ஞாயிறு, 3 ஜனவரி, 2021

திருச்செந்தூர் திருப்புகழ்


திருச்செந்தூர் திருப்புகழ் - ஏவினை நேர் விழி
 
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
       ஏதனை மூடனை நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
       ஏழையை மோழையை  அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
       வாய்மையி லாதனை யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
       வாழ்வுற ஈவது மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
       நாரத னார்புகல் குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
       நாயக மாமயி  லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
       தேன்மொழி யாள்தரு சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
       சீரலை வாய்வரு பெருமாளே.
 
வாழ்வு நன்கு அமைய ஒரு வேண்டுகோள் துதி இது அம்பு போன்ற கண்களை உடைய விலை மாதரை விரும்பும் கேடனை,மூடனை,கல்வி இல்லாதவனை,பிணியால் பீடிக்கப்பட்டவனை,இகழாமல் சிலம்பணிந்த உன் திருவடிகளில் உற்ற பெரு வாழ்வைத் தந்து அருளும் ஒரு நாளும் உண்டோ?நாரதர் எடுத்துரைத்த வள்ளி நாயகியை நாடிச் சென்று அவளைக் கூடிய வீரனே.மயில் வாகனனே.பராபரியான பார்வதி பெற்ற சிறியவனே. உயர்ந்த சோலைகளின் நிழலில் விளங்கும் சீரலைவாயில் உறைகின்ற பெருமாளே நான் வாழ்வுற உன் திருவடிகளை தரும் நாள் ஒன்று உண்டோ?
 
 
பதம் பிரித்து உரை
ஏவினை நேர் விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறி பேணா
 
ஏவினை நேர் = அம்பை நிகர்க்கும் விழி மாதரை = கண்களை உடைய விலை மாதரை மேவிய = விரும்பும் ஏதனை = கேடனை மூடனை = முட்டாளாகிய என்னை நெறி பேணா = நல்லொழுக்கம் விரும்பாத.
 
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு
ஏழையை மோழையை அகலா நீள்
 
ஈனனை = இழிந்தோனை வீணனை = வீணாகக் காலம் கழிப்பவனை ஏடு எழுதா = படிப்பு இல்லாத முழு ஏழையை= முழு ஏழையை மோழையை= மடையனை அகலா நீள் = விட்டு நீங்காத நீண்ட
 
மா வினை மூடிய நோய் பிணியாளனை
வாய்மை இலாதானை இகழாதே
 
மாவினை மூடிய = பெரிய வினை மூடியுள்ள நோய் பிணியாளனை = நோயும், பிணியும் கொண்டவனை வாய்மை இலாதனை = உண்மை இல்லாதவனை இகழாதே = இகழ்ந்து ஒதுக்காமல்.
 
மா மணி நூபுர சீதள தாள் தனி
வாழ்வு உற ஈவதும் ஒரு நாளே
 
மா மணி நூபுரம் = சிறந்த மணியாலாகிய சிலம்பணிந் துள்ள சீதள = குளிர்ந்த தாள் = (உன்) திருவடிகளை தனி வாழ்வு = முத்தி இன்பத்தை உற = நான் பெற ஈவது ஒரு நாளே= (எனக்குத்) தந்து உதவும் ஒரு நாளும் உண்டோ?
 
நாவலர் பாடிய நூல் இசையால் வரு
நாரதனார் புகல் குற மாதை
 
நாவலர் = புலவர்கள் பாடிய = பாடியுள்ள நூல் இசையால்
வரும் = நூல்களில் புகழப்பட்ட நாரதனார் புகல் = நாரத முனிவர் எடுத்துரைத்த  குற மாதை = குறப்பெண்ணாகிய வள்ளியை.
 
நாடியே கான் இடை கூடிய சேவக
நாயக மா மயில் உடையோனே
 
நாடியே = நாடிச் சென்று கான் இடை = காட்டில் கூடிய சேவக = அவளைக் கூடிய வீரனே நாயக = நாயகனே மா மயில் உடையோனே = சிறந்த மயில் வாகனனே.
 
தேவி மநோமணி ஆயி பராபரை
தேன் மொழியாள் தரு சிறியோனே
 
தேவி மநோமணி ஆயி பராபரை = தேவி, மனோமணி, ஆயி, பராபரை (ஆகிய பார்வதி) தேன் மொழியாள் = தேன் போலும் மொழியையுடையவள் தரு = பெற்ற சிறியோனே= இளையவனே.
 
சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ்
சீரலை வாய் வரு பெருமாளே.
 
சேண் உயர் = ஆகாயம் வரை உயர்ந்தசோலையின் நீழலிலே திகழ் = சோலைகளின் நிழலில் விளங்கும் சீரலை வாய் = திருச்செந்தூரில் வரும் = எழுந்தருளியிருக்கும் பெருமாளே = பெருமாளே.

நாரதனார் புகல் குற மாதை
வேடுவர்களின் அரசனும் முற்பிறவியில் தவம் பல செய்தவனுமாகிய நம்பி குலதெய்வமாக விளங்கிய முருகனை வழிபட்டு வந்தான்.பல ஆண் குழந்தைகள் அவர்களுக்கு இருந்தனர்.அவனுக்கும் அவன் மனைவிக்கும் பெண் மகவு இல்லையே என்ற குறை இருந்தது.கணவன் மனைவி இருவரும் பெண் குழந்தை வரம் வேண்டி பல விரதங்களை மேற் கொண்டார்கள்.

கண்வ மகரிஷியின் சாபத்தினால் விஷ்ணுவும் லக்ஷ்மியும் பூவுலகில் முனிவராகவும் மானாகவும் பிறந்தார்கள்.முனிவர்,மலையடிவாரத்தில் தவம் புரிந்தார்.மானாகப் பிறந்த மகாலக்ஷ்மி அம்மலையருகே உலவி வந்தது.ஒருநாள் முனிவர் தவம் கலைந்து தம் அருகே இருந்த அழகிய மானைக் கண்டதும் மோகம் கொண்டார்.
 
முருகப்பெருமானை மணம் புரிந்து கொள்வதற்காகவே சுந்தரவல்லி என்ற பெயர் கொண்ட விஷ்ணுபுத்திரி தவம் செய்தாள். முனிவர் மான்மீது மோகம் கொண்டதும் அம்மானின் வயிற்றில் சுந்தரவல்லி கருவானாள். முனிவரின் மோகப் பார்வையால் மான் கருத்தரித்து பெண்மகவை ஈன்றது.உடனே மானின் சாபம் நீங்கப்பெற்று மகாலக்ஷ்மி வைகுந் தத்துக்குச் சென்றாள்.
 
வனத்திலே குழந்தை அழுது கொண் டிருந்தது.நம்பிராஜன் தம் வீரர்களுடன் தினைப்புனத்தைப் பார்வையிட வந்த பொழுது குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிச் சென்றான்.வள்ளிக் கொடிக்கு அருகிலே மகாலக்ஷ்மியைப் போன்ற பேரழகுடன் பெண்குழந்தை அழுது கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்ந்தது.
 
“ஆகா முருகப்பெருமானின் அருளே அருள்.”என்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான்.ஓடோடிச் சென்று குழந்தையை அள்ளியணைத்தான்.வள்ளிக்கொடியருகே கிடந்ததால் ‘வள்ளி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள் நம்பியும் அவன் மனைவியும்.வள்ளி சீரும் சிறப்புமாக வளர்ந்தாள்.வேடுவர்களின் குலவழக்கத்தின் படி வள்ளிக்கு பதினான்கு வயதாகும்போது அவளை தினைப்புனம் காப்பதற்காக அனுப் பினார்கள். தினைப்புனத்தில் உயரமான பரண் மீது தோழியருடன் வள்ளியம்மை நின்ற வண்ணம், ‘ஆலோலம்’ பாடி கிளி, கௌதாரி காடை போன்ற பறவை இனங்களை விரட்டினாள்.கொடிய மிருகங்கள் வராமல் விரட்டினாள். பறவைகளோ வள்ளியின் ஆலோலப் பாட்டின் இனிமையிலும் அவள் அழகிலும் மயங்கி திரும்பத் திரும்ப தினைப்புனத்திற்கு வந்தன.வள்ளி ‘ஆலோலம்’ பாடியபடியே முருகப்பெருமானை உளமாரப் பூஜித்து வந்தாள். கலிதீர்க்க கந்தன் என்று வருவாரோ என்று வழி பார்த்திருந்தாள்.
 
வள்ளியின் பிறப்பின் பின்னணியை அறிந்து கொண்ட நாரதர் திருத்தணிகைக்குச் சென்றார். தணிகைவேலனைத் தரிசித்து வள்ளியின் தணியாத ஆவலை எடுத்துரைத்தார்.அவளை விரைவில் மணம் புரிந்து கொள்ள வேண்டினார்.
 
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8
 
தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன.
இசைக் கருவிகள் ஒலிக்க வெண்சங்கும்ணொலிக்கின்றது.
ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின்
பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த)
பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ?
அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற
பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ ! ஊழிகள் எல்லாவற்றிற்கும்
முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !
 
குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).
 
திருப்பாவை பாசுரம் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
     மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
     கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
     மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
     ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.

மாவாய் - குதிரை வடிவு கொண்ட கேசியின் வாயை;
மல்லர் - சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்யுத்தம் செய்பவர்களை;
மாட்டிய - அழியச் செய்த; ஆ ஆ என்று அருள் - ஆ ஆ என்று இரங்கி;

அருள் மிகு ஞானாம்பிகை உடனாய திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில் (உத்தமபாளையம்)


அருள் மிகு ஞானாம்பிகை உடனாய திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில்
(உத்தமபாளையம்)
 
தென்காளகஸ்தி என்று போற்றப்படும் அற்புதத் திருத்தலம். தமிழகத்திலேயே அச்டமாதர்கள் அதாவது எட்டு கன்னிகள் அருள்கின்ற ஒரே தலம். இராகு மற்றும் கேது ஆகியோர் மனைவியுடன் தம்பதியராக குடி கொண்டுள்ள அற்புத தலம்.சுமார் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தலம். இவ்வாறு பெருமைகள் பல கொண்ட புண்ணிய திருத்தலம் இதுவாகும்.

அழகிற்கு இலக்கணமாய் விளங்கும் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் தென்காளகஸ்தி என்று குறிப்பிடப்படுகின்றது. இவவூர் முன்பு காட்டூர் என அழைக்கப்பட்டது. சங்ககாலம் தொட்டு உத்தமபாளையம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி.10ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய போது இவ்வூரும் சோழ நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த உண்மையை அருகிலுள்ள சின்னமனூர் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன. இவ்வூரின் பாளையக்காரராக இருந்த உத்தப்ப கொண்டம நாயக்கரின் நினைவாக காட்டூர் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உத்தப்பகொண்டம நாயக்கர் பாளையம் என அழைக்கப்பட்டது. பின்பு அப்பெயர் சுருங்கி உத்தமபாளையம் என அழைக்கப்பட்டு வருகிறது.

கி.பி.1689ம் ஆண்டு முதல் 1706 ஆம் ஆண்டுவரை மதுரை நாயக்க அரசியாக இருந்தவர் இராணி மங்கம்மாள். எல்லை தகராறு காரணமாக திருவிதாங்கூர் மன்னன் இரவிவர்மனுக்கும் மங்கம்மாளுக்கும் போர் நடைபெற்றது. இப்போரின் போது கெங்கப்ப நாயக்கர் சாமிநாத நாயக்கர் விசுவநாத நாயக்கர் போன்றவர்கள் படைத் தளபதியாகவும் பிச்சை பிள்ளை என்பவர் உத்தமபாளையம் கணக்குப் பிள்ளையாகவும் இருந்தார். அவ்வூரில் அக்காலத்திலேயே ஆறுமுகப்பெருமான் திருக்கோயில் ஒன்று புகழ் பெற்று விளங்கியது. உத்தமபாளையம் வட்டம் கூடலூரிலுள்ள கூடலழகிய பெருமாள் கோயில் கல்வெட்டு இவ்வுண்மையை வெளிப்படுத்துகிறது.

ராணி மங்கம்மாள் ஆட்சிக்குட்பட்ட உத்தமபாளையம் பகுதியின் கணக்குப் பிள்ளையான பிச்சை பிள்ளை என்பவர் சிறந்த சிவபக்தர். காளத்தீஸ்வரர் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி நாளில் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளகஸ்திக்குச் சென்று காளத்தீஸ்வரரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவரால் அங்கு செல்ல இயலாமல் போனது.

மனம் வருந்திய பிச்சை பிள்ளை இறைவனை நினைத்து உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார்.ஒரு நாள் அவரது கனவில் வில்வ வனத்தில் வெள்ளை அரளிச்செடியின் கீழே ஒரு லிங்க வடிவம் இருப்பது போல தோன்றியது. மறுநாள் தான் கண்ட கனவை ஊர்மக்களிடம் தெரிவித்தார். பின்னர் அவர்களின் துணையுடன் வில்வ வனம் சென்றார். அங்கு அவரது கனவில் தோன்றியபடி வெள்ளை அரளிச் செடியின் கீழ் லிங்கம் ஒன்று இருந்தது. அவரும் ஊர் மக்களும் அந்த லிங்கத்தை வழிபட்டு வில்வ வானத்திலிருந்து உத்தமபாளையம் ஆறுமுகப்பெருமான் கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதன் பிறகு ஆறுமுகப்பெருமான் கோவிலிலேயே சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் தனித்தனியாகச் சன்னதிகள் அமைத்துக் கோவிலின் கட்டிடப் பணியை முடித்தனர்.காளகஸ்தி இறைவன் பக்தரின் கனவில் தோன்றிய நாதன் என்பதால் இத்தல இறைவனுக்கு "காளத்தீசுவரர்" என்பது திருநாமம்.

இதைத் தொடர்ந்து அம்மனுக்கும் தனிச் சன்னதி அமைத்திட ஊர்மக்கள் அனைவரும் முடிவு செய்தனர். அம்மன் உருவத்தைச் சிலையாக வடிக்க பல சிற்பிகளைக் கொண்டு முயற்சித்தனர். ஆனால் எந்தச் சிற்பிகளாலும் அம்மன் சிற்பத்தை உருவாக்க முடியவில்லை.

இதனால் மனம் வருந்திய பிச்சை, கோவிலில் அம்மன் சிலை அமைக்கத் தங்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று இறைவனிடம் தொடர்ந்து வேண்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் கனவில் தோன்றிய இறைவன் இன்னும் சில நாட்களில் மழை பெய்து ஊருக்குக் கிழக்காக ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த ஆற்று வெள்ளத்தில் அம்மன் மூங்கில் கூடையில் அமர்ந்து வருவார். அந்த அம்மன் சிலையைக் கொண்டு வந்து அம்மன் சன்னிதியில் வைத்து வழிபடுங்கள் என்று கூறி மறைந்தார்.

இறைவன் கூறியபடி சில நாட்களில் பெரும் மழை பெய்தது. மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் ஒரு மூங்கில் கூடை மிதந்து வந்தது. அந்தக் கூடையில் அம்மன் சிலையும் விநாயகர் சிலையும் இருந்தன. அந்தச் சிலைகளை ஊர் மக்கள் காளத்தீஸ்வரர் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அம்மனுக்கான சன்னிதியில் அம்மன் சிலையை வைத்து அம்மனுக்கு திருக்காளகஸ்தியில் அருள் வழங்கும் "ஞானாம்பிகை" என்ற திருநாமத்தையே சூட்டி வழிபட்டனர். கோவிலில் விநாயகர் சிலையை நிறுவி "செல்வ விநாயகர்" என்று பெயரிட்டனர்.

அருள் மிகு ஆறு முகப்பெருமான் : இத்தலத்தில் காளத்தீஸ்வரர் ஞானாம்பிகை சன்னதிகளுக்கிடையே சண்முகர் சன்னதி கொண்டிருக்கிறார். இதனால் இந்த ஆலயம் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்திருக்கிறது. அம்மன் சன்னதிக்கு எதிரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது.இதற்கு அருகில் அமர்ந்து கொண்டால் அம்பிகை முருகப்பெருமான் என இருவரையும் ஒரே நேரத்தில் காண முடியும். இப்படி தாயையும் மகனையும் ஒன்றாகக் காண்பது மிக அரிது என்கின்றனர்.

இதனால் இந்தக் கோவில் தாய் மகன் ஒற்றுமைக்கான வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது.மகனைப் பிரிந்து வாழும் பெற்றோர் தங்கள் மகனுடன் ஒன்று சேர்ந்து வாழ இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். அம்மன் சிலை இத்தலத்தில் இருந்து சற்று தொலைவிலுள்ள கோகிலாபுரம் என்ற ஊரின் ஆற்றில்தான் கிடைத்தது. எனவே இந்த ஊர் அம்பிகையின் பிறந்த வீடாக கருதப்படுகிறது.

அம்மனுக்கு திருக்கல்யாண விழா நடைபெறும் போது இந்த ஊரில் இருந்து பிறந்த வீட்டுச் சீரும் மருமகனான சிவபெருமானுக்கு ஆடைகளும் கொண்டு செல்கின்றனர். திருக்கல்யாணத்தின் போது சுவாமிக்கும் அம்பாளுக்கும் இந்த ஆடை அணிகலன்களையே அணிவிக்கின்றனர்.

எட்டு அம்பிகைகள்: பெரும்பான்மையான கோவில்களில் பிராமி,மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டாதேவி ஆகிய ஏழு அம்பிகைகள் (சப்த கன்னிகள்) இடம் பெற்றிருப்பதுண்டு.ஆனால் இந்த தலத்தில் எட்டு அம்பிகைகள் (அஷ்ட மாதர்கள்) இடம் பெற்றிருக்கின்றனர்.

ஆதிசக்தியில் இருந்து ஏழு வடிவில் ஏழு தேவியர் தோன்றினர் என்றும் அவர்களே ஏழு அம்பிகைகளாக அருளுகின்றனர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதனடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாகக் காளிதேவியும் ஏழு அம்பிகைகளுடன் சேர்ந்து காட்சி தருகிறார். அதாவது எட்டு கன்னிகள் அருள்கின்ற ஒரே தலம் இதுவாகும். இந்த எட்டு அம்பிகைகளையும் ஒரே இடத்தில் வழிபடுவதால் எந்தப் பிரச்சினைகளையும் எளிதில் வெற்றி கொள்ள முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பஞ்ச பூத தலங்களில் காளஹஸ்தி வாயுத் தலமாக இருக்கிறது. இதே போல இத்தலத்தில் இருக்கும் காளத்தீஸ்வரரும் வாயு நிலையில் இருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே இவருக்கு இங்கு வாயுலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.வாயுவைத் தொட முடியாது என்பதால் இவரைத் தீண்டாத்திருமேனியன் என்றும் அழைக்கின்றனர். வேடவரான கண்ணப்பருக்கு காளகஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தருளினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கண்ணப்பருக்கும் தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு கண்ணப்பர் தனது கையில் ருத்ராட்ச மாலை, அம்பு, வில்லுடன் காட்சி தருகிறார். சிவராத்திரியன்று இரவில் காளத்தீஸ்வரர் கண்ணப்பர் இருவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. கண் பார்வைக் குறைபாடு மற்றும் கண் தொடர்பான நோயுடையவர்கள் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் கண் சம்பந்தமான நோய்கள் நீங்கப் பெறலாம்.

 நாயன்மார்கள்:இந்தத் திருக்கோவிலின் தென்பகுதியில் 63 நாயன்மார்கள் சிலைகள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தட்சிணாமூர்த்தி தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். திருக்காளத்தீஸ்வரர் சன்னிதியின் பின்பகுதியில் காசி விசுவநாதர் சன்னிதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. மேலும் கல்விக் கடவுளான சரஸ்வதி சிலை இடது கையில் வீணையைப் பிடித்தபடியும் வலது கையில் அட்சர மாலையுடனும் இருப்பது போன்று வடிக்கப்பட்டுள்ளது. குபேரர் ஐஸ்வர்ய லட்சுமியுடன் தனிச்சன்னிதியில் காட்சி தருகிறார்.

இவர்களுக்குப் பின் புறம் மகாலட்சுமியும் இருக்கிறார். இது போல் இந்தக் கோவிலில் நவக்கிரகங்களுக்கான சிலைகளும் தனியாக இடம் பெற்றிருக்கின்றன. பல்வேறு சிறப்புகளுடன் அமைந்திருக்கும் இந்தக் கோவில் தென் காளகஸ்தி எனும் சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறது. காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோவிலில் இருக்கும் காளத்தீஸ்வரரை வழிபட்டு காளகஸ்தி சென்று வந்த பலனைப் பெறமுடியும் என்கின்றனர்.

கோவில் அமைப்பு:சிவன் சன்னதி முன்பாக இருக்கும் மண்டபத்தின் மேற்கூரையில் ராசி நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் வாஸ்து பகவான் சடாமுடியுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா அம்பிகை இருவரும் வழிபாடு செய்வது போன்ற சிற்பம் உள்ளது. இந்த மூவரையும் ஒரு நாகம் சுற்றியிருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோர் இருக்கின்றனர்.

27 நட்சத்திரங்களுக்கான வாகனங்கள்:
வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான வாகனங்கள் 12 ராசிகளுக்கான சின்னங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. இதனையடுத்து நடுவில் சூரியனும் சுற்றிலும் 12 ராசிகளும் கொண்ட சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் இருக்கிறது.நிலம் வீடு தொடர்பான பிரச்சினைகளால் தவிப்பவர்கள் இந்தச் சக்கரங்களின் கீழ் நின்று இறைவனை வழிபட்டால் அவர்களின் பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும் என்பது நீண்டகால நம்பிக்கையாகும்.

பரிகாரம்:இவ்வாலயத்தில் ராகு தனது மனைவி சிம்கிகையுடன் இருக்கும் தனிச் சன்னதியும் கேது தனது மனைவி சித்ரலேகாவுடன் இருக்கும் தனிச் சன்னதியும் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கின்றன.இங்கு ராகு கேது இருவரும் தங்களுடைய உண்மையான உருவத்துடன் இருக்கின்றனர் என்பது தனிச் சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு காலத்தில் மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை இவர்களது சன்னிதியில் நாக தோசப் பரிகார வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நாக தோசம் இருப்பவர்கள் ராகு கேது தோசம் இருப்பவர்கள் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தல விருட்சம்:செண்பகம்
தீர்த்தம்:உத்தரவாகினி

அருள்மிகு ஞானாம்பிகை அம்பாள்
திருவடி மலரடி போற்றி போற்றி
அருள்மிகு காளத்தீசுவரர் சுவாமி
திருவடி மலரடி போற்றி போற்றி
அருள்மிகு ஆறுமுகப் பெருமான்
திருவடி மலரடி போற்றி போற்றி

கோவில் அமைவிடம்:தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில் 24 கிலோமீட்டர் தொலைவில் உத்தமபாளையம் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் கோவில் அமைந்திருக்கிறது.

தரிசன நேரம்:காலை 07.00 மணி முதல் பகல் 11.30 மணி வரை,மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை

முகவரி:நிர்வாக அதிகாரி,
அருள்மிகு காளத்தீசுவரர் திருக்கோவில்,ஞானாம்பாள் கோவில்நகர்,தென் காளகஸ்தி,
உத்தமபாளையம் வட்டம்,தேனி – 625533.தொடர்புக்கு: 04554 275577

அருள் மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோவில் திருப்பாதிரிப்புலியூர் (பகுதி-1)


அருள் மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோவில்
திருப்பாதிரிப்புலியூர் (பகுதி-1)
 
திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் திருநாவுக்கரசர் பதிகம் இரண்டும் அருணகிரிநாதர் பட்டினத்தார் தொல்தாப்பியதேவர் மாதவச் சிவஞானமுனிவர் சிதம்பரநாத முனிவர் ஞானியார் அடிகள் பொன்னுசாமிப் பிள்ளை பெரியசாமிப் பிள்ளை நாராயண வேங்கடாசல நாயக்கர் திருப்பாதிரிப்புலியூர் சிவசிதம்பர முதலியார் திரிவியம் பிள்ளை பு.தெ.தெய்வசிகாமணி முதலியார் பலராம அய்யர் வண்டிப்பாளையம் ஆ.சிவ.சிவலிங்கனார் போன்ற ஏராளமான அடியவர்களாலும் சான்றோர்களாலும் புலவர்களாலும் பாடப்பெற்ற குறிப்பிடப்பட்ட அற்புதமான திருத்தலம் இதுவாகும்.

இலக்கியப்சிறப்பு:தேவாரப் பாடல்கள் திருப்புகழ் திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பதிகம் திருப்பாதிரிபுலியூர்த் தோத்திரக் கொத்து மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் புலியூர் நாடகம் கன்னிவனப் புராணம் புலிசைப்பத்து திருப்பாதிரிபுலியூர் பதிகம் போன்ற எராளமான நூல்களில் குறிப்பிடப்பட்ட எண்ணிலடங்கா சிறப்புக்களை உடைய திருத்தலம் இதுவாகும்.

