வெள்ளி, 4 ஜனவரி, 2019

அட்டமா சித்தியைப் பற்றி காலங்கி நாதர் கூறுவது.

அட்டமா சித்தி என்பது அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிரார்த்தி, பிராகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்னும் எட்டு வகையாகும்.

அணிமா என்பது அணுரூபமான ஆன்மாவைப் போன்றதாகும்.

மகிமா என்பது மிகவும் பெருமையுடையதாகும். அதாவது மிகப் பருமனாதல்

கரிமா என்பது தன் உடல் கண்டிப்பு கட்டுப்பாடு இன்றி கண்டிப்பு கட்டுப்பாடு உள்ளவற்றை ஊருருவிச் செல்லவல்லதாகும்.

லகிமா என்பது மேரு மலை போன்ற கனமான வடிவத்தைத் தூக்கினாலும் இலகுத்துவம் உடையவன் ஆதல்.

பிரார்த்தி என்பது வேண்டியதை அடைவது. அதாவது நினைத்த போகமெல்லாம் பெறுவது.

பிராகாமியம் என்பது நிறைவுடையவனாதல். அதாவன்றி குறைவின்றி இருத்தல். அன்றியும் ஒரு தேகத்திலிருந்து மற்றொரு தேகத்திலே புகுவதும், தான் நினைத்த உருவங்களை எடுத்துக் கொள்ளுதலும், ஆகாயத்தில் சஞ்சரித்தலும் விரும்பிய போகங்களை எல்லாம் அனுபவிப்பதற்குத் தகுதியாதலுமாகும்.

ஈசாத்துவம் என்பது ஆட்சியுள்ளவனாதல். அதாவது யாவருக்கும் தேவனாகுதல்.

வசித்துவம் என்பது தேவர், அசுரர், பட்சிகள், பூதங்கள், மானிடர்கள், இந்திரன் முதலிய யாவும்/யாவரும் வணங்கி நிற்றல்.

கருத்துகள் இல்லை: