செவ்வாய், 19 மே, 2020

ஆதிபராசக்தி அகிலம் தழைக்கவும் அகிலத்தில் வாழும் மக்களைக் காப்பதற்கும் ஆயிரமாயிரம் வடிவங்களோடும் ஆயிரமாயிரம் நாமங்களோடும் மண்ணுலகில் அவதாரம் எடுத்தார்கள்.

மண்ணுலகில் தோன்றியபோது, தமக்கு உறுதுணையாகவும் உதவி செய்வதற்கும் தம் சக்தியில் இருந்து ஏழு சக்திகளை தோற்றுவித்தார்கள். அவர்களையே சப்த மாதாக்கள் என்றும் சப்த கன்னியர்கள் என்றும் சப்த தேவிமார்கள் என்றும் அழைக்கிறோம்.

சப்தம் என்றால் ஏழு, மாதாக்கள் என்றால் தாய்க்கு சமமான தேவியர்கள், தம் சக்தியால் எழு அம்சங்களாக, ஏழு தேவியர்களை தோற்றுவித்தார்கள்.

மகேசனின் அம்சமான மகேஸ்வரி; விஷ்ணுவின் அம்சமான வைஷ்ணவி; பிரம்மனின் அம்சமான பிராமி; இந்திரனின் அம்சமான இந்திராணி; முருகனின் அம்சமான கௌமாரி; வராக வடிவான வராகி; காளி வடிவான சாமுண்டி ஆகியோர் சப்த மாதாக்களாக திகழ்கிறார்கள் என்று தேவி பாகவதமும் சக்தி புராணமும் கூறுகிறது.

சப்த மாதாக்கள் எழுவருள், இம்மை, மறுமை ஆகிய பயன்களை அருள்பவள்  மகேஸ்வரி, சுமங்கலி வரத்தையும் செல்வத்தையும் தருபவள் வைஷ்ணவி. கல்வி ஞானத்தை அளிப்பவள் பிராமி. வீரத்தையும் ஞானத்தையும் அளிப்பவள் கௌமாரி. பெரும் பதவி, புகழ், திருமணப்பேறு அருள்பவள் இந்திராணி. வீரத்தை அளித்து பகைவரை அழிப்பவள் வராகி. நீதியை காப்பாற்றி வழக்குகளில் நியாயமான வெற்றிகளை வழங்குபவள் சாமுண்டி. இப்படி, ஒவ்வொரு விதமான செயல்பாட்டையும் ஏற்று அனைவருக்கும் அருள்பாலித்திடுவாள் ஆதிபராசக்தி.

தமிழகத்தின் கிராமங்களில் கிராமங்கள்தோறும் கிராம தேவதை, கிராம காவல் தெய்வம், கிராம எல்லையம்மன், கிராம குலதெய்வம் என்று அம்மனை வழிபடுகிறார்கள். அம்மனோடு சப்த மாதாக்களும் இருப்பார்கள் அல்லது தனி சந்நிதியிலும் இருப்பார்கள். சப்த மாதாக்கள் இல்லாத கோயில்களில் ஏழு கற்களை நட்டு அலங்காரம் ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.

சப்த மாதாக்களை ஏழு கற்களை நாட்டி வழிபடுவதோடு மேலும் ஏழு கற்களை நட்டு பூஜைகள் செய்து அண்ணன்மார்களாக வழிபடுகிறார்கள். சப்த மாதாக்களின் துணைவர்களே அண்ணன்மார்களாகச் சொல்லப்படுகிறது. இந்த தேவியரை வழிபடுவதால் உலகமும் மக்களும் சுபிட்சமாக வாழலாம்.

சப்த மாதாக்கள் வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது. பல்லவர் காலத்திற்கு முன்னதாகவே சக்தி வழிபாட்டில் சப்தமாதர் வழிபாடு மிக சிறப்பாக இடம் பெற்று இருந்ததை "சக்தி வழிபாடு' என்னும் அரிய நூல் சிறப்பாக தெரிவிக்கிறது. அந்த வகையில் பல்லவ பேரரசனான
நந்திவர்மனால் கட்டப்பெற்ற பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயம் அற்புதமானது.

கருவறையில் அம்மனோடு சப்த மாதாக்களும் அமர்ந்து அருள்புரிகின்றனர். அம்மன் கோயிலுக்குள்ளே சிறிய சந்நிதியில் சப்த மாதாக்கள் துணைவர்களான சப்த அண்ணன்மார்கள் எழுவரும் காட்சி அளிக்கின்றனர். அண்ணன்மார்கள் எழுவரும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

தேவாரத் தலமான கருவூர் குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானோடு கருவறையில் சப்த கன்னியர்கள் சிவலிங்கத்திற்கு பின்புறத்தில் அமர்ந்து காட்சி அளிக்கின்றனர்.

அற்புதமான கடம்பவனேஸ்வரரை வணங்கி வழிபட்டால் கடலளவு துன்பத்தையும் போக்கி சுபிட்சத்தை தந்து அருளுகிறார். இதுபோன்ற அமைப்புள்ள கோயில் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. மேலும் அம்மன் கோயிலான பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயத்தில் இந்த அமைப்பைக் காணலாம்.

ஆயிரம் ஆண்டு காலமாக வரலாற்று தடையங்களைச் சுமந்து நிற்கும் பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயம் கொரட்டூர் அக்ரகாரம் ஏரிக்கரை ஓரத்தில் இயற்கை எழியோடும் அமைதியான சூழலில் ஏகாந்த நிலையில் அமைந்துள்ளது.

கோயில் செல்ல: சென்னை- திருவள்ளூர் ரயில் மார்க்கம் கொரட்டூர் ரயிலடியில் இருந்தும் கொரட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் 11/2 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் செல்லும் 100 அடி சாலையில் கொரட்டூர் அக்ரகாரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 11/2 கி.மீ. தொலைவில் கோயிலைச் சென்றடையலாம்.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் 10.30 மணி வரை. மீண்டும் 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

சப்த மாதாக்கள் காயத்ரி.

1) வாராஹி காயத்ரி

ஒம்சியாமளாயை வித்மஹே

ஹலஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

2) இந்த்ராணி காயத்ரி

ஒம்ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்த்ரி ப்ரசோதயாத்

3) சாமுண்டா காயத்ரி

ஒம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்

4) பிரம்மீ காயத்ரி (நம் வாக்கில் வாசம் செய்பவள்)

ஒம் ப்ரம்ஹ சக்த்யை வித்மஹே

பீத வர்ணாயை தீமஹி

தன்னோ: ப்ராஹ்மீ ப்ரசோத்யாத்

5) மஹேஸ்வரி காயத்ரி (மங்களம் பெருகும்)

ஒம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்

6) கெளமாரி ( ரத்தத்திற்கு தலைவி )

ஒம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ கெளமாரி ப்ரசோதயாத்

7) வைஷ்ணவி காயத்ரி ( ஈம் பீஜமந்திரம் )

ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!

புதன், 13 மே, 2020

அமாவாஸ்யையை கணிக்கும் முறை.ஶ்ராத்த திதிக்கும் இதேதான் கணக்கு.

பஞ்சாங்கத்தில் பகற்பொழுதை "அஹஸ்"என்ற சொல்லால் குறிப்பிட்டு இருப்பார்கள்.அஹஸ்ஸானது முப்பது நாழிகைக்கு வெயில் காலங்களில் கூடுதலாகவும் பனி காலங்களில் குறைவாகவும் இருக்கும். ஆந்த அஹஸ்ஸை ஐந்தாக பிரித்துக்கொள்ளவேண்டும்.
அவை
1)ப்ராத:காலம்
2)ஸங்கவகாலம்
3)மாத்யாஹ்னகாலம்
4)அபராஹ்ன காலம்
5)சாயாஹ்ண காலம்
என்பனவாகும்.

இவற்றில் ஜன்மநக்ஷத்ரம், ஷஷ்ட்ப்த பூர்த்தி, வ்ரதங்கள் ஆகியவை ப்ராத:காலத்தை வைத்து கணிக்கப்படும்.

காயத்ரி ஜபம்,தீட்டின் நிவ்ருத்தி ஆகியவை ப்ராயஶ்சித்தங்களை  ஸங்கவ காலத்தை வைத்து.

நாந்தி முதலியவை மத்யாஹ்ன காலத்தை வைத்து

அமாவாசை ,சிராத்ததிதி நிர்ணயத்திற்கு அபராஹ்ன எனப்படும்  பிற்பகல் 01:12 மணிமுதல் 03:36 வரையில் திதி இருப்பதை கொண்டு நிர்ணயிக்கவேண்டும்.இரண்டு நாளும் அபராஹ்ன வ்யாப்தி இருந்தால் அதிகவ்யாப்தி என்றைக்கு அன்றைக்குதான் அமாவாஸ்யை பித்ருதர்ப்பணதினம்,சிராத்ததிதி.
ருதுக்கள்

சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது

கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு - பானு வாஸர
திங்கள் - இந்து வாஸர
செவ்வாய் - பவும வாஸர
புதன் - சவும்ய வாஸர
வியாழன் - குரு வாஸர
வெள்ளி - ப்ருகு வாஸர
சனி - ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை

சித்திரை - மேஷ மாஸே
வைகாசி - ரிஷப மாஸே
ஆனி - மிதுன மாஸே
ஆடி - கடக மாஸே
ஆவணி - ஸிம்ம மாஸே
புரட்டாசி - கன்யா மாஸே
ஐப்பசி - துலா மாஸே
கார்த்திகை - வ்ருச்சிக மாஸே
மார்கழி - தனுர் மாஸே
தை - மகர மாஸே
மாசி - கும்ப மாஸே
பங்குனி - மீன மாஸே.
*அயல் நாடுகளில் உள்ளவர்கள் ஸங்கல்பங்கள் செய்யும் பொழுது _"பாரத வருஷே"_ என்ற இடத்தில் என்ன சொல்வது என்ற சிறு தடுமாற்றத்தை போக்கவே இந்த பதிவு.......*

01. இந்தியா — *பாரத வர்ஷம்*.,

02. அட்லாண்டிக் பெருங்கடல் — *கேதுமாலா வர்ஷம்*.,

03. ஐரோப்பா — *ஹரி வர்ஷம்*.,

04. வடதுருவம் — *இலாவ்ருத வர்ஷம்*.,

05. தென் அமெரிக்கா — *குரு வர்ஷம்*.,

06. வட அமெரிக்கா — *ஹிரண்யக வர்ஷம்*.,

07. Green Land — *ரம்யக வர்ஷம்*.,

08. ஆசியா — *கிம்புருஷ வர்ஷம்*.,

09. பஸிபிக் சமுத்திரம் — *பத்ராஸ்வ வர்ஷம்*.

அயல் நாடுகளில் ஸங்கல்பங்களுக்கு இவற்றை கையாளலாம்.
ருக் வேதிகளின் வைகாசி மாத பிறப்பு  தர்பபணம்

14.05.2020 வியாழக்கிழமை              

ஆசமனம்.

அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவா + தாமோதரா

வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.

ஶூக்லாம் + ஸாந்தயே,

ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்

மமோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

*ஶார்வரி* நாம ஸம்வத்ஸரே *உத்தராயணே வஸந்த்* ருதௌ *ரிஷப* மாஸே *க்ருஷ்ண* பக்ஷே *ஸப்தம்யாம் (உபரி) அஷ்டம்யாம்* புண்யதிதௌ *குரு* வாஸர யுக்தாயாம் *ஸ்ரவண(உபரி) ஸ்ரவிஷ்டா* நக்ஷத்ர யுக்தாயாம், *ப்ராம்ம* யோக, *பவ* கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் *அஷ்டம்யாம்* புண்யதிதௌ

ப்ராசீனாவீதி

தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

........கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம்

தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

…............கோத்ராணாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸமத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஶபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்

விஷ்ணுபதி  புண்யகாலே ரிஷபரவி சங்கரமண  ச்ராத்தம்  தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும்.

பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால் துடைத்துக்கொள்ளவும்.

பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும்.

கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்

ஆவாஹந மந்த்ரம்

உஶந்தஸ்த்வா நிதீமஹி உஶந்த : ஸ்மிதீமஹி உஶந்நுஶத ஆவஹ பித்ருந் ஹவிஷே அத்தவே அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.

ஆஸன மந்த்ரம்

ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான் வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.

ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //

பித்ருவர்க்கம்

......கோத்ரான் ........ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

......கோத்ரான் ........ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

......கோத்ரான் ........ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் இல்லாதவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாத்ருஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாதாமஹவர்க்கம்

.....கோத்ராணாம்........ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: மாதுப் பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஞாதாக்ஞாத, வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை)

கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்

மந்த்ரம்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

ப்ரதக்ஷிண மந்த்ரம்

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம: யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே

ப்ராசீனாவீதி

யதாஸ்தான மந்த்ரம்

உஶந்தஸ்த்வா நிதீமஹி உஶந்த : ஸ்மிதீமஹி உஶந்நுஶத ஆவஹ பித்ருந் ஹவிஷே அத்தவே// அஸ்மாத், கூர்ச்சாத், வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்

மந்த்ரம்

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

மந்த்ரம்

ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர - ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து

பவித்ரத்தை பிரித்துபோட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்

ஶுபம்
யஜுர் வேத ஆபஸ்தம்ப பிரும்ம யக்ஞம்

ஆசமனம்:
அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

சுக்லாம் + சாந்தயே ஓம் பூ : + பூர்புவஸுவரோம்

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வார ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் பிரும்மயக்ஞம் கரிஷ்யே

ப்ரம்மயக்ஞேன யக்ஷ்யே வித்யுதஸி வித்யமே பாப்மாநம்ருதாத், ஸத்யமுபைமி

(திர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்)

பிறகு வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் வைத்து வலது துடையில் கைகளை வைத்துக் கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்

மந்த்ரம்

ஓம் பூ : தத்ஸ விதுர் வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம் கும் ஸூவ: தியோயோ ந : ப்ரசோதயாத்

ஓம் பூ : தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோ ந : ப்ரசோதயாத்

ஓம் கும் ஸூவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந : ப்ரசோதயாத்

ஹரி : ஓம், ஹரி : ஓம்
அக்னி மீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்

ஹரி : ஓம், ஹரி : ஓம்
இஷேத்வா, ஊர்ஜேத்வா, வாய வஸ்த, உபாயவஸ்த,
தேவோ வ : ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மனே

ஹரி : ஓம், ஹரி : ஓம்
அக்ன ஆயாஹி வீதயே க்ருணான : ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி

ஹரி : ஓம், ஹரி : ஓம்
சந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோபவந்து பீதயே சம்யோ: அப ரிஸ்ரவந்துந:

ஹரி : ஓம், ஹரி : ஓம்

ஓம் பூர்புவஸ்ஸுவ: ஸத்யம் தப : ச்ரத்தாயாம் ஜுஹோமி என்று தீர்த்தத்தைக் கொண்டு தலையை சுற்றவும்

ஓம் நமோ ப்ரும்மணே நமோ அஸ்து அக்னயே நம ப்ருதிவ்யை நம ஓஷதீப்ய: நமோவாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி
(இந்த மந்த்ரத்தை மூன்று தடவை சொல்லவும்)

வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மானம்ருதாத் ஸத்ய முபாகாம்
(தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்க)

தேவரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே(நுனி விரல்களின் வழியாக தீர்த்தம் விட வேண்டும்)

ப்ரும்மாதயோ யேதேவா ஸ்தான் தேவான் தர்ப்பயாமி
ஸர்வான் தேவான் தர்ப்பயாமி
ஸர்வதேவ கணான் தர்ப்பயாமி
ஸர்வதேவ பத்னீஸ் தர்ப்பயாமி
ஸர்வதேவ கணபத்னீஸ் தர்ப்பயாமி

(பூணலை மாலையாக போட்டுக் கொண்டு செய்யவும்)

க்ருஷ்ணத்வை பாயனாதய : யே ரிஷய :
தான்ரிஷீன் தர்ப்பயாமி
ஸர்வான் ரிஷீன் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி கணான் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி பத்னீஸ் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி கணபத்னீஸ் தர்ப்பயாமி
ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸாகும் ஹிதீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
யாக்ஞிகீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
வாருணீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
ஹவ்யவாஹம் தர்ப்பயாமி
விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி

(இந்தக் கீழ்க்கண்ட மந்த்ரம் மட்டும் கையை உயர்த்தி தர்ப்பணம் செய்யவும்)