தொண்மையும் சிறப்பும்:பூலோக கைலாயம் என்று போறற்றப்படும் சிதம்பரமான தில்லையை தென்புலியூர் என்றும் திருப்பாதிரிப்புலியூரை வடபுலியூர் என்றும் கூறுவர்.சிதம்பரத்திற்கு இணையாக(நம் முன்னோர்களால்) போற்றப்பட்ட மகத்துவம் வாய்ந்த தலம். சுமார் 1500 ஆண்டுகளுக்குமேல் தொண்மை வாய்ந்த தலம்.ஏராளமான கல்வெட்டுக்கள் ஓவியங்கள் சிற்ப வேலைப்பாடுகள் நிறைய மண்டபங்கள் பல மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்ட வழிபடப்பட்ட தொண்மை வாய்ந்த திருத்தலம் இதுவாகும்.

மகிமைச்சிறப்பு:திருநாவுக்கரகரை கொடுமை செயதசமணர்கள் கல்லைகட்டி கடலில் விசியபோது கல்லோடு மிதக்கச் செய்த இறைவன் மாணிக்கவாசகருக்காக கேடிலம் நதியையே மாறிவிடச் செய்த இறைவன் மங்கண முனிவரின் சாபம் தீர்த்த இறைவன் பிரமசீலனுக்கு அருளிய இறைவன் இவ்வாறு எராளமான மகிமைகளையும் திருவிளையாடல்களையும் புரிந்த இறைவனான பாடலேசுவரர் அருள்புரியும் புண்ணிய திருத்தலம் இதுவாகும்.

புலியூர்:இவ்வூரின் பெயர் அமைந்த காரணத்தை பலரும் பலவாறு கூறுகின்றனர்.புலியின் வீரத்தைத் குறித்து தமிழர்கள் சில ஊர்களுக்குப் புலியூர் எனப் பெயரிட்டுள்ளனர். புலியூர்,பெரும்புலியூர்,குரும்புலியூர், சிறுபுலியூர்,புலிவலம் முதலியன.

தமிழர்கள் அக்காலத்தில் மரங்களில் தெய்வம் உறைவதாக நம்பினார்கள். பிறகு மரத்தின் கீழ் தெய்வப் படிமங்களை வைத்து வழிபட்டனர். பின்பு அவ்விடத்தில் கோயில் அமைக்கப்பட்டது.அவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயத்திற்கும், இறைவனுக்கும் மரத்தின் பெயரே சூட்டப்பட்டது.அவ்வாறே பாதிரி மரங்கள் நிறைந்த புலியூர் என்பதால் இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது என்றும் இத்தலத்திற்கு பாடலீசர் தலம் பாடலி சிவன்கோவில் என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.புலியூர் என்று பெயர்கொண்ட பல ஊர்கள் தேவாரப்பாடல் பெற்றுள்ளன.
காவிரி வடகரையில் திருஓமாம் புலியூர் திருப்பெரும்புலியூர்.நடு நாட்டில் திருஎருக்கத்தம்புலியூர் திருப்பாதிரிப் புலியூர் பாண்டிய நாட்டில் பெரும்பற்றப்புலியூர் முதலியன.தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் திருத்தலங்களில் இத்தலம் 18வது திருத்தலம் ஆகும்.திருப்பாதிரிப்புலியூர் ஊரின் பெரும் பகுதி கெடிலம் ஆற்றின் தென்பகுதியில் தான் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் மற்றும் கேக்கிழார் ஆகியோர் கெடிலம் ஆற்றைப் பற்றி குறிப்பிடவில்லை. அனால் இத்தலத்தை பற்றி கூறும் பல புராணங்களில் கேடிலம் ஆறு குறிப்பிடப்பட்டுள்ளது.இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இயற்றிய திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில் கேடிலம் நதியின் சிறப்பு கூறபட்டுள்ளது.

கெடிலமாநதி பாடலேச் சுரணிக்கே தனத்தின்
கெடிலமாநதி செய்த்த தாய்க்கெலு முவதன்றி(இலக்கணம் சிதம்பரநாத முனிவர்)

கரையேறவிட்ட நகர்ப்புராணம் இயற்றிய சிவச்சிதம்பர புலவர் கெடிலத்தின் சிறப்பையும், ஆதன் நீர் வளத்தையும் தல விசேடப் படலத்தில் சிறப்பாக கூறியுள்ளார்.

தென் திசையிற் கங்கையெனத்
திகழ திகழ் கெடிலம் பூம்புனலே
தீர்த்த மாமாம்.(சிவச்சிதம்பர புலவர்)

 தல வரலாறு:ஒரு சமயம் இறைவனும் இறைவியும் பகடை ஆடியபோது இறைவியே தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். நடுவராக இருந்த திருமால் இறைவனிடம் அவர் தோற்றதாகக் கூறினால் தான் அபச்சாரப்பட நேரிடும் எனக் கருதி தான் ஆட்டத்தைச் சரிவர கவனிக்கவில்லை என்று கூறி விட்டார்.

கோபம் மேலோங்கிய இறைவி "இறைவனின் திருக்கண்களை மறைப்பேன் ஒளி தந்தால் அவர் வெற்றி பெற்றதாகவும் ஒளி தராவிட்டால் இறைவியே வெற்றி பெற்றதாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும்"என்று கூறி இறைவி இறைவனின் கண்களைத் தனது திருக்கரங்களால் பொத்தினார். இதனால் அண்டங்கள் பல யுகங்கள் இருண்டன.தவறை உணர்ந்த இறைவி இறைவனிடம் தனது செயலுக்ககாக மன்னிப்பு கோரி பாவ விமோசனம் அருளுமாறு வேண்டினார்.அதன்படி இறைவி பூவுலகம் சென்று 1008 தலங்களையும் தரிசித்து வரும்போது எந்தத் தலத்தில் அவரது இடது தோளும் இடது கண்ணும் துடிக்கிறதோ அந்த இடத்தில் தவம் மேற்கொண்டால் அங்கு வந்து திருமணம் புரிவோம் என்று இறைவன் கூறினார். இறைவியும் அதற்கிணங்க பாதிரிப்புலியூர் வந்த போது இறைவியின் இடது தோளும் இடது கண்ணும் துடிக்கவே இறைவி இங்கேயே தங்கி அருவமாகத் தவமிருந்து இறைவனை மணம் புரிந்தார்.எனவே இது இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடைபெற்றத் தலமாகும்.எனவே இத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் சன்னதியே பள்ளியறை ஆகும்.

பொதுவாக சிவத்தலங்களில் இறைவி அருள்பாலிக்கும் இடத்தில் தான் பள்ளியறை அமைந்திருக்கும். அர்த்தசாம பூசைக்கு பின்னர் இறைவன் தான் அப்பள்ளியறைக்கு எழுந்தருள்வார்.ஆனால் இத்திருக்கோயிலில் மட்டும் பள்ளியறை இறைவன் அருள்பாலிக்கும் இடத்திலேயே அமைந்துள்ள பள்ளியறைக்கு இறைவி எழுந்தருள்வார்.இது எங்குமே காண முடியாத சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

தல விநாயகர்:இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் ஆவார்.மேலும் மேற்கு மதிலில் இருக்கும் விநாயகரது மேல் திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர்க் கொத்துகளே காணப்பெறும். அம்பிகை இறைவனைப் பூசித்தபோது உதவி செய்த திருக்கோலம்.அதனால் அவர் கன்னி விநாயகர் எனப் பெயர் பெறுகிறார்.

தல சிறப்பு:காசியப்பரின் மனைவி அதிரி பத்து வியாழக்கிழமைகள் அருந்தவநாயகியைப் பூசித்ததால் ஆதிதேயரைப் பெற்றாள் என்பது ஐதீகம்.கார்த்திகைப் பெண்கள் அறுவர் இத்தல இறைவனைப் பூசித்ததால் முருகப்பெருமானுக்கு திருமுலைப்பால் கொடுக்கும் பேறு பெற்றனர் என்பதும் ஐதீகம்.திருப்பாதிரிப்புலியூர் கோவிலில் சுமார் 30 கல்வெட்டுக்கள் உள்ளன.கல்வெட்டுச் செய்தியை வைத்துப் பார்க்கும் போது மகேந்திரவர்ம பல்லவன் முதலாம் பராந்தகன் முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரன் ராஜ மகேந்திரன் வீர ராஜேந்திரன் கோப்பெருஞ்சிங்கன் விக்கிரம பாண்டியன் வீரபாண்டியன் தொண்டையர்கோன் முதலாம் குலோத்துங்கன் விக்கிரம சோழன், போன்ற பல மன்னர்களால் கோயில் விரிவு படுத்தப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதை அறிய முடிகிறது.

கல்வெட்டுச் சான்று:கி.பி.7ம் நூற்றாண்டில் இத்திருக்கோவில்"ஞாழற்கோயில்" என்றும் இத்தல இறைவனுக்கு“ஞாழற் பெருமான்”என்றும் திருநாமம் வழங்கப்பட்டதாகக் கல்வேட்டுச் செய்தி கூறுகிறது.

பிற்காலத்தில் திருஞானசம்பந்தர் புன்னை மரத்தின் கீழுள்ள திருப்பாதிரிப்புலியூர் இறைவன் என்று பாடியுள்ளார்.ஆனால் திருநாவுக்கரசர் மரம் பெயர் எதுவும் குறிப்பிடாமல் பாதிரிப்புலியூர் ஆலயத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.வரலாற்றின் அடிப்படையில் பார்க்கின்றபோது திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தாலும் கல்வேட்டுச் செய்தி மற்றும் சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் ஆகிய சான்றுகளை வைத்து ஆராய்ந்து பார்க்கும் பொது திருஞானசம்பந்தர் இங்கு வந்து வழிபட்டு சென்றதற்கு பிறகு சில காலம் கழித்து தான் திருநாவுக்கரசர் வந்து வழிபட்டுள்ளார்.ஆகையால் முற்காலத்தில் இத்தலம் மரங்களின் பெயர் கொண்டு அழைக்கப்பட்டதையும் பிற்காலத்தில் தான் திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயர் வழங்கப்பட்டதையும் நம்மால் தெளிவாக அறிய முடிகிறது.
எண்ணிலடங்கா பெருமைகளையும் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மகத்துவத்தை முழுமையாய் தரிசிக்க வேண்டுமெனில் சற்று காத்திருங்கள்.

நாளை தொடரும்.

வெள்ளி, 1 ஜனவரி, 2021

துளசி தீர்த்தம்

துளசி தீர்த்தம்...

இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது.

மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் தேவாலயங்களில் துளசிகலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக விநியோகிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

துளசி எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட காலநிலைகளிலும் வளரக் கூடியதாகும். துளசி அதிகமாக வளரும் பகுதிகளில் உள்ள சயனைட் போன்ற விசவாயுக்களை உள்ளெடுத்து கூடுதலான ஒட்சிசன் நிறைந்த வாயுவை வெளியிடும். இது மனிதர்கள் சுவாசத்திற்கு சிறந்த புத்துணர்ச்சி தரும். அத்துடன் நுளம்புகள் துளசிச்செடி உள்ள சுற்றாடலில் காணப்படுவதில்லை.

துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

துளசி ஊறப் போட்ட தூய நீரை உட்கொண்டு வந்தால் இருதய நோய்கள் குணமாவதுடன் இருதயமும் வலிமை பெறும். கோவில்களில் துளசி கலந்த புனித நீர் தீர்த்தமாக விநியோகிப்பதை நாம் அறிவோம்.

ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த துளசி செடியை வணங்கிவந்தால் இவர்களை வணங்கியதற்க்கு சமனாகும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

துளசியின் தாவர வியற் பெயர் Ocimum sanctum இது Labiatae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது.


மயில் தத்துவம்

மயில் தத்துவம்


முருகனுக்கு வாகனமாக மயிலை வைத்திருப்பதற்கு என்ன தத்துவம் பின்னனியாக இருக்கிறது ? அந்த மயில், பாம்பை மிதிப்பது போல வைத்திருப்பதன் தத்துவம் என்ன ?

மயிலின் முக்கியமான பண்பு அதன் அழகான தோற்றமும், ஒயிலாக ஆடும் நடனமும்தான். ஆனால் அவை கவர்ச்சியாகத் தோன்றுவதற்கு நீலமயமான வண்ணம்தான் காரணமாக இருக்கிறது. அது, தான் அழகாக ஆடுவதாக நினைக்கும்போது அந்தக் கர்வத்தை அடக்க ஒருவர் அதன் மீது அமர்ந்து கட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.

மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான். தனக்கு அழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான். தன்னால் நினைத்துப் திட்டமிடக் கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான். கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால் எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான். இதில் ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதை உணரமுடிவதில்லை. இந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும். அவனுள் இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் அந்தப் பண்பட்ட மனத்தை வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும் சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார்.

தவிர, ஆசன வகைகளில் ஒன்றான மயூராசனத்தின் சிறப்பையும் அது உணர்த்துவதாக உள்ளது. மயூராசனம் என்பது கைகளின் வழியே உடலைத் தாங்கும் நிலை. இந்த ஆசனம் உள்ளுறுப்புகளை பலப்படுத்துவதோடு, குண்டலினி சக்தி விழிப்படையவும் உதவியாக இருக்கிறது. குண்டலினி விழிப்பால் தன்னைப் பற்றி அறிவு மிகைப்படுகிறது. தன்னைப் பற்றிய கவனம் அதிகமாகிறது. செயல்களில் தெளிவும் பேச்சில் நிதானமும் ஏற்படும். மயிலாசனத்தின் செய்தி இதுவே.

மயிலுக்கும் - பாம்புக்கும் பகைமை உண்டு. மயில் பாம்பைக் கொல்லுவதில்லை. ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறது. அதைப்போல உலக பந்தங்கள், ஆசைகள் எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைய வேண்டுமானால், இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைக்க வேண்டும். இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கிவைக்கும் பாம்பு நமக்கு உணர்த்துகிறது.


தத்புருஷம் மந்திரங்களைப் பற்றி கருவூரார்

தத்புருஷம் மந்திரங்களைப் பற்றி கருவூரார்




கிழக்கு நோக்கி இருக்கும் சிவனின் (ஐந்து முகங்களில் தத்புருஷம்) மந்திரங்களைப் பற்றி கருவூரார் சித்தர் சொல்வதைக் கேளுங்கள்.

கிழக்கு நோக்கி இருக்கும் சிவனின் மந்திரமாக'நமசிவாய' வைக் கூறுகின்றார். 'நமசிவாய ' என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம்
ஏற்படும்.

'நமசிவாய ஊம் நமசிவாய' என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.

'நமசிவயங் செலகை நமசிவாய' என மந்திரம் உச்சரித்தால் அறுபத்தி நான்கு பாஷானங்களினால் ஏற்படும் விஷங்களும் தீரும்.

'நமசிவாயம் லங்க நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.

'சவ்வும் நமசிவாய நமா' என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.

'ஶ்ரீயும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள்.

'ஊங்கிறியும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும்.

'அலங்கே நமசிவாய நமோ' என்ற மந்திரத்தைச் சொன்னால் புகழ் மற்றும் பெருமை உண்டாகும்.

'வநம சிவாய' என்று செபித்தால் தேக சித்தி உண்டாகும்.

'ஓம் நமசிவாய' என்று செபித்தால் காலனை வெல்லலாம்.

'லங்கிரியும் நமசிவாய' என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்.

'ஓங்கிறியும் ஓம் நமசிவாய' என்று சொல்லி வந்தால் வாணிபங்கள் நன்றாய் நடக்கும்.

'ஓங் ஊங் சிவாய நம உங்நமா' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பதினெட்டு வகையான குட்டமும் தீரும்.

'லீங் க்ஷும் சிவாயநம' என்ற மந்திரம் உச்சரித்தால் பெண்கள் வசியம் ஏற்படும்.

'லூங் ஓங் நமசிவாய' என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.

'ஓங் அங்கிஷ சிவாய நமா' என்று ஓதினால் பூமியெங்கும் சஞ்சாரம் செய்யலாம்.
'அங் சிவாய நம' என்று உச்சரித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

'அங் உங் வங் சிவாய நம' என மந்திரம் உச்சரிக்க உடலில் உண்டான நோய்கள் தீரும்.

'ஹம் ஹம் சிவாய நமா' என்று உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும்.

'ஓம் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை செபித்தால் பூத கூட்டங்கள் வசமாகும், துஷ்ட தேவதைகள் அழியும்.

