செவ்வாய், 25 ஜூன், 2019

தினந்தோறும் காக்காய்க்கு அன்னம் {சாதம்} போட ஏதாவது மந்திரம் உண்டா?

ஒவ்வொருவரும் தினந்தோரும் தான் சாப்பிடுவதற்கு முன்பாக அந்த உணவை தெய்வத்துக்கு நிவேதனம் செய்து, வீட்டில் இருக்கும்பசு மாடு போன்ற வாயில்லா ஜீவன்களுக்கும் வைக்கோல் முதலிய தேவையான உணவளித்து, பகலில் காக்கைக்கும் இரவில் நாய்க்கும் கொஞ்சம் சாதம் போட்டு விட்டுஅதாவது காக பலி ஸ்வான பலி, யாராவது தன் வீட்டிற்கு அதிதி {விருந்தாளி} வருகிறார்களா? என்று சிறிது நேரம் வாசல் பக்கம் பார்த்து விட்டு, பிறகு தனது குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட வேண்டும், அதில் மதியம் சாப்பிடும் முன்பாக காக்கைக்கு உணவளிக்கும் போது கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்...

ஸ்லோகம் –ஓம் ஐந்த்ர வாருண வாய்வ்யா:, ஸௌம்யா யாம்யாஸ்ச நைர்ருதா:
வாயஸா: ப்ரதிக்ருஹ்ணந்து பூமாவன்னம்  மயார்ப்பிதம்.

{இந்திரன், வருணன், வாயு, ஸோமன், யமன், நிர்ருதி மற்றும் இவர்களைச் சேர்ந்த வாயஸங்கள் அனைவரும் என்னால் தரையில் வைக்கப்பட்ட இந்த உணவை பெற்றுக் கொள்ளட்டும்.} என்னும் இந்த மந்திரம் சொல்லி காக்கைக்கு அன்னம் போடவேண்டும். வாயஸம் என்றால் காகம் என்று பொருள் அதனால் தான் சிராத்த பிண்டத்திற்கு வாயஸ பிண்டம் என்று பெயர் இவ்வாறே ஒவ்வொரு நாளும் இரவில் சாப்பிடும் முன்பாக

ஓம் ஸ்வாநௌ ஹி ஸ்யாம சப, லௌ வைவஸ்வத குலோத்பவௌ
தாப்யாமன்னம் ப்ரதாஸ்யாமி ஸ்யாதா மேதாஹிம்ஸதௌ

{கருப்பு நிறத்துடனும் பல நிறங்களுடனும் இருக்கும் வைவஸ்வத மஹாராஜாவின் குலத்தில் பிறந்த இரண்டு நாய்கள் {அரசர்} என்னை துன்புறுத்தாமல் இருக்கட்டும். இவர்களுக்கு நான் உணவளிக்கிறேன்} என்னும் மந்திரம் சொல்லி நாய்க்கு உணவளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் நாய் மற்றும் அதன் ஜாதியைச் சேர்ந்த எந்த ப்ராணியாலும் நமக்கு ஆபத்து நேராது. மேலும் காக்கைக்கு உணவளிப்பதால் நம் முன்னோரும், நாய்க்கு உணவளிப்பதால் பைரவரும் திருப்தி அடைகிறார்கள் என்கிறது சாஸ்த்திரம்.

கருத்துகள் இல்லை: