சனி, 14 ஜூலை, 2018

ஸமுத்ரஸ்நானத்தை பற்றி பார்க்கலாமா?

எப்போதெல்லாம் ஸமுத்ரஸ்நானம் செய்யலாம்?

अश्वत्थसागरौ सेव्यौ नस्प्रष्टव्यौ कदाचन ।
अश्वत्थं मन्दवारे तु सागरं पर्वणि स्पृशेत् ।।भारते

ஸமுத்ரத்தையும் அரசமரத்தையும் எப்போதும் நமஸ்கரிக்க வேண்டும். தொடக்கூடாது ... சனிக்கிழமை அன்று அரசமரத்தையும், பர்வகாலங்களில்
ஸமுத்ரத்தையும் தொடலாம்... (ஸ்நானம் செய்யலாம்)

अन्यदा तु कुरुश्रेष्ठ देवयोनिरपांपतिः ।
कुशाग्रेणापि कौन्तेय न स्प्रष्टव्यो महोदधिः।।भारते

பர்வகாலங்களை தவிர எந்த நேரத்திலும் தர்பையின் நுனியால் கூட ஸமுத்ரத்தை தொடலாகாது.

ஸ்நானம்‌செய்தால் என்ன பலன்..!?.
आजन्मशत साहस्रे यत्पापं कुरुते क्वचित् ।
मुच्यते सर्वपापेभ्यःस्नात्वैव लवणाम्भसि।।भारते
स भूमिका कृष्ण चतुर्दशी या
तस्यास्तु पर्वांशक एव युक्तः ।
स्नात्वा समुद्रेतु तदैव पापं
निहन्ति जन्मान्तर सञ्चितं यत् ।।सङ्ग्रहे
चतुर्दश्यंशकं तत्र मुक्त्वा पर्वांश एव च ‌।
सिन्धुस्नानं प्रकुर्वीत गङ्गास्नानफलं लभेत् ।

ஸமுத்ரத்தில் ஸ்நானம் செய்வதால் மட்டுமே நூறாயிரம் ஜன்மத்தில் செய்த பாபங்களில் இருந்து விடுபட்டவர்களாவோம். செவ்வாய்க்கிழமையுடன் கூடிய க்ருஷ்ணபக்‌ஷ சதுர்தஶியில்‌ ஸமுத்ர்த்தில் ஸ்நானம் செய்வானாகில் முன் ஜன்மங்களில் செய்த பாபங்களில் இருந்து ஸ்நானம் செய்த உடனே விடுபடுவான்.
சதுர்தஶீ இல்லாத பர்வகாலங்களில் ஸமுத்ரஸ்நானம் செய்தால் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும்..

எல்லோரும் ஸ்நானம் செய்யலாமா?? செய்யலாம்,
ஆனால் பத்நீ கர்பமாக இருக்கையில் ஸ்நானம் செய்யக்கூடாது...

गर्भिणी गृहिणी यस्य दूरयात्रां स वर्जयेत् ।
वपनं सागरस्नानं शववाहं स वर्जयेत् ।।भर्द्वाजः

எவனுடைய பத்நீ கர்பமாக உள்ளாலோ அவன். ஸமுத்ர ஸ்நானம், தூரயாத்திரை, வபனம், இறந்தவர்களின் உடலை தூக்குதல் கூடாது.

எல்லா பர்வ காலங்களிலும் ஸ்நானம் செய்யலாமா??!!

सौरारवारयोरब्धौ पर्वण्योरुभयोरपि ।
सन्तानकामी न स्नायात् कुर्यात्तुग्रहणे तयोः।।भरद्वाजः

ஞாயிறு, செவ்வாய் இக்கிழமைகளில் பர்வங்கள் வருமாகில் ஸந்தானத்தை விரும்புபவன் ஸ்நானம் செய்யலாகாது..

எல்லா ஸமுத்ரத்திற்கும் இந்த விதி பொருந்துமா?

सेतौकवेरकन्याया गङ्गायाश्चापि सङ्गमे ।
वारदोषो न विद्येत पर्वसु स्नानमाचरेत् ।।
सेतुर्नापेक्षते कालं नित्यं स्नानं प्रचक्षते ।
निषेधःकालभेदस्य सेतोरन्यत्र कर्हिचित् ।।

ஸேதுவில், காவேரீ சங்கமத்தில், மற்றும் கங்கையின் சங்கமத்திலும்
எல்லாக்கிழமைகளிலும்(கிழமைக்கான தோஷம் கிடையாது) பர்வகாலங்களில் ஸ்நானம் செய்யலாம். ஸேதுவில் மட்டும் கால நியமம் கிடையாது. நிஷேதகாலங்கள் எல்லாமே மற்ற ஸமுத்ரத்திற்கு மட்டுமே.ஸேதுவில் நித்யமும் ஸ்நானம் செய்வது உசந்ததாகும்.

ஸமுத்ரத்தில் ஆசமனம் செய்யகூடாது. ஸமுத்ரஸ்நானத்திற்கு செல்கும் போது அவஶ்யம் ஆசமனத்திற்கு வேறு ஜலம் எடுத்து செல்ல வேண்டும்.

கருத்துகள் இல்லை: