செவ்வாய், 22 செப்டம்பர், 2020

தரிகொண்ட வெங்கமாம்பா!

தரிகொண்ட வெங்கமாம்பா!

ஆந்திரமாநிலம் தரிகொண்டா என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, சதா சர்வகாலமும் திருவேங்கடவனை நினைத்து உருகி தன்னை அர்ப்பணித்து, திருவேங்கடமுடையானையே தன் கணவனாக பாவித்து, திருமலையில் ஸ்ரீவாரி சேவை செய்து பரந்தாமனை அடைந்தவள் மாத்ருஸ்ரீதரிகொண்ட வெங்கமாம்பா.

ஆந்திர மாநிலத்தில் ஒரு காலத்தில் கடும் வறட்சி ஏற்படவே ராய துர்க்க பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியே கிளம்பி பிரத்தமிட்டா என்ற கிராமத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். காலையில் அங்கு லட்சுமி நரசம்மா என்ற அந்தணப் பெண்மணி தயிர்ப்பானையில் தயிர் கடைந்து கொண்டிருந்தாள். (தயிர்ப்பானைக்கு தெலுங்கில் தரிகொண்ட என்பது பெயர்.) அங்குள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மரிடம் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தவாறே அந்தப் பெண்மணி தயிர் கடைந்து கொண்டிருக்கையில் திடீரென்று தயிர் மத்து நின்று விட்டது. துணுக்குற்ற அவள் மீண்டும் தயிர் கடைய மீண்டும் மத்து சுழலாது நின்றது. மத்தை ஓடவிடாமல் ஏதாவது தடை செய்கிறதா என்றே கையை உள்ளே விட்டுப் பார்க்க ஏதும் இல்லாததும் கண்டு அவள் திகைத்தாள். மீண்டும் மத்து நின்ற போது, தன் கணவனை அழைத்துப் பார்க்கச் சொல்ல, கணவர் வந்து பார்த்தபோது ஸ்ரீலட்சுமிநரசிம்ம சிலை ஒன்று தயிர்பானையில் இருப்பதை அவர் கண்டார். தனக்கு கோவில் கட்டி வழிபட நல்ல காலம் பிறக்கும் என்ற அசரீரி கேட்க, ஊர் மக்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு கோயில் எழுப்பி பெருமாளுக்கு தரிகொண்ட நரசிம்மர் (தயிர்ப்பானை நரசிம்மர்) என்று திருநாமம் இட்டு வழிபட்டு வந்தனர். கிராமத்தின் பெயரும் தரிகொண்ட என்று ஆயிற்று.

தரிகொண்ட கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபராக எழுந்தருளியிருக்கிறார். ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம், அகலமான பிரகாரம் ஆககியவற்றோடு கூடிய இந்த கோயிலில் பாஞ்சராத்ர ஆகமப்படி  பூஜைகள் நடைபெறுகின்றன. நீதிமன்றம், வழக்கு என்று செல்லாமல் மக்கள் இங்குள்ள பலிபீடத்தை வலம் வந்து ஆரத்தி செய்து சத்ய பிரமாணம் எடுத்துக் கொள்வது வழக்கம். எனவே தரிகொண்ட கிராமம் சத்ய ப்ரமாண க்ஷேத்ரமாகத் திகழ்கிறது. இந்த கோயிலில் செஞ்சு லட்சுமி, ஆதிலட்சுமி சன்னதிகளும், அனுமனுக்குச் சன்னதியும் உள்ளன. மேலும் இங்கு அவதரித்த பக்தை தரிகொண்ட ஸ்ரீவெங்கமாம்பாவுக்கு தனிச் சன்னதி உள்ளது. ஆந்திர மாநிலம் வாயல்பாடு என்ற ஊரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் தரிகொண்ட கிராமம் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மா வம்சத்தில் வந்தவர்கள் நியோகி அந்தணர்களான கிருஷ்ணய்யா மங்கமாம்பா தம்பதியர் குழந்தைப் பேற்றுக்காக வருந்தி திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அனவரதமும் அவர்கள் வேண்டி கொண்டிருக்கையில் ஒரு நாள் மங்கமாம்பாவிடம் ஒரு சிறு குழந்தை ஓடி வந்து தயிர் சாதம் கேட்க, அவள் தயிர்சாதம் எடுத்துக் கொண்டு குழந்தைக்கு ஊட்ட முற்பட்டபோது, அக்குழந்தை தயிர்சாதப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தது. கிருஷ்ண பரமாத்வே தன்னிடம் வந்து தயிர் சாதம் பெற்றுச் சாப்பிட்டதாக மங்கமாம்பா மெய்சிலிர்த்தாள். ஸ்ரீவேங்கடேசப்பெருமாளையும் மனமுருகி அவர்கள் வேண்டிக்கொண்டனர். திருமலை வேங்கடவன் பெண் அம்சமாக தனக்குக் குழந்தையாகப் பிறக்கபோவதாக மங்கமாம்பா கனவு கண்டாள். அவள் கண்ட கனவு பலித்து, திருவேங்கடவன் அருளால் ஒரு பெண் குழந்தை (1730ம் ஆண்டு) அந்த தம்பதியருக்குப் பிறக்க, வேங்கடேசர், அலமேலுமங்கா ஆகிய பெயர்களை இணைத்து வெங்காம்பா என்று பெயரிட்டு அக்குழந்தையை அவர்கள் போற்றி வளர்த்தனர்.

இயற்கையாகவே சிறுவயதிலேயே இறைப்பற்று கொண்டிருந்த ஸ்ரீவெங்கமாம்பா தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சென்று கோயில்க் கைங்கர்யங்கள் செய்வதில் ஈடுபட்டாள். சுப்ரமண்ய ஆச்சார்யர் என்பவரிடம் ராமாயணம், பாரதம், பாகவதம் போன்றவற்றைப் பயின்றாள். திருமண வயது வந்தவுடன் பெற்றோர் வெங்கமாம்பாவுக்கு தக்க வரணைத் தேடி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் வெங்கமாம்பாவோ இல்லறத்தில் ஈடுபாடின்றி, பக்தி மேலீட்டால் திருவேங்கடமுடையானே தன்னுடைய பதி என்று கூறி பரவசப்பட்டு வந்தாள். நோய்வாய்ப்பட்டு அவள் கணவன் இறந்தபோது, தன்னுடைய மணாளன் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் என்றும், தான் நித்ய சுமங்கலி என்றும் கூறிய வெங்கமாம்பா தன்னிடமிருந்து மங்கலப்பொருட்கள் அகற்றப்படுவதைத் தடுத்தாள். அவளது பக்தியைக் கண்ட கிராம மக்கள் வெங்கமாம்பா அலிமேலுமங்கா (அலர்மேல் மங்கா) அவதாரம் என்று கூறி, அவளை தேவுடம்மா என்று வழிபட்டனர். தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயிலில் கைங்கர்யங்கள் செய்வதிலும், இறைவன் மீது கீர்த்தனைகள் இயத்துவதிலும், பாடுவதிலும், ஆடுவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாத்ருஸ்ரீ வெங்கமாம்பா திருமலையானைத் தரிசக்க பயணம் மேற்கொண்டாள்.

திருவேங்கடவன் மீது 36000 கீர்த்தனைகள் எழுதி இறவாப் புகழ் பெற்ற தாளப்பாக்கம் அன்னமய்யா (1408-1503) அவர்களின் சந்ததியினர் -ஸ்ரீவெங்கமாம்பாவின் மகிமை அறிந்து அவளை வரவேற்றனர். முதலில் ஸ்ரீவெங்கமாம்பவை கோயிலுற்குள் அனுமதிக்க மறுத்த அர்ச்சகர்களும் அவள் மகிமை அறிந்து ஏற்றுக் கொண்டனர். திருவேங்கடவன்  மீது ஆறாத காதல் கொண்ட ஸ்ரீவெங்கமாம்பா ஏராளமான கீர்த்தனைகளை இயற்றினாள். தன்னை மறந்து கோயில்க் கைங்கர்யங்களில் ஈடுபட்டு வந்த அவள், ஸ்ரீவேங்கடாசல மஹாத்மியம், தரிகொண்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சதகம், நரசிம்மர் விலாச கதை, சிவ நாடகம், பாலகிருஷ்ண நாடகம், விஷ்ணு பாரிஜாதம் போன்ற பல முக்கியமான நூல்களை இயற்றியதோடு யோகக் கலையையும் நன்கு பயின்று அஷ்டாங்க யோக சாரம் என்ற நூலையும் இயற்றி பெருமையடைந்தாள். திருமலையையும், திருவேங்கடமுடையானையும் பற்றி ஏராளமான கவிகள் இயற்றி தலைசிறந்த கவியத்ரியாகத் திகழ்ந்த மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாதான் இயற்றிய கீர்த்தனைகளில் முத்திரையாக கிருஷ்ணமய்யாவின் மகள் வெங்கமாம்பா என்று பதிஷ செய்திருக்கிறாள்.

தன் உடல், ஆவி அனைத்தையும் திருவேங்கடவனுக்கே அர்ப்பணித்த ஸ்ரீவெங்கமாம்பா ஒவ்வொரு நாள் இரவும் ஏகாந்தசேவை ஆரத்தி கைங்கரியத்தின்போது தட்டில் முத்துக்களை வைத்து வேங்கடவனை வணங்கி வந்தாள். தினந்தோறும் காலையில் ஸ்ரீவேல்கடவன் சன்னிதிக் கதவுகள் திறக்கப்படும்போது அங்கு சிதறிக் கிடந்த முத்துக்களைக் கண்டு துணுக்குற்ற அர்ச்சகர்கள், வெங்கமாம்பாவே இதற்குக் காரணம் என்றறிந்து வெங்கமாம்பாவை கோயிலிலிருந்து தொலைவில் உள்ள தும்புரகோணா என்ற குகைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேங்கடவன் அருளால் அங்கிருந்து ஒரு குகைப் பாதையின் வழியாக தன் ஆரத்தி சேவையை அவள் மீண்டும் தொடர்ந்தாள். பெருமாளும் தன் பக்தை வெங்கமாம்பாவின் ஆரத்தியுடன் தான் தனக்கு இரவு பூஜை முடிய வேண்டும் என்று அர்ச்சகர்களின் கனவில் கட்டளையிட அர்ச்சகர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஏகாந்த சேவையின்போது வெங்கமாம்பாவை அனுமதித்தனர். தன்னுடைய ஆரத்தியில் திருவேங்கடமுடையானையே அவள் கண்டு மெய்மறந்தாள்.

அன்று முதல் தொடர்ந்து, திருமலை திருவேங்கடவன் திருக்கோவிலின் கடைசி சேவையான ஏகாந்த சேவையின் போது மாத்ருஸ்ரீவெங்கமாம்பாவின் சந்ததியினர் இந்த ஆரத்திக் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கமாம்பா முத்துக்களைக் காணிக்கையாக்கியதால் இந்த ஆரத்தி முத்தியா<லு ஆரத்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆரத்தியின் போது ஒரு வெள்ளத்தட்டில், வெற்றிலை, பாக்குதூள் ஆகியவற்றோடு மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் இஷ்ட தெய்வமான முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சிலை ஆகியவை வைக்கப்படுகின்றன. தினந்தோறும் கடைசி சேவையான ஏகாந்த சேவை அதிகாலை 1.30 மணி அளவில் முடிந்து, திருக்காப்பிடப்பட்டு, மீண்டும் 3.00 மணிக்கு ஸ்ரீவாரி சுப்ரபாத சேவையுடன் அடுத்த நாள் பூஜைகள், வழிபாடுகள் துவங்குகின்றன. 1730ஆம் ஆண்டு வேங்கடவன் அருளால் அவதரித்த ஸ்ரீவெங்கமாம்பா, எண்ணற்ற கீர்த்தனைகளையும், நூல்களையும் இயற்றி, இறுதியில் 1817 ஆம் ஆண்டு தனது 87வது வயதில் தன் பெருமானுக்காக அமைத்த துளசி வனத்தில் ஜீவசமாதி அடைந்தார். ஒரு பள்ளிக் கூட வளாக்ததிற்குள் அமைந்திருக்கும் பக்தை ஸ்ரீவெங்கமாம்பாவின் சமாதி பக்தர்களின் பார்வைக்காகத் தினமும் திறந்து வைக்கப்படுகிறது. மேலும் திருப்பதியில் மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் சிலை ஒன்றும் இரயில்வே பாலத்தின் கீழ் உள்ள சந்திப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் திருமலையில் கவியத்ரி மாத்ருஸ்ரீ வெங்கமாம்பாவின் 285வது ஜயந்தி நாள் கொண்டாடப்படுகிறது. வெங்கமாம்பாவின் ஜயந்தி மற்றும் நினைவு நாட்களை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். கூர்ம ஜயந்தி இதே நாளில்தான் தாளப்பாக்க அன்னமய்யாவின் ஜயந்தி நாளும் கொண்டாடப்படுகிறது.


பராசர பட்டர்


 பராசர பட்டர்!

எம்பெருமானார் எதிராஜர், உடையவர், பாஷ்யக்காரர், பெரும்பூதூர் முனிவர் என்று ஆறாத அன்பினால் அடியார்கள் போற்றும் ஸ்ரீராமானுஜரின் பவித்திரமெனப் போற்றப்பட்டவர் கூரத்தாழ்வான். கூரம் என்ற ஊரில் சிற்றரசர் போல் செழிப்புடன் வாழ்ந்தவர். அவருக்கேற்ற குணவதியான பத்தினி ஆண்டாள். பவிஷ்யாச்சாரியார் என்று அடையாளம் கண்டு போற்றப்படும் சிறப்பினுக்குரிய லட்சுமணமுனி யான திருப்பாவை ஜீயரின் குணப்பண்புகளில் உளம் தோய்ந்து, பக்தியினால் ஆழங்கால் பட்டு அவரையே தன் ஆசாரியனாக வரித்து அவர் சரண் புகுந்தார் கூரத்தாழ்வான். தன் சுகபோகங்கள் அனைத்தையும் மனைவியுடன் இளையாழ்வாரேசரண் என்று வந்தடைந்தவர் ஆழ்வான்.

ஓரிரவு நகர்வலமாக வந்த கூரத்தாழ்வான், ஒரு வீட்டில் நடந்த துயரமான வாக்குவாதங்களைக் கேட்க நேர்ந்தது. ஆண்டாளை மணந்து கொள்பவன் முதல் இரவில் மரித்து விடுவான் என்று அவள் ஜாதகத்தில் இருந்ததால், அவளது திருமணம் தடைபட்டுவந்தது. காலமெல்லாம் கண்ணீருடன் தன் அருமை மகள் வருந்துவதைச் சகியாது அவளது பெற்றோர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் கடைசி முடிவுக்கு வந்து விட்டனர். மறுநாள் கூரத்தாழ்வான் அவர்களை வரவழைத்து ஆண்டாளைத் தான் மணமுடித்து அவளை மகிழ்ச்சியோடு வாழ வைப்பதாகக் கூறி, பலவிதங்களிலும் அவர்களைச் சமாதனப்படுத்தி, ஸ்ரீஎம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை,

அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப்பொழிந்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முன் மேவினார்!
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே.

என்று உறுதிபூண்டு, ஒத்தொவ்வாத பல் பிறப்பையும் அளித்து ஆட்கொள்வன்- அவன்தானே! என்று ஞானத்தால் தேறி ஆண்டாளை தன் துணைவியாக ஏற்றார். எம்பெருமானின் அருளால் இந்த திவ்விய தம்பதிகள் 80 பிறை கண்டு நிறைவாழ்வு வாழ்ந்தனர். ஒருமுறை உணவு இடுவதற்கு முன் வாழை இலை வெட்டியபோது வாழை இலை வெட்டிய இடத்திலிருந்து நீர் வருவதைக் கண்டு, கண்ணீர் விட்டு அழுதார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலாருக்கு இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் வாத்ஸல்ய பாவத்தில். ஒரு மழை காலத்தில் வெளியில் பிட்சைக்கு போகாமல் இரவில் கண்ணயர தர்மபத்தினியான ஆண்டாள் ஒருக்கணம் எண்ணினால், ஏவலர்கள் எடுபிடியாக ஏவல் செய்ய, தங்கத் தட்டில் பலவிதமான உயர்ந்த உணவு வகைகளை உண்டுகளித்த என் கணவர் இன்று பட்டினியோடும் படுக்க நேர்ந்ததே! ரங்கா, உன் பக்தன் பட்டினி புலம்பவும் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அரங்கன் அர்ச்சாரூபமாக ஆழ்வானுக்கு பிரசாதங்கள் அனுப்பி வைக்க உத்திரவிட, அதன்படி உத்தமநம்பிகள் என்பவர் பெருமாள் பிரசாதங்களுடன் ஆழ்வான் இல்லத்துக்கு வந்து பிரசாதங்களைத் தந்தார்.

ஆழ்வான் ஆண்டாளை அழைத்து நீ ஏதாவது பெருமானிடம் குறைப்பட்டுக் கொண்டதுண்டோ என்று வினவ, நீங்கள் பசியோடிருப்பதைக் கண்டு மனம் பொறாமல், நான் பெருமானிடம் முறையிட்டது உண்மைதான் என்று கூறி மன்னிப்பு வேண்டினாள். ஆழ்வான் அந்த அமுதத்தை மூன்றில் ஒரு பங்கு கொடுத்து சாப்பிடச் சொல்லி விட்டு தானும் ஒரு பங்கை உண்டு உறங்கச் சென்றார். ஆண்டாள் எம்பெருமானின் அருளால் கருவுற்று இரண்டு ஆண்மகவுகளைப் பெற்றெடுத்தாள். ஆழ்வானும் தாம் பெற்ற குழந்தைகளுக்கு நாமகரணம் செய்ய ஆசாரியனை வேண்டினார். எம்பார் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வர வேதவியாச பட்டர், பராசர பட்டர் என்னும், திருநாமங்களை எதிராசன் சூட்டி மகிழ்ந்தார். வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த சிசுக்களில் பராசரபட்டர் என்ற குழந்தையை ஸ்ரீரங்கநாதர் தமது சுவிகாரபுத்திரனாக ஏற்றுக் கொண்டார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்றபடி பட்டர் ஐந்து வயதிலேயே திருவாய்மொழியில் வரும் சிறு மாமனிசர் என்ற பதத்தைக் கூறி சிறு என்பது சிறியது. மா என்றால் பெரியது. எப்படி எதிர்மறையான இவை ஒருவரிடம் ஒன்றாகப் பொருந்தியிருக்கும்? என்று பட்டர் கேள்வி கேட்டபோது வியப்படைந்த தந்தை கூரத்தாழ்வான் அதற்குரிய விளக்கங்களையும் எடுத்துக் கூறினார். ஆகிருதியில் (உருவத்தில்) பெரியவராக இருப்பவரை அப்படிக் கூறி வணங்குகிறோம் என்று கூறினார். ஒரு சமயம் மற்ற பையன்களுடன் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது சர்வக்ஞபட்டர் என்பவர் பல்லக்கில் பவனி வந்து கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் விருதுகள் சொல்லிக் கொண்டு பின்னே வந்தனர். பட்டர் தன் சிறு கரங்களில் மண்ணை அள்ளி வைத்துக் கொண்டு இதற்குள் எவ்வளவு மண் இருக்கிறது என்று கூற முடியுமா? என்று கேட்க, சர்வக்ஞரும் சிரித்து விட்டு பதில் பேசாதிருந்தார். பையன் ஒரு கைப்பிடி மண் என்று கூறத் தெரியாமல் சர்வக்ஞர் பட்டர் என்று பெயர் கொண்டு, செல்லுதல் தகுமோ? என்று கேட்கவும் பையன் யார் குழந்தை என்று விசாரித்து மகிழ்ந்து பல்லக்கில் ஏற்றி வீட்டுவாசலில் இறக்கி விட கண்ணே என்று ஆண்டாள் உட்சென்று திருஷ்டி கழித்தார்.

மகாபுத்திசாலியாகவும், ஏகசந்தக்கிரகியாகவும் (தன் தந்தையைப் போல) விளங்கிய பட்டருக்கு ஆழ்வானும் எம்பாருமேவேதம் முதல் அனைத்து சாஸ்திரங்களையும் கற்பிக்க எதிராஜர் நியமனம் செய்தார். ஒரு சமயம் பட்டர் பகவத் சந்நிதியில் திரைசாத்தியிருக்கும் போது, நெருங்கி சமீபம் வரும் ஒரு குரல் யாரது? வெளியே போ என்று ஆணையிட பட்டரும் உடன் விலகி வெளியே வந்து விட்டார். சில நொடியில் மீண்டும் யாரது பட்டரா? உள்ளே வர வேண்டும் என்று குரல் ஒலித்தது. வெளியே போம் என்று சொன்னபோது நினைத்ததென்ன? என்று பெருமாள் வினவ, இன்று பகவானும், பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிறார்கள் என்று எண்ணினேன். இதற்கு முன் நினைத்தது என்ன? என்று விடாப்பிடியாக எம்பெருமானும் வினவ, ஆழ்வானும் ஆண்டாளுமாக எண்ணினேன் என்றார் பட்டர். பட்டரே இது நம் ஆணை எப்பொழுதும் இதுபோலவே நினைத்து இருக்கக்கடவீர் என்று நியமித்தருள, பட்டர் பெருமாளின் சத்புத்திரர் என்ற விஷயம் மேலும் உறுதியாயிற்று.

பட்டருக்கு வயது வந்தவுடன் விவாகம் செய்து வைக்க எண்ணினார் ஆழ்வானும் ஆண்டாளும் பெரியநம்பிகள் <உறவினரின் பெண்ணை பராசரபட்டருக்கு திருமணம் முடிக்க அவர்கள் முனைந்தபோது, புது சம்பந்தமாக இது இருப்பதால் எனக்கு சம்மந்தமில்லை என்று பெண்ணைப் பெற்றவர் மறுத்துவிட்டார். ஆண்டாள் மனம் நொந்து பெருமாளிடம் விண்ணப்பம் செய்தாள். ஆழ்வான் நிச்சிந்தையாக ஈச்வரனின் குடும்பக் கவலைகளை ஏன் இழுத்துப் போட்டுக் கொண்டு, கவலைப் படுகிறாய்? எல்லாம் எம்பெருமானே பார்த்துக் கொள்வார் என்று கூறிவிட்டார்.

அன்று இரவே, அரங்கன் பெண்ணைப் பெற்றவர் கனவில் தோன்றி உமது இரண்டு பெண்களையும் பட்டருக்கே மனம் முடியுங்கள், பட்டர் என்னுடைய ஸ்வீகாரப்புத்திரன் என்பதால் எங்கள் குலமரபுப்படி, உபயநாச்சியாரோடு இருக்கும்படித் திருக்கல்யாணத்தை முடித்து வையுங்கள் என்றார். அதன்படி தனது இரு குமாரத்திகளையும் பட்டருக்கே துணைவியாகத் திருமணம் செய்து மகிழ்ந்தார். ஆழ்வான் பட்டினி கிடந்து அன்று நாம் அனுப்பிய பிரசாதத்தை உண்ட இந்த தம்பதிகள் நமது சங்கல்பத்தால் இரண்டு குமாரர்களைப் பெற அவற்றில் ஒன்றை நமக்காக்கிக் கொண்டோம் என்று உகப்புடன் பெருமாள் கூறிய செய்திகள் அனைத்தையும் எதிராஜர் சந்நிதியில் ஆழ்வான் விஞ்ஞாபனம் செய்ய குருநாதரும் அகமகிழ்ந்தார்.

ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் வைணவர்கள் பட்டரை எதிர்கொண்டு அரங்க நகரப்பன் சன்னதிக்கு அழைத்துச் சென்றார்கள். அரங்கனை மங்களாசாசனம் பண்ணிய பின் மாலை பரிவட்டம் முதலிய மரியாதைகள் செய்து அவர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். தாயாகிய ஆண்டாளைச் சேவித்து ஆசி பெற்ற பின் எப்பவும் போல, சிஷ்யர்களுக்கு தர்சன கிரந்த <உபதேசங்களைச் செய்து கொண்டிருந்தார். இதற்கிடையில் கங்கோத்தரியில் வேதாந்த மார்க்கம் மாறியபின் பரம வைஷ்ணவரான பட்டர் திருவடிகளே கதியெனயிருந்த தானிஜ், ஒருநாள், இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகுந்த பசியோடு அவர் கிருஹத்திற்குச் செல்ல, உணவிட மறுத்த அவரது மனைவிமார்கள் அங்கு அன்னமில்லை நீராடும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கே உங்கள் வேதாந்தி இருக்கிறார் என்று நிஷ்டூரமாகச் சொல்ல, வேதாந்தி மனம் கலங்கினார். தமது சொத்துக்களை மூன்று பாகமாக்கி அதில் இரண்டு பங்கை தன் மனைவியர் இருவருக்கும் தந்து விட்டு தன்னுடைய பங்கை ஓர் ஒட்டகத்தில் ஏற்றிக் கொண்டார்.

சன்யாச ஆசிரமத்தையும் ஏற்றுக் கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் சிறுபுத்தூருக்கு எழுந்தருளினார். பரமபாகவத சிகாமணியான அனந்தாழ்வான் முன்பு பட்டரை எதிர்கொண்டது போலவே இவரையும் எதிர் கொண்டு வரவேற்றார். ஸ்வாமி சுகுமார மனோகரனாக இருந்த தேவரீர் இப்படிச் செய்யலாமே? வேர்த்தபோது நீராடி, பசித்தபோது அமுதுண்டு. பட்டர் திருவடிகளே சரணம் என்று இருந்ததால் உம்மைப் பரமபதத்திலிருந்து தள்ளி விடுவார் உண்டோ? என்று கேட்டு அளவளாவி உணவிட்டு உபசரித்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.வேதாந்தி தனது மூட்டை முடிச்சுகளுடன் பயணகதியில் பட்டர் திருமாளிகை அடைந்து தனது குரு நாதரைத் தண்டனிட்டு, தான் கொண்டு வந்த தனங்களை அவரது திருவடிகளில் சமர்ப்பித்தார். பட்டர் இதெல்லாம் என்ன? என்று கேட்டார். வேதாந்தி வீட்டு விஷயங்களையெல்லாம் விஸ்த்தாரமாக எடுத்துக்கூறி பசியோடு வந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னம் மறுக்கப்படும்போது, அந்த கிருகஸ்தாஸ்ரமத்தில் என்ன பயன் என்று தேடி அவர்களின் பங்கை அளித்து விட்டு அடியேன் துறவு பூண்டு வந்துள்ளேன் என்று விண்ணப் பித்தார். அதை ஸ்வாமியின் திருவுள்ளப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தார். அதை ஸ்வாமியின் திருவுள்ளப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தார். வேதாந்தியும் அவ்விதம் செய்ய அந்தத் திரவியம் சீண்டுவாரின்றி அங்கே போட்டபடியே கிடந்தது. ஒரு நாள் பட்டர் நீராடச் சென்றபோது, இந்தத் திரவியக் குவியல் ஏது? என்று வினவ, வேதாந்தியும் விபரம் கூறினார்.

இந்தத் திரவியம் கொண்டு நந்தவனம் அமைத்து, மேற்கொண்டு பணம் இருந்தால், ததியாராதனம் செய்யக்கடவீர் என்று நியமிக்க அதன்படி நந்தவனம் அமைத்து பகவானுக்கு ததியாராதனம் செய்து வந்தார். அவரது குருபக்தியையும், வைணவ நெறியின் பால் கொண்டிருந்த எல்லையற்ற பக்தி விசுவாசமும் கண்ட பட்டர் அவரை அன்போடு அணைத்து நம் ஜீயர் என்ற நாமம் சூட்டினார். அவரை எக்கணமும் தம்முடன் பிரியாமல் இருக்க பணித்து சகல சாஸ்திரங்களையும் குளிரக் கடாக்ஷித்து, பட்டரைப் பற்றிக் கூறும்போது நஞ்சீயர் பட்டர் பிரபாவமும் நஞ்சீயரைப் பற்றி நவிலும் போது பட்டரின் ஆசாரிய விசேஷமும் வெளிப்படுகின்ற அதிசய குருபரம்பர வைபவமாகும். நஞ்சீயர் ஒருமுறை ஒரு சந்தேகம் கேட்டார். நம் பெருமாள் இங்கே சந்திரப்புஷ்கரணிக்கரையிலே கண் வளர்கிறாரே அதன் திருவுள்ளக்கிடக்கை என்ன வென்று, பட்டர் மறுமொழி பகர்ந்தார். நாராயணா, மணிவண்ணா என்று கூக்குரலிட்டபின் கஜேந்திரனைக் காக்க எழுந்தருளி வந்தார் எம்பெருமான். இங்கே நான் கூப்பிடுவதற்கு முன்னாலேயே தயாராக அவர் ரட்சகம் செய்யக் காத்துக் கண்வளர்கிறார் என்றார்.

பின்னொரு சமயம் பட்டரும் நஞ்சீயருடன் சேதுஸ் நானம் செய்ய எண்ணினார். செல்லும் வழியில், ஓர் இரவு களைப்பு மிகுதியினால் பட்டர் நஞ்சீயரின் மடியில் தலை வைத்து கண் துயின்றார். குருநாதர் தூக்கம் கெடுக்கக் கூடாது என்பதற்காக நஞ்சீயர் கால் களையோ உடம்பையோ சிறிதும் அசைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார். ஒரு சிஷ்யன் தன் ஆசானிடம் எப்படியிருக்க வேண்டுமென்ற உதாரண புருஷராயிருந்தார். ஆளவந்தாருக்கு ராமானுஜமுனி ஏகலைவன் என்று எம்பார் ஒருமுறை கூறியது இங்கும் பொருத்தமாக (வேறு ஒரு பொருளில்) பட்டரின் ஏகலைவனாக நஞ்சீயர் திகழ்ந்தார் எனலாம். கூரகுலோத்மம் என்ற ஊரிலே பட்டர் ஒரு சமயம் தங்கியிருந்தபோது அங்கு கூரகுலோத்மதாசரின் நந்தவனத்தில் பட்டரின் குடும்பத்தார் புழங்க, அதைப் பராமரிக்கும் காவலர்கள் அதைத் தடுத்தனர். அதைக் கேட்ட கூரகுலோத்தமதாசர் (இவர் கூரத்தாழ்வாருக்கும் பட்டருக்கும் சிஷ்யராக இருந்த பெரியவர். இந்த நந்தவனத்தை ஏற்படுத்தி நிர்வகிப்பவர். ஏகாங்கிகளை கோபித்து இது முற்றிலும் ஆசாரியர் குடுப்பத்தின் உகப்பிற்காகவே உள்ளது பட்டர் விரும்புவதால் பெருமாள் கைங்கரியத்துக்கும் பயன்படுகிறது என்று கூறினாராம். (வார்த்ததாமாலை-177ம் வார்த்தை)

திரிபுவன வீரதேவன் என்கிற காஞ்சிமன்னர் பட்டரின் வாக்குவன்மை மற்றும் ஆன்மீக மேன்மையை உணர்ந்து தமது அரண்மனைக்கு வந்து போகுமாறு தன் விருப்பத்தைத் தெரிவிக்க பட்டரும் அன்புடன் சிறிய பதிலை அந்த மணிப்பிரவாளத் தமிழிலே தருகிறோம் படித்துச் சுவையுங்களேன். திரிபுவன வீரதேவன் பட்டருடைய சபிஜாத்யம் கண்டு நீர் நம் பக்கல் ஒருநாள் வந்து போவீர் என்று அபேக்ஷிக்க பள்ளி கொள்ளுகிறவர் கை மறுத்தால், உன்னுடைய வாசலொழியப் போக்குண்டோ? என்றருளினார். எவ்வளவு சமத்காரமான பதில்கள். அரங்கன் கைவிட்டு விட்டால், நீதானே கதி என்று உயர்த்துவது போல் மன்னனைக் கூறி தனது மறுப்பையும் அதிலேயே தெரிவித்த நேர்த்தி, குரு மணிக்கு மேல் பதக்குண்டு என்று கூறிய கூரேசரின் அருமைப்புதல்வரல்லவா பட்டர்?

குருபரம்பரா பிரபாவத்திலும், வார்த்தா மாலையிலும் இடம்பெற்றுள்ள ஸ்ரீவைஷ்ணவ லட்சணத்தைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வது சுவையானது. பட்டரை ஆச்ரியித்த ஆர்வமுடைய ஸ்ரீவைஷ்ணவரை நோக்கி, நீர் அனந்தாழ்வானிடம் சென்று ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் இருக்கும்படி என்ன வென்று தெரிந்து வாரும் எனப் பட்டர் ஆக்ஞாபித்தார். அந்த அடியாரும் அதைச் சிரமேற் கொண்டு அனந்தாழ்வான் திருமாளிகைக்குச் செல்ல அப்பொழுது ததியாராதனை நடைபெற்று வந்தது. வந்தவர் பெருமையுடன் ஒரு பக்கம் காத்திருந்தார். பந்தி முடிந்தவுடன் வந்த விருந்தினரை ஆழ்வான் உள்ளே அழைத்துச் சென்று அன்புடன் அமுது படைத்து விபரம் கேட்டார். வைணவர் நான் பட்டரால் அனுப்பப் பட்டேன் என்றும் வைஷ்ணவ லட்சணங்களைக் கேட்டு உம்மிடம் தெரிந்து வரச் சொன்னார். ஆசாரியர் பவ்வியமாக மொழிந்தார்.

அனந்தாழ்வான் ஒரு புன்முறுவலுடன் இது மொழிந்தார். கொக்கு போல, கோழி போல, உப்பு போல உம்மைப் போல இருக்கும் என்று அவரிடம் விண்ணப்பம் செய்யுமென்று அருளினார். இதன் பொருள் நீர்க்கரையில் நின்று கொண்டிருக்கும் கொக்கு தனக்கு ஏற்ற மீனுக்காக காத்திருக்குமாப் போல, நீர் வண்ணனிடம் ஆசார அபசாரங்களை ஒதுக்கி, பாகவத கைங்கரியமென்ற பரம புருஷார்த்தத்தையே வைஷ்ணவன் கேட்டுப் பெறுவான். கோழி எப்படி குப்பையைக் கிளரி வேண்டாத விஷயங்களைத் தள்ளி தனக்கு ஏற்ற நெல்மணிகளையே தெரிந்து எடுத்துக் கொள்வது போல அவனும் சாஸ்திரங்களைத் துருவித் துருவி தனக்கு உரியத் தரமான ஸத் விஷயங்களையே ஸ்வீகரித்து பலன் பெறுவான்.

உப்பும் தான் சேர்ந்த உணவின் சுவையைக் கூட்டி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுவது போல, ஸ்ரீவைஷ்ணவர்களும் தன்னைச் சார்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் தன்னைச் சார்ந்த அடியார்களுக்கும் ப்ரயோஜனவஸ்து வாக விளங்கித் தன்னை முன்னிருந்துக் காட்டிக் கொள்ளாமல் பாகவத சேவையில் கரைந்து விடுவர் என்றும் கூறி, அனந்தாழ்வான் இவைகளுக்கு திருஷ்ட்டாந்தமாக உம்மைப் போல் இருப்பான் என்று வந்தவரைக் குறிப்பிட்டு இந்த மூன்று நியமங்களும் பொருந்திய உத்தம ஸ்ரீவைஷ்ணவராக அவரை மேம்படுத்தி உரைத்தது மிகவும் விசேஷமாகும்.

வீரசுதந்தரபிரம்மராயன் என்கிற கூரத்தாழ்வானின் சிஷ்யன், மதில்சுவர் எழுப்பும்போது பட்டரின் ஆணையையும் மீறி, பிள்ளை பிள்ளையாழ்வான் என்கிற இன்னொரு கூரத்தாழ்வான் சிஷ்யரின் கிருஹத்தை இடித்து விட்டுக் கட்டிவிட, மனம் வருந்திய பட்டர், ஸ்ரீரங்கத்தை விட்டு திருக்கோட்டியூர் சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் வீரசுதந்தர பிரம்மராயன் இறந்துவிட பட்டருடைய தாயார் ஆண்டாள் மிக வருந்தினார். ஆழ்வாரின் சம்பந்தமுடைய பிரம்மராயன் இகலோக வாழ்விலும் சுகப்படாது பரலோகத்திலும் நரகம் சென்று துன்பப்படயிருப்பதை எண்ணியே வருந்தினார். பட்டரின் சர்வக்ஞ அறிவைப் பரிசோதிக்கவே பல வித்வான்கள் கூடி, விவாதம் செய்தனர். ஆனால் வெற்றி கிடைக்காமல் தோல்வியைத் தழுவி மேலும் பட்டரைச் சோதிக்க ஒரு குடத்தில் பாம்பை விட்டு அழைத்துக் கொண்டு வந்து, இதில் என்ன இருக்கிறது என்று கேட்க, அவர்கள் குடத்தின் வாயைக் கவிழ்த்ததும் ஒரு பாம்பு வெளியே சீரிக் கொண்டு வெளி வந்தது. இது கொற்றக் குடையா? என்று கேலியாகக் கேட்டனர். பட்டர் சொன்னார். ஆம் அதிலென்ன ஐயப்பாடு? சென்றால் குடையாம் என்றல்லவா ஆழ்வார் பாசுரம் உள்ளது என்று கூறியவுடன் அவர்கள் யாவரும் வெட்கித் தலை குனிந்தனர்.

திரிபுவன வீரதேவன் என்ற காஞ்சி மன்னன் பட்டரின் வாக்குவன்மை மற்றும் ஆன்மீக மேன்மையை உணர்ந்து தனது அரண்மனைக்கு வந்து தமது விருப்பத்தைத் தெரிவிக்கப் பட்டரும் அன்புடன் கூறிய பதிலை அந்த மணிப்பிரவாள நடையிலே தருகிறோம் படித்துச் சுவையுங்களேன் என்றார். ஒரு சமயம் பட்டர் திரும்பும் வழியில் ஓர் வேடன் குடிலுக்கும் இருவரும் சென்றபோது, அவன் அவர்களுக்கு உபசரனை செய்தான். அப்பொழுது பட்டர் கூறினார். ஐயரே இவன் நம்மை உபசரிப்பது நம் பெருமையை உணர்ந்தோ வேறுலாபங்கள் கருதியோ இல்லை. சரண்யனான பகவான் தன் அபிமானத்தால் ஒதுங்கினவரை ஏற்றுக்கொள்ளாமல்யிருப்பானா? என்று கூறி வேடனிடம் வேறு ஏதாவது விஷயம் உண்டா எனக் கேட்டபோது அவன் கூறினான். சாமி இன்று ஓர் அதிசயம் நடந்தது. வழக்கம் போல் நான் வேட்டையாடும்போது ஒரு முயல்குட்டியைப் பிடித்து விட்டேன் என்றான் வேடன். அவர்கள் இருவருக்கும் இது ஆச்சர்யம் விளைவித்தது. மாமேகம் சரணம் வ்ரஜ என்ற இந்த முயலுக்கும் யாரும் உபதேசிக்கவில்லை. ஆனாலும் சரணாகதியும், ரக்ஷணமும், இரண்டுமே பலிதமானது. என்னே! என்று பட்டர் நஞ்சீயரிடம் கூறி சந்தோஷம் கொண்டார்.

எம்பெருமானார் நியமனப்படி பட்டர் சாரதா பீடத்திற்குச் சென்று ஸ்ரீபாஷ்யத்தை ஸ்ரீசாரதாதேவிக்கு காட்டி அவள் அனுக்கிரகம் பெற்று மீண்டதும் திரும்பி வரும் வழியில் திருவேங்கடமுடையானைச் சேவித்து வரும் வழியில் மனநிலை சரியில்லாத பெண்ளுக்கும் அனுக்கிரகம் செய்திருக்கிற செயல்களை குருபரம்பரை நூல்கள் தெரிவிக்கின்றன. பட்டருக்கு இரண்டு தேவியர்கள். இப்படி இருபக்கமும் இருசர்ப்பங்களை வைத்துக் கொண்டு சம்சாரமாகிய கடலை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று குரு பக்தர் கேலியாகக் கேட்க பட்டரும் அயராமல் அந்த இரண்டு சர்ப்பங்கள் சீறும்போது அவைகளின் செருக்கை அடக்க வானத்தில் பறக்கும் வைனதேயன் இருக்கிறான். நம்மால் ஆவதென்ன? என்று கூறி பெருமாளைப் பரவினார்.

ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்திலே கைசிக துவாதசி நாளில் கைசிக புராணத்தை பட்டர் உபன்யாசம் செய்த போது பெரியபெருமாள் மிகவுகந்து திருமாலை திருப்பரிவட்டம் திருவாபரணம் இவற்றை அருளியதோடு உமக்கு நாம் மேலை வீடு தந்தோம் என்றிட, மகா பிரசாதம் என்று பட்டர் அதனை ஏற்றுக் கொண்டார். பெரிய பெருமாளையும் எம்பெருமாளையும் சேவித்து நியமனம் பெற்று தம் திருமாளிகைக்கு எழுந்தருள தாயார் அரங்கனைச் சேவிக்க, அவரும் நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் என்று ஆசிர்வதிக்க பட்டர், யாம் வேண்டுவதும் அதுவே எனக் கூறி அமைந்தார். பட்டர் திருமாளிகைக்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் கூடி அமுது செய்ய பெருந்திரளாகக் குழுமினர். பட்டர் திருநெடுந்தாண்டகத்துக்கு அர்த்தம் அருளிச் செய்தார். அஞ்சிறைப்புள்ள என்கிற பாசுரத்தை அனுசந்திக்கும்போது திருவேங்கட முடையான் கருடாரூடராய் வானில் காட்சியளித்தருள, பட்டரும் ஆனந்தப்பட்டார். பறவை ஏறும் பரம் புருடா என்கிற பாசுரத்தை இருமுறை அநுசந்தானம் செய்து சிரசின் மீது கைகூப்பிக் கபாலம் வெடித்து திருநாட்டிற்கு எழுந்தருளினார். தாயார் ஓடோடி வந்து அவரைத் தாங்கிப்பிடித்தார். நஞ்சீயரும் மற்றய சீடரும் வேரற்ற மரம் போல் சாய்ந்து கண்ணீர் பெருக்கினார். ஸ்ரீராமப்பிள்ளையக் கொண்டு சரமக்கிரியைகளை முறையாக நஞ்சீயர் செய்தார். பட்டர் அருளிச் செய்த கிரந்தங்கள், விஷ்ணு சகஸ்ரநாம பாஷ்யம், அஷ்டச்லோகி, ஸ்ரீகுணரத்ன கோசம், ஸ்ரீரங்கராஜஸ்தவம் முதலியன.

திங்கள், 21 செப்டம்பர், 2020

விநாயகரின் எட்டு அவதாரங்கள்

விநாயகரின் எட்டு அவதாரங்கள் என்ன என்பது தெரியுமா?
விநாயகரின் எட்டு அவதாரங்கள்  என்ன என்பது தெரியுமா?

 நம்முடைய முதன்மைக் கடவுளான "விநாயகரின் எட்டு அவதாரங்களையும் முட்கல புராணம்" கூறுவது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.
 விநாயகரை வக்ரதுண்டா, லம்போதரா,  கஜனம் என பல பெயர்களைக் கொண்டு அவர்களை அழைக்கப்படுகிறது. இவ் வடிவங்களை இந்தியாவில் பல இடங்களில் அவர்களை வைத்து வழிபாடு இன்றுவரை செய்து வருகிறார் ,ஆனால் இருப்பினும் விநாயகரின் வடிவங்களைப் பற்றி பல கருத்துக்கள் இன்று வரை நிலவி வருகிறது ,விநாயகர் "புராணத்தின்" படி விநாயகர் நான்கு வடிவங்களைக் கொண்டுள்ளார். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு யுகத்தை சார்ந்தது ஆகும். இருப்பினும் அவை எட்டு உருவடிவங்களைக் கொண்டுள்ளார், என்றும் அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட  வழிபாடு உள்ளது என்று முட்கல புராணம் கூறுகிறது .

 8 வடிவிலான விநாயகருக்கு வெவ்வேறு  விசேஷங்கள் உள்ளது, அதில் ஒவ்வொரு வடிவத்தில் மாறுபட்ட  வடிவம்  கொண்டவை அதில் சரும நிறம், வாகனம்  அவர் கைகளில் வைத்திருக்கும் சில பொருட்கள்  இது போன்ற அனைத்துமே வேறுபட்டிருக்கும்,  ஒவ்வொரு உருவத்திற்கும் மாறுபட்டு   வடிவமைக்கப்பட்டிருக்கும்.
  இந்த எட்டு வடிவத்திற்கும் உண்டான காரணங்களையும் என்னவென்று இப்பதிவில் காணலாம்.

 அசுரர்கள் அல்லது நம்மை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்களை அளிப்பதற்கு விநாயகரின் இந்த எட்டு வடிவமும் ஒவ்வொரு கணங்களையும் பெற்றிருக்கும்.

 வக்ரதுண்டா


 வக்ரதுண்டா என்பதுதான் விநாயகரின் முதல் வடிவம் வக்ரதுண்டா என்றால் "வளைந்த தும்பிக்கையை" குறிப்பதாகும். இது  மட்சர்யசுரா  என்றால்  அரக்கனை கொல்லவே இந்த அவதாரத்தை எடுத்தார் , விநாயகர் மட்சர்யசுரா  என்றால் மனிதர்களில் உள்ள பொறாமை குணத்தை குறிப்பதாகும், அந்த பொறாமையை எதிர்கொண்டு அதில்  வெற்றி பெறுவது எப்படி என்று இவ்வடிவம் குறிக்கும். இந்த அவதாரம் அவர் சிங்கத்தின் மீது வீற்றிருப்பார்.

  ஏகடண்டா


 இது  விநாயகரின் இரண்டாவது வடிவமாகும். ஏகடண்டா என்றால் "தந்தம்"என்று பொருளாகும். இந்த அவதாரம் மடசுரா என்ற அரக்கனை கொல்லவே இந்த அவதாரத்தையும் விநாயகர் எடுத்தார். இதில் சக்தி மற்றும் இதர காரணங்களால் மனிதர்கள் மனதில்  குடிபுகும் நஞ்சை குறிப்பதாகும். மனிதர்களில் உள்ள நஞ்சை நீக்கி வெற்றிப்பெற ஏகடண்டா பிறந்தார். இந்த அவதாரம்  எலியின் மீது வீற்றிருப்பார்.

 மகோதரா


 இதுதான் விநாயகரின் மூன்றாவது பெரிய தந்தையை கொண்ட வடிவமாகும் இதில் எண்ணமயக்கத்தின் அரக்கனான மோஹசுராவை  கொல்வதற்காகவே இந்த அவதாரம் எடுக்கப்பட்டது .
இதில் "அறியாமையை ஒழித்து எதிர்மறையான எண்ணங்களை அழித்து விடவே இந்த வடிவம்" எடுக்கப்பட்டது .
இந்த அவதாரமும் எலியின்  மீது வீற்றிருப்பார்.

  கஜானன்


 கஜானம் என்றால் "யானை முகத்தனை " குறிப்பதாகும். இந்தத் தோற்றம் "பேராசையின் அரக்கனை அழிக்கவே" இந்த அவதாரத்தை  எலியின்மீது வீற்றிருப்பார்.

  லம்போதரா


 இதுதான் விநாயகரின் ஐந்தாவது வடிவமாகும் லம்போதரா என்பது "பானை தந்தத்தை" கொண்டதாகும்.  இந்த வடிவம்  கொண்ட விநாயகர் கோபத்தில் அசுரனான க்ரோதாவை அழித்தார், இந்த அவதாரமும் எளிய மீது தான் வீட்டில் இருப்பார்.

  விகடா


 விகடா என்றால் எப்போதும் இல்லாததை போன்ற வடிவம் கொண்டதாக இருக்கும், இந்த வடிவமானது "காமவெறி அரக்கர்களை அழிக்க" இந்த அவதாரம் எடுத்து வைத்தார். இந்த அவதாரத்தில் மயிலின் மீது அவர்   அமைந்திருப்பார்.

 விக்னராஜா

இந்த  தோற்ற அமைப்பு கொண்டது  ஈகோவின் அரக்கனான "மாமாவை" அழிக்கவே இந்த அவதாரம் எடுத்துரைத்தார். விநாயகர் விக்னராஜா என்றால் தங்களை நீக்குபவர் என்று பொருள் ஆகும். இது  சேஷா
என்ற நாகத்தின் மீது அமர்ந்திருப்பார்.

தும்ரவர்ணா


  இதுதான் விநாயகர் "எட்டாவது அவதாரம்" ஆகும் தும்ரவர்ணா என்றால் "புகை நிறம்" கொண்ட வடிவமாகும், இந்த அவதாரம் ஆணவ அரக்கர்களை அபிமனராசுவை அழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார், இந்த அவதாரமும் எலியின் மீது தான்  அமைந்திருப்பார்.


சற்குருதாசன்
ராமமூர்த்தி BSNL
நாடி ஜோதிடர்
9444113777
9790901567


வரகூர் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவில்

தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது வரகூர். இங்கே அற்புதமான கோயிலில் அழகுற வீற்றிருக்கிறார் பெருமாள். ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீவராகமூர்த்தி, ஸ்ரீகண்ணபிரான் என மூன்று திருக்கோலங்களில் இங்கே அருள்புரிகிறார். பிரசித்தி பெற்ற திருத்தலம் இது.

பிள்ளை பாக்கியம் இல்லையே என்று ஏங்குவோர், வழிபடக்கூடிய திருத்தலம். இங்கே சுவாமியின் பாதத்தில் வெள்ளிக்காப்பு வைத்து வேண்டிக்கொள்வது வழக்கம். விரைவில் குழந்தைபாக்கியம் கிடைக்கப் பெறலம் என்பது ஐதீகம்.

மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக்கொண்டு, காட்சி தருகிறார். உத்ஸவரின் திருநாமம் - ஸ்ரீவெங்கடேசப் பெருமாள். ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார். உத்ஸவரே பிரசித்தம் என்பதால், வெங்கடேச பெருமாள் கோயில் என்றே அழைக்கின்றனர் பக்தர்கள். இந்தக் கோயிலின் இன்னொரு விசேஷம்... துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு முதலான மூலிகைகளைக் கொண்டு இடித்துச் செய்த பொடியானது, பெருமாளின் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இங்கே, கிருஷ்ணரும் விசேஷமானவர். நாராயண தீர்த்தருக்கு பெருமாள் ஸ்ரீகிருஷ்ணரூபமாக காட்சி தந்தருளியதால், மேலும் கிருஷ்ண ஜயந்தி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆச்சரியம்... கிருஷ்ணருக்கு சந்நிதி இல்லை.

அப்படியெனில் கிருஷ்ணரே இல்லாமல் கிருஷ்ண ஜயந்தி விழா எப்படி?

ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளையே கிருஷ்ணராக பாவித்து வழிபடுகின்றனர். ஜயந்தி விழாவின் போது, சுவாமியின் மடியில் குழந்தை கிருஷ்ணரை கிடத்துவதும் பெருமாளையே, யசோதையாக அலங்கரிப்பதும் வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்று.

வரகூர் லட்சுமி நாராயணப் பெருமாளை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை பாக்கியம் தகையவில்லையே என வருந்துவோர், பெருமாளை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். துளசி தீர்த்தம் பருகுங்கள். புளியோதரை நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். முடிந்தால், நான்கு குழந்தைகளுக்கு புத்தாடை, நோட்டு பேனா வழங்குங்கள்.

உங்கள் சந்ததியை சிறக்கச் செய்வார். சந்தான பாக்கியம் தந்தருள்வார்.


சுமங்கலி பாக்யம்

சுமங்கலி பாக்யம்

திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார். காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவி) வடிவெடுத்தது. அந்தப்பெண், அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா,  அவளருகே ஓடிவந்தார். ""அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! '' என்று கண்ணீர் வடித்தார்.

அதுகேட்ட ரிஷிபத்தினி, ""மன்னா! இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,'' என்று அழுதாள்.

மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை... அதிலும் அந்தணப் பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன செய்வேன்! என் குலகுருவே! வசிஷ்ட மகரிஷியே! தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,'' என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது  பாதங்களில் விழுந்தாள்.

என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,""தீர்க்க சுமங்கலி பவ'' என அவளை வாழ்த்தினார்.

""மாமுனிவரே! இதோ! இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்த பிறகு அபாக்கியவாதியாக நிற்கிறேன்! தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே! இதெப்படி சாத்தியம்!'' என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. "தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்?' அவர் யோசித்தார். ""பெண்ணே! காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில்  ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர் போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன் உனக்கு நிச்சயம் உதவுவான் கிளம்பு என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, ""அன்னையே! என்னைப் போலும் ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும் என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக  வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும் படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.




திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப்  படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்..

சிவன் தலை கீழாய் காட்சி தரும் அதிசய கோவில்

சிவன் தலை கீழாய் காட்சி தரும் அதிசய கோவில்!


சிரசாசனம்: சிவன் தலைகீழாய் காட்சி தரும் அதிசய கோவில், சிவன் அருகில் முருகனை மடியில் தாங்கி காட்சி தரும் அம்மன், சிவன் சிரசாசனம் கொண்ட கதை.
உலகை காத்து இரட்சிக்கும் பரம்பொருளாகிய ஆதி அந்தம் இல்லாத சிவ பெருமான் பல்வேறு திருவிளையாடல்களும், பல்வேறு கோலங்களும் பூண்டு காட்சி தருகிறார். பக்தர்களுக்கு வேண்டிய அருள்புரிய இறைவன் பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி அருள்புரிந்துள்ளார். அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலை கீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய திருக்கோவில் தான் ஆந்திர மாநிலம் பீமாவரம் அருகில் உள்ள யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.

சிரசாசன கோல தலவரலாறு

முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான். தன் வரத்தை கொண்டு அனைத்து தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக்கு பாலகர்களில் யமனை தவிர அனைவரையும் தோற்கடித்தான். யமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போர் தொடர்ந்து கொண்டே இருக்க யமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார். இறுதியாக சம்பாசுரன் யமபுரியை கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் யமன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார்.

அப்போது இறைவன் தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசானத்தில் இருந்தார். ஈசனின் தியானம் கலைய வழி அறியாது யமன் நின்றார். யமனின் வேதனை அறிந்த அன்னை பார்வதி காட்சி அளித்தார். யமனிற்கு அசுரனை அழிக்கும் சக்தி வழங்கினார். யமனும் சம்பாசுரனை கொன்று தேவர்கள் குறையை தீர்த்தார்.


பின் இங்கு வந்து சிரசாசனத்தில் இருந்த இறைவனையும், குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார். எனவே தான் இன்றும் இங்கே இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாய் காட்சி தருகிறார் என்கிறது தலபுராணம்.

யம பயம் போக்கும் சிவ பெருமான்
இங்கே கருவறையில் இறைவன் தலை கீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். சிரசை பூமியில் பதித்து பாத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார்.



அருகிலேயே அன்னை வேறு எங்கும் இயலா வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார்.
யமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல யம பயம் நீங்கும் என்பது கண்கூடான உண்மை. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள், திருமண தடை, குழந்தையின்மை என அனைத்தையும் நீக்கி அருள் வழங்குகின்றனர் பார்வதி அம்பிகையும், சக்தீஸ்வர சுவாமியும்.
அழகிய கிராமத்தில் அழகான சுதை வேலைபாடுகள் கொண்ட திருக்கோவில். தினமும் காலை மாலை என பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசித்து அருள் பெறுகின்றனர். அனைவரும் ஸ்ரீ பார்வதி உடனுறை சக்தீஸ்வர சுவாமியை சென்று தரிசித்து அனைத்து நன்மைகளும் பெறுவோம்.

அமைவிடம்: யனமதுரு ஸ்ரீ பார்வதி சமேத சக்தீஸ்வரர் திருக்கோவில்,
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில்
இருந்து 5 கி.மீ. தொலைவில் யனமதுரு கிராமத்தில் அமைந்துள்ளது.

ஶ்ரீ ஜபாலி ஆஞ்சநேயர் கோவில்

ஶ்ரீ ஜபாலி ஆஞ்சநேயர் கோவில்

, திருப்பதி, ஆந்திர மாநிலம்

ஶ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் ஜபாலி [ஜாபாலி] ஶ்ரீ இராமர் "பித்ரு வாக்கிய பரிபாலனம்" என்னும் உயர்ந்த கொள்கையை கடைப்பிடித்து இராஜ்ஜிய பரிபாலனத்தை தம்பி பரதனுக்கு விட்டு கொடுத்துவிட்டார். அது மட்டும் அல்லாமல் அயோத்தியாவையும் விட்டு பதினான்கு வருடம் காட்டுக்கு செல்லவும் ஒப்புக்கொண்டார். தனது சகோதரன் லக்ஷ்மணன் மற்றும் மனைவி சீதாதேவியுடன் காட்டுக்கு செல்கிறார். ஶ்ரீஇராமன் காட்டுக்கு சென்ற பின் தசரதன் அயோத்தியில் உயிர் துரந்தார், மாமன் வீட்டிலிருந்து திரும்பிய பரதன் அயோத்தியாவின் அரசனாக மகுடம் ஏற்க மறுக்கிறார். மூத்தவருக்கே அதற்கு உரிமை என்கிறார். இராமரையே அரசாள அழைப்பது என்று முடிவு செய்து, அரச குடும்பத்தினர் அனைவரும் இராஜ ப்ரோகிதருடனும், மற்ற பண்டிதர்களுடனும் காட்டுக்கு புறப்படுகின்றார். சித்திரகூடத்தில் இராமரை அவர்கள் சந்தித்து, அயோத்திக்கு திரும்புமாறும் இராஜ்யத்தை ஶ்ரீராமர் ஆள வரவேண்டும் என்றும் பலரும் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள். ஆனால் இராமரோ, சாத்திரங்கள் தெரிந்தவரும் தந்தையும் ஆனவருக்கு கொடுத்த வாக்கை தான் மீற முடியாது என்று உறுதியாக எடுத்துரைக்கிறார், தான் அரசாள முடியாது என்பதிலும் காட்டில் வாசம் செய்வதிலும் தின்னமாக இருந்தார்.

அந்த நேரத்தில், ஜபாலி [ஜாபாலி என்றும் அழைப்பர்] என்னும் ஒரு வைஸ்யர், பரதனின் வாதத்திற்கு துணையாக தனது வாதத்தை முன் வைத்தார். எல்லோரும் தனித்தே பிறக்கிறோம் தனித்தே மரணத்தை ஏற்கிறோம். அப்படி இருக்கையில் என் தந்தை என் தாய் என்று யாரும் கிடையாது ஏன்னொனில் பூமியில் யாரும் யாருக்கும் உரிமையில்லை. எப்படி யாத்திரிகர்களுக்கு எந்த கிராமத்திலும் பாத்தியதை இல்லையோ அது போல் தான் இதுவும். அரசன் தனி, இராமன் தனி. இந்த உலகம் ஒரு மாயை என்று கூறினார்.
ஒரு படி மேலேபோய் இறந்தவருக்காக எதையும் தியாகம் செய்வதின் முழுமை என்ன என்றார். அப்படி கொடுக்கப்படும் உணவு வீண்; இறந்தவர் சாப்பிடவா முடியும் என்கிறார். அண்டத்தை மிஞ்சியது ஏதும் இல்லை. கண்கள் காணாததை உதறிதள்ளுமாரும், கண்ணால் காண்பதற்கு மட்டும் முன்னுரிமை தருமாறும், வாக்கு, தந்தை இட்ட கட்டளை, மகனின் கடமை,, அரசனின் கடமை அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று நாத்திகம் பேசினார்.

*ஜபாலிக்கு ஶ்ரீஇராமரின் பதில்*
நல்லொழுக்கமுடையோரில் உயர்ந்தவரான ஶ்ரீஇராமர் சாந்தமாக ஜபாலிக்கு பதில் கூறினார். இவர்கள் சொல்லி கேட்ட வார்த்தைகள் உண்மை போல் தோன்றினாலும் செயலுக்கு ஒவ்வாதவை. சாப்பிட கூடாத பழத்தை சாப்பிட சம்மதம் வாங்குவது போல் தான் இது. படிப்பும், நன்நடத்தையும், சீரான பார்வையும், நியாயமாகவும், இருப்பது போல் தன்னை பற்றி தானே நினைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு புத்தி சொல்ல வரலாமா? அரசாட்சி என்பதே உண்மையும் சத்தியமும் தான், அதனால் அரசன் உண்மையாகவும் சத்தியமானவராகவும், உதாரண புருஷனாகவும் இருப்பது வேண்டும். அண்டம், இந்த ஜகம் என்பது நிரூபிக்கப்பட்ட சத்தியம். மேலுலகிலிருந்து நமக்கு கிடைக்கும் வரனான இவ்வுண்மையை மிகவும் உயர்ந்த சத்தியம். வேள்வி, பலி, தியாகம், வழிபாடு, வேதங்கள் எல்லாம் இந்த உண்மையை, சத்தியத்தை கருவாக வைத்து தோன்றியவை. தர்மவானான தசரதனின் ஆணையை எப்படி மீறமுடியும்? தர்மவானான அவருக்கு தான் கொடுத்த வாக்கை எப்படியும் கடைபிடிப்பேன். தனது வார்த்தைகளை ஶ்ரீஇராமர் முடிக்கும் பொழுது புத்திசாலிகள், நாத்திக வாதத்தை புறந்தள்ளுவார்கள் என்றும், தன் தந்தை இப்படிப்பட்ட மாறாத நாத்திகனை [ஜபாலியை], தர்மத்திற்கு புறம்பானவரை தனது அரசசபையில் வைத்திருந்திருக்க கூடாது என்றார்.

ஶ்ரீஇராமரின் ஆணித்தரமான வார்த்தைகளை கேட்ட ஜபாலி தான் நாத்திகன் இல்லை, இராமர் அயோத்தியா வரவேண்டும் என்னும் ஊந்துதலால் அப்படி பேசியதாக கூறுகிறார்.

இந்த ஒரு இடத்தில் மட்டுமே ஜபாலி அவர்கள் ஶ்ரீவால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறார்.

*இராமயணத்திற்கு வெளியே ஜபாலி*
இதன் பிறகு ஜபாலி முனிவரை பற்றி புராணங்களில் அதிகமாக எங்கும் காணக்கிடைக்கவில்லை. இன்றைய ஜபல்பூர் நகரத்திற்கு இப்பெயர் வர காரணம் ஜபாலி முனிவர் அங்கு தவம் எய்தினார் என்பதாகும். வட கர்நாடகாவில் [துலு நாடு] பல திருக்கோயில்களின் தலபுராணத்தில் ஜபாலி முனிவர் அங்கு தவம் செய்ததாக காணப்படுகிறது. திருப்பதி மலையில் இருக்கும் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலின் தல புராணத்தில் ஜபாலி முனிவர் பெயர் வருகிறது.

ஜபாலி அயோத்தியா திரும்பிய பிறகு
சித்திரகூடத்திலிருந்து அயோத்தியா திரும்பிய ஜபாலி தான் இராமரை திரும்ப அழைத்து வருவதற்காக சொல்லிய சொற்கள் இராமரை புண்படுத்தி விட்டது குறித்து மிகவும் வருத்தப்பட்டார். நற்காரியம் ஒன்று நடக்க வேண்டும் என்ற ஆவலில் தான் கூறிய வார்த்தைகளும், தவறான உபமானங்களும் இராமர் வாயால் தான் "மாறாத நாத்திகன்; தர்மத்தின் வழியிலிருந்து தவறியவன்; தவறான வழிநடத்தும் அறிவுடையவன்" என்ற பட்டம் பெற வைத்தது மன வேதனையை இன்னும் அதிகரித்தது. தசரதர் அவர் அரசசபையில் தன்னை வைத்திருந்திருக்க கூடாது என்று இராமர் சொல்லுமளவுக்கு தாம் வீழ்ந்துவிட்டோமே என்று வருந்தினார். இராமனின் மகுடாபிஷேகத்திற்கு பிறகு, ப்ரம்மனை குறித்து தவம் மேற்கொள்ள நினைத்து அயோத்தியாவிலிருந்து புறப்பட்டார்.

தெற்கு நோக்கி தனது யாத்திரையை தொடங்கினார், பல இடங்களில் நதிகரையில் தவம் இருந்தார். இப்படியே சென்ற அவர் ஒரு சமயம் ஶ்ரீஅஞ்சனா தேவி தனக்கு மக்கள்செல்வம் வேண்டி தவம் இருந்த இடத்தினை அடைந்தார். அவ்விடத்தின் மகிமையை அறிந்த அவர் இதுவே தனது தவத்திற்கு சிறந்த இடம் என்ற முடிவுக்கு வந்தார்.

தர்மத்தின் ரூபமான, புருஷருள் உத்தமமான ஶ்ரீஇராமரை தியானிப்பதற்காக இவ்விடத்தை விட சிறந்த இடம் ஏதிருக்கும்? ஜபாலி தவம் இங்கு மேற்கொண்டார்.

*மகரிஷி ஜபாலியும் திருப்பதியும்*
திருமலையில் கோயில் கொண்டுள்ள ஶ்ரீவெங்கடாசலபதியை தரிசிக்க ஏழு மலைகளை தாண்டி வரவேண்டும். ஶ்ரீவெங்கடாசலபதி சுவாமி வட இந்தியாவில் ஶ்ரீபாலாஜி என்று பிரபலம். அந்த ஏழு மலைகளில் ஒன்று அஞ்சநாத்ரி ஆகும். தனக்கு மக்கள் செல்வம் வேண்டி ஶ்ரீஅஞ்சனா தேவி தவம் இருந்த மலை என்பதால் இம்மலைக்கு அஞ்சநாத்ரி என்று பெயர்.

*ஶ்ரீஜபாலி தவம் மேற்கொண்ட இடம் திருமலையில் திருக்கோயிலுக்கு சற்று தொலைவில் உள்ளது.* ஶ்ரீவியாசராஜா தீர்த்தர், ஶ்ரீஹாத்திராம் பாவாஜி போன்ற மகான்கள் ஶ்ரீவெங்கடாசலபதிக்கு பூஜைகள் செய்துள்ளார்கள். ஶ்ரீராமாநுஜர் பூஜை விதிகளை நிர்ணயத்தன்படி அதன்படி இப்பொழுது பூஜைகள் நடக்கின்றன. ஶ்ரீஹாத்திராம் பாவாஜியின் சமயத்தில் ஜபாலி ஹனுமார் திருக்கோயில் கட்டப்பட்டது. தற்பொழுது ஶ்ரீபிரயாக்ராஜ் மகராஜ் என்னும் சாது ஜபாலி ஹனுமார் திருக்கோயிலை நிர்வாகித்து வருகிறார்.

*திருப்பதியில் ஜபாலி புராணம்*
ஜபாலி [ஜாபாலி] ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், திருப்பதி, ஆந்திர பிரதேசம்

ஜபாலி அவர்கள் அஞ்சநாத்ரி மலைக்கு வந்த பொழுது, தான் சரியான இடத்திற்கு வந்துவிட்டதாக உணர்ந்தார். ஆனால் நீர்நிலை வேண்டும் என்பதாலும் அங்கு ஶ்ரீஹனுமாரின் சாந்தித்யம் இருக்க வேண்டும் என்பதாலும் சற்றே மேலே நடந்தார். அப்படிப்பட்ட தலத்தில் தவம் எய்தினால் தான் முக்தி பெறலாம் என்றும் நம்பிக்கையாக இருந்தார். மேலும் சென்ற ஜபாலி அவர்கள், தற்போது திருக்கோயிலுக்கும் ஆகாசகங்கைக்கும் நடுவில் உள்ள இடத்திற்கு வரும்போது, ஶ்ரீஹனுமாரின் இருப்பிடமாக உணர்ந்தார்.

ஆகாசகங்கைக்கு செல்லும் பாதையில் ஶ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயிலில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் இருக்கும் இடத்தில் ஒரு குறுகிய வளைவில் "ஜபாலி ஶ்ரீஆஞ்சநேய சுவாமி தேவாலயமுலு" என்னும் தெலுங்கு பெயர் பலகையை பார்க்கலாம்.

இங்கிருந்து நாம் ஏற்றமான பாதையில் நடக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மிக உயரமான மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து இருபுறமும் நம்மை வரவேற்கும். மிக அடர்த்தியான காட்டின் நடுவில் அமைந்திருக்கும் பாதை இது. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு தான். நமது மனம் சாந்தமாக இருக்குமாயின் சொர்கத்தில் இருப்போம்,  ஆதலால் மனதினை சுத்தமாக வைத்திருங்கள், தெய்வதன்மை நம்மை ஆட்கொள்ளும்.

