திங்கள், 24 ஜூன், 2019

பிராமண கல்யாணங்களின் வருங்காலம் ?

நம் கலாசாரத்தின் மீது மிகுந்த அபிமானம் உள்ளவர்கள் பலர் இந்தப் பிரச்னை காரணமாய் மனம் வெதும்பி செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். சமுதாயத்தில் ஒரு சுனாமியாய் உருவெடுத்துள்ள கலப்புத் திருமண பேரலையால் திணறிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் ஏராளம். நாமும் நம் சுற்றமும் இந்த அலைக்கு மாளாமல் நம் சமுதாயதிற்கும் ஒரு நல்ல வழியைக் காட்டும் கம்பீரமான கலங்கரை விளக்கமாய் நிலைத்து நிற்பது எங்ஙனம் ? வாமனர் போன்று சில சின்ன சின்ன அடிகளை எடுத்து முன்வைத்தோமானால் அவையே நம்மை திரிவிக்ரமனாக்கி நம் இலக்கை எளிதாக அடைய வழிவகுக்கும்.

1. கலப்புத் திருமணத்திற்கு நமக்கு அழைப்பு வந்தால் அங்கு செல்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அழைப்பு வைக்க வந்தவரிடமே நேர்முகமாக உங்கள் நிலையை கூறிவிட வேண்டும். உங்களுடைய இந்த நிலைப்பாடு உங்கள் குழந்தைகள் மனதில் ஆழமாய் பதியும்.

2. கலப்புமணம் செய்து கொண்டவர்கள் உங்கள் அலுவலகத்த்தில் அல்லது உங்கள் பிள்ளைகளின் வட்டத்தில் இருந்தால் அவர்களின் சங்கத்தை அலுவலக நிமித்தமாக மட்டும் நிறுத்திக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் நம் வீட்டிற்கோ விழாக்களுக்கோ சேர்த்துக்கொள்ளக் கூடாது.

3. வீட்டில் அனைவரும் பாழ் நெற்றியுடன் எப்போதும் இருக்கவே கூடாது. திருநீறு, திருமண், திலகம் தரிக்காமல் வெளியில் எங்கும் செல்லக் கூடாது. அதுவும் நெற்றியில் பளிச்சென விளங்கவேண்டும்.

4. அலுவலக நிமித்தமாய் பாண்ட்/ஷர்ட் அணிந்தாலும், வீட்டில் வேஷ்டி அணிவதை கண்டிப்பாக்க வேண்டும். சிறு குழந்தைகள் நீங்கலாக மற்ற எவரும் ஜீன்ஸ்/ஷார்ட்ஸ் அணியவே கூடாது. லுங்கி அணிந்த எவரையும் நம் வீட்டினுள் சேர்க்கக் கூடாது.

5. ஆண்கள் மீசை வளர்த்துக் கொள்வதையும், பெண்கள் தலைமுடி வெட்டிக் கொள்வதையும் தவிர்ப்பது உத்தமம். முழுவதும் சிகை வைத்துக் கொள்ள இயலாவிட்டாலும் சிறிய முடிச்சு போடும் அளவிற்காவது வைத்துக்கொள்வது நம் சம்பிரதாயத்திற்கு ஏற்றது

6. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் சம்பிரதாய உடையான பஞ்சகச்சம்/மடிசார் கண்டிப்பாக அணிய வேண்டும்.

7. சந்தியாவந்தனம்/நித்யபூஜை எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது. எச்சில், பத்து, மடி, விழுப்பு, தீட்டு இவற்றில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது. இதற்கு விஞ்ஞான விளக்கம் தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.

8. முட்டாள் பெட்டியை முதலில் தூக்கி ஏறிய வேண்டும். அது பிரம்மண்யத்திற்கு முதல் எதிரி. சினிமா பற்றி எதுவும் கூறத் தேவையில்லை.

9. கோயிலுக்குச் செல்வதே நமது பொழுது போக்காக வைத்துக்கொள்ள வேண்டும். நம் ஆச்சார்யார்களை குடும்பத்துடன் தரிசனம் செய்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

10. குலதெய்வத்தின் கோயிலுக்கு குடும்பத்துடன் செல்வதை ஒரு நியமமாய் வைதுக்கொள்ள வேண்டும்.

மேற்கூறிய வழிகளைப் பெரும்பாலும் பின் பற்றுவோர் குடும்பங்களுக்கு கலப்புமணப் பிரச்சினை அண்டாது. அதுவல்லாமல் ஏதேதோ காரணம் கூறி இவற்றைத் தவிர்க்கும் குடும்பங்கள் புதைச்சேற்றில் சிக்கின கதையாய் முடியுமேயன்றி வேறில்லை.

கருத்துகள் இல்லை: