதய மந்திரத்தால் சுவாமிக்கு கொடுத்து

17. தத்புருஷ மந்திரத்தினால் ஆசமனத்தைக் கொடுத்து மறுபடியும் ஹ்ருதய மந்திரத்தினால் பதினாறு முறை நெய் ஹோமம் செய்து மறுபடியும் பதினாறு எண்ணிக்கையில் நெய்யினால் ஹோம் செய்து

18. காய்கறிகளுடன் கூடிய நைவேத்யத்தை செய்து சாந்தியின் பொருட்டு ஹ்ருதய மந்திரத்தால் ஹோமம் செய்து தாம்பூலத்தையும் கொடுத்து மிகவும் காரணராயுள்ள ஸ்வாமியை ஸ்தோத்தரித்து

19. இரண்டு தால அளவும் முடிச்சுடன் கூடிய முற்பது தர்பைகளால் ஆன கூர்ச்சத்தை சிவ ஹஸ்தமாக தியானித்து தேவியின் இதயத்தில் ஹ்ருதய மந்திரத்தால்

20. தேவியின் வலது காதில் ஆசார்யர் மூலமந்திரத்தை ஜபிக்க வேண்டும். இடப்பக்கம் நெல், அரிசியுடன் கூடிய ஸ்தண்டிலத்தில் அம்மிக்கல்லை வைக்கவும்.

21. முன்மாதிரி சுவாமியின் கையினால் தேவியின் வலது பாகத்தை பிடித்து ஹ்ருதிய மந்திரத்தால் ஆசார்யர் பாத தலத்தை அம்மியின் மேல் வைக்க வேண்டும்.

22. சிவபெருமான் உத்தரவினால் பட்டாடை முதலியவற்றால் விஷ்ணுவை சந்தோஷிக்கச் செய்ய வேண்டும். முன்போல் தர்பையால் அமைத்த கையை நான்காக அமைத்து

23. சிவ ஹஸ்த்தம் இரண்டு தேவியின் கையிரண்டு என எண்ணி பிறகு அக்னியை பிரகாசிக்கச் செய்து அந்த கைகளால்

24. மிகு வெண்மையானதும், அஸ்த்ர மந்திரத்தால் சோதிக்கப்பட்டதுமான நெற்பொறிகளை அக்னியில் சேர்க்கவும். மேற்கூறிய வேறொரு ஆசார்யனுடைய மோதிரம் அணிந்த கையினால்

25. அந்த அக்னியில் ஹ்ருதய சிவ மந்திரத்தால் பொறியை கொடுத்து ஹோமம் செய்து ஆசார்யர் அக்னியை பிரதட்சிணம் செய்து அம்மியை தொட்டு பிறகு

26. இரண்டாவது முறை பிரதட்சிணம் செய்து, பொறி ஹோமம் செய்ய வேண்டும். மூன்றாவது பிரதட்சிணம் செய்து பொறியுடன் வ்யாஹ்ருதி ஹோமமும் செய்ய வேண்டும்.

27. நூற்றி எட்டு தடவை ஹோமம் செய்து கடைசியில் பூர்ணாஹுதியும் செய்து அக்னியில் இருக்கும் சிவத்தை ஸாங்கமாக பூஜித்து

28. சிவாக்னியை விஸர்ஜனம் செய்து அந்த விபூதியையும் நீக்க வேண்டும். தேவர்களை நிறைய அளவு சந்தனம், ஸ்வர்ணம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும்.

29. பின் நான்காம் நாளில் செய்ய வேண்டிய க்ரியைகளைச் செய்ய வேண்டும். அதே நாளிலோ பகலிலோ நடு இரவிலோ

30. பஞ்ச ஸம்ஸ்காரங்களினால் ஸம்ஸ்கரிக்கப்பட்ட அக்னியால் சமித்து, நெய், அன்னம் முதலியவற்றால் சிவ மந்திரத்தால் நூறும் அங்க மந்திரத்தால் பத்து ஆஹுதியும் செய்ய வேண்டும்.

31. அகோராஸ்த்ர மந்திரத்தால் நூறு ஆஹுதியும் சில மூலமந்திரத்தால் பூர்ணாஹுதியும் செய்யவும். சில சக்திகளை ஐந்து வகை தோல்களினாலோ வஸ்திரங்களாலோ ஸயனம் அமைத்து

32. கவச மந்திரத்தால் அவற்றை பூஜித்து புதிய ஊஞ்சலில் தம்பதிகளை ஸ்தாபித்து அப்பம் முதலியவற்றை நிவேதித்து ஸந்தோஷிக்கச் செய்ய வேண்டும்.

33. ஸ்நபனம் செய்தோ, செய்யாமலோ இறுதியில் சிவோத்ஸவத்தை செய்ய வேண்டும். ஆஸநத்தோடு கூடியதாக மூலபிம்பத்தையோ உத்ஸவ பிம்பத்தையோ ஸ்தாபிக்க வேண்டும்.

34. தேவன், தேவி, மஹாலஷ்மி இவர்களுக்கு அக்னியை ஸ்தாபித்து அக்னிக்கு வலப்புறமோ இடப்புறமோ பிரம்மாவை விஷ்ணுவையும் மாற்றி இருத்தி

35. இவ்வாறே எல்லா தேவர்களுக்கும் விவாஹகார்யத்தை செய்ய வேண்டும். தனி பீடமுள்ள தேவியர்களுக்கும் மூல லிங்கத்திற்கும் இவ்வாறே செய்ய வேண்டும்.

36. மேலும் லக்ஷ்மி மஹா விஷ்ணுவுடன் பிரம்மாவையும் விட்டுவிட்டு முன் சொல்லியபடி அவர்களை ஸ்தண்டிலத்திலேயே சந்தனம் முதலியவைகளால் பூஜிக்க வேண்டும்.

37. மூலலிங்க விவாக விஷயத்தில் வெளியில் கருவறையிலிருந்து வெளி மண்டபத்தில் ஸ்தண்டிலத்தில் தேவியை ஆவாஹித்து விவாஹ கர்மாவை செய்ய வேண்டும்.

38. கல்யாண மூர்த்தியின் பிரதிஷ்டையை யார் செய்கிறாரோ அவர் தன் பந்து ஜன வகைகளாலும் எல்லா மக்களும் போற்றப்படுபவராய்

39. ஆயுள், லக்ஷ்மி கடாக்ஷம் புத்திர பவுத்திரர்களுடன் கூடியவராய் பூவுலகில் அரசனுக்கும் கிட்டாத சுகத்தை அடைந்து

40. சரீர முடிவில் எதை அடைந்து மீண்டும் திரும்புவதில்லையோ அப்பேர்பட்ட சிவபதத்தை பக்தர்கள் அடைவார்கள்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் கல்யாண கர்மவிதியாகிய ஐம்பத்தி ஒன்பதாவது படலமாகும்.

படலம் 58: கல்யாணமூர்த்தி பிரதிஷ்டை...

படலம் 58: கல்யாணமூர்த்தி பிரதிஷ்டை...

58 வது படலத்தில் கல்யாணமூர்த்தி பிரதிஷ்டாமுறை கூறப்படுகிறது. முதலில் லக்ஷண அமைப்பு முறையாக கல்யாண மூர்த்தியின் பிரதிஷ்டை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. சூத்திர கோடிடும் முறை கூறப்படுகிறது. பிறகு அம்பாளை ஸ்வாமியை அனுசரித்து செய்ய வேண்டும் என கூறி அம்பாளின் அளவு கூறப்படுகிறது. பிறகு தேவியின் அடுத்த பாகத்தில் சர்வலக்ஷணத்துடன் கூடிய தேவியை அமைக்க வேண்டும் என கூறி அந்த லக்ஷ்மியின் லக்ஷணமும் அளவு முறையும் கூறப்படுகிறது. பிறகு சூத்திரம் இடும் முறைப்படி ஸ்வாமி அளவை அனுசரித்து விஷ்ணுவின் லக்ஷணமும் பிரம்மாவின் அமைப்பும் செய்ய வேண்டும் என கூறி அமைக்கும் முறையை விளக்குகிறார். பிறகு அக்னி குண்டத்திற்கும் அந்த குண்டத்தில் அக்னியை அமைக்கும் முறை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டாவிதி கூறப்படுகிறது. முன்பு போல் காலத்தை பரிக்ஷித்து அங்குரார்பணகர்மா முன்பு கூறியபடி செய்யவும். பிறகு ஸ்வாமியின் வலது பாகத்தில் பிரம்மாவையும் வடக்கு பாகத்தில் விஷ்ணுவையும் கவுரியின் தெற்கு பாகத்தில் லக்ஷ்மியையும் வைத்து ஸ்வாமிக்கும் மஹாவிஷ்ணுவுக்கும் நவரத்னம் நியாசமும் மற்றவர்களான பரும்மா கவுரி லக்ஷ்மி ஆகியவர்களுக்கு ஸ்வர்ணமும் தியாசம் செய்யவும் என்று ரத்ன நியாச முறை கூறப்படுகிறது. பிறகு அந்தந்த படலத்தில் கூறியுள்ளபடி நயனோன் மீலனம் செய்ய வேண்டும் என நயனோன் மீலன விதி கூறப்படுகிறது. பிறகு பிம்பசுத்தி, கிராமபிரதிஷ்ணம் செய்து ஜலாதிவாசம் செய்யவும் என ஜலாதி வாச முறை கூறப்படுகிறது. நடுவில் பரமேஸ்வரன் அவரின் வலது இடது பாகத்தில் பிரம்மா, விஷ்ணு, பிரம்மாவின் இரண்டு பக்கத்திலும் கவுரி லக்ஷ்மியையும் ஸ்தாபிக்கவும் என்று ஜலாதிவாசத்தில் மூர்த்திகளை ஸ்தாபிக்கும் முறை கூறப்பட்டது. பிறகு ஸ்வாமி அம்பாளுக்கு இருபாக மண்டபம் அமைத்து அதில் குண்டம், வேதிகை அமைக்கும் முறையும் கூறப்படுகிறது. இரு மண்டபத்திலும் சில்பியின் திருப்திக்கு பிறகு பிராம்மண போஜனம் புண்யாக பிரோக்ஷணம், வாஸ்து ஹோமம் இவைகளை முறைப்படிசெய்து இவ்வாறு சம்ஸ்காரம் செய்யப்பட்ட இரண்டு மண்டபத்திலும் ஸ்தண்டிலம் அமைத்து முறைப்படி சயனம் அமைக்க வேண்டும்.

ஜலாதிவாச மண்டபத்திலிருந்து எடுத்து வரப்பட்ட ஈஸ்வரன், பிரம்மா, விஷ்ணு, கவுரி, லக்ஷ்மி ஆகியவர்களுக்கு ஸ்நபனாபிஷேகம் செய்து தனித்தனியாக ரக்ஷõபந்தனம் செய்து ஈஸ்வரனை ஈஸ்வரனுக்காக அமைக்கப்பட்ட மண்டபத்தில் ஈஸ்வரனை சயனாதிவாசம் செய்யவும். பிறகு அங்கு ஈஸ்வரனின் இடபாக, வலது பாகத்தில் மஹாவிஷ்ணுவையும் பிரம்மாவையும் தனித்தனியான சயனத்தில் அதிவாசம் செய்யவும். அம்பாளுடைய மண்டபத்தில் தேவியை சயனாதி வாசம் செய்து அந்த தேவியின் தெற்குபாகத்தில் லக்ஷ்மியையும் வடக்கு பாகத்தில் அக்னியையும் ஸயனாதிவாசம் செய்யவும். என்று ஸயனாதிவாச முறை விளக்கப்படுகிறது. இங்கு அக்னிக்கு ஜலாதிவாச விதியில் பூஜை செய்யும் முறை கூறப்படவில்லை. ஸயனாதிவாச முறையில் கும்பம் அதிவாசம் செய்யும் முறை பிரயோஜனம் கூறப்படுகிறது. சிவப்பு வஸ்திரத்தால் ஸ்வாமி அம்பாளை மூடவும். மஞ்சள் வஸ்திரத்தால் விஷ்ணுவையும் கருப்பு வஸ்திரத்தால் லக்ஷ்மியையும் வெள்ளை வஸ்திரத்தால் பிரம்மாவையும் போர்த்தவும் என கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மண்டபத்திலும் ஆசார்யர்கள் அவ்வாறே ஒவ்வொரு மூர்த்தியினிடத்திலும் தேசிகர்கள் செய்ய வேண்டிய கார்யங்களை செய்யவும். பிறகு கும்பாதிவாச முறை நிரூபிக்கப்படுகிறது. ஈசனின் சிரோதேசத்தில் சிவகும்பம் வர்தனியையும் அவ்வாறே பிரம்மா விஷ்ணுவிற்கு சிரோதேசத்தில் இரண்டு கும்பங்களையும் ஸ்தாபிக்கவும். தேவிக்கு சுற்றிலும் வாமா முதலிய எட்டு சக்திகளுக்கு எட்டு கும்பம் ஸ்தாபிக்க வேண்டும். ஸ்வாமி கும்பத்தை சுற்றிலும் அஷ்டவித்யேஸ்வரர் எட்டு கும்பம் ஸ்தாபிக்க வேண்டும். அவ்வாறே தேவி, லக்ஷ்மி, அக்னி, இவர்களின் சிரோதேசத்தில் மூன்று கடம் ஸ்தாபிக்கவும். அவரவர்களின் பூஜை முறையில் கூறப்பட்டுள்ளபடி தியானத்துடன் மூர்த்திகளை தனித்தனியாக சந்தனம் முதல் நைவேத்யம் வரை பூஜிக்க வேண்டும்.

தத்வ மூர்தயாதி நியாசம் ஈஸ்வரர் விஷயத்தில் முன்பு போல் செய்யவும். மற்றவர்களுக்கு அவர்களின் பூஜை முறையில் கூறப்பட்டுள்ளபடி தத்வாதி நியாசம் செய்யவும் என கும்ப அதிவாச முறை கூறப்பட்டது. பிறகு குண்ட அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்ய வேண்டும் என கூறி ஹோம முறை திரவ்ய அளவு குறிப்பிடும் முறையாக சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு பூர்ணாகுதியின் முடிவில் தேசிகன் தன்னுடைய கிரஹத்திலோ அந்த பிரதேசத்திலோ களைப்பாறுவதற்காக தூங்கவும் என்று கூறப்படுகிறது. காலையில் நித்யானுஷ்டானம் முடித்து கர்த்தா மூர்த்திபர்களுடன் கூடி ஆசார்யரை வஸ்திர ஸ்வர்ணாங்குலீயங்களால் பூஜித்து - ஐந்து நிஷ்க்கம் முதலான தட்சிணை கொடுக்கவும் என கூறப்படுகிறது. பிறகு மந்திர தியாச முறை கூறப்படுகிறது. பின்பு பூஜித்து ஸ்நபனம் செய்து அர்ச்சனாவிதி முறைப்படி பூஜிக்கவும். முடிவில் நைவேத்யம் கொடுத்து பிரதிஷ்டோத்ஸவத்தை அனுஷ்டிக்கவும் என்று பூஜை முறைகள் மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஸ்வதந்தரமான தேவாலயத்தில் கல்யாண மூர்த்தி பிரதிஷ்டை செய்யும் விஷயத்தில் சில விசேஷம் இருக்கிறது என்று கூறி அந்த விசேஷம் கூறப்படுகிறது. முடிவில் எந்த மனிதன் இவ்வாறு பிரதிஷ்டை செய்கிறானோ அவன் விருப்பப்பட்ட பலனை அடைவான் என கூறப்படுகிறது. இவ்வாறு 58வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. கல்யாண மூர்த்தியின் பிரதிஷ்டையை லக்ஷணத்தோடு கூறுகிறேன். ஜடா மகுடத்தோடு கூட பிறை சந்திரனை சிரசில் தரித்தவராய்

2. மூன்று கண், நான்கு கைகளோடு கூடினவராய் புதிய பால்யத்தினால் கர்வமுடையவராய் சமமான வளைவோடு ஈஸ்வரன் நின்ற திருக்கோலத்தில் இருப்பவராக ஈஸ்வரன் கூறப்படுகிறார்.

3. வலது கால் சிறிது வளைந்தும் இடது கால் ஊன்றியும் சந்திரசேகரரைப் போல் பிரகாசத்தை உடைய மற்ற இரண்டு கைகளையும் உடையவராயும்

4. ஜலத்தை கிரஹிப்பதில் தகுதி உடையதான வலது இடது கையை உடையவராய் தன்னுடைய இடது கையினால் கிரஹிக்கப்பட்டவராய் சந்தோஷமான மனதோடு

5. மூக்கு நுனியிலிருந்து இடது மார்பக மத்யத்தில் தொங்குகின்ற சூத்திரத்தையும் தொப்புள் நடுவிலிருந்து வலது இடது பக்கத்தில் வெளியிலேயும்

6. ஒவ்வொரு அங்குலம், வெளியே தள்ளி தொப்புள் சூத்ரமானது நடுவில் ஆகும். வரத ஹஸ்தத்தினுடைய பின் பகுதியின் நீளம் மணிக்கட்டினுடைய அகலமாகும்.

7. கைகளின் நடுவிலிருந்து, பத்தொன்பது அங்குலம் நடுவில் இடைவெளியாகும். பக்கவாட்டில் ஆறு அங்குல மாத்ரம் நடுவாகும்.

8. குஹ்யத்தினுடைய அடியின் சமயத்தில் வலது கடகமுத்திரையை தொங்குவதாகும். நாபியிலிருந்து மணிக்கட்டு வரையில் ஆறங்குலம் கூறப்படுகிறது.

9. கையினுடைய, நடுவிலிருந்து பக்கம் வரையில் ஐந்தங்குலம் கூறப்படுகிறது. கால்கட்டை விரல்களின் நடுவானது குதிகால்களின் நடுவாகும்.

10. முழங்காலுடைய நடுவில் சூத்திரத்தினுடைய மத்தியம், ஐந்து மாத்திரையாக கூறப்படுகிறது. சந்திரசேகர மூர்த்தியைப் போல் மற்ற கைகளுடைய இடைவெளி கூறப்படுகிறது.

11. உயர்ந்த அந்தனர்களே அம்பாளுடைய அளவு முன்போல் இங்கு கூறப்படுகிறது. அம்பாள் பார்வை முகம், உதடு, கக்ஷம், மார்பக அமைப்பு இருக்க வேண்டும்.

12. அந்த தேவியினுடைய மற்றொரு பாகத்தில் லக்ஷ்மி தேவியானவள் லக்ஷணத்தோடு கூடவும் தேவியினுடைய இடுப்பில் கையை வைத்துக் கொண்டவளாகவும் இருக்க வேண்டும்.

13. லக்ஷ்மீ தேவியின் இடுப்பு பன்னிரண்டு அம்சங்களாலும், அவ்வாறே தொப்புள், மற்றொரு கையும் பன்னிரண்டு அம்சங்களாகும். இரண்டு பாதங்களுடைய கட்டைவிரலின் இடைவெளி பதினெட்டு அங்குலமாகும்.

14. ஆறு அங்குலம் குதிகால்களின் நடுப்பக்கம் உள்ளதாக மஹாலக்ஷ்மி கூறப்படுகிறாள். ஈஸ்வரனுடைய உயரத்தில் பத்தில் ஒரு பாகம் முதல் பதினோரு பாகம் வரையில் பாகத்தின் உயரத்தோடு கூடினவராய்

15. பச்சை வர்ணமாய், கிரீட மகுடத்தோடு சங்க, சக்ரத்தை தரித்துக் கொண்டு, கையில் வைத்துக் கொண்ட

16. ஜலத்தோடு கூடின கெண்டியை உடையவராய் விஷ்ணுவானவர் கூறப்படுகிறார். மூக்கு நுனியிலிருந்து இருக்கக்கூடிய கைகளின் கட்டைவிரல் வரை உள்ளதாக நூலை தொங்க விட வேண்டும்.

17. அந்த சூத்திரத்திலிருந்து தொப்புள் வரையில் நான்கு அங்குலம் கூறப்படுகிறது. கெண்டியினுடைய விஸ்தாரமானது இரண்டு சூத்திரதாள அளவு கூறப்படுகிறது.

18. அவருடைய கழுத்தினுடைய அளவானது ஐந்து அங்குல வளவாகும். உருண்டை வடிவமுமாகும். வாயானது ஐந்தங்குலம் மூக்கானது ஐந்தங்குலமாகும்.

19. அதனுடைய அடியானது, ஐந்தங்குலம், நுனியானது அதனுடைய முக அளவாகும். ஒரு அங்குலம், அதனுடைய பாதஅளவும் அதனுடைய அடியிலிருந்து நுனி வரை மூன்று மூன்று அங்குலமாகும்.

20. ஐந்து மாத்திரை அளவுகளால் விஷ்ணுவின் அழகான இடம் கையில் கெண்டி இருப்பதாகவும் அதன் மேல் வலது கையில் ஜலதாரையை கல்பிக்க வேண்டும். ஸ்வாமியின் வலது கையின் மேல் அம்பாள் கையை வைத்து அதில் விஷ்ணுவினால் இடது கையிலுள்ள நீரை வலது கை மூலம் ஊற்றுவதாக அமைக்க வேண்டும் என்பதாகும்.

21. கெண்டியினுடைய அடிபாகமுடைய கையினுடைய உயரத்தையும் தொப்புள் சூத்திரத்தில் ஸமமாக இருக்க வேண்டும். தொப்புளிலிருந்து மணிகட்டு வரை ஏழு அங்குல அளவு எனக் கூறப்பட்டது.

22. மற்ற மணிகட்டுகளிலிருந்து, நீர்தாரைவரையுள்ளது. ஏழு மாத்திரையளவாகும். வலது கையினால் இடது கையினால் வரதமாகவும் கடகமாகவும் அமைக்க வேண்டும்.

23. விஷ்ணுவிற்கு கூறப்பட்ட படி பிரம்மாவை செய்ய வேண்டும். நான்கு கைகள், நான்கு முகம் ஜடாமகுடத்தோடு செய்ய வேண்டும்.

24. ஒட்யானத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு பூனூல், உத்தரீயத்தோடு குங்குமம் முதலான சோபனத் திரவ்யத்தோடு ஹோமத்திற்கு தயாராய் இருப்பவராகவும் மலர்ந்த முகத்தோடும்

25. மேலே வலது, இடது கைகளில் கமண்டலு, அக்ஷமாலையும் கீழ் வலது, இடது கைகளில் வரத அபயத்தோடும்

26. ஸ்ருவத்தை எடுத்துக் கொண்ட கார்யத்தோடு மற்றொன்று கடகமுத்திரையோடும் நெற்றி மூக்கு நுனி இடை நடுவில் தொப்புள் நடுவில்

27. பிறகு தொப்புளுக்கு மேல் பத்து பாகம் காலினுடைய கட்டைவிரல் அடியில் முதற்கொண்டு எட்டு பத்து அங்குலம்

28. அபயமானது, மார்பகம், தொப்புள் வரையில் மணிக்கட்டு அதன் நடுவில் பதினான்கு மாத்திரையாகும். பக்கத்தை நடுக்கையின் இடைவெளி ஆறு மாத்திரையாகும். முழங்காலுக்கு நடுவில் நின்ற சரீரத்தை சமானமாக உதாரணம் சொல்லப்பட்டது. பத்மாஸநத்தில் இருக்கின்ற பிரம்மாவின் ரூபம் இது மாதிரியாகும்.

29. நேரான நின்ற கோல அமைப்பின் முழங்காலில் இடைவெளி சரீரத்தின் இடைவெளி சமமாகும். இவ்வாறு ப்ரும்மரூபம் அறிந்து அவர் பத்மாஸனத்தில் இருப்பதாகவும் அறிய வேண்டும்.

30. தேவருடைய அங்குல அளவினால் இருபத்திரண்டு அங்குலமாகும். அக்னி குண்டத்தினுடைய ஆக்ருதி மூன்று மேகலை உடையதாகும்.

31. முனி புங்கவர்களே மேகலையானது ஒவ்வொன்றும் ஒவ்வொரு அங்குலம் ஆகும். அக்னியின் ஏழு நாக்கானது, பன்னிரண்டங்குல நீள அகலம் உள்ளதாகவோ

32. குண்டத்தின் நடுவில் இருக்கக்கூடிய அக்னியானது தானாகவே ஐந்து நாக்கை உடையதாகவும் அமைக்கவும். ஒரு முழம் முதல் நடுவில் பிரமானமாக எது ஆகின்றதோ

33. அந்த அளவு உயர்த்திய கை, கால்களுக்கும் அங்கங்களுக்கும் இங்கு கூறப்படுகின்றது. இவை அதிகமாகவோ குறைவாகவோ

34. வில், அம்பு, முதலிய ஆயுதங்களின் எடுத்திருப்பதிலும் வைத்திருப்பதிலும், இந்த முறையாகும். ஆயுதங்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் நியமங்கள் கூறப்பட்டுள்ளது.

35. ஸர்வ ஸாஸ்திரங்களில் பார்த்த மாத்திரத்திலேயே விளக்கப்படுகின்றது. எல்லா ஆபரணங்களும் இடதுபாக வலது பாக பிரிவாக கூறப்படுகின்றது.

36. எல்லா பிம்பங்களுக்கு தர்சனத்தையும், தேவியர்களுக்கும், மனிதர்களுக்கும், விசேஷமாக கல்யாண மூர்த்தியை காண்பிக்க வேண்டும்.

37. இது மாதிரி அமைப்புமுறை கூறப்பட்டது. பிரதிஷ்டா விதியை கூறுகிறேன். நல்ல காலத்தை அறிந்து முன்போல அங்குரார்ப்பணத்தை செய்து கொண்டு

38. ஈஸ்வரனுடைய வலது பாகத்தில் பிரம்மாவையும் இடது பாகத்தில் விஷ்ணுவையும் கவுரியின் தெற்கில் லக்ஷ்மியையும் உத்தமமான தேசிகர் வைக்க வேண்டும்.

39. பிறகு நவரத்னங்களை ஈஸ்வரனுக்கும், விஷ்ணுவிற்கும் வைக்க வேண்டும். பிரம்மா, கவுரீ, லக்ஷ்மி தேவிகளுக்கு தங்கத்தை வைக்க வேண்டும்.

40. நயனோன் மீலனம் பிறகு செய்து அந்தந்த பிரதிஷ்டையில் கூறப்பட்டபடி பிம்பசுத்தியும் நகரபிரதட்சிணத்தையும்

41. ஜலாதி வாசத்தில் நடுவில் ஈஸ்வரனையும், வலது இடது பக்கத்தில் பிரம்மாவையும், விஷ்ணுவையும், பிரம்ம விஷ்ணுவின் பக்கத்தில் அம்பிகையும், லக்ஷ்மியையும் வைக்க வேண்டும்.

42. முன்பு போல் உருவாக்கப்பட்ட யாக மண்டபத்தை அடைந்து கிழக்கு வடக்கு, கேடயத்தில் ஸ்நான வேதிகையோடு கூடியதில்

43. அந்த பரமேஸ்வரனுக்கு கிழக்கு, தெற்கு, வடக்கிலும், இஷ்டமான இடத்தில் ஒன்பது, ஐந்து, யோனி குண்டங்களோடு கூடியதாகவும்

44. ஸ்னான வேதிகை மூன்றோடும் தேவிக்கு முன்பே சொல்லப்பட்ட படியும் தேவருடைய மண்டபத்தில் ஒன்பது குண்ட அமைப்பிலும்

45. ஐந்து ஒன்று என்ற எண்ணிக்கையின் கணக்கிலே சதுர, எண்கோண, வட்ட குண்டங்களை நிர்மாணிக்க வேண்டும்.

46. சில்பியை திருப்தி செய்வித்து அந்தணர்க்கு உணவளித்தல் புண்யாஹ வாசனம் வாஸ்த்து சாந்தி ஸயனத்திற்கு ஸ்தண்டிலமும் செய்ய வேண்டும்.

47. ஸ்நபனமானது விஷ்ணு, கவுரீ, லக்ஷ்மி, தேவி, இவர்களுக்கு தனித்தனியாக ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும். சயனத்தில் ஈஸ்வரனையும், படுக்க வைத்து இடது பாகத்திலும் வலது பாகத்திலும்

48. வேறு படுக்கையில் விஷ்ணுவையும் பிரம்மாவையும் படுக்க வைக்க வேண்டும். தேவியினுடைய மண்டபத்தில் தேவியையும் வலது பாகத்தில் லக்ஷ்மியையும்

49. வடக்கு பக்கத்தில் அக்னியை, சங்கல்பித்து தனியான படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். சிவப்பு, வஸ்திரத்தினால் ஈஸ்வரனையும் தேவியை மஞ்சள் வஸ்திரத்தினாலும்

50. நீல வஸ்திரத்தினால் விஷ்ணுவையும், நல்முத்து வர்ணத்தால் லக்ஷ்மியையும் அதே நிறத்தால் பிரம்மாவையும் உத்தமமான ஆசார்யர்கள் ஒவ்வொரு மண்டபங்களுக்கும் கிரஹிக்கத்தக்கவர்கள் ஆவர்.

51. குருவானவர் ஒவ்வொரு தேவர்களுக்கும் அவர்களுடைய தலைபாகத்தில் வர்தனியோடு கூடின சிவகும்பத்தையும் வர்தனீகும்பத்தையும்

52. பிரம்மா, விஷ்ணு, தலைபாகத்தில் இரண்டு குடங்களை வைக்க வேண்டும். சுற்றிலும் எட்டு கும்பங்களை வைத்து அஷ்ட விந்யேஸ்வரர்களை பூஜிக்க வேண்டும்.

53. தேவி, லக்ஷ்மி அக்னிக்கு தலைபாகத்தில் மூன்று கடங்களையும் வாமாதி எட்டு சக்திகளை சுற்றிலும் எட்டு கும்பங்களில் பூஜிக்க வேண்டும்.

54. அந்தந்த லக்ஷணத்தோடு கூட உருவான அமைப்புடன் கூடியதாக தனித்தனியாக சந்தன, புஷ்ப நைவேத்யங்களால் பூஜிக்க வேண்டும்.

55. முன்போலவே பரமேஸ்வரனுக்கு தத்வ தத்வேஸ்வரர்களையும் மூர்த்தி மூர்த்தீஸ்வரர்களையும், பூஜிக்க வேண்டும். மற்றவர்களுக்கு அந்தந்த தத்வதத்வேஸ்வர் முதலியவர்களை நியசிக்க வேண்டும்.

56. பிறகு குண்டஸம்ஸ்காரம் அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்ய வேண்டும். சமித்து, நெய், ஹவிஸ், பொறி. எள்ளு, வெண்கடுகு, பயறு

57. புரசு அத்தி, அரசு, ஆல், கிழக்கு முதலான திக்குகளிலும் வன்னி, நாயுருவி, வில்வம் மயற்கொன்னை, அக்னி கோணங்களிலும்

58. பிரதான குண்டத்தில் புரசு சமித்தாகும். எல்லா குண்டங்களிலும் புரசு, சமித்து கூறப்பட்டு இருக்கிறது. ஒவ்வொன்றும் முன்போல் ஹோமம் செய்து உத்தமமான ஆசார்யன்

59. தன் வீட்டிலோ ஆலய சமீபத்திலோ சிரமத்தை போக்குவதற்காக ஆசார்யன் தூங்க வேண்டும். விடியற்காலையில் நித்ய கர்மாவை முடித்து கர்த்தாவானவன் ஆசார்யனை பூஜிக்க வேண்டும்.

60. வஸ்திர, தங்க மோதிரம், இவைகளை கூட ரித்விக்குகளோடு கூட பஞ்ச நிஷ்க்க எடையிலே முடிவில் தட்சிணை கொடுத்து

61. பிம்பங்களுடைய முன் நிலையில் கடங்களை வைத்து கும்பத்திலிருந்து மந்திரத்தை எடுத்து பிம்பத்தில் சேர்க்க வேண்டும். வர்தனியில் இருந்து மந்திரத்தை எடுத்து தேவி ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

62. ஸ்வாமியோடு கூடி ஒரே பீடத்தில் உமாதேவி இருப்பின் தேவிக்கு வர்தனியையும் தனியே இருப்பின் பீடநடுவிலும் உமா தேவியையும், வேறு பீடத்தில் தேவி இருக்கும் போது தேவியையும் மந்திரத்தை சேர்க்க வேண்டும்.

63. மற்றவர்களுடைய மூலமந்திரத்தை எடுத்து பீடத்தினுடைய சுற்றிலும் சேர்க்க வேண்டும். ஸ்னபனம் செய்து, அர்ச்சனையை முறைப்படி செய்யவேண்டும்.

64. கடைசியில் நைவேத்யத்தை செய்து ப்ரதிஷ்டோத்ஸவம் செய்யவும். சிறிது விசேஷம் இருக்கிறது. ப்ராம்மண உத்தமர்களே கேளுங்கள்.

65. ஸதாசிவர், முதலிய மூர்த்திகளுடைய தேவி திருக்கோயிலில் எந்த தேவீ யாருக்கு முறையோ ஸ்வதந்திர தேவியாக தேவாலயத்தில் இருக்கும் அமைப்பில் அவ்வாறே அமைக்க வேண்டும்.

66. பிரகாரம் மண்டபங்களுக்கு வெளியே, பிரதிஷ்டை செய்தால் அவைகளுக்கு கிழக்கு முதலிய திக்குகளில் ஒரு முழம், அளவுள்ளதாக அமைக்க வேண்டும்.

67. எப்படி அமைப்புள்ளதாக ஆகுமோ, அதன்படி அதனுடைய பயனும், அமையுமாம். அந்த தேவியினுடைய பக்கத்தில் செய்வதா செய்யக் கூடாதா என்பது கூறப்படுகிறது.

68. ஸ்வதந்திர அமைப்புகளில் வ்ருஷப வாஹனம், முதலியவைகளில் எப்பொழுதும் செய்ய வேண்டும். ஈசனாதி தேவர்களுக்கு தெற்குப் பக்கத்தில் தேவீ ஒரு பொழுதும் வைக்கக் கூடாது.

69. பிரதட்சிணத்தில் பிரகாரத்தில் சுவரை ஒட்டிய தேவர்கள் பிரதிஷ்டையானது தனிமையாகவோ, சேர்ந்தோ எந்த மனிதன் பிரதிஷ்டை செய்கிறானோ அவன் வேண்டும் பலன்களை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் கல்யாண மூர்த்தி பிரதிஷ்டா விதியாகிய ஐம்பத்தியெட்டாவது படலமாகும்.

படலம் 57: காலாரி, காமாரி, மூர்த்தி, பிரதிஷ்டை...

படலம் 57: காலாரி, காமாரி, மூர்த்தி, பிரதிஷ்டை...

57 வது படலத்தில் கால சம்ஹார மூர்த்தி காமாரி, மூர்த்தி, இவைகளின் பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. முதலில் காலாரீ, காமாந்தர்களின் லக்ஷண பூர்வமாக பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது என்பது பிரதிக்ஞை. முதலில் காலசம்ஹாரமூர்த்தியின் லக்ஷணம் சூத்ரம் இடும் முறையாக கூறப்படுகிறது. இதில் நான்கு கையுடன் கூடிய காமாரி மூர்த்தி லக்ஷணம் கீழே விழுந்துள்ள காலனின் லக்ஷணம், அவ்வாறே அங்கே நிற்கின்ற கோலத்துடன் மார்கண்டேயரின் லக்ஷணமும் கூறப்படுகின்றது. இங்கு மார்க்கண்டேயருடன் கூடியதாகவோ இல்லாமலோ அமைக்கவும் என கூறப்படுகிறது. இங்கு சிவலிங்கத்திலிருந்து உண்டான காலாரி தேவனால் விழுந்த காலனையோ செய்யவும் என்று காலாரி மூர்த்தியை அமைக்கும் விஷயத்தில் வேறு விதம் கூறப்படுகிறது. பிறகு காமாரி மூர்த்தி லக்ஷணம் நிரூபிக்கப்படுகிறது. இங்கு யோகதட்சிணா மூர்த்திக்கு முன்பாக அவருடைய திருஷ்டியால் க்ஷண நேரத்தில் விழுந்த மன்மதனை அமைக்கவும் என்று கூறி மன்மத மூர்த்தி லக்ஷணம் கூறப்படுகிறது. இங்கு மன்மதன் தேவபாகன் வசந்தன் என்ற இரு நண்பர்களோடு கூடியதாகவோ இல்லாமலோ அமைக்கலாம் என்று விசேஷமாக கூறப்படுகிறது. இவ்வாறு மன்மதனின் ஐந்து சரத்துடன் கூடியவனாகவோ அல்லது ஒரு சரத்துடன் கூடியவனாகவோ அமைக்கலாம் என விசேஷம் கூறப்படுகிறது. மன்மதனின் ஐந்து சரங்கள் லிம்பனி, டாபினி, வேதினி, திராவினி, மாலிநி, என்ற ஐந்து பெயர்களும் கூறப்படுகின்றன. பிறகு பிரதிஷ்டா முறை கூறப்படுகின்றது. முன்பு கூறியுள்ளபடி நல்ல வார, திதி, நட்சத்திரங்களை பார்த்து அங்குரார்ப்பணம் செய்து முன்போல் யாக மண்டபம் அமைத்து குண்டவேதிகை இவைகளுடன் கூடிய மண்டப முறையும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஈஸ்வரன், காலன் காமன், இவர்களுக்கு தனித்தனியாக ரத்னநியாசம், நயனோன் மீலனம், பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் வரையிலான கிரியைகள் செய்யவும் என்று கிரியைகளின் வரிசை முறை கூறப்படுகிறது.

பிறகு மண்டபத்தில் வேதிகைக்கு மேல் ஸ்தண்டிலம் அமைத்து அங்கு பிம்பங்களுக்கு தனித்தனியாக சயனம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமியின் காலடியில் காலனுக்கும், காமனுக்கும், சயனம் கல்பிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு ஜலாதிவாசத்திலிருந்து மண்டபத்திற்கு எடுத்து வந்த பிரதிமைகளுக்கு தனித்தனியாக சயனாரோஹணம் செய்யவும் என்று சயனாதிவாச விதி கூறப்படுகிறது. கும்ப அதிவாச முறை சுருக்கமாக கூறப்படுகிறது. ஸ்வாமியின் சிரோதேசத்தில் சிவகும்பமும் அதற்கு வடக்கு பாகத்தில் வர்த்தனியையும் ஸ்தாபிக்கவும். காலனுக்கு கும்பத்தை அவனுடைய சிரோதேசத்தில் அந்த மந்திரத்தை ஸ்மரித்து பூஜிக்கவும் மன்மதனாக இருந்தால் சிரோதேசத்தில் மன்மதனுக்கு கும்பம் அமைக்கவும். மன்மதன் தேவபாக வசந்தன் என்ற மன்மதனோடு சேர்ந்திருந்தால் மன்மதனின் இருபக்கத்திலும் கும்பம் அமைக்கவும். சுற்றிலும் வித்யேஸ்வரர்களை அதிஷ்டித்ததும் வஸ்திரம், ஸ்வர்ணம் இவைகளுடன் கூடியதுமான எட்டு கும்பத்தை ஸ்தாபிக்கவும். பிறகு முறைப்படி சந்தனாதிகளால், கும்ப அர்ச்சனை செய்யவும் பிறகு தத்வேஸ்வராதி நியாசம் செய்யவும் என கூறி காலகாம விஷயத்தில் தத்வதத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாசம் கூறப்படுகிறது. மன்மத விஷயத்தில் வசந்தன் கிரீஷ்மன், பிராவிருட், சரத் ஹேமந்த என்று மூர்த்தீஸ்வரர் கூறப்படுகின்றன. பிறகு திரவிய நிரூபண பூர்வமாக ஹோம முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ராத்திரி சேஷத்தை போக்கி காலையில் ஆசார்யன் சுத்தமான ஆத்மாவுடன் மூர்த்திபர்களுடன் கூடி பிம்பம், கும்பம், அக்னி இவர்களை பூஜித்து நல்ல முகூர்த்தத்தில் நல்ல லக்னத்தில் கும்பங்களை பிம்பத்திற்கு முன்னதாக வைத்து மந்திர நியாஸம் செய்யவுமே என்று மந்தர நியாச விதி கூறப்படுகிறது. இங்கு கூறப்படாத ஒன்றை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவும் என்று கூறப்படுகிறது. முடிவில் இவ்வாறு எந்த மனிதன் பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் தன் விருப்பப்பட்ட போகங்களை அனுபவித்து, சரீரமுடிவில் சிவனை அடைவான் என்று கூறி இது சந்தேகம் இல்லை என கூறி பலஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 57வது படல கருத்து சுருக்கமாகும்.

1. காலஸம்ஹார மூர்த்தி, காமதகன மூர்த்தி பிரதிஷ்டையை லக்ஷணங்களோடு (அதன் அமைப்பு முறை) கூடியதாக கூறுகிறேன். நான்கு கைகள் மூன்று கண்கள் ஜடாமகுடம் இவைகளோடு கூடியவராகவும்

2. இடது கால் (குஞ்சிதமாக) சிறிது வளைந்த அமைப்பை உடையவரும், புலித்தோலை தரித்தவரும், நீண்ட தித்திப்பல்லோடும் கூட நீளமான மூக்கையும் சிறிது வலது பாதத்தை தூக்கியவராய் இருப்பவரும்

3. வலது கையில் சூலாயுதமும், இடது கையில் ஊசியும், வலது கையில் பரசுவையும் இடது கையில் நாகபாசமும் தரித்தவராய் (உடையவராய்)

4. ஈஸ்வரனுடைய பார்வை (கடாக்ஷம்) யானது காலனான யமனிடத்தில் வைக்கப்படவேண்டும். பரமேஸ்வரனுடைய சூலம் கீழ்நோக்கியோ யமனின் உடல்மேல் இருப்பதாகவோ கூறப்பட்டுள்ளது.

5. எச்சரிக்கும் முத்ரையையுடைய கை, (ஊசியோடு கூடிய கை) தொப்பூழ் பக்கத்தில் கையை தூக்கிய அமைப்பாகவும் அந்த கையினுடைய மணிக்கட்டு, பக்க நடுவில் ஐந்து அங்குலத்திலும்

6. காதுவரை சூலத்தினுடைய நுனியும் அதனுடைய மணிக்கட்டிலிருந்து காதினுடைய நுனி இரண்டு தாள அளவும் தோள்பட்டை பாகத்திற்கு ஸமமாக பக்கக்கையும்

7. காதினுடைய நுனி மணிக்கட்டுவரை என்பது ஒரு யவை அங்குல அளவாகும். தலை, வலதுகை, இடது மூக்கினுடைய பாகம்

8. தொப்பூழின் வலது பாகம் இடது கால் நுனி வரை முன்பக்கமாக கோடுபோட வேண்டும். அந்த சூத்திரத்திலிருந்து ஆண்குறியின் இடது பாகத்தின் நடுவிலுமாக கோடு போட வேண்டும்.

