ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

வரலக்ஷ்மி விரதக் கதை !

ஜெய மங்களா சுப மங்களா
ஜெய மங்களா சுப மங்களா

1. வரலக்ஷ்மி அம்மனுட மகிமையுள்ள கீர்த்தனங்கள்
மங்களமாகவே மகிழ்ந்து பாட
சிருங்கார கணபதியெ ஜெயமாக வந்தெனக்கு
தங்காமல் சரஸ்வதி சகாயம் வேணும்  (ஜெய)

2. கைலா சந்தனிலே காட்சியுடனே இருக்கும்
கருணாகடாக்ஷரென்னும் பரமேஸ்வரர்
அவருடைய பாதத்தில் ஆனந்தமாகவே
அன்புடனே பார்வதியும் அடிபணிந்தாள் (ஜெய)

3. சொல் ப்ரியே ஈஸ்வரியே சுபகீர்த்தியுள்ளவளே
கலியிலே கல்பிச்ச விர தங்கள் தன்னில்
எந்த விரதம் அதிசயம் ஏதென நியமிச்சு
எந்தனுக்கு சொல்லுவாய் இஷ்டமாக (ஜெய)

4. உமையாளே கேளு நீ. ஒரு கதை சொல்லுகிறேன்
தரணியிலே அனேக விரதங்களுண்டு
ஆனாலும் வரலக்ஷ்மி அம்மன் விரதம் அதிசயம்
அனைவரும் ஆதரித்துக் கொள்ளவேணும் (ஜெய)

5. குண்டிலம் என்றொரு மண்டிலப் பட்டணத்தில்
சாருமதி என்ற மங்கை இருக்க
சாருமதி மங்கையை சகலரும் கொண்டாடும்
சந்தோஷ விப்ரருடைய பத்னியளாம் (ஜெய)

 6. அவளுடைய மகிமை யார்தான் அறியதொரு
அருந்ததி குணசாலி அம்மன் அவளே
மாமியார் மாமனார் மாதா பிதாக்களை
குரு பூஜை பண்ணுவாள் கோபமில்லை (ஜெய)

7. பர்த்தாவின் பூஜையில் பழுதொன்றும் வாராது
பாக்யவதி சொர்ப்பனத்தில் வந்து சொன்னாள்
சிராவணமாஸத்தில் பௌர்ணமிக்குள்ளாக
சுக்ரவாரந்தனிலே சுகிர்தத்துடனே (ஜெய)

8. என்னை நீ பூஜித்து இஷ்டவரம் நான் தந்து
கஷ்டமெல்லாம் போக்கி கனவிலே
சொல்லவே வரலக்ஷ்மி சோகமெல்லாம் குளிர்ந்து
மெல்லியர் கண்முன் மறைந்து கொண்டாள் (ஜெய)

9. நல்வாக்கிய மிதுவென்று நாடெல்லாம் அறியவே
சொன்னாளே சாருமதி சுபகதைகளை சகலரும்
கொண்டாடி சந்தோஷப்பட்டுகந்து
கண்டாளே கருணா கடாட்சி யம்மனை (ஜெய)

 10. உண்டு பண்ணாமலே மேதினியில் உள்ளவர்கள்
கொண்டாடி பூஜிக்கவேணும் என்று
நதியில் ஸ்னானம் பண்ணி நெற்றி குங்குமமிட்டு
பக்தியுடன் ஸூப்ர வஸ்திரம் தரித்தாள்  (ஜெய)

 11. நித்யமா வரலக்ஷ்மி முக்தி தரும் நாயகி
சித்தத்திலே மறைஞ்சு செல்வமாக்கும்
சித்திரம் எழுதியே சிறப்பாக கிருகந்தனில்
முத்திடித்து கோலம்போட்டு முகூர்த்தம் பார்த்து (ஜெய)

 12. பத்துவித மாலையும் கட்டுடனே புஷ்பமும்
கட்டின பூப்பந்தல் கல்யாணிக்கு
ரத்னகோலம் எழுதி பஞ்சவர்ண பொடி போட்டு
ரத்ன விளக்கேற்றி இருபு றமும் வைத்தாள்  (ஜெய)

13. நித்யமாமங்கையர்கள் பூஜிக்கவேணுமின்னு
பக்தியுடன் தேவியை வாருமின்னு அச்சுதன்
தேவியர்க்கு அலங்கரித்து வீதியெல்லாம்
பைங்கிளிமார் எதிர்கொண்டு பார்த்து நின்றார் (ஜெய)

 14. புண்டரீ காக்ஷருடைய பூர்ணநாயகிம்மன்
தண்டின் மேலேறி சகலரும் சூழவே
மண்டலம் அதிரவே மணிமேளம் முழங்கவே
கொண்டாடி திருவீதி தன்னில் வந்தாள்  (ஜெய)

15. வரலக்ஷ்மி வருகிறாள் என்று சொல்லி மங்கையர்கள்
மாணிக்க சிம்மாசனங்கள் போட்டு
கற்பூரஹாரத்தி காக்ஷியுடனே எடுத்து
கைபிடித்து கிருகந்தனிலே அழைத்து வந்தார்  (ஜெய)

16. திருமஞ்சனமாடி தேன் மொழியாளுக்கு
பச்சை பசேலென்ற மஞ்சளைப் பார்த்துப்பூசி
பட்டாலே ஸரஸ்வதியை பார்த்து தலைமயிருதறி
கட்டினாள் ஒரு முடிச்சு கல்யாணிக்கு (ஜெய)

17. பீதாம்பரம் உடுத்தி பெருமை யுள்ளலக்ஷ்மிக்கு
ஆதார மாலையிட்டு அம்மன் அவளே
ஸாதூத மங்கையர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
போதுடனெ எழுந்திருக்க வேணுமின்னாள் (ஜெய)

 18. பத்துவித மாலையும் கஸ்தூரி திலகத்தை காக்ஷியுடனே
இட்டு சித்தாக குங்குமம் சிறப்பாக இட்டு
விஸ்தாரமான கண்களுக்கு மை எழுதி
பக்தியுடன் சந்தனங்கள் தரித்தார்  ஜெய)

19. சுட்டியோடு பட்டமும் சூரியசந்திர பிரபைகளும்
சட்டமான மூக்குத்தி சரப்பள்ளியுடன்
பொட்டு திருமாங்கல்யம் புது பவழமாலைகளும்
மட்டில்லா  பூஷணங்கள் எடுத்து நிறைத்தாள்  (ஜெய)

  20. தண்டையோடு பொற்சிலம்பு கால்சிலம்பு பாடகம்
குண்டு மோகன மாலை கொப்புபோல
நத்து மூக்குத்தியும் நல்ல முத்து புல்லாக்கு
அம்மனுக்கு வேணுமென்று கொண்டு நிறைத்தாள் (ஜெய)

21. மல்லிகை செண்பகம் மணமுள்ள மல்லிகைமகிழம்பூ
வேர்கொழுந்து கொத்தரளி மாலைகளும் சூட‌  மல்லிகை
சித்தாக செந்தாழை சிறுமடலை மாலை
கட்டிவைத்து மலர் சொரிந்தாள் வரலக்ஷ்மிக்கு  (ஜெய)

22. கண்ணாடி கொண்டுமே காக்ஷியுள்ள மங்கையர்கள்
முன்னே நின்று காட்ட திருமுகம் தெரியவே
சொன்னபடி அலங்காரம் சுகமாக ஆச்சு
என்று சொல்லி பொன்னான வரலக்ஷ்மி புகழ்ந்து கொண்டாள் (ஜெய)

  23. வெளிதனிலே நானிருந்தால் மேதியினியில் உள்ள
வர்கள் கண்பட்டால் திருஷ்டி கடுகிவருமே
கனகமயமாயிருக்கும் காந்தியுள்ள பொற்குடத்தில்
கடுகியிருத்தி வைத்து கருணை செய்யும்  (ஜெய)

 24. பூஜிக்கும் பெண்களெல்லாம் பக்தியுடனே மகிழ்ந்து
பொன்குடத்தில் முத்து எடுத்துபூக்கள் நிறைத்தார்
கொத்து மாஇலையுடன் தேங்காய் கொண்டாடியே
எடுத்து பிராணப்ரதிஷ்டை பண்ணினார் (ஜெய)

25. மங்கையர் கங்காஜல மெடுத்து வந்து
சிங்கார வரலக்ஷ்மி திருக்கைகளை
சம்பிரமாக பொடி பூசி சதுராகவே நிறுத்தி
அன்புடன் ராஜ உபசாரம் செய்தார்  (ஜெய)

26.பேரியோடு மத்தாளம் பெரிய தொரு நாதசுரம்
தவுல் ஜால்ரா சாரஸங்கள் ஊத
அங்கவங்க தவளரஸம் அம்மனுக்கு வேணுமென்று
இன்பமாகவே பொற்குடத்தில் இருந்து கொண்டாள்  (ஜெய)

 27. தும்புரு நாரதர் சுப வீணை வாசிக்க
ரம்பை திலோத்தமை நாட்டியமாட
சந்ததம் பக்தர்கள் சந்நிதியில் ஸ்தோத்தரித்து
 இந்த விரதம்போல உலகத்தில் இல்லை என்றார் (ஜெய)

  28. வாத்தியாரை வரவைத்து வரிசையாய் மணை போட்டு
மகிமையுள்ள லக்ஷ்மிகதை மறவாதீர் நீர்
எந்தனுக்கு சொல்லுமென்று இஷ்டமான
மங்கையர்கள் சட்டமாக பூஜிக்க வந்திருந்தார்  (ஜெய)

29. மங்கையர் சொன்னபடி மகிழ்ந்த வாத்தியார்
அன்புடனே அம்மன் சொன்ன சொப்பனத்தை
சம்பிரமமாக கல்பமாய் சகல கதை உண்டாக்கி
லக்ஷ்மிகதை சொல்லவே வந்திருந்தார்  (ஜெய)

30. பூவினால் பூஜித்து பூலோக நாயகியை
அக்ஷதையால் அர்ச்சித்து ஆனந்தமாய்
பக்ஷமாய் வரலக்ஷ்மி பரதேவதை என்று
இஷ்டமான  நைவெத்தியங்கள் எடுத்து நிறைந்தார்  (ஜெய)

 31. வடையுடனே அதிரசம் வகையான பணியாரம்
கதல ஜம்பூபலம் கனத்த தேங்காய்,
பானகம் வடைப் பருப்பு பஞ்சாமிருதம் தேனும்
 இளநீரும் செங்கரும்பும் எடுத்து நிறைந்தார் (ஜெய)

 32. அப்பமொடு இட்லி ஆனதொரு மோதகம்
சர்க்கரைப் பொங்கலுடன் சிறுபருப்பு பொங்கல்
கர்ச்சிக்காய் தேங்குழல் கட்டித்தயிர் சால்யான்னம்
பரிபூர்ணமாய் நிவேத்யம் செய்தாள் பாக்கிய லக்ஷ்மிக்கு  (ஜெய)

 33. அகில தேவர்களே நீர்வந்தது சுபமாச்சு என
சொல்லி போஜன உபசாரங்கள் செய்தார்
வந்தவர் எல்லோரும் ஆனந்தமாகவே
அந்த க்ஷணம் மேளம் அமர்த்தி கையினால்  (ஜெய)

 34. பந்துக்களோடே பரதேவதை சந்நிதிக்கு
வந்தாளே மங்கள ஹாரத்தி எடுக்க
பொன்னான இருபுறமும் புகழ்ந்து ஜோதிவைத்து
நன்றாக வெளுத்த திரி நனைத்துப் போட்டு  (ஜெய)

 35. அற்புதமான பசுவின்நெய்யை அழகு அழகாய் வார்த்து
திருவிளக்கை சேர்த்து பிடித்தார்
பொன்னான அந்த நல்ல தாம்பளம் கைபிடித்து
நன்றாகவே சிரசை வணங்கிக்கொண்டு  (ஜெய)

36. கல்யாண லக்ஷ்மியைக் காண வேண்டுமென்று
சொன்னாளே மங்கள ஸ்தோத்ர கதையை
அன்னலக்ஷ்மிஅம்மன் ஆதிலக்ஷ்மி அம்மன்
பொன்னுலக்ஷ்மி அம்மன் புகழும் லக்ஷ்மி அம்மன் (ஜெய)

37. தான்யலக்ஷ்மி அம்மன் தனலக்ஷ்மி அம்மன்
சந்தான லக்ஷ்மி சகல லக்ஷ்மி
அஷ்டலக்ஷ்மி அம்மன் எல்லோரும் வந்திருந்து
கஷ்டமெல்லாம் தீர்த்து கண்டவுடனே (ஜெய)

38. பரிமள மணக்கவே பாவையர்கள் பல்லாக்கு
எடுத்து சிம்மாசனத்தில் இளைப்பாறி  பின்
வெள்ளெலையும்வெடக்காயும்வெளுத்ததொரு சுண்ணாம்பும்
பல்லையொத்த பச்சக் கற்பூரம் வைத்து (ஜெய)

39. அள்ளி வெண்ணை திருடி ஆனந்தமாய் புசிக்கும்
கள்ள கிருஷ்ணன் தேவியார்க்கு கட்டி கொடுத்தாள்
மடிப்பு டனே வெற்றிலையும் மணக்க நல்ல களிப்பாக்கு
எடுத்து வெள்ளித்தட்டில் வைத்தாள் இன்பமாக (ஜெய)

40. படித்த வேதம் சொல்லும் பக்தியுள்ள ஜனங்களுக்கு
கொடுத்தாளே தாம்பூலம் வகையுடனெ
முதலாக வாத்தியாருக்கு பலகாரம் தக்ஷிணை
வரிசையாய் தாம்பூலம் வைத்துக்கொடுத்தாள் (ஜெய)

41. மட்டில்லா சந்தோஷம் மானிடருக்கு உண்டாக்க
அஷ்ட லக்ஷ்மியுடனே கிருகத்திலிருப்பாளென்று
முத்யால ஹாரத்தி வஜ்ராள ஹாரத்தி
பவழஹாரத்தி பரதேவதைக்கு (ஜெய)

42. மாணிக்க ஹாரத்தி வரலக்ஷ்மி அம்மனுக்கு வரிசையாய்
பூமிதனில் இற‌க்கிகொண்டு இருக்கவே
வரலக்ஷ்மி இஷ்டமாய் கிருகந்தனில்
பரிபூர்ணமாகவே இருந்து கொண்டாள் (ஜெய)

43. பட்டணத்தோட பாவையர்கள் வந்திருக்க
குணமான ஜனங்களெல்லாம் கூடித்தெருவில்
எஜமானர் முகம்பார்ப்பார் இஷ்டமாக ஸ்தோத்தரிப்பார்
உம்மைப்போல் குணமுடையவர் உலகத்திலில்லை  (ஜெய)

44. சாருமதி அம்மனுக்கும் சகல குணசீலர்க்கும்
ஜய ஜய என்று சொல்லி ஜனங்களெல்லாம் சந்தோஷிக்க
வந்தவர்கள் எல்லோரும் மாளிகைக்குபோன பின்
அண்டையில் இருந்து வந்து ஜனங்கள் (ஜெய)

45. சட்டமாய் பலகாரம் தாம்பூலம்தான் தரிச்சு
லக்ஷ்மியின் சந்நிதியில் இளைப்பாறினர்
குன்றெடுத்து காத்தவருக்கும் கோபாலகிருஷ்ணனுக்கு
கோபியரை மயங்கவைத்த கோவிந்தருக்கும்  (ஜெய)

46. ஈரேழு விஷ்ணுவிற்கும் எடுத்தப்பட்டம் தரிச்சவருக்கும்
எங்கள் குருநாதருக்கும் ஸ்ரீ பாலா தேவிக்கும்
கலியாண ராமருக்கும் கண்ணனான கிருஷ்ணருக்கும்
ஜெய மங்களா சுப மங்களா !
ஜெய மங்களா சுப மங்களா !

இந்தப் பாடலைத் தவறாமல் நோன்பு மறுநாள் சனிக்கிழமை சாயங்காலம், அம்மனை வழியனுப்பும்போது பாடப்படும் பாடலிது. வரலக்ஷ்மி விரதக் கதை முழுவதும் இந்தப் பாடலில் இருப்பதால், கதை படித்த பலனும் கிட்டும்.

ஓம் மகாலக்ஷ்ம்யை நமஹ !
நமஸ்காரங்கள் எத்தனை வகைகள்?

நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும் அவை ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

ஓரங்க நமஸ்காரம் : வழிபடுபவர் தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.

மூன்று அங்க நமஸ்காரம் : வழிபடுபவர் தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்

பஞ்ச அங்க நமஸ்காரம் : வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம் பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும்.

அஷ்டாங்க நமஸ்காரம் : ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.

சாஷ்டாங்க நமஸ்காரம் : வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

நமஸ்கார தத்துவம் : என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை;எல்லாம் உன் செயல்;என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்

கோயிலின் உள்ளே நமஸ்காரம் செய்வதெப்படி?

கோயில் வளாகத்தில் எல்லா இடங்களிலும் நமஸ்கரிப்பது உசிதமல்ல. கோயில் கர்ப்பக்கிருகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால். கொடிமரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம் கர்ப்பக்கிருகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ இருந்தால் கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். அபிஷேகம் அல்லது நிவேதனம் செய்யும் நேரங்களில் நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வது நியதி நமஸ்காரம் செய்வதானால் 3,5, 7,9,12 முறைகள் நமஸ்காரம் செய்ய வேண்டும் 1 அல்லது 2 முறை நமஸ்கரித்தல் கூடாது. நமஸ்காரம் செய்பவர் தலை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நமஸ்காரம் செய்யவேண்டும்.
----------------------------------------------------------------------------------------
{ராவணனுக்கு பத்து தலை வந்தது எப்படி?}

ராவணனுக்கு பத்து தலைகள், இருபது கைகள். ஏன் இப்படி குறையுள்ள பிள்ளையாக பிறந்தான் தெரியுமா? விச்ரவசு மகரிஷியின் புதல்வன் குபேரன். பிரம்மாவுக்கு கொள்ளுப்பேரன். அவன் தனது தாத்தா பிரம்மாவை நினைத்து தவம்இருந்து சகலசெல்வங்களையும் பெற்றான். அதில் முக்கியமானது நவரத்தினங்களாலான புஷ்பக விமானம். அதில் நினைத்த இடத்திற்குப் பறந்து சென்று, செல்வத்தைக் கொண்டு வந்து குவிப்பான். உலகிலேயே பெரும் பணக்காரன் அவன்தான். சுமாலி என்ற அசுரன் இதைக் கவனித்தான். தனக்கும் குபேரனைப் போன்ற ஒரு பிள்ளை இருந்தால், உலகையே கட்டி ஆளலாம் என கணக்குப் போட்டான். தன் மகள் கைகனி யிடம், மகளே! அசுரர் குலம் தழைக்க, நீ விச்ரவசு முனிவரை மணந்து கொள்ள வேண்டும். உடனடியாகக் குழந்தை பெற வேண்டும். அந்தக் குழந்தை மூலம் நம் குலம் சாகாவரம் பெற்று, உலகையே ஆட்டிப்படைக்கும், என்றான். கைகனியும் சம்மதித்தாள். காட்டிலிருந்த விச்ரவசு முனிவரை சந்தித்தாள். பேரழகுப்பதுமையான அவளைக்கண்டதும் அவர் மயங்கினார். தன்னைத் திருமணம் செய்யும்படி அவளேகேட்டதால் சம்மதித்தார்.

அந்த நேரமே தன்னோடு உறவு கொள்ளும்படி அவள் வேண்டினாள். கைகனி! இது அந்திக் கருக்கல் நேரம். இந்நேரத்தில் யார் ஒருவர் உறவுகொள்கிறாரோ அவருக்கு விகாரமான குழந்தையே பிறக்கும். குழந்தை குறையுள்ளதாக இருக்கும். எனவே இரவு வரை காத்திரு, என்றார். முனிவர் மனம் மாறிவிடுவாரோ என பயந்த கைகனி, அந்நேரமே உறவு கொள்ள நிர்ப்பந்தித்தாள். முனிவரும் வேறு வழியின்றி, உறவு கொள்ளவே, அவள் கர்ப்பமானாள். அந்த சிசு, பத்து தலைகள், இருபது கைகள், பயங்கரவிழிகள் கொண்டதாக ஒழுங்கற்ற வடிவத்தில் பிறந்தது. குழந்தையைக் கண்டு தாயே பயந்துவிட்டாள். முனிவரின் பேச்சைக் கேட்காமல் இருந்ததற்காக மன்னிப்பு கேட்டாள். தவவலிமையைப் பயன்படுத்தி குழந்தைக்கு ஒற்றைத்தலை வேண்டுமென கேட்டாள். கைகனி! அது நடக்காத காரியம். என் தவவலிமையினால், அழகற்ற இவனை அழகனாக வேண்டுமானால் மாற்றுகிறேன். இவனது பத்து முகங்களும் அழகாக இருக்கும்.

வஜ்ரம் பாய்ந்த உடல், கைகளுடன் இவன் பலவானாக விளங்குவான், என்றார். அவனுக்கு தசமுகன் என்று பெயரிட்டனர். அவன், ஒருமுறை கைலாயத்திற்கு சென்றான். தன்னால், எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் கைலாயமலையை தூக்கி கடலில் போட எண்ணினான். அவ்வாறு அவன் செய்ய முயன்ற போது, சிவன் தன் கட்டை விரலால், மலையை அழுத்த அவனது பத்து கைகளும் மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டது. அவன் வலி தாங்காமல் ஓவென கதறி அழுதான். அந்த அலறல் உலகம் முழுமையும் கேட்டது.  அப்போது அங்கு வந்த முனிவர் ஒருவர், தசமுகா! சிவனை  பணிந்து பாடு. அவர் உன்னை மன்னிப்பார், என்றார். தசமுகனும் சிவனுக்குப் பிடித்த சாமகானப் பாடல்களைப் பாடினான். அதுகேட்டு மகிழ்ந்த சிவன் அவனை விடுவித்தார். தசமுகா! நீ வலி தாங்காமல் உலகமே நடுங்க அழுததால் ராவணன் என அழைக்கப் படுவாய். அந்தப்பெயரே உனக்கு நிலைக்கும். நீ புகழ் பெற்று நீண்டகாலம் வாழ்வாய், என்று ஆசிர்வதித்தார். ராவணன் என்ற சொல்லுக்கு அழுது கொண்டே இருப்பவன் என்பது பொருள். ராவணன் இலங்கை மன்னனாக பலகாலம் புகழுடன் ஆட்சி செய்தான். பிறன் மனைவியை நாடியது மட்டுமே அவன் செய்த குற்றம். அந்த குற்றத்தால் அவன் ராமனால் கொல்லப்பட்டான்.
----------------------------------------------------------------------------------------
{அன்றே சாட்டையை சுழற்றிய ராஜராஜசோழன்!}

ராஜ ராஜ சோழன் ஆன்மிகத்தில் எந்தளவுக்கு உயர்ந்தவனோ, அந்தளவுக்கு அரசு நிர்வாகத்திலும் சிறந்தவன். இவனது காலத்தில் ஐந்து வாரியங்கள் இருந்தன.சம்வத்சர வாரியம் வழக்குகளை விசாரிக்கும். ஏரி வாரியம் வாய்க்கால், குளக்கரைகளைப் பாதுகாத்தல், தண்ணீரைப் பங்கிட்டுக் கொடுக்கும். நிலவளம் குறித்து ஆய்வு செய்து தீர்வளிப்பது தோட்ட வாரியம். பொற்காசுகளையும், செப்புக்காசுகளையும் ஆய்வு செய்து போலிகளைக் கண்டுபிடிப்பது பொன் வாரியம் (எப்பவுமே ஏமாத்துறவங்க இருக்கத்தான் செய்திருக்காங்க) நிலவரி, பிற வரிகளை வசூலிப்பது பஞ்சவார வாரியம்.இந்த வாரியங்களின் நிர்வாகிகளாக கணக்காளர்கள் நியமிக்கப்பட்டனர். வாரியங்களை கண்காணிக்க ஒரு சபை இருந்தது. சபையாளர்கள் கேட்கும்போது, கணக்காளர்கள் கணக்குகளை ஒப்படைக்க வேண்டும்.

கணக்காளருக்கு சம்பளம் என்ன தெரியுமா?தினமும் ஒருநாழி நெல், வருடத்துக்கு ஏழரை கழஞ்சு (39.750 கிராம்) தங்கம் போனஸ், இரண்டு சீருடை. கணக்கை வாசிக்கும்போது, என் மனதறிந்து இதில் எந்தத் தவறுமில்லை. யாருக்கும் எந்த சலுகையும் காட்டவில்லை, என்று உறுதி சொல்ல வேண்டும். சும்மாவா! பழுக்கக் காய்ச்சிய கோடரியை கையில் பிடித்துக் கொண்டு சொல்ல வேண்டும். கணக்கை முடித்ததும், கையில் காயம் படாமல் இருந்தால் ஏழேகால் கழஞ்சு (உத்தேசமாக 38.425 கிராம்) தங்கம் சிறப்பு போனஸ். காயம் பட்டாலோ, கழுதை மேல் ஏற்றி, சாட்டையால் அடித்து ஊர்வலம்... பத்து கழஞ்சு (53 கிராம்) தங்கம் அபராதம் வேறு. அபாராதம் கட்டாவிட்டால் சிறை.அந்தக் காலத்திலே ராஜாக்கள் நேர்மையா இருந்திருக்காங்க! இப்ப இது மாதிரி தண்டனை பத்தி பேசினாலே, மனித உரிமையை பறிச்சுட்டோமுனு போர்க்கொடி தூக்கிட மாட்டாங்களா என்ன!
----------------------------------------------------------------------------------------
கோயிலுக்கு கொடிமரம் அமைப்பது ஏன்?

கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது. கொடி மரத்தின் தண்டு நல்ல வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது  உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிகமிகக் குறைந்த நன்மையளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும். கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சிவரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமையப்பெற்றது.

ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும். கொடிமரம் சிவபெருமான்; கொடிக்கயிறு திருவருட் சக்தி; கொடித்துணி ஆன்மா; தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும். திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கப் போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பர் என நினைந்து கொடி மரத்தை சூக்கும லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்த வண்ணம் கொடிமரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

சிவன் கோயிலில் நந்தியையும், பெருமாள் கோயிலில் கருடனையும், அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல்பகுதியில் அமைத்திருப்பார்கள். துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடி மரத்தைக் காக்கும் பொருட்டு பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் கவசமணிவிப்பர். இதனால் வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------
{சப்தகன்னியர் கவுமாரி}

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

சப்தகன்னியரில் கவுமாரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு சமேத பஞ்சவடீசுவரர் திருக்கோயில் ஆகும். இத்தலத்தில் கல்யாண சுந்தரி, பெரியநாயகி ஆகிய இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஆனந்த முனிவருக்கு சிவன் தாண்டவ தரிசனம் காட்டிய தலம். மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த சிறப்புடையது.

கவுமாரி, முருகனுடைய அம்சம் உள்ளவள். ரத்தின மகுடம் அணிந்தவள். அங்குசம், வேல், அபயம், வரதம் அமைந்த நாற்கையினள். செம்பட்டாடை அணிந்தவள். ஆரகேயூரம் பூண்டவள். குங்கும நிறத்தினள். பெருவீரம் உடையவள். மயில்கொடி, மயில் வாகனம் உடையவள்.

மயிலாடுதுறையிலிருந்து  4 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

கவுமாரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் - ஸ்கந்த மாதா - குமாரரூபிணி - முருகனின் அம்சமாக அவதரித்தவள். ஒரு முகமும் இரண்டு கண்களும்- நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரண்டு கரங்களை வரத அபயமாகவும்; மேல் இரண்டு கைகளில் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்களையும் தாங்கி இருப்பாள். நீல நிற மேனியினை உடையவள். யௌவன வயதினள். மயில் வாகனத்தின் மீது அமர்ந்திருப்பவள். கோழிக்கொடி பிடித்திருப்பவள். இரதியினை ஒத்த அழகு மேனியள். தேவர்களின் சேனாதிபதியாகிய சுப்ரமணியரின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தவள் இவளே. இவளை வணங்கினாள் நல்ல மகவு கிட்டும். உபாசித்தால் - வீரத்தினை அடையலாம். கார்த்திகைப் பெண்கள் ஆறுவரும இவள் ஏவலுக்குப் காத்திருப்பர். எனவே, இவளைத் தொழுது பெரும் பதவியடையலாம்!

கவுமாரி பாடல்:ஆறு சூடியை அற்புதக் கூத்தனை அவிர்கஞ்
சாறு மேவிய சங்கரன்றனைக் கவுமாரி
ஊறும் அன்பினில் ஒளிகெழு பூசனை ஏற்றி
ஏறுபற்பல வளங்களும் இன்புறப் பெற்றாள்.

கவுமாரி ஸ்கந்தரி - பூஜா

ஆசன மூர்த்தி மூலம்:ஓம் - ஹ்ரீம் - கௌமாரி - ஆசனாயயாய - நம :
ஓம் - ஹ்ரீம் - கம் - கௌமாரிமூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமாரியே - நம:

காயத்ரி:ஓம் - சிகித்வஜாயை வித்மஹே;
சக்தி ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ கௌமாரீ ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்:சதுர்புஜா த்ரிநேத்ரா
சரக்த வஸ்த்ர சமந்விதா;
ஸர்வாபரண ஸம்யுக்தா
வாசிகா பக்த காகுடீ;
ஸத்தி குக்குட ஹஸ்தாச
வரதாபய பாணிநீ;
மயூரத்வஜவாஹீ, ஸ்யாத்
உதும்பர த்ருமாஸ்ரிதா
கௌமாரீ சேதி விக்யர்தா,
நமஸ்தே ஸர்வகாமபலப்ரதா.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - சம் - கௌம் - கௌமார்யை - நம:

அர்ச்சனை: ஓம் கௌமாரியை நம
ஓம் ஸ்கந்தாயை நம
ஓம் குஹாயை நம
ஓம் சண்முகாயை நம
ஓம் க்ருத்திகாயை நம
ஓம் சிகிவாகனாயை நம
ஓம் குமாராயை நம
ஓம் சேனாயை நம
ஓம் விசாகாயை நம
ஓம் கமலாசனாயை நம

ஓம் ஏகவர்ணாயை நம
ஓம் அக்னிகர்பாயை நம
ஓம் சந்த்ரவர்ணாயை நம
ஓம் கைவல்யாயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் சுப்ரமண்யை நம
ஓம் தேவ சேனாயை நம
ஓம் சமாயை நம
ஓம் சங்ககண்டாயை நம
ஓம் ரக்ஷிகர்த்தாயை நம

ஓம் ரதி அம்சாயை நம
ஓம் ரம்ய முகாயை நம
ஓம் ரகு பூஜிதாயை நம
ஓம் வசூதாயை நம
ஓம் வடுரூபாயை நம
ஓம் வனஜாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் பத்ர மூர்த்யை நம
ஓம் பயாபகாயை நம
ஓம் பக்த நிதாயை நம

ஓம் வஸ்ரஹஸ்தாயை நம
ஓம் சூராயை நம
ஓம் விஜயாயை நம
ஓம் அநகாயை நம
ஓம் நிர்மலாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் நிர்குணாயை நம
ஓம் நிர்விகராயை நம
ஓம் சத்ய வாசாயை நம
ஓம் சத்ய சந்தாயை நம

ஓம் கருணாலாயை நம
ஓம் திருலோகபதயை நம
ஓம் புஷ்டிகராயை நம
ஓம் சிரேஷ்டாயை நம
ஓம் சரண்யாயை நம
ஓம் சர்க்காயை நம
ஓம் தர்மரதாயை நம
ஓம் தக்ஷõயை நம
ஓம் பரப்ரமண்யை நம
ஓம் சௌக்கியநிலாயை நம

ஓம் பரஞ்சோதியை நம
ஓம் கிருபாநிதயை நம
ஓம் அப்ரமேயாயை நம
ஓம் ஜிதேந்திர்யாயை நம
ஓம் அக்னிகர்பாயை நம
ஓம் தேவாயை நம
ஓம் சடாநநாயை நம
ஓம் குக சகாயை நம
ஓம் லோக ரக்ஷகாயை நம
ஓம் சிந்தாயை நம

ஓம் சித்ரகாரகாயை நம
ஓம் கட்கிதராயை நம
ஓம் தநுர்தராயை நம
ஓம் ஞானகம்யாயை நம
ஓம் சர்வபூததயாயை நம
ஓம் விச்வப்பிரியாயை நம
ஓம் விச்வபுசேயை நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் கல்ப்ப வ்ருசாயை நம
ஓம் துக்கக்னாயை நம

ஓம் வரப்பிரியாயை நம
ஓம் ஞான ரூபாயை நம
ஓம் ஞான தாத்ரே நம
ஓம் வேத ஆத்மநேயை நம
ஓம் மகா ரூபாயை நம
ஓம் பகூதராயை நம
ஓம் நிர்விகல்பாயை நம
ஓம் நிர்வ பாசாயை நம
ஓம் சிந்தையாயை நம
ஓம் சிந்மயாயை நம

ஓம் ஜீவ சாக்ஷினேயை நம
ஓம் கர்மசாக்ஷினேயை நம
ஓம் அத்வயாயை நம
ஓம் அஜய்யாயை நம
ஓம் மிதா சநாயை நம
ஓம் சுலோசனாயை நம
ஓம் அவ்யக்தாயை நம
ஓம் முக்தி ரூபாயை நம
ஓம் பராத்பரதாயை நம
ஓம் அநந்யாயை நம

ஓம் அதநவேயை நம
ஓம் அச்சேத்யாயை நம
ஓம் அசோத்யாயை நம
ஓம் நாரதமுநிதோத்ராயை நம
ஓம் விகட்டநாயை நம
ஓம் சாம்ராஜ்யபதாயை நம
ஓம் யுகாந்தகாயை நம
ஓம் அபிமராயை நம
ஓம் ஆசவேயை நம
ஓம் அம்ருதாயை நம

ஓம் காருண்யநித்யை நம
ஓம் பீஜாயை நம
ஓம் சாச்வதாயை நம
ஓம் தேவதேயை நம
ஓம் பாரிசாதாயை நம
ஓம் யோகாயை நம
ஓம் சர்வாபரணபூசிதாயை நம
ஓம் ஸ்கந்தர்யை நம

ஸ்ரீ கவுமாரி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

துதி: மயூர குக்குட வ்ருதே
பஹாசக்தி தரேனகே
கௌமாரி ரூபஸம்ஸ்தானே
அம்பிகே நமோஸ்துதே.
----------------------------------------------------------------------------------------
{சப்தகன்னியர் மாகேஸ்வரி}

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர். சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பின் இந்த சப்தகன்னியரையும் வழிபட்டால் தான். கோயிலுக்கு சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சப்தகன்னியரின் தோற்றம்:  சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறுகிறது. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.

நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் விளக்குகின்றது. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் மாகேஸ்வரி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், கருங்குயில்நாதன் பேட்டை அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சக்திபுரீசுவரர் திருக்கோயில் ஆகும். தக்க யாகத்தில் இந்திரன் குயில் உருவங்கொண்டு வந்து வழிபட்ட தலம். சப்தமாதர் திருவுருவங்கள் உள்ளன. இங்குள்ள தீர்த்தம் நோய் நீக்கும் சிறப்புடையது. தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவது. காவிரி வடகரையில் பூம்புகார்ப் பேருந்து சாலையில் உள்ளது கருணாபுரம் கருணாபேட்டை.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

போன் : 94435 23080.

மாகேஸ்வரி வழிபட்ட மற்றொரு தலம் தஞ்சாவூர் மாவட்டம், கோயிலடி அருள்மிகு ஞானாம்பிகை சமேத ஹரிமுக்தீஸ்வரர் திருக்கோயில் ஆகும். இங்கு சப்தமாதர் திருவுருவங்கள் உள்ளன.  தலவிருட்சம் நெல்லிமரம். தீர்த்தம் சத்திய கங்கை.

தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் கோயிலடி பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே இரண்டு கி.மீ. அய்யம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மேற்கே ஒரு கி.மீ

மாகேஸ்வரி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு): மகேஸ்வரனின் அம்சமாக வெளிப்பட்டவள் மாகேஸ்வரி சிவபிரானைப் போன்றேமுக்கண் ஐந்துதிருமுகங்களைக் கொண்டவளாகக் காட்சியளிப்பவள். பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு உள்ளிட்ட ஆயுதங்களை தம் கரங்களில் தரித்தவள். அபய வரத ஹஸ்தம் துலங்க பத்து கரங்களுடன் இடபக்கொடி, ஜடாமகுடம், பாம்பணி பூண்டவளாய் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பவள். ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவள். வெள்ளை நிறமுடையவள்.

தன்னை வழிபடுவோருக்குப் போகத்தைக் கொடுப்பவள். இவள் சர்வமங்களா எனப்பெயருடையவள். ஆகையால். மக்களுக்கு சர்வ மங்களங்களையும் அருள்பவள். தர்மத்தின் திருவுருவாய் அமைந்தவள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் தருபவள். தன்னை உபாசிப்பவர்களுக்கு பொன்னும் - மெய்ப்பொருளும் - போகமும் அருள்பவள்!

மாகேஸ்வரி பாடல்: சிரத்துமாமதி சூடிய தேவனைக் கருணா
புரத்து நாதனைப் புண்ணியமூர்த்தியைப் புகழ்சால்
உரத்து மேம்படும் மயேச்சரி பூசனை உஞற்றி
வரத்து மேதகு சிறப்பெலாம் பெற்றனள் வாழ்ந்தாள்.

மாகேஸ்வரி ரௌத்ரி பூஜா

ஆசன மூர்த்தி மூலம்:

ஓம் - ஹ்ரீம் -மாகேஸ்வரி - ஆசனாயயாய - நம:
ஓம் - ஹ்ரீம் - மம் - மாகேஸ்வரி மூர்த்தியை - நம:
ஓம் - ஹ்ரீம் - ஹாம் - மம் - மாகேஸ்வரியே - நம:

காயத்ரி: ஓம் - வ்ருஷத்வஜாயை வித்மஹே:
ம்ருக ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்: ஏகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச,
மஹாதேவீம் சதுர்புஜாம்;
ஜடாகுட ஸம்யுத்தாம்,
சுக்ல வர்ணாம், சூசோபிதாம்;
வரதா பய ஹஸ்தாம்
தாம்ம்ருகம் டங்கஞ்ச தாரிணீம்;
வ்ருஷ வாஹ ஸமாரூடாம்
வந்தே மகேஸ்வரீம் சுபாம்.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - ஹாம் -மம்- மாகேஸ்வர்யை - நம:

அர்ச்சனை: ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் சம்பவேயை நம
ஓம் வாமதேவாயை நம
ஓம் பினாகினேயை நம
ஓம் வ்ருபாசாயை நம
ஓம் சங்கராயை நம
ஓம் கட்வாங்கினேயை நம
ஓம் ஸ்ரீகண்டாயை நம
ஓம் பக்தவச்சலாயை நம

ஓம் பவாயை நம
ஓம் சர்வாயை நம
ஓம் த்ரிநேத்ராயை நம
ஓம் த்ரிலோகேசாயை நம
ஓம் உக்ராயை நம
ஓம் கபாலிகாயை நம
ஓம் காமாஹியாயை நம
ஓம் கங்காயை நம
ஓம் க்ருபாநிதியை நம
ஓம் பீமானாய நம

ஓம் வ்ருஷபாரூபாயை நம
ஓம் யக்ஞமயாயை நம
ஓம் சோமாயை நம
ஓம் பஞ்சவக்த்ராயை நம
ஓம் சதாசிவாயை நம
ஓம் விச்வேச்வராயை நம
ஓம் பைரவியை நம
ஓம் வீரபத்திரயை நம
ஓம் கணநாதாயை நம
ஓம் புஜங்கபூசணாயை நம

ஓம் கிரிப்ரியாயை நம
ஓம் பகவதியை நம
ஓம் ம்ருத்யுஞ்சாயை நம
ஓம் ஜகத்குருயாயை நம
ஓம் ருத்ராயை நம
ஓம் பூதபீதேயை நம
ஓம் திகம்பராயை நம
ஓம் சாத்விகாயை நம
ஓம் தேவாயை நம
ஓம் பரமேஸ்வர்யை நம

ஓம் வித்யா ரூபியை நம
ஓம் ரக்ஷ்ன மாலின்னை நம
ஓம் சர்வ ஞானியை நம
ஓம் விருட்சபரூபாயை நம
ஓம் விருட்சப துவசாயை நம
ஓம் அக்ஷ்மாலாதாரியை நம
ஓம் முனிசேவாயை நம
ஓம் காமமாமின்யை நம
ஓம் சத்ய ரூபாயை நம
ஓம் கால நேத்ராயை நம

ஓம் காலஹந்த்ரேயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் கல்யாண மூர்த்தயை நம
ஓம் காலகாயை நம
ஓம் க்ருதக்ஞாயை நம
ஓம் கங்களாயை நம
ஓம் கமனீயாயை நம
ஓம் கபர்தினேயை நம
ஓம் சிவகாமியை நம
ஓம் வரதாயை நம

ஓம் வ்யோமகேசாயை நம
ஓம் விரூபாயை நம
ஓம் வித்யாநிதயை நம
ஓம் விராடிசாயை நம
ஓம் விசாலாட்யை நம
ஓம் நடனாயை நம
ஓம் அக்னி ரூபாயை நம
ஓம் விஷ்ணுரூபின்யை நம
ஓம் சுந்தராயை நம
ஓம் சூலஹஸ்தாயை நம

ஓம் அபயவரதகராயை நம
ஓம் பாசமுத்ராயை நம
ஓம் பரசுசூடாயை நம
ஓம் ருத்த ரூபாயை நம
ஓம் நிராவாராயை நம
ஓம் விமலாயை நம
ஓம் சர்வாத்மாயை நம
ஓம் வீராயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் பீமாயை நம

ஓம் விஷ்ணு சகோத்ரியை நம
ஓம் சர்வாதாயை நம
ஓம் சர்வசங்கராயை நம
ஓம் ஹராயை நம
ஓம் நீலகண்டப்ரிதாயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் பாபசம்கர்த்ராயை நம
ஓம் யந்த்ரவாகாயை நம
ஓம் தேவதேவாயை நம
ஓம் சிவப்ரியாயை நம

ஓம் சப்தகன்னிரூபாயை நம
ஓம் கருணாகராயை நம
ஓம் வேத சாராயை நம
ஓம் வேத ரூபின்யை நம
ஓம் சூர்யசந்த்ரநேத்ராயை நம
ஓம் சாந்த ரூபாயை நம
ஓம் திவ்ய காந்தாயை நம
ஓம் அக்ராயை நம
ஓம் ஏகாயை நம
ஓம் சூச்மாயை நம

ஓம் பரமேசாயை நம
ஓம் ஞானதாயை நம
ஓம் சூபஸ்வினேயை நம
ஓம் வீணாதாரிண்யை நம
ஓம் சியாமளாயை நம
ஓம் பரசு அஸ்திராயை நம
ஓம் கயலக்ஷ்காயை நம
ஓம் ரௌத்ரியை நம

ஸ்ரீ மாகேஸ்வரி அஷ்ட சத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி சமர்ப்பியாமி சொல்லி தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

துதி: த்ரிசூல சந்த்ரா ஹிதரே
மஹா வ்ருஷப வாஹினி
மகேஸ்வரி ஸ்வரூபேண
தேவி நமோஸ்துதே.
----------------------------------------------------------------------------------------
பிராம்மி

பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். பராசக்தியின் படைத்தளபதிகளான இவர்கள் பெரும்பாலான சிவாலயங்களில் சுற்றுப் பிரகாரத்தில் அருள்பாலிப்பர். சப்த கன்னியர் எனப்படும் சப்த மாத்திரிகைகள் பொதுவாக ஒரே கல்லில் வரிசையாக அமர்ந்திருப்பது போன்று அமைக்கப்படுவர். சில இடங்களில் தனித்தனித் திருமேனிகளும் கொண்டிருப்பர். நின்ற நிலையில் அமைக்கப்படுதல் பெரும்பாலும் வழக்கில் இல்லை. இருந்தருளும் நிலையில், இடது காலை மடித்து சுகாசன நிலையிலோ அல்லது உத்குடி ஆசன நிலையிலோ வைத்திருப்பர். வலது காலைத் தொங்கவிட்ட நிலையில் காணலாம். ஆகமம் மற்றும் புராணங்களில் இவர்களுக்குக் கரங்கள் பல கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக இரண்டு அல்லது நான்கு கரங்களுடனேயே இருப்பர். இரண்டு கரங்களானால் அபய வரதம் கொண்டிருப்பர்; நான்கு கரங்களானால் முன்னிரு கரங்களை அபயவரதமாகவும் பின்னிரு கரங்களில் தத்தமக்குரிய ஆயுதங்களைத் தாங்கியிருப்பர். கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பின் இந்த சப்தகன்னியரையும் வழிபட்டால் தான். கோயிலுக்கு சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சப்தகன்னியரின் தோற்றம்: சிவன் அந்த காசுரனுடன் போரில் ஈடுபட்ட போது; அந்த காசுரனின் உடலில் இருந்து வழிந்த இரத்தத்திலிருந்து தோன்றிய அசுரர்களை அழிக்கும் நோக்கில், சிவன் தனது வாயிலிருந்து தோன்றிய அக்னியிலிருந்து யோகேசுவரி - என்ற சக்தியைத் தோற்றுவித்தார் என்றும்; அவள் மாகேசுவரி - என்ற சக்தியை உருவாக்கினாள் என்றும்; அவளுக்கு உதவியாக பிரம்மன் தனது அம்ச பிராம்மியையும்; விஷ்ணு தனது அம்ச வைஷ்ணவியையும்; இந்திரன் - தனது அமட்ச இந்திராணியையும் ; முருகன் - தனது அம்ச கவுமாரியையும்; வராகமூர்த்தி - தனது அம்ச வராகியையும்; யமன் - தனது அம்ச சாமுண்டியையும் படைத்து அளித்தனர் என்று வராகபுராணம் கூறுகிறது. சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.

நைரிதன் என்ற அசுரனை ஒழிக்கப் பிரதம்மா யுத்தம் செய்த போது; அவருக்கு உதவி புரிவதற்காக பிற தேவர்கள் தங்களது சக்திகளை உருவாக்கி, அளித்தனர் என்று சுப்ரபேதாகமம் விளக்குகின்றது. அக்னி புராணம், மச்ச புராணம், தேவி புராணம் என்ற புராண நூல்களிலும், பூர்வ காரணாகமம், அம்சுமத் பேதாகமம் என்ற ஆகம நூல்களிலும்; விஸ்வகர்ம சாஸ்திரம், சில்பரத்தினம், ரூப மண்டலம், ரூபாவதாரம் என்ற சிற்ப சாஸ்திர நூல்களிலும்; இவர்களது உருவ அமைப்பு ஆயுதங்கள் முதலியன கூறப்படுகின்றன. ஆண் தெய்வங்களின் சக்திகளான இவர்கள் தத்தமக்குரிய ஆண் தெய்வங்களின்; ஆயுதங்கள் ஆபரணங்கள் வாகனம் கொடி என்பனவற்றினைக் கொண்டு விளங்குவர்!

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர்.  சப்தகன்னியரில் பிராம்மி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருஇந்தளூர், அருள்மிகு ஒப்பிலா நாயகி சமேத தான்தோன்றீசுவரர் திருக்கோயில் ஆகும்.

பிராம்மி, பிரமனுடைய அம்சம் உடையவள். நாற்றடந்தோள், அகன்ற கண்கள், ஒளிவிடும் பொன்மேனி, நாற்கரங்களில் வரதம், அபயம், கமண்டலம், அட்சமாலிகை கொண்டவளாய் அன்னக்கொடி, ஜடாமகுடம் உடையவளாய் பத்மாசனத்தில் எழுந்தருளியிருப்பாள். மயிலாடுதுறையிலிருந்து நீடூர் செல்லும் பேருந்து சாலையில் திருவழுந்தூரின் வடக்கு எல்லையில் இத்தலம் உள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

பிராம்மி - ரூப லக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

பிரம்மனின் சக்தி பிராம்மி எனப்படுவாள். அவள் நான்கு கரங்களையும் ஒரு முகத்தையும் உடையவள். முன் இரு கரங்களை அபயவரதமாகவும், பின் இரு கரங்களில் கெண்டி - ஸ்படிக மாலைகளை உடையவள். வெண்ணிற ஆடை அணிந்தவள்; ஸ்படிக மாலையை ஆபரணமாகப் பூண்டவள். அன்னவாகனத்தின் மேல் அமர்ந்தவள்; அதையே கொடியாகவும் உடையவள். தர்ப்பைப்புல் நீரால் இல்லத்தைச் சுத்தப்படுத்துபவள்.