ப்ரம்மாணம் ஸ்வயம்பு வம் தர்ப்பயாமி

உபவீதி (பூணலை சரியாக போட்டுக் கொள்ளவும்)

விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
அருணான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸதஸத் பதிம் தர்ப்பயாமி
ரிக் வேதம் தர்ப்பயாமி
யஜுர் வேதம் தர்ப்பயாமி
ஸாமவேதம் தர்ப்பயாமி
அதர்வணவேதம் தர்ப்பயாமி
இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி
கல்பம் தர்ப்பயாமி

ப்ராசீணா வீதி
(பூணலை இடமாக போட்டுக்கொள்ளவும்)

ஸோம பித்ருமான்யம: அங்கிரஸ் வான் அக்னி : ஹவ்யவாஹனாதய :
யே பிதர:
தான் பித்ரூன் தர்ப்பயாமி
ஸர்வான் பித்ரூன் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு கணான் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு பத்னீஸ் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு கணபத்னீஸ் தர்ப்பயாமி

ஊர் ஜம்வஹந்தி : அம்ருதம் க்ருதம் பய: கீ லாலம்ப ரிஸ்ருதம் ஸ்வதாஸ் த தர்ப்பயத மே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

(உப வீதி) பூணல் வலம் போட்டுக்கொள்ளவும்

ஆசமனம் செய்யவும்

ஶீபம்
யஜுர் வேத ஆபஸ்தம்ப பிரும்ம யக்ஞம்

ஆசமனம்:
அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

சுக்லாம் + சாந்தயே ஓம் பூ : + பூர்புவஸுவரோம்

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வார ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் பிரும்மயக்ஞம் கரிஷ்யே

ப்ரம்மயக்ஞேன யக்ஷ்யே வித்யுதஸி வித்யமே பாப்மாநம்ருதாத், ஸத்யமுபைமி

(திர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்)

பிறகு வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் வைத்து வலது துடையில் கைகளை வைத்துக் கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்

மந்த்ரம்

ஓம் பூ : தத்ஸ விதுர் வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம் கும் ஸூவ: தியோயோ ந : ப்ரசோதயாத்

ஓம் பூ : தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோ ந : ப்ரசோதயாத்

ஓம் கும் ஸூவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோ ந : ப்ரசோதயாத்

ஹரி : ஓம், ஹரி : ஓம்
அக்னி மீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்

ஹரி : ஓம், ஹரி : ஓம்
இஷேத்வா, ஊர்ஜேத்வா, வாய வஸ்த, உபாயவஸ்த,
தேவோ வ : ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமாய கர்மனே

ஹரி : ஓம், ஹரி : ஓம்
அக்ன ஆயாஹி வீதயே க்ருணான : ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி

ஹரி : ஓம், ஹரி : ஓம்
சந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோபவந்து பீதயே சம்யோ: அப ரிஸ்ரவந்துந:

ஹரி : ஓம், ஹரி : ஓம்

ஓம் பூர்புவஸ்ஸுவ: ஸத்யம் தப : ச்ரத்தாயாம் ஜுஹோமி என்று தீர்த்தத்தைக் கொண்டு தலையை சுற்றவும்

ஓம் நமோ ப்ரும்மணே நமோ அஸ்து அக்னயே நம ப்ருதிவ்யை நம ஓஷதீப்ய: நமோவாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி
(இந்த மந்த்ரத்தை மூன்று தடவை சொல்லவும்)

வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மானம்ருதாத் ஸத்ய முபாகாம்
(தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்க)

தேவரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே(நுனி விரல்களின் வழியாக தீர்த்தம் விட வேண்டும்)

ப்ரும்மாதயோ யேதேவா ஸ்தான் தேவான் தர்ப்பயாமி
ஸர்வான் தேவான் தர்ப்பயாமி
ஸர்வதேவ கணான் தர்ப்பயாமி
ஸர்வதேவ பத்னீஸ் தர்ப்பயாமி
ஸர்வதேவ கணபத்னீஸ் தர்ப்பயாமி

(பூணலை மாலையாக போட்டுக் கொண்டு செய்யவும்)

க்ருஷ்ணத்வை பாயனாதய : யே ரிஷய :
தான்ரிஷீன் தர்ப்பயாமி
ஸர்வான் ரிஷீன் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி கணான் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி பத்னீஸ் தர்ப்பயாமி
ஸ்ர்வரிஷி கணபத்னீஸ் தர்ப்பயாமி
ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸாகும் ஹிதீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
யாக்ஞிகீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
வாருணீ : தேவதா : உபநிஷத: தர்ப்பயாமி
ஹவ்யவாஹம் தர்ப்பயாமி
விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி

(இந்தக் கீழ்க்கண்ட மந்த்ரம் மட்டும் கையை உயர்த்தி தர்ப்பணம் செய்யவும்)

ப்ரம்மாணம் ஸ்வயம்பு வம் தர்ப்பயாமி

உபவீதி (பூணலை சரியாக போட்டுக் கொள்ளவும்)

விச்வான் தேவான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
அருணான் காண்டரிஷிம் தர்ப்பயாமி
ஸதஸத் பதிம் தர்ப்பயாமி
ரிக் வேதம் தர்ப்பயாமி
யஜுர் வேதம் தர்ப்பயாமி
ஸாமவேதம் தர்ப்பயாமி
அதர்வணவேதம் தர்ப்பயாமி
இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி
கல்பம் தர்ப்பயாமி

ப்ராசீணா வீதி
(பூணலை இடமாக போட்டுக்கொள்ளவும்)

ஸோம பித்ருமான்யம: அங்கிரஸ் வான் அக்னி : ஹவ்யவாஹனாதய :
யே பிதர:
தான் பித்ரூன் தர்ப்பயாமி
ஸர்வான் பித்ரூன் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு கணான் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு பத்னீஸ் தர்ப்பயாமி
ஸர்வ பித்ரு கணபத்னீஸ் தர்ப்பயாமி

ஊர் ஜம்வஹந்தி : அம்ருதம் க்ருதம் பய: கீ லாலம்ப ரிஸ்ருதம் ஸ்வதாஸ் த தர்ப்பயத மே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

(உப வீதி) பூணல் வலம் போட்டுக்கொள்ளவும்

ஆசமனம் செய்யவும்

ஶீபம்
ஸாம வேதிகளின் வைகாசி மாத பிறப்பு  தர்பபணம்

14.05.2020 வியாழக்கிழமை

ஆசமனம்.

அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவா + தாமோதரா

வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.

ஶூக்லாம் + ஸாந்தயே,
ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்
மோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

*ஶார்வரி* நாம ஸம்வத்ஸரே *உத்தராயணே வஸந்த்* ருதௌ *ரிஷப* மாஸே *க்ருஷ்ண* பக்ஷே *ஸப்தம்யாம் (உபரி) அஷ்டம்யாம்* புண்யதிதௌ *குரு* வாஸர யுக்தாயாம் *ஸ்ரவண(உபரி) ஸ்ரவிஷ்டா* நக்ஷத்ர யுக்தாயாம், *ப்ராம்ம* யோக, *பவ* கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் *அஷ்டம்யாம்* புண்யதிதௌ

ப்ராசீனாவீதி

தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

........கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம்

தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

…............கோத்ராணாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸமத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஶபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்

விஷ்ணுபதி  புண்யகாலே ரிஷபரவி சங்கரமண  ச்ராத்தம்  தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால்
துடைத்துக்கொள்ளவும்.
பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும். கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்

ஆவாஹந மந்த்ரம்

ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சன: ஸர்வவீரம் நியச்சத உசந்தஸ்வா ஹவாமஹ உசந்த ஸமிதீமஹி உசன்உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.

ஆஸன மந்த்ரம்

ஆயாந்துந: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயாமதந்து அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான் வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.

ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //

பித்ருவர்க்கம்

......கோத்ரான் ........ஶர்மண: வஸுரூபான் பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

......கோத்ரான் ........ஶர்மண: ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

......கோத்ரான் ........ஶர்மண: ஆதித்யரூபான் பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் இல்லாதவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாத்ருஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: பிது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாதாமஹவர்க்கம்

.....கோத்ராணாம்........ஶர்மண: வஸுரூபான் மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

.....கோத்ராணாம்........ஶர்மண: ஆதித்யரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; வஸுரூபா: மாதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ருத்ரரூபா: மாதுப்
பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

........கோத்ரா: ............நாம்நீ; ஆதித்யரூபா: மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஞாதாக்ஞாத, வர்க்கத்வய, பித்ரூன், ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி (3தடவை)

கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்

மந்த்ரம்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

ப்ரதக்ஷிண மந்த்ரம்

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம: யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே

ப்ராசீனாவீதி

யதாஸ்தான மந்த்ரம்

ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சன: ஸர்வவீரம் நியச்சத உசந்தஸ்வா ஹவாமஹ உசந்த ஸமிதீமஹி உசன்உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே// அஸ்மாத், கூர்ச்சாத், வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்

மந்த்ரம்

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

மந்த்ரம்

ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர - ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து

பவித்ரத்தை பிரித்துபோட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்

ஶுபம்
போதாயன வைகாசி மாத பிறப்பு  தர்பபணம்

14.05.2020 வியாழக்கிழமை

ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

கேசவா + தாமோதரா

வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக் கொண்டு சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக் கொண்டு கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு சில கட்டை தர்ப்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.

ஶூக்லாம் + ஸாந்தயே, ஓம் பூ: + பூர்புவஸ்ஸுவரோம்

மமோபாத்த + ப்ரீத்யர்த்தம், அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா, யஸ்மரேத் புண்டரீகாக்ஷம், ஸபாஹ்ய, அப்யந்தர: ஶூசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா, ஸமுபார்ஜிதம், ஶ்ரீராம, ஸ்மரணேனைவ, வ்யபோஹதி நஸம்ஸய: ஶ்ரீராம ராமராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம், ஜகத், ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அத்யஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரும்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத, வராஹகல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவருஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஶகாப்தே, அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி, ஸம்வத்ஸராணாம், மத்யே

*ஶார்வரி* நாம ஸம்வத்ஸரே *உத்தராயணே வஸந்த்* ருதௌ *ரிஷப* மாஸே *க்ருஷ்ண* பக்ஷே *ஸப்தம்யாம் (உபரி) அஷ்டம்யாம்* புண்யதிதௌ *குரு* வாஸர யுக்தாயாம் *ஸ்ரவண(உபரி) ஸ்ரவிஷ்டா* நக்ஷத்ர யுக்தாயாம், *ப்ராம்ம* யோக, *பவ* கரண, ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் *அஷ்டம்யாம்* புண்யதிதௌ

ப்ராசீனாவீதி

தந்தையார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

........கோத்ராணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹாணாம்,

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்

கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்

பிதாமஹி, பிது: பிதாமஹி, பிது: ப்ரபிதா, மஹீணாம்

தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்

…............கோத்ராணாம் வஸூருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸமத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஶபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம்

விஷ்ணுபதி  புண்யகாலே ரிஷபரவி சங்கரமண  ச்ராத்தம்  தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணலை வலம் போட்டுக்கொள்ளவும் கையில் ஜலத்தால்
துடைத்துக்கொள்ளவும். பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும். கீழ்க்கண்ட மந்திரங்களை சொல்லி தாம்பாளத்தின் நடுவில் தெற்கு நுனியாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை போடவும்

ஆவாஹந மந்த்ரம்

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச// அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி/

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி கட்டை தர்ப்பங்களை கூர்ச்சத்தின்மேல் வைக்கவும்.

ஆஸன மந்த்ரம்

ஸக்ருதாச்சின்னம் பர்ஹி: ஊர்ணாமிருது ஸ்யோநம் பித்ருப்யஸ்தவா, பராம்யஹம், அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதா மஹாஸ்ச்ச அனுகைஸ்ஸஹ//

வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

கீழ்க்கண்ட மந்த்ரத்தைச் சொல்லி எள்ளை கூர்ச்சத்தில் மறித்துப் போடவும்.

ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம் //

தர்ப்பண மந்த்ரம்

பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

பிரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் இல்லாதவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

மாத்ருஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் தர்ப்பணங்களை தாயார் உள்ளவர்கள் மட்டும் செய்ய வேண்டியது

பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

பிது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

பிது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாதாமஹவர்க்கம்

மாதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாது: பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாது: பிதாமஹீஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஆசார்யான்  ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஆசர்ய பத்னீ: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

குருண் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

குரு பத்னீ: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஸகீன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஸகி பத்னீ: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஞாதீன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஞாதி பத்னீ: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

அமாத்யான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

அமாத்ய பத்னீ: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஸர்வான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

ஸர்வா: ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி (3 தடவை)

கீழ்வரும் மந்த்ரங்களைச் சொல்லி எள்ளும் ஜலமுமாக தாம்பாளத்திற்குள் அப்ரதிஷிணமாக சுற்றிவிடவும்

மந்த்ரம்

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

ப்ரதக்ஷிண மந்த்ரம்

தேவதாப்ய: பித்ருப்யஶ்ச மஹாயோகிப்ய: ஏவச, நமஸ்வதாயை, ஸ்வாஹாயை, நித்யமேவ, நமோநம: யாநிகாச பாபாணி ஜன்மாந்த்ர க்ருதானிச விநஶ்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே

ப்ராசீனாவீதி

யதாஸ்தான மந்த்ரம்

ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம், தததோரயிஞ்ச, தீர்க்காயுத்வஞ்ச ஸதசாரதஞ்ச// அஸ்மாத், கூர்ச்சாத், வர்க்த்வய, பித்ரூன், யதாஸ்தானம், ப்ரதிஷ்டாபயாமி

தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை எடுத்து பிரித்து வலது கை கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்த்ரத்தை சொல்லி ஜலம் விடவும்

மந்த்ரம்

ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவா: நாந்ய, கோத்ரிந: தேஸர்வே த்ருப்தி மாயாந்து மயா உத்ஸ்ருஷ்டை: குஶோதகை: த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத

உபவீதி

மந்த்ரம்

ஹிரண்ய கர்ப, கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்தபுண்யபலதம் அத: ஶாந்திம் ப்ரயச்சமே அனுஷ்டித திலதர்ப்பண மந்த்ர - ஸாத்குன்யம் காமயமான: யதாஶக்தி இதம் ஹிரண்யம் ஆசார்யாய ஸம்ப்ரததேநமம

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்

காயேநவாசா மனஸேந்ரியைர்வா புத்யாத்ம நாவா ப்ருகிருதேஸ்வபாது கரோமியத்யது ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் ப்ரம்மார்பணமஸ்து

பவித்ரத்தை பிரித்துபோட்டுவிட்டு ஆசமனம் செய்யவும்

ஶுபம்

ஞாயிறு, 10 மே, 2020

சத்தியம் எங்கே இருக்கிறதோ அங்கே ஸ்ரீகண்ணனும் இருப்பான். ஏனெனில், அந்தச் சத்தியம் என்பதே சாட்ஷாத் அவன்தானே!' என்று போற்றுகின்றனர் வைணவப் பெருமக்கள்.

பகவான் இருக்குமிடத்தில் சத்தியம் நிறைந்திருக்கும். பஞ்ச பாண்டவர்களிடம் இருந்த சத்தியமும் தர்மமும்தான் அவர்களைக் காத்தன. அதாவது, பகவான் பாண்டவர்களுடன் இருந்ததால்தான் அவர்கள் வென்றனர்.

''ஒரேயொரு பாணத்தில் பாண்டவ வம்சத்தில் உள்ள அனைவரையும் அழித்துவிட முடியும். ஆனால், அவர்களுக்கு ரட்சகனாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இருக்கிறாரே... அவர் மட்டும் இல்லையென்றால், விரல் சொடுக்கும் நேரத்துக்குள் அழித்துவிடலாம்'' என பீஷ்மரும் துரோணரும் சொன்னார்கள்.

ஆச்சார்யர்கள் சொன்னதை விடுங்கள்... ஸ்ரீபரமேஸ்வரனே சொல்கிறார்... ''கண்ணபிரான் அவர்களுடன் இருக்கும் வரைக்கும், பாண்டவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்று!

