வியாழன், 7 செப்டம்பர், 2023

11. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினொன்றாவது ஆச்சார்யர்...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பதினொன்றாவது ஆச்சார்யர்...

11. ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்



பதினொன்றாவது ஆச்சார்யர் [கி.பி. 127 - 172]

ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கன்னட அந்தண மரபினர். இவரின் தந்தையின் பெயர் ''உஜ்வல பட்டர்''. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''ஈச்வர வடு''. பல யாத்திரை சென்ற இவர் சந்திர மௌலீஸ்வர பூஜையை கிராமம் கிராமமாக செய்துள்ளார். சிவ அத்வைத நெறியில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். சந்திர மௌலீஸ்வர பூஜை செய்வதில் ஆளாதி பிரியம் கொண்டவர்.

இவர், கி.பி.172 ஆம் ஆண்டு, விரோதி கிருது வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷ தசமி திதியில் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார்.

இவர் 45 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐--------------------------------------------

10. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... பத்து...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

10. ஸ்ரீ சுரேஸ்வரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்



பத்தாவது ஆச்சார்யர் [கி.பி. 69 - 127]

இரண்டாம் ஸ்ரீ சுரேஸ்வரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர பிராம்மணர். கொண்காணத்து மஹாபலேஸ்வரம் என்ற ஊரில் வசித்து வந்த ''ஈஸ்வர பண்டிதர்'' என்பவருக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர்''மகேஸ்வர்''.

இவரும் பல ஆண்டுகள் வட இந்தியா முழுவதும் சந்திர மௌலீஸ்வர பூஜையோடு விஜய யாத்திரைகள் மேற்கொண்டு மக்களுக்கு அருள் பாலித்தார். இவர் சென்ற ஊர்களில் எல்லாம் வேத நெறியைப் பரப்ப அரும்பாடுபட்டார். இருதியில் வட இந்தியா முழுவது யாத்திரையை முடித்துக் கொண்டு காஞ்சிபுரம் வந்தடைந்தார்.

இவர் அக்ஷய வருடம், கி.பி. 127 ஆம் ஆண்டு, ஆனி மாதம், சுக்ல பக்ஷம், மூல நட்சத்திரத்தில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 58 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐---------------------------------------------

9. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... ஒன்பது...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

9. ஸ்ரீ கிருபா சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்....



ஒன்பதாம் ஆச்சார்யர் [28 -- 69 கி.பி]

ஸ்ரீ கிருபா சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஆந்திர தேசத்து பிராமண குலத்தை சேர்ந்தவர். "ஆத்மன ஸோமயாஜி" என்பவரின் மகனாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் ''கங்கையா''. ''கர்க்கா'' என்பது குல வழிப்பட்டம்.

இவருடைய பீடாதிபத்தியத்தை ஸ்ரீ காமகோடி பீடத்தின் பொற்காலம் என்று குறிப்பிடலாம். ஸ்ரீ ஆதிசங்கரர் வகைப்படுத்திய ஆறு சமயங்களும் பரவப் பாடுபட்டவர். ''தாந்திரீய'' வழிபாட்டு முறைகளை வேரறுத்தார்.

காலத்தால் மாசு சூழ்ந்த சநாதன தர்ம நெறியை இவர் தூய்மைப்படுத்தி பெருமை சேர்த்தார். ஞான மார்க்கத்தை, பக்தி நெறியை மக்களுக்கு எடுத்துரைத்தார். பக்தி மார்க்கத்திலும் இறைவனை அடைய முடியும் என்று காட்டிய நாயன்மார்கள், ஆழ்வார்களுக்கு முன்னோடி என்ன தக்கார்.

நம் மதத்தின் புனிதத்தை  மீட்டெடுத்தவர். ஸ்ரீ ஆதி சங்கரரின் படைப்புக்களைப் புதுப்பித்ததற்க்கு இவரே காரணம்! முக்கிய இறை மூர்த்தங்களை பூஜை செய்ய  தூய்மையான வழி, நெறி முறைகளை உருவாக்கி பக்திக்கான வழி காண்பித்தார்.

இவ்வழி பாட்டு முறைகளையே பின்னாளில் வந்த சைவ, நாயன்மார்களும் பின் பற்றினார்கள்.