'சிலியும் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால் மன்னர்கள் வசியம் ஏற்படும்.
இவையெல்லாம் தத் புருஷம் இருபத்தைந்தாம்.

கரூரார் பூஜா விதிகள். சிதம்பர அஷ்ட கர்ம மந்திரங்கள்.

வில்வம், அத்தி ஆகியவற்றின் சமித்துகளால் தற்புருஷ மந்திர ஜபம் ஜபித்து ஆயிரத்தெட்டு முறை ஹோமம் செய்தால் காரிய சித்தியாகும். பிரம்மஹத்தி முதலிய பாவங்கள் நீங்கும்.

அருள் மிகு ஐயாறப்பன் திருக்கோவில்

அருள் மிகு ஐயாறப்பன் திருக்கோவில்
 



மூலவர்:ஐயாறப்பன்
அம்மன்:தரும சம்வர்த்தினி
தீர்த்தம்:சூரிய புஷ்கரணி தீர்த்தம்
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:திருவையாறு
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: சம்பந்தர்

தேவாரப்பதிகம்

''புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்றுஅருள் செய்வான் அமருங் கோயில்வலம் வந்த மடவார்கள் நடமாடமுழவு அதிர மழையென்று அஞ்சிச்சில மந்தி அலமந்து மரமேறி முகில் பார்க்கும் திருவையாறே''. -
சம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 51 வது தலம்.   
       
திருவிழா:மகா சிவராத்திரி   
       
தல சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. கோயில் என்றாலே சுவாமி சன்னதியை சுற்றுவது முக்கியமான அம்சம்.ஆனால், திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் சுவாமி சன்னதியை சுற்றக்கூடாது என்ற தடை உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 51 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும்   
       
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.  
     
முகவரி:அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு - 613 204 தஞ்சாவூர் மாவட்டம்.போன்:+91-436 -2260 332, 94430 08104  
      
பொது தகவல்:இங்குள்ள தியான மண்டபம் கட்டப்பட்ட விதம் அபூர்வமானது. சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது. இந்த பொருட்களை சேகரித்து வைக்க மிகப்பெரிய குழிகள் தோண்டப்பட்டிருந்தன. இதைக் கட்டியவர்களுக்கு தங்கமும் வெள்ளியும் கூலியாகத் தரப்பட்டதாம். இவற்றையும் இரண்டு குழிகள் தோண்டி போட்டுவைத்திருந்தனர். ஒருவர் தன்னால் முடிந்த அளவு இவற்றை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.

பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.  
      
நேர்த்திக்கடன்:சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.  
      
தலபெருமை:இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

இவ்வூர் இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அவ்வூர் அரசனுக்கு சென்றது. அவன் உடனடியாக கோயிலுக்கு வந்து பார்த்தபோது சம்பந்தப்பட்ட அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காசிக்கு சென்ற அர்ச்சகர் ஊரிலிருந்து திரும்பினார். ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். இறைவன் இந்த அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது. தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாறப்பர். அப்பர் பெருமான் இத்தலத்தில் வழிபட்டு கைலாய காட்சியை பெற்றார். எனவே இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் பெருமான் இந்த திருத்தலத்தில் உள்ள குளத்தில் வந்து எழுந்தார். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னதி சுற்ற தடை: இங்கே மூலவர் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆமையை மிதித்த தெட்சிணாமூர்த்தி: சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு ஹரிஉரு சிவயோக தெட்சிணாமூர்த்தி' என பெயர். இவர் முயலகனுக்கு பதிலாக ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது. அந்த அளவிற்கு இந்த கோயிலில் கட்டடக்கலை அமைந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள இன்ஜினியர்கள் இந்த சப்தம் கேட்பதுபற்றி ஆய்வு செய்தனர். ஆனால், இதற்கான காரணத்தை அறிய முடிய வில்லை.

நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது. சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.

அமையை மிதித்த தட்சிணாமூர்த்தி: தட்சிணமாமூர்த்தி மேல் நோக்கிய வலது கரத்தில் கபாலமும், கீழ் நோக்கிய வலது கரத்தில் சின்முத்திரையும், மேல் நோக்கிய இடது கரத்தில் சூலமும், கீழ் நோக்கிய இடது கரத்தில் சிவஞான போதமும் காணப்படுகின்றன.
 
தல வரலாறு:நந்தீஸ்வரருக்கும், நந்திகேசருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பவர். நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையை சேர்ந்தவை. சிலாது மகரிஷி என்பவரின் மகனாக அவதரித்தவர் நந்திகேசர். பிறக்கும் போது இந்த குழந்தைக்கு நான்கு கைகள் இருந்தன. அவர் ஒரு பெட்டியில் இந்த குழந்தையை வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது குழந்தையின் இரண்டு கைகள் நீங்கி அழகான குழந்தையாக விளங்கியது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டு சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இறைவன் ஐயாறப்பர் எனப்பட்டார்.  

அருள் மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோவில்



 
மூலவர்:ஜம்புகேஸ்வரர்
உற்சவர்:சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன்:அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்:வெண்நாவல்
தீர்த்தம்:நவ தீர்த்தங்கள்
ஆகமம்/பூஜை :சைவாகமம், ஸ்ரீவித்யா வைதீக பூஜை
பழமை:2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருஆனைக்காவல், திருஆனைக்கா
ஊர்:திருவானைக்கா
மாவட்டம்:திருச்சி
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்: திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர் இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின் எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே -

திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 60வது தலம்.   
       
திருவிழா:பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி.   
       
தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 60 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும்.   
       
திறக்கும் நேரம்:காலை 5.30- பகல் 1 மணி, மாலை 3- இரவு 8.30 மணி. வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக திறந்திருக்கும். இந்நாட்களில், காலை 6- 6.30, 8- 9, 11- 12.30, மாலை 5- 6, இரவு 8.30-9 ஆகிய நேரங்களில் மட்டும் சுவாமி, அம்பாள் சன்னதிகள் அலங்காரத்திற்காக அடைக்கப்படும்.  
     
முகவரி:நிர்வாக அதிகாரி, அ/மி. ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல்-620005, திருச்சி மாவட்டம்.போன்:91-431- 2230 257.  
      
பொது தகவல்:சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி, நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள். அருகில் கார்த்திகை, ரோகிணியுடன் சந்திரன் இருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டாதேவியுடன் கூடிய சனீஸ்வரர் ஆகியோர் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள். குபேரன் பூஜித்த குபேர லிங்கம், ஜம்பு தீர்த்தக்கரையில் உள்ளது. ஆனி பவுர்ணமியில் இவருக்கு முக்கனி அபிஷேகம் நடக்கிறது.   
       
பிரார்த்தனை:கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.  
      
நேர்த்திக்கடன்:சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.  
      
தலபெருமை:சிவன் வடிவில் அம்பாள் அம்பாள் வடிவில் சிவன்!: பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு "ஸ்திரீ தோஷம்' உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால், அம்பிகை சிவனிடம், ""நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!'' என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர்.

சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

மாணவி அம்பாள்: சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி' என்றழைக்கப்படுகிறாள்.

அகிலாண்டேஸ்வரி, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.

ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நவ துளை ஜன்னல்: ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல், மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.

சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து, ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது.

சித்தராக வந்த சிவன்!: மதுரையைப் போல, இத்தலத்திலும் சிவபெருமான், சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன், கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது, போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. அவன் சிவனை வேண்டினான்.

சிவன் விபூதிச்சித்தராக வந்து, பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார். இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் "திருநீற்றான் திருமதில்' என்றும், பிரகாரம் "விபூதி பிரகாரம்' என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.

அன்னையை சாந்தப்படுத்தும் பிள்ளைகள்: ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால், இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்துக்குப் பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

கோச்செங்கட்சோழன் சிறப்பு: கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது.

இதில் சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. இதில் சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும்படி செய்தார். சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவரே, கோச்செங்கட்சோழ மன்னர் ஆவார். இம்மன்னரே தனது முற்பிறவிப் பயனால், யானைகள் புக முடியாதபடி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டினார். இக்கோயிலையும் யானை புகாதபடி திருப்பணி செய்தார். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.

திருக்கல்யாணம் இங்கில்லை!: இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்தபோது, அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே, இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால், பள்ளியறை இருக்கிறது.

இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி தரும் அம்பிகை: வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற, அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள், வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். வேதியரிடம், ""நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே, உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன்,'' என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டிவிட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். ""கோயில் பாழ்படாமல் இருக்க, எந்த தியாகத்தையும் செய்வேன், பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள்,'' என்றார். அம்பாளும் அப்படியே செய்ய, அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில், சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.

முருகன் பாதத்தில் அசுரன்: முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில், ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். முருகனும், காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில், ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.

இங்குள்ள சனிபகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி, நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர்.

தல வரலாறு:சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் "நீர்' தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.

சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.

நாவல் மரத்துக்கு "ஜம்பு' என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி "ஜம்புகேஸ்வரர்' என பெயர் பெற்றார்.  

அருள் மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்

அருள் மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்

மூலவர் :பஞ்சவர்ணேஸ்வரர், திரு மூக்கிச்சுரத்தடிகள்,
அம்மன் :காந்திமதியம்மை.
தல விருட்சம் :வில்வம்.
தீர்த்தம் :சிவதீர்த்தம், நாக தீர்த்தம்.
பழமை :2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :முக்கீச்சுரம்
ஊர் :உறையூர்
மாவட்டம் :திருச்சி
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர் , அப்பர்

தேவாரப்பதிகம்:நீருளாரும் மலர் மேலுறை வான்நெடு மாலுமாய்ச் சீருளாரும் கழல் தேடமெய்த் தீத்திரள் ஆயினான் சீரினால் அங்கொளிர் தென்னவன் செம்பின் வில்லவன் சேரும் மூக்கீச்சரத்து அடிகள் செய்கின்றது ஓர்செம்மையே. திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 5வது தலம்.

திருவிழா:சித்ராபவுர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆனி திருமஞ்சனம், ஆடி பவுர்ணமி(இந்நாளில் உதங்க முனிவருக்கு ஐந்து நிறங்களை இறைவன் காட்டியுள்ளார்) ஆவணி மூலத்திருவிழா, நவராத்திரி, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.

தல சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம். இந்த உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து தான் உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 68 வது தேவாரத்தலம் ஆகும்.

திறக்கும் நேரம்:காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், உறையூர்-620 003. திருச்சி மாவட்டம்.போன்:+91- 431-276 8546, 94439-19091, 97918 06457

பொது தகவல்:வழிபட்டோர்: கருடன், காசிபர் மனைவி கத்துரு, மற்றும் அவர்கள் மகன் கார்கோடன் வழிபட்டுள்ளனர்.

பிரார்த்தனை:கார்கோடனாகிய பாம்பும், கருடனும் இங்குள்ள ஈசனை வழிபட்டுள்ளதால், நமக்கு ஏற்பட்ட எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜித்துள்ளதால் நாம் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் வெற்றி நிச்சயம்.

நேர்த்திக்கடன்:சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.

தலபெருமை:ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து சேற்றில் உழன்றான். தன் முந்தைய பிறவி தவறை நினைத்து வருந்தினான். சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடி பாவ விமோசனம் பெற்றான். இங்குள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

பஞ்சவர்ணேஸ்வரர் பெயர்க் காரணம்: உறையூர் வந்த பிரம்மா, இத்தலத்து சிவனை வணங்கினார். அப்போது சிவன் தன்னிடம் இருந்து பொன்மை (தங்கநிறம்), வெண்மை, செம்மை (சிவப்பு), கருமை, புகைமை (புகை நிறம்) ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தினார். பொன்மை நிறத்திலிருந்து மண்ணும், வெண்மை நிறத்திலிருந்து தண்ணீரும், செம்மையிலிருந்து நெருப்பும், கருமையிலிருந்து காற்றும். புகை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று அவரிடம் கூறினார். நீராக திருவானைக்காவலும், நிலமாக காஞ்சிபுரத்திலும், நெருப்பாக திருவண்ணாமலையிலும், காற்றாக காளஹஸ்தியிலும், ஆகாயமாக சிதம்பரத்திலும் காட்சியளித்து அருள்புரியும் சிவபெருமான், ஐந்து பூதங்களையும் ஒன்றாக உள்ளடக்கி இங்கே உறைவதால் (வசிப்பதால்) ஊருக்கு உறையூர் என்றும், சுவாமிக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. "நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்று இவரைப் பற்றியே மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளது குறிப் பிடத்தக்கது.

உதங்க முனிவர்: இத்தலத்துக்கு வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக விளங்கிய உதங்க முனிவர் என்பவர், தன் மனைவி பிரபையுடன் கங்கையில் நீராடியபோது அவளை ஒரு முதலை இழுத்துச் சென்று சின்னாபின்னப்படுத்தியது. வாழ்வின் நிலையை உணர்ந்த முனிவர் என்றாலும் கூட, அவரது மனம் இந்நிகழ்ச்சியால் அலைந்து தத்தளித்தது. மனநிம்மதிக்காக அவர் உறையூர் வந்து சிவனை வழிபட்டார். காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிக்காலவழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திரலிங்கமாகவும் சிவன் அவருக்கு காட்சியளித்தார். இதனாலும் அவர் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்பட்டார். இதனால் அவரது மனம் அடங்கி அமைதியானது. ஞான அனுபவம் பெற்று முக்தியடைந்தார். ஆடிப்பவுர்ணமியில் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணம் காட்டியதாக வரலாறு என்பதால் அன்று இறைவனை தரிசிப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

தோஷ நிவர்த்தி: பைரவர், சனிபகவான், சூரியன் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலமாகும். தேய் பிறை, அஷ்டமி திதிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. <<<உலகில் எவ்விடத்தில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இத்தலத்து இறைவனை வந்தடையும் என்பது ஐதீகம். சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து நிவர்த்தி தருபவராக சுவாமி உள்ளார். இங்கு அம்பாள் காந்திமதி மற்றும் பஞ்சமுக விநாயகரும் தரிசனம் தருகின்றனர்.இக்கோயில் வரலாற்றுடன் சேவலுக்கு தொடர்பு இருப்பதால் இப்பகுதியினர் சேவலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர். எதிரி யானை அளவு பலம் பெற்றிருந்தாலும் இந்த இறைவனின் கருணை இருந்தால் அவனை வென்றிடலாம். இத்தல முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

தல வரலாறு: சோழ அரசர் ஒருவர் யானை மேல் உலா வந்த போது யானைக்கு மதம் பிடித்தது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று தன் குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் தன் மூக்கினால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதாகக் கருதி அவருக்கு கோயில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் துன்புறுத்தும் போது, யானையை கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து பஞ்சவர்ணேஸ்வரர் தருகிறார். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் "திருமூக்கீச்சுரம்' என்று பெயர் ஏற்பட்டது.

சிறப்பம்சம்:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்கு காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு. ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.


அருள் மிகு ஞீலிவனேஸ்வரர்

அருள் மிகு ஞீலிவனேஸ்வரர்

திருப்பைஞ்ஞீலி;மண்ணச்சநல்லூர்

திருச்சி

பூதங்களாள் கட்டப்பட்ட கோவில்.

எமதற்மராஜாவுக்கு தனி சன்னதி இருக்கும் ஒரே கோவில். தற்போது கோவிலின் பின் பகுதியில் ஐந்து சிவலிங்க பானம்மட்டும் கடைக்ப்பெற்று ஐந்திற்க்கும் ஆவுடை செய்து தனி தனி சன்னதியில் பிரதிஸ்டை செய்துள்ளனர். அவ்வாறு கிடைக்கப் பெற்ற சிவ லிங்க பானத்திற்கு நடுவே ஏறாலமான ஓலை சுவடிகள் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட பத்தாயிரம் ஓலைசுவடிகள் கிரந்தம் மற்றும் தமிழ் கலந்த ஆகமத்தை பற்றி எழுதியிருக்கார்கள். இவை அனைத்தும் கிரதயுகத்தில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள். கலியுகத்தில் மற்ற ஐந்து லிங்கங்களும் தனி தனி சன்னதியில் பிரதிஸ்டை ஆகும் என்று அந்த ஓலை சுவடியில் கூறியள்ளார்கள். அதே போல் கலியுகத்தில் இப்போது கிடைத்துள்ளது மிகவும் அறிதான ஒன்று.மேலும் இக்கோவிலில் சப்தகண்ணிகள் மற்றும் ஐந்து விநாயகர் சன்னிதி கட்டபட வேண்டும் என்று அந்த ஓலை சுவடியில் கூறியுள்ளது.அதற்க்கு போதிய நிதி இல்லாமல் கும்பாபிஷேகம் ஆகாமல் இருப்பது மிக மிக வேதனையான விஷயம். கோவில் குருக்களிடம் பேசிய போது இன்னும் சுமார் இருபத்தி ஐந்து லட்ஷம் செலவு ஆகும் என்று கூறினார். இன்னும் ஆறு சன்னிநி கட்டவேண்டும். நல்ல உள்ளமும் இறைபக்தி கொண்டவர்கள் தங்களாள் ஆன பொருள் உதவியோ, பண உதவியோ செய்து இந்த கும்பாபிஷேகம் நல்லமுறையில் நடக்க உதவுங்கள் நண்பர்களே.