9. நிற்க கூடிய முழந்தாள் இடைவெளி சூத்திரத்திலிருந்து இடது பக்க சூத்திரம் கூறப்பட்டது. உயரே தூக்கப்பட்ட பாதம் முழங்கால் உயரமும் இடுப்பு நுனியும் அதற்கு சமமான அளவாகும்.

10. முழந்தாள் நடுவிலிருந்து சமமான உயரம் பாததள நுனிவரையிலும் ஆகும் என்று சொல்லப்பட்டது. வலது பாதத்தினுடைய குதிகால் நுனி வரை நூல்வரை பதினைந்து அங்குலமாகும்.

11. மேல்கைகளில் கடகம் சூலஹஸ்தமும் அந்த சூலஹஸ்தத்தின் இடது பக்கத்தில் தொப்பூழ் பாகம் வரை எட்டு யவம் அளவாகும்.

12. நடுவிலுள்ள சூத்திரத்திலிருந்து முழங்கால் வரை சம்பந்தப்பட்ட மூன்று அங்குலமாகும். உயரே தூக்கப்பட்ட நுனிபாகமுள்ள முழங்காலுக்கு எட்டு மாத்ரையாகும்.

13. யமன் கீழே விழுவதாகவும் மயங்கியதாயும் அழுது கொண்டும், கத்திக் கொண்டும், சிவப்பு வஸ்திரத்தோடு கூடியதாயும் அவ்விதமே செம்பட்டை முடியுள்ளவராயும்

14. சூலம், பாசம், விரிந்த கால்கள், தித்திப் பல்லுடன் கூடிய முகம், சிவப்பு பருவம், சிகப்பு கண்களோடு

15. பரமேச்வரனுடைய நாபிவரையில் உள்ளதாக ஒன்பதுதாள அளவில் செய்ய வேண்டும். கையை கூப்பிக் கொண்டாவது அமைப்புள்ளதாக யமனை செய்ய வேண்டும்.

16. அல்லது பரமேச்வரனுடைய லிங்கத்திலிருந்து தள்ளப்பட்டு விழுந்தவனாக செய்ய வேண்டும். காலஸம்ஹாரமூர்த்தி லிங்கத்திலிருந்து வெளிக்கிளம்பினவராகச் செய்தல் வேண்டும்.

17. மற்றொருவர் (மார்கண்டேயர்) பூசியவராய், த்ரிபங்கத்தில் நின்றவராய், தலைகுனிந்தவராய் புஷ்பாஞ்சலியோடு கூடியவராய் பக்கத்தில் இருப்பது (விரும்பத்தக்கது).

18. மார்க்கண்டேயர் யமனிடத்திலிருந்து பயத்தை அடைந்தவராகவோ மார்க்கண்டேயன் பரமேச்வரனால் மகிழ்ச்சி அடைந்தவனாகவோ இருப்பதாக குறிப்பறியும் தன்மையால் சேர்த்தோ சேர்க்காமலோ இருக்கலாம்.

19. அபஸ்மாரத்தினுடைய சரீரத்தில் கால் ஊனினதாக இல்லாமலோ இருக்கலாம். காலஸம்ஹார மூர்த்தி இவ்வாறு கூறப்பட்டது. மன்மத ஸம்ஹார மூர்த்தியை பற்றி கூறப்படுகிறது.

20. யோகத்திலிருக்கக்கூடிய தட்சிணா மூர்த்திக்கு முன்பாக மன்மதனை செய்ய வேண்டும். பார்வை பட்ட அந்த நிமிடத்திலேயே விழுந்தவனாக

21. பத்து பாகத்தை விட்டு தேவனுடைய ஒரு பாகம் முதல் ஏழுபாகம் வரை மன்மதனை தங்க ஆபரணங்களுடன் கூடியவனாக அமைக்கும்படி கூறப்பட்டுள்ளது.

22. சுத்தமான தங்கத்தை போல் பிரகாசித்துக் கொண்டு ஐந்து புஷ்ப பாணங்கள் கரும்பு வில்லோடு கூட மீன் கொடியோடு கூடியவனாக மன்மதனையும்

23. வசந்தனாகிய நண்பனோடு கூடியும் மிகவும் அழகானவனாகவும் தேவருடைய அருகில் இருந்து கொண்டு லம்பினீ, தாபினீ, வேதினீ, திராவினீ

24. மாரினீ என்ற அம்புகள் ஆகும், வில்லை இடது கையிலும் அம்புகளை வலது கையில் வைத்திருப்பவனாகவும் மன்மதன் நண்பனோடு கூடியவனாகவோ நண்பனின்றியோ ஓர் அம்புடன் கூடியவனாகவோ

25. மேற்கூறிய இந்த முறைப்படி உருவ அமைப்பு கூறப்பட்டது. பிரதிஷ்டை விதிமுறையை கூறுகிறேன். நாள் அங்குரார்ப்பணம், யாகமண்டபம் (வேள்விச் சாலை) முதலியவைகளை முன்போல் செய்ய வேண்டும்.

26. ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையுள்ள குண்டங்களை மண்டபத்தில் செய்ய வேண்டும். சதுரமோ (நாண்கோணம்) எண்கோணங்கள், வட்ட வடிவம் என்ற வடிவமாகவோ அமைக்க வேண்டும்.

27. ரத்னந்யாஸம், கண்திறப்பது பிம்பசுத்தி அதற்கு பிறகு கிராம பிரதட்சிணம், ஜலாதிவாசம் இவைகளை ஆசார்யன் முன்போல் செய்ய வேண்டும்.

28. காலஸம்ஹார மூர்த்தி, காமாந்தக மூர்த்தி, தேவர்களுக்கு (மார்க்கண்ட யமன், மன்மதன் மித்ரன்) தனித்தனியாக செய்ய வேண்டும். வேதிகைக்கு மேல் ஸ்தண்டிலத்தில் சயனம், ஸ்நபனம், தனித்தனியாக செய்ய வேண்டும்.

29. ஈஸ்வரனுடைய (காலஸம்ஹாரர்) பாதத்தில் யமனையும், காமாரி பாதத்தில் மன்தனையும் சயனம் செய்விக்கவும். ரக்ஷõபந்தனம் சயனத்தில் எழுந்தருளச் செய்தல், முன்போல் தனித்தனியாகச் செய்ய வேண்டும்.

30. தலைபாகத்தில் ஈஸ்வர கும்பத்தையும் வடக்கு பாகத்தில் வர்த்தினியையும் வைத்து, யமனுடைய மந்திரத்தை ஸ்பரிசித்து யமனின் தலைப்பக்கத்தில் யமகும்பத்தையும் வைக்கவும்.

31. மன்மதனுடைய தலைபாகத்தில் வஸ்திரங்களோடு கூடிய கும்பத்தை வைக்க வேண்டும். நண்பனோடு மன்மதன் கூடியிருந்தால் அவர்களுக்காக இரண்டு கலசங்கள் வைக்க வேண்டும்.

32. மன்மதனுடைய அருகில் சயனாதி வாஸத்தில் வஸந்தன், தேவபாகன் ஆகிய இரு நண்பர்களையும் ஆசார்யன் அமைத்து

33. வஸ்திரம், இவைகளோடு கூடிய (எட்டு) கும்பங்கள், கிழக்கு முதலிய திக்குகளில் சுற்றிலும் வைக்க வேண்டும். வித்யேஸ்வரர்கள் (பூஜித்து) சந்தன புஷ்பங்களினால் பூஜிக்க வேண்டும்.

34. தத்வேஸ்வரர்களை பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும். தத்பம் முதலானவைகள் முன்போலவே காமதகன மூர்த்திக்கு வ்யாப்தி கூறப்பட்டது.

35. யமனுக்கு ஐந்து மூர்த்திகளுக்கு மூர்த்தீஸ்வரர்களையும், பூஜிக்க வேண்டும். ஆத்ம தத்வம், வித்யாதத்வம் சிவதத்வங்களுக்கிடையே வ்யாப்தி கூறப்பட்டது.

36. சப்ததத்வம் ப்ரக்ருதிதத்வம், காலதத்வம் வரையிலாகவும் ஈசானம் வரையிலுமாகி மூர்த்திகள் மூன்று தத்வ வ்யாபகமாகும். வசந்தம் கிரீஷ்மம் என்ற ஸம்ஞயில் கூறப்பட்டது.

37. ப்ராவிருட், சரத், ஹேமந்தம் என்ற ருதுக்கள் மன்மதனுக்கு மூர்த்தீச்வரர்கள் ஆவர். குண்ட ஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து, சமித்து நெய் ஹவிஸ், எள்ளு

38. அரிசி, வெல்லம், பொறி, வெண்கடுகு, இவைகளை முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும். புரசு, அத்தி, அரசு, ஆல் ஆகிய சமித்துக்களை கிழக முதலான நான்கு திசைகளில் ஹோமம் செய்ய வேண்டும்.

39. வன்னி, கருங்காலி, நாயுருவி, வில்வம் ஆகிய சமித்துக்களை தென்கிழக்கு முதலான நான்கு கோணங்களிலும் புரசு பிரதானத்திற்கும் ஆகும் அல்லது எல்லா குண்டங்களிலும் புரசு சமித்து ஹோமம் செய்யலாம்.

40. காலனையும், காமனையும் பிரதான குண்டத்தில் புத்தியுள்ளவன் கல்பிக்க வேண்டும். இந்த மாதிரியாக இரவை கழித்து பிறகு பரிசுத்தமான விடியற்காலையில்

41. சுத்தனான ஆசார்யன், பிம்பத்தை எடுத்து பூஜித்து குரூத்தமனானவன் கும்பம், குண்ட அக்னியில் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.

42. ரிக்விக்குகளோடு கூட வஸ்திரம் தங்க மோதிரம் இவைகளினால் அடைந்த தட்சிணைகளோடு (பணம்) நல்ல லக்னத்தில்

43. கும்பங்களை பிம்பங்களுக்கு முன்பாக வைத்து சிவகும்பத்தை மந்திரத்தை நினைத்துக் கொண்டு பரமேஸ்வரனுடைய மந்திரத்தை ஆதரவோடு நியாசம் செய்து அதனுடைய பீடத்தில் கரகமான வர்த்தனீயை நியசிக்க வேண்டும்.

44. அஷ்ட வித்யேச கும்பங்களுடைய மந்திரத்தை எடுத்து அதன் பீடத்தை சுற்றிலும் சேர்க்க வேண்டும். மற்றவைகளிலிருந்து மூலமந்திரத்தை எடுத்து அந்தந்த மூர்த்திகளுடைய ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

45. ஸ்னபனம், அதிகமான நைவேத்யம், உத்ஸவம் செய்தோ அல்லது செய்யாமலிருக்கலாம். இங்கு கூறப்படாததை ஸாதாரணமாக ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டும்.

46. இது மாதிரியாக செய்கின்ற மனிதன் விரும்பிய போகங்களை அனுபவித்து சரீர முடிவில் ஈச்வரனை அடைகிறான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் காலாரி காமாந்தக பிரதிஷ்டை முறையாகிய ஐம்பத்தியேழாவது படலமாகும்.

படலம் 56: பக்தானுக்கிரஹ மூர்த்தி ஸ்தாபனம்...

படலம் 56: பக்தானுக்கிரஹ மூர்த்தி ஸ்தாபனம்...

56 வது படலத்தில் பக்த அனுக்கிரஹ தேவதா ஸ்தாபன விதி கூறப்படுகிறது. அமைப்பு முறையுடன் பக்த அனுக்கிரஹ தேவரின் ஸ்தாபனம் கூறுகிறேன் என்பது பிரதிக்ஞை. பக்த அனுக்கிரஹர்கள் சதாசிவன் முதலிய தேவர்கள் என்று முன்னமே கூறப்பட்டுள்ளது. தேவ தானவ, கந்தர்வ முனிவர்கள் முதலிய மனுஷ்யர்கள் அவ்வாறே எறும்பு முதல் யானை வரை உள்ள ஜங்கம பிராணிகள் மரம் செடி கொடி முதலிய ஸ்தாவரங்கள் ஆகியவை இந்த சாஸ்திரத்தில் அனுக்கிரஹம் அடைய தகுந்தவர்களாவார்கள். இவர்களின் அனுக்கிரஹமானது சாக்ஷúஷதீக்ஷõ ஸ்பர்ச தீøக்ஷ சாஸ்த்ர தீøக்ஷ வாசிக தீøக்ஷ என்று பலவிதமாக கூறப்படுகிறது. எந்த மனிதன் சிவனால் அதிஷ்டிக்கப்பட்ட சரீரத்துடன் மரணத்தை அடைகிறானோ அவள் அந்த மனிதன் எல்லா பாபத்திலிருந்து விடுபட்டு சிவனாகவே ஆகிறான் இவ்வாறு எந்த மனிதன் மரணம் அடைந்த சமயத்தில் தன்னுடைய இஷ்டமான லிங்கத்தை தொட்டுக் கொண்டு உயிரை விடுகிறானோ அவனும் சிவனாகவே ஆகிறான். இதில் சந்தேகம் இல்லை.  இவ்வாறு அனுக்கிரஹம் செய்பவர்கள் அனுக்கிரஹிக்கப்படுபவர்களுக்கு செய்யும் அனுக்கிரஹம் நிரூபிக்கப்படுகிறது. பிறகு பக்தர்களின் உருவத்தை அமர்ந்ததாகவோ, நின்ற கோலத்திலோ, படுத்திருப்பதாகவோ நல்ல லக்ஷணம் அஞ்சலிகையுடன் கூடியதாக உலோகம் முதலிய திரவ்யங்களால் செய்ய வேண்டும். இவ்வாறு உலோகம் முதலிய திரவ்யங்களால் சதாசிவன் முதலிய தேவர்களின் உருவமோ அல்லது அவர்களுடைய பீடமோ செய்யப்படவேண்டும். பக்த பிரதிமை, தேவபிரதிமையை ஸ்தாபிக்கவும் என்று பக்தானுகிரஹ தேவலக்ஷணம் கூறப்பட்டது. பிறகு பிரதிஷ்டை முறை கூறப்படுகிறது. அங்கு கூறப்பட்ட நல்ல காலத்தில் அங்குரார்ப்பணம் செய்து ரத்னநியாஸ, நயனோன்மீலன, பிம்பசுத்தி, கிராமப் பிரதட்சிண, ஜலாதி வாசம் வரையிலான கிரியைகள் செய்யவும் என்று கிரியையின் வரிசை கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை மண்டபத்தை குண்டம், வேதிகையுடன் கூடியதாக முன்பு கூறப்பட்டுள்ளபடி செய்யவும்.

பிறகு ஸ்தபதியை திருப்தி செய்து, பிராம்மண போஜனம், புண்யாகவாசன பரோக்ஷணம் செய்து மண்டபத்தில் ஸ்தண்டிலம் செய்து அங்கு முறைப்படி சயனம் கல்பிக்கவும். பிறகு ஜலாதி வாசத்திலிருந்து பிம்பத்தை மண்டபத்திற்கு எடுத்து வந்து ஸ்நபனத்தால் அபிஷேகம் செய்து ரக்ஷõபந்தனம் செய்து சயனத்தில் ஸ்தாபிக்கவும். பிறகு முன்பு போல் கும்பஸ்தானம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு ஸ்வாமியின் கால் பக்கத்தில் பக்தனின் கும்பமும் சுற்றிலும் வித்யேஸ்வரரால் அதிஷ்டிதமான எட்டு கும்பங்களையும் ஸ்தாபிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு தத்வததத்வேஸ்வர மூர்தித்தேஸ்வர நியாசம் முன்பு கூறிய முறைப்படி செய்யவும் என்று கும்ப அதிவாச முறை மிகவும் சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஹோம முறை திரவ்ய நிரூபணம் முதற் கொண்டதாக சுருக்கமாக கூறப்படுகிறது. இரண்டாவது தினத்தில் ஆசார்யன் முறைப்படி கும்ப, அக்னி பூஜை செய்து, தட்சிணையை பெற்றுக் கொண்டு மூர்த்திபர்களுடன் கூடி பிம்பத்திற்கு முன்பாக கடங்களை ஸ்தாபித்து மந்திர நியாசம் செய்யவும் என்று மந்திர நியாஸம் முறைப்படி கூறப்படுகிறது. பிறகு அந்த கும்பத்தில் உள்ள தீர்த்திரங்களால் மூர்த்தியை அபிஷேகம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. பிரதிஷ்டை முடிவில் ஸ்நபனம், நைவேத்யம் செய்யவும். பிறகு உத்ஸவம் செய்யவும் என்று உத்ஸவம் செய்யும் முறை கூறப்படுகிறது. பிறகு முடிவில் இறந்தவரை குறித்து அவரின் புத்திரனோ பேரனோ இந்த பிரதிஷ்டையை செய்யவும் ஜீவித்துக் கொண்டிருக்கும் பொழுதே தன்னுடைய ஆத்மாவை சிவாத்மாவாக பாவித்து பிரதிஷ்டை செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு 56வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. ஹே, உயர்ந்த அந்தணர்களே, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்ற தேவருக்கு உருவ அமைப்புடன் கூடியதான ஸ்தாபனத்தை நன்கு கூறுகிறேன், கேளுங்கள்!

2. ஸதாசிவாதி தேவர்கள் முன்பே அமைப்பு முறையுடன் கூறப்பட்டுள்ளார்கள். அவர்களே அனுக்ரஹம் செய்யக்கூடியவர்கள், அதனால் பக்தாநுக்ரஹம் செய்யக்கூடியவர்கள் என்று எண்ணப்படுகிறார்கள்.

3. தேவர்கள், தானவர்கள், கந்தவர்கள், முனிவர்கள், மனுஷ்ய ஜாதிகள், எரும்பு முதல் யானை வரை ஜங்கமஸ்தாவரங்கள் எவர்களோ

4. அவர்கள் அனுக்ரஹிக்க கூடியவர்கள். சாஸ்திரங்களில் அனுக்ரஹம் பலவிதமாக கூறப்பட்டுள்ளது. சிவதீøக்ஷ, சாஸ்த்ர உபதேசம், ஸ்பர்சதீøக்ஷ, சாக்ஷúஷ தீøக்ஷ சமாதான வார்த்தைகள் மூலம் என்பதாக அருள்பாலிக்கும் முறை கூறப்பட்டுள்ளது.

5. சிவாதிஷ்டித உடலோடு கூடின ஓர் மனிதன் மரணத்தை அடைந்தால் அந்த மனிதன் எல்லா பாபங்களில் இருந்து விடுபட்டு சிவனாகவே ஆகின்றான்.

6. இறக்கும் காலத்திலே விருப்பப்பட்ட லிங்கத்தை தொட்டுக்கொண்டு எவன் உயிரை விடுகின்றானோ அவன் சிவனே அதில் சந்தேகம் இல்லை.

7. சொல்லப்பட்ட கோத்ரம் முதலிய தேகத்தை அதனுடைய ஆகிருதியை (உருவை) செய்து தொட்டுக் கொண்டு நல்ல லக்ஷணத்தோடு கூட படுத்துக் கொண்டோ அமர்ந்து இருந்து கொண்டோ நின்று கொண்டோ

8. கையை கூப்பிக் கொண்டு பிரதிமையை ஸதாசிவர் முதலான பிம்பங்களுக்கு கூறப்பட்ட உலோக திரவியங்களினால் (பொருட்களால்) சமர்த்த னானவன் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

9. சமர்த்தனான ஆசார்யன் அதனுடைய பீடத்தை அதேபோல் அளவில் செய்ய வேண்டும். பக்தானுக்ரஹ தேவதையினுடைய லக்ஷணம் இம்மாதிரி கூறப்பட்டது.

10. பிராம்ஹண உத்தமர்களே, பிரதிஷ்டை செய்வதை பற்றி கூறுகிறேன் கேளுங்கள். முன்போல நல்லவேளையை நிர்ணயம் செய்து அங்குரார்பணம் செய்ய வேண்டும்.

11. ரத்னந்யாஸம், கண் திறப்பது, பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலத்தின் நடுவில் (அதிவாஸம்) ஜலாதிவாசம் செய்ய வேண்டும்.

12. பிரதிஷ்டா மண்டபமானது (அதை) முன்பு கூறப்பட்ட முறையினால் செய்யவும். அந்த இடத்தில் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் குண்டங்களை அமைக்கவும்.

13. நாற்கோணம் முதலிய குண்டங்கள், வ்ருத்த குண்டம், பிரதாணமாகவோ அமைத்து சில்பியை சந்தோஷப்படுத்தி அனுப்பிவிட்டு பிராம்ஹண போஜநம் செய்வித்து புண்யாஹவாசனம் செய்து புரோக்ஷிக்கவும்.

14. நெல், அரிசியால் ஸ்தண்டிலம் அமைத்து ஸ்நபனம், சயனாதிவாசம், அதே போல் ரக்ஷõபந்தனம் (காப்புகட்டு) கும்பஸ்தானம் இவைகள் முன்போல் செய்ய வேண்டும்.

15. அதனுடைய பாதத்தில் அதனதனுடைய தியானத்தோடு பக்த கும்பத்தையும் ஹ்ருதய மந்திரத்தோடு கூட வித்யயேஸ்வர கடங்களை சேர்ந்ததாக (கடகங்களுடன்)

16. அந்தந்த மூர்த்திகளுடைய நியாஸங்களை முன் கூறிய விதியினால் நடத்த வேண்டும். குண்ட ஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.

17. சமித்து, நெய், பொறி, எள், மூங்கில், அரிசி, யவதான்யம், புரசு, அத்தி, அரசு, ஆல் இவைகள் கிழக்கு முதலிய நான்கு திசைகளிலும்

18. வன்னி நாயுறுவி, வில்வம், இச்சி ஆகிய சமித்துக்களை தென்கிழக்கு முதலான கோணங்களிலும் புரசு சமித்து பிரதான குண்டத்திலும் அல்லது எந்த குண்டசமித்து இல்லையோ அந்த குண்டத்திற்கு புரசுசமித்தையும் ஹோமம் செய்ய வேண்டும்.

19. பிறகு இரண்டாவது தினத்தில் கும்பம், அக்னி, பூஜையை செய்து ருத்விக்குகளோடு கூட வஸ்திரம், தங்கம் முதலியவைகளை அடைந்தவனாய்

20. ஆசார்யன் பத்து நிஷ்கம் தட்சிணையை அடைந்து சந்தோஷமான மனதோடு பிம்பத்தின் முன்நிலையில் கடங்களை வைத்து பிம்பத்திற்கு மந்திரந்யாஸம் செய்யவும்.

21. கும்பத்திலிருந்து மந்திரத்தை எடுத்து தேவருடைய ஹ்ருதயத்தில் நியஸித்து (சேர்த்து) ஈஸ்வரன் தேவியோடு கூடி இருந்தால் ஆசார்யன் தேவியினுடைய மந்திரத்தை

22. தேவியினுடைய ஹ்ருதயத்தில் மந்திரத்தை சேர்க்க வேண்டும். இல்லாவிடில் பீடத்தில் சேர்க்க வேண்டும். பிறகு கும்ப ஜலத்தினால் அவர்களை அபிஷேகம் செய்ய வேண்டும்.

23. பக்த கும்பத்திலிருந்து மூலமந்திரத்தை அந்த பக்த ஹ்ருதயத்தில் சேர்த்து நியஸிக்க வேண்டும். மற்ற அஷ்டவித்யேஸ்வர மூலமந்திரங்களை எடுத்து பீடத்தினுடைய சுற்றிலும் சேர்க்க வேண்டும்.

24. அந்த கும்ப ஜலத்தினால் பீடத்தை அபிஷேகம் செய்விக்க வேண்டும். ஸ்நபனம் செய்து முடிவில் நைவேத்யம் செய்ய வேண்டும்.

25. கடைசியில் உத்ஸவம் செய்ய வேண்டும் என ஸாமான்யமாக கூறப்பட்டது. திரிபுரஸம்ஹார (முப்புரம் எரிப்பது) பிரதிஷ்டையில் விசேஷவிதி கூறப்பட்டிருக்கிறது.

26. பக்த பிரதிஷ்டையில் கூறியுள்ளபடி எந்த மனிதன் இந்தபடி செய்கிறானோ, அவன் புண்ய கதியை அடைகிறான்.

27. புத்திரனை விரும்புகிறவர்கள் புத்திரனையும், பணத்தை விரும்புகிறவர்கள் பணத்தையும் தேவர்கள் விரும்புபவர்கள் தேவர்களையும், மோக்ஷத்தை விரும்புபவர்கள் மோக்ஷத்தையும் அடைவார்கள்.

28. மனுஷ்யன் எந்தந்த விருப்பங்களை விரும்புகிறானோ அவைகளை அடைகிறான். இறந்தவனை குறித்து எந்த மகன், பேரன், இப்பிரதிஷ்டையை செய்கிறானோ அவன் மேற்கூறிய பயனை அடைகிறான்.

29. உயிரோடு இருக்கும்பொழுதே சிவ அடையாளத்தை உடையவனாக தன்னை பிரதிஷ்டை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் பக்தானுக்ரஹ தேவஸ்தாபன முறையாகிற ஐம்பத்தியாறாவது படலமாகும்.