கோவில்கள் செழிப்பாக இருப்பதற்காக காசி, காஞ்சி, திருவொற்றியூர், திருவானைக்காவல் ஆகிய ஸ்தலங்களில் யந்திர பிரதிஷ்டை செய்து அதன் சக்திகளை அதிகப்படுத்தி சிறப்பாக நடக்க வழி முறைகளை செய்துள்ளார்.

இவர் கி.பி 69 ஆம் ஆண்டு, விபவ வருடம், கார்த்திகை மாதம், கிருஷ்ண பக்ஷம், திருதியை திதியில், மிருகசிரீர்ஷ நக்ஷத்திரத்தில் விந்திய மலைப்பகுதியில் சித்தி அடைந்தார்.

இவர் 40 ஆண்டுகள் வரை பீடத்தில் அலங்கரித்தார்.

மீண்டும் நாளை தொடர்வோம்...
-------------‐---------------------------------------------

8. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... எட்டு...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
 
8. ஸ்ரீ கைவல்ய ஆனந்த யோகேந்திர சரஸ்வதி



எட்டாம் ஆச்சார்யார் [55 கி.மு - 28 கி.பி]

ஸ்ரீ கைவல்ய ஆனந்த யோகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆந்திர தேசத்து அந்தண குலத்தவர். திருப்பதியில் பிறந்தார். ''த்ரைலிங்க சிவய்யா'' என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்! பெற்றோர் வைத்த பெயர் "மங்கண்ணா".  இவரை ''சச்சிதானந்தர்'' எனவும் ''கைவல்யயோகி'' என்றும் அழைப்பார்கள். இவரின் அடுத்த வாரிசாக ஸ்ரீ கிருபா சங்கரரை நியமித்தார்.

இவர் கி.பி. 28 சர்வதாரி ஆண்டு தை மாதப் பிறப்பன்று, சுக்ல பக்ஷம், பஞ்சமி, சஷ்டி திதியில் பூர்வ பத்ர பாதா நக்ஷத்திரத்தில் காஞ்சி ''மண்டன மிச்ரர்'' அக்ரஹாரத்தில் ''புண்ணிய ரஸா'' என்னும் பகுதியில் சித்தி அடைந்தார்.

இவர் 83 ஆண்டுகள் வரை பீடத்தில் அலங்கரித்தவர்.
-------------‐---------------------------------------------

7. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... ஏழு...

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

7. ஸ்ரீ ஆனந்த ஞானேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...



ஏழாவது ஆச்சார்யர் கி.மு [124 -- 55]

ஸ்ரீ ஆனந்த ஞானேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சேர நாட்டில் வாழ்ந்த "சூரிய நாராயணமஹி" என்பவருக்கு மகனாக பிறந்தார். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''சின்னையா''. இவர் சக்தியை வழிபட்டு, சக்தி உபாசகராக இருந்தார்.

வெள்ளிக்கிழமைகளில் "கௌரி தேவிக்கு" விசேஷ பூஜை செய்வார். அம்பிகையின் அருளால் இலக்கண, இலக்கிய நூல்களைப் பற்றிய மிகுந்த புலமையும்  அறிவாற்றலும் கொண்டவர்.

"ஆதிசங்கரரின் சங்கர பாஷ்யம்" என்ற நூலுக்கும், "சுரேஸ்வராச்சார்யாவின் வார்த்திகா" என்ற நூலுக்கும் எளிய முறையில் உரை நூல்கள் எழுதினார். அதற்க்கு ''ஆனந்த கிரி டீகா'' என்று பெயருடன் புத்தகமாக இருக்கிறது.

இவர் வட தேசம் முழுவதும் விஜய யாத்திரை புரிந்தார். வரும் வழியில் ஆந்திராவில் உள்ள "ஸ்ரீசைலத்தில்" கி.மு 55 ஆம் ஆண்டு, குரோதன வருடம் வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், அவிட்டம் நக்ஷத்திரத்தில், நவமி திதியில், "ஸ்ரீ சைலத்தில்" சித்தி அடைந்தார்.