அருள் மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில், தென் திருப்பேரை

அருள் மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோவில், தென் திருப்பேரை



 
தமிழகத்தில் நவ திருப்பதிகளில் ஒன்றான ஒப்பற்ற திருத்தலம். தமிழகத்தில் வேறு எந்த திருமால் திருத்தலத்திலும் காண முடியாத ஒன்றாக கருடாழ்வார் மூலவர் சன்னதிக்கு எதிரில் அல்லாமல் ஒதுங்கிய நிலையில் அமைந்துள்ள தலம். சுமார் 1000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருத்தலம். 108 வைணவ திவ்ய தேசங்களில் 86 வது திவ்ய தேசமாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்த திருத்தலம். இவ்வாறு ஏராளமான சிறப்புகளை உள்ளடக்கிய அற்புதம் வாய்ந்த திருத்தலம்.

நவ திருப்பதிகள்: 108 வைணவ திவ்ய தேசங்களில் 9 திவ்ய தேசங்கள் மட்டும் நவ திருப்பதிகள் என்றும் இத்தல திருமால் நவகிரகங்களுடன் தொடர்புடையதாக கருதியும் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர். அதில் திருப்பேரை திருத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாக வழிபடப் படுகிறது.

சூரியன்: ஸ்ரீவைகுண்டம்
சந்திரன்: திருவரகுணமங்கை (நத்தம்)
அங்காரகன்: திருக்கோளூர்
புதன்:  திருப்புள்ளிங்குடி
குரு: திருக்குருகூர்
(ஆழ்வார் திருநகரி)
சுக்கிரன்: தென் திருப்பேரை
சனி: திருக்குளந்தை
(பெருங்குளம்)
ராகு: திருத்தலைவில்லிமங்கலம்
(இரட்டை திருப்பதி) கேது: திருத்தலை வில்லி மங்கலம்
(இரட்டை திருப்பதி)
 
திருப்பேரை: பேரை என்பதற்கு "உடல்" என்பது பொருள். பூமிப் பிராட்டி இத்தல திருமாலின் திருவருளால் சாபம் நீங்கி அழகிய உடல் அமைப்பை பெற்றதனால் இத்தலத்திற்கு "திருப்பேரை" என்று பெயர். சோழ நாட்டில்“திருப்பேர் நகர்”என்ற திவ்ய தேசம் ஒன்று இருப்பதால் இத்தலமானது “தென் திருப்பேரை” என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தல வரலாறு: ஒரு முறை பூமி பிராட்டி துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளாகி அழகை இழந்து கரிய அலங்கோலமான உருவை அடைந்தாள். அதனால் தன் பிழையை மன்னித்து, சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினாள். அதற்கு துர்வாசர் தாமிரபரணியின் தென் கரையில் உள்ள ஹரிபதம் என்ற தலத்தின் நதியில் நீராடி, அங்குள்ள பெருமாளை நினைத்து தவம் செய்து வந்தால் பாவம் தொலைந்து பழைய உருவம் கிடைக்கும் என்று விமோசனம் கூறினார். பூமிபிராட்டியும் அவ்வண்ணமே பங்குனி மாதம் பௌர்ணமியில் ஹரிபதம்தலத்தின் நதியில் நீராடி அட்டாட்சர மந்திரத்தை உச்சரித்தவாறு தண்ணீரை எடுத்தாள்.அப்போது தண்ணீரில் விலை மதிக்க முடியாத அழகு வாய்ந்த "மகர குண்டலங்கள்" இரண்டு அவள் கையில் சிக்கியது. திருக்குளத்தில் தோன்றியதால் சற்றும் தாமதிக்காது இத்தல பெருமாளுக்கே அந்த மகர குண்டலங்களை சமர்பித்தாள்.அந்த இரு குண்டலங்களையும் காதில் அணிந்து கொள்ளும்படி மனமுருகி பிரார்த்தனை செய்தாள். அவள் பக்திக்கு மனமிறங்கிய பெருமாள் மகர குண்டலங்களை தமது திருக்காதில் அணிந்து கொண்டதனால் மகர நெடுங்குழைக்காதர் பெருமாள் என்ற திருநாமம் பெற்றார். குண்டலங்களோடு காட்சி தந்ததோடு பூமி தேவிக்கும் சாப விமோசனம் அளித்தார். இத்தல உற்சவருக்கு நிகரில் முகில் வண்ணன் என்பது திருநாமம். இத்தலத்தின் வரலாற்றை பிரம்மாண்ட புராணம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

தாயார்: திருப்பேரை திருத்தல திருமகள் தேவிக்கு திருப்பேரைவல்லி தாயார் என்பது திருநாமம். தாயார் தனி சன்னதி கொண்டு அருள்கின்றார். மேலும் தல தீர்த்தமான சுக்கிர தீர்த்தக் கரையில் பூமி தேவி குழைக்காதுவல்லி தாயார் என்ற திருநாமத்தில் தனி சன்னதி கொண்டு அருள்கின்றார்.

மங்களாசாசனம்: பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான"வேதம் தமிழ் செய்த மாறன்"என்று போற்றப்படும் நம்மாழ்வார் இத்தல இறைவன் மீது 11 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணனென் நெஞ்சினூடே, புள்ளைக் கடாகின்றவாற்றைக் காணீர்
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்கால் வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும், பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறத் திருப்பேரையில் சேர்வன் நானே!

நம்மாழ்வார்

ஒதுங்கிய கருடன்: திருமால் அவதரித்துள்ள எல்லா திருக்கோயில்களிலும் வாகனமான கருடாழ்வார் மூலவர் சன்னதிக்கு நேர் எதிரில் தான் எழுந்தருளியிருப்பார். ஆனால் தென் திருப்பேரை திருத்தலத்தில் மட்டும் முற்றிலும் புதுமையாய் இடது பக்கமாக அதாவது ஆழ்வார்களின் பக்கம் ஒதுங்கி நின்று சேவை சாதிக்கிறார்.இது தமிழகத்தில் வேறு எந்த திருத்தலத்திலும் காண முடியாத ஒன்றாகும்

கோவில் அமைப்பு:தென் திருப்பேரை திருத்தலம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.அனால் இத்தளம் எக்காலத்தில் எந்த மன்னரின் ஆட்சிக் காலத்தில் நிர்மானிக்கப்பட்டது என்று முழுமையான வரலாறு அறிய முடியவில்லை.நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் அழகுக்கே அழகு சேர்க்கிறது.

முக்கிய வைபவம்: இத்திருக் கோவிலில் மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் முக்கியமான நாளாகும்.ஒவ்வொரு மாதமும் உத்திரத்தன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
ஆணி உத்திரம் – தைலக்காப்பு
ஆடி உத்திரம்-பவித்ரோற்சவம்
பங்குனி உத்திரம்–பத்து நாள் பிரம்மோற்சவம்,தீர்த்தம் சங்க தீர்த்தம்

அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர்
திருவடிகளே சரணம்

அருள்மிகு திருப்பேரைவல்லி தாயார்
திருவடிகளே சரணம்

அருள்மிகு குழைக்காதுவல்லி தாயார் திருவடிகளே சரணம்

தரிசனம் நேரம்:காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை.மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 வரை.

போக்குவரத்து வசதி: திருநெல்வேலியிலிருந்து 39 கி.மீ. தொலைவில் திருப்பேரை உள்ளது. திருசெந்தூரிலிருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.

திருக்கோவில் முகவரி:அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயில்,தென் திருப்பேரை
திருச்செந்தூர் வட்டம்
தூத்துக்குடி – 628 623