செவ்வாய், 24 செப்டம்பர், 2024

மாவளத்தான்...

மாவளத்தான்!

நலங்கிள்ளி என்பவன் சங்கக் காலச் சோழ அரசன். பேராற்றல் கொண்ட அவனுக்கு, தம்பி மாவளத்தான் என்பவன். மிகுந்த ஆற்றல் படைத்தவன் என்பதை அவனது பெயரே சொல்லும். ஒரு நாள் மாவளத்தான் அரச மாளிகையில் அழகான மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றான். அப்போது தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் அங்கே வருகிறார். தாமப்பல் என்பது ஓர் ஊர். இவ்வூர் இப்போது காஞ்சிபுரத்திற்கு அண்மையில் தாமல் என்று சிதைந்து அவரது வழங்கி வருகின்றது. கண்ணன் என்பது அவரது இயற்பெயர். உயர்வுச் சிறப்புக் கருதி அவரை கண்ணனார் என அனைவரும் அழைத்தனர். வந்த புலவரை எழுந்து வரவேற்று இருக்கையில் அமரச் செய்கிறான் மாவளத்தான். அவன் முன்பு வட்டாடு அரங்கம் அமைக்கப்பட்டு வட்டாடு கருவியும் உள்ளதை ஆவலோடு  புலவர் பார்க்கிறார். அவரது ஆவலை உணர்ந்து கொண்ட மாவளத்தான் அவரை வட்டாட அன்போடு அழைக்கிறான். வட்டாடுதல் என்பது சங்க கால விளையாட்டு. இருவரும் ஆடத் தொடங்குகின்றனர். சிறு பொழுதுக்குள் ஆட்டம் விறுவிறுப்பு அடைய புலவர் தோல்வியை நோக்கி மெல்ல மெல்லத் தள்ளப்படுகின்றார்.

தோல்வி பெற விரும்பாத புலவர், மாவளத்தான் கண் இமைக்கும் நேரத்தில் வட்டைத் தன் வலக்கையில் மறைத்துக் கொண்டு அது எங்கோ தொலைந்து போய்விட்டது போலத் தேடத் தொடங்கினார். அகத்தின் அழகு முகத்தில் தெரிவதை மாவளத்தான் புரிந்து கொண்டான். அவ்வளவுதான், புலவர் சற்றும் எதிர்பாராதவாறு சட்டென்று அவரது வலக்கையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக் கொண்டு உள்ளங்கையில் அவர் மறைத்து வைத்திருந்த வட்டை எடுத்தான். மாளவத்தானுக்குப் புலவரது செயல் மிகுந்த கோபத்தைத் தந்ததால் வட்டை அவர் மீதே விட்டெறிந்தான். கோபம் குடியைக் கெடுக்கும் அல்லவா? மாவளத்தான் இவ்வாறு குணம் கெட்டு நடந்து கொண்டபோது புலவரும் தம் நிலை மறந்து கொதித்தெழுந்தார். விளையாட்டு வினையானது! மாவளத்தானைப் பார்த்து சொல்லக் கூடாத சொற்களால் அவனைச் சுட்டார் புலவர். இது கொன்றிடல் போன்ற ஒரு சொற்றொடர். புலவர், மாவளத்தானிடம் சொன்ன கொடுஞ்சொல்: நீ சோழனுக்குப் பிறந்தவன் இல்லை.

அவ்வளவுதான், இந்த வசைமொழிக்குப் பின் அந்த இடத்தில் என்ன நிகழ்ந்திருக்க வேண்டும்? நாம் நினைப்பது போல, புலவரது தலை மாவளத்தானின் வாளால் துண்டாடப்படவில்லை, புயல் வீசவும் இல்லை; எரிமலை வெடிக்கவும் இல்லை. அப்போது அங்கே முழு அமைதி நிலவியது. சோழப் பேரரசின் பேராற்றல் மிக்க இளவரசன் தலைகுனிந்தவாறு மவுனமாக நின்றான். ஆம், புலவர் மேல் வட்டை எறிந்த தன் செயலுக்காக அவன் நாணி வருந்திக் கொண்டிருந்தான். மாவளத்தானின் இந்த நிலையைக் கண்ட தாமப்பல் கண்ணனார் அதிர்ந்து போனார். நாவடக்கம் இன்றி தாம் சொன்ன சொற்களுக்காக அவர் அச்சமும், அளவில்லாத துயரும் கொண்டார். என்ன நிகழுமோ எனச் செயலற்று நின்ற அவர், தாம் மாவளத்தானுக்குப் பெரும் பிழை செய்திருக்க, அவனோ தமக்குப் பெரும் பிழை செய்ததுபோல நாணித் தலை கவிழ்ந்த பெரும்பண்பை நினைத்துக் கலங்கினார். இளவரசே! உன்னை நான் கூறத்தகாத சொல்லால் சுட்டதற்கு கோபப்படாமல் ஏதோ எனக்குக் குற்றம் செய்ததுபோல வெட்கமும், வேதனையும் படுகின்றாய். உனது இந்த அருஞ் செயல், எனக்கு எதனை உணர்த்துகின்றது தெரியுமா? சோழ மரபில் பிறந்தவர்கள் தமக்குப் பிறர் செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும் பண்புடையவர்கள் என்பதைத் தான். உண்மையில் நான்தான் உனக்குக் குற்றம் செய்தவன் (என்னைப் பொறுத்த ஏந்தலே) காவிரி நீர் கொழித்துக் கரையில் சேர்த்த  ஆற்று மணலினும் பலவாக உன் வாழ்நாள் சிறக்க வேண்டும் எண்ணற்ற ஆண்டுகள் வாழ வேண்டும்.

இதனால் வசையைப் பொறுத்தவன் புகழ் பெறுவான் என்பது புலப்படுகின்றது அல்லவா? மாவளத்தான் புலவரைத் தன் பொறுமையால் வென்று விட்டான் என்பது வரலாறு. இன்று அறியாமையால் அல்லது ஆணவத்தால் நம்மைச் சிலர் வசைபாடலாம்: பழித்துப் பேசலாம். அவற்றை எல்லாம் பொறுமையால் நாம் வென்றுவிட வேண்டும். பொறுத்தவர் பூமி ஆள்வார்

மாதன்னா, அக்கன்னா...

மாதன்னா, அக்கன்னா...