இவர் 69 ஆண்டுகள் வரை பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐---------------------------------------------

6. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா... ஆறு.....

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

6. ஸ்ரீ சுத்தானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்....

ஆறாவது ஆச்சார்யர் [கி.மு 205
-124]



ஸ்ரீ சுத்தானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஒரு மருத்துவராக பணியாற்றினார். இவர் தந்தையின் பெயர் "பார்வு". "பார்வு" க்கு மகனாக பிறந்தவர் தான் "சுத்தானந்தேந்திர்". இவர்கள் வேதாரண்யத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வந்த இவர்கள் ஒரு திராவிட பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் "விஸ்வநாதன்". இவரது சந்யாச நாமம் "சுத்தானந்தேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்". ஹிந்து மதம் வளரப் பெரும் பாடுபட்டவர். ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர பூஜையை பெரும் ஈடுபாட்டோடு செய்து வந்தார்.

இவர் கி.மு. 124 ஆம் ஆண்டு, நள வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷத்தில், கார்த்திகை நக்ஷத்திரத்தில் சஷ்டி திதியில், காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்.

இவர் 81 ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார். நாளை தொடர்வோம்...
-------------‐---------------------------------------------

திங்கள், 4 செப்டம்பர், 2023

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி:

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதீச்வர
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி
அஷ்டோத்தர சத நாமாவளி:



1. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிச்வராய நம:
2. ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:
3. ஓம் ஸன்யாஸாச்ரம சிகராய நம:
4. காஷாய தண்ட தாரிணே நம:
5. ஓம் ஸர்வபீடாபஹாரிணே நம:
6. ஓம் ஸ்வாமிநாத குரவே நம:
7. ஓம் கருணாஸாகராய நம:
8. ஓம் ஜகதாகர்ஷண சக்திமதே நம:
9. ஓம் ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:
10. ஓம் பக்த பரிபாலக ச்ரேஷ்டாய நம:
11. ஓம் தர்ம பரிபாலகாய நம:
12. ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:
13. ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:
14. ஓம் ஸ்ரீ சிவசக்தி ஸ்வரூபகாய நம:
15. ஓம் பக்த ஜன ப்ரியாய நம:
16. ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:
17. ஓம் காஞ்சி க்ஷேத்ர வாஸாய நம:
18. ஓம் கைலாஸ சிகர வாஸாய நம:
19. ஓம் ஸ்வதர்ம பரிபோஷ காய நம:
20. ஓம் சாதுர் வர்ண்ய நம:
21. ஓம் லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:
22. ஓம் ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:
23. ஓம் ஸர்வ பாப ஹராய நம:
24. ஓம் தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:
25. ஓம் பக்தார்ப்பித தன ஸ்வீகர்த்ரே நம:
26. ஓம் ஸர்வோபநிஷத் ஸாரஞ்ஞாய நம:
27. ஓம் ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:
28. ஓம் ஸர்வ லோக பிதாமஹாய நம:
29. ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:
30. ஓம் ப்ரம்மண்ய போஷகாய நம:
31. ஓம் நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:
32. ஓம் ருத்ராக்ஷ கிரிட தாரிணே நம:
33. ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:
34. ஓம் ஸர்வக்ஞாய நம:
35. ஓம் ஸர்வ சராசர வ்யாபகாய நம:
36. ஓம் அநேக சிஷ்ய பரிபாலகாய நம:
37. ஓம் மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:
38. ஓம் அபய ஹஸ்தாய நம:
39. ஓம் பயாபஹாய நம:
40. ஓம் யக்ஞ புருஷாய நம:
41. ஓம் யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:
42. ஓம் யக்ஞ ஸம்பனாய நம:
43. ஓம் யக்ஞ ஸஹாயகாய நம:
44. ஓம் யக்ஞ பலதாய நம:
45. ஓம் யக்ஞ ப்ரியாய நம:
46. ஓம் உபமான ரஹிதாய நம:
47. ஓம் ஸ்படிக துள்ஸீருத்ராக்ஷஹார தாரிணே நம:
48. ஓம் சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:
49. ஓம் ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய
நம:
50. ஓம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:
51. ஓம் ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்த் யவஸ்தாதீதாய நம:
52. ஓம் கோடி ஸுர்யதுல்ய தேஜோமயசரீராய நம:
53. ஓம் ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:
54. ஓம் அச்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:
55. ஓம் குருபாதுக பூஜா துரந்தராய நம:
56. ஓம் கனகாபிக்ஷிக்தாய நம:
57. ஓம் ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:
58. ஓம் ஸர்வஜீவ மோக்ஷதாய நம:
59. ஓம் மூகவாக்தான நிபுணாய நம:
60. ஓம் நேத்ர தீக்ஷாதானாய நம:
61. ஓம் த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:
62. ஓம் கான ரஸஞ்ஞாய நம:
63. ஓம் ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:
64. ஓம் ஸகலகலா ஸித்திதாய நம:
65. ஓம் சாதுவர்ண்ய பூஜிதாய நம:
66. ஓம் அநேகபாஷா ஸ்ம்பாஷண கோவிதாய நம:
67. ஓம் அஷ்டஸித்திப்ரதாயகாய நம:
68. ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம:
69. ஓம் நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:
70. ஓம் ப்ரார்த்தனாமாத்ர ஸுலபாய
71. ஓம் பாதயாத்ரா ப்ரியாய நம:
72. ஓம் நானாவிதமத பண்டிதாய நம:
73. ஓம் சுருதி ஸ்ம்ருதி புராணஞ்ஞாய நம:
74. ஓம் தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:
75. ஓம் ச்ரவணான்ந்தகர கீர்த்தயே நம:
76. ஓம் தர்சனான்ந்தாய நம:
77. ஓம் அத்வைதான்ந்த பரிதாய நம:
78. ஓம் அவ்யாஜ கருணாமூர்த்தயே நம:
79. ஓம் சைவ்வைஷ்ணவாதி மான்யாய நம:
80. ஓம் சங்க ராசார்யாய நம:
81. ஓம் தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:
82. ஓம் வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:
83. ஓம் ராமகதா ரஸிகாய நம:
84. ஓம் வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ்
ப்ரவர்த்தகாய நம:
85. ஓம் ஹ்ருதய குஹாசயாய நம:
86. ஓம் சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:
87. ஓம் கேதாரேச்வர நாதாய நம:
88. ஓம் அவித்யா நாசகாய நம:
89. ஓம் நிஷ்காம கர்மோபதேசகாய நம:
90. ஓம் லகுபக்திமார்க்கோபதேசகாய நம:
91. ஓம் லிங்கஸ்வரூபாய நம:
92. ஓம் ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:
93. ஓம் காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:
94. ஓம் ஜிதேந்த்ரியாய நம:
95. ஓம் சரணாகத வத்ஸலாய நம:
96. ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:
97. ஓம் டம்ருகநாத விநோதாய நம:
98. ஓம் வ்ருஷபாருடாய நம:
99. ஓம் துர்மதநாசகாய நம:
100. ஓம் ஆபிசாரிகதோஷ ஹர்த்ரே நம:
101. ஓம் மிதாஹாராய நம:
102. ஓம் ம்ருத்யுவிமோசன சக்தாய நம:
103. ஓம் ஸ்ரீசக்ரார்ச்சன தத்பராய நம:
104. ஓம் தாஸாநுக்ஹ க்ருதே நம:
105. ஓம் அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:
106. ஓம் ஸர்வலோக க்யா தசீலாய நம:
107. ஓம் வேங்கடேச்வர சரணபத்மஷட்பதாய நம:
108. ஓம் ஸ்ரீத்ரிபுரசுந்தரி ஸ்மேத ஸ்ரீ சந்திர மௌலீஸ்வர
பூஜாப்ரியாய நம:

மஹாஸ்வாமி பாத அஷ்டோத்தர சதநாமாவாளி ஸம்பூர்ணம்.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

5. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... 5. ஐந்தாவது ஆச்சார்யர்

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

5. ஸ்ரீ ஞானாநந்தரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

ஐந்தாவது ஆச்சார்யர் [கி.மு. 268 - 205]



ஸ்ரீ ஞானாநந்தரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், சோழ நாட்டில் உள்ள "மங்கலம்" என்ற ஊரில் பிறந்தார். திராவிட அந்தண குலத்தில் பிறந்தவர். இவர் தந்தையின் பெயர் "நாகேசன்". பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''ஞானோத்தமன்''. தர்க்க சாஸ்திரத்தில் நிபுணர். ஸ்ரீ காமகோடி பீடத்தின் இர‌ண்டாவது ஆச்சார்யரான "ஸ்ரீ சுரேஸ்வரர்" இயற்றிய ''நைஷ்கர்ம்ய சித்தி'' என்ற நூலுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். அதன் பெயர் "சந்திரிகை". அந்த நூலில் இவர் "ஸ்ரீ சுரேஸ்வரரையும்", "ஸ்ரீ சர்வஜ்ஞாத் மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளையும்" விரிவாக போற்றி எழுதியுள்ளார்.

இவர் கி.மு. 205 ஆம் ஆண்டு, மன்மத வருடம், மார்கழி மாதம், சுக்லபக்ஷ பஞ்சமியில் திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்.

இவர் 63 ஆண்டுகள் ஆண்டுகள் வரை பீடத்தில் இருந்தார்.
-------------‐---------------------------------------------

4. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா... 4. நான்காவது ஆச்சார்யர்

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

4. ஸ்ரீ சத்ய போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்...

நான்காவது ஆச்சார்யர் [கி.மு. 364 - 268]




இவர் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் குரு ரத்தினமான ஸ்ரீ சத்ய போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கேரளத்தில், அமராவதி நதிக்கரையில் வாழ்ந்தவர். இவரின் தந்தையின் பெயர் "தண்டவசரமன்". வேதமோதும் அந்தண மரபினர். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் ''பலிந்யாசர்''. ஸ்ரீ சங்கர பாஷ்யங்களுக்கு "வாரத்திகங்கள்" இயற்றிய இவர் ''பதகசகம்'' என்னும் நூலை இயற்றினார். கால வெள்ளத்தில் இவற்றை எல்லாம் பாதுகாக்க முடியாம‌ல் போய் விட்டது.

இவர் கி.மு. 268 ஆம் ஆண்டு, நந்தன வருடம், வைகாசி மாதம், கிருஷ்ண பக்க்ஷம் அஷ்டமி திதியில் காஞ்சியில் சித்தி அடைந்தார்....

இவர் 96 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


3. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... 3. மூன்றாவது ஆச்சார்யர்

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

3. ஸ்ரீ சர்வக்ஞாத்மநேந்த்ர சரஸ்வதி.

மூன்றாவது ஆச்சார்யர் [கி.மு. 407 - 364]
 


 

இவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஸ்ரீ சங்கரர் மஹா குருவாகப் பொறுப் பேற்றார். அதாவது சர்வஞான பீடாரோஹணம் கொண்டார். அப்போதே சிறுவனான இவரை அழைத்து அடுத்து பொறுப்புக்கு வர வேண்டியவராக இவரையும் இணைத்துக் கொண்டார். இவருக்கு தானே சர்வக்ஞாத்மநேந்த்ர சரஸ்வதி என்றும் பெயரிட்டார்! சுரேஸ்வராசார்யாவின் மேலான வழிகாட்டுதலிலும், கற்பித்தலிலும் இவர் சகலமும் அறிந்தார்.  

சங்கர பகவத் பாதாள் எழுதிய சங்கர ப்ரம்ம சூத்திர பாஷ்யத்துக்கு 1267 அற்புத சுலோகங்களால் விளக்கம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....

3. ஸ்ரீ சர்வக்ஞாத்மநேந்த்ர சரஸ்வதி.

மூன்றாவது ஆச்சார்யர் [கி.மு. 407 - 364]
 


 

இவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது ஸ்ரீ சங்கரர் மஹா குருவாகப் பொறுப் பேற்றார். அதாவது சர்வஞான பீடாரோஹணம் கொண்டார். அப்போதே சிறுவனான இவரை அழைத்து அடுத்து பொறுப்புக்கு வர வேண்டியவராக இவரையும் இணைத்துக் கொண்டார். இவருக்கு தானே சர்வக்ஞாத்மநேந்த்ர சரஸ்வதி என்றும் பெயரிட்டார்! சுரேஸ்வராசார்யாவின் மேலான வழிகாட்டுதலிலும், கற்பித்தலிலும் இவர் சகலமும் அறிந்தார்.  

சங்கர பகவத் பாதாள் எழுதிய சங்கர ப்ரம்ம சூத்திர பாஷ்யத்துக்கு 1267 அற்புத சுலோகங்களால் விளக்கம் எழுதினார். அதன் பெயர் ''சம்க்ஷேப சரீரகா'' என்பதாகும். சுரேஸ்வராசார்யாருக்குப் பின் பொறுப்பேற்ற இவர் வெகு காலம் மடத்தை நிர்வகித்து வந்தார்.

இவர் கி.மு. 364 ஆம் ஆண்டு, நள வருடம்,  வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், ஏகாதசி திதியில், அஸ்வினி நக்ஷத்திரத்தில், காஞ்சிபுரத்தில்  சித்தி அடைந்தார்....

இவர் 43 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐-------------------------------------------------------------------------------------------------------------------------------------------,,,------,-,,,,,-,----

எழுதினார். அதன் பெயர் ''சம்க்ஷேப சரீரகா'' என்பதாகும். சுரேஸ்வராசார்யாருக்குப் பின் பொறுப்பேற்ற இவர் வெகு காலம் மடத்தை நிர்வகித்து வந்தார்.

இவர் கி.மு. 364 ஆம் ஆண்டு, நள வருடம்,  வைகாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், ஏகாதசி திதியில், அஸ்வினி நக்ஷத்திரத்தில், காஞ்சிபுரத்தில்  சித்தி அடைந்தார்....

இவர் 43 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐-------------------------------------------------------------------------------------------------------------------------------------------,,,------,-,,,,,-,----

2. ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா.... 2. இரண்டாவது ஆச்சார்யர் சுரேஷ்வராச்சாராயர்....

 2. இரண்டாவது ஆச்சார்யர் சுரேஷ்வராச்சாராயர்....



 [கி.மு. 477 - 407]

ஆதிசங்கரர் மற்றும் சுரேஷ்வர் இந்த இரண்டு ஆசார்யர்களுக்கு மட்டும் இவர்கள் பெயர் மட்டுமே இருக்கும். மூன்றாவது ஆசார்யர்கள் பெயரோடு இந்திர சரஸ்வதி என்ற பட்டத்தோடு அவர்களின் பெயர் வரும் என்பது கூடுத‌ல் தகவல்....

[முதல் குருவான ஆதி சங்கராச்சார்யர் ஐப்பசி மாதம், தசமி கிருஷ்ண பக்க்ஷம்
பூர்வபல்குனி நக்ஷத்ரம், தினத்தில் காஞ்சியில் முக்தியடைந்தார்....]

ஸ்ரீ சுரேஸ்வரருடைய பூர்வீக நாமம் மண்டனமிச்சர். இவர் நர்மதா நதிக்கரையில் மாகிஷ்மதி என்ற சிற்றூரில் வசித்தார். இவரை பிரம்மாவின் அம்சம் என்பார்கள். இவருடைய மனைவி ஸரசவாணி, ஸரஸ்வதின் அம்சம். இவளும் தன் கணவரைப் போலவே வேத, வேதாந்தங்களில் புலமை மிக்கவள். மிச்ரரின் ஞானத்தை அறிந்த ஆதிசங்கரர் தனக்கு பிறகு அவரே பீடத்தை அலங்கிக்கக் கூடியவர் என தீர்மானித்து இல்லறத்தில் இருக்கும் அவரை துறவு வாழ்க்கைக்குத் திரும்ப அவர் இல்லம் தேடி வந்தார்.