*ஜபாலியும் ஶ்ரீஆஞ்சநேய சுவாமியும்*
இவ்விடத்தில் ஜபாலி அவர்கள் ஶ்ரீஹனுமாரின் உணர்வமைதியை உணர்ந்தார். அவ்விடத்திலேயே தவம் மேற்கொள்ள ஆரம்பித்தார். முதலில் ஶ்ரீஹனுமாரை குறித்து தவம் இருந்தார். சில நாட்களுக்கு பின் ஶ்ரீஹனுமார் அவர் முன் தோன்றி ஶ்ரீசீதா பிராட்டியுடன் ஶ்ரீஇராம சந்திர மூர்த்தியின் தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். இதை கேட்ட ஜபாலி அவர்கள் புதிய தெம்புடன் தனது தவத்தை திரும்பவும் செய்யலானார். நீண்ட நாட்களுக்கு பின், அருகில் ஒரு நீர்நிலை தோன்றும், அதில் நீராடி தனது பாவங்களை போக்கி, பின் திரும்ப தவம் செய்யுமாறு தெய்வீக கட்டளையை பெற்றார். சில நாட்களில் அருகில் அழகிய நீர்நிலை ஏற்பட்டது. அதனை ஶ்ரீஇராமரே தனது அம்பினால் உற்பத்தி செய்தார் என்பதை அவர் அறிந்து மகிழ்ச்சியுடன் அதில் நீராடினார். பின் திரும்பவும் தவம் செய்து ஶ்ரீசீதா பிராட்டியாருடன் கூடிய ஶ்ரீஇராமரின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்.

*ஜபாலி ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்"*
ஶ்ரீஜபாலிக்கு காட்சி கொடுத்த அதே வண்ணம் இன்றும் ஶ்ரீஹனுமாரை இங்கு தரிசிக்கலாம். அந்த சுயம்பு சுவாமியை கர்ப்பகிரஹமாக வைத்து இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கர்ப்பகிரஹமும் அதன் மின் பெரிய முக மண்டபமும் கொண்டது திருக்கோயில். கோயிலின் முன்புறம் அழகிய குளம் உள்ளது. ஶ்ரீஇராமரால் ஏற்படுத்தப்பட்ட இத்திருக்குளத்தை "ராம குண்ட்" என்று அழைக்கிறார்கள். கோயிலின் பின்புறம் இருக்கும் திருக்குளம் "சீதா குண்ட்" என்று அழைக்கப்படுகிறது.

ஜபாலி ஶ்ரீஆஞ்சநேயர்
ஶ்ரீஜபாலி மஹரிஷிக்கு எப்படி காட்சி கொடுத்தாரோ அதே வண்ணம் இந்த க்ஷேத்திரத்தில் சுயம்பு ஹனுமாராக காட்சி அளிக்கிறார். அவர் சுந்தரர் என்ற பெயருக்கு ஏற்ப்ப மிக அழகாக இருக்கிறார். மூர்த்தம் சுமார் நான்கு அடி இருக்கும். ஹனுமார் நேர் கொண்ட காருண்யமான பார்வையில் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறார். வடக்கு நோக்கியிருக்கும் இவர் பக்தர்களுக்கு எல்லா ஐஸ்வரியத்தையும் அளிக்க வல்லவர். வலது திருக்கரத்தில் கதையை வைத்திருக்கிறார். இடது திருக்கரத்தினை வலிமையான தொடையில் ஊன்றியிருக்கிறார். தலையில் முத்துகளால் ஆன மகுடம் அணிந்துள்ளார். ஶ்ரீஇராம பரிவாரத்தினையும் கர்ப்பகிரஹத்தில் தரிசனம் செய்யலாம்.

*அனுபவம்*
வாருங்கள் ஶ்ரீஜபாலிக்கு தர்மத்தின் உருவான ஶ்ரீஇராமரின் தரிசனத்தை செய்து வைத்த இந்த காருண்ய மூர்த்தி ஹனுமாரை தரிசித்து எல்லா ஐஸ்வரியத்தையும் அடைவோம்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், மகரிஷிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ ராமஜெயம்,
ராம நாமமே சொன்னால் அங்கே வருவார் ஹனுமார், க்ஷேமங்கள் யாவையும் தருவார், ஶ்ரீ ராம பக்த ஹனுமார்.

ராகு காலம்

ராகு காலம்!
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
எல்லாச் செயல்களையும் நல்ல நேரம் பார்த்தே செய்வார்கள். அப்போதுதான் நன்மைகளுடன் நல்வாழ்வு பிறக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக சித்தயோகம், அமிர்தயோகம் போன்றவற்றை நல்ல யோகமான நேரமாகச் சொல்வார்கள். “”பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என பழமொழி சொல்லி புதன்கிழமைகளில் நல்ல காரியங்களைச் செய்வார்கள். மங்கள வாரம், சுக்கிர வாரம்… இப்படி ஒரு கிழமைக்கும் ஒரு வாக்கு உண்டு!

 இப்படி எல்லா நேரத்தையும் புகழ்கிறவர்கள் ராகு காலத்தை நினைத்தால் பயப்படுவார்கள்!  ஆனால், உண்மையில் ராகு காலம்தான் சிறந்த பரிகார காலம். வருத்தப்படுபவர்களுக்கு வளம் தரும் கற்பக விருட்சமாகவும், இருட்டில் இருப்பவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாகவும், துக்கத்தில் இருப்பவர்களுக்குத் துணையாகவும் இருப்பது இந்தக் காலம்தான்!

ராகு காலத்தின் பெருமையைப் புரிந்து கொள்பவர்கள் அறிவாளியாக இருந்தால், அந்தக் காலத்தைத் தனக்கு லாபம் தரும் விதத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

ராகு காலத்தை “அமிர்த காலம்’ என்று சொல்வார்கள். அமிர்தம் எப்படி அதை அருந்தியவர்களுக்குப் பூரண ஆயுளைத் தருகிறதோ, அதுபோல ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகள் புண்ணியத்தைப் பெருக்கிக் கொடுக்கின்றன. ராகுவைப் பற்றிய ஆன்மிகத் தகவல்களை நினைப்பதே புண்ணியம் என்று சொல்லப்படுகிறது.

ராகு காலத்தில் பூஜை செய்யலாமா? அதிலும் குறிப்பாக எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றலாமா? என்றெல்லாம் நிறையப் பேருக்குச் சந்தேகம் இருக்கும்.

 ஹோமங்கள் பற்றிய எல்லா விஷயங்களும் வேத நூல்களில் இருந்தாலும் பரிகார பூஜைகள் பற்றிய தகவல்கள் பழமையான ஜோதிட நூல்களிலேயே உள்ளன.

 ராகு காலத்தில் எல்லா பூஜைகளையும் செய்ய முடியாது. பரிகார பூஜைகளை மட்டும்தான் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். ராகுகாலம் சிறந்த பரிகார காலம் என்று அதில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ராகு காலம் நல்ல நேரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கஷ்டத்தில் இருந்துகொண்டு பரிகாரம் தேட நினைப்பவர்களுக்கு ராகு காலம் மிக உகந்த நேரம்!

சத்ரு உபாதைகள் தீர்வதற்கு எலுமிச்சம்பழம் உகந்தது. துர்க்கைக்கு இந்தப் பழம் மிகவும் விசேஷமானது. துர்க்கைக்கு இதை மாலையாகவும் சாத்தலாம். எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றும் பழக்கமும் காலங்காலமாக இருக்கிறது. திருவாரூரில் ஸ்ரீதியாகராஜர் கோயிலினுள் இருக்கும் ராகுகால துர்க்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றும் பழக்கம் 1000 ஆண்டுகளாக இருந்து வருகிறது!

 ராகுவுக்கு உடலில் தான் விஷம். ஆனால் நாக்கில் அமிர்தம் இருக்கறது!


அருள்மிகு கல்யாண வெங்கடரமண ஸ்வாமி பெருமாள் கோவில்

கரூரிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் தான் தோன்றி மலை என்ற இடத்தில் அருள்மிகு கல்யாண வெங்கடரமண ஸ்வாமி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. குறிப்பாகச் சொல்லணும்னா, திருப்பதிக்கு சென்று தரிசிக்க முடியாதவங்க யாராக இருந்தாலும், இங்கு உள்ள, தான்தோன்றி மலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம்.  இத் திருத்தலத்தை தென் திருப்பதி என்றும் சொல்லுவாங்க..

இவ


ர் திருப்பதி பெருமாளின் அண்ணா என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டுருக்கேன்..

தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில், குடைவரைக் கோயில் என்றும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது..      

சோமசர்மா என்ற பக்தன், திருப்பதிக்கு சென்று போது பெருமாளை தரிசிக்க முடியலை. அதனால, மிகவும் மனம் வருந்தினான்.அப்போ,. அந்த சமயத்தில, பக்தனுக்காக திருப்பதி ஸ்ரீ்னிவாச பெருமாளே மனம் இரங்கி வந்து தோன்றியதாக சொல்லப்படுகிறது.. பெருமாள் தானாக தோன்றியதால் இக்கோயில் “தான்தோன்றி மலை” என்ற பெயர் பெற்றது.

இந்தக் கோவிலோட சிறப்பு என்னவென்றால்,  பெருமாள் மேற்கு நோக்கி, பக்தர்களுக்காக கொஞ்சம்   தன் தலையத் தாழ்த்திக்கொண்டு தான் இருப்பார். இங்கு தாயாருக்கு என்று தனிச் சந்நிதி கிடையாது என்பதால வச்சத்ஸ்தலம் என்று சொல்லக்கூடிய ஸ்வாமியின் திருமார்பில் தாயார் வீற்றிருக்கிறார். மேலும் அதே கருவறையில் பெருமாள் உற்சவமூர்த்தியாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சித்தருகிறார். பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே உபய தெய்வமாக ஆஞ்சிநேயர், கருடாழ்வார், பகவத்ராமானுஜர் மற்றும் ஆழ்வார்களின் தரிசனத்தைப் பெறலாம்.  இங்கு பெருமாளுக்கு தீபாராதனை காண்பித்தவுடன், மஞ்சளும்,தீர்த்தமும் கொடுப்பார்கள். அவ்வளவு அற்புதமாக இருக்கும். பெருமாள் துளசி ப்ரியர்..

இங்கு கல்யாண உற்சவம் ஞாயிறு,திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் நடைபெறும். நமக்கு திருமணநாள், அல்லது பிறந்த நாளுக்கு ஒரே ஒரு முறை பைசா கட்டிவிட்டால், போதும். பிறகு நாம் எந்த அட்ரஸ் கொடுக்கின்றமோ, அந்த முகவரிக்கு ஒவ்வொரு வருடமும் நம் விசேஷ நாட்களை முன் கூட்டியே தபாலில் தெரிவித்து சீட்டு அனுப்புவார்கள். அன்றைய நாளில் நாம் போனால், அபிஷேகம் முடிந்து பிறகு ப்ரசாதம் தருவார்கள். அந்தச் சீட்டை நம் சார்பாக, நமக்கு வேண்டியவர்களிடம் கொடுத்து அனுப்பினாலும், ப்ரசாதம் தருவார்கள்...  

இங்கு காதுகுத்து, திருமணவைபோகம், எல்லாம் நிறைய நடக்கும்.. இக்கோவிலில் 3 ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. கீழே வீர ஆஞ்சநேயர், குகை ஆஞ்சநேயர் (👈எனக்குப் பிடித்தவர்) பெருமாள் அருகில் இருக்கும் வீர ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.. 2 பக்கத்திலும் உள்ள படிக்கட்டு வழியாக  பெருமாளை தரிசிக்க செல்லலாம்..

மெயின் மண்டபத்தைத் தாண்டி, படியேறுவதற்கு முன் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருப்பார். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்.. எத்தனையோ பேரின் குறைகளை நிவர்த்தி செய்து இருக்கின்றார். நல்லபடியா, நாம வேண்டியது நிறைவேறினால், இவருக்கு 25 பைசா சூடம் ஏற்றுவார்கள். துளசி சார்த்துவார்கள்.

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை அன்று சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும், ஊர்களில் இருந்தும் மக்கள் விரதம் இருந்து, பெருமாளை தரிசிக்க வருவார்கள்.. பிறகு ஊரில் விளைந்த அரிசி,காய்கறி எல்லாம் மாட்டு வண்டியிலோ அல்லது காரிலோ எடுத்துக்கொண்டு வந்து, கோவிலை சுற்றி எங்கு இடம் இருக்கின்றதோ அங்கு சமைப்பார்கள். பிறகு “தாதன்” (பெருமாளின் அடியவர்) என்பவரை சாப்பிட முதல்ல அழைப்பார்கள்.. இவர்கள் நெற்றியில திருமண் நாமம் இட்டுருப்பார்கள். கையில் சங்கு வைத்துருப்பார்கள். பிறகு வட்டமாக இருக்கும் பெல்லில் ஓசை எழுப்புவார்கள்.  அதன் பிறகு அவர் சாப்பிட்டு முடித்தவுடன் தான் மத்தவங்க சாப்பிடுவாங்க...பொதுவாக சனிக்கிழமை மட்டும் தான் கூட்டம்  அதிகமாக இருக்கும். இப்ப புரட்டாசி மாசம்.. எல்லா நாளும் செம்மக் கூட்டமாகத் தான் இருக்கும்..

நான் இவ்வளவு காட்சிகளையும் கல்யாணத்துக்கு முன் அருகிலேயே பார்த்தவள்.

சனிக்கிழமைகளில் க்யூவில் சென்று, அர்ச்சனை செய்ய, முடி இறக்க டிக்கட் வாங்குவதற்கு,  கவுண்டர் உள்ளது.. மத்த நாட்களில் அவ்வளவாக கூட்டம் இருக்காது.. கோவிலுக்கு அருகிலேயே முடி இறக்க வசதி உள்ளது. நானும் பூ முடி கொடுத்து இருக்கேன். பெருமாள் சந்நிதிக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் மீன்களுக்கு பொரி போட்டால், நம் கர்மவினைகள் சீக்கிரம் முடிவுக்கு வரும்னு ஐதீகம்...

இக்கோவிலை கிரிவலம் செய்ய, அதிகபட்ஷம் 30 நிமிஷம் மட்டுமே ஆகும். நான் பலமுறை பண்ணியிருக்கேன்.. கோவிலைச் சுற்றி நிறைய கல்யாண மண்டபங்கள் இருக்கு.. எந்தக் கட்சியாக இருந்தாலும் வேட்பு மனு தாக்கலுக்கு முன் இங்கு வந்து, பெருமாளை தரிசனம் பண்ணி விட்டுத் தான் செல்வார்கள்..

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். இக்கோவில் கரூர், திண்டுக்கல் சாலையில் உள்ளது. கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரசுத்துறை பஸ்கள், மினி பஸ்கள் நிறைய இருக்கிறது.  ஆட்டோவும் இருக்கின்றது.

என் அனுபவத்தில் என் தாந்தோணிமலைப் பெருமாள் ப்ரத்யக்‌ஷமான தெய்வம்.. ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும் போது, மறக்காமல் இவரைப் போய் பார்த்து, நமஸ்காரம் செய்துவிட்டுத் தான் வருவேன்..

 ஏடு கொண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, கோவிந்தா.. !!!

கங்கை பூமிக்கு வந்த வரலாறு

கங்கை பூமிக்கு வந்த வரலாறு



பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி, கங்கை பூமிக்கு வந்து பாதாளத்துக்கும் பாய்ந்து அவர்களை மோக்ஷம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டான்.*

கங்கை, “அப்பா, பகீரதா! உன் நோக்கம் மிகவும் பெருமைக்குரிய ஒன்றே! நானும் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்குவாளா? அவளால் இயலாது. நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்ய முடியுமா உன்னால்? அப்படி எனில் நான் வருகிறேன்.” என்று கூறினாள்.
பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும், பூமியின் மகா பராக்கிரம சாலிகளையும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான்.
ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்தனர். பின்னர் மஹாவிஷ்ணுவை பகீரதன் வேண்ட, அவரோ, “இது ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெற்று அவர் மூலம் கங்கையை வரவழை.” என்று கூறிவிட்டார்.
பகீரதனும் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்ட, மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்தார். “பகீரதா, உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம்; உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும், உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கையை பூமிக்கும், பின்னர் பாதாளத்துக்கும் அழைத்து வர நான் உதவுகிறேன். எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன்.” என்றார்.
பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க, அவளும் மகிழ்வோடு வரச் சம்மதித்தாள். “ஹோ” வென்ற ஆரவாரமான சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்தாள் கங்கை.

ஈசன் தன் சடையை விரித்துப் பிடிக்க, கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. ஆஹா, நம் வேகம் என்ன? இந்த சடாபாரத்தின் பலம் என்ன?? இதனால் நம்மைத் தாங்க இயலுமா என்ன? என் ஆற்றலையும், வேகத்தையும் இந்தப் பிக்ஷாடனனால் தாங்க இயலுமா?” என யோசித்தாள்.
எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டம் புரிந்து கொண்டவராய், நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார் சுருட்டி. திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவிக்க, பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைய, ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான்.
அவன் முன் தோன்றிய ஈசன், கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு, கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட, கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான்.
வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் தன் நீர்க்கரங்களால் அந்த ஆசிரமத்தை முற்றிலும் உருட்டித் தள்ளிக்கொண்டு முனிவரையும் நீர்ப்பெருக்கோடு உருட்டித் தள்ள ஆயத்தமானாள்.
கோபம் கொண்ட முனிவர், கங்கையை அப்படியே தன் கைகளால் எடுத்து அள்ளிக் குடித்து ஆசமனம் செய்துவிட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும், கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான்.
அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் எலும்புகள் மற்றும் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான்.
சகரபுத்திரர்களுக்கு நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்ததாக ஐதீகம். இந்தக் கங்கையைத் தலையில் தாங்கிய ஈசனே கங்காதரர் எனப்பட்டார்.

சந்திராஷ்டமம் என்றால் என்ன ?

சந்திராஷ்டமம் என்றால் என்ன பண்ணும்? சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?




ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும், வார, ராசி, நட்சத்திர கோசார பலன்களையும், எந்த நேரத்தில் என்ன செய்யலாம்?

எந்தெந்த நேரங்களை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு ஜோதிட சாஸ்திரம் வழிகாட்டுகிறது.

அந்த வகையில் சந்திராஷ்டமம் என்ற அமைப்பு சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது.

சந்திரன் ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என்கிறோம்.

*🔯இது ஒருவருக்கு என்ன செய்யும் என்பதை காணலாம்.*

சந்திரனின் முக்கியத்துவம்
...
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும்.

 ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும்.

சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.

 அதே நேரத்தில் குரு இருக்கும் இடத்தையோ, ராகு-கேது இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை.

 இதில் இருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.

 சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் திருமண பொருத்தம் பார்க்கிறோம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.

சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோசார பலன்களை பார்க்கிறோம்.

 சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தில்தான் கோயிலில் அர்ச்சனை வழிபாடுகள் செய்கிறோம்.

சந்திரன் மூலம்தான் நம் ஜாதகத்தில் யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன.

 இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நெருக்கடியான, அவயோக, இடையூறு ஏற்படுகிறது.

 அதுதான் சந்திராஷ்டமம் ஆகும்.

நீங்கள் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும்.

 இதையே சந்திராஷ்டமம் என்கிறோம்.
 சந்திரன்+அஷ்டமம்=சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம்.

அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும்.

 மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன.

 ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள்.

 மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

கிரகப்பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.

 முக்கிய பேச்சுவார்த்தைகளை தொடங்க மாட்டார்கள். பிரயாணங்கள் செய்வது, புதிய வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பதும் நலம் தரும்.

சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.

 எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. டென்ஷன், கோபதாபங்கள், வாக்குவாதம், மறதி, படபடப்பு, சிடுசிடுப்பு உண்டாகிறது.

இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம்.

 ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும், செயல்களிலும், கருத்துக்களிலும் நிதான மற்ற நிலை உண்டாகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

*🔯சந்திரன் இருக்கும் இடம்*

சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும்.

இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது.

அதே நேரத்தில் லாப நஷ்டங்கள், நிறை குறைகள், சிந்தனை, கோபதாபம், உற்சாகம், வீண் அலைச்சல், பயணங்கள், காதல், காமம் என்று கலவையான பலன்கள் உண்டாகிறது.

நாம் பிறந்த ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை காணலாம்.

சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும் போது, மனம் அலைபாயும். சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம்.

 வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நலம் தரும்.

இரண்டாம் ராசியில் இருக்கும் போது, பணவரவு உண்டு.

 பேச்சில் நளினமிருக்கும். வேகம், விவேகம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.

மூன்றாம் ராசி: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள், உற்சாகம்.
நான்காம் ராசி:பயணங்கள், மனமகிழ்ச்சி, தாய்வழி ஆதரவு, உடல் ஆரோக்கியம்.

ஐந்தாம் ராசி: நல்ல எண்ணங்கள், ஆன்மிக பயணங்கள், தெய்வபக்தி, தெளிந்த மனம், தாய்மாமன் உதவி.

ஆறாம் ராசி: எரிச்சல், டென்ஷன், கோபதாபங்கள், மறதி, வீண்செலவுகள், காயம் ஏற்படுதல்.

ஏழாம் ராசி: பயணங்கள், உற்சாகம், நண்பர்கள் சேர்க்கை, சுற்றுலா, பெண் சுகம்.

எட்டாம் ராசியில் இருக்கும் நாளைத் தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம்.

 இந்நாளில் மவுனம் காத்தல் நல்லது. தியானம் செய்யலாம். கோயில், குளம் என்று சென்று வரலாம். கொடுக்கல், வாங்கல், வீண் விவாதங்களை தவிர்ப்பது அவசியம்.

ஒன்பதாம் ராசி: காரிய வெற்றி, நல்ல தகவல், குதூகலம், ஆலய தரிசனம், முக்கிய முடிவுகள்.

பத்தாம் ராசி: பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் ராசி: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, தரும சிந்தனை, அமைதியான மனம்.
பனிரெண்டாம் ராசி: அலைச்சல், டென்ஷன், கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள், செலவுகள்.

*உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது.*

அந்த குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

 உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அனுஷம் நட்சத்திரம் வரும் நாள் சந்திராஷ்டம
தினமாகும்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம தினத்தை எளிதில் தெரிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரம் வரும் நாளே சந்திராஷ்டம தினமாகும்.

*🔯பிறந்த நட்சத்திரம் - சந்திராஷ்டம நட்சத்திரம்*

அஸ்வினி - அனுஷம்
பரணி - கேட்டை
கிருத்திகை - மூலம்
ரோகிணி - பூராடம்
மிருகசீரிஷம் - உத்திராடம்
திருவாதிரை - திருவோணம்
புனர் பூசம் - அவிட்டம்
பூசம் - சதயம்
ஆயில்யம் - பூரட்டாதி
மகம் - உத்திரட்டாதி
பூரம் - ரேவதி
உத்திரம் - அஸ்வினி
அஸ்தம் - பரணி
சித்திரை - கிருத்திகை
சுவாதி - ரோகிணி
விசாகம் - மிருகசீரிஷம்
அனுஷம் - திருவாதிரை
கேட்டை - புனர்பூசம்
மூலம் - பூசம்
பூராடம் - ஆயில்யம்
உத்திராடம் - மகம்
திருவோணம் - பூரம்
அவிட்டம் - உத்திரம்
சதயம் - அஸ்தம்
பூரட்டாதி - சித்திரை
உத்திரட்டாதி - சுவாதி
ரேவதி - விசாகம்.
⚜⚜⚜⚜