கோபண்ணாவின் அந்த உறவினர் இருவருமே கோபண்ணாவின் தாய்வழி மாமன்மார் ஆவர். அவர்களில் பெரிய மாமன் பெயர் மாதன்னா- இளைய மாமன் பெயர் அக்கன்னாவாகும். இவர்கள்தான் கோபண்ணாவை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஹைதராபாத்தை தானீஷா எனும் நிஜாம் ஆட்சி புரிந்து வந்தார். இந்த தானீஷா இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் ஓர் அரசனுக்குரிய தலைமைப் பண்பு அவ்வளவும் இவரிடம் நிரம்பி இருந்தது. குடிமக்களை பாரபட்சமின்றி வழி நடத்தி ஆட்சி புரிந்து வந்தார். இவரது ஆட்சியில் வரி வசூல் மிகச் சிறப்பான முறையில் இருந்தது. நலத்திட்டங்களும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த தானீஷாவின் அவையில் இந்துக்களும் நல்ல நல்ல பதவிகளில் இருந்தனர். பிற மதத்தவரின் சுதந்திரத்தில் தானீஷாவும் தலையிடாதபடி ஒரு நல்லாட்சி நடைமுறையில் இருந்தது.

தானீஷாவிடம் கோபண்ணாவின் மாமன்மார்கள் இருவருக்கும் நல்ல பெயரும் வரவேற்பும் இருந்தது. அதுவே கோபண்ணாவுக்கும், தானீஷாவுக்கும் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது. கோபண்ணாவை விதிதான் வழி நடத்தியபடி இருந்தது. அந்த விதியே கோபண்ணாவுக்கு தானீஷா மூலமாக தாசில்தார் என்னும் வேலையை வாங்கித் தந்தது. ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக அந்த நாளில் பத்ராசலம் எனும் ஊர் விளங்கிற்று. இங்கே கோதாவரி நதியின் பாய்ச்சல் ஒரு புறம்- மறுபுறம் ஒரு குன்றின் மேல் ராமபிரானது திருக்கோயில்! இந்தத் திருக்கோயிலை ஒரு காலத்தில் தம்மல்லி என்னும் பிராம்மணப் பெண் தன் சுய முயற்சியால் கட்டியிருந்தாள். அவள் இருந்த வரை கோயிலில் ஆறுகால பூஜைகளும் அன்னதானங்களும் தடபுடலாக நடந்தன. அவள் காலத்துக்குப் பிறகு அந்தக் கோயிலையும் கலிமாயை சூழ்ந்து கொண்டது. அந்தக் கோயிலில் ஒரு வேளை பூஜை நடைபெறுவதே பெரும் பாடாக இருந்தது. அப்படி ஒரு கோயில் கொண்ட பத்ராசலத்துக்கு ஒரு தாசில்தார் இருந்து அவர் காலமாகி விடவும் அங்கே ஒரு தேவை இருந்தது.

ஹைதராபாத் தானீஷாவும் மிகச் சரியாக கோபண்ணாவை பத்ராசலத்துக்கு தாசில்தாராக நியமனம் செய்தார். கோபண்ணாவுக்கு மனமெல்லாம் ராமபிரான் மேல்தான் இருந்தது. ஆகையால் ஆன்மீக வழியில் செல்லவே விரும்பியது. ஆனால் வயிற்றுப் பாடும் கொல்லம் கொண்ட பெல்லத்து அனுபவங்களும் வேறு வழியின்றி இந்த தாசில்தார் பொறுப்பை ஏற்க வைத்தன. மாமன்னர்களுக்கு நன்றி கூறி விட்டு பத்ராசலத்துக்கு வந்து பொறுப்பை ஏற்று அதை திறம்படவே செயல்படுத்தினான் கோபண்ணா. ஒரு தாசில்தாரின் கடமைகளை மிக நேர்மையாக நிறைவேற்றினான். குறிப்பாக வரிவசூலில் ஒரு பொன் கூட வீணாகதபடி அதை வசூல் செய்து அவ்வளவு பொன்னையும் யானை மேல் ஏற்றி வீரர்களின் காவலுடன் ஹைதராபாத்துக்குக் கொண்டு சென்று அங்க கஜானாவில் ஒப்படைத்து தானீஷாவின் தனிப்பட்ட பாராட்டையும் பெற்றுக் கொண்டான். வாழ்க்கை இப்படியே போய்விடுமா என்ன? பத்ராசலத்துக்கு வந்த நாள் முதலாக மலை மேல் உள்ள அந்த ராமன் கோயில் கோபண்ணாவின் கவனத்துக்கே வரவில்லை. ஒருநாள் ஒரு கால பூஜைக்காக பட்டாச்சாரி ஒருவர் கோயிலுக்குப் போவதை கோபண்ணா கவனிக்கவும் தான் விதியும் தன் விளையாட்டை கோபண்ணாவிடம் தொடங்கியது.

நெற்றியில் திருமண் காப்போடு கையில் திருத்துழாய் தட்டும் நைவேத்ய பிரசாதமுமாக மலை ஏறப்போன அந்தப் பட்டரை தடுத்து கோபண்ணா விசாரிக்கத் தொடங்கினான். அப்போது தான் மலை மேல் ராமர் கோவில் இருப்பதே தெரிய வந்தது.ஹேராம்!இது என்ன கொடுமை...

பத்ராசலத்தில் ஒரு ராமாகோயில் இருக்க நான் அது தெரியாத ஒரு அதிகாரியாக மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேனே... என்று கோபண்ணா மனது பதைத்துப் போனது. அவரோடு சேர்ந்து மலைமேல் சென்று பார்க்கவும் கண்களைக் கரித்தது. கோயில் அந்த அளவு பாழ்பட்டு தூர்ந்து போய் கிடந்தது.பட்டரே, என்ன இது அநியாயம்... என் பிரபுவின் கோயில் இப்படியா இடிபாடுகளோடு இருப்பது?

நான் என்ன செய்யட்டும்... தம்மக்கா இருந்தவரை குறையில்லை. அதன்பின் இந்த பத்ராசலத்தில் எவ்வளவோ மாற்றங்கள். பிறமதத்தவர்களும் அதிகரித்து விட்டனர். உத்சவங்கள் கொண்டாடவோ, திருவிழாக்கள் காணவோ யாரும் ஒன்று சேர்வதில்லை. அதோடு பலர் ஊரை விட்டே போய் விட்டனர். நான் இருக்கும் வரை ஏதோ ஒரு கால பூஜை நடக்கும். எனக்குப் பிறகு அதுவும் கேள்விக்குறிதான்...பட்டர் சொன்னது கோபண்ணாவின் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.இல்லை பட்டரே! இந்த கோயிலை நான் இனி இப்படியே விடமாட்டேன். என்னை பிரபு எதற்காக இந்தப் பகுதிக்கு தாசில்தார் ஆக்கினார் என்பது தெரிந்து விட்டது. ஒரு அரசாங்க அதிகாரியாக இப்போதே உத்தர விடுகிறேன்.

இனி ஆறுகால பூஜைகள் நடக்கட்டும். இடிபாடுகளை சரிசெய்து இந்தக் கோயிலை நான் புதுப்பித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கப் போகிறேன்... என்ற கோபண்ணா சொன்னபடியே செய்தும் முடித்ததுதான் விந்தை.பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப்பணம் அவ்வளவும் கோயிலுக்கே செலவாயிற்று. மலைமேல் உயர்ந்த கோபுரத்தோடு கோயிலும் கம்பீரமாக நிமிர்ந்து எழும்பி நின்றது.உள்ளே சீதா ராம லட்சுமணனோடு அனுமனுக்கும் சேர்த்து சன்னதி. கோவிலின் அழகும் எழிலும் அக்கம் பக்கத்தவர்களை எல்லாம் சுண்டி இழுத்தது. சாரிசாரியாககோயிலுக்குவந்துமனம்குளிரராமபிரானையும்வணங்கினார்கள்.கோபண்ணாவுக்கும் அரிய செயலை செய்துவிட்ட பூரிப்பு. அதேசமயம் தானீஷாவுக்கு வசூலித்த வரிப்பணத்தை சென்று கட்ட வேண்டிய நாளும் வந்தது. ஆனால் அதையெல்லாம்தான் கோயில் கட்ட செலவழித்தாகி விட்டதே...?

இப்போது என்ன செய்வது?

கோபண்ணா மனைவி கலங்கிப்போய் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்டாள்.என்ன செய்தேனோ அதைச் சொல்வேன்... நான் என்ன நம் குடும்பத்துக்கா செலவு செய்தேன்... அவ்வளவும் கோயிலுக்குத்தானே போனது. ஒரு ஊரில் கோயில் சிறப்பாக இருந்தால் அல்லவா மழை பொழியும். மக்களும் மன அமைதி யோடு வாழ்வார்கள். எனவே நான் மக்களுக்கான நல்லதைத்தான் செய்துள்ளேன். இதை தானீஷா பாராட்டவே செய்வார். சொல்லப்போனால் அவர் செய்யத் தவறியதை நான் செய்துள்ளேன். எனவே எனக்குப் பரிசுகளும் அளிப்பார்... என்றான் கோபண்ணா.

வாழ்வில் நாம் நினைப்பது போலவா எல்லாமே நடக்கிறது?

தானீஷா முன்னால் கோபண்ணா ஒரு குற்றவாளியாக நிறுத்தப்பட்டான். தானீஷா அவன் சொன்ன எதையும் கேட்கவே இல்லை. நீ தன்னிச்சையாக நடந்து கொண்டாய்... அரசாங்கப் பணத்தைக் கொண்டு கோயில் கட்டினாய். இது ராஜ துரோகம் எனவே உன்னைச் சிறையில் இடுகிறேன்- என்று கோபண்ணாவுக்கு சிறைத்தண்டனை விதித்து விட்டார்.சிறையில் அடைக்கும் முன் கோபண்ணாவிடம் இன்னும் கூட வரிப்பணம் இருக்கக்கூடும் என்று கருதி கோபண்ணாவை சவுக்கால் அடித்து சித்ரவதை செய்தும், ஹைதராபாத் நகரமே தெருவில் நின்று பார்த்திட கட்டி இழுத்துச் சென்றும் செய்த கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.ஒரு மனிதன் பக்தியோடு கோயில் கட்டியதற்கா இத்தனை பெரிய தண்டனை? கோயில் கட்டிய விதம் தவறாக இருந்தாலும் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை என்பது எந்த வகையில் சரி?
இவ்வளவு தூரம் கொடுமைகள் நடக்கும்போதும் அந்த ராமன் என்ன செய்தான்? ஏன் வேடிக்கை பார்த்தான்? இது என்ன சோதனை...?

கேள்விகள் எழுகிறதல்லவா?

இந்தக் கேள்விகள் கபீர்தாசரிடமும் எழும்பியது.

பக்தன் பொருட்டு அவரே ராமபிரானிடம். பிரபு இதெல்லாம் எந்த வகையில் சரி? என்று கேட்கவும் செய்தார். ராமபிரானும் அதற்கான பதிலைக் கூறினான்...கபீர்... கலியுகத்தில் எப்போதும் விளைவுகளுக்காகவே செயல்பாடுகள். ஆனால் நாம் உலகமாயை காரணமாக செயலுக்குத்தான் விளைவு என்று கருதுவதும் பேசுவதுமாக இருக்கிறோம்.கோபண்ணா என் பரம பக்தன்தான்! பக்தி கராணமாக அவன் உண்மையாக வாழ்கிறவனும்கூட... ஆனால் இப்போது அவன் அனுபவிக்கும் கொடுமைக்கெல்லாம் காரணம் அவனது பூர்வ கர்மம்தான்!

முன் ஜென்மத்தில் அவன் அனேக கிளிகளை கூண்டில் அடைத்து வளர்த்தான். அப்போது அவைகளின் சிறகுகளை வெட்டியும் அவைகளுக்குச் சரியாக உணவளிக்காமலும் அவைகளை சித்ரவதை செய்தான். அதனால் பல கிளிகள் இறந்து போயின. அந்தப் பாவம்தான் இப்போது அவனுக்கான சிறைவாசமாகவும் பழியாகவும் உருவாகியுள்ளது.எதற்கும் ஒரு அளவு உண்டு. இந்தத் துன்பத்துக்கும் அளவு இருக்கிறது. இவை அவ்வளவும் இன்றிரவோடு தீர்ந்து விடும். நாளை முதல் அவன் கோயில் கட்டிய புண்ணியமும் பக்தியின் பயனும் அவனை இனி வழி நடத்தும். அதுமட்டுமன்றி காலகாலத்துக்கும் அவன் பக்தி இனி வரும் மாந்தர்களால் போற்றும் ஒன்றாகவும் இருக்கும். கூடவே அவர்கள் கோபண்ணாவின் கர்மத்துய்ப்பையும் சேர்த்தே எண்ணுவார்கள்.

நம் வாழ்வில் நம் மனமறிந்து தவறுகள் செய்திடாத நிலையில் ஒரு துன்பம் நேர்கிறதென்றால் அதை பூர்வ கர்மம் என்று கருதி மகிழ்ச்சியோடு ஏற்று அனுபவிக்க வேண்டும். வெற்றிகரமான வாழ்வும் இன்பமான வாழ்வும் எந்த நிலையிலும் ஞானத்தைத் தராது. அது ஆசாபாசங்களை வளர்த்து கலிமாயையில் நம்மை நிரந்தரமாக சிக்க வைத்து விடும். எனவே நிரந்தரமற்ற மாயா இன்பங்களை பற்றற்ற பற்றோடு அனுபவிக்க வேண்டும். துன்பத்தையே உளமாற விரும்ப வேண்டும். அதைக் கண்டு அச்சம் கூடாது. நடுநிலையான ஞானிகள் இவ்வாறுதான் நடந்து கொள்வர். கோபண்ணாவும் எல்லா துன்பங்களையும் பார்த்து விட்டான். பழிச் சொல்லையும் கேட்டு விட்டான். அவன் இனி மாயை வசம் சிக்காமல் பக்குவமாக நடந்து கொள்வான் என்றார். கபீருக்கும் பெரும் ஞானோபதேசம் கிடைத்தது. கபீர் மூலமாக இந்த உலகுக்கும் கிடைத்தது. அன்று இரவு கோபண்ணாவின் பக்திக்குண்டான வரசித்தி செயல்படத் தொடங்கியது. ராமனும் லட்சுமணனுமே தானீஷாவுக்கு கோபண்ணா செலுத்த வேண்டிய பொன் மூட்டையை எடுத்துக் கொண்டு இரண்டு வேடுவர்கள் போல தானீஷா முன் போய் நின்றனர்.

பொற்காசுகளை தானீஷா முன் கொட்டினர். அரசே... இது கோபண்ணா செலுத்த வேண்டிய வரிப்பணம். அவரை சிறையில் இருந்து விடுவியுங்கள் என்றனர். தானீஷாவும் நீங்கள் யார் என்று கேட்காமல் இருப்பாரா? நாங்கள் கோபண்ணாவின் ஏவலர்கள். அவர் தரும் பிரசாதத்துக்காக நாங்கள் எதையும் செய்வோம்... அடேயப்பா... இவ்வளவு நாட்கள் எங்கே போய் விட்டீர்கள்? நாங்கள் யாத்திரை போயிருந்தோம், இங்கு வந்து பார்க்கவும்தான் உண்மை தெரிந்தது. உடனே எங்கள் உழைப்பில் சம்பாதித்த பொன்னோடு புறப்பட்டு வந்துவிட்டோம்.

அது சரி... உங்கள் பெயர்?

என் பெயர் ராம்ஜி... இவன் லஷ்மண்...

நல்லது... இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

ஊருக்கு வெளியே உள்ள சிறையில் இருக்கும் கோபண்ணாவை விடுவியுங்கள். முன்னதாக வரிப்பணம் பெற்றுக்கொண்ட ரசீதும் அத்துடன் விடுதலைப் பத்திரமும் எழுதி கையெழுத்திட்டு தாருங்கள்...
தானீஷாவும் அப்படியே செய்தார் ராம லட்சுமணர்களும் புறப்பட்டனர்!
ஊருக்கு வெளியில் உள்ள சிறைச் சாலையில் கோபண்ணா மனம் உடைந்து போயிருந்தான். போதும் நான் பட்ட பாடு... என்னைப் பார்ப்பவர்கள் இனி எந்த நல்ல காரியத்தையும் செய்ய முன்வர மாட்டார்கள். நானும் இனி வாழ்வதை விட சாவது மேல்... ராமபிரபுவும் என்மேல் கருணை காட்டப் போவதில்லை. அவர் வரையில் நானொரு பாவி.

இனி இந்த பாவியும் உயிர் வாழக் கூடாது...- என்கிற முடிவுக்கு வந்து விஷத்தைக் குடிக்க முடிவு செய்கிறான் கோபண்ணா. அதன் பொருட்டு சிறைத் தோட்டத்தில் பணியாற்றும்போது விஷச்செடி ஒன்றை அடையாளம் கண்டு கொண்டு அதில் இருந்து பறித்து வந்திருந்த விஷ இலைகள் அரைக்கப்பட்டு விழுதாக அவன் பக்கத்தில் அவன் சாப்பிடத் தயாராயின! முன்னதாக இறுதியாக தியானிக்க எண்ணி தியானத்தில் ஆழ்ந்தான்! இதற்குப் பிறகே அற்புதங்கள் அரங்கேறத் தொடங்கின. ராம லட்சுமணர்கள் சிறைக்கு வந்து அங்குள்ள அதிகாரியிடம் விடுதலைப் பத்திரத்தைக் காட்டி அவரையும் அழைத்துக் கொண்டு கோபண்ணா இருந்த இருண்ட சிறைக்கு வந்தனர்.

சிறையில் கோபண்ணா! சிறை அதிகாரி கதவைத் திறந்து விட்டவனாக விலகிட ராம லட்சுமணர் கோபண்ணா அருகில் சென்றனர். அந்த விஷவிழுது தீயவாடையோடு அவர்கள் நாசியைக் குடைந்தது. ராமன் லட்சுமணனை அர்தபுஷ்டியோடு பார்க்கவும் அந்த விஷ விழுதை லட்சுமணன் எடுத்து விழுங்கினான்.

ஆதிசேஷனின் அம்சம்... விஷமெல்லாம் ஒரு பொருட்டா என்ன...? பதிலுக்கு தானீஷா கொடுத்த ரசீதை விஷம் இருந்த இடத்தில் வைத்தான் ராமன். பின் இருவரும் ஒரு சேர ஆசிர்வதித்தவர்களாக சிறைக்கதவு திறந்திருக்க வந்த சுவடு தெரியாமல் திரும்பத் தொடங்கினர்.கோபண்ணாவிடம் இது எதுவுமே தெரியாதபடி த்யானம்!

