திங்கள், 25 மே, 2020

*லிங்க புராணம் ~ அறிமுகம்*

*சூதர்.,* நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு லிங்க புராணத்தை விவரிக்கலானார். லிங்க வழிபாட்டின் மேன்மையைக் கூறும் இந்த லிங்க புராணம் வியாசர் எழுதிய பதினெட்டுப் புராணங்களில் பதினொன்றாவது புராணம் ஆகும். இது 10,000 ஸ்லோகங்கள் கொண்டது. இதைப் பக்தியுடன் கேட்பவர் நெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்து இருப்பர் என்றார்.

பஞ்ச பூதங்களின் தோற்றம்
======================

பேரொளியாய் விளங்கும் ஜோதி சொரூபம் சிவம். அந்த ஜோதி லிங்கத்திலிருந்து அனைத்துலகுக்கும்., ஆதாரமானதும்., வேதங்கள் கொண்டாடுவதுமான லிங்கம் உண்டாயிற்று. தமக்கென வித்து ஏதுமின்றி., அனைத்து உயிருக்கும் தானே வித்தாகி பிறந்திருக்கும் அப்பெருமானின் ஏவலாய் மாயையிடமிருந்து மகத்தத்துவம் உண்டாயிற்று. அதனிடமிருந்து முக்குணங்களோடு கூடிய அகங்காரம் உண்டானது. தாமசம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து ஒலி எழுந்தது. பேரொலியிடமிருந்து ஆகாயமும்., அதிலிருந்து காற்றும்., காற்றிலிருந்து நெருப்பும்., நெருப்பிலிருந்து நீரும்., நீரிலிருந்து நிலமும் உண்டாயின.

வைகாரிகம் எனப்பட்ட அகங்காரத்தினிடமிருந்து இந்திரியங்களுக்கு அதிஷ்டான தெய்வம் உண்டாயிற்று. தைஜசம் என்னும் அகங்காரத்தினிடமிருந்து ஞானேந்திரியங்கள் ஐந்தும்., கர்மேந்திரியங்கள் ஐந்தும்., மனமும் உண்டாயின. தத்துவங்கள் ஓரண்டமாகி பிரளய நீரில் மிதந்து கொண்டிருக்கையில் அதற்கு உயிர் உண்டாகி அதில் பிரம்மன் தோன்றுவார். அவரே அயன்., அரி., அரன் என்று படைத்தல்., காத்தல்., அழித்தல் என்ற காரியங்களுக்கேற்ப அழைக்கப் படுகின்றார்.

பிரம்மாண்டத்தினிடையே பதினான்கு லோகங்களும் அடங்கி உள்ளன. அகங்காரத்தை மகத்தத்துவம் சூழ்ந்திருக்கும். அதனைப் பிரகிருதி புருஷன் தன்னிடம் லயம் கொண்டிருப்பான். பிரளயதின் முடிவில் மூவரும் ஒன்றாக ஐக்கியமாகி விடுவர்.

தொடரும்....

*ப்ரம்மா முராரி சுரர்ச்சித லிங்கம்..!*

கருத்துகள் இல்லை: