புதன், 9 அக்டோபர், 2024

படலம் 31: அனுகர்மம் என்கிற பிராயச்சித்த விதி...

படலம் 31: அனுகர்மம் என்கிற பிராயச்சித்த விதி...

31 வது படலத்தில் அனுகர்மம் என்கிற பிராயசித்த விதி கூறப்படுகிறது. முதலாவதாக எல்லாவற்றிற்கும் சாதாரணமான அனுகர்ம விதியை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞையாகும். பின்பு ஆலயம் விழுந்த போதிலும் பின்னப்பட்ட பொழுதும் வேறுமாறாக ஆன பொழுதிலும் குறைவு பட்ட பொழுதிலும் ஆலய விஷயத்தில் விழுதல் என்ற காரணத்தினால், திசைகளின் அசைவு ஏற்பட்ட பொழுது உருப்புகள் குறைந்த பொழுதிலும், நீள அகல அளவுகள் குறைந்த பொழுதிலும், அனுகர்ம விதி கூறப்படுகிறது. பிறகு அளவுகள் நீள, அகலம், தேய்மானம் அடைந்த பொழுது உயர்ந்த தான திரவ்யங்களாலோ அல்லது முன்பு எந்த திரவ்யங்களால் ஆலயத்தின் அங்கங்கள் நிர்மாணம் செய்யப்பட்டதோ அந்த திரவ்யங்களால் குறைபாடு உள்ள அங்கங்களை அளவு உள்ளதாக செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஆலயத்தில் கர்பக்கிரஹம் முதலிய அங்க விஷயத்தில் செய்ய வேண்டிய அனுகர்மவிதி விளக்கப்படுகிறது. பிறகு ஸ்வாயம் புவாதி லிங்க விஷயத்திலும் செய்ய வேண்டிய அனுகர்ம விதி விளக்கப்படுகிறது. மானுஷாலயத்தில் நாகரம் முதலிய விமானங்களிலும் கர்பக்கிரஹ விஷயத்திலும் ஆத்யேஷ்டிகா கர்பன்நியாசம் முதலிய விஷயங்களில் செய்ய வேண்டிய அனுகர்ம விதி அனுஷ்டிக்கப்படுகிறது. பிறகு சிவலிங்க விஷயத்தில் நல்ல தன்மை உடையதும் நல்ல தன்மை இல்லாததுமான லிங்கத்தை அசையக்கூடாது என கூறி நல்ல தன்மை உள்ளதும் இல்லாததுமான லிங்கத்தின் இலக்கணம் கூறப்படுகிறது. அவ்வாறு ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்ட விஷயத்தில் பலன் பயன் அற்றதாக ஆகும் ஜீர்ணம் உள்ள லிங்கம் பூஜிக்கத் தகுந்தது. தகாதது எனவும் கூறப்படுகின்றன. ஆகையால் சாஸ்திர முறைப்படி சுகத்தின் பொருட்டு ஜீர்ணம் முதலிய லிங்கங்களை எடுக்கவும் என கூறி தள்ளுபடி செய்யப் படவேண்டிய ஜீர்ணாதி 16 லிங்கங்கள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு தேய்மானம் உள்ள தோஷம் உள்ள பீடம் பிரம்ம சிலை விருஷபங்கள் இவைகள் தள்ளுபடி செய்பவைகளாகும்.

பிறகு விஷமம் என்ற குறை உள்ள இடத்தில் உள்ள லிங்கங்கள் அவ்வாறே அசைந்தது. அசைவிக்கப்பட்டது. விழுந்தது விழப்பட்டது விழும்படி செய்யப்பட்டது. ஆகிய லிங்கங்கள் அறியாமையால் பிரதிஷ்டை செய்யப்பட்டது, சைவ மந்திரம் இன்றி வேறு மந்திரம் வேறு கிரியை இவைகளால் ஸ்தாபிக்கப்பட்டதுமான லிங்கங்களையும், தள்ளப்பட்ட சிலையால் செய்யப்பட்ட லிங்கமும் ஒரு பொழுதும் நன்கு ஸ்தாபிக்கப்பட்டதாக எண்ணுவதற்கு இடம் இல்லை. ஆகையால் அவைகள் ஜீர்ணமானால் அதே விதிப்படி முறையாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு அசுரர்கள் முனிவர்கள், தேவர்கள் தத்துவஞானிகள் இவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் ஆலயம் இவைகள் தேய்மானம் ஆனாலோ லிங்கம் பிளவு பட்டதாக ஆனாலும் முறைப்படி அசைக்கக் கூடாது. ஆனால் அரசன் திருடன் அக்னி இவைகளின் பயத்தால் காப்பாற்ற படுவதற்காக லிங்கத்தை வேறு இடத்தில் வைக்கவும் ஜலத்தினால் முழுகப்பட்டாலும் அடித்துச் செல்லப்பட்டாலும் அந்த லிங்கத்திற்கு அசைக்கும் தோஷம் இல்லை. அந்ததோஷம் லக்ஷ ஜபத்தால் சுத்தம் ஏற்படுகிறது. இப்பேர்ப்பட்ட லிங்கங்களின் விஷயத்தில் இடையூர் இல்லாத வேறு பிரதேசத்தில் லிங்க ஸ்தாபனம் செய்ய வேண்டும் என ஸ்தாபன முறை அறிவிக்கப்படுகிறது. சலபேர பிம்பங்களிலும் இந்த முறை ஸமானமாகும் எனக் கூறி லிங்களின் விஷயமான அனுகர்ம விதி விளக்கப்படுகிறது. பேரம் ஜீர்ணம் முதலிய தோஷங்களால் தேய்மானம் அடைந்தால் வேறு பிம்பம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு சிலாமயம் பக்குவமான மண்களால் ஆனது மரத்தினால் ஆனவை ரத்தினங்களால் செய்யப்பட்டவைகளான பிம்பத்தில் வயிற்றுப் பகுதி முகம் புருவ ரேகை இவைகளின் குறைவிலும் அங்க ஹீனத்திலும் அந்த பிம்பங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

உலோகத்தினால் பக்குவம் இல்லாத மண்ணால் செய்யப்பட்ட பிம்பமும் கை மூக்கு, கால், காது. பற்கள், இவைகளால் குறைந்த பொழுதிலும் அணிகலன்கள் விடுபட்ட பொழுதிலும் அந்தந்த பொருள்களால் கெட்டியாக்கப்படவேண்டும். உத்தமமான அவையங்கள் குறைந்த பொழுது அந்த பிம்பத்தை தள்ளுபடி செய்து விட்டு வேறு புதியதான பிம்பம் செய்து ஸ்தாபிக்கவும், கால், கை, இழந்த பொழுது அந்த பிம்பத்தை தள்ளுபடி செய்யவும், அல்லது அந்த அங்கங்களால் சேர்க்கும் தன்மையை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு சரீர அங்கங்களில் அங்கம் உபாங்கள் பிரத்யங்கம் என்று மூன்று வகையாகும் என கூறி அவைகளின் அமைப்பும் கூறி அவைகள் குறைபாடு உள்ளது செய்ய வேண்டிய அனுகர்மவிதி கூறப்படுகிறது. பிறகு கருங்கல்லாலும் பக்குவமான மண்ணினாலும் செய்யப்பட்ட பிம்பம் குற்றம் உள்ளதாக இருந்தால் ஜலத்தில் போட்டுவிடவும், குற்றம் உள்ள ரத்னத்தினால் ஆன பிம்பம் தள்ளுபடி செய்ய தக்கதாகும் அல்லது வேறு இடத்தில் செய்வதற்கு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் குற்றம் உள்ள உலோக திரவ்யத்தினால் செய்யப்பட்ட பிம்பம் வேறுபிம்பம் செய்யும் கார்யத்திற்கு கொடுக்க வேண்டும். அந்த பிம்பத்தின் திருவாசியையோ பீடத்தையோ அதே பிம்பத்திற்கு அல்லது வேறு பிம்பத்திற்கு சேர்க்கப்படவேண்டும் என கூறப்படுகிறது. குற்றத்தினால் குறைவுபட்ட பிம்ப சம்பந்தமான பீடம் பிரம்மசிலை, அதனுடைய விருஷபம் எல்லாம் சேர்க்கபடவேண்டும் என கூறப்படுகிறது. குற்றத்தினால் குறைவுபட்ட பிம்ப சம்பந்தமான பீடம் பிரம்மசிலை, அதனுடைய விருஷபம் எல்லாம் சேர்க்கப்பட வேண்டுமா அல்லது தள்ளுபடி செய்ய வேண்டுமா என்று விசேஷம் கூறப்படுகிறது. குற்றம் உள்ள சிலாபீடத்தில் பெயர்ந்து எடுத்து வேறு சிலர் பீடம் சேர்க்கவும். சிலா பீடம் கிடைக்காத சமயத்தில் செங்கல்லால் சேர்க்கவும் பிறகு சைல பிம்பத்திற்கு சமமாக சேர்க்கக் கூடாது. பீடத்தின் அளவு முன்பு போல் இருக்க வேண்டும். சதுர பீடத்தில் விருத்த பீடமும் விருத்த பீடத்தில் சதுரபீடமோ செய்யக் கூடாது என பீடம் அமைக்கும் விஷயத்தில் அனுகர்ம விதி கூறப்பட்டுள்ளது. மண்டபம் பரிவார பிம்பம் பரிவார ஆலயம் உட்பிரகாரம் இவைகளில் முன்பு கூறப்பட்டுள்ள அனுகர்ம விதிப்படி செய்யவும் என அறிவிக்கப்படுகிறது.

அனுகர்ம விதியில் சாஸ்திரபடி பிரமாணத்துடன் விதிக்கப்பட்ட அலங்காரத்துடன் கூடிய விஷயத்தில் பூமி கூடுதல் குறைதல் என்ற கார்யம் அரசனுக்கு கஷ்டம் கொடுக்கும் என கூறப்படுகிறது. பிரமாணம் இல்லாத விஷயத்தில் அதிகப்படுத்தும் கார்யத்தில் நல்ல குணமும், தோஷமும் வர்ணிக்கப்படுகிறது. கோபுர விஷயத்தில் அனுகர்ம விதி ஆலயத்திற்கு கூறியபடி அனுஷ்டிக்கவும் என அறிவிக்கப்படுகிறது. கோ சாலை முதலிய கொட்டகைகள் வீடுகள், மாளிகைகள் இவைகளின் விஷயத்திலும் அனுஷ்டிக்க வேண்டிய அனுகர்ம விதி விளக்கப்படுகிறது. முடிவில் சொல்லப்பட்ட எல்லாவற்றின் விஷயத்திலும் பெயர்த்து எடுக்க வேண்டிய முறை கூறப்படுகிறது என்று சொல்லி பெயர்த்து எடுக்கும் செயலை முறைப்படி விளக்கப்படுகிறது. பிறகு அறியாமையாலும் அவ்வாறே ஜோஸ்யர்கள், சில்பி, சிவ தீட்சை அற்றவர்கள் இவர்களால் சிவலிங்கம் முதலியவைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டால் மறுபடியும் முன்பு கூறியபடி சிவாகம சிவசாஸ்திர சம்ஸ்காரத்தை ஆசார்யன் செய்யவேண்டும். இவ்வாறே சைவ சித்தாந்த மார்க்கத்திலிருந்து வேறுபட்ட பாசுபதம் என்ற தந்திரங்களால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்தையும் மறுபடியும் சிவ ஸம்ஸ்காரம் செய்து ஸ்தாபிக்கவும், பிறகு அந்த லிங்கத்தையும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு சைவ சித்தாந்த மார்க்கத்திலிருந்து வேறுபட்ட பாசுபதம் முதலிய தந்திரங்கள் நிரூபிக்கப்படுகின்றன. அதில் பாசுபதம் ஸோம சித்தாந்தம் லாகுளம் என மூன்று வகைப்படும். அவைகளில் ஒவ்வொன்றும் வாம, தட்சிண சித்தாந்த, பிரிவாக மூன்று விதமாகும் என்று 9 விதங்கள் ஆகும் என கூறப்படுகின்றன. பிறகு காருடம், பைரவம், வாமதந்திர, வியவஸ்திதம், பூததந்திரிய விவஸ்திதம் என்று நான்கு விதமாக சைவ தந்திரங்கள் கூறப்படுகின்றன. அவைகளும் முன்பு போல் வாம, தட்சிண சித்தாந்த பிரிவினால் ஒவ்வொன்றும் மூன்று விதமாக ஆகின்றன. இவைகளால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் ஆதிசைவர்களால் பூஜிக்கப்படுகின்றன. (வேறு கூறப்படப் போகிற ரவுத்திர பேதத்தின் உள்ளிட்டதான யாமள தந்திரத்திலிருந்து (வேறானதான) யாமளதந்திரம் உள்ளது. அது இங்கு மிஸ்ரம் என்று கூறப்படுகிறது). அந்த யாமள தந்திரமும் வாம தட்சிண, சித்தாந்த பிரிவினால் மூன்று விதமாகும் அதில், வாமம், யாமளம், பார சிவார்ஹகம், தட்சிணம் யாமளம் பைரவார்ஹாகம், சித்தாந்த யாமளம் சைவமாகிய ஆதிசைவர்க்கு ஆகும் என கூறப்படுகிறது.

அதுவும் வாம, தட்சிண, மிஸ்ரம், என்ற பேதத்தினால் பலவிதமான ரவுத்ரங்கள் கூறப்படுகின்றன. பிறகு கூறப்பட்ட பாசுபத ஸோம லாகுல தந்திரங்கள் காருட, பைரவ வாம தந்திர, பூத, அதிமார்க்கம், என்கிற தந்திரங்களும் காபால பாஞ்சராத்திர, பவுத்த, ஆர்கத, பிருகஸ்பதிமத, சாங்கியயோக வைகானச, வேதாந்த பீமாம்சை, புராண, இதிகாச, ஷடங்க, சூத்திர முதலிய கிரந்தங்களும் தர்மசாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம், நான்கு வேதமும், எண்ணப்படுகின்றன. பிறகு இந்த எல்லாம் ரவுத்திரம் சித்தாந்தம், சவும்யம் என்று ஆகிறது என கூறப்படுகிறது. பிறகு ருத்திரர்களால் ஸ்தாபிக்கப்பட்ட விஷ்ணு முதலிய பிரதிமைகள் எல்லாம் சைவத்வமாக பிரதிஷ்டை செய்து சைவன் அந்த எல்லா பிம்பத்தையும் பூஜை செய்யவும் பிறகு ஆதி சைவனால் ஸ்தாபிக்கப்பட்டும், பூஜிக்கப்பட்டதுமான லிங்காதி பிம்பங்களை ரவுத்திரம் முதலிய தந்திரங்களால் பூஜிக்கப்பட்டால் அந்த பூஜையால் அந்த ராஜ்யம், ராஜகிராமம் கிராமங்கள் அங்கு வசிக்கும் ஜனங்களுக்கும் அழிவு ஏற்படும். இவ்வாறாக முன்பு ருத்திராதி தந்திரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதை பிறகு ஆதிசைவனால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டு பூஜை செய்வதால் அந்த பூஜையை மறுபடியும் ரவுத்திர தந்திரங்களால் பூஜித்தால் அப்பொழுது சேனையுடன் கூடின அரசன் மந்திரி அமைச்சர்கள், பிராம்மண க்ஷத்திரிய சூத்திரர்கள், வைஸ்யர்கள், மற்ற எல்லா ஜனங்களுக்கும் அழிவு ஏற்படும் ஆகையால் அரசன் முயற்சியினால் அந்த கிரியைகளை நிவாரணம் செய்யவும் என கூறப்படுகிறது.

பிறகு ரவுத்ராதி தந்திரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதும் பிறகு ஸம்ஸ்கார பூர்வமாக ஆதி சைவனால் பூஜை செய்யும் சமயத்தினால் அரசறருக்கு வெற்றியும் ஆயுள் அபிவிருத்தியும் உண்டாகிறது என நிரூபிக்கப்படுகிறது. பிறகு ரவுத்திரர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஆபிசாரலிங்க விஷயங்களில் அந்த ரவுத்திரர்களால் பூஜிக்கப்பட்ட ஆபிசார மந்திரங்களை எடுக்கும் முறை முறைப்படி விளக்கப்படுகிறது. பிறகு ஸ்வயம்பூ தெய்விக பாண, ரிஷி, கணபர்கள் ஆகியவர்களின் லிங்கங்களின் விஷயத்தில் உடைந்தாலும் இரண்டாக பிளவுபட்டாலும் வெடித்து போனாலும் அங்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தம் கூறப்படுகிறது. இந்த லிங்கங்களில் எல்லா அங்கங்களாலும் சிதறப்பட்டதாக ஆகும். ஆனால் மறுபடியும் புதிய பிம்பங்களை ஏற்படுத்தி பூஜிக்கவும் என கூறப்படுகிறது. ஆலயத்தின் அகல நீளமும் ஸ்தலத்தில் ஸ்தம்பம் முதலிய அங்கங்களிலும் லிங்க அளவு பீடம் அமைக்கும் முறை துவாரம் முதலியவைகளின் அங்கங்கள் பிரம்ம சூத்திரம் ஆகிய இவைகளில் அளவு குறைந்த பொழுது குறைபாட்டுடன் எண்ணப்படுகிற நிரூபணம் காணப்படுகிறது. இவ்வாறாக 32வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1.எல்லாவற்றிற்கும் பழமையான அனுகர்மம் என்ற பிராயச்சித்தம் கூறுகிறேன். ஆலயம் இடிந்து, பிளவுபட்டோ, ஆலய முகப்பு குறைபாடு ஏற்பட்டிருந்தாலும் திசைக் குழப்பம் ஏற்பட்டிருந்தாலும்

2. ஆலய அமைப்பு குறைவுபட்டிருந்தாலும், நீள அளவு உயர அளவு குறைபட்டிருந்தாலும் அந்தந்த திரவ்யங்களால் மிகவும் உயர்ந்ததாக பொருத்தமான அளவுள்ளதாக செய்ய வேண்டும்.

3. அளவோடு கூடியிருக்கும் எந்த வஸ்த்து முன்பு இருந்ததோ அந்த திரவ்யங்களை முன்புள்ள அளவு படியே செய்யவேண்டும். அளவுடன் கூடிய விமானத்தின் அதிஷ்டானம் முதலியவை

4. அவ்வாறே லக்ஷணமில்லாமல் இருந்தால் அதற்கு மாறுபட்ட முறையாக, முறைப்படி அளவுகளால் அமைக்கப்படவேண்டும். ஸ்வாயம்புவம் என்ற அமைப்புள்ள லிங்கங்களின் கோயில் அமைப்பு விஷயத்தில் முன்பு உள்ள அளவுப்படி செய்ய வேண்டும்.

5. சாஸ்திரத்தில் கூறப்பட்டவாறு அந்த ஆலயங்களை அமைத்தால் அதில் குற்றமில்லை. அல்லது வெளியில் கருங்கல்லாலும் உள்புறம் செங்கல்லாலும் அமைக்கலாம்.

6. மானுஷலிங்க ஆலய அமைப்பில் கூடம் பஞ்சரம், கோஷ்டம் என்ற பகுதிகள் உரிய இடத்தில் அமையாது இருந்தால் விசேஷமாக அவைகளுக்கு உகந்ததான இடங்களில் அமைக்க வேண்டும்.

7. நாகரம் என்ற அமைப்புடையதும் வேசரம் என்ற அமைப்புடையதும் திராவிடம் என்ற அமைப்புடையதும், வராடம் என்பது முதலான அமைப்பு உடைய கோபுரங்களை உடைய ஆலயம் செப்பனிடும் விஷயத்தில் அந்தந்த அமைப்புள்ள படியே அமைக்க வேண்டும்.

8. விமானம் கடினமாயும், கடினமில்லாமலும் உள்ளதாக ஆலயமிருக்கலாம். ஆலயம் பழுது பட்டிருந்தால் கிழக்கு முதலான நான்கு திசைகளில் ஓர் இடத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.

9. கிழக்கு அல்லது வடக்கு திக்கிலோ அக்னி திசை முதலான கோண திசைகளிலோ வாயில் படியை முன்புள்ள முறைப்படியோ அல்லது மேற்கு முகம் உள்ள வாயில் படி உள்ளதாகவோ அமைக்க வேண்டும்.

10. கர்பக்கிரஹம், அஸ்திவார கல் முதலில் வைக்கப்பட்ட கல் பழுதுபட்டாலும் நாசிகை முதலிய அங்கங்கள் பழுது பட்டாலும் மறுபடியும் முன்பு உள்ள அமைப்பு படியே செப்பனிட வேண்டும்.

11. ஆலயங்கள் சாஸ்திரத்தில் கூறிய உரிய முறைப்படி அமைக்கப்படாமல் இருந்தால் சாஸ்திர முறைப்படி உரிய அளவுள்ளதாக அமைக்க வேண்டும். ஆலயம் அமைப்பு முறைப்படியும் தோஷம் உள்ளதாகவும் இருந்தாலும் சிவலிங்கத்தை அசைக்க கூடாது.

12. சுஸ்திதம் என்ற நல்ல நிலையில் இருப்பது என்பது பழுது பெற்ற ஆலயமும் பூஜை உள்ளதாக இருப்பது ஆகும். துஸ்திதம் என்ற குறைபாடுகளுள்ள நிலையானது பழுது அடைந்தது என்ற நிலை இன்றியும் பூஜை இல்லாமலும், இருப்பது ஆகும்.

13. ஜீர்ணோத்தாரணம் செய்யப்படுமேயானால் கர்த்தாவிற்கு மிக உயர்ந்த பலன் கிடைக்கிறது. மிக ஜீர்ணமான கோயில் பூஜிக்கப்பட்டாலும் தீமை, பூஜிக்காமல் இருந்தாலும் தீமை

14. ஆகையால் இரண்டு விதத்திலும் தீமை விளைவதால் நன்மையின் பொருட்டு சாஸ்திரப்படி புதுப்பித்தல் வேண்டும். ஜீர்ணமானது நெருப்பில் பாதகமானது, மிக மெல்லியது, மிகவும் பருத்தது, அளவில் குறைந்தது, அளவிலே அதிகமானது

15. உடைந்தது அடிபட்டு சிலைபெயர்ந்தது ஸமமாக இல்லாதது. லக்ஷணத்திற்கு அப்பாற்பட்டது இடிந்துவிழுந்தது, மூடப்பட்டது, வெடித்தது

16. துஷ்ப்ரயோகமானது நடுபருத்தது நன்கு தெரியாத அங்கம் இந்த பதினாறு லிங்கமும் தள்ள வேண்டியவை விளக்க வேண்டியவை.

17. மிகஜீர்ணமாக தள்ளத்தகுந்த பீடம் அல்லது பிரும்ம சிலை விளக்கத் தக்கது. அது போலவே மிக உயரமானது. பள்ளமானது. அல்லது தரைமட்டம் உள்ளது திக்குகளை அறிந்து அமைக்க முடியாகமல் இருப்பது விஷமஸ்தானத்திலிருப்பது இவை ஐந்தும் விளக்கத்தக்கவை.

18. இவ்வாறே அசைகின்ற, அசையும்படி செய்யப்பட்ட கீழே விழுந்தது விழும்படி செய்யப்பட்ட மூடனால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கமும் அவ்வாறே மந்திரக்ரியையின்றி ஸ்தாபிக்கப்பட்டதும் விளக்கத்தக்கது.

19. விலக்கத்தக்க சிலைகளால் ஆன லிங்கத்தை ஸ்தாபிக்கக்கூடாது. அவ்வாறே எந்தவித மான குற்றங்கள் இல்லாமல் இருக்குமானால் அவைகளை ஸ்தாபிக்கவும்.

20. முனிவர்களோ தேவர்களோ தத்வஞானிகளோ அசுரர்களோ பிரதிஷ்டை செய்யப்பட்டு அவை ஜீர்ணமாக இருந்தாலும் உடைந்திருந்தாலும் அதை எடுக்கக்கூடாது.

21. அரசன், திருடன், நெருப்பு, ஜலம் இவைகளால் ஏற்படும் பயத்தினால் வேறு இடத்தில் ஸ்தாபிக்கவும். ஜலத்தினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தாலும் அபஹரிக்கப்பட்டிருந்தாலும்

22. ஐம்பதாயிரம் சிவமந்திர ஜபத்தால் லிங்கத்திற்கு சுத்தித் தன்மை ஏற்பட்டுயிருக்குமேயானால் ஸ்தாபநம் செய்வதில் எவ்வித தோஷமும் இல்லை. அல்லது முன்பு உள்ளது போலவே வாயில் வைத்து வேறு இடத்தில் ஸ்தாபனம் செய்யலாம்.

23. தண்ணீர் பாதகம் உள்ள லிங்கத்தை நூறுதண்டம் தள்ளியோ ஸ்தாபனம் செய்யவேண்டும். ஆயிரம் வில் அளவு தள்ளி லிங்கத்தை ஆதரவுடன் ஸ்தாபிக்க வேண்டும்.

24. உருவத்திருமேனிக்கும் இது பொதுவானது. கடினமில்லாத சிலாமயமான திருமேனி, பக்குமான மண்ணாலானவை, மரத்தாலானவை, ரத்னக்கல்லானவைகளான பிம்பங்களின்

25. இமை, புருவம், முகம் இவைகளின் ரேகைபழுதுபட்டால் விசர்ஜனம் செய்ய வேண்டும். அங்கங்கள் குறைவுபட்டால் அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்பதில் விசாரணைக்கு இடம் இல்லை.

26. உலோகம், மண் இவைகளால் செய்யப்பட்ட உருவத் திருமேனியில் கை, மூக்கு, ஆபரணங்கள், காது, பற்கள் இவைகள் இல்லாதிருப்பின் அந்த உருவத்திற்கு மேனியை செய்யப்பட்ட பொருள்களினாலோ நன்கு செப்பனிடவேண்டும்.

27. உத்தமாங்கமான தலை இல்லாது போனால் அதை நீக்கிவிட்டு புதிதாக பிம்பம் அமைக்க வேண்டும். கை கால் இல்லாது இருப்பின் அதை விலக்கலாம். அல்லது மறுபடியும் செப்பனிடலாம்.

28. உபாங்கம், அங்கம், ப்ரத்யங்கம் என்று சரீரங்கம் மூன்றுவிதம் கூறப்பட்டுள்ளது. பிரதான சூலம் அங்கமாகும். அது ப்ரும்மதண்டம் என்று இவ்வாறு சொல்லப்படுகிறது.

29. மார்பு, இடுப்பு, முழங்கை, புறங்கை, மணிக்கட்டு, துடை, முழங்கால், கணுக்கால், இவைகள் உபாங்கங்கள் என்று கூறப்படுகிறது.

30. இவைகளை போக மீதி உள்ளது ப்ரத்யங்கம் என்று அறியவேண்டும். பிரும்மதண்டம் இல்லாது போனால் சூலம் ஸ்தாபனம் செய்யவேண்டும்.

31. ப்ரத்யங்கம், உபாங்கம் இல்லாதுபோனால் மறுபடியும் சேர்க்க வேண்டும். முன்பு ஸ்தாபிக்கப்பட்ட ப்ரும்மதண்டம் லக்ஷணத்துடனிருப்பின்

32. வேறுவைக்காமல் அதையே ஸ்தாபித்து விடலாம். முறிவு முதலானவை ஏற்பட்டிருக்குமேயாகில் மறுபடியும் ஸ்தாபிக்க வேண்டும்.

33. பிரும்மதண்டம் சிலை கல் அல்லது மண் அல்லது சுடப்பட்ட மண்ணாலான சிலையின், பிரும்ம தண்டம் பின்னமானால் ஆழமான தண்ணீரில் போட்டு விடவேண்டும். ரத்தினத்தினால் ஏற்பட்டதை விலக்க வேண்டும். அல்லது சாணை தீட்டி உபயோகிக்க எடுத்துக் கொள்ளலாம்.

34. மரத்தால் செய்யப்பட்டிருப்பது பின்னமானால் சிவாக்னியில் ஸமர்ப்பிக்கவேண்டும். அல்லது பூமியில் புதைக்க வேண்டும். ஜலத்தில் போடவேண்டும். உருக்கக்கூடிய உலோக பொருளாக இருந்தால் சிலை செய்ய சேர்த்துக் கொள்ளலாம்.

35. அல்லது பிம்பத்தின் அதன் திருவாசியை, பீடத்தையோ செய்யலாம். அங்கேயோ அல்லது பிம்பம் செய்ய வேறு இடத்திலோ சேர்க்கலாம். பிரதிஷ்டை செய்யாத பிம்பமாக இருந்தால் அதன் பீடம் முதலியவற்றில் சேர்த்துவிட வேண்டும்.

36. அல்லதுவேறு தேவதைகளுக்கும் அந்த பீடத்தை உபயோகித்து விடவும். பீடம் லக்ஷணத்தோடு அமைந்திருப்பின் அதுபோலவே பிரும்ம சிலையும் விருஷபத்தையும்

37. அவைகளை எங்கும் உபயோகித்துக் கொள்ளலாம். அல்லது விலக்கினாலும் விலக்கலாம். சிலையால் ஆனபீடமாக இருந்தால் பழுதுபார்த்து பின் அதை எடுத்து கற்சிலையினால்தான் சேர்க்கவேண்டும்.

38. சிலாமயமான பீடம் கிடைக்காவிடில், செங்கற்களால் பீடத்தை பொருத்தவேண்டும். பிறகு சிலாமய பீடத்தை சேர்த்து உருவம் முதலியவை முன்போல செய்யவும்.

39. நாற்கோணமான பீடத்தில் வட்டத்தையோ, வட்டத்தில் நாற்கோணத்தையோ சேர்க்கக்கூடாது. மண்டபத்திலோ, பரிவாரத்தையோ, பரிவாரா லயத்திலோ

40. அனுகர்ம விதியை முன்புபோல் முறைபடி செய்யவேண்டும். அர்த்த மண்டபம் சாலா முதலியவைகளை முன்போலவே ஏற்படுத்தவேண்டும்.

41. அதைக்காட்டிலும் பூமியின் அளவு அதிகமோ, குறைவோ இருந்தால் அது நாட்டிற்கும், அரசனிற்கும் ஆபத்துக்களை கொடுக்கும். சாஸ்திரத்திலே சொன்னபடி பிரமாணத்தோடும் அலங்காரத்தோடும் அமைக்க வேண்டும்.

42. சாஸ்திர பிரமாணம் இல்லாதிருக்கும் பொழுது அதை வேறு விதமாக அமைப்பதால் குற்றம் இல்லை. கிழக்கிலும், வடக்கிலும் அதிகப்படுத்துவது மேலாகும். மேற்கில் அதிகப்படுத்துவது சத்ருக்களால் அழிவு ஏற்படும்.

43. தெற்கில் வாஸ்த்து விருத்தி ஏற்பட்டால் கர்தாவிற்கு மரணம் உண்டாகும். அதனால் அது விலக்கத்தக்கது. ஆகையினால் நான்கு பக்கத்திலும் ஸமமான அதிகமோ, சற்றே குறைவோ, கூடவோ குறைவான விதியோ கூடாது.

44. ஆலயத்திற்கு சொன்னவாறு கோபுரத்திற்கும் அனுகர்மம் செய்யவேண்டியது. சிறப்பான, கிராமங்கள், வீடுகள், சாலைகள்

45. விஸ்தாரம் நீளம் இவைகளில் குறைவு கூடாது. சமமாகவோ அல்லது அதிகமாகவோ அமைக்கலாம்.

46. யுக்தி சாமர்த்யத்தைக் கொண்டு நான்கு பக்கங்களிலும், கிழக்கு வடக்கு இவைகளில் விருத்தி செய்யலாம். வீடு, தோரணம் முதலியவைகளின் எண்ணிக்கையால் பூமியை அமைக்க வேண்டும்.

47. எந்தவிதத்திலும் முன் சொன்னபடி குறைவு நிச்சயமாக இருக்கக் கூடாது. மேற்கூறிய எல்லாவற்றிற்கும் ஒரு விசேஷ விதி கூறப்படுகிறது.

48. அதில் உபயோகப்படும் பொருள்கள் உயர்ந்த பொருள்களாக இருக்குமானால் குறை வாகவோ, அதிகமாகவோ அமைப்பதில் தோஷமில்லை. ஆலயம் சுவர் இவைகள் ஜீர்ணமானால் அஸ்தி வாரத்தின் அளவிலேயே இருக்க வேண்டும்.

49. ஆனால் கட்கமயமான அஸ்திரத்தில் மந்திரங்களை நியஸித்துவிட்டு வேறொன்றை கொண்டு வரவேண்டும். லிங்கத்தின் விஷயத்தில் ஜலம் நிரம்பிய கலசத்தில் அல்லது பீடத்தில் தியானித்து தினமும் பூஜை செய்து வரவேண்டும்.

50. அல்லது அதை விஸர்ஜனம் செய்துவிட்டு வேறொன்றையும் ஸ்தாபிக்கலாம். முன்பு எந்த வடிவமோ எந்த அளவோ அவ்விதமே அமைக்க வேண்டும். இதில் மாற்றம் கூடாது.

51. இவைகள் எல்லாவற்றிற்கும் புதுப்பித்தற்கு சாஸ்திர விதிமுறை கூறப்படுகிறது. ஆலய முன்னதாகவோ, தெற்கிலோ, ஈசானத்திலோ, மண்டபம் அமைக்கவேண்டும்.

52. ஒரு தோரணத்தோடு கூடியதும் தர்பை மாலையோடு கூடியதும், கிழக்குத்வாரத்தோடு கூடியதுமான மண்டபம் அமைக்கவேண்டும்.

53. ஆசார்யன் த்வார பூஜை முதலியவைகள் செய்து ஸ்தண்டலத்தில் ஈஸ்வரனை அர்ச்சிக்கவும். குண்டங்களில் ஆவிர் பவித்துள்ள அக்னியில் மந்திர தர்பணம் செய்து

54. ஸமித்து நெய் எள் ஹவிஸ்இவைகளோடு வாஸ்த்துவிற்கும், திக்குகளுக்கும் பலி கொடுத்து ஆசார்யன், ஆசமனம் செய்து

55. ஸகளீகரணம் செய்து சிவ தீக்ஷிதர்களுக்கு உணவளித்து தேவனிடம் தெரிவித்து ஹேப்ரயோ இந்த தோஷத்துடன் கூடிய கிரியைக்கு

56. தோஷத்தை நீக்குவதற்கு சாந்தி என்ற பரிஹாரம் செய்யவேண்டும் என்பது உங்களுடைய திருவாக்காகும். அந்த தோஷத்தை போக்குவதற்காக என்னை சதாசிவன் அண்டியுள்ளார்.

57. இவ்வாறாக கர்மாவை கூறி சாந்திஹோமம் செய்யவும். சிவமந்திரத்தினால் பால், நெய், தேன், அருஹம்பில் இவைகளால் எட்டாயிரம் ஆவிர்த்தி

58. ஹோமம் செய்து, கும்பத்தை ஸ்வாமி சமீபம் எடுத்துச் சென்று ஹ்ருதய மந்திரத்தினால் அபிஷேகம் செய்து வ்யாபகேஸ்வரா என்ற பதத்தை நான்காம் வேற்றுமையுடன்

59. ஓங்காரத்தை முதலாகவும் நம: என்ற பதத்தையும் சேர்த்து கூறுவது மூலமந்திரமாகும். (ஓம் வ்யாபகேஸ்வராயநம:) வ்யாபகேச்வரா என்ற பதத்தை ஹ்ருதயம் முதலான அங்கமந்திரங்களோடு

59. நான்காம் வேற்றுமையுடன் பிரணவத்துடன் கூடியதாகவும் கூறவும். (ஓம் வ்யாபகேஸ்வர ஹ்ருதாய நம: ஓம் வ்யாபகேஸ்வர சிரஸேநம:, ஓம் வ்யாபகேஸ்வர சிகாயை நம: ஓம் வ்யாபகேஸ்வர கவசாய நம: ஓம் அஸ்த்ராய நம:)

60. நம: என்ற பதத்தை முடிவில் உள்ளதாக ஹ்ருதயம் முதலான ஐந்து அங்கங்களை கூறவும். பீஜாக்ஷரமின்றி அந்த மந்திரங்களால் ப்ரணவாஸநத்தில் லிங்கத்தை

61. ஸ்தண்டிலத்தில் இருப்பவராக சந்தனம், புஷ்பமாலை இவைகளால் பூஜித்து பிறகு ஆஸ்ரயித்து ஸத்வமான அஸ்திரத்தை சொல்லிக்கொண்டு கர்மாவை கேட்கவும்.

62. ஏதோரு ஸத்வதன்மையானது லிங்கத்தை அடைந்து இருக்கிறது. அந்த சத்வமானது சிவனின் ஆக்ஞைகளால் லிங்கத்தைவிட்டு விருப்பப்படி செல்லட்டும்.

63. வித்யாதேகம், அஷ்டவித்யேஸ்வரர்களுடன் கூடிய பரமேஸ்வரன் இங்கு ஏற்படட்டும். இவ்வாறாக கூறி மஹாஸ்திர மந்திரத்தினால் பராங்முகார்க்யம் கொடுக்க வேண்டும்.

64. இவ்வாறாக பரமேஸ்வரனை கும்பத்தில் ஆவாஹித்து பூஜிக்கவும். கும்பமானது பிம்பத்திற்கு முன்பாக ஸ்தண்டிலத்துடன் கூடியதாகவும் ஸ்வர்ணம் வஸ்திரம் இவைகளுடன் கூடியதாகவும்.

65. கூர்ச்சத்துடன், மாவிலை, தேங்காய், மூவிழைநூல், புஷ்பம் இவைகளுடன் கூடியதாகவும் அமைத்து, முன்பு கூறப்பட்ட அமைப்பு உள்ளபடியே வர்தனியையும் அதில் அம்பிகையும் ஆவாஹனம் செய்யவேண்டும்.

66. சந்தனம், புஷ்பம், இவைகளால் பூஜை செய்து பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். தினம்தோறும் சாந்திஹோமத்துடன் கூடியதாக நித்யபூஜை செய்யவும்.

67. பிறகு பாசுபதாஸ்திர மந்திரத்தினால் ஒவ்வொரு பாகத்திற்கும் ஆயிரம் ஆவிருத்தி ஹோமம் செய்து சாந்தி கும்ப தீர்த்தத்தினால் பிரோக்ஷணம் செய்து தர்பைகளால் ஸ்பர்சித்து கொண்டவாறு ஜபிக்க வேண்டும்.

68. விலோமார்க்யம் என்ற பரான்முகார்க்யத்தை கொடுத்து தத்வ தத்வேஸ்வரர்களையும் பிறகு லிங்கம் ஆவடையாரையும் அடைந்த மூர்த்தி மூர்த்திஸ்வரர்களையும் விசர்ஜனம் செய்ய வேண்டும்.

69. தங்கம், வெள்ளி முதலான கயிற்றால் வ்ருஷபத்தினால் அசைக்கச் செய்யவும். லோகத்து ஜனங்களால் மங்களம் உண்டாகட்டும் என்று நினைத்து ஜலத்தில் லிங்கத்தை போட்டுவிட வேண்டும்.

70. மறுபடியும் புஷ்டி ஏற்படுத்துவதற்காக திக் பாலகர்களின் திருப்திக்காகவும் ஹோமம் செய்யவும், ஆலயத்தின் பூமிசுத்திக்காக நூறு நூறு திக்பாலமந்திர ஆவிர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.

71. மஹா பாசுபதாஸ்திர மந்திரத்தினால் அங்கு ஆலயத்தை காப்பாற்றவேண்டும். முன்புள்ள அளவுபடியே வேறு ஆலயத்தை அங்கு நிர்மாணிக்க வேண்டும்.

72. ஸ்யம்புலிங்கம், தெய்வீகம், ஆர்ஷகம் இவைகளிலும் கணலிங்கம் உலோக லிங்கம் நதீப்ரவாகத்தினால் ஏற்பட்ட லிங்க விஷயத்திலும்

73. இவ்வாறாக கூறப்பட்ட லிங்கத்திலும் கும்பஸ்தாபனம் செய்யக்கூடாது. மானுஷ லிங்க விஷயத்தில் கும்பஸ்தாபனகார்யம் செய்யவேண்டும்.

74. ஏழுதினம் வரையிலும் பதினைந்து தினம், முப்பது நாட்கள் வரை கும்பத்தில் வைத்து பூஜிப்பது முறையாகும். அதற்குமேற்பட்ட தினங்களில் கும்பத்தில் ஆவாஹித்து பூஜித்த ஈசன் எல்லா குற்றத்தையும் உண்டாக்குபவன் ஆகிறான்.

75. ஆகையால் மிக முயற்சியுடன் ஓர் மாதம் முடிவதற்குள்ளோ அதற்கு முன்பாகவோ பாலலிங்கம் முதலிய மூர்த்திகளை ஸ்தாபித்து லிங்கமத்தியில் மந்திரத்தை பூஜிக்க வேண்டும்.

76. ஓர் மாதம் முதல் 12 வருஷம் வரையிலோ அதற்கு உட்பட்ட தினத்திலோ அந்த பாலாலய பிம்பத்திலிருந்து பரமேஸ்வரனை மூலலிங்கத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.

77. முன்பு இருந்த லிங்கம் காலம் தேசம் இவைகளில் குறைப்பாட்டால் கிடைப்படவில்லை எனில் 36 வருஷத்திற்குள்ளாகவோ மூலலிங்கத்தில் பாலாலய மூர்த்தியை சேர்க்க வேண்டும்.

78. பாலலிங்க பிரதிஷ்டையில் கூறியுள்ளபடி தின எண்ணிக்கையாகவும் பதினைந்து தினம் வரையிலாகவும் ஹோமம் செய்யவும் ஹோமத்தை இரண்டு மடங்கு மூன்று மடங்கு செய்து பாலாலயம் 24 வருஷத்திற்குள் செய்யப்பட்டால்

79. இரண்டு மடங்காக செய்யவும். 36 வருஷத்திற்கு மேற்பட்டு பாலாலய மூர்த்தத்தை மூல ஸ்தான மூர்த்தியில் சேர்க்கப்படாமல் இருந்தால் அந்த பாலாய மூர்த்தியானது மூலாலய மூர்த்தியாக ஆகிறது.

80. அங்குள்ள பாலலிங்காதிகளை எடுத்து மூலஸ்தானத்தில் பூஜிக்கவும். ஸகள பிம்பங்களுக்கும் இவ்வாறு கூறப்பட்டு அதன் விசேஷம் கூறப்படுகிறது.

81. 12 வருடத்திற்கு உள்ளாகவே, அவசியம் பாலாலய மூர்த்தத்தை மூலஸ்தானத்தில் சேர்த்து விடவேண்டும். அவ்வாறு செய்யப்படாவிடில் மூல பிம்பத்தை பாலாலய பிம்பத்திலேயே சேர்ப்பிக்க வேண்டும்.

82. ஆலயம், கோபுரம் இவைகளில் இவ்வாறான பிராயச்சித்த முறைகூறப்பட்டது. ஆனால் சுத்தமான கத்தியில் மந்திரங்களை பூஜித்து மற்ற கிரியைகளை செய்யவேண்டும்.

83. இவ்வாறாகவே பரிவார தேவதைகளுக்கும் கடத்தில் ஆவாஹித்து பூஜிக்கவும். சிவலிங்கம் முதலான எந்த வஸ்த்து உண்டோ அவை அறிவில்லாததினால் பிரதிஷ்டை செய்யப்பட்டாலும்

84. ஜோதிஷன், சில்பி, மற்ற சிவதீøக்ஷ இல்லாதவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டால் மறுபடியும் முன்பு கூறப்பட்டுள்ளபடி அந்தப்ரதிஷ்டா பிம்பத்திற்கு ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.

85. சைவசித்தாந்த மார்கத்திற்கு வேறான பாசுபதம் முதலிய கிரந்தங்களும் உள்ளன. அவைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை மறுபடியும் சைவாகம சம்ஸ்காரம் செய்துபிரதிஷ்டை செய்ய வேண்டும்.

86. முதலில் பாசுபதம் என்றும் பிறகு சோமசித்தம் என்றும் அதன்பிறகு லாகுலம் என்றும் ஒவ்வொன்றும் மூன்றுவிதமாக கூறப்படுகிறது.

87. வாமம், தக்ஷிணம் சித்தாந்தம் என்ற பிரிவுகளால் ஒன்பது வகையாக கூறப்படுகிறது. சைவதந்ரமும், மந்திரம், தந்திரம் என்ற பிரிவுபடி நான்கு வகையாக கூறப்படுகிறது.

88. காரூடன், பைரவம், வாமம், பூததந்தரம், என்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன்பு கூறப்பட்டுள்ள கிரந்தங்களும், ஒவ்வொன்றும் மூன்று விதமாக கூறப்பட்டுள்ளன.

89. மேலே கூறப்பட்ட தந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை ஆதிசைவன் அர்ச்சிக்கவேண்டும். யாமளம் என்ற ஓர்தந்திரம் கூறப்படுகிறது. அதுவும் மிஸ்ரம் என கூறப்படுகிறது.

90. வாமம், தக்ஷிணம், சித்தாந்தம் என்று மூன்றுவிதமாக வாமம் பாரசைவம் சம்மந்தமாகவும், தக்ஷிணம் பைரவ தந்திர யோக்யமாகவும் கூறப்பட்டுள்ளன.

91. சைவ சித்தாந்தம், யாமள தந்திரம் இரண்டும் ஆதிசைவர்களுக்கு உரியதாகும். சைவசித்தாந்தத்திற்கு வேறுபட்டதான தந்திரங்கள் ரவுத்திரம் என கூறப்படுகிறது.

92. வாமம், தக்ஷிணம், மிஸ்ரம் என்ற பிரிவுகளாக பல வகைகளாக கூறப்பட்டுள்ள லவுகிகம், வைதிகம், அத்யாத்மம் அதிமார்க்கம், இவைகளும்,

93. அவ்வாறே பாசுபதம், சோமசித்தாந்தம், லாகுலம், காருடம், பைரவம் வாமம், பூததந்தரம், யாமளம் இவைகளும்

94. காபாலம், பாஞ்சராத்திரம், பவுத்தம், ஆர்கதமதம், ப்ருஹஸ்பதிமதம் சாங்கியம், யோகம், வைகாநசம், இவையும்,

95. வேதாந்தம், மீமாம்சம், புராணம், தர்மசாஸ்திரம், வாஸ்த்துசாஸ்திரம், ஸூத்திரம், ஷடங்கம், இதிகாசம் மற்றும்

96. அவ்வாறே நான்கு வேதங்களும் எவைகள் உண்டோ அவைகளில் சோதிக்கப்பட்டதை எல்லாவற்றையும் ரவுத்திரம் என கூறப்பட்டுள்ளது. சைவசித்தாந்தம் சவும்யம் என கூறப்பட்டுள்ளது.

97. ரவுத்திர தந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்ணு முதலான பிம்பங்கள் எவைகள் உண்டோ, அவைகள் எல்லாவற்றையும் சைவ முறைப்படி ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும்.

98. ஆதி சைவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜை செய்துவந்த லிங்கம் முதலான பிம்பங்களை மேற்கூறிய தந்திரங்களால் ரவுத்திர ரூபமாக பூஜிக்கப்பட்டால் அரசனையும் அரசாங்கத்தையும்

99. அந்தகிராமத்தையும், கிராமத்திலுள்ள ஜனங்களையும், மேற்கூறிய பூஜைகளால் கொல்லப்படுகிறார்கள். சந்தேகமில்லை. ஆதிசைவனால் முன்பு ஸ்தாபிக்கப்பட்ட ரவுத்திராதி தந்திர பிம்பத்தை பூஜிக்கப்பட்டாலும்

100. பிறகு ரவுத்திராதி தந்திரர்களால், பூஜிக்கப்பட்டாலும், அந்த பூஜை படைத்தலைவன் படையுடன் கூடி அமைச்சர், மந்திரி, பிராம்ணர்கள், க்ஷத்திரியர்கள் வைசியன், இவர்களும்

101. நான்காம், வர்ணத்தவர் அதற்கு கீழ்ப்பட்ட ஜனங்களையும் சீக்கிரம் அழிவடைய செய்கிறது. ஆகையினால் அரசன் மிக முயற்சியுடன் மேற்கூறிய குற்றமான பூஜைகளை நீக்கி, அவைகளை

102. முன்பு மேற்கூறிய ரவுத்ராதி தந்திரங்களிலே பூஜிக்கப்பட்டதை சைவ தந்திரத்தினால் சைவனால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டால் அரசனுக்கு வெற்றியும் ஆயுள் அபிவிர்த்தி இவைகளை எப்போதும் அடைவான்.

103. சைவ மந்திரங்களில் அமைதிதன்மை இருப்பதால் எல்லோருக்கும் மங்களத்தை கொடுக்கும் என்பதாகும் ஆபிசாரகலிங்கம் முதலியவைகளை ரவுத்திரர்களால் ஸ்தாபிக்கப்பட்டால்

104. அவைகளின் கர்ம மந்திரங்களை போக்கும் முறையை கூறுகிறேன் கேளும் பிராம்ணர்களே, மேற்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தை அடைந்து, மண்பாண்டங்களை விஸர்ஜனம் செய்ய வேண்டும்.

105. கருங்கல்லால் ஆன திரவ்யங்கள், உலோகம், மரச்சாமான்களை, அடிக்கடி சுத்தி செய்து சுவர் முதலானவைகளை சுண்ணாம்பு சாந்தால் பூசி தரை பிரதேசங்களை சாணம் மெழுகிட வேண்டும்.

106. புண்யாகவாசனம், வாஸ்த்து சாந்தி செய்து பர்யக்னிகார்யம் செய்து மறுபடியும் புண்யாக வாசனம் செய்ய வேண்டும்.

107. அஸ்திர மந்திர ஜலத்தினால் பிரோக்ஷணம் செய்து பஞ்ச கவ்யத்தினால் சுத்தி செய்ய வேண்டும். உழுதல் முதலாக பிரதிஷ்டை வரையிலாக உள்ள கிரியையில் எந்த மந்திரங்கள் பிரவேசிக்கப்பட்டுள்ளதோ

108. அந்த மந்திரங்களை மஹாபாசுபத மந்திரத்தினால் விடுவிக்கவும், மஹாஜாலம் என்ற பிரயோகத்தினால் எல்லா மந்திரங்களையும் தன் வசப்படுத்தவும்

109. ஓம், ஹூம், ஹாம், ஹம், ஹாம், ஹூம், என்ற பீஜாக்ஷரத்துடன் மஹாஜால முத்திரையால், வசப்படுத்தவும் இங்குபிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் முதலிய மூர்த்தங்களை தர்பம், விபூதி, மண், தீர்த்தம் இவைகளால் சுத்தி செய்து

110. பூஜிக்கப்பட்ட மரப்பட்டை ஜலத்தினாலும், பசுவின் மூத்திரஜலத்தினாலும்

111. பஞ்ச கவ்யத்தினாலும் அபிஷேகம் செய்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்கவும், லிங்கத்தில் பூஜிக்கப்பட்ட மந்திரத்தை அறிந்தால் முன்புபோல் அதை ஸ்வீகரிக்கவும்

112. லிங்கத்தில் சேர்க்கப்பட்ட மந்திரம் அறியப்படாவிட்டால் ஓம்காரத்தை சேர்க்கவும். பிராணிகளின் ஜலங்களால் நனைக்கப்பட்டால் அஸ்திர மந்திரத்தை ஜபித்து சேர்க்க வேண்டும்.

113. அந்த லிங்கத்தை அடைந்த மந்திரங்களை தீபத்துடன் ஒருமைப்பட்டதாகச்செய்து, அந்த மந்திரங்களுடன் தீபத்தை சேர்ந்ததாக நினைத்து எடுக்க வேண்டும்.

114. முன்பு கூறப்பட்ட மந்திரத்தினால், ஸம் ஹார முத்திரையால் எடுத்து திரும்பவும் அந்த லிங்கத்தை முன்பு கூறப்பட்ட பொருள்களினால் அஸ்திர மந்திரம் கூறி சுத்தி செய்து

115. உழுவது முதல் பிரதிஷ்டை வரையிலான கார்யங்களை நினைத்த மாத்திரமாக செய்யவும். அந்தந்த மந்திரத்துடன் கூடியதாகவும், அந்தந்த ஹோமத்துடன் சேர்ந்ததாகவும்

116. சிவலிங்க பிரதிஷ்டையில் கூறியுள்ளபடி பிரதிஷ்டை செய்யவும். பிம்ப சுத்தி ஜலாதிவாசம் ஆகிய இரண்டும் செய்யவேண்டியதில்லை.

117. ஸயனாதிவாசமின்றி மற்ற கார்யங்களை செய்யவும் முன்பு சொன்ன பூஜா கார்யங்களை கருவறையிலோ அல்லது மண்டபத்திலோ செய்யவேண்டும்.

118. ஸ்வாமிக்கு முன்பாகவோ அல்லது மண்டபத்திலோ குண்டம் அல்லது ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்யவும். ஸ்வயம்புலிங்கம், தேவர்களால் பூஜிக்கப்பட்ட லிங்கம், பாண லிங்கம், ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட லிங்கம், கணங்களால் பூஜிக்கப்பட்ட லிங்கம்

119. ஆகியவைகள் சிறிது சேதமடைந்து வெடித்து இரண்டாக பிளந்து சேதம் ஏற்பட்டால் அந்த இடத்திலேயே சாந்தி செய்ய வேண்டும். திசா ஹோமமும் வேதபாராயணம் இவைகளும்

120. நூற்றெட்டுபடியால் அபிஷேகம் செய்து சாந்திஹோமம் செய்து ஸ்நபனமும் செய்யவேண்டும்.

121. பிராம்மணர்களை சாப்பிடச் செய்து, பிறகு சிவமதத்தைத் தழுவியவர்களையும் சாப்பிடச் செய்ய வேண்டும். ஈஸ்வரனுக்கு மஹாநிவேதனம் செய்து தாம்பூலத்தையும் கொடுக்க வேண்டும்.

122. நடுநிசியில் கிராமத்திலாவது, நகரத்திலாவது, பருப்பு, பொங்கல், பாயாசம் சக்கரைப் பொங்கல் இவைகளை வாழைப்பழத்துடன் சேர்த்து பலிதானம் செய்யவேண்டும்.

123. எல்லா தோஷமும் நீங்க இவ்விதம் ஏழுநாள் செய்ய வேண்டும். ஆசார்யரை தினந்தோறும் தங்கம், வஸ்த்ரம் முதலியவைகளால் பூஜிக்கவேண்டும்.

124. முடிவில் ஸ்நபனம் செய்யவேண்டும். மஹா ஹவிர் நிவேதனமும் கொடுக்க வேண்டும். எல்லா அவயங்களும் அழிந்திருந்தால் மறுபடியும் புதிதான பிம்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

125. ஸ்வாம்புவம் முதலிய லிங்கங்கள் பழுதடைந்தபொழுது எல்லா லக்ஷ்ணங்களோடு கூடிந்தாலும் அல்பதோஷமாக இருந்தால் சாந்திகர்மா சொல்லப்பட்டுள்ளது.

126. ஆலயத்தின் விஸ்தாரத்தில் ஆறு மாத்திராங்குலம் கூட குறைந்து இருப்பின் உயரத்தில் பன்னிரண்டு மாத்ரத்தினாலும் வரையிலும் இதில் ஒரு அங்குலம் கூட குறைவு இருப்பின் குற்றம்.

127. ஸ்தலத்தில் இரண்டு மாத்ராங்குலம் கம்பம் முதலிய அங்கங்களில் மாத்திராங்குலம் கிராம அமைப்பு, நகர அமைப்பு முதலியவைகள் தண்டம் வரையிலும் அளவு கூறப்பட்டுள்ளது.

128. சாலா ரூபமான ஆலயங்களிலோ லிங்கத்தின் அளவில் ஓர் முழம் அளவு வரையும் யவை அளவு முதல் மாத்திராங்குல அளவு வரையிலுமோ பூஜையில் பீடத்தை ஏற்படுத்தவேண்டும்.

129. வாயில்படி முதலிய அங்கங்களின் மாத்திராங்குல அளவிலும், பிரும்ம சூத்திரம் கோமுகம் நுனியும் மாத்திராங்குல அளவிலாகும். லிங்கத்திற்கு முன்பாக அந்த அளவும் முறையும் செய்யவும். இது பொருத்துக்கொள்ளக்கூடிய அளவாகும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் அனுகர்ம விதியாகிற முப்பத்திரண்டாவது படலமாகும்.

படலம் 30: அத்புத சாந்தி விதி...

 படலம் 30: அத்புத சாந்தி விதி...

இந்த படலத்தில் முதலில் அபூர்வமாய் இருக்கக் கூடிய விஷயத்தில் எல்லா விதமான கேடுகளையும் போக்கடிக்கக் கூடிய பரிகாரத்தை கூறுகிறேன் என்பது பிரமாணம். இரவில் சூர்யனை காண்பதும். அமாவாசையில் சந்திரன் உதயத்தை காண்பதும் பூகம்பம் ஏற்பட்டாலும் ஆலய மண்டபங்கள் சுற்றுவதிலும் நதி, குளம், கிணறு, இவைகள் வறட்சியும் சிலை அழுவதிலும் பிரதிமைகள் உண்டாவதிலும் ரத்தம் கொட்டுவதிலும் தேன், பால், நெய் மழையிலும், மண், எண்ணை, கல் மாம்சம் கொட்டுவதிலும் லிங்கம் பிம்பம் மரங்களில் இருந்து ரத்தங்கள் உண்டாவதும் எதிர்பாராத விதமாக கோயில் விழுவதிலும், ஸ்தூபி முதலியவைகள் அவயவங்கள் சேதனம் அடைவதிலும், நாசி, தலை, முதலியவைகள் குறைவு ஏற்படக்கூடிய காலத்திலும், கோயில் நடுவே இருக்கக் கூடிய தேவதைகளுக்கு பின்னம் ஏற்பட்டாலும் மண்டபங்கள் விழுந்தால் லிங்கம் முதலியவைகள் உள்ள கோயில் வேறு இடத்தை அடைந்தாலும் மரம் வேறுடன் அனுபட்டால், ஓர் மரத்தில் மற்றொரு மரத்தின் பூக்களோ பழங்களோ உண்டானால் லிங்கத்தில் பிம்பத்தில், பீடத்தில் உஷ்ணங்கள் உண்டானால் மனுஷ்யன், மிருகம் பசு, பட்சி, பாம்புகள் இவைகளில் அந்தந்த ஜாதிக்குவேறு சந்ததிகள் உண்டானால், பல தலைகள், கைகள், கால்கள், மூக்குகள், முதலிய சரீரம் உண்டானால் தன்னுடைய வர்ணத்திற்கு இதர வர்ணங்களில் உருவம் விகாரங்களினால் ஏற்பட்டு இருந்தாலும், தெளிவான வர்ணங்கள் இல்லாததான குதிரைகள் உண்டாவதினாலும், பர்வதங்களுக்குள் சண்டை ஏற்பட்டாலும் லிங்கத்தில் பிம்பத்தில் பீடத்திலோ துக்கம் ஏற்பட்டாலோ லிங்கம் விமானம் மண்டபம் கோபுரங்களில் பரிவார ஆலயங்களில் சாலைகள் ஆஸ்தானமண்டபங்கள் சபைகளில் இடி விழுந்தாலோ, அரண்மனை குளுமையான அரசமரம், முதலியவைகளில் இடி விழுந்தாலோ, யானைக்கு மதம் பிடித்தாலோ, சூறாவளி காற்று அடித்தாலோ எதிர்பாராத விதமாக நெருப்பில் புகை உண்டானாலோ லிங்கம் பிம்பம் ஆசனம் இவைகளில் புகையை கண்டாலோ லிங்கத்தில் பேரத்தில், பீடத்தில் வெளுத்திருந்தாலோ (வேறுநிறங்கள் தோன்றினாலோ) பேரீ முதலியவைகளில் தானாக சப்தம் உண்டானாலோ, சூர்யனுக்குள் சூர்யன் தெரிந்தாலோ, சந்திரனுக்குள் சந்திரன் தெரிந்தாலோ இரவில் வானவில் தெரிந்தாலும், பகலில் நட்சத்திரம் தெரிந்தாலும் நஷத்திரங்கள் வீடுகளில் விழுந்தாலும், அக்னி நட்சத்திரங்கள், விழுந்தாலும், சந்திரன், சூர்யன் மண்டலத்தில் 5 நாளுக்கு மேல் கோட்டை கட்டிருந்தாலோ திக்குகளில் தீ பிடித்தாலோ லிங்கத்தில் பூஜை செய்த புஷ்பங்கள் வேறு நிறம் ஏற்பட்டாலோ எதிர்பாராத விதமாக குளிர்ந்த மரம் விழுந்தாலும், எதிர்பாராத விதமாக வெட்டுப்பூச்சிகள் ஏற்பட்டாலும் மனுஷ்யன் மிருகம் பசு பட்சி.

பாம்புகளுக்கு பைத்யம் பிடித்தாலோ எதிர்பாராத விதமாக யானை, குதிரை இறந்தாலோ, எதிர்பாராத விதமாக மழை பெய்தாலும், எதிர்பாராத விதமாக ராஜாவினுடைய பிரதான மனைவி, குதிரை, யானை பிரதான குரு, இவர்களுக்கு மரணம் ஏற்பட்டாலோ கோயில் மண்டபங்கள் பிராகாரம், கோபுரங்கள் பரிவார ஆலயத்திற்கு மேல் அரண்மனைக்கு மேல் பீடங்கள் பிம்பங்கள் முதலியவைகளில் நாய் ஏறினாலும், அழுதாலும், பூனைகள் அழுதாலும் இவைகளில் ஸ்திரீநரி ஏறினாலும் குதிரை லாயத்தில் நெருப்பு ஏற்பட்டாலும், லிங்கத்தில் பீடத்தில் பிம்பங்களில் ஏறினாலும் லிங்கத்தின் அடியில் பீடத்தில் பிம்பத்தில் கர்பக்கிரகத்தில் பரிவாரத்தில் தேன் கூடு கட்டினாலும், தானாகவே கதவு சாத்திக் கொண்டாலும், சூர்யன் அஸ்தமனத்திற்கு பிறகும் சூர்ய உதயத்திற்கு முன்பும் ஆகாசத்தில் பலவிதமான வெள்ளை, சிவப்பு வர்ணங்களில் நீல வாலுடன் நட்சத்திரங்களை போல தூம கேதுகள் சஞ்சரித்தாலும் அபூர்வமான கார்யங்கள் பார்ப்பதினாலும் உண்டான மற்ற இடையூறுகளையும் கண்டு அதற்காக நீக்குவதன் பொருட்டு கூறப்பட்ட பிராயசித்த கார்யங்கள் தனித்தனியாக நிரூபணம் காணப்படுகிறது.

1. சகல விதமான துன்பங்களையும் போக்கக் கூடிய பரிஹாரத்தை கூறுகிறேன். இரவில் சூர்யனைக் காண்பதால் வேற்று ராஜாக்களின் பயம் உண்டாகும்.

2. பிராம்மண போஜனத்துடன் கூடிய பரிஹாரத்தை செய்ய வேண்டும். அமாவாஸ்யை அன்று சந்திரன் உதயமானால் வேறு ராஜா உண்டாவான்.

3. முன்புபோல் மத்யம பக்ஷத்திலோ அதம பக்ஷத்திலோ பரிஹாரம் செய்ய வேண்டும், பூகம்பம் ஏற்பட்டால் நிச்சயம் அரசனுக்கு கெடுதி உண்டாகும்.

4. தேன், பால் இவைகளினால் ஆயிரம் மரக்காலோ அதில் பாதியோ அதிலும் பாதியோ நூறு படியோ அதில் அரை பாகமோ

5. மூன்று, ஏழு நாட்களோ, இருபத்தி ஒன்று நாட்களோ, பதினான்கு நாட்களோ நெய், தேன்களால் அபிஷேக விதியில் கூறப்பட்டுள்ள உத்தமமான முறையினால் சிவனிடத்தில் அபிஷேகம் செய்ய வேண்டும்.

6. பிரகாரம், மண்டபங்கள் தானாகவே சுற்றுவதானாலும் இதே போல் செய்ய வேண்டும். நதி, குளம் குட்டை முதலியவைகள் காய்ந்து போகுமானால் துர்பிக்ஷம் உண்டாகும்.

7. அதன் கரையில் மண்டபம் நிர்மாணித்து ஸ்தண்டிலத்தில் சிவனையும் வர்த்தனி கும்பத்தில் அம்பிகையையும் சுற்றி எட்டு கும்பங்களை

8. தங்கப் பிரதிமைகளோடும் நூல் சுற்றப்பட்டும் வஸ்திரங்களோடு கூடியதாக உள்ள கும்பங்களில் கன்னிகையோடு ஏழு தீர்த்தங்களை (கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, ஸரஸ்வதி, ஸிந்து, காவேரி) சந்தனம் புஷ்பங்களால் பூஜித்து திசாஹோமம் செய்யவேண்டும்.

9. நதி, குளங்களில் கும்ப ஜலத்தை சேர்க்க வேண்டும். ஐந்து தினங்கள் இதுபோல் செய்ய வேண்டும். பிரதிமைகள் துக்கப்படுவதினால் வேர்வை ஏற்பட்டாலும் அரசனுக்கு மரணம் உண்டாகும்.

10. எல்லா உயிர்களுக்கும் உடனே அழிவு ஏற்படும். ஆகையால் உடனே பரிஹாரம் செய்ய வேண்டும். பிரதிமா சுத்தியை செய்து உத்தமமான சாந்தியை செய்ய வேண்டும்.

11. பிராம்மண போஜனமும் சாந்தி ஹோமமும் தினமும் செய்ய வேண்டும். எவ்வளவு நிதிநிலைமையால் முடியுமோ அந்த நிலையில் அதன் கடைசியில் உத்ஸவம் செய்ய வேண்டும்.

12. ரத்த மழை வர்ஷித்தால் எல்லாப் பிராணிகளுக்கும் அழிவு ஏற்படும். மண்டப பிரகாரங்களில் ரத்தம் விழுந்திருக்கும் இடங்களை அலம்பி விட வேண்டும்.

13. பசும்சாணத்தால்மெழுகி வாஸ்து சாந்தி புண்யாகவாசனம் செய்து தேன் முதலியவைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

14. பூகம்பம் ஏற்பட்ட காலத்தில் கூறியுள்ளபடி ஏழு நாட்களோ அல்லது பதினான்கு அல்லது இருபத்தியோரு தினங்களிலோ சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

15. தேன், பால், நெய் ஆகிய மழைகளினால் அரசாங்கத்திற்கு கெடுதல் உண்டாகும். மண், கல், மாம்ஸம் முதலியவைகளாலோ மழைபொலியுமானால் துன்பம் உண்டாகும்.

16. அந்தந்த திரவ்யங்களினால் அபிஷேகம் செய்ய வேண்டும். பூகம்பத்திற்கு கூறியபடி நிறைவான அதிகமான நைவேத்யத்துடன் சிவனை பூஜித்து

17. பிறகு சைவர்களுக்கு ஏழுதினங்கள் நன்கு போஜனம் செய்விக்கவேண்டும். உலகத்தில் மண் மழை முதலிய மழை பெய்தால் ஸ்நபனத்துடன் பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

18. சிவலிங்கம், மூர்த்திகள், மரங்களிவைகளில் ரத்தம் உண்டானால் சந்தனம் புஷ்பம் முதலியவைகளினால் இரண்டு வஸ்திரங்களினால் கட்ட வேண்டும்.

19. பிறகு சைவர்களுக்கு போஜனம் செய்வித்து திசாஹோமத்தை செய்ய வேண்டும். வேறு அரசரிடமிருந்து பயத்தை அறிந்து அது நீங்குவதன் பொருட்டு

20. லிங்கம், மூர்த்தி மரம் முதலியவைகளின் அங்கங்களை அஸ்திர மந்திரத்தால் சுத்தம் செய்ய வேண்டும், வாஸ்து சாந்தி செய்து ஸ்நபன பூஜை செய்து அபிஷேகம் சிவனுக்கு செய்ய வேண்டும்.

21. சாந்தி கர்மாவிற்கு கூறப்பட்ட தினங்களை அனுசரித்து பிராயச்சித்தம் செய்ய வேண்டும். எதிர்பாராதவகையில் அடித்தளத்திலிருந்து ஸ்தூபி வரையிலாக ஆலயம் விழுந்து விட்டால்

22. அதனால் அரசனுக்கு கெடுதி எனப்படும். மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும். நித்யம் சிவனுக்கு இயன்ற வரையில் ஸ்நபனாபிஷேகம் செய்ய வேண்டும்.

23. சாந்தி ஹோம கணக்குப்படி செய்ய வேண்டும். அனுகர்ம முறைப்படி முதல் அஸ்திவார கல் வைக்கும் நிகழ்ச்சி முதலானதாக செய்ய வேண்டும்.

24. முக்கால், பாதி, கால்பாதி அதற்கு குறை ராகவோ கட்டிடம், பிளவு ஏற்பட்டால் ஏழு, ஐந்து, ஆறு, நான்கு நாட்களில் சமப்படுத்துதல் வேண்டும்.

25. மங்களத்தை விரும்பக் கூடியவர்கள் முன் கூறிய பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும். ஸ்தூபி முதலியவைகள் உடைந்துவிட்டால் முன்பு கூறியபடி ஒரே தினத்தில் செய்ய வேண்டும்.

26. விமானத்தில் நாஸிகம் முதலிய அங்கங்கள் நாசமானால் நன்கு முன்போலவே செய்ய வேண்டும், எதிர்பாராது விழுந்து ஆலயத்தின் பின்னமான திசைகளை அனுசரித்து பலன் ஏற்படும்.

27. முன்கூறியபடி பிராயச்சித்தம் அதுபோலவே செய்ய வேண்டும். ஆலயத்திற்கு உள்ளே இருக்கும் தேவதைகளுக்கு பிளவு குறைவு முதலியவை ஏற்பட்டால்

28. குருவானவர் அப்பொழுது அனுகர்ம விதியில் கூறப்பட்ட கார்யத்தை செய்ய வேண்டும். மண்டபங்கள் விழுந்து விட்டால் ஓர் நாள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

29. லிங்கத்தோடு கோயில் வேறு இடத்தை அடைந்தால் அரசனுக்கு கெடுதல் ஏற்படும். ஆகையினால் தேசிகோத்தமர் (ஆசார்யன்)

30. ஈசனை சந்தன புஷ்பங்களால் பூஜித்து உத்தமமான சாந்தியை செய்ய வேண்டும். சைவ பிராம்மணர்களின் சாப்பாட்டுடன்

31. முன்பு இருந்த அளவுக்கு ஸமமாக வேறு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பிரகாரத்தோடு கூடிய பாண லிங்கம் முதலியவைகளை ஸ்தாபிக்க வேண்டும்.

32. அல்லது முன்பு இருந்த லிங்கம் இருந்தால் பிரகாரத்தோடு கூடியதாக முன்பு இருந்த இடத்தில் அனுகர்ம விதிப்படி சமமாக நடத்த வேண்டும்.

33. பிரகாரம் மட்டும் குறைவானால் முன்பு இருந்த இடத்திலே செய்ய வேண்டும். வேறு இடத்தை அடைந்த லிங்கத்தை வடக்குப் பகுதியிலோ கிழக்கிலோ வைக்க வேண்டும்.

34. அனுகர்ம முறைப்படி அந்த இடத்திலே கோயிலை கட்ட வேண்டும். ஸ்தல விருக்ஷம் வேறு இடத்தை அடைந்தால் பயிர் நாசம் உண்டாகும்.

35. ஸ்தல மரத்தின் ஜாதியில் உண்டான ஸமித்துக்களினால் மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும். சைவர்களின் போஜனத்துடன் ஒன்பது நாட்கள் மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.

36. ஸ்தல விருக்ஷத்தின் ஸமீபத்தில் இருக்கின்ற ஸ்வயம்பு முதலிய லிங்கத்தில் தினந்தோறும் ஸ்நபன பூஜை அபிஷேகம் அதிகமான நைவேத்யத்துடன் பாவாடை போடுதல் செய்ய வேண்டும்.

37. அந்த ஜாதியில் உண்டான வேறான மரத்தை முன்பு ஸ்தல வ்ருக்ஷம் இருந்த இடத்தில் ஸ்தாபிக்கவும். ஓர் மரத்தில் வேறு புஷ்பம் உண்டானாலும், வேறு பழங்கள் உண்டானாலும்

38. ஸ்தல விருக்ஷத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பூ, பழம் உண்டானால் ஐந்து ஏழு ஒன்பது தினங்கள் சாந்தி பரிஹாரம் செய்ய வேண்டும்.

39. ஸ்தல விருக்ஷத்தின் அடியில், ஆசார்யன் தினந்தோறும் சாந்தி ஹோமம் செய்யவேண்டும். சிவலிங்கம், சகள பிம்பம், பீடம் இவைகளில் உஷ்ணம் ஏற்பட்டால்

40. எல்லா மனிதர்களும் ஜ்வரத்தினால் பீடிக்கப்பட்டு கட்டாயம் நாசம் அடைவார்கள். ஸ்நபன பூஜையில் கூறியுள்ளபடி சந்தன குழம்பு இளநீர் இவைகளை வைத்து

41. பஞ்சாம்ருதத்தோடு கூடியதாக பரமேஸ்வரனை அபிஷேகம் செய்ய வேண்டும். அல்லது பால், தேன், நெய் இவைகளை இரண்டு மரக்கால் அளவு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.    

42. ஆயிரம் முதல் நான்கு வரை அளவுள்ள மரக்கால் முதலிய அளவுகளால் சந்தனம் அகில் பச்சைகற்பூரம் குங்குமப்பூ முதலியவைகளுடன் கூடி

43. சந்தனம் நிறைய கலந்து பூசி அதிகமான புஷ்பங்களை கொண்டும் பூஜிக்க வேண்டும், எவ்வளவு காலத்தில் சூடு உஷ்ணம் குறைகின்றதோ அவ்வளவு காலம் திசாஹோமம் செய்ய வேண்டும்.

44. அமைதியை விரும்பும் மனுஷ்யர்கள் சீத கும்பத்தை செய்ய வேண்டும். மனுஷ்யர்கள், மிருகங்கள், பசுக்கள் பக்ஷிகள் பாம்புகள்

45. வேறு இனத்தில் உற்பத்தியானால் உலகத்தில் கலக்கம் உண்டாகும். அநேகம் தலை, கைகள், பாதங்கள், மூக்கு தேகம் உடையதுகளாய்

46. தன்னுடைய வர்ணம் இல்லாததும் புருவம் முதலியவைகள் வேற்றுருவம் உள்ளதாகவும் நன்கு வெளிப்படுத்தக்கூடிய நிறங்கள் இல்லாததாகவுமாக குதிரைகள் உண்டானால்

47. அப்படி உண்டானவைகளை விட்டு விட்டு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். முறைப்படி சிவனை பூஜித்து திசா ஹோமம் செய்ய வேண்டும்.

48. சைவர்களை நன்கு பூஜித்து முறைப்படி சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். ஐந்து நாள், ஏழுநாள் இந்த பிரகாரம் சைவர்களுக்கு போஜனம் செய்விக்க வேண்டும்.

49. பசு, யானை, குதிரைகளின் பிராயச்சித்தம் ஏற்படுமானால் அதன் இருப்பிடத்தில் தினந்தோறும் வாஸ்து பலி, சாந்தி ஹோமம் பைரவ ஹோமமும் செய்ய வேண்டும்.

50. மலைகளின் சண்டையோ தேசத்தில் யுத்த பயமோ ஏற்பட்டால் முறைப்படி சிவனை பூஜித்து திசா ஹோமம் செய்ய வேண்டும்.

51. ஏழுதினம், ஒன்பது தினம் பரமேஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். லிங்கத்திலோ பிம்பத்திலோ பீடத்திலோ வியர்வை ஏற்பட்டால் ராஜபயம் ஏற்படும்.

52. அஸ்திர மந்திரத்தினால் ஜபித்த ஜலத்தினால் அலம்பி ஏழுதி தினம் சாந்தி செய்ய வேண்டும். லிங்கத்தில் பிம்பத்தில் விமானத்தில் மண்டபத்தில் கோபுரங்களில்

52.5. பரிவார ஆலயத்தில் பிரகாரத்தில் தேவரின் ஆஸ்தான மண்டபத்தில் மற்றும்

53. சபைகளில் இடிவிழுந்தால் அரசனுக்கு வியாதி ஏற்படும் என கூறப்படுகிறது. ஒன்பது வகையினாலான சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.

54. அவ்வாறே லிங்கபீடத்திலோ பிம்பத்திலோ இடிவிழுந்தால் திசா ஹோமம் செய்து மஹா ஸ்நபனத்தோடு திசா ஹோமம் செய்ய வேண்டும்.

55. நூற்றி எட்டு கலச ஸ்நபனம், பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யத்தோடு, தேன், பால், நெய் இவைகளோடு

56. ஆயிரம் முதல் நான்கு வரையில் மரக்கால் அளவு ஈசனை அபிஷேகம் செய்து, பிராம்மண போஜனம் சாந்தி ஹோமம் செய்து அர்ச்சிக்க வேண்டும்.

57. இவ்வாறாக ஏழுதினம் செய்து முடிவில் உத்ஸவம் செய்ய வேண்டும். பிரகாரம் முழுமையும் இடிந்து விட்டால் முன் போலவே பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

58. எதிர்பாராத நிலையில் கோயில் விழுமானால் முன்பு எவ்விதம் கூறப்பட்டுள்ளதோ அதன்படியே பிராயச்சித்தம் செய்யவேண்டும், ஆதிசைவர்களே! மண்டபங்களின் பிராயச்சித்தமும் அவ்வாறே செய்ய வேண்டும்.

59. தினந்தோறும் சைவ சாஸ்திரங்களை அறிந்த சைவர்களை நன்கு போஜனம் செய்விக்க வேண்டும், அரச அரண்மனை விழுமானால் ஆலயத்தின் பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும்.

60. நிழல் தரும் மரங்கள், அரச மரம் மற்ற தைவீக மரங்கள் விழுமேயானால் ஏழு தினங்கள் சாந்தி மஹா சாந்தியும் செய்ய வேண்டும்.

61. அந்த மரத்தின் முன்னால் தினந்தோறும் சாந்தி ஹோமம் செய்து அவ்விடத்திலேயே அதன் சமீபத்திலோ அந்த ஜாதி மரத்தை நட வேண்டும்.

62. வீட்டிலோ, கிணற்றிலோ, குளத்திலோ, சாந்தியை ஒருநாள் செய்யவும், யானையானது மதத்தோடு கூடினாலோ வாகனங்களின் நாசம் ஏற்படும்.

63. அந்த வீட்டில் ஏழுநாள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். பெருங்காற்று உண்டானால் அரசுக்கு கெடுதி உண்டாகும்.

64. ஓர் நாளோ மூன்று நாளோ ஐந்து நாளோ சாந்தி ஹோமம் செய்ய வேண்டும், அக்னியிலிருந்து புகை உண்டானால் யஜமானருக்கு பயம் ஏற்படும்.

65. பஞ்ச கவ்யத்தினால் அங்கு பிரோக்ஷணம் செய்து பூமியை தோண்டி நல்ல மண்ணிலோ ஐந்து வகை மண்ணிணாலோ பூச வேண்டும்.

66. அங்கு புண்யாஹவாசனம் செய்து பிராம்மணர்களுக்கு போஜனம் செய்விக்க வேண்டும். ஒன்பது வகையான சாந்தி ஹோமங்களை செய்ய வேண்டும்.

67. லிங்கம், பிம்பம், ஆசனம் இவைகளில் புகை காணப்பட்டால் முன்பு கூறியபடி பிராயச்சித்தம் செய்யவும். ஆயிரம் மரக்காலோ, அதில் பாதி அளவாலோ பாலபிஷேகம் சிவனுக்கு செய்ய வேண்டும்.

68. அதில் பாதியோ, அதிலும் பாதி அளவோ செய்து அதன் முடிவில் சீத கும்பம் வைக்க வேண்டும், லிங்கம், பிம்பம் பீடம் முதலியவைகள் நிறம் வேறுபாட்டை அடைந்தால்

69. அரசனுக்கு வியாதி என்பதை அறிய வேண்டும். சுத்தமாக அலம்பி, அரிசிமாவு, மண், வில்வம், தர்ப்பங்கள், மஞ்சள்பொடி, நெல்லி முல்லி ஜலத்தினால் அலம்ப வேண்டும்.

70. இதுபோல் உத்தம, மத்யம அதிமமாக சாந்தி செய்ய வேண்டும். சந்தனம், விளாமிச்ச வேர், பச்சகற்பூரம், குங்குமப்பூ அகிலோடு கூடியதாக

71. நிறைந்த சந்தனத்தை சேர்த்து சிரத்தையுடன் சந்தனத்தைப் பூச வேண்டும். சந்தன புஷ்பங்களால் நன்கு பூஜித்து பாபம் இல்லாத் தன்மையை வேண்ட வேண்டும்.

72. சைவர்கள், ஸாமான்யர்களான பிராம்மணர்களுக்கும் நித்யம் போஜனம் செய்விக்க வேண்டும். தானாகவே பேரி சப்தம் ஏற்படுமானால் வைசூரி உண்டாகும்.

73. அஸ்திர மந்திரத்துடன் கூடிய தீர்த்தத்தால் பேரீ முதலியவைகளை பிரோக்ஷித்து சந்தன புஷ்பங்களால் பூஜித்து சாந்தி செய்து தேவதேவனை ஆராதிக்க வேண்டும்.

74. தினமும் (ஒவ்வொரு) சூர்யோதய சமயத்தில் சந்திரனை தர்சித்தல் என்பது எந்த ராஜ்யத்தில் ஏற்படுகின்றனவோ அந்த தேசத்தில் வேறு அரசன் உண்டாவான்.

75. ஒன்பது நாட்கள் முதல் ஒரு ராத்ரி முடிய சாந்தி ஹோமம் செய்ய வேண்டும், இரவில் வானவில் தெரிந்தால் வேறு அரசனால் பயம் உண்டாகும்.

76. சுக்ரன் முதலாஜ க்ரஹங்கள் இடம் விட்டு மாறியும் பகலில் நட்சத்திரத்தை கண்டாலும் க்ருஹ நட்சத்திரங்கள் விழுந்தாலும் உலகத்தில் மழை பெய்யாதன்மை உண்டாகும்.

77. வாஹனங்களுக்கு நாசம் ஏற்படும், அதற்கு சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

78. ஒன்பது நாள் முதல் ஓர் இரவு முடிய சக்தியை அனுசரித்து சாந்தி செய்ய வேண்டும். அக்னி நட்சத்திரம் விழுந்தால் அகோர மந்திரத்தை முன்னூறு ஆவ்ருத்தி ஜபம் செய்ய வேண்டும்.

79. ஆறு ஏழு தினங்களுக்கு மேல் இடி விழுந்து கொண்டு இருக்குமானால் அரசுக்கு கெடுதல் உண்டாகும், அதற்காக திசாஹோமம் செய்ய வேண்டும்.

79. ஏழுதினங்கள் ஐந்து தினங்கள் இடி விழுந்ததின எண்ணிக்கை தினங்களில்

80. ராஜ்யத்தின் கெடுதல் போவதற்கு ஸ்நபனத்தோடு திசாஹோமம் செய்ய வேண்டும். ஏழு தினங்கள் இடி விழுந்தால் பால் முதலியவைகளினால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

81. சந்திரன் சூர்யனைச் சுற்றி ஐந்து தினங்கள் கோட்டை கட்டினால் அரசன் சத்ருக்களினால் ஜெயிக்கப்படுவான்.

82. உத்தம, மத்யமம் முதலான பட்சத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும், நெருப்பு பற்றி திக்குகளில் எரியுமானால் உலகத்தில் துர்பிக்ஷமி உண்டாகும்.

83. ஸ்நபன பூஜை செய்து ஈச்வரனுக்கு பால் அபிஷேகம் நடத்த வேண்டும், அதன் முடிவில் சாந்தி ஹோமம் ஐந்து நாட்கள் செய்ய வேண்டும்.

84. லிங்கம் முதலியவைகளுக்கு அர்ச்சித்த சந்தனம், புஷ்பம், நிறம் மாறுதல் அடைந்தால் எல்லா வர்ணத்தாருக்கும் வைசூரி ஏற்படும்.

85. சிவனை முறைப்படி பூஜித்து ஹோமம் செய்ய வேண்டும், மூன்று தினமோ ஐந்து தினமோ அதிகமான ஹவிஸை நிவேதனம் செய்ய வேண்டும்.

86. எதேச்சையாக போதி மரங்கள் குளிர்ந்த மரங்கள் வேருடன் விழுந்தால் அரசனுக்கு மரணத்தை அறிவிக்கும் வ்யாதி ஏற்படும் என்று அறிய வேண்டும்.

87. உத்தமான சாந்தி ஹோமத்தை செய்து முறைப்படி சிவனைப் பூஜிக்கவும். எந்த இடத்தில் மரம் விழுந்ததோ அந்த இடத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

88. அதன் பக்கத்திலோ அதே இடத்திலோ அதே மரத்தை வைத்து வளர்க்க வேண்டும், அதன் கிளைகள் கீழே விழுந்தால் அரசாங்க குழப்பம் ஏற்படும்.

89. முக்கியமான கிளை உடைந்தால் சாந்தி ஹோமம். நடுக்கிளை உடைந்தால் திசாஹோமமும் செய்ய வேண்டும். ஒரு கிளை உடைந்தால் பூவுலகில் கலகம் ஏற்படும்.

90. உத்தமம், அதமமாக சாந்தி செய்ய வேண்டும். சாந்தி ஹோமம் உத்தம, மத்யம, அதமம் என்று மூன்று வகைகளாகும். பதினான்குநாள் ஒன்பது நாள் ஏழுநாள், ஐந்து நாள், மூன்று நாள் இவ்வாறாக செய்யலாம்.

91. பெரியோர்களே, மூன்று பக்ஷமாக சாந்தியை மட்டும் செய்யலாம். இதே போல மற்ற முக்கியமான மரங்களுக்கும் செய்ய வேண்டும்.

92. விளக்குவெட்டு பூச்சி முதலியவைகள் உண்டானால் உலகத்தில் துர்பிக்ஷ்ம் உண்டாக்கும். சைவர்களுக்கு சாப்பாட்டோடு மூன்று, ஏழுநாள் மூர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.

93. மனுஷ்யர்கள், மிருகங்கள், பசுக்கள், பாம்புகள் இவைகள் பைத்தியங்களாக ஆனால் மூன்று, ஏழுநாட்கள் திசாஹோமம் செய்ய வேண்டும்.

94. யானை, குதிரைக்கு மரணம் ஏற்பட்டால் திசா ஹோமம் மூன்று நாள் செய்ய வேண்டும். அதிக மழை ஏற்பட்டாலும் துர்பிக்ஷம் பூமியில் உண்டாகும்.

95. ஸத்துமாவு ஆயிரம் மரக்கால் எண்ணிக்கையாகவும் அவ்வாறே மஞ்சள் பொடியும் ஆயிரம் மரக்கால் அளவாகவும் அல்லது ஐநூறு இருநூற்றி ஐம்பது அல்லது நூறு மரக்கால் அல்லது ஐம்பது மரக்கால் அளவாகவும்

96. அதில் பாதியோ ஸ்நபன முறைப்படி ஈச்வரனை அபிஷேகம் செய்து மஞ்சளை அரைத்து பச்சை கற்பூரத்தோடு செய்து

97. ஆறு, நான்கு, மூன்று பங்கு அளவு ஆவுடையாரை சுற்றி அல்லது பிம்பத்திலோ சுற்றி அகில் பூசி பச்சைக் கற்பூரம் திரி இவைகளால் பல தீபங்களால் அலங்கரித்து

98. பிறகு வெண் பொங்கல் நிவேதித்து சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். மூன்று ஏழுதினங்களிலோ இதுபோல் செய்ய வேண்டும்.

99. ராஜா, ராணி முக்கிய யானை குதிரை குரு புரோஹிதர் இவர்கள் இறந்தால் ராஜாவுக்கு துன்பம் உண்டாகும்.

100. சாந்தி ஹோமம் ஏழுநாள் செய்து ஈச்வரனை பூஜிக்க வேண்டும். மூன்று ஜந்து தினங்கள் யானை, குதிரை இறந்தால் சாந்தி செய்யவேண்டும்.

101. ம்ருத்யுவை ஜயிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை ஜபம் செய்து அந்த தீர்த்தத்தால் அரசனுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும்.

102. மீதி தீர்த்தத்தை நீண்ட ஆயுளை விரும்புபவர்க்கு குளிக்கவும், பருகவும் அளிக்கவும். தினந்தோறும் தேவதேவனின் பிரசாதமான ஹோமரøக்ஷயை கொடுக்க வேண்டும்.

103. சைவ சித்தாந்தத்தை கரை கண்ட ஆசார்யர்களால் விபூதி கொண்டு வரப்பட வேண்டும், சிறந்த அரசன் ஏழு தினங்களுக்குள் மேலே கூறப்பட்ட ஆசார்யனை வரிக்க வேண்டும்.

104. குரு, புரோஹிதர் அடுத்து ராணி இவர்களும் யானை குதிரை இவைகளை ராஜாங்கமாக கொண்டு வரப்பட வேண்டும்.

105. கோயிலிலோ, மண்டபம் முதலியவைகளிலோ பிரகாரம் கோபுரம் அல்லது பரிவார ஆலயத்தின் மேலோ ராஜாவின் அரண்மனையிலோ

106. வீடுகளிலோ, வெளி மாடிகளிலோ நாய் அல்லது பூனை முதலியவைகள் அழுதாலோ, ஏறினாலோ

107. இதனால் மனிதர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். அதன் நிவ்ருத்திக்கு, அதை விரட்டி அடித்து பிறகு புண்யாக வாசனம் செய்ய வேண்டும்.

108. நாய் ஏறினாலோ அழுதாலோ சாந்தி ஹோமத்தையும், பூனை அழுதால் சாந்தி ஹோமத்தையோ அகோர மந்திரத்தை ஜபமோ செய்ய வேண்டும்.

109. நரி ஏறினால் விசேஷமாக சாந்தி செய்யவும், குதிரை லாயத்தில் நெருப்பு உண்டானால் ஏழுநாள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

110. லிங்கத்திலோ பீடத்திலோ மற்ற தெய்வ விக்ரஹங்களிலோ மின்மினி பூச்சி ஏறினால் அரசனிடமோ அல்லது பட்டமஹிஷிகளிடமோ மற்ற புருஷர்களின் மேல் மின்மினி பூச்சி ஏறினால்

111. அவர்கள் எல்லோருக்கும் வியாதி தோஷமேற்படும். தேவனிடமோவெனில் அரசனுக்கு தோஷமேற்படும். அந்த மின்மினிபூச்சிகளை அடித்து விட்டு, மேற்கூறிய மூர்த்தங்களை அபிஷேகித்து சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

112. பரமேஸ்வரனுக்கு ஸ்நபனத்தை ஒருநாள் அல்லது மூன்று நாள் செய்ய வேண்டும், அரசன் விஷயத்திலும் மனிதர் விஷயத்திலும் அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

113. லிங்கத்தின் அடியிலோ, பீடத்திலோ பிம்பத்திலோ கருவறையிலோ பரிவார பிம்பத்திலோ பிராணிகள் வந்தாலும், வண்டுக்கள் ஈக்கள்

114. அதிகமாக ஏற்பட்டாலும் பூமிக்கு கலக்கம் ஏற்படும், இந்த குற்றத்தைப் போக்க இடத்தை சுத்தி செய்து அஷ்டபந்தனம் முதலியவைகளால் சரிசெய்து உறுதியானதாக ஆக்க வேண்டும்.

115. புண்யாக வாசனம் செய்து முடிவில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். கதவை திறப்பதும் சாத்துவதும் தானாகவே

116. ஏற்படுமானால் அரசுக்கு தீமை ஏற்படும், அது நிவ்ருத்தியாவதற்கு ஏழு தினங்கள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். ஆகாயத்தில் பலவிதமான கொடிகள் பறப்பதுபோல் தெரிந்தால்

117. ஸூர்யாஸ்தமனத்திலோ அல்லது உதயத்திற்கு முன்போ வெள்ளை, சிவப்பு வர்ண நட்சத்திர பிரகாசம் போல் தெரியுமானாலும்

118. வால் நட்சத்திரம் போன்றவைகள் தெரியுமானாலும் அரசுக்கு பெரிய பயம் ஏற்படும். உத்தம, மத்யம, அதம பட்சத்தில் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் அத்புத சாந்தி விதியாகிற முப்பத்தியொன்றாவது படலமாகும்.

படலம் 29: பிராயச்சித்த விதி...

படலம் 29: பிராயச்சித்த விதி...

601. யானை, நாய், மனிதன், பெண், ஒட்டகம், எருமை, கழுதை, எருது இவைகளைக் கொன்றால் உபவ்ரதத்தைச் செய்ய வேண்டும். அவைகளைத் திருடினால் முன் கூறியதில் பாதி பரிஹாரம் செய்ய வேண்டும்.

602. அவைகளின் மாமிசத்தை சாப்பிட்டால் பாதி பரிஹாரம் செய்ய வேண்டும். மேலே கூறியவைகளின் விஷ்டையால் ஸ்பர்சிக்கப்பட்டவைகளைப் புசித்தால் கால்பாகம், பரிஹாரம் செய்ய வேண்டும். மேற்கூறிய பிராணிகள் நம்மை தாக்கினாலோ தொட்டாலோ

603. அவைகளால் நாக்கால் நக்கப்பட் அன்னத்தைச் சாப்பிட்டால் விஷ்டை ஸ்பர்ச தோஷ பரிஹாரத்தில் பாதி செய்ய வேண்டும், அதன் ரோமங்கள் எலும்பு முதலியவைகளைத் தொட்டால் ஸ்னானம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

604. பசுவைக் கொன்றவன் உபவ்ரதத்தை இருமடங்காகச் செய்ய வேண்டும். பசுவை அபஹரிப்பவன் அதில் பாதி பரிஹாரம் செய்ய வேண்டும். அதன் மாமிசத்தை சாப்பிட்டால் கோஹத்திக்கு சமமான பரிஹாரத்தை செய்ய வேண்டும்.