தானீஷா ராம லட்சுணர்கள் தந்த பொற்காசுகள் மலைபோல குவிந்திருப்பதைப் பார்த்தபடியே இருந்தார். இவ்வளவு காசுகளை எப்படி இருவரால் சுமந்து வர முடிந்தது என்பது அவருக்குள் கேள்வியாக உறுத்திக் கொண்டிருந்தது. அடுத்து அதன் ஜொலிக்கும் ஒளி... அதில் ஒரு காசை எடுத்து உற்றுப் பார்க்கவும் அதில் ராம் எனும் எழுத்து!
அடுத்த நொடி தானீஷாவுக்கு சுரீர் என்றது! வந்தவர்கள் சாமான்ய மனிதர்கள் அல்ல என்பதும் புரியத் தொடங்கியது.

புதுப்பெரியவாள் 1971-71

புதுப் பெரியவா 1971-71 கேரளத்துக்கு விஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில் நகர்வல்த்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல் வரிசையில் ஊர்வலம் வந்துக் கொண்டிருந்தார்கள். தீடீரென்று ஏற்பட்ட மின் தடையால் எல்லா விளக்குகளும் அணைந்தன. குட்டி யானை மிரண்டது. நல்ல காலமாக இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் விளக்குகள் எரியத் தொடங்கியது. இடையில் புதுப் பெரியவாளும் யானையிலிருந்து பத்திரமாக இறங்கி விட்டிருந்தார்கள். வீதிவிளக்குகள் அணைந்ததும், பக்தர் திரு.டி.வி.சுவாமிநாதன் தன் இல்லத்திற்கு விரைந்து விளக்குகள் அணைந்த காரணத்தை கேட்க மின் வாரியத்துடன் தொடர்பு கொண்டார். அதற்குள் எல்லாம் சரியாயிற்று. மீண்டும் அவர் ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளப் புறப்படும் சமயம் காஞ்சியிலிருந்து டெலிபோன் அழைப்பு. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.நாகராஜ அய்யர் விசாரித்தார். “ஊர்வலத்தில் ஏதாவது குழப்பம் உண்டாயிற்றா?” திரு.டி.வி.சுவாமிநாதன் நடந்ததை விவரித்து விட்டு, வியப்புடன் வினவினார், “சம்பவம் நடந்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் எப்படி உங்களுக்குத் தெரிந்தது?”
 
அதற்கு ஏ.நாகராஜ அய்யர், ”ஸ்ரீ மஹா பெரியவா சிவாஸ்தானத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்களாம், “நாற்பத்தைந்து வருஷங்களுக்கு
 முன் நான் மலையாள ராஜ்ஜியத்தில் யாத்திரை செய்த போது இருந்ததை விட புது சுவாமிகள் ஊர்வலத்திற்க்கு இன்று தடபுடலான் ஏற்பாடுகள்…” இவ்விதம் சொன்ன பெரியவா, தீடீரென்று, “ஒரே இருட்டாய் போயிடுத்தே, யானை மிரண்டுடுத்தே?”
 
என்று சொன்னாராம், உடனே எர்ணாகுளத்திலிருந்த உங்களை கூப்பிட்டு, “என்ன நடந்தது?”” என்று அறியப் பணித்தார் என்று கூறினார்.
 
அங்கு நடந்தது சிவாஸ்தானத்தில் இருந்த பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?, பெரியவாளுக்கு,, சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா??? 




நான் யார்? ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!


நான் யார்? ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!

உலகத்தில் மக்களிடையே பேதங்கள் நிலவிய சூழ்நிலையில் காலடி க்ஷேத்திரத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் மகான் ஆதிசங்கரர். தாயின் அனுமதியுடன் சந்நியாசம் பெற்ற ஆதிசங்கரர் அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர். அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவது போல் ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும் போது எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர் நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர் அவரை வழியை விட்டு விலகிப் போக சொல்கிறார். எதிரில் வந்தவர் 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும் தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல் பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ விலங்குகளோ தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம் தானே? அப்படி இருக்கும்போது என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம் தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்? எனக் கேட்டார். ஆதிசங்கரருக்கு அப்போது தான் புரிந்தது தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப்பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அது தான் மனீஷா பஞ்சகம். அந்தப் பஞ்சகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே...

விழிப்பிலும், கனவிலும், உறக்கத்திலும் எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் பிரபஞ்சத்தின் சாட்சியாக ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்த்தப்பட்டவரோ யாராக இருந்தாலும் அவரே என் குரு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

“ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு ஸ்புடதரா யா ஸம்விதுஜ்ரும்பதே!
யா ப்ரஹ்மாதிபிபீலிகாந்ததனுஷு ப்ரோதா ஜகத்ஸாக்ஷிணீ !!
ஸைவாஹம் ந ச த்ருஶ்யவஸ்த்விதி த்ருடப்ரக்ஞாபி யஸ்யாஸ்தி சேத்!
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம !!

எவன் ஒருவனுக்கு தானே ஆத்மஸ்வருபம்தான் என்பதில் திட நம்பிக்கை உள்ளதோ விழிப்பு, கனவு, உறக்கம் ஆகிய 3 ஸ்திதிகளிலும் பரமாணுவிலிருந்து பரப்ரம்மம் வரை எல்லாவற்றிலும் எக்காலத்திலும் கண்ணுக்குத் தெரியாத ஸாக்ஷியாக உயிர்ப்பு சக்தியாக செயல்படுவதும் அதே ஆத்மாதான் என்பதையும் அவன் அறிகிறானே அவன் எந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் அவனே உயர்ந்த ஆசானாகக்கருதப்படுவான்.

பரம்மைவாஹமிதம் ஜகச்ச ஸகலம் சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா த்ரிகுணயாஶேஷம் மயாகல்பிதம்!
இத்தம் யஸ்ய த்ருடாமதி: ஸுகதரே நித்யே பரே நிர்மலே
சாண்டாலோஸ்து ஸ து த்விஜோஸ்து குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் உணர்கிறார். எனக்குத் தெரியும் யார் உயர்நத குரு என்று ப்ராம்மணனோ, சூத்ரனோ, யார் அந்த சுத்த ஸத்வமான ப்ரம்மத்திலேயே லயித்து தானே அதுவாக உணர்கிறார்களோ அவர்தான் எல்லாம் உணர்ந்த ஆசாரியராக முடியும். ஸத்வ, ரஜஸ், தமஸ், ஆகிற முக்குணங்களின் பாதிப்பினாலும் அறியாமையினாலும் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாம் வெவ்வேறாகத் தெரிந்தாலும் ஒரே பரமாத்மா பரப்ரஹ்மத்திலிருந்து உண்டானவையே அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டவனே ஸத்குரு என்கிறார் அவர்.