அந்த காலத்தில் ஒருவர், ஒருவரை தன்பால் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்றே வாதத்திற்கு அழைப்பது வழக்கம். அவ்விதமே மிச்ரரை வாதத்திற்கு அழைத்தார். ஆதிசங்கரர். தோற்றவர் வென்றவர் மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்பது நிபந்தனை. இரண்டு மலர் மாலைகளைக் கொண்டு வந்து இருவர் கழுத்திலும் சூட்டி எவர் மாலை வாடுகிறதோ அவரே தோற்றவர் என்று கூறி அவர்களுக்கு நடுவராக இருந்தாள் மிச்ரரின் மனைவி ''சரஸவாணி''. இவரும் சளைக்காமல் பல நாள் வாதப்போர் நடத்தினர். மிச்ரர் கழுத்திலுள்ள மாலை வாடத் தொடங்கியது. கணவனில் பாதி மனைவி தன்னையும் வாதத்தில் வென்றாலே பூரண வெற்றி என்று ''ஸரசவாணி'' தர்க்கம் செய்தால்.

அவரையும் தர்க்க சாஸ்திர படி ஜெயித்தார் சங்கரர். நிபந்தனை படி மிச்ரர் சந்நியாச ஆஸ்ரமத்தை ஏற்றார். ஸ்ரீ சுரேஸ்வரர் என்ற தீட்க்ஷா நாமத்தை அவருக்கு அளித்தார் சங்கரர். ஆதிசங்கரர் சித்தியடைந்த பின் ஸ்ரீ சுரேஸ்வரர் அனைத்து பீடங்களுக்கும் மேலாளராக இருந்தார. இவர் அத்வைத்த நூல்களை எழுதினார்.

சங்கரரின் ''ப்ரஹதாரண்யக உபநிஷத்'' நூலுக்கு வார்திகா என்ற விளக்க உரை நூல் செய்தார். வேதாந்த வியாக்ஞானங்களுக்கு ''நிஷிகாம்ய சித்தி'' என்ற நூலும் எழுதினர்! பல ஆண்டுகள் மடத்தை நிர்வகித்த வந்தார். ஏற்கெனவே சங்கரரால் அங்கீகரிக்கப்பட்ட ''சர்வஞாத்மநேன்த்ர சரஸ்வதி ஸ்வாமிகளாக'' காம கோடியின் அடுத்த வாரிசாக்கினார். இந்த மூன்றாவது ஆச்சார்கள் முதல் இந்திர சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

ஶ்ரீ சுரேஷ்வரருக்கு ஏற்பட்ட உடல் உபாதையை சரி செய்ய சங்கரர் அச்வினி தேவதைகளை அழைத்தார். அவர்களும் வந்து சிகிச்சை தந்ததார்கள். இதனால் கோபமுற்றான் இந்திரன். இந்திரனின் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களை தண்டிக்க வஜ்ராயுதத்தை பிரயோகம் செய்ய துணிந்த இந்திரனை பகவத்பாதாள் தடுத்து நிறுத்தி செயலிழக்க வைத்தார். தவறை உணர்ந்த இந்திரன் மன்னிப்பு கேட்டு, தனது பட்டமான இந்திர என்பதை காமகோடி ஆசார்ய பரம்பரைக்கு அளித்ததாக மஹாபெரியவாளே  சொல்லியிருக்கார்கள். ஸர்வக்ஞ பீடாரோஹணத்தால் சரஸ்வதி தன் பெயரை அளிக்க இந்திர ஸரஸ்வதி என்று உருவானது. அதனால் தான் இந்த பீடத்தில் வருபவர்களின் படிப்பு, பல மொழி பேசுபவர்களா இன்றும் திகழ்கின்றார்கள்.

ஸ்ரீ சுரேஸ்வரர் என்ற தீட்சா நாமத்தை அவருக்கு அளித்தார் சங்கரர். ஸ்ரீ ஆதிசங்கரர் சித்தியடைந்த பின் ஸ்ரீ சுரேஸ்வரர் அனைத்து பீடங்களுக்கும் மேலாளராயிருந்து நிர்வகித்து வந்தார். இவர் பல அத்வைத நூல்களை எழுதினார்.

இவர் கி.மு. 407 ஆம் ஆண்டு வைகாசி மாதம், சுக்ல பக்க்ஷம், துவாதசி திதி அன்று காஞ்சிபுரத்தில் சித்தி அடைந்தார்.

இன்றும் காஞ்சி சங்கர மடத்தில் இவருக்கு தனி சன்னதியும், திருவுர்வமும் உள்ளது.

இவர் 70 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்தார்.
-------------‐--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------