605. பசுமாட்டு கொட்டகையில் வாசம் செய்து கொண்டும் பசுவுக்கு பின்னாலே சென்று கொண்டும் கோதானத்தாலும் சுத்தமாகிறான், பசுமாடு கிடைக்காதபோது பசுமாட்டின் விலைக்கு அதிகமான தனத்தைக் கொடுக்க வேண்டும்.

606. கர்ப்பிணியும், கறக்கக்கூடியதும் நல்ல லக்ஷணம் பொருந்திய ஹோமதேனுவான காராம்பசுவை மாட்டுப் பவுண்டில் அடைத்து வைத்தால் இருமடங்கு பிராயச்சித்தமான விரதத்தை செய்ய வேண்டும்.

607. பசுமாட்டை தடுத்தி நிறுத்தி வைத்தால் 1/4 பாகமும், கட்டிவைத்தால் 1/2 பாகமும், பசுவை சேர்த்து வைத்தால் 3/4 பாகமும், கீழே விழுந்தால் எல்லா பாகமுமாக பரிஹாரம் செய்ய வேண்டும்.

608. மருந்து, உப்பு, போஜனம் பசையுள்ள புண்ணாக்கு அதிகமாகக் கொடுக்கக் கூடாது. காலமறிந்து கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.

609. தென்னைக் கயிற்றாலும், முஞ்சைப்பில்லாலும் கட்டக் கூடாது. மேய்ந்து கொண்டிருக்கும் பசு பலஹீனம் காரணமாக கீழே விழுந்தாலும்

610. ஜலத்திலோ, குட்டையிலோ மூழ்கி விபத்துக்குள்ளானாலும் மின்னலால் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளானாலும் குழியில் விழுந்தும், எதிர்பாராத விதமாக ஓநாய் முதலியவைகளால் சாப்பிடப்பட்டிருந்தாலும்

611. குளிர்காற்றினால் தாக்கப்பட்டு இறந்தாலும், கட்டு இறுகி இறந்தாலும் வசிக்கப்படாத வீட்டிலோ, காட்டிலோ, வீட்டில் அக்னிபாதையாலோ, மரம் விழுந்தாலுமோ

612. பசுவை கவனிக்காமல் அலக்ஷ்யமாக இருந்தால் அதன் கோமூத்ரம், கோசாணம் அருந்தி மேற்கூறியவைகளான பரிஹாரத்தை செய்வது உசிதமாகும். கன்னிப் பெண்களை நிந்திப்பது, பிறர் மனைவியை நேசிப்பது

613. தன்னை பிறருக்கு அடமானம் வைத்தல், தெய்வ நம்பிக்கை இல்லாமை, ஒழுக்கக் குறைவு, கேட்கக்கூடாததை கேட்பது, நீசர்களின் எச்சிலை சாப்பிடுதல் ஆகிய அனைத்தும் உபபாதகம் எனப்படும்.

614. கள் குடத்தில் இருக்கும் பொருள், கள்ளால் ஸ்பர்சிக்கப்பட்டதாக இருந்தாலும் அதை பானம் செய்ததால் பிராம்ஹணன் இருமடங்கு பரிஹாரம் செய்ய வேண்டும்.

615. சூத்ர கிருஹத்தின் ஆசவுசத்தில் கலந்து கொண்டு சாப்பிட்ட பிராஹ்மணன் உபவிரதத்தில் பாதியையும் வைச்யனில் ஆசவுசத்தில் சாப்பிட்டால் முன்பு கூறியதில் பாதியும் க்ஷத்திரியாசவுசத்தில் அதிலும் பாதி பரிஹாரமும் செய்ய வேண்டும்.

616. அரசன், நான்காம் வர்ணத்தவர்கள் வைச்யர் இவர்களின் ஆசவுசத்தில் சாப்பிட்டால் பிராம்மணனுக்கு கூறப்பட்டதில் பாதி பரிஹாரம் செய்ய வேண்டும். வைச்யன் நான்காம் வருணத்தவன். வீட்டில் ஆசவுசத்தில் சாப்பிட்டால் க்ஷத்தியனுக்கு சொன்ன பரிஹாரத்தில் பாதியைச் செய்ய வேண்டும்.

617. தனக்கு ஆசவுசமாக இருக்கும்போது சாப்பிட்டாலும், அந்த்யேஷ்டியில் சாப்பிட்டாலும், தன்னுடையதை விட அதிகமான ஆசவுசத்தில் சாப்பிட்டாலும் தன்வீட்டு ஆசவுசத்தில் சாப்பிட்டாலும்

618. 3/4, 1/2, 1/4 பாகம் பிரகாரம் பரிஹாரம் செய்ய வேண்டும், க்ஷத்திரிய வைச்யர்கள் சூத்ரனுடைய ஆசவுசத்தில் போஜனம் செய்தால் முன்கூறிய பிரகாரம் பரிஹாரம் செய்ய வேண்டும்.

619. அறியாமையால் விஷ்டை, சிறுநீர் இவைகளை உட்கொண்டால் உபவிரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் பஹிஸ்டா ஸ்த்ரீயிடம் முத்தம் கொடுப்பது சண்டாள ஸ்த்ரீயிடம் சென்றாலும்

620. வண்ணாத்தி முதலானவர்கள் ஸம்ஸர்கம் செய்தாலும் கோழிச் சொல்லுதல் ஆகிய இந்த பாபங்களுக்கு உபவிரதம் பரிஹாரம் ஆகும். இதுவரை சொல்லப்பட்டது பிராம்மண பாபத்திற்கு பரிஹாரமாக கூறப்பட்டுள்ளது.

621. சண்டாளன், வியாபாரி, வண்ணான் இவர்களின் பெண்களிடம் போகம் செய்தால் முன் கூறியவற்றில் 2 மடங்கு செய்ய வேண்டும். தன் வீட்டு ரஜஸ்வலை ஸ்த்ரீயிடம் சென்றால் பிராமணன் விரதம் மட்டும் செய்ய வேண்டும்.

622. பிராம்மண ஸ்தீரி ஸங்கமம் செய்தால் உபவிரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். க்ஷத்திரிய வைச்ய சூத்ரஸ்திரி ஸங்கமத்தில் 3/4, 1/2, 1/4 என்று பரிஹாரம் செய்ய வேண்டும்.

623. பிராம்மண ஸ்திரீ சூத்ர சேர்க்கையால் பதிதையாகி ஸந்ததியுடன் கூடியவளாக இருந்தாலும், பிராம்மண ஸ்திரீ, பிராம்மணனுடன் சேர்ந்ததற்கான உபவிரதத்தில் பாதி அளவு ஓர் முறை சங்கமம் ஆன பக்ஷத்தில் அனுஷ்டிக்கலாம்.

624. ஒரு மாதத்துக்குமேல் உபவிரதம், ஆறு மாதத்துக்கு மேல் அனுவிரதம், அதற்கு மேலும் இருந்தால் மஹாவிரதம், மூன்று வருடத்திற்கு மேல் ஆனால் அவள் தள்ளப்பட்டவளாகிறாள்.

625. அரசரின் மனைவியாக இருந்தால் இதில் பாதி பரிஹாரமும், வைச்ய ஸ்திரீயானால் அதிலும் பாதி பரிஹாரமும், சூத்ரனிடம் சேர்ந்த சூத்ர ஸ்திரீயானால் அதிலும் பாதி பரிஹாரமும் செய்ய வேண்டும்.

626. சூத்ரன் ஸங்கமனம் செய்தால் அவ்வாறே சுத்தியின் பொருட்டு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். மேற்கூறியபடி கன்னிகை ஸ்திரீயிடம் ஸங்கமமனால் முன்பு கூறிய பிராயச்சித்தம் 2 மடங்காக அனுஷ்டிக்கப்பட வேண்டும்.

627. பிராம்ஹணன் முதலியோருடைய கன்யா ஸ்திரீ ஸங்கமத்தால் வைச்யன் பாதி பரிஹாரமும் க்ஷத்ரியன் அதிலும் பாதியையும், பிராம்மணணாக இருந்தால் அதிலும் பாதியையும் செய்ய வேண்டும்.

628. அனுலோம ஜாதிகளில் தன்தாயார் வழியில் கூறப்பட்டதை பரிஹாரமாக செய்ய வேண்டும். சண்டாளாதிகள் விஷயத்தில் சூத்ரர்களுக்கு சொன்ன பரிஹாரத்தில் இருமடங்கு செய்ய வேண்டும்.

629. மனிதன் மிருகஜாதிகளிடம் தேஜஸை விட்டாலும், பெண் குறியற்ற பிரதிலோம ஜாதி யினரிடத்தில் தேஜஸை விட்டாலும் ஜலத்தில் தேஜஸை விட்டாலும் ஒரு வருடம் முடிய விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

630. நதி, பர்வதம் (மலை) உழுதமண், மூங்கில் முதலியவைகளில் தேஜஸ்ஸை விட்டால் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். கை விடப்பட்டவன் வேறொரு பெண்ணுடன் ஸங்கமம் ஏற்பட்டால் தோஷசாந்திக்காக சண்டாள விஷயத்தில் கூறப்பட்ட பரிஹாரத்தில் பாதியை செய்ய வேண்டும்.

631. மேற்கூறியவர்கள் கர்பவதியாகி விட்டால் பிராயச்சித்தம் செய்வது கடினம், கர்பம் வெளிவந்தால் இருமடங்கு பிராயசித்தம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.

632. வீட்டில் நடமாடவும், வெளியில் சொல்லுதலும் கூடாது. அன்னம் புசிக்க கூடாது, கணவருடன் படுத்துக் கொள்ளக் கூடாது, பந்துக்களுடன் உணவு அருந்தக் கூடாது.

633. பகலில் பெண்ணுடன் ஸங்கமம் செய்து விட்டு குளிக்காமல் சாப்பிட்டால் ஆண்குறியை இரும்புக் கம்பியால் கட்டி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

634. பிராம்மணன் பிரதிலோமர்களின் மீதமுள்ளதை சாப்பிட்டால் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஸமமான ஜாதியினருடைய எச்சிலை சாப்பிட்டால் உபவாசம் இருந்தால், தோஷத்திலிருந்து விடுபட்டு சுத்தனாகிறான்.

635. நடுத்தரமானவன் தாழ்ந்தவன் ஆகியோருடைய எச்சிலை சாப்பிட்டால் ஆயிரம் அல்லது பத்தாயிரம் தடவை ஜபத்தையும், ஸமமான ஜாதியினருடைய எச்சிலை சாப்பிட்டால் இரண்டு அல்லது மூன்று நாள் உபவாசம் பரிஹாரமாகும்.

636. தாழ்ந்தவர்களின் எச்சில் ஸம்பந்தம் இருந்தால் முன்கூறிய பரிஹாரத்தை 100 மடங்கு அதிகப்படுத்தி செய்ய வேண்டும். ஜபம் உபவாசம் ஆகிய இவைகளும் ஓர் இரவு முதலான அதிக மடங்காக பலமடங்கு ஜபம் உபவாஸ விருத்தியுமாகும்.

637. ஆதிசைவர், சிவ பிராம்மண பெருமக்களை நிந்திப்பது, கள்குடிப்பது ஸ்திரீ பழக்கம், ஸ்திரீ ஹிம்சை, மருந்து விற்று பிழைப்பு, வட்டிக்கு விட்டு பணத்தைப் பெருக்குதல், பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்தலும்

638. எல்லா கார்யத்திலும் தகுதியை பயன்படுத்துதலும், பெரிய இயந்திரங்களை இயக்கம் செய்வதும், ஸொந்த வேதசாகை, அக்னி, புத்ரன் முதலியவர்களை கைவிடுவதும் பாப செயலாகும்.

639. எள், நெல், பயறு, உளுந்து, செந்நெல், அவரை, கொள்ளு, கடலை, துவரை, கடுகு, பார்லி, மொச்சை, யவை

640. கங்கு என்ற திணை, தான்யம், கேழ்வரகு, காட்டுநெல், வரகு முதலிய தானியம் சதையுடன் கூடியவை, சதை இல்லாதவை ஆகியவற்றைத் திருடுதல் பாபமாகும். இதற்கு விரதத்தை அனுஷ்டித்து பரிஹாரம் செய்ய வேண்டும்.

641. வாஹனம், படுக்கை, ஆஸனம், வெண்கலம், பித்தளை, கற்செட்டி, இரும்பு, தகரம், செம்பு, ஈயம், வஸ்திரம் முதலியவைகளை திருடினால் முன்பு கூறிய பரிஹாரத்தை

642. மூன்று மடங்கு அதிகப்படுத்தி செய்தால், திருட்டுக் குற்றத்தால் ஏற்பட்ட பாபத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. குரங்கு, நாய், மான், விஷ்டையை புசிக்கும் பன்றி

643. நல்லவைகளும், தீயவைகளுமான பிராணிகள், சிவனின் பொருட்டு வெட்டப்பட்டாலோ முயல், திமிங்கிலம், நரி, சங்கு, முதலை ஆகியவைகளை

644. கொன்றாலும் அந்த பாபம் நீங்க விரதத்தை அனுஷ்டித்தால் சுத்தனாகிறான். ஆந்தை, கழுகு, நாரை, பெருங்கழுகு, காகம், நீர் வாழும் காகம், நீர்வாழ் மயில்

645. கோழி, பருந்து சேவல், அன்னபக்ஷி, மயில், மைனா, குயில், ஓணான், மரங்கொத்து குருவி, நீர்நாரை

646. புறா, கொக்கு, வான்கோழி, சிட்டுக்குருவி, வயதான பறவைகள், கீரி, சக்ரவாகம், கவுசிகம் என்ற கோட்டான், கிளி.

647. தவளை, பசு, எருமை, உடும்பு, பச்சோந்தி, எலி, பாம்பு, மூஞ்சுறு, மீன், ஆமை, நண்டு

648. தேள், கிளிஞ்சல், விட்டில்பூச்சி, ஈ, எரும்பு, மண்புழு, யானை, சிலந்தி மற்றும்

649. பூமியில் இருப்பவைகளும், நீரில் இருப்பவைகளுமான பிராணிகளையும் ஆகாயத்தில் பறந்து செல்லும் பக்ஷிகளையும், பிராம்ஹணன் வதம் செய்தால் விரதத்தில் 1/4 பாகத்தை அனுஷ்டித்தால் பாபம் போகும்.

650. எலும்பில்லாத பிராணிவதை விஷயத்தில் நூறு தடவை அகோர மந்திர ஜபம் செய்ய வேண்டும். வேறு விதமாகவும் பரிஹாரம் இவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது.

651. தெரிந்து கொண்டே வேண்டுமென்று பிராணிகளைக் கொன்றவன் பசுக்களின் கொட்டகையில் அகோர மஹாமந்திரத்தை ஜபிக்க வேண்டும். சுராபானம் செய்தாலும் சிவாலயத்தில் வாமதேவ மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

652. எதிர்பாராத வகையில் திருட்டை செய்தால் மயானத்தில் அகோரமந்திர ஜபத்தை செய்யவேண்டும். அறியாமல் குருஸ்திரீ ஸங்கமம் செய்தால் காட்டில் தத்புருஷ மஹாமந்திரத்தை ஜபம் செய்யவேண்டும்.

653. எல்லா பிராணிகளுடன் ஸங்கமம் செய்தால் மலையின் உச்சியில் ஸத்யோஜாத மந்திர ஜபம் செய்ய வேண்டும். வேண்டுமென்றே பஹிரங்கமாக மேலே கூறிய பாபங்களைச் செய்தால் ஸத்யோஜாத மந்திரத்தை லக்ஷம் தடவை ஜபித்தால் சுத்தனாகிறான்.

654. இஷ்டமில்லாமலோ, பலாத்காரமாகவோ ரஹஸ்யமாகவோ, படப்படப்பாலோ (மேல் கூறிய பாபங்களை) செய்தால் ஆயிரம் முறை ஸத்யோஜாத மந்திரத்தையும் அல்லது வேண்டுமென்றோ ரஹஸ்யத்தில் செய்திருந்தாலும் பத்தாயிரம் முறை ஸத்யோஜாத மந்திரத்தையும் ஜபம் செய்தால் பாபம் நீங்கி சுத்தனாகிறான்.

655. தெரியாமலோ அல்லது தெரிந்தோ மேற்கூறிய பாபங்களை செய்தால் 20,000 முறை ஸத்யோஜாத மந்திரத்தை ஜபித்தால் சுத்தி அடைகிறான். குருத்ரோஹத்தை தவிர மற்றவைகளை தெரிந்து செய்தால் பரிஹாரம் உண்டு.

656. குருத்ரோக பாபத்திற்கு பரிஹாரமாக ஆசார்யன் க்ருச்ர விரதத்தை அனுஷ்டித்து ஹோமம் செய்ய வேண்டும். இதை தவிர வேறு பரிஹாரம் இல்லை.

657. பிராம்மணர் க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் இவர்களுக்கு பிரம்மஹத்தி, ஸுராபாநம், ஸ்தேயம் முதலிய பாபங்கள் ஸமமானவைகள் அதீக்ஷிதனான சூத்ரன் மத்யபானம் செய்தால் பாபம் ஸ்வல்பமாக இருக்கும்.

658. தீøக்ஷ இல்லா சூத்ரனுக்கு சுராபானம் தடைசெய்யப்படவில்லை. மற்றவர்களான பிராம்மண, க்ஷத்ரிய, வைச்யர்களுக்கு சுராபாணம் குடித்தால் நியமத்துடன் அகோர மந்திரத்தை 300 முறை ஜபம் செய்யவேண்டும்.

659. குருஸ்திரீ ஸங்கமம் என்ற பாபம் நான்கு வர்ணத்தவருக்கும் ஸமமானதே. குருத்ரோகமே சிவத்ரோகம் என்றும் கூறப்படுகிறது. இந்த பாபங்கள் செய்தவன் மஹாபாதகனாகிறான்.

660. ப்ருத்வீ சம்பந்தமான மண்ணிலிருந்து உண்டான மரம், தேஜஸ் ஸம்பந்தப்பட்ட திரவ்யமின்றி திருடுவதை அறியாமல் செய்தால் ஸத்யோஜாத மந்திர ஜபத்தால் சுத்தி ஏற்படுகிறது.

661. 25 தடவை ஸத்யோஜாத மந்திரஜபம் செய்யவும் தெரியாமல் செய்திருந்தால் 100 தடவை ஸத்யோஜாத மந்திர ஜபம் செய்ய வேண்டும். நெய், உப்பு, சர்க்கரை முதலியவைகளை

662. தெரிந்தோ, தெரியாமலோ திருடினால் முன்போல் வாம தேவ மந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும். வெண்கலம், பித்தளை முதலிய தேஜஸ் ஸம்பந்தப்பட்ட ஸாதனங்களையும் திருடினால்

663. பசுவையையும் இஷ்டமிருந்தோ இஷ்டமில்லாமலோ திருடினால் நெய்க்கு கூறியபடி 100 வாமதேவ மந்திர ஜபம் செய்ய வேண்டும். புஷ்பம், சந்தனம் இவைகளை அபஹரித்தாலோ, மனிதனையோ, ஸ்திரீயையோ

664. காளை மாட்டையோ, யானை, குதிரை முதலிய வஸ்துக்களை திருடினால் தத்புருஷ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். பால், தண்ணீர், ஆயுதம் ஆகியவைகளை திருடினால் ஈசான மந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும்.

665. இஷ்டமில்லாமல் சாப்பிடத்தகாத பதார்த்தங்களை சாப்பிட்டால் வாமதேவ மந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும். இஷ்டப்பட்டு சாப்பிடத்தகாத பதார்த்தங்களை சாப்பிட்டால் அதுவும் (மத்யம்) கள் இல்லாமல் இருந்தால் 300 முறை வாமதேவ மந்திர ஜபம் செய்ய வேண்டும்.

666. பஹிஷ்டா ஸ்திரீயின் அன்னத்தை இஷ்டப்பட்டு புசித்தால் 10,000 முறை வாமதேவ மந்திரத்தையும், பஹிஷ்டா ஸ்திரீயின் அன்னத்தை அறியாமையால் உண்டால் பத்து ஆவ்ருத்திக்கு மேல் 300 ஆவ்ருத்திக்குள் ஜபம் செய்து ஸ்நானம் செய்வதால் சுத்தி ஏற்படுகிறது.

667. அதற்கு மேல் புசித்தால் 100 ஆவ்ருத்தி முதல் 500 ஆவ்ருத்தியும் இரவு உபவாஸமும் கூறப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்டால் மூன்று நாட்கள் உபவாசமும் 10000த்துக்கு மேற்பட்ட ஜபமும் பரிஹாரம் ஆகும்.

668. தன் ஜாதியை சேர்ந்த தீக்ஷித ஸ்பரிசத்தில் ஆசமனத்தால் சுத்தமாகிறான். தீøக்ஷ இல்லாதவனுடைய ஸ்பர்சத்தில் தன் தீக்ஷõநாம மஹாமந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும்.

669. தீøக்ஷயுடன் கூடிய தீக்ஷிதருடைய ஸ்பர்சம் ஏற்பட்டால் முன்போல் பிராயச்சித்தம் தீøக்ஷ இல்லாதவருடைய ஸ்பர்சம் ஏற்பட்டால் ஸ்நானம் செய்து 200 முறை தீக்ஷõநாம மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

670. தீøக்ஷ உள்ளவர் தீøக்ஷ இல்லாதவரை தொட்டால் 300 ஆவ்ருத்தி ஜபத்துடன் உபவாஸத்தால் பரிசுத்தனாக ஆகிறான்.

671. தீøக்ஷ உள்ளவர் சூத்ரரால் ஸ்பரிசிக்கப்பட்டாலும் சூத்ரனை தீøக்ஷயுள்ளவர் தொட்டாலும் 500 ஆவ்ருத்தி (தீக்ஷõ நாமமந்திரத்தை) ஜபிக்க வேண்டும்.

672. மற்ற வைச்ய, க்ஷத்ரிய, ஜாதிதீøக்ஷ இல்லாதவர் தீøக்ஷ உள்ளவரைத் தொட்டால் தன்னுடைய சுத்திக்காக 3/4 பங்கு பரிஹாரம் செய்ய வேண்டும். சூத்ர ஸ்பர்சித்தால் மூன்று நாட்கள் உபவாஸம் இருந்து 10000 ஆவ்ருத்தி மந்திரஜபம் செய்ய வேண்டும்.

673. ஸத்யோஜோத மஹாமந்திரத்தை விசாரணையின்றி ஜபிக்க வேண்டும். சண்டாள சங்கமம் ஏற்பட்டால் க்ருச்ர விரதத்தை அனுஷ்டித்து 10000 முறை அகோர ஜபத்தை செய்ய வேண்டும்.

674. வீட்டில் பாபிகள் பிரவேசித்தால் வீட்டு பாண்டங்களை எறிந்துவிட்டு வீடு பூறாவும் பசுஞ்சாணத்தால் மெழுகி கிருச்ரவிரதத்தை செய்தால் சுத்தி ஏற்படும். அந்த வீட்டில் சாப்பிட்டால் தப்தக்ருச்ரத்தை அனுஷ்டிக்கவும்.

675. பதிதனுடன் தெரிந்து கொண்டே சாப்பிட்டால் பதிதனுக்கு ஸமமாக ஆகிறான், வீட்டில் வண்ணான் முதலியோர் தெரியாமல் பிரவேசித்தால் 5000 அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

676. கூலிக்கு பூஜை செய்யும் தேவலகர்களுடன் கூடினால் சாந்திராயண விரதம் அனுஷ்டித்தலால் சுத்தி அடைகிறான். தங்கம், வெள்ளி முதலிய பாத்ரங்கள் தண்ணீரால் சுத்தமாகின்றன.

677. சங்கு முதலியவைகள் உமியாலோ, கடைசலாலோ சுத்தியடைகின்றன. வெண்கலம் சாம்பலால் சுத்தியடைகிறது. செம்பு புளியால் சுத்தியாகிறது.

678. மேற்கூறிய எச்சில்பட்ட பாத்திரங்களுக்காக சுத்தி பிரகாரம் வரிசையாக கூறப்பட்டது. எச்சில்பட்ட பாத்திரங்களை பிரோக்ஷணம் செய்தால் அவைகள் சுத்தமாகிவிடுகின்றன. இதில் சந்தேகம் இல்லை.

679. சுரக்காய் குடுக்கை, மூங்கில் கூடை முதலிய பாத்திரங்களை கோமயத்தால் மெழுகினால் சுத்தியையும் மரத்தால் செய்யப்பட்டதும் உயர்ந்ததான தங்கம், வெள்ளி முதலிய உலோக பாத்திரங்களும் ஜலசம்பந்தத்தினால் சுத்தமாகிறது.

680. தோல், கயறு, துணி இவைகள் உப்பு (உவர் பூமி) ஜலத்தால் சுத்தமாகின்றன. ஜலம் நிறைந்த பாத்திரங்களை தர்பையை அக்னியில் கொளுத்தி அந்த பாத்திரங்களை மூன்று முறை சுத்துதல் என்ற பர்யக்னி கரணம் செய்தால் சுத்தி ஏற்படுகிறது.

681. புல், கட்டை, விறகு முதலியவை பிரோக்ஷணம் செய்தால் சுத்தமாகிறது. பசுஞ்சாணத்தைக் கரைத்து தெளித்து கோடு கிழித்தால் (கோலமிட்டால்) பூமிசுத்தியடைகிறது.

682. மூங்கில் பாத்திரம், மண்பாண்டம், மலம் முதலியவைகளால் பாதிக்கப்பட்டால் அவைகளை எறிந்து விடலாம். நிர்மால்ய ஸம்பந்தம் உள்ளதும் விடத்தக்கதே. பஹிஷ்டா பெண் மூன்று நாள் வீட்டுக்கு ஆகாமல் இருந்து நான்காம் நாள் ஸ்னானம் சுத்தத்தை அவளுக்குக் கொடுக்கும்.

683. மீதமுள்ளவைகளுக்கு முன்போல் சுத்தம் ஏற்படுகிறது. ஜலத்தினால் வஸ்திர சுத்தி ஏற்படுகிறது. சரகு, தொன்னை முதலியவைகளை போஜனகாலத்தில் உபயோகித்தால்

684. உபயோகித்த பொருள்களை தியாகம் செய்வதுதான் பரிசுத்தமாகும். உண்மை பேசுவதால் மனதுக்கு சுத்தி ஏற்படுகிறது. கண், காது முதலிய இந்திரியங்களுக்கு யமம், நியமம் முதலிய யோகங்களால் சுத்தி ஏற்படுகிறது.

685. விசாரணையின்றி கர்வத்திற்கு அடக்கமே பரிஹாரமாகும். புலி போன்ற சிறந்த முனிவர்களே பிறருடைய சேர்க்கையை விட்டுவிடுவதால் புத்திக்கு சுத்தி ஏற்படுகிறது.

686. விதிப்படி செய்த பிராணாயாமத்தால் பிராணன் சுத்தியடைகிறது. தியானத்தால் மனது ஒருமைப்பாட்டை அடைந்து சஞ்சலம் இல்லாமையை அடைகிறது.

687. ஜீவன் விவேகத்தால் சுத்தமடைகிறான் விசாரணையின்றி. இதில் சந்தேகம் இல்லை. நாய், பூனை, கழுதை முதலியவைகள் நாக்கால் ஸ்பர்சித்தால் ஸ்நானம் செய்ய வேண்டும்.

688. நாபிக்கு கீழே அல்லது மேலே நக்கினால் ஏழு தடவை களிமண்ணால் சுத்தி செய்வதாலும் (தலை) சிரஸ் வரை ஸ்பரிசித்தால் ஸ்னானம் செய்து (பஞ்சாக்ஷர) அங்கமந்திரம், பிரம்ம மந்திர ஜபம் செய்தால் சுத்தியை அடைகிறான்.

689. 100 தடவையோ அல்லது 200 தடவையோ மந்திர ஜபம் செய்ய வேண்டும், சிவதீøக்ஷ இல்லாதவன் தொட்டால் ஆக்னேய ஸ்னானம் என்ற பஸ்ம ஸ்னானத்தை செய்ய வேண்டும்.

690. அறிந்த தன்மையால் நிர்மால்ய கலப்பு ஏற்பட்டால் சண்டிகேஸ்வரரை பூஜிக்கவும், அந்த தேவத்வனான சிவனுடைய மூலமந்திரத்துடன் அங்கமந்திரத்தையும் 100 தடவை ஜபிக்கவும்.

691. அறியாமையால் நிர்மால்ய கலப்பு ஏற்பட்டால் பரமேஸ்வரனின் மூலமந்திரத்தை மட்டும் 100 தடவை ஜபிக்க வேண்டும். கல்லாலான கற்சட்டி முதலிய ஜலத்தினாலும், மத்தினால் கடையப்படுவதினால்

692. ஜலத்திலிருந்து உண்டான சங்கு முதலான பொருள்கள் சுத்தமாகின்றன. எல்லா மூங்கில் பொருள்களும் தண்ணீரினாலும், கெட்டியான பசையுள்ள பாத்திரங்கள் காயவைப்பதாலும் சுத்தம் ஏற்படுகிறது என்று பாத்திரங்களின் சுத்தி கூறப்படுகிறது.

693. அசுத்தமான பதார்த்தங்களுக்கு தீர்த்தப் பிரோக்ஷணத்தால் சுத்தி ஏற்படுகிறது. தேன், கரும்புசார் இவைகள் கொதிக்கவைக்கப்படுவதால் சுத்தமாகின்றன.

694. பழங்களுக்கு அலம்புவதால் சுத்தி ஏற்படுகின்றது. நன்கு பார்ப்பதினால் தயிர் சுத்தியடைகிறது. காய்ச்சப்படுவதால் பால் சுத்தியடைகிறது. சமைக்கப்பட்ட பதார்தங்களை பிரோக்ஷணம் செய்வதால் சுத்தம் ஏற்படுகிறது.

695. குருவான சிவாச்சாரியருக்கு சாஸ்திரத்தின் வாக்கியத்தினால் சுத்தி ஏற்படுகிறது. வாக்கால், மனதால், சரீரத்தாலும், வேறொருவன் தனக்கு துன்பத்தை உண்டு பண்ணினான் என்பதை

696. ஏமாற்றமாக அறிந்தே துக்கத்தை அடைந்தவன் சக்தி ஜபம் செய்ய வேண்டும், ஸமயதீøக்ஷ உள்ளவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டாலும் சக்தி ஜபத்தை செய்யவேண்டும்.

697. துணி, படுக்கை, ஆசனம் முதலியவைகளைத் திருடினால் 100 காயத்ரீயை ஜபிக்க வேண்டும். ஆசார்யன், தெய்வம், அக்னி இவர்களை ஆராதிக்கும் விஷயத்தில் நிந்தனைக்குரிய தாழ்ந்தவனிடம் தெரிவித்தால் 100 காயத்ரீ ஜபம் செய்ய வேண்டும்.

698. பொருளை எடுத்து வருபவனுக்கு நியாயமின்றி சுத்தி ஏற்படுகிறது. களைத்தவர்களுக்கும், வியாதியால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் ஸந்நியாஸிக்கும் எவனொருவன் கொஞ்சம் மருந்தை கிரஹித்துக் கொண்டு மருந்து கொடுக்கிறானோ அவனுக்கு இதில் திருட்டு குற்றம் இல்லை.

699. எல்லோரிடத்திலும் மருந்து எப்போதும் கிரஹித்துக் கொள்ளலாம் தோஷமில்லை, ஜலத்துடன் கூடியதாக உப்பை திரும்பவும் காய்ச்சுவதால் உப்புக்கு சுத்தி ஏற்படுகிறது.

700. அதர்ம வழியில் பொருளை சேகரித்து எவனொருவன் தர்மத்தை விரும்புகிறானோ அதற்காகவும் பிறருக்காக உயிரையும் விடுவானாகில் அவன் பிரம்மஹத்தி தோஷம் செய்தவனாகிறான்.

701. தெய்வத்திற்காகவும் ஆசார்யன் தந்தை இவர்களுக்காகவும் தனக்காகவும் எவனொருவன் உயிரைவிடுகிறானோ அவன் பிரம்மஹத்தி செய்தவன் என கூறப்படுகிறான்.

702. வீட்டுக்கு நெருப்பு வைப்பவன், விஷம் கலந்த உணவை கொடுப்பவன், எப்பொழுதும் கையில் கத்தி முதலிய ஆயுதங்களை வைத்திருப்பவன், பிறருடைய பொருளை அபஹரிப்பவன், வயல் மனைவி இவர்களை அபஹரிப்பவன், இவர்கள் ஆறுபேரும் ஆததாயீ எனப்படுவர். (ஆததாயீ என்றால் பிறருக்கு தொல்லை கொடுத்து அவர்களை கொலை செய்ய முயற்சிப்பவன் எனப் பொருள்படும்).

703. தன்னை கொல்ல வருபவனை சண்டையில் ஆயுதங்களால் மரணமடையச் செய்பவனுக்கும் கலக்க முற்ற நிலையில் அழிக்க வருபவனை அழிப்பவனுக்கும் ப்ரூணஹத்தி என்றதோஷம் இல்லை என்பதாகும். (ப்ரூண கரு)

704. தன்னைக் கொல்லவருபவன் இளைஞனாயினும், சிறுவனாயினும், கிழவியானாலும், பலசாத்திரங்களை படித்த பிராம்மணனாயினும் அவனை கவலையின்றி வதம் செய்யலாம்.

705. எந்த ஜனங்கள் தற்கொலை (ஆத்மஹத்தி) செய்து கொள்கிறார்களோ அவர்கள் இறந்த பிறகு காரிருள் சூழ்ந்ததும் சூர்யபிரகாசம் இல்லாத அசூர்யம் என்ற நகரத்தை அடைகிறார்கள்.

706. கஷ்டம் ஏற்பட்டது என்பதற்காக உடனே தற்கொலை செய்து கொள்ளக்கூடாது. வைராக்யத்தை அடைந்தோ, மறுபடியும் சவுக்யங்களை அடைந்தோ,

707. தியானத்தால் மனதை ஸ்திரப்படுத்தி பரமேஸ்வரனிடம் மனதைச் செலுத்தி பிராணத்யாகம் செய்ய வேண்டும். சிவன், அக்னி, குரு ஆகிய மூவரையும் நிந்திப்பதைக் கேட்டு தன் சரீரத்தை தியாகம் செய்யவேண்டும்.

708. சிவன், அக்னி, குரு ஆகிய மூவரையும் தூஷணை செய்தவனை வதம் செய்தால் பாபம் இல்லை, அவன் சிவசாயுஜ்யத்தை அடைகிறான். சைவனையும் பாபசுதனையும் காலமுகனையும் கபாலதாரணம் செய்பவனையும்

709. ஒருவன் வதம் செய்தால் உலகம் முழுவதும் அந்த துஷ்டனால் வதை செய்யப்பட்டதாகக் கொள்வேன், பிரம்மஹத்தி செய்வதனும் நன்றி கெட்டவனும் பிராயச்சித்த கர்மாவினால் சுத்தமாகின்றனர்.

710. சரணமடைந்தவனைக் கொல்பவன், பெண்ணைக் கொன்றவன் இவர்களை இருவரும் பாபம் செய்தவர்கள். அவ்வாறே ஆகம சாஸ்திரத்தை கைவிட்டவன் தங்கத்தை திருடியவனுக்கு ஸமமான பாபத்தைச் செய்தவனாக ஆகிறான்.

711. குதிரை ரத்னம் மனிதன் ஸ்திரீ, பூமி, பசு ஆகிய இந்த பொருளைத் திருடுவதும், ஒருவன் புதையலில் ஒளித்து வைத்திருப்பதைத் திருடுவதும் இவைகள் எல்லாம் ஸ்வர்ண ஸ்தேயத்திற்கு ஸமமாகும்.

712. ஆதிசைவரை கொல்லுவதும் பொய் சொல்வதும், நல்ல மனதையுடையவனைக் கொல்வதும் முன்கூறியபடியே ஸ்வர்ணஸ்தேயத்திற்கு சமமாகும். பெரிய மஹான்களை கொல்வது பெரிய சாபமேற்படும்.

713. மருந்து, உணவு கொடுப்பவனுக்கும் வயிற்றுப் பிழைப்புக்காக பிராணிகளை கட்டிப் போட்டு வைப்பவனுக்கும் பாபம் கிடையாது. இனி (உத்ஸவ பிராயச்சித்தம்)

714. ஒவ்வொரு வருடம், மாதம், திதி, புண்ய நக்ஷத்திரம், முன்பு தீர்மானித்து எவ்வளவு தின எண்ணிக்கையால் உத்ஸவம் அனுஷ்டிக்கப்பட்டதோ அதன்படியே

715. பேரீ முதலிய வாத்யங்கள் முழங்க ஒன்பது தினங்களோ, அல்லது 27 நாட்களோ, அல்லது 18 தினங்களோ ஓர்தினமோ மகோத்ஸவம் நடக்கவேண்டும்.

716.ற அப்படி இல்லாவிட்டால் தேசத்திற்கும், அரசருக்கும் தோஷம் ஸம்பவிக்கும், அந்த பாபம் நீங்க முதலில் சாந்தி செய்யவேண்டும். பிறகு முன்கூறிய பிரகாரம் உத்ஸவத்தை நடத்தவேண்டும்.

717. உற்சவம் வேறு மாதத்திலோ, அல்லது அதே மாஸத்திலோ, நடக்கவேண்டும். அதே நாளில் இரண்டு மடங்காக மூர்த்தி ஹோமத்தையோ, திசாஹோமத்தையோ கிரமமாக செய்து.

718. விதிமுறைப்படி உத்ஸவத்தை நடத்த வேண்டும். கொடியேற்றும் தினம் ஒன்பது தினத்தையும் உத்ஸவத்தின் திருநாட்களாக கருத வேண்டும்.

719. திருவிழாவை ஏழு தினங்களுக்கு உட்பட்ட 6 தினங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். ஸ்வயம்பூ லிங்கமாக இருந்தால் இந்த விதானம் பொருத்தமாக இருக்கும்.

720. மானுஷலிங்கம், பாணலிங்கம், முதலியவைகள் விஷயத்தில் மாஸநக்ஷத்ரம், தீர்த்த நக்ஷத்ரம், இவைகளை வேறு பிரகாரமாக சேர்க்கலாம்.

721. உற்சவம் தினங்கள் குறைந்து நல்லவிதமாக அனுஷ்டிக்கப்பட்டால் அதன் பலன் அளவற்றதாகும். அரசாங்க குழப்பம், பஞ்சமேற்பட்ட சமயம், அரசன், திருடனால் பயம் ஏற்பட்ட பொழுதும்

722. உற்சவம் நடத்த போதுமான நிதி வசதி இல்லாமையாலும், வேறு சில காரணங்களாலும், முன்போல் விஸ்தாரமாக உற்சவம் நடத்த முடியாமல் போனால் விதிப்படி சாந்தி ஹோமம் செய்யவேண்டும்.

723. நாட்கள் குறைவாக இருந்தாலும், முன் கூறிய பிரகாரம் உற்சவத்தை நடத்தவேண்டும். ஒன்றும் இல்லாமல் இருப்பதற்கு ஸ்வல்பமான சில நாட்களிலாவது உற்சவம் நடத்துவது சிறந்த முறையாகும்.

724. ஒன்றுமே இல்லாமல் இருந்தால் பெருத்த குற்றம் ஏற்படும். அதனால் அதற்கு பரிஹாரமான சாந்தியையும் சாந்தி ஹோமத்தையும், மூர்த்திஹோமத்தையும் செய்யவேண்டும்.

725. இந்த முறைப்படி ஆரம்பிக்கப்பட்ட விசேஷ உத்ஸவாதிகள் எந்த மனிதனால் இடையூறு காரணமாக நடைபெறாமல் இருந்தால் தேசத்திற்கு அழிவு ஏற்படும்.

726. அப்பொழுது சாந்தி ஹோமத்தை செய்து உற்சவத்தை மறுபடியும் செய்யவேண்டும். விருஷபத்திற்கு பூஜை யில்லாமல் கொடி ஏற்றப்பட்டால்

727. பசுமாடுகள் அழிந்துபோகும். ஆகையினால் சாந்தி ஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும். விருஷபத்திற்காக ஹோமத்தை கொடிமரத்திற்கு அடியில் இருந்து செய்யவேண்டும்.

728. மேல்பாகத்தில் மந்திரநியாஸம் முதலிவைகளை மானஸீகமாகச் செய்ய வேண்டும், துவஜா ரோஹணம் இல்லாமல் இருந்தால் அரசருக்கு தோல்வி ஏற்படும்.

729. ஆசார்யன் பரிஹாரத்தை செய்து கொடியேற்ற வேண்டும். (கொடி) த்வஜத்தை வீதி வலமின்றி இருந்தால் கிராமங்களிலும் நகரங்களிலும் அசுபம் ஏற்படும்.

730. அப்பொழுது எல்லாதோஷங்களையும், போக்வதற்காக சாந்தி ஹோமத்தைச் செய்ய வேண்டும். வேதிகையானது இல்லாமல் இருந்தாலும், லக்ஷணமும், இல்லாமல் இருந்தாலும் அசுபத்தை கொடுக்கும்.

731. சாந்தி ஹோமத்தைச் செய்து வேதிகையை லக்ஷணத்துடன் கூடியதாக நிர்மாணிக்க வேண்டும். த்வஜதண்டம் லக்ஷணம் இல்லாமல் இருந்தால் பிரதான கர்தாவுக்கு தீமை ஏற்படும்.

732. அப்பொழுது மூர்த்திஹோமத்தையோ அல்லது சாந்திஹோமத்தையோ அனுஷ்டிக்க வேண்டும். உபதண்டம் அதன் உரிய லக்ஷணப்படியில்லையெனில் தேசத்திற்கு எதிரிகளால் பயம் உண்டாகும்.

733. த்வஜ தண்டத்தில் மேல்பாகம் ஸ்கந்தம் என்ற பாகத்தின் அளவு குறைவு ஏற்பட்டால் சாந்தி ஹோமம் செய்யவும் கொடிமரம், உபதண்டம், ஸ்கந்தபாகம், இவைகள் பிளவு ஏற்பட்டால்.

734. சாந்தி என்ற ஹோமத்தை செய்து இரண்டாகவே பிளவு ஏற்பட்டால் சாந்திஹோமத்தை செய்யவேண்டும். கொடி அதின் அமைப்பின்றி இருந்தால் அரசாங்கத்திற்கு பயம் ஏற்படும்.

735. ஆகையால் லக்ஷணத்துடன் கூடிய வேறு ஒரு த்வஜத்தை கொடியேற்றுவதற்காக கொண்டுவர வேண்டும். சாந்தி கர்மாக்கள், செய்து புத்திமான லக்ஷணத்துடன் கூடிய த்வஜத்தை ஆரோஹணம் செய்ய வேண்டும்.

736. இவ்விதமாகவே விருஷபத்தின் விஷயத்திலும் பிராயச்சித்தத்தை செய்யவேண்டும். கொடிக்கு மேல்பாகபிரம்பு இல்லாமல் இருந்தால் ஈசான மகாமந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும்.

737. துவஜத்திற்கு கீழ் பிரம்பு இல்லாமல் இருந்தால் தோஷமில்லை. துவஜக்கயிறு அறுந்தால் எதிரிகளால் இடையூறு ஏற்படும். அதற்கு சாந்தி ஹோமத்தைச் செய்யவேண்டும்.

738. எலி முதலிய பிராணிகளால் கொடிச்சீலை முதலியவைகள் துண்டிக்கப்பட்டால் சாந்தி ஹோமத்தைச் செய்ய வேண்டும். கொடி கீழே பூமியில் விழுந்தால் அரசாங்கத்திற்கு கெடுதல் ஏற்படும்.

739. அப்பொழுது சாந்தி ஹோமத்தை செய்து சாஸ்திர பிரகாரம் துவஜாரோஹணத்தைச் செய்யவும் துவஜம் பின்னமாக்கப்பட்டு இருந்தால் சாந்தி கர்மாவை செய்யவேண்டும்.

740. ஏழு நாட்களுக்குள் வேறு ஒரு கொடியை ஏற்ற வேண்டும், ஏழுநாட்களுக்கு முன்னதாகவே (சிலநாட்களில்) குறைவான தினங்களில் துவஜாரோஹணம் செய்வது விசேஷமானது.

741. அப்பொழுது மூர்த்திஹோமத்தையோ, அல்லது சாந்தி ஹோமத்தையோ செய்து துவஜாரோஹணம் செய்ய வேண்டும். கொடியேற்றியிருக்கும் போது மேலே உள்ள மூன்று சட்டங்கள் உடைந்து போனாலோ

742. தொங்கிக் கொண்டிருந்தாலோ தோஷத்தை உண்டுபண்ணும். அதனால் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். தர்பமாலை இல்லாமல் இருந்தால் சாந்திஹோமத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

743. பிறகு துவஜதண்டத்தை லக்ஷணத்துடன் கூடியதர்பமாலையால் சுற்றிக் கட்டவேண்டும். கயிற்றாலோ, தர்பமாலையாலோ விதிப்படி பிரதக்ஷிணமாக சுற்றி கட்டவேண்டும்.

744. தர்பமாலை துவஜதண்டத்தில் நன்கு இணைக்கப்படாவிட்டால் 1000 தடவை அகோரஜபம் செய்ய வேண்டும் பிரக்ஷிணமாக தர்பமாலைகளை சுற்ற வேண்டும்.

745. உபதண்டம் கூர்ச்சம் இல்லாமல் இருந்தால் அகோரமந்திரத்தை 300 தடவை ஜபிக்க வேண்டும். கொடிமரத்தில் மணி இல்லாமல் இருந்தால் விருஷபத்திற்கு ஸாந்நித்யம் இல்லாமல் போகும்.

746. அதனால் தேசிகன் அகோரமந்திரத்தை 300 தடவை ஜபிக்க வேண்டும் துவஜத்தில் இருக்கும் மணி கீழே விழுந்தால் 300 ஆவ்ருத்தி அகோர மஹாமந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

747. தண்டத்தில் ஏறிதர்பம், கொடி முதலியவைகளை கட்டுவது கூடாது. ஏனென்றால் தண்டநாதன் ஸாக்ஷõத் பரசிவஸ்ரூபம் துவஜாரோஹண: ஸமயத்தில் கும்பங்களுக்கு நியாஸம் செய்யப்படாமல் இருந்தால்

748. வ்ருஷப கும்பம் உடைந்திருந்த காரணத்தால் நியாஸம் செய்யாமல் இருந்தால் துவஜாரோஹணத்தை செய்து சாந்தி ஹோமத்தை செய்து கும்பத்தை முன்போல் ஸ்தாபனம் செய்து.

749. மனதில் விருஷபத்தை தியானித்துக் கொண்டு மந்திரந்யாஸம் செய்யவேண்டும். அப்பொழுது ஆவரணகும்ப தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படாமல் இருந்தால்

750. ஒவ்வொரு கும்பத்திலும் அந்த விருஷத்தின் அந்தந்த மந்திரங்களால் 100 தடவை ஜபம் செய்ய வேண்டும். ஏற்றப்பட்ட துவஜம், துவஜவளையத் திலிருந்து தொங்கினால்

751. ஒன்று அல்லது இரண்டு, மூன்று அங்குலம் இருந்தால் தோஷமில்லை. அதற்கு கீழே 12 அங்குலம் இருந்தால் 300 தடவை அகோரஜபம் செய்யவேண்டும்.

752. அதற்கும் கீழே கொடி தொங்கினால் சாந்தி ஹோமத்தைச் செய்து விருஷப பூஜை செய்து துவஜாரோஹணத்தைச் செய்யவேண்டும்.

753. பேரீ, வாத்யம், அடிப்பது இல்லாமல் இருந்தால் மனிதர்கள் ஊமையாகப் பிறப்பார்கள். சாந்தி ஹோமத்தைச் செய்து பிறகு பேரீ வாத்யத்தை முழங்க வேண்டும்.

754. உற்சவாரம்பத்திற்கு முன்பாக தேவதைகளை ஆஹ்வானம் செய்வதுடன் கூடிய தேவதைகளின் ஆவாஹனம் இல்லாமல் இருந்தால் தேவதைகளுக்கு ஸாந்நித்யம் இல்லாமல் போய்விடும்.

755. சாந்தி ஹோமத்தைச் செய்து முன்போல் தேவதைகளை, ஆஹ்வானம் செய்யவேண்டும். சிவன், பார்வதி, சுப்ரமண்யர், மஹாகணபதி, சூர்யன் சண்டிகேச்வரர் முதலியவர்கள்

756. அழைக்கப்படாமல் இருந்தால் தோஷம் ஏற்படும். ஆபத்து காலத்தில் மற்ற தேவதைகளை அழைக்கக் கூடாது. கொடி ஏற்றப்பட்ட பிறகு தேவதைகளை அழைத்துமோ, அழைக்காமலுமோ இருக்கலாம்.

757. பேரீவாத்யத்தை அடித்து முழங்குவது வழக்கம்போல் செய்யலாம். பேரீவாத்யத்தின் தோல் கிழிந்திருந்தாலும், பேரியின் பக்க பாகம், பேரியின் வலது, இடது வளையம் உடைந்துபோன்றும்

758. 300 ஆகோரமந்திரத்தை ஜபித்து வேறு ஒரு பேரியைக் கொண்வு வரலாம். அவ்வாறே வேறு வட்ட வடிவபாகத்தை தயார் செய்து கொண்டு வந்து முன்போல் பேரியை அடிக்கலாம். (டமாரம்)

759. அடிக்கும் வட்ட வடிவமானது தரையில் விழுந்தால் 300 தடவை அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும். அந்தக் காலத்திலோ (த்வஜாரோஹண) பலிகாலத்திலோ, பேரீ அடிப்பவன் கீழே விழுந்தால்

760. தேசத்திற்கு ஏற்பட இருக்கும் அவலநிலைப் போக்க சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். பேரீவாத்யம் தரையில் விழுந்தால் அரசருக்கு மாபெரும் பயம் உண்டாகும்.

761. அப்பொழுது சாந்தி ஹோமத்தைச் செய்து பேரியை ஹ்ருதய மந்திரத்தால் பூஜிக்கவேண்டும். யாகசாலை அக்னிபட்டு எரிந்திருந்தாலும், லக்ஷணம் இல்லாமல் இருந்தாலும்

762. விமானமோ, குண்டமோ, வேதிகையோ, எரிந்தாலும், அமைப்பு முறையின்றி இருந்தாலும், அரசாங்கத்தின், கெடுதலை அறியவும் மேற்கூறியவைகள் உற்சவகாலத்தில் ஏற்பட்டால் முறைப்படி சரிசெய்து உத்ஸவத்தை செய்ய வேண்டும்.

763. உற்சவ ஆரம்பம் முதல் தீர்த்ததினம் வரை ஒவ்வொரு நாளும் சாந்தி ஹோமத்தைச் செய்ய வேண்டும். (தீர்த்த) உற்சவ முடிவில் யாகசாலை லக்ஷணம், இல்லாமல் இருப்பது தெரிந்தால்

764. அந்தோஷ நிவ்ருத்திக்காக ஒரு நாள் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். விக்ரஹப்ரதிஷ்டையிலும் பரிஹாரத்திலும் இது பொது விதியாகும்.

765. ஸ்னபநத்திலும், ப்ரோக்ஷணத்திலும், மாஸ பூஜையிலும், பவித்ரோத்ஸவத்திலும், உத்ஸவத்திற்கு அங்கமான காரியத்திலும், ஜீர்ணோத்தாரத்திலும், ஆத்யேஷ்டிகை பூஜையிலும்

766. நித்யபூஜை , விசேஷபூஜை, காம்யமான மற்றுமுள்ள கர்மாக்களிலும் மேற்கூறியபடி செய்யவும் யாகத்தின் முடிவு நாளில் யாகங்களின் கருவிகள் பழுது அடைந்தாலும்

767. ஒரு நாள் உத்ஸவமாக இருப்பினும் சாந்தி ஹோமம் செய்ய வேண்டும். உத்தம, மத்யம, அதமமான கருவிகளுக் அழிவு ஏற்பட்டால்

768. சாந்தி ஹோமத்தைச் செய்து அகோர மந்திரத்தை 200 தடவையோ, அல்லது 300 தடவையோ ஜபிக்கவேண்டும். கும்பஸ்தாபன ஸ்தண்டிலம் அதனங்கம் சரியாக அமையாவிடில் சாந்திஹோமம் செய்ய வேண்டும்.

769. பயிர்கள் அழிவு என்ற தோஷ நிவ்ருத்திக்காக முன்போல் ஸ்தண்டிலத்தை அமைக்கவேண்டும். சிவகும்பத்திற்கும், வர்த்தனிக்கும், ஆவரண கடங்களுக்கும்

770. உத்ஸவத்திற்கு அங்கமான இதர கலசங்களிலும் உடைசலோ, அல்லது ஓட்டையோ, விரிசலோ ஏற்பட்டு கும்பங்கள் லக்ஷணம் இல்லாமல் இருந்தால்

771. சாந்திஹோமத்தை செய்து 500 தடவை, அகோரமந்திர ஜபத்தைச் செய்யவேண்டும். தோஷத்திற்கு பரிஹாரம் செய்ய 100, அல்லது 300 என்ற ஸங்க்யையில் அகோர ஜபம் செய்யவேண்டும்.

772. புதிய கும்பம் முதலியவைகளைக் கொண்டு வந்து முன்போல் ஸ்தாபனம் செய்யவேண்டும். வர்த்தனீ கும்பம், கடம், வித்யேச்வரதேவதைகள்.

773. தங்கமயமான தாமரைப்பூ இல்லாமல் ஸ்வல்பமான தங்கத்துடன் கூடினதாக இருந்தால் கர்தாவான பிரதான பருஷனுக்கு தாரித்ரியம் ஏற்படும். அதனைபோக்க 1000 முறை அகோரஜபம் செய்ய வேண்டும்.

774. அந்த தாரித்ரியம் நீங்குவதற்காக சாஸ்திரத்தில் சொல்லியபடி ஸ்வர்ணாதிகளை திரும்பவும் கும்பத்தில் போடவும் கும்பம் முதலியவைகள் வஸ்திரம் இல்லாமல் இருந்தால் ஜனங்களுக்கு வராரோகம் ஏற்படும்.

775. ஆகையால் ஆசார்யன் 1000 முறை அகோரமந்திரஜபம் செய்து திரும்பவும் வஸ்திரத்தை கொடுக்க வேண்டும். கும்பரத்னங்கள் குறைந்திருந்தாலும், அகோரஜபம் முன்கூறியபடி செய்து கும்பரத்னங்களைப் போட வேண்டும்.

776. நூல், கூர்சம், தேங்காய், மாவிலை முதலியவைகள் இல்லாமல் இருந்தால் முன்கூறியபடி பரிஹாரம் செய்ய வேண்டும். முன்பு கூறப்பட்ட ரக்ஷõபந்தனம், அதன் அங்கம் முதலியவை இல்லாமல் இருந்தால்.

777. அந்த யாகம் (ஹோமம்) பயனற்றது. ஆகையினால் அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவிருத்தி செய்வதற்காக சாந்திஹோமத்தை செய்து ரக்ஷõ சூத்ரத்தை கட்டவேண்டும்.

778. ரக்ஷõபந்தனத்தின் அங்கங்களில் லோபம் ஏற்பட்டால் 300 முறை அகோரஜபம் செய்ய வேண்டும். அப்பொழுதே அதிவாஸம் செய்யும் பூஜைகளுக்கு பகலில் ரக்ஷõபந்தனம் செய்யலாம்.

779. ஸ்வாமியை முன்பு இருந்த இடத்தில் ஸ்தாபித்து பிறகு ரக்ஷõ பந்தனத்தை செய்யவேண்டும். மண்டபத்திற்கு ஸ்வாமியை கொண்டு வந்த பிறகு ரக்ஷõசூத்ரம் கட்டினால் 150 தடவை அகோரஜபம் செய்யவேண்டும்.

780. பலி, தாளம் முதலியவை இல்லாமல் இருந்தால் 1000 தடவை அகோரஜபம் செய்யவேண்டும் தீபம் இல்லாமல் இருந்தால் 2 மடங்காக தீபங்களை சேர்க்க வேண்டும்.

781. உத்ஸவ காலங்களில் ஊர்வலமின்றி இருந்தால் ஜனங்களுக்கு எல்லாவித பாபங்களும் ஸம்பவிக்கும். ஒவ்வொரு ஸ்வாமி புறப்பாட்டிலும் ஸ்னபநம் சாந்திஹோமம் இவைகளைச் செய்யவேண்டும்.

782. மழைகாலத்திலும், புயல் காற்றிலும், அரசாங்க குழப்பத்திலும், எங்கும் பயம், நிறைந்த ஸமயத்திலும் ஸ்வாமியை கிராமபிரதட்சிணமாகக் கொண்டு போக வேண்டாம். தேவாலயத்தை பிரதட்சிணம் செய்தால் போதும்.

783. ஆசார்யன் அப்பொழுது ஸ்வாமிக்கு அபிஷேகம் (ஸ்னபனா) செய்து சாந்திஹோமத்தைச் செய்ய வேண்டும். (ஹேவி ப்ரேந்திரா) ஒரே பூமியில் ஊரில் வாஸ்துவில் சிவோத்ஸவம் நடந்து வரும் பொழுது

784. வேறு தேவதை உற்சவம் நடந்தால் கிராமத்திற்கு கஷ்டம் உண்டாகும். அந்ததோஷத்தைப் போக்குவதற்காக சாந்திஹோமத்தை செய்யவேண்டும்.

785. அவ்வாறே (கிராமதேவதை) தேவீ சாந்தியிலும் பிராயச்சித்தத்தை செய்யவேண்டும். அங்காரக பலி என்ற தீமிதி உத்ஸவத்தை யாமள தந்திரப்படி செய்வதில் குற்றமில்லை.

786. தவறுதலாக வாம, பைரவ, தந்திரப்படி பலி நடந்தால் கிராமத்திற்கு குறைவு ஏற்படும். அறியாமையால் பலி கொடுத்தால் சாந்திஹோமத்தை செய்ய வேண்டும்.

787. அவ்வாறு அம்பாள் சன்னதி விஷயத்திலும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஜனஸஞ்சாரம் இல்லாத கிராமத்தை அடைந்து பலியும், உற்சவமும் செய்யப்பட்டால்.

788. அப்பொழுது தேசத்திற்கு அழிவு ஏற்படும். அப்போது சாந்தியைச் செய்யவேண்டும். ஆலயத்திலோ, தேவலாயத்தை சுற்றி பலிபோடுவ தாவது (என்பது)

789. பிறருடைய பூமியைவிட ஆலயத்தைச் சேர்ந்த பூமியில் போடுவது சிறந்தது தேவலாயத்திலிருந்து எட்டியுள்ள பூமியைவிட அருகில் இருக்கும் பூமியில் பலிபோடுவது சிறந்தது.

790. பலவிதமான மரங்கள் நிறைந்ததும், பல வீடுகளோடு, கூடியதும். ஆன இடம் முன்பு கூறியதை விட உயர்ந்தாகும். அதற்கு மாறுதலாக இருந்தால் கஷ்டம் ஏற்படும்.

791. பிராம்மண க்ஷத்ரிய வைச்யர்களின் வாசஸ்தல பூமி சிறந்ததாக கூறப்படுகிறது. சக்தியற்றவர்களுக்கு வேறு இடம் அனுகல்பமாக கூறப்படுகிறது.

792. அனுலோம ஜாதியின் இடமோ அல்லது அப்ராம்மணரின் இடமோ மத்யமமாக கருதப்படுகிறது. அவர்களும் இல்லாமல் இருக்கும் பிரதிலோமனின் இடம் சிறந்தது இல்லாததாகப் பொருள் கொள்ளவேண்டும்.

793. உன்புறமான வாஸ்துவை விட வெளிச்சுற்று பலிபோடுவதற்கு விசேஷமாகும். ஒரே இடத்தில் பலியும் ஸ்வாமிவலம் வருவதும் ச்ரேஷ்டமாகும்.

794. அசக்தர்களுக்கு மத்யமாக வேறு இடத்தில் செய்ய வேண்டும். அசக்தர்கள் விஷயத்தில் சாந்தி ஹோமத்தைச் செய்யவேண்டும்.

795. விதாநம் என்கிற உபசாரக்கொடி அல்லாமல் இருந்தால் அகோரமந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும். த்வஜம் இல்லாமல் இருந்தால் 100 தடவை அகோரஜபத்தை செய்யவேண்டும்.

796. இரவில் த்வஜம் இல்லாமல் இருந்தால் தோஷம் இல்லை. ப்ராம்மணேத்தமர்களே! பலிக்கு உள்ள திரவியங்கள் இல்லாமல் இருந்தால் மக்களுக்கு பசி உபத்ரவம் உண்டாகும்.

797. 200 தடவை அந்த கிழமையின் அதிபதி மந்திரத்தை ஜபிக்கவேண்டும். மற்றொரு பூஜா காலத்தில் பலித்ரவியங்களுடன் கொடுக்க வேண்டும்.

798. பலிதானம் செய்யாவிடில் மனிதர்களுக்கு பசியால் உபத்ரவம் ஏற்படும். பிறகு மூர்த்தி ஹோமத்தைச் செய்து மூர்த்தி வலம் வந்த பிறகு பலியிட வேண்டும்.

799. தேவாலயத்தில் பலி இல்லாமல் இருந்தால் 100 தடவை அகோர மந்திரத்தை ஜபிக்க வேண்டும். கிராமத்தின் எந்த திசையில் பலி இல்லையோ, அங்கு ஸம்ஹிதா ஹோமத்தைச் செய்யவேண்டும்.

800. அந்தந்த திக்பாலகர்களின் மந்திரத்தை 100 தடவை ஜபிக்க வேண்டும். (உற்சவத்தில்) ஊர்வலம் வரும் காலத்தாலோ, அல்லது ஊர்வல முடிவிலோ பலியிட வேண்டும்.

801. அன்னத்திலான லிங்கம் இல்லாமல் இருந்தால் பூமியில் துர்பிக்ஷம் உண்டாகும். சாந்தி ஹோமத்தை செய்து அன்ன லிங்கத்துடன் பலியை செய்யவேண்டும்.

802. அன்னலிங்கம் உடைந்து விழுந்தாலும் தேசத்திற்கு துர்பிக்ஷம் ஏற்படும். அந்த அன்னலிங்கத்தை த்ருடமாகச் செய்து அஸ்திரத்தை பூஜிக்க வேண்டும்.

803. விதிப்படி ஸம்ஹிதாஹோமத்தை செய்து அதே இடத்தில் எடுத்து வந்து அந்த அன்னலிங்கம் விழுந்த இடத்திலிருந்து வலமாக பூஜையை செய்ய வேண்டும்.

804. கீழே அன்னம் விழுந்தால் அதை உபயோகிக்ககூடாது. வேறு அன்னத்தை தயாரித்து பூஜிக்க வேண்டும். முன்புபோல் உற்சவ புறப்பாட்டை முடித்துவிட்டு ஸம்ஹிதாஹோமத்தைச் செய்யவேண்டும்.

805. பலி பாத்திரம் விழுந்தால் அகோர மந்திரத்தை 1000 தடவை ஜபம் செய்ய வேண்டும். பலிபாத்திரம் உடைந்திருந்தால் வேறு பாத்திரத்தைக் கொண்டுவந்து பலிதிரவியத்தை வைக்க வேண்டும்.

806. தசாயுதங்கள் பூமியில் உண்டானாலும் விழுந்தாலும், உடைந்துபோனாலும் சாந்திஹோமம் செய்ய வேண்டும்.

807. மரத்தால் செய்யப்பட்ட ஆயுதங்கள் உடைந்தோ, வெடித்தோ, இருந்தால் வேறு ஆயுதங்களைத் தயாரித்து உலோகம் முதலிய பொருட்களால் ஆனவை சிதிலமடைந்தாலும் மாற்று ஆயுதங்களை செய்து

808. ஸம்ஸ்காரம் செய்து அந்தந்த மந்திரங்களால் மீதமுள்ள பூஜையை முடிக்க வேண்டும். அனுகர்மமுறைப்படி பிராயச்சித்தம் செய்து உலோகம் முதலானவைகளால் தசாயுதம் செய்து ஸ்தாபிக்க வேண்டும்.

809. கோயில் முதலான இடங்களில் அஸ்த்ர தேவர் (சூலம்) கீழே விழுந்தால் அரசருக்கு அரசாங்கத்திற்கும் பயம் உண்டாகும். திசாஹோமம் செய்து அஸ்திரபூஜை செய்யவேண்டும்.

810. விரிசல் உடைசல், முதலியவைகள், அஸ்திர தேவருக்கு ஏற்பட்டால் அனுகர்ம முறைப்படி சரி செய்தேறா அல்லது வேறு அஸ்திரதேவரையோ வைத்து முன்பு போல் திருவிழாவைச் செய்ய வேண்டும்.

811. உற்சவம் முடிந்ததும் (திருவிழா) விரிசல் உடைசல் ஏற்பட்டதை (பழைய அஸ்திரராஜரை) அனுகர்ம முறைப்படி சரிசெய்து ஸம்ப்ரோக்ஷணம் செய்து அஸ்திரராஜரைப் பிரதிஷ்டை செய்யவேண்டும்.

812. உற்சவ ஊர்வல மையத்திலோ, மற்ற காலத்திலோ உற்சவ பிம்பங்கள் விழுந்தால் அரசன் மரணமடைவான். உடனேயே பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

813. உற்சவ விக்ரகம் அங்கங்களோடு ஓர்முழ அளவு கீழே விழுந்தாலும் இருமுழமோ மூன்றுமுழமோ அதற்கு மேற்பட்ட அளவில் கீழே விழுந்தால் வரிசைப்படி பிராயச்சித்தம் செய்யவேண்டும்.

814. ஸம்ஹிதாஹோமம், சாந்திஹோமத்தையும், சாந்தி என்ற ஹோமத்தையும், மூர்த்திஹோமம், திசாஹோமத்தையும் செய்ய வேண்டும். ஸ்நபனாபிஷேகம் செய்வித்து லக்ஷம் ஆவ்ருத்தி அகோரமந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

815. நைவேத்யத்தை ஸமர்பித்து மீதமுள்ள நாட்கள் உற்சவத்தின் (திருவிழா) சாதாரணமான முறையில் நடத்த வேண்டும். அங்கங்களில் குறை ஏற்பட்டிருந்தால் அனுகர்ம முறைப்படி சேர்ப்பது முதலான பிராயச்சித்தத்தை செய்ய வேண்டும்.

816. அதிவாஸம் முதலிய கர்மாக்களை உடனே செய்யவேண்டும். ஆசார்யன் மாதம், நக்ஷத்திரம், திதி, வாரம் (தினம்) இவைகளை கவனியாமல்

817. மறுபடியும் ரக்ஷõபந்தனம் செய்து உற்சவம் முதலியவைகளை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். பிரதான (முக்கிய) அங்கங்கள் இல்லாவிடிலும் அனுகர்ம முறைப்படி சரிசெய்ய வேண்டும்.

818. இணைத்தலை முடிக்கும் வரை வேறு பேரங்களை வைத்து உத்ஸவத்தை நடத்த வேண்டும். தேசிகனாவன் தினந்தோறும் சாந்திஹோமம் செய்ய வேண்டும்.

819. வேறு இடத்திலிருந்து விக்ரத்தை எடுத்து வந்தாவது திருவிழாவை நடத்தவேண்டும். கர்ப்பக்ருஹத்வாரம் முதலிய அளவுப்படியோ, விருப்பப்பட்ட அளவுப்படியோ

820. பிம்பத்தை அனுகர்ம முறைப்படி செய்து முறைப்படி பிரதிஷ்டை செய்து முடிவில் அங்குரார்பணத்தை செய்து

821. ஒன்பது நாட்கள் முதலான தேவரின் உத்ஸவத்தை செய்ய வேண்டும். சிவலிங்க விஷயத்திலும் இவ்வாறே முன்பு சொல்லப்பட்ட பிராயச்சித்த கார்ய சமமே ஆகும்.

822. உற்சவம் நடக்கும் பொழுது ரக்ஷõபந்தனம் செய்யப்பட்ட விக்ரஹம் கிராமத்தை விட்டு வெளியில் செல்வது உசிதமல்ல. தூஷிக்கத்தகுந்ததாகும். அதனால் அரசருக்கு பயம் உண்டாகும்.

823. அந்த தோஷத்தை போக்குவதற்கு சாந்தி ஹோமத்தையோ, ஸம்ஹிதாஹோமத்தையோ, செய்ய வேண்டும். பூஜைக்கிரியைகளை செய்து கொண்டிருக்கும் ஆசார்யன் கீழே விழுந்தால்

824. கிராமத்திற்கு கெடுதல் ஏற்படும் அதற்காக அகோரமந்திரத்தை 500 ஆவ்ருத்திஜபம் செய்ய வேண்டும். சாதகர் கீழே விழுந்தாலும் முன்போல் 500 தடவை அகோரஜபம் செய்யவேண்டும்.

825. அந்த ஸமயத்தில் பலிபீடம் விழுந்தால் 100 தடவை அகோரஜபம் செய்யவேண்டும். தசாயுதம் அஸ்திரதேவர், அன்னலிங்கம், ஸ்வாமியை சுமப்பவர்கள் தரையில் விழுந்தால்

826. ஆசார்யன் 100 தடவை அகோர ஜபம் செய்ய வேண்டும். இருமடங்காக (200) சிவமூல மந்திரத்தையும் அஸ்திர மூலமந்திரத்தையும் ஜபிக்க வேண்டும். முழுமையான ஸந்தியை முதலிய பூஜைகள் தவறினாலும்

827. பாத்யாதிகள், சந்தனம், புஷ்பம், தூபம், தீபங்கள் (தூண்டாத) அணையாவிளக்கு, நைவேத்யங்கள் முதலியவை இல்லாமல் இருந்தால்

828. முன்பு கூறிய பிரகாரம் ஆசார்யனால் பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும். யாகசாலை பூஜாஹோமம் தடைப்பட்டாலும், ஹோமதிரவியங்கள் குறைந்திருந்தாலும்

829. சிவனை ஆவாஹனம் செய்யப்பட்ட யாகாக்னி அணைந்தாலும், சாமான்யமான அக்னி அணைந்தாலும் முன்போல் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். தேர் ஓட்டம் இல்லாமல் இருந்தால் மனிதர்கள் மிகவும் கீழ்த்தரப்பட்டவர்களாகிறார்கள்.

830. அப்பொழுது சாந்திஹோமத்தை செய்து ரதாரோஹணத்தை நடத்த வேண்டும். ரதத்தில் (தேரில்) ஸ்வாமி திருவீதி (உலா) வலம் வரும் ஸமயத்தில் தேர் முதலியவைகள் முறிந்துபோனால் பூமிக்கு பங்கம் ஏற்படும்.

831. ஆகையினால் இணைப்பதற்கு தகுந்தவைகளை இணைத்து சீர்திருத்தம் செய்து சாந்தியை செய்யவேண்டும். அந்த இடத்திலோ, அல்லது கோயிலிலோ வீதி உலா சமயத்தில் ஏற்பட்ட குற்றத்தை போக்க

832. இணைத்து சீர்திருத்தம் செய்யமுடியமால் போனால் வேறு ரதம் (தேரை) ஒன்றைக் கொண்டு வர வேண்டும் அல்லது பல்லக்கு முதலியவைகளில் பரமேச்வரனை ஆரோஹணம் செய்து

833. பிறகு முன் போலவே பரமேச்வரனை ஆலயத்தில் இருக்கச் செய்யவேண்டும். உற்சவ (திருவிழா) வேடிக்கை தர்சன காலத்தில் சண்டை, கலஹம் உண்டானால்

834. சாந்தி ஹோமத்தைச் செய்து பத்தாயிரம் தடவை அகோரஜபம் செய்ய வேண்டும். உற்சவ (திருவிழா) வேடிக்கை தர்சனம் இல்லாமல் ஸம்ஹிதா ஹோமத்தைச் செய்யவேண்டும்.

835. முறைப்படி நீராஜனம் (தீபாராதனை) இல்லாமல் இருந்தால் முன்போல் பிராயச்சித்தம் அனுஷ்டிக்க வேண்டும். ஸ்வாமி திருவீதி வலம் வந்த பிறகு ஸ்நபனாபிஷேகம் இல்லையெனினும் சாந்தி ஹோமம் செய்யாவிடினும்

836. தேவதா, ஸாந்நித்யம், குறைந்து விடும். ஆதலால் தேவதாஸாந்நித்யம் ஏற்படும் பொருட்டு (சித்திப்பதற்கு) மூர்த்தி ஹோமம், ஸ்நபநாபிஷேகம் சாந்திஹோமத்தை செய்ய வேண்டும்.

837. ஆசாரக்குறைவாக உள்ளவர்கள் இருக்கும் இடத்தில் ஸ்வாமியின் திருவீதி ஊர்வலம் நடைபெற்றால் விசேஷ ஸ்நபந அபிஷேகம் மிகவும் விஸ்தாரமாக சாந்திஹோமத்தையும் செய்யவேண்டும்.

838. ஸ்வாமிக்கு எண்ணைக்காப்பு இல்லாமல் இருந்தால் மனிதர்களுக்கு தலைவலி முதலிய சிரோரோகம் ஏற்படும். அந்ததோஷ நிவ்ருத்திக்காக சாந்திஹோமத்தைச் செய்து தைலாபிஷேகத்தை செய்யவேண்டும்.

839. முன்பு ஸங்கல்பிக்கப்பட்டபடி நடராஜ மூர்த்தியின் உற்வசம் இல்லாமல் இருந்தால் எல்லோரும் பாபிகளாக ஆவார்கள் அதற்காக சாந்தியைச் செய்ய வேண்டும்.

840. சாந்தி செய்த பிறகு சவுகர்யப்பட்ட காலத்தில் நடராஜ வீதிவலத்தை செய்யவேண்டும். யாத்ராதானம் இல்லாமல் இருந்தால் அந்த யாத்ரை பயனற்றதாக ஆகும்.

841. அதற்காக சாந்தி ஹோமம் செய்து முன்பு போல் நடேசரை ஊர்வலமாக வரச் செய்ய வேண்டும். ஸ்வாமிக்கு வேட்டை ஊர்வலம் இல்லாமல் இருந்தால் அரசருக்கு தோல்வி ஏற்படும்.

842. அதனால் சாந்திஹோமத்தை செய்து சவுகர்யமான இஷ்டதினத்தில் வேட்டை உற்சவத்தை நடத்த வேண்டும். ரக்ஷõபந்தன மஞ்சள் நீர் விளையாட்டு இல்லாமல் இருந்தால் கங்கை முதலிய திவ்ய நதிகளின் ஸான்னித்யம் இருக்காது.

843. சூர்யோதயத்திற்கு பிறகு மஞ்சள் நீர் விளையாட்டு செய்யப்பட்டால் அதன் பரிஹாரமாக சாந்திஹோமம் திசாஹோமம் செய்யவேண்டும்.

844. கொடி ஏறி இருக்கும் ஸமயத்தில் மஞ்சள் நீர் விளையாட்டு செய்யப்பட்டாலும் வேறு இடத்தில், மஞ்சள் நீர் விளையாட்டை செய்தோ செய்யாமலோ இருக்கலாம்.

845. சூர்ணோத்ஸவமோ அல்லது அதனுடைய அங்கமோ இல்லாமல் இருந்தால் வியாதி, பீடை உண்டாகும். சூர்ணோத்ஸவம் இல்லையென்றால் சாந்திஹோமத்தையும் அதன் அங்கம் இல்லை என்றால் ஸம்ஹிதா ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

846. தீர்த்தவாரி ஆலயத்திற்கு உட்பட்டதாக செய்யபடாவிட்டாலும், சூர்ணோத்ஸவ சுற்றுதல் செய்யப்படாவிட்டாலும் ஸம்ஹிதாஹோமத்தை செய்ய வேண்டும்.

847. புண்ய தீர்த்தில் தீர்த்த ஸ்னானம் இல்லாமல் இருந்தால் யாகசாலை ஹோமம் பயனற்றதாகும். அதற்காக சாந்தியை செய்து தீர்த்தவாரியை நடத்த வேண்டும்.

848. முன்பு நதி முதலியவைகளில் நடைபெற்ற தீர்த்தஸ்னான முறை தற்சமயம் மாறி இருந்தால் தோஷம் ஏற்படும் அதன் நிவ்ருத்திக்காக சாந்தி ஹோமத்தை செய்யவேண்டும்.

849. தீர்த்தவாரியின் அங்கமான கார்யங்களில் குறைவு ஏற்பட்டால் ஸம்ஹிதாஹோமம் செய்ய வேண்டும். கோயில் மண்டபத்தில் மனிதன் பிறந்தாலோ, இறந்தாலோ ராஜாவுக்கு மாபெரும் பயமேற்படும்.

850. பிறப்பு, இறப்பு ஏற்பட்டவர்களை கோயிலிருந்து நீக்கி பசுஞ்சாண தீர்த்தத்தால் பிரோக்ஷிக்க வேண்டும். அந்த பிறகு இறந்தவர்கள் எந்த வழியில் சென்றார்களோ

851. அந்த வழியில் புண்யாக பிரோக்ஷணத்தை செய்யவேண்டும். பிறந்த, இறந்த இடமானது தோண்டபடுவையாக இருந்தால் தோண்டி வெட்டி எடுக்க வேண்டும்.

852. அசுத்தமான மண்ணை எடுத்துவிட்டு சுத்தமான மண்ணை நிறப்ப வேண்டும். பிறகு இறந்த இடத்தின் அருகில் உள்ள சுவர் முதலான இடங்களை கோமயத்தினால் (பசுஞ்சானம்) மெழுக வேண்டும்.

853. புண்யாக வாசனம் பஞ்சகவ்யத்தால் பிரோக்ஷணம் செய்யவேண்டும். சிவப்ராம்மணருக்கு உணவு அளித்து அவ்விடத்தை ஜலத்தினால் பிரோக்ஷணம் செய்ய வேண்டும்.

854. கர்பகிருஹத்தில் முன்கூறிய அசந்தர்பம் நடந்தால் ஸ்பனாபிஷேகம் செய்து சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். அர்த்த மண்டபத்தில் முன் கூறிய சம்பவம் நடந்தால் சாந்தி ஹோமம் இல்லாமல் ஸ்நபனத்தை செய்ய வேண்டும்.

855. உற்சவ மூர்த்தி மண்டபத்தில் மேற்கூறிய சம்பவம் நடந்தால் ஸ்நபனம் இல்லாமல் சாந்தி ஹோமத்தை உட்பிராகார பிரதேசங்களில் அச்சம்பவம் நடந்தால் புண்யாஹ பிரோக்ஷணத்தை செய்ய வேண்டும்.

856. உட்பிராகாரங்களில் இருக்கும் மூர்த்திகளுக்கு சாந்தி ஹோமத்துடன் ஸ்நபனாபிஷேகம் செய்ய வேண்டும். அங்கு இருக்கும் பீடங்களையும் பஞ்சகவ்யத்தால் சுத்தியின் பொருட்டு பிரோக்ஷிக்க வேண்டும்.

857. மண்பாண்டங்களை விலக்க வேண்டும். மரத்தாலான பாத்திரங்களை ஜலத்தால் அலம்ப வேண்டும். வெளிப் பிராகாரத்தில் முன்கூறிய அசுத்தமானவை சம்பவித்தால் ஸ்நபனத்துடன் திசாஹோமத்தை செய்ய வேண்டும்.

858. மடப்பள்ளி முதலிய இடங்களில் மரணம் ஸம்பவித்தால் முன்போல் சுத்தி பரிஹாரங்களை செய்து வாஸ்து சாந்தியை செய்யவேண்டும்.

859. பிறகு சாந்தி ஹோமத்தையும் மூர்த்தி ஹோமத்தையும் செய்ய வேண்டும். மூன்றாவது பிராகாரத்தில் மரணம் முதலியன ஏற்பட்டால் சாந்தி ஹோமத்தை செய்யவேண்டும்.

860. தேவாலத்திலிருந்து 12 தண்ட அளவுக்கு உட்பட்ட தான இடத்தில் மனிதன் இறந்துபோனால் அவற்றை வெளியில் கொண்டு சென்றுவிட்டு நித்ய, நைமித்திகாதிகள் செய்யவேண்டும்.

861. சவத்தை வெளியேற்றாமல் நித்ய நைமித்திக பூஜைகள் நடந்தால் கிராமத்திற்கு நாசம் ஏற்படும். அதற்காக ஸ்நபனாபிஷேகம் செய்ய வேண்டும். ஆலயத்தில் பறவைகள், வீட்டு விலங்குகள், மிருகங்கள், பிரஸவித்தாலோ இறந்தாலோ

862. பாம்பு பிறந்தாலும், தேசமக்களுக்கு பலவித கெடுதல்கள் உண்டாகும். அந்த இடத்தில் கோமயத்தால் மெழுகி பஞ்சகவ்யத்தால் பிரோக்ஷணம் செய்யவேண்டும்.

863. கர்பகிருஹத்தில் மேற்கூறியவை மரணம் அடைந்தால் ஸ்நபன அபிஷேகத்துடன் சாந்தி ஹோமத்தை செய்ய வேண்டும். அர்த்த மண்டபத்தில் முன்பு சொன்னவைகள் மரணம் அடைந்தால் ஸ்நபன அபிஷேகம் மட்டும் செய்யவேண்டும்.

864. உற்சவதேவதா மண்டபத்தில் பிராணிகளின் மரணம் ஏற்பட்டால் பஞ்ச கவ்யத்தால் மூர்த்திகளை பிரோக்ஷித்து சந்தனம், புஷ்பம், முதலியவைகளால் பூஜித்து சாந்தி ஹோமத்தை செய்யவேண்டும்.

865. இப்பொழுது கூறப்பட்ட பரிஹாரம் அனைத்தும் உற்சவகாலங்களுக்கும், உற்சவமில்லாத ஸமயத்திலும் பொதுவானதாகும். ஆசார்யனுடைய தலைப்பாகையோ, மேல்வஸ்திரமோ இடுப்பு வேஷ்டியோ, பூணூலோ

866. ஆசார்யனுடைய தலையோ, அக்னியால் பாதிக்கப்பட்டால் கிராமத்தில் ஜனங்களுக்கு ஜ்வாபாதை உண்டாகும். அந்த தோஷத்தைப் போக்குவதற்காக

867. ஆசார்யன் ஸ்நானம் செய்து ஆசாரத்துடன் இருந்து கொண்டு சாந்திஹோமத்தைச் செய்ய வேண்டும். ஹேமுனீஸ்வரர்களே கர்த்தாவாக இருந்தாலும், ஹோமம் செய்பவர்களாக இருந்தாலும் இதே பரிஹாரமாகும்.

868. வஸ்திரம், படுக்கை, ஆஸனம், ஆகியவைகள் அக்னியால் பாதிக்கப்பட்டாலும், எலிகளால் கடித்து கிழிக்கப்பட்டு இருந்தாலும், அவைகளின் பலன் கூறப்படுகிறது.

869. வஸ்திரமூலையில் அக்னிதாஹம் ஏற்பட்டிருந்தால் அபிவிருத்தியும், சவுக்யமும் உண்டாகும். ஓரத்தில் தீப்பிடித்திருந்தால் கஷ்டம் ஏற்படும். வஸ்திர தலைப்பின் ஆரம்பம் நடுபாகம் முடிவுபாகம் எரிந்தால் புத்ரலாபமும் புகழும் ஏற்படும்.

870. ஓரமாக இருந்தால் கஷ்டம், வியாதி, மரணமும் பிரம்மபாகமான நடுபாகம், கிழக்கு, தெற்கு ஆக்னேயம் இந்த திசைகளில் ஏற்பட்டால்

871. அந்தந்த திக்கில் உள்ள ஜனங்களுக்கு பெரியதோஷம் கூறப்பட்டுள்ளது. இதுமாதிரியான தோஷம் எங்கும் கூறப்படவில்லை. இவ்வாறே ஜனங்களின் தோஷ நிவிருத்திக்காக விதிப்படி ஸ்னானம் செய்து

872. 1000 ஆவ்ருத்தி ஆகோர ஜபம் செய்து கடிக்கப்பட்ட வஸ்திரங்களை எரித்துவிட வேண்டும். மனிதர்கள், சிவபக்தர்கள், தீக்ஷிதர்கள், சிவபெருமான் இவர்களுக்கு அர்பணம் செய்யப்பட்ட ஆடையோ,

873. தெய்வத்தின் வஸ்திரமோ அக்னியால் பாதிக்கப்பட்டால் பஞ்சகவ்யத்தால் பிரோக்ஷித்து சுத்தியின் பொருட்டு ஸம்ஹிதா ஹோமத்தையோ அல்லது 1000 ஆவ்ருத்தி அகோர ஜபத்தையோ செய்யவேண்டும்.

874. யாகசாலையில் சிவதீøக்ஷ இல்லாதவர், மற்ற சூத்ரர்களாலும், திரவ்யங்களுடன் பிரவேசிக்கப்பட்டால் அஸ்திர தீர்த்தத்தால் பிரோக்ஷணம் செய்து 10 தடவை அகோரமந்திரத்தை ஜபிக்கப்படவேண்டும்.

875. கும்பம் முதலிய திரவ்யங்கள் ஆதிசைவர் அல்லாதவர்களால் தொடப்பட்டாலும் வேறு பாத்ராதிகளை ஏற்கவும், யாகசாலைக்குள் நாய் முதலியவை நுழைந்தால் ஸம்ஹிதாஹோமத்தைச் செய்யவேண்டும்.

876. பிற்படுத்தப்பட்டவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் யாகசாலைக்குள் பிரவேஸித்து ஸ்பர்சிக்கப்பட்டால் பசுஞ்சாணத்தால் மெழுகி, புண்யாக ப்ரோக்ஷணத்துடன் பஞ்சகவ்யப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

877. ப்ரஸவத்தீட்டுள்ளவர்களும், இறப்புத் தீட்டு உள்ளவர்களும் கும்பங்களை தொட்டால் அக்கும்பங்களை தள்ளுபடி செய்து பசுஞ்சாணத்தால் மெழுகி பர்யக்னி கரணம் என்று வாஸ்து சாந்தியை செய்யவேண்டும்.

878. பிறகு மூர்த்தி ஹோமத்தைச் செய்து கடைசியில் கும்பங்களை முன்போல் ஸ்தாபனம் செய்ய வேண்டும். நாய் முதலியவைகளால் ஸ்பர்சம், ஏற்பட்டால் முன்கூறிய முறைப்படி பரிஹாரத்தை செய்யவேண்டும்.

879. சண்டாளர் முதலியோர் யாகசாலையில் அதனருகிலும் பிரவேசித்தால் ஸ்வாமிக்கு ஸ்நபனம் செய்வித்து திசாஹோமத்தைச் செய்யவேண்டும்.

880. அவர்கள் மூர்த்திகளை தொட்டால் முன்புபோல் ஸ்நபனாபிஷேகம் செய்து திசாஹோமத்தைச் செய்ய வேண்டும். யாகசாலை, அக்னியால் பாதிக்கப்பட்டால் அரசருடைய மாளிகையில் பயம் உண்டாகும்.

881. முன்பிருந்த கும்பங்களை, அகற்றிவிட்டு ஈச்வரனைப் பூஜித்து மூர்த்தி ஹோமத்தைச் செய்து முன்புபோல் யாகசாலையை நிர்மாணித்து

882. உடனே அதிவாஸ முறைப்படி கும்பங்களை ஸ்தாபித்து முன்பு போல எரியாத யாக மண்டபத்தில் யாகசாலை கார்யங்களை செய்ய வேண்டும்.

883. மடப்பள்ளி, ஆஸ்தான மண்டபம், கோபுரம் முதலியவை அக்னியால் பாதிக்கப்பட்டிருந்தால் சாந்தி ஹோமத்தைச் செய்து முன்பு கூறிய பிரகாரம் கார்யங்களைச் செய்யவேண்டும்.

884. பந்தல் தீக்கிரையானால் ஸம்ஹிதா ஹோமத்தைச் செய்யவேண்டும். கர்ப கிருஹம் அர்த்தமண்டபம், உற்சவமூர்த்திகள்

885. உள்பிரகார உள்பாகம், வெளிபாகம், வெளிப்பிரகாரம், இவைகளில் அக்னிபாதை ஏற்பட்டால் ஸ்வாமிக்கு ஸ்நபனாபிஷேகம் செய்து திசாஹோமம் மூர்த்தி ஹோமத்தைச் செய்யவேண்டும்.

886. லிங்கம், மூர்த்தம் இவைகள் அக்னிபாதை ஏற்பட்டால் சாந்தி என்ற ஹோமத்தையும், சாந்தி ஹோமத்தையும் ஸம்ஹிதா ஹோமத்தையும், செய்து அதற்காக கூறப்பட்ட பரிஹாரத்தையும் செய்யவேண்டும்.

887. பரிவார தேவாலயம் அக்னியால் பாதிக்கப்பட்டால் உற்சவ மூர்த்தி மண்டபத்திற்கு சொன்ன பரிஹாரத்தை செய்ய வேண்டும். உற்சவகாலத்திலும், உற்சவமல்லாத காலத்திலும் இப்பரிஹாரம் பொதுவானது ஆகும்.

888. கிராம, நகரங்களில் வீடுகள் அக்னியால் பாதிக்கப்பட்டால் ஸம்ஹிதா ஹோமத்தை செய்ய வேண்டும். மாபெரும் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சாந்திஹோமத்தை செய்யவேண்டும்.

889. பிராயச்சித்தம், செய்யாவிட்டாலும், ஆசார்யனுக்கு வஸ்திரம், உத்தரீயம், தலைப்பாகையுடன் தங்கத்தால் ஆன மோதிரம் தோள்வளை, அரைஞான், காதணி, பூணூல் ஆகியவையோ,

890. அல்லது முடியாத பக்ஷத்தில் தங்க மோதிரத்தையாவது இஷ்டப்பட்ட பொருள்களையோ கொடுக்கப்படாவிட்டால் அகோர ஜபத்தை 100 தடவை ஜபம் செய்து அவற்றை கொடுத்தல் வேண்டும்.

891. பல ஆசார்யர்களின் கலப்பு ஏற்பட்டால் அரசருக்கு அழிவு ஏற்படும். ஒரே ஆலயத்தில் ஒரே ஆசார்யனால் பூஜைகள் செய்யப்படவேண்டும். பல பூஜைகளின் சேர்க்கை ஏற்பட்டால் ஆசார்யகலப்பு ஏற்படும்.

892. ரிஷிகள் கூறுகிறார்கள் ஜலம் முதலியவைகளை கொண்டு வருதல், சந்தனம், புஷ்பம் தூபம் முதலியவைகளை தயார் செய்தல்

893. தீபம் நைவேத்யம் தயார் செய்தல், ஸ்வாமிக்கு நித்ய பூஜை செய்தல், உற்சவமூர்த்திகள் பூஜை பரிவார தேவதை பூஜைகள்

894. நித்யோத்ஸவங்கள் பாடச்செய்தல், அபிஷேகத்திற்கு உபகரணங்களை வரிசையாக கற்பித்தல் உத்ஸவங்களின் பூர்வாங்கமான கார்யங்களைச் செய்தல் தேவதைகள் ஆவாஹணம் முதலியன

895. அச்சமயத்தில் மூலஸ்தான லிங்கத்திற்கு பூஜை நித்யஹோமங்கள், இவ்வாறாக இவைகளை பலமனிதர்கள் செய்யவேண்டியிருப்பதால் எவ்வாறு ஒரு ஆசார்யன் செய்யமுடியும்

896. சிவன் கூறுகிறார். பெரிய அறிவாளிகளே! ஸாதுக்களே! நீங்கள் கேளுங்கள். இதற்குத்தகுந்த ஸமாதானத்தைக் கூறுகிறேன். ஒரே ஆலயத்தில், நித்ய, நைமித்தக காம்யபூஜைகள் இருப்பின் அதை

897. ஒரே ஆசார்யன் செய்யவேண்டுமென்பது என்னால் நன்கு கூறப்பட்டது. எவ்வாறெனில் ஆசார்யனுடைய புத்ரனோ அல்லது பேரனோ அல்லது அவருடைய உறவினரோ

898. ஆசார்யனால் தீøக்ஷ செய்து வைக்கப்பட்டவர்களும், ஆசார்யருடைய உத்தரவுக்குக் கீழ்படிந்தவர்களும் ஆதிசைவகுலத்தில் உதித்தவர்களால் பிராம்மணர் க்ஷத்திரியர் வைச்யர்

899. சூத்ரர்களும், அனுலோம ஜாதியினரும் அவ்வாறே, பாட்டு பாடுபவர்கள், ஆடுபவர்கள், தேவதாஸிகள் என்ற என்னுடைய தாஸிகளும் ஆசார்யருடைய உத்தரவை ஏற்று செய்பவர்கள் எவர் உண்டோ அவர்கள்

900. அந்தந்த கார்யங்களைச் செய்திருந்தாலும், அரசரால் நியமிக்கப்பட்ட சிற்றரசர்கள் அரசர் ஆணையை நிறைவேற்றுவது போல் ஆசார்யன் செய்ததாகவே ஆகும்.

901. சிற்றரசர்கள் செய்தது எப்படி அரசருடைய, காரியமோ, அப்படியோ இங்கும், ஆசார்யனுடைய ஆக்ஞையால் மற்றவர்கள் செய்தாலும் அது ஆசார்யன் செய்ததாகவே கொள்ள வேண்டும்.

902. அப்படி இல்லாமல் இருந்தால் ஸாங்கர்யதோஷம் ஏற்படும். எந்த கிரியைகள் உள்ளவைகளோ அவைகளை மறுபடியும் மறுபடியும் சாஸ்தி ரோக்தமான பரிஹாரம் செய்யவேண்டும்.

903. எல்லா கிரியைகளிலும் சாஸ்திரத்தில் கூறப்படாததை செய்யக்கூடாது. அப்படி சாஸ்திரத்தில் கூறப்படாததை செய்தால் அரசனுக்கு கலக்கம் ஏற்படும்.

904. அந்த தோஷத்தைப் போக்குவதற்கு சாஸ்திரத்தில் கூறப்பட்ட சாந்தியை செய்யவேண்டும். சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதை முதலில் செய்து பிறகு அதிகப்படி செய்வது சுகாபிவ்ருத்தியை தரும்.

905. ஆகையால் எப்படியாவது முயற்சி செய்து முன்பு செய்ததை விட அதிகமானதாகவே செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாம மஹாதந்திரத்தில் பிராயச்சித்த விதியாகிற முப்பதாவது படலமாகும்.