ஶஶ்வன்னஶ்வரமேவ விஶ்வமகிலம் நிஶ்சித்ய வாசா குரோ:
நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம் விம்ருஶதாம் நிர்வியாஜ ஶாந்தாத்மனாம்!
பூதம் பாவி ச துஷ்க்ருதம் ப்ரதஹதாம் ஸம்வின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்ப்பிதம் ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம!!

குருவின் வார்த்தைகளில் எனக்குப் பரிபூரண நம்பிக்கை இருப்பதால் இந்தப்பிரபஞ்சம் முற்றும் நிலையற்ற உருவெளித்தோற்றம் என்பதும் பரமாத்மாவைக் குறித்து ஆழ்ந்த தியானத்தைச் செய்து நிஸ்சலனமான மனதுடன் பாவத்தீயையெல்லாம் அந்த ஸாதனையாகிற தீயில் எரிக்க வேண்டும் என்பதும் தெரிகிறது.

யா திர்யங்நரதேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா க்ருஹ்யதே
யத்பாஸா ஹ்ருதயாக்ஷதேஹவிஷயா பாந்தி ஸ்வதோ சேதனா:!
தாம் பாஸ்யை: பிஹிதார்க்கமண்டலநிபாம் ஸ்பூர்த்திம் ஸதா பாவயந்
யோகீ நிர்வ்ருதமானஸ: ஸ குருரித்யேஷா மனீஷா மம!!

சங்கரர் மேலும் கூறுவதாவது : என் அபிப்ராயப்படி உயர்ந்த யோகி யார் என்றால் பரமாத்மாவின் உண்மை ஸ்வரூபத்தையும் தன்மைகளையும் உணர்ந்தவர்தான். அதாவது அனைத்துச் செயல்களும் யாரால் நடத்தப்படுகிறது என்பதும் அப்பேர்ப்பட்ட கடவுளின் ஒளி அறியாமையினால் மறைக்கப்பட்டிருக்கிறது (மேகங்கள் எப்படி சூரியனின் ஒளியை மறைக்கிறதோ அப்படி) என்பதும் தான்!

யத்ஸௌக்யாம்புதிலேஶலேஶத இமே ஶக்ராதயோ நிர்வ்ருதா:
யச்சித்தே நிதராம் ப்ரஶாந்தகலனே லப்த்வா முனிர்நிர்வ்ருத:!
யஸ்மிந்நித்ய ஸுகாம்புதௌ கலிதர்தீ ப்ரஹ்மைவ ந ப்ரஹ்மவித்
ய: கஶ்சித் ஸ ஸுரேந்த்ரவந்திதபதோ நூநம் மனீஷா மம!!

இந்திரனாலும் மற்ற தேவர்களாலும் துதிக்கப்படும் அந்தப்பரமாத்மாவிடம் எப்போதும் மனதைச் செலுத்திப் பரிபூரண அமைதியுடன் எவர் இருக்கிறாரோ அவர் அந்த பரப்ரம்ஹ்மத்தை அறிந்து கொண்டவர் மட்டுமல்ல அந்த ப்ரஹ்மமாகிவிடுகிறார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

தாஸஸ்தேஹம் தேஹத்ருஷ்ட்யாஸ்மி சம்போ ஜாதஸ் தேம்சோ ஜீவத்ருஷ்ட்யா த்ரீத்ருஷ்டே!
ஸர்வஸ்யாஸ்மந்நாத்மத்ருஷ்ட்யா த்வமேவேத் யேவம் மே தீர்நிஸ்சிதா ஸர்வ சாஸ்த்ரை:!!

பகவானே! நான் இந்த உடலில் இருக்கும்போது உன் சேவகன் முக்கண்ணனே! இந்த உயிராக இருக்கையில் உன்னில் ஒரு பாகமாகிறேன். ஆத்மாவாக இருந்தால் நீ என்னுள்ளும் இன்னும் மற்றெல்லா ஆத்மாக்களுக்குள்ளேயும் இருக்கிறாய். என் புத்தி பூர்வமாகவும் பல நூல்களைப்படித்தும் நான் வந்த முடிவு இதுதான். 




சதாசிவ பிர்மேந்திராள்


கரூரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் காவிரி கரையில்  நெரூர் என்கிற அழகிய சிறிய கிராமம். இங்கு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் அதிஷ்டானம் உள்ளது.

ஒரே சமயத்தில் ஐந்து இடங்களில் தோன்றி ஐந்து இடங்களிலும் சமாதியானவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அவர்கள். அவர்களுடைய சக்தி இன்றும் அந்த அதிஷ்டானத்தில் உணரலாம்.

இச்சிறிய கிராமத்தின் அக்கிராஹத்தில் ஏசி வசதியுடன், விசாலமான, சுத்தமான ஒரு தங்குமிடம் மிகவும் நியாயமான வாடகையில் உள்ளது.

இங்கேயே மூன்று வேளைக்கும் சுவையான கிராமிய உணவு, இரண்டு வேளை காபியும் ஒரு பிராமண மாமி சமைத்து தருகிறார்கள்.

மேலும் இங்கு உபநயனம், சீமந்தம் முதலிய சுப காரியங்களுக்கும், ஸ்ரார்தம், மஹாளய பட்ச ஸ்ரார்தம் செய்வதற்கு சமையல், வாத்தியார் ஏற்பாடுகளும், இடமும் நியாயமான செலவில் செய்து தருகிறார்கள்.

காவிரி கரையில் அழகிய கிராமத்தில் சகல வசதியோடு விருப்பம் உள்ள நாட்கள் வரை தங்கி, மனமும் உடலும் புத்துணர்வு பெறலாம்.

மற்ற விபரங்களுக்கு...
பானு மாமி : +91 99445 32919
திரு.ரவி, டிரஸ்டி : +91 99400 45982

திங்கள், 23 செப்டம்பர், 2024

நாச்சிமுத்து....

நாச்சிமுத்து!