பிரம்மனின் அம்சமாகையால் சிருஷ்டிக்கு அதிபதியானவள்; இவள்  கலைகளின் அதிதேவதை என்பதால், கலைஞானம் கிட்டும், கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம். அத்துடன் குழந்தைப் பேறும் கிட்டும்.

பிராம்மி பாடல்:

பேசவாம் புகழ்ப் பிராமி என்று உரைப்பவர் தான்தோன்
றீச நாதனை இமையவர் வாழ நஞ்சுண்டு
நாசமில்லியை நலந்தரு பூசனை ஆற்றித்
தேசமைந்த பல்வரத்தொடு சிறப்பெலாம் பெற்றாள்.

பிராம்மி  என்ற சாவித்திரியை வழிபடுவதற்கான பூஜா முறைகள்:

ஆசன மூர்த்தி மூலம்

ஓம் - ஹ்ரீம் - பிராம்மி - ஆசனாயயாய நம:
ஓம் - ஹ்ரீம் - பம் - பிராம்மி - மூர்த்தியை நம:
ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்மியே நம:

பிராம்மி காயத்ரி:

ஓம் - ஹம்ஸத்வஜாயை வித்மஹே;
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, ப்ராம்மி ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்:

சதுர்ப்புஜா விஸாலாட்சி;
தட்த காஞ்ச நசந்நிபா;
வரதாபய ஹஸ்தா ச
கமண்டல் வக்ஷ மாலிகா;
ஹம்ஸத்வஜா, ஹம்ஸாரூடா,
ஜடா மகுட தாரிணீ,
ரக்த பத்மாஸ நாசீகா
ப்ரம்ஹரூபிணீ, நமஸ்துதே

மூலமந்திரம்:

ஓம் - ஹ்ரீம் - ஐம் - பம் - பிராம்யை - நம:

அர்ச்சனை :

ஓம் பிராம்மியை நம
ஓம் பிதாமகாயை நம
ஓம் பரமேஷ்டியை நம
ஓம் பத்மஜாயை நம
ஓம் கமண்டலுதாயை நம
ஓம் காவேரிஜனகாயை நம
ஓம் கவோமுக்திதாயை நம
ஓம் காலரூபாயை நம
ஓம் கலாகாஷ்டரூபாயை நம
ஓம் சதுர்ஹஸ்தாயை நம

ஓம் சாத்வி காயை நம
ஓம் சாது மித்ராயை நம
ஓம் சந்துஷ்டமனசேயை நம
ஓம் சதுர்வக்த்ராயை நம
ஓம் அம்புஜஹஸ்தாயை நம
ஓம் சிவவிஷ்ணுப்ரியாயை நம
ஓம் ஹிரண்ய கர்ப்பாயை நம
ஓம் சிருஷ்டிகர்த்தியை நம
ஓம் சத்தியலோக நிவாயை நம
ஓம் வேததாரின்யை நம

ஓம் லோபாமுத்ரார்சியை நம
ஓம் தாத்ரேயை நம
ஓம் விதாத்ரேயை நம
ஓம் பத்மாசனாயை நம
ஓம் த்ரைலோக்யநாதாயை நம
ஓம் வராபயகராயை நம
ஓம் வித்யாதீசாயை நம
ஓம் ஜகன்னாதாயை நம
ஓம் ரவிவம்சசூபூஜ்யை நம
ஓம் திவ்யாம் பரதாயை நம

ஓம் லோக பூஜ்யாயை நம
ஓம் சத்ய ஸ்வரூபாயை நம
ஓம் சத்ய வாசே நம
ஓம் சகுணா ரூபாயை நம
ஓம் வாக தீசாயை நம
ஓம் விரிஞ்சீநேயை நம
ஓம் தேவ தேவாயை நம
ஓம் அக்ஷமாலாதராயை நம
ஓம் ஹிமாசலநிவாசிநியை நம
ஓம் சார பூதாயை நம

ஓம் காயத்ரியை நம
ஓம் பவ்யாயை நம
ஓம் த்ரிமூர்த்திரூபாயை நம
ஓம் சர்வஜ்ஞாயை நம
ஓம் தருண்யை நம
ஓம் சூபாயை நம
ஓம் த்ரிபதாயை நம
ஓம் த்ரிலோசநாயை நம
ஓம் தச ஹஸ்தாயை நம
ஓம் தசாயுதராயை நம

ஓம் த்ரிவேதரூபாயை நம
ஓம் சந்த்ர வர்ணாயை நம
ஓம் நித்யாயைப்ரஹ்மபூஜிதாயை நம
ஓம் மகா வித்யாயை நம
ஓம் ஸரஸ் வத்யை நம
ஓம் சர்வ வித்யாயை நம
ஓம் சர்வமந்த்ராயை நம
ஓம் சுத்த வஸ்த்ராயை நம
ஓம் சுத்த வித்யாயை நம
ஓம் வித்யாயை நம

ஓம் சௌம்யாயை  நம
ஓம் ப்ரம்மலோக நிவாசிக்யை நம
ஓம் ஜல கர்ப்பாயை நம
ஓம் ஜலப்ரியாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் சோடச கலாயை நம
ஓம் யஞ்ஞப்ரியாயை நம
ஓம் யஞ்ஞமூர்த்தியை நம
ஓம் அக்ஷராக்ருத்யை நம
ஓம் ப்ரஹ்மமூர்த்யை நம

ஓம் சகஸ்ரபரமாம்பிகாயை நம
ஓம் விஷ்ணுஹ்ருத்காயை நம
ஓம் ஹம்ஸ ரூபாயை நம
ஓம் நிரஞ்ஜநாயை நம
ஓம் பஞ்சவர்ணமுக்யை நம
ஓம் மகாமாயாயை நம
ஓம் மகாமந்த்ரபலப்ரதாயை நம
ஓம் சர்வதந்த ரூபாயை நம
ஓம் மாயாபீஜநிவாசின்யை நம
ஓம் மாந்யாயை நம

ஓம் விசித்ராய்யை நம
ஓம் ஜகத்திதாயை நம
ஓம் சதுராயை நம
ஓம் சதமத்யாயை நம
ஓம் தசாவராயை நம
ஓம் சிருக்குஹஸ்தாயை நம
ஓம் சிருவஹஸ்தாயை நம
ஓம் கெண்டிஹஸ்தாயை நம
ஓம் அக்ஷ்ரமாலாஹஸ்தாயை நம
ஓம் வேத மாத்ரே நம

ஓம் பாலிகாயை நம
ஓம் வ்ருத்தாயை நம
ஓம் சர்வகாரணாயை நம
ஓம் சந்துஷ்டாயை நம
ஓம் சர்வேஷ்வர்யை நம
ஓம் ஆதி சக்த்யை நம
ஓம் பரமார்த்தப்ரதாயை நம
ஓம் பக்த பீஷ்டப்ரதாயை நம
ஓம் ரத்ணாபூஷணதேவியை நம
ஓம் நாத ரூபாயை நம

ஓம் ஹம்ச ரூடாயை நம
ஓம் தத்வ ஸ்வரூபாயை நம
ஓம் சச்சிதானந்த ரூபாயை நம
ஓம் சத்ய மூர்த்தியை நம
ஓம் சர்வா பீஷ்டப்பர்தாயை நம
ஓம் ஓங்கா ரூபாயை நம
ஓம் வேதஸ்வரூபாயை நம
ஓம் சாவித்ரியை நம

ஸ்ரீ பிராம்மி அஷ்ட சத ஸ்தோத்திரம் ஸம்பூர்ணா.

பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்ய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.

துதி: ஹம்ஸயுக்த விமானஸ்தே
பிரஹ்மாணீ ரூபதாரிணி
கௌரி சாம்ப க்ஷரிகே
தேவி அம்பிகே நமோஸ்துதே.
----------------------------------------------------------------------------------------
பூஜை இல்லாவிடில்..

15.1. பூஜை செய்ய வகுக்கப்பட்டுள்ள முறைகளே ஐயனின் ஐந்தொழில் திறனைப் போற்றும் வகையில் அமைந்துள்ளன; 1. படைத்தல் - அபிஷேகம். 2. காத்தல் - நைவேத்யம் 3. ஸம்ஹாரம் - பலி போதல் 4. திரோபாவம் - தீபாராதனை 5. அனுக்ரஹம் - ஹோமம், பூஜைகளைச் செவ்வனே செய்யவிடின் ஐயன் ஐந்தொழில் புரிந்து நமக்கேன் அருள வேண்டும் ?

15.2. பூஜை இல்லாவிடில் ரோகமும், புஷ்பம் இல்லாவிடில் குல நாசமும், சந்தனம் இல்லாவிடில் குஷ்டிரோகமும், ஜலம் இல்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், தீபம் இல்லாவிடில் பொருள் நாசமும், நைவேத்யம் இல்லாவிடில் பஞ்சமும், மந்திரம் இல்லாவிடில் தரித்திரமும், வஸ்திரம் இல்லாவிடில் மகா ரோகமும், ஹோமம் இல்லாவிடில் குல நாசமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும், வில்வம்-அறுகு-அக்ஷதை இல்லாவிடில் பகைவர் பயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத்தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுர பயமும், நித்திய அக்கினி இல்லாவிடில் அரசர்க்கும் நாட்டுக்கும் தீங்கும், மற்ற திரவியங்கள் இல்லாவிடில் தேவதைகளுக்குக் கோபம் ஏற்பட்டு அதனால் ஒவ்வா விளைவுகளும் உண்டாகும்.

15.3. 1. சந்தனம் இல்லையென்றால் பயம் உண்டாகும். 2. ஆபரணம் இல்லையென்றால் தரித்ரம் உண்டாகும். 3. புஷ்பம், தூபம் இல்லையென்றால் ராஜ்யம் க்ஷீணிக்கும். 4. தீபம் இல்லையென்றால் தனம் இல்லாதொழியும். 5. நைவேத்தியம் இல்லையென்றால் க்ஷõமம் (பஞ்சம்) உண்டாகும். 6. அக்நிகார்யம் இல்லையென்றால் சங்கடங்கள் உண்டாகும். 7. பலி இல்லையென்றால் ஆள்பவர்களுக்குக் கெடுதல் உண்டாகும். 8. ந்ருத்தம் (கலை நிகழ்ச்சிகள்) இல்லையென்றால் துக்கம் உண்டாகும். 9. மந்திரங்கள் இல்லையென்றால் மரணபயம் உண்டாகும். 10. கிரியைகள் இல்லையென்றால் வியாதிகள் உண்டாகும்.
----------------------------------------------------------------------------------------
ப்ரதக்ஷிணம்

14.1 எவன் பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ அவனுக்கு அந்தப் பூஜையயின் பலன் கிடைக்காது; அவன் விளம்பரத்திற்காகவே பூஜை செய்தவனாகிறான். எனவே பூஜை நிறைவாக பக்தியுடன் அவசியம் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

14.2 விநாயகருக்கு - ஒரு ப்ரதக்ஷிணம், சூர்யனுக்கு - இரண்டு ப்ரதக்ஷிணங்கள், சிவனுக்கு - மூன்று ப்ரதக்ஷிணங்கள், அம்பாளுக்கும், விஷ்ணுவுக்கும் - நான்கு ப்ரதக்ஷிணங்கள், அரசமரத்திற்கு - ஏழு ப்ரதக்ஷிணங்கள். உச்சி காலத்துக்குப் பிறகு அரசமரத்தை ப்ரதக்ஷிணம் செய்வது தவறு.
----------------------------------------------------------------------------------------
மறை ஓதுதல்

13.1 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் ஆகிய காலங்களில் வேத கோஷம் செய்யவேண்டும்.

13.2 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் பூஜையின் முடிவு ஆகிய காலங்களில் பக்தர்கள் ஸ்தோத்ரங்கள் பாடலாம்.

13.3 வேதங்கள் ஓதிய பின் (அல்லது வேதங்கள் ஒதிக் கொண்டிருக்கும்போதே, மண்டபத்தின் மற்றோர் பகுதியிலிருந்து) தமிழ் மறைகளாம் பன்னிரு திருமுறைப் பாடல்களையும் மற்ற தோத்திரப் பாடல்களையும் ஓத வேண்டும்.

13.4 ஓதுவார்கள் : திருமுறைகளைப் பண்ணோடு ஓதுபவர்கள் ஓதுவார்கள் அல்லது ஓதுவார் மூர்த்திகள் என்று பெயர் பெறுவர்.

13.5 பண்; திருஞான சம்பந்தப் பெருமானுக்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரின் வழி வந்த, இசை வல்ல ஒரு பெண்மணியார் திருமுறைகளுக்கு ஏற்ப பண்கள் அமைத்ததாக வரலாறு. முன்னர் இருந்த 103 பண்களில் இக்காலம் பயிலப் பெறுபவை ஏறத்தாழ 23 பண்களே.

13.6 இசை மரபு ஒப்புமை : தமிழிசைப் பண்களில் வரும் ஏழு இசைகளுக்கு இணையான ஸ்வரங்கள் - 1 இளி - ஸ - ஷட்ஜம் 2 விளரி - ரி - ரிஷபம் 3. தாரம் - க - காந்தாரம் 4. குரல் - ம - மத்திமம் 5. துத்தம் - ப - பஞ்சமம் 6. கைக்கிளை - த - தைவதம் 7. உழை - நி - நிஷாதம்.

13.7 பாடலுக்குரிய இராகங்கள் - திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் மோஹந ராகத்திலும், திருவிசைப்பா - திருப்பல்லாண்டு பாடல்கள் அனைத்தையும் ஆநந்தபைரவி ராகத்திலும், பெரியபுராணப் பாடல்கள் அனைத்தையும் மத்தியமாவதி ராகத்திலும் பாடுவதே மரபு. மாற்றிப் பாடுவது முறையல்ல.

13.8 பண்களுக்குரிய இராகங்கள் : பண்கள் குறிப்பிடப்பட்டுள்ள திருமுறைப்பாடல்களை, அப்பண்களைக் கற்றுணர்ந்தவர் அவ்வாறே இசைப்பதே முறை. தமிழிசை கற்றியாதார், தமிழிசைப் பண்களுக்கு ஒத்த கருநாடக மரபு இராகங்களிலும் இசைக்கலாம்.

தமிழிசைப் பண்   அதற்கொத்த இராகம்

1. நட்டபாடை (நைவளம்)  நாட்டை, கம்பீர நாட்டை
2. தக்கராகம்   காம்போதி
3. தக்கேசி   காம்போதி
4. பழந்தக்கராகம்   சுத்தசாவேரி
5. குறிஞ்சி   ஹரிகாம்போதி
6. வியாழக்குறிஞ்சி  ஸெளராஷ்ட்ரம்
7. அந்தாளிக்குறிஞ்சி  சாமா
8. மேகராகக் குறிஞ்சி  நீலாம்பரி
9. யாழ்மூரி   அடாணா
10. காந்தாரம்   நவரோஸ்
11. பியந்தைக் காந்தாரம்  நவரோஸ்
12. கொல்லி   நவரோஸ்
13. கொல்லிக் கௌவாணம்  நவரோஸ்
14. இந்தளம்   மாயாமாளவகொளளை
15. சீகாமரம்   நாதநாமக்ரியா
16. நட்டராகம்    பந்துவராளி
17. சாதாரி   பந்துவராளி
18. செவ்வழி   யதுகுலகாம்போதி
19. காந்தார பஞ்சமம்   கேதார கொளை
20. பஞ்சமம்   ஆகிரி
21. பழம்பஞ்சரம்  சங்கராபரணம்
22. கௌசிகம்   பைரவி
23. புறநீர்மை (நேர்திறம்)  பூபாளம், பௌளை
24. செந்துருத்தி (செந்திறம்)  மத்யமாவதி
25. திருக்குறுந்தொகை  மாயாமாளவகொளை
26. திருத்தாண்டகம்  ஹரிகாம்போதி
27. திருநேரிசை   நவரோஸ் (ஸாமகான இசை போல)
28. திருவிருத்தம்   பைரவி, சங்கராபரணம், அல்லது ஒத்த ராகங்கள்.
----------------------------------------------------------------------------------------