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருநாமங்களைச் சொல்லி, அவனை மனதார ஸேவித்தால், சத்தியத்துடனும் தர்மத்துடன் நிறைவாக வாழலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

'சரக சம்ஹிதை’யின் ஒளஷத சாஸ்திரம், அற்புதமாக இதை விவரிக்கிறது. 'எப்படி வாசுதேவனுக்குத் தோல்வி என்பதே கிடையாதோ, இந்தச் சமுத்திரம் எப்படி வற்றாமல் இருக்கிறதோ, என் தாயாரின் திருமணத்தை எப்படி நான் பார்த்தது கிடையாதோ... இந்த சத் வாக்கியங்கள் அனைத்தும் உண்மையானதைப் போல, இந்த மருந்தும் வேலை செய்து குணமாக்கும்’ என்கிற மந்திரத்தைச் சொல்லியபடி, மருந்து தயார் செய்வார்களாம்.

இத்தனை பெருமைகளைக் கொண்டவன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. இதனால்தான், அபராஜிதன் எனும் திருநாமம் அமையப் பெற்றான். அபராஜிதன் என்றால், தோல்வியே இல்லாதவன் என்று அர்த்தம்!

பகவானின் ஒவ்வொரு அவதாரத்துக்கும் அவனுடைய ஒவ்வொரு திருநாமத்துக்கும் அளப்பரிய சக்தி உண்டு. அந்தக் காரணங்களைத் தெரிந்து கொண்டால், காரியங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம். உடுத்துகிற ஆடை, பஞ்சில் இருந்து வருகிறது; அந்தப் பஞ்சு, புடவையாகவும் வேஷ்டியாகவும், சட்டையாகவும் துண்டாகவும் எப்படியெல்லாம் மாறுகிறது பார்த்தீர்களா? பகவானின் திருமேனி அவதாரமும் திவ்விய நாமங்களும் அப்படித்தான்!

சஜாதிபய பேதம், விஜாதிபய பேதம், ஸ்வத்த பேதம் என மூன்று பேதங்கள் உள்ளன. அதாவது, தென்னையும் வாழையும் மரம்தான்! ஆனால், தென்னை என்பது ஒரு வகை மரம்; வாழை என்பது வேறொரு வகையானது! ஆனால், இரண்டுமே மரம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. இது, சஜாதிபய பேதம்!

அடுத்து, விஜாதிபய பேதம். அது வேறு, இது வேறு. அதாவது, ஒன்று மரமாகவும், இன்னொன்று மலையாகவும் இருக்கிறது. ஆகவே, மரத்தையும் மலையையும் எப்படி ஒரே வகை என்று சொல்ல முடியும்?

மூன்றாவதாக, ஸ்வத்த பேதம். அதாவது ஒரு மரம் இருக்கிறது. அதில் வேர், கிளை, இலை, பழம் என அனைத்தும் இருக்கின்றன. இப்போது, வேரைப் பார்த்து மரம் என்பீர்களா? கிளையை அல்லது இலையைப் பார்த்து மரம் என்று சொல்வீர்களா? வேரை வேர் என்றும் கிளையை கிளை என்றும், இலையை இலை என்றும் கனியை கனி என்றும்தானே சொல்வோம்?! மொத்தமாக மரம் என்று சொன்னாலும், தனித்தனியே ஒவ்வொரு பெயருடன் வேறுபட்டுத் திகழ்கின்றன, பார்த்தீர்களா?

இறைவன் எனும் பிரமாண்டமானவனும் இப்படித்தான்! பரமாத்மாவான அந்தப் பரந்தாமன், அனைத்துக்கும் அப்பாற்பட்டவன். எல்லாமுமாக இருப்பவனும் அவனே; எதுவுமற்றுத் திகழ்பவனும் அவனே! ஏகஹ என்றும் ந ஏகஹ என்றும் ஸ்ரீகிருஷ்ணனை இரண்டு விதமாகவும் அழைப்பது அதனால்தான்! இதைச் சொல்லும் விதமாகத்தான், உணர்த்துகிற வகையாகத்தான் அவனுடைய ஒவ்வொரு திருநாமமும் அமைந்தது.

'நீராய் நிலனாய்...' என்று துவங்குகிற பாடல் உண்டு. அதில் நீராகவும் இருக்கிறாய்; நிலமாகவும் இருக்கிறாய்; நெருப்பாகவும் இருக்கிறாய்; காற்றாகவும் இருக்கிறாய் என்று ஆழ்வார் வியந்து பாடுவார். அந்த வியப்பின் நிறைவாக, 'அட போப்பா... உன்னை எப்படிக் கூப்பிடுறதுன்னே எனக்குத் தெரியலை!' என்று ஏக்கமாகச் சொல்வார். ஆனால் ஒரு விஷயம்... இங்கே பல இடங்களில், வரிகளில்... இறைவன் ஒருவனே என்பதைத் தெளிவுறச் சொல்லிக் கொண்டே வருகிற உத்தி ரசனைக்கு உரியது!

மண்ணை எடுத்துச் சாப்பிட்டான் கண்ணன். இதை பலராமன் யசோதைக்குச் சொல்ல... 'எல்லாரும் பொய் சொல்றாங்கம்மா... நான் மண்ணைச் சாப்பிடலை’ என்று குறும்பு கொப்பளிக்கச் சொல்கிறான் கண்ணன். 'நீ விஷமக்காரனாச்சே... செஞ்சாலும் செய்திருப்பே. எங்கே வாயைத் திறந்து காட்டு’ என்கிறாள் யசோதை.

வேறு வழியின்றி, தன் வாயைத் திறக்கிறான் கண்ணபிரான். அங்கே, ஏழுலகையும் தன் தாயாருக்குக் காட்டி அருள்கிறான் பகவான். அதாவது, பகவான் ஸ்ரீகிருஷ்ணன் என்பது ஒருவன்தான். ஆனால், அவன் காட்டியது ஏழுலகங்களையும்! 'வையம் ஏழும் கண்டாள்... என்றொரு பாடல், 'காட்டியது ஒருவன்; கண்டது ஏழு’ எனும் பொருள்படும்படி, அழகுற விவரிக்கிறது.