திருக்கழுக்குன்றத்தில் நெடுங்காலத்துக்கு முன்னர் நாச்சிமுத்து என்ற பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவள் உருத்திரக் கணிகையர் வகுப்பைச் சேர்ந்தவள். இறைவன் மீது எல்லையில்லா அன்பு கொண்டவள். திருக்கழுக்குன்றத்துக் கோயிலில் இறைவனின் முன்பு நாட்டியமாடுதல் இவள் பணியாக இருந்தது. இவளிடம் ஒரு வைணவர் பேரன்பு கொண்டவராக விளங்கினார். இவளுடைய அன்பினால் அவருக்கும் சிவபக்தி உண்டாயிற்று. தமிழ் புலவரான இவர் திருக்கழுக்குன்றத்து இறைவன் மீது திருக்கழுக்குன்ற பாமாலை என்னும் நூலைப் பாடினார். அப்பாடல் பொருட்சுவையும் சொற்சுவையும் நிரம்பியது. உருத்திரக் கணிகையான நாச்சிமுத்துவும் அம்மாலையின் பாடல் ஒன்றைத் தினமும் கோயிலில் இறைவன் முன்பு பாடி, அபிநயம் செய்வது வழக்கம்.ஒரு நாள் மாலையில் கடுங்காற்று வீசி, கனமழை பெய்தது. அதனால் அவளால் கோயிலுக்குச் சென்று இறைவன் முன்பு தனது நாட்டியச் சேவையைச் செய்ய முடியவில்லை. இதனால் அவள் மிகவும் வருத்தமடைந்தாள். இந்த வீட்டு முற்றத்தில் இறைவன் எழுந்தருளியிருந்தால் எனது நாட்டியச் சேவையை செய்திருப்பேனே என்று எண்ணினாள். பின்பு, அங்கு சிவபெருமான் எழுந்தருளி இருப்பதாக பாவனை செய்துகொண்டு, அன்று பாட வேண்டிய பாடலைப் பாடி, அபிநயம் செய்யத் தொடங்கினாள். அவள் அன்பில் மகிழ்ந்தார் இறைவன். ஆடல்வல்ல பெருமானான சிவன், அவளுடைய ஆடலையும் பாடலையும் கண்டு குளிர்ந்து போனார். அவளுக்குக் காட்சி அளித்து, முக்தியும் அருளினார்.நாச்சிமுத்து நாச்சியார், பெருமானின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு கயிலைக்குச் செல்லத் தொடங்கினாள். அவள் இறைவனுடன் செல்வதைக் கண்ட அவளுடைய அன்பான வைணவரும் ஓடி அவளுடைய திருப்பாதங்களைப் பற்றிக் கொண்டே விண்ணுலகம் சென்றார். இச்சம்பவத்தை  க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ், கழுகாசல சதகம் ஆகிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. லிங்கப்பதிகம் என்னும் நூல் இந்த நிகழ்ச்சியை முற்றத்திலே வந்து தாதி தமிழைக் கேட்டு மோட்சம் கொடுத்த லிங்கம் என்று குறிக்கின்றது.

நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாள்: எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். மதுரை மீனாட்சியம்மன் நாளை தட்சிணாமூர்த்தி கோலத்தில் காட்சியளிக்கிறாள். தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி சிவன்கோயில்களில், கல்லால மரத்தின் கீழ் இருப்பார். இவர் முன்னால் சனகர்,சனந்தனர், சனதானர், சனத்குமாரர் என்னும் நான்கு சீடர்கள் இருப்பர். அவர்களுக்கு உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி.

இவருடைய வலக்கை சின்முத்திரை காட்டியபடி இருக்கும். வலக்கைப் பெருவிரல் பரமாத்மாவாகிய கடவுளையும், ஆள்காட்டிவிரல் ஜீவாத்மாவாகிய உயிரையும் குறிக்கும். மற்ற விரல்களான நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் குறிக்கும். ஆணவம் என்பது அகங்காரம். கன்மம் என்பது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைப்பயன்கள். மாயை என்பது இவ்வுலக வாழ்வு உண்மை என எண்ணும் நிலை. இம்மூன்றையும் விட்டு, ஒருவன் நீங்கினால் மட்டுமே கடவுளோடு ஐக்கியமாக முடியும் என்பதே சின்முத்திரை தத்துவம். அம்பாளைத் தட்சிணாமூர்த்தியாக உபதேசிக்கும் கோலத்தை காண்பவர்களுக்கு அஞ்ஞானம் அகலும். கடவுளின் திருவடியே நிலையானது என்ற மெய்ஞானம் உண்டாகும்.

நாளைய நைவேத்யம்: எலுமிச்சை சாதம்
தூவவேண்டிய மலர்கள்: மல்லிகை, செவ்வந்தி.

பாட வேண்டிய பாடல்:

என்குறை தீர நின்று ஏத்துகின்றேன், இனியான் பிறக்கின்
நின்குறை யேயன்றி யார்குறை காண்! இருநீள் விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியளாய்
தன்குறை தீரஎங் கோன்சடை மேல் வைத்த தாமரையே.

 


 

நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!

நவராத்திரி இரண்டாம் நாள்: வழிபடும் முறை!

அம்பிகையை நாளை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை "கவுமாரி என்றும், "குமார கண நாதம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, தைரியத்தை அருள்பவள் இவள். நாளை மதுரை மீனாட்சி முருகனுக்கு வேல் வழங்குதல் கோலத்தில் காட்சி தருகிறாள். சூரபத்மன் தேவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தான். அவர்கள், சிவபெருமானின் உதவியை நாடினர். அவருடைய நெற்றிக்கண்களில் ஆறுதீப்பொறிகள் தோன்றின. அவை சரவணப்பொய்கையில் ஆறுதாமரைப் பூக்களில், ஆறுகுழந்தைகளாக மாறியது. கார்த்திகைப்பெண்கள் அவர்களை வளர்த்தனர். பார்வதி அறுவரையும் ஒருவராக்கி "கந்தன் என்று பெயரிட்டாள். ஜகன்மாதாவான பராசக்தி தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வேல் ஆக்கினாள். "வேல் என்றால் "வெற்றி . அந்த சக்திவேலாயுதத்தை முருகனுக்கு வழங்கினாள். முருகனுக்குரிய அடையாளமாகத் திகழும் வெற்றிவேலை, அன் னை மீனாட்சி வழங்குவதைக் கண்டால் வாழ்வில் வெற்றி வந்து சேரும்.

நாளைய நைவேத்யம்: தயிர்சாதம்
தூவவேண்டிய மலர்: முல்லை

பாட வேண்டிய பாடல்:

இல்லாமை சொல்லி ஒருவர் தம் பால்சென்று இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர் தம் பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 




பராசரர்...

பராசரர்!

இருமாமுனிவர்கள் வசிஷ்டரும், கோசிகரும். இவர்கள் இருவருக்கிடையில் ஒற்றுமை இருந்ததே இல்லை. பகையுணர்வின் காரணமாக கோசிகன், வசிஷ்டரை பழி வாங்க முயன்று தவவலிமை இழந்து மீண்டும் தபோதனராகப் பலமுறை முயன்று தன் தவ வலிமை பெற்று வந்தார். உதிரன் என்ற அரக்கன் மூலம் தனது தவ வலிமைகளைத் தந்து வசிட்டரின் புதல்வர்களை அழிக்க ஏற்பாடு செய்தார் கோசிகன். வசிட்டரும் அருந்ததியும் இல்லாத சமயம் அவர்களது பிள்ளைகளை மாய்த்து விட்டான். வசிட்டரும், அருந்ததியும் மனமுடைந்து இருந்தனர். வசிட்டரின் மகன் சக்தி என்பவனின் மனைவி திரிசந்தி கருவுற்றிருந்த காரணத்தால் அவளது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள். தகவலறிந்து வந்து தானும் உயிர் துறக்க முற்பட்டாள். வசிட்டரும், அருந்ததியும் தங்களது வாரிசு அவளது வயிற்றில் வளர்வதனால் சாந்தப்படுத்தி கண்ணும் கருத்துமாக திரிசந்தியைப் பாதுகாத்தனர். தக்கதோர் நன்னாளில் திரிசந்தி ஆண் மகவொன்று ஈன்றெடுத்தாள்.

பேரனுக்கு பராசரன் என்று பெயரிட்டு கல்வியறிவூட்டினர். நற்குணம் நற்செயல்களோடு வேத நூல்யாவும் அறிந்தான். அவனது மனத்தில் இருந்த குறையை தாயிடம் கேட்டான். பாட்டி சுமங்கலியாக, தாய் அமங்கலியாக இருப்பதன் காரணம் பற்றி கேள்விகளாகக் கேட்டு துளைத்தெடுக்கும் நிலையில் உண்மையில் நடந்தவற்றை திரிசந்தி உரைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தாத்தா, பாட்டி, தாயின் மனமுவந்த ஆசிகள் பெற்று மனத்தை ஒருநிலைப்படுத்தி சிவபெருமானை நோக்கிக் கடுமையாக தவமேற் கொண்டான். நேரில் காட்சி தரும் நிலையும் ஏற்பட்டது. தன் தந்தையைக் காணவும், அரக்கர்களை அழிக்க ஆற்றலும் வேண்டிக் கோரினான். அவனது பக்தியின் வலிமையால் பராசரரின் தந்தையான சக்தி அங்கு தோன்றுமாறு ஈசன் கருணை புரிந்தான். தந்தையைக் கண்டு வணங்கி ஆசிகள் பெற்றான். அரக்கர்களை அழிப்பது எளிதல்ல என்பதால் வேள்வி செய்யுமாறு ஈசன் பணித்தார். ஈசன் உபதேசித்தப்படி சிறந்ததொரு யாகம் மேற்கொண்டான். யாகத்தில் ஏற்படும் புகை முழுவதும் அரக்கர்கள் இருக்குமிடத்தில் பரவி அரக்கர் கூட்டம் அழிந்து விட்டது.

யாரோ செய்த தவறுக்குப் பலர் அழிவதை உணர்ந்த வசிட்டர் தனது பேரன் பராசரரிடம் பலர் அழியக் காரணமாகி பலரைக் கொன்ற பாபம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நாம் இறைவனை வேண்டி வழிபடுவதே தக்க செயலாகும் என்று கூறி வேள்வியை நிறுத்துமாறு உபதேசித்தார். அச்சமயம் அங்கு வந்த புலஸ்திய முனிவரும் பராசரரிடம் பிற உயிர்கள் அழியாத நிலையில் தவமேற் கொண்டோர் வாழ்வதே சிறப்பு என விளக்கினார். பாட்டனாரும், புலஸ்தியரும் கூறிய வார்த்தைகட்கு இணங்கி பராசரர் இறைவழிபாட்டில் தன் வாழ்க்கைப் பணி ஏற்றார்.  மூத்தோர் சொல் அமுதமாகும் என்பதை உணர்ந்த காரணத்தால் பராசரர் தனது அறிவை ஞானத்தின் பால் மாற்றி மெய் ஞானம் உணர்ந்திட்ட மஹானாக விளங்கினார் என்றும், அழியாப்புகழுடன் சிறந்த நூல்களை எழுதி வரும் சந்ததிகட்கு வழிகாட்டிய மஹானாகத் திகழ்ந்தார்.

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினர். இனியும் இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் மிக அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்து விட்டு சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்து விட்டு சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால் தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி போர்க்கோலம் பூண்டு சும்ப நிசும்பர்களையும் அவர்களது படைத்தளபதிகளான மது கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலை நாட்டினாள்.

அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். 

 

ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம். அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும் மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.



நவராத்திரி முதல் நாள்

நவராத்திரி முதல் நாள் வழிபாடு

நவராத்திரியின் முதல் நாளில் (அக். 02 ல்) அம்பாளுக்கு “மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி வணங்க வேண்டும். மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள் இவள். சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி நாளை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அண்டசராசரத்துக்கும் அவள் தலைவி. இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். “அண்டம் என்றால் “உலகம். “சரம் என்றால் “அசைகின்ற பொருட்கள். “அசரம் என்றால் “அசையாத பொருட்கள். ஆம்…அன்னை ராஜ ராஜேஸ்வரி, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்களுக்கெல்லாம் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

நைவேத்யம்: சர்க்கரைப் பொங்கல்
தூவ வேண்டிய மலர்கள்: மல்லிகை, வில்வம்

சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

அம்பா சாம்பவி சந்திரமவுலிரமலா அபர்ணா உமா பார்வதீ
காளீ ஹமவதீ சிவா த்ரிநயனீ காத்யாயினீ பைரவீ!
ஸாவித்ரீ நயௌவனா சுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா
சித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜராஜேஸ்வரி