ஸ்ரீகிருஷ்ணனுக்கு 'சஹா’ எனும் திருநாமம் அமைந்தது அதனால்தான்! அதாவது... கொடுப்பது, கொடுப்பவன் என்று அர்த்தம். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளிக் கொடுப்பவன் ஸ்ரீகிருஷ்ணன் அல்லவா?

சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்ட உபதேசித்தவன், அந்தக் கருணாமூர்த்தி அல்லவா?

சர்க்கரையை, பச்சை மிளகாய் என்றோ வேம்பு என்றோ மாற்றிச் சொல்லிவிட்டு, அந்தச் சர்க்கரையைச் சாப்பிட்டால் அது காரமாகிவிடுமா? கசப்பாகிவிடுமா? சர்க்கரையின் இயல்பை மாற்ற எவராலும் முடியாது. அப்படித்தான்... பகவானின் எந்தத் திருநாமங்களைச் சொன்னாலும், அவனுடைய பரிபூரண அன்பும் ஆசீர்வாதமும் நமக்கு என்றைக்கும் உண்டு.

இதேபோல் 'வஹா’ எனும் திருநாமமும் கொண்டிருக்கிறான் பகவான். வஹா என்றால் வசிப்பது, வசிப்பவன் என்று அர்த்தம்.

இதைத்தான் பராசர பட்டர், தன் சிஷ்யரான மைத்ரேயரிடம்... 'ஜகத் முழுவதுமாக, ஜகத்தில் உள்ள உயிர்கள் அனைத்திலுமாக ஊடுருவிப் பரவியிருக்கிறான் பரந்தாமன்’ என்கிறார். அதாவது அந்தராத்மாவாக, அந்தராமியாக, அனுப்பிரவேசம் பண்ணியிருக்கிறான்.

அட... இதைத்தானே பிரகலாதனும் சொன்னான் என்கிறீர்கள்தானே?!

ஆமாம். 'இறைவன் எங்கே இருக்கிறான்?' என்று இரணியன் கேட்டதற்கு, 'எங்கும் உளன்’ என்றான் பிரகலாதன். உடனே 'இங்கே இருக்கிறானா?' என்று கேட்டான் இரணியன். எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி இது. பின்னே... எங்கும் இருப்பவன் என்று சொல்லிவிட்ட பிறகு இங்கே இருக்கிறானா என்று கேட்கலாமோ?

'இந்தத் தூணில் இருக்கிறானா?' என்று அவன் கேட்க, 'இருக்கிறான்’ என்று பதில் சொன்னால், 'அந்தத் தூணில் இல்லையா?' என்கிற அடுத்த கேள்வியும் வரும். இதை உணர்ந்த பிரகலாதன், விதண்டாவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்... எனச் சொன்னான்.

சஹா என்றால் கொடுப்பவன்; வஹா என்றால் வசிப்பவன். கொடுக்க வேண்டும் என்றால், கூட இருந்துதானே ஆக வேண்டும்?!

நம்மில், நமக்குள்... ஊடுருவியிருக்கிறான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். இன்று இல்லையேனும் நாளை... நாளை இல்லையேனும் அடுத்த வாரம்... அதுவும் இல்லையெனில் அடுத்த மாதம்... நாம் திருந்த மாட்டோமா, நல்வழிக்கு வரமாட்டோமா எனக் காத்துக் கொண்டிருக்கிறான் கண்ணபிரான்.

'ஆடுற வரைக்கும் ஆடு. ஓய்ஞ்சு முடிஞ்சாதான் உன் புத்திக்கு எதுவுமே உரைக்கும்’ என்று பிள்ளையைப் பெற்ற தாய், பொறுமை காப்பதைப் போல, நமக்குள் இருந்தபடி நமக்காகக் காத்திருக்கிறான் கண்ணபிரான். முடிந்தால், அவனை உணர முயற்சி செய்து பாருங்களேன்!
தசமகா வித்யை

பராசக்தியின் பத்து அம்சங்களை தசமகா வித்யை என்பர். முதல் அம்சமான காளி காலச் சக்கரத்தின் கடவுள். தாரா பிரபஞ்சத்தின் தோற்றத்துடன் தொடர்புடைய பொன்னிற தேவதை. சோடசி என்றும் பதினாறாய் காட்சி தருபவள் அழகின் அதிதேவதை. புவனேஸ்வரி உலகில் அனைத்தின் இயக்கங்களுக்கும் மூல காரணமானவள். ஐந்தாம் வித்யையான பைரவியை வணங்கினால் ஆசைகளிலிருந்து விடுபடலாம். தன் தலையையே அறுத்து கையில் பிடித்துக்கொண்டிருக்கும் சின்ன மஸ்தா பொருட்களும் காட்சிகளும் தோன்றி மறையும் தொடர் நிகழ்வுக்குப் பொறுப்பானவள். உலக அழிவுக்குப்பின் புகை மட்டும் சூழ்ந்திருப்பதைக் குறிப்பவள் தூமாவதி. பொறாமை, வன்முறை, வெறுப்பு போன்றவற்றை நம்மிடமிருந்து அகற்றுபவள் பகளாதேவி. அனைவரின் மேலும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவள் மாதங்கி. பயத்தைப் போக்கி வரங்களையருளும் பத்தாவது அம்சமாகத் திகழ்பவள